மதுரை ஆலயங்களில் கந்த சஷ்டி விழா!

chozhavanthan temple kandha sasthi - 2026
#image_title

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதிகளில் உள்ள கோவில்களில் கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் கரையில் அமைந்துள்ள பிரளயநாத சிவன் ஆலயத்தில், கந்த சஷ்டியை முன்னிட்டு, இத்திருக்கோவில் அமைந்துள்ள பாலமுருகனுக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷே வழிபாடுகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, விநாயகர் மற்றும் பாலமுருகன் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அர்ச்சனை வழிபாடுகள் நடைபெற்றது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி இளமதி, தொழில் அதிபர் எம் .வி. எம் .மணி கவுன்சிலர்கள் வள்ளி மயில், எம். மருதுபாண்டியன், கணக்கர் சி பூபதி மற்றும் ஆலயப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதே போல, சோழவந்தான் அருகே உள்ள தென்கரை மூலநாதர் சுவாமி ஆலயத்தில், கந்த சஷ்டியை முன்னிட்டு, முருகனுக்கு சிறப்பு பூஜைகள் அர்ச்சனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு கோயில் விழா கமிட்டியின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், கந்த சஷ்டி முன்னிட்டு, பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷே அர்ச்சனைகள் நடைபெற்றது. தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலும், வர சித்தி விநாயகர் ஆலயத்திலும், கோமதிபுரம் ஜூபிலி டவுன் ஞான சித்தி விநாயகர் ஆலயத்திலும், அண்ணாநகர் வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்திலும், மதுரை அண்ணாநகர் யானைக் குழாய் முத்து மாரியம்மன் ஆலயம், மதுரை அண்ணாநகர் பூங்கா முருகன் ஆலயத்திலும் முருகனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories