அறநிலையத்துறை இடத்தில் அசைவ ஹோட்டலா? இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்து முன்னணி போராட்டம்!

Published:

kutralanathan protest in palay busstand
kutralanathan protest in palay busstand

திருநெல்வேலியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் அசைவ ஓட்டல் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி, முருகன்குறிச்சியில் திரிபுராந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 8 சென்ட் நிலத்தை ஹிந்து அறநிலையத்துறை முத்தையா என்பவருக்கு 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டது. ஆனால், அங்கு இஸ்லாமியர் பெயரில்  அசைவ ஓட்டல் அமைக்க கட்டுமான பணிகளை துவக்கியுள்ளனர்.

இது நெல்லை வாழ் இந்துக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது எனவே அறநிலையத்துறையின் இந்த கீழ்த்தரமான செய்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துக்கள் உள்ளம் குமுறினர். இதையடுத்து அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்துமுன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட செயலாளர் சுடலை உள்ளிட்டோர் இன்று மாலை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து குற்றாலநாதன் கூறுகையில், அறநிலையத்துறை விதிமுறைகளில், நிலத்தை வேற்று மதத்தினருக்கோ, உள்குத்தகைக்கோ விடக்கூடாது. அசைவ ஓட்டல், இறைச்சிக்கடை அமைக்கக் கூடாது. மீறினால் குத்தகை ரத்தாகும். செலுத்திய தொகை திரும்ப கிடைக்காது என விதிமுறைகள் உள்ளன. மீறி அசைவ ஓட்டல் கட்ட முயற்சித்தால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.

முன்னதாக, திருநெல்வேலியில் கோயில் நிலத்தில் அசைவ ஓட்டல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

*பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை* முகமது அன்சாரி என்ற வேற்று மதத்தினர் முத்தையா என்ற பினாமி பெயரில் எடுத்து அசைவ உணவு ஹோட்டல் கட்ட அனுமதியளித்த இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்தும் முறையற்ற பினாமி குத்தகையை ரத்து செய்ய வலியுறுத்தியும் *சம்பந்தப்பட்ட இடத்தில் இந்து முன்னணி குழியில் இறங்கி முற்றுகை போராட்டம்* நடைபெறும் என்று இந்து முன்னணியினர் அறிவித்திருந்தனர். 

அதன் படி, திங்கள் கிழமை (15.6.2020) இன்று மாலை 4 மணி அளவில், பாளை முருகன்குறிச்சி சத்யா ஏஜென்ஸி அருகில் இந்துமுன்னணியினர் குழிக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். 

Related articles

Recent articles

spot_img