சிவகாசி அருகே வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் சாவு..

Published:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொத்தனேரி பகுதியில் இன்று தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி அருகே உள்ள கொத்தநேரி பகுதியில் 25 தொகுப்பு வீடுகள் உள்ளன .சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள இந்த தொகுப்பு வீடுகளில் 20 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் –

இந்நிலையில் கருப்பையா என்பவருக்கு சொந்தமான வீட்டை பழுதுபார்க்கும் பணியில்
தாலிகொளுந்துபட்டி
பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் (23) உள்ளிட்ட 4 பேர் ஈடுபட்டு வந்துள்ளனர் – இந்நிலையில் திடீரென வீடு முற்றிலுமாக இடிந்து விழுந்ததில் அஜித்குமார் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார் –

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அஜீத் குமாரை பலத்த காயத்துடன் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் – விபத்து குறித்து எம்.புதுப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் –

IMG 20220419 WA0100 - 2026
ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

Related articles

Recent articles

spot_img