500 கிலோ காய்கறிகளால் உருவான மணமேடை!

vegetable wedding stage - 2026
#image_title

500 கிலோ காய்கறிகளால் உருவான மணமேடை : உழவை போற்றும் விழிப்புணர்வு திருமணம்!

பல்லடம் அருகே நடைபெற்ற திருமணத்தில், 500 கிலோ காய்கறிகளால் அமைக்கப்பட்ட மணமேடை பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

கோவை மாவட்டம், அரசூரைச் சேர்ந்த ராமசாமி – ஆனந்தி தம்பதியர் மகன் முத்துக்குமார், திருப்பூர் மாவட்டம், பல்லடம் வேலம்பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் – சரஸ்வதி தம்பதியர் மகள் கீர்த்தனா ஆகியோருக்கு பல்லடம் அருகே சுல்தான்பேட்டையில் திருமணம் நடந்தது.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கீர்த்தனாவின் பெற்றோர், உழவு தொழிலை முன்னிறுத்தும் வகையில், காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையை அமைத்திருந்தனர்.

மண்டபத்தின் நுழைவாயில் வாழைமரம் மற்றும் தென்னங்கீற்றுகளால் முழுமையாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. மணமேடை, பூசணி, முட்டைகோஸ், காலிபிளவர், வெண்டை, முருங்கை, கேரட், பாகல், புடலை உள்ளிட்ட பல்வேறு வகை காய்களில், 500 கிலோ எடையிலும், கரும்பு மற்றும் வாழை இலைகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது.

உழவுத் தொழிலை முன்னிறுத்தும் வகையில் ஓவியங்களும், மணமேடையின் மேற்புறம், ‘உழவு என்பது தொழில் மட்டுமல்ல உயிரின் ஆதாரம்’ என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தன.

ALSO READ:  ‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

வண்ண விளக்குகள், பல வகையான மலர்கள் மற்றும் பேனர்களால், ஆயிரக்கணக்கில் செலவு செய்பவர்கள் மத்தியில், விவசாய தொழிலை முன்னிறுத்தும்படி நடந்த இத்திருமணம், பலராலும் பாராட்டு பெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories