சிவகாசியில் இரவில் கொட்டிய கனமழை! சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!

sivakasi rain - 2026

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று இரவு கனமழை பெய்தது. காலையில் இருந்து மேகமூட்டமாக இருந்த நிலையில் கடுமையான வெட்கை இருந்தது. இந்த நிலையில் இரவு 9 மணியளவில் சாரலாக துவங்கிய மழை சற்று நேரத்தில் பலத்த மழையாக பெய்யத்துவங்கியது. பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்ததால், சிவகாசி நகர் பகுதியில் உள்ள சாலைகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் பல இடங்களில் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மழைநீரில் சாய்ந்து விழுந்து இழுத்துச் செல்லப்பட்டது. மாரியம்மன் கோவில் பகுதி, புதுரோட்டு தெரு, ஜவுளிக்கடை வீதி, மணி நகர், பழைய நீதிமன்ற சாலை, தெற்கு தெரு, காளியம்மன் கோவில் தெரு, புதுத்தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

இரவு நீண்ட நேரம் சாரல்மழை பெய்து கொண்டே இருந்தது. சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளான சித்துராஜபுரம், சசிநகர், பேர்நாயக்கன்பட்டி, மாரனேரி, விளாம்பட்டி, மாதாங்கோவில்பட்டி, பாறைப்பட்டி, மீனம்பட்டி, சுந்தர்ராஜபுரம், அனுப்பங்குளம், பேராபட்டி, அம்மன் நகர், திருத்தங்கல், செங்கமலப்பட்டி, செங்கமலநாச்சியார்புரம் உள்ளிட்ட பல இடங்களிலும் நேற்றிரவு கனமழை பெய்தது.

இதனால் இந்தப்பகுதியில் உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. சிவகாசி பகுதியில் பெய்த கனமழை பொதுமக்களுக்கு சற்று சிரமத்தை தந்தாலும், குடிநீர் பிரச்சினை தீரும் என்று மகிழ்ச்சியையும் தந்துள்ளது. மதுரை மாவட்டத்தில், வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories