பெட்ரோல் டீசல் விலை உயர்வால் விலைவாசி அதிகரிப்பு-முத்தரசன்:

Published:

விருதுநகரில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது,

இலங்கையில் ஏற்பட்டு உள்ள விலைவாசி உயர்வை கண்டித்தும் அரசை ராஜினாமா செய்ய சொல்லி கடந்த 10 நாட்களாக மக்கள் போராடி கொண்டு இருக்கிறார்கள். எந்த வித அரசின் அடக்கு.முறைகள் அங்கு வெற்றி பெற வில்லை

இலங்கையில் சிங்களர் தமிழர் என பாகுபாடு இன்றி அனைவரும் ராஜபக்க்ஷே குடும்ப அரசை கண்டித்து போராடி கொண்டு இருக்கிறார்கள்

இலங்கையில் நடைபெறும் போராட்டம் போல் இந்தியாவில் நடப்பதற்கு வெகு நாட்கள் ஆகாது எனவும்

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் நாட்டில் விலைவாசி அதிகரித்து உள்ளது.

நாட்டில் ஏற்பட்டு உள்ள விலை வாசிய கட்டுபடுத்தி அத்தியவாசிய பொருட்கள் நியாயமாக மக்களுக்கு கிடைக்க ஒன்றிய அரசு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனவும்

விலைவாசி உயர்வு பிரச்சனையை திசை திருப்ப மதங்களின் பெயரால் நாடு முழுவதும் கலவரங்களை உருவாக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. இந்த முயற்சி நாட்டையே சீர்கொலைக்கும் என எச்சரித்தார்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

உள்துறை அமைச்சர் அனைவரும் இந்தியை பேச வேண்டும் இந்தியை படிக்க வேண்டும் என்று சர்வாதிகார போக்குடன் உத்தரவு போடுகிறார் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்.

நாட்டின் ஒற்றுமை ஒருமைபாட்டை சீர்குழைக்கும் வகையில் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் சட்டங்களும் அனுகு முறையிலும் இருக்கிறது.
இவைகளை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக போராடும். அதே மாதிரி தமிழ்நாட்டில் பாஜகவை காலுன்றாமல் தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும். அதே போல் வருகிற ஆகஸ்ட் 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநில மாநாடு நடைபெறுகிறது. அதில் அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்

அந்த மாநாட்டில் முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 9ம் தேதி வெள்ளையனே வெளியேறு தினமான அன்று ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு மோடி அரசே வெளியேறு என்ற முழுக்கத்துடன் பேரணி நடைபெறும் என்றார்.

எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்கு மக்கள் ஏங்குகிறார்கள் என பாஜக மாநில தலைவர் கூறிய கருத்துக்கு பதிலளித்த முத்தரசன் எடப்பாடி பழனிச்சாமியை உளவுதுறை தேடிக்கொண்டு இருக்கிறது என்றார். மேலும் பேசிய அவர்

ALSO READ:  மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி... தமிழகத்தில் இவை எப்படி?

இளையராஜா சிறந்த இசையமைப்பாளார் என்றும் அவர் சிறந்த ஞானி என்றார். இளையராஜாவின் வளர்ச்சியை கண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெருமிதம் கொள்கிறது என்றார். மேலும் அம்பேத்காருடன் மோடியை ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

ஆளுநர் பதவி என்பது மிக உயரிய பதவி ஆகும். அந்த பதவிக்கு உரிய மதிப்பளித்து ஆலங்கரிக்கக் கூடிய வகையில் ஆளுநர்களின் செயல்பாடு இருக்க வேண்டும்.

ஆளுநரின் தேநீர் விருந்தை அரசும் மற்றும் அனைத்து கட்சிகளும் புறத்கணித்ததை ஆளுநர் சுயவிமர்சனத்தோடு பார்க்க வேண்டும் என்றார். மேலும் ஆளுநர் உரிய சுயவிமர்சனம் செய்து கொண்டு உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும் அப்படி இல்லை என்றார் தமிழகம் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்படும் என்றார்.

images 66 - 2026

Related articles

Recent articles

spot_img