கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை!

madurai-corp-a
madurai-corp-a
  • கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை
  • 31 விவசாயிகளுக்கு மதுரை மண்டல இணை இயக்குநர் வழங்கினார்.

கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை வழங்கும் நிகழ்ச்சி வலையங்குளத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தில் கால்நடை வளர்ப்போருக்கு குறைந்த வட்டியில் கறவை பசு வாங்குதல், ஆட்டுக் கொட்டகை அமைத்தல், கோழிப்பண்ணை அமைத்தல், மாடுகளுக்கு தீவனம் வாங்குதல், பராமரித்தல் ஆகியவற்றுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் இராஜ திலகன், துணை இயக்குனர் இரவிச்சந்திரன், மதுரை கோட்ட உதவி இயக்குனர் சரவணன், ஆகியோர் தலைமையில் வலையங்குளம் கால்நடை மருந்தகத்தில் 31 விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் விவசாயிகள் கடன் அட்டை வழங்கப்பட்டது.. வலையங்குளம் கால்நடை உதவி மருத்துவர் அருண்சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கால்நடை பராமரிப்பு துறை மதுரை மண்டல இணை இயக்குனர் இராஜ திலகன் கூறியதாவது:

கால்நடை வளர்ப்போருக்கும், விவசாயிகள் கடன் அட்டை திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறியதாவது: மத்திய அரசின், விவசாயிகள் கடன் அட்டை திட்டம், தற்போது விரிவுபடுத்தப்பட்டு, கால்நடை வளர்ப்போருக்கும் வழங்கப்படுகிறது. இதில் சேர்வோருக்கு, 1.60 லட்சம் ரூபாய் வரையும், ஏற்கனவே விவசாயக்கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, கால்நடை வளர்ப்பு செலவுகளுக்காக, 2 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.

கடன் தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்துவோருக்கு, வட்டியில் தள்ளுபடி, ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப்படிவத்தை, இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை அருகில் உள்ள, கால்நடை மருந்தக கால்நடை மருத்துவரிடம் கையொப்பம் பெற்று, விவசாயிகள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில், கால்நடை வளர்ப்போர் சேர்ந்து, பயன்பெற வேண்டும் என்றார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories