உள்ளூர் செய்திகள்

காவிரி வாரியம்; ஏப்.29ம் தேதி மெரினாவில் போராட்டம்: தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 29ம் தேதி மெரினாவில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை: காவல் ஆணையர் பதில்!

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

ராஜா படத்தில் திமுக.,வினர் எச்ச துப்பி போராட்டம்: பதிலுக்கு பாஜக., என்ன செய்யப் போகிறது?

இன்று காலை, ஆர்.ஏ.புரம் மூப்பனார் பாலத்தில் ஹெச்.ராஜாவின் உருவபொம்மையை தொங்க விட்டு, தூக்கில் தொங்குவது போல் போராட்டம் நடத்தி அதையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.இப்போது இந்தப் போராட்டங்களுக்கு பதிலடி போராட்டங்களாக பாஜக., என்ன வித்தியாசமாக நடத்தப் போகிறதோ என்ற கலக்கத்தில் உள்ளனர் அரசியல் நோக்கர்கள்.

சமூக வலைதளங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கிறார்கள் : பொன்.ராதாகிருஷ்ணன் புகார்

காவிரி பிரச்னை 150 ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதில், 100 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்று சொல்வது நியாயமான செயலா? என்று கேள்வி எழுப்பினார் பொன்.ராதாகிருஷ்ணன்.

தைரியம் இருந்தா உங்க அட்ரஸோட மீம்ஸ் போடுங்கடா…: ஜெயக்குமார் ஆவேசம்

முன்னதாக, ஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு என்று கூறிய ஜெயக்குமார், பெண்மைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் யாரும் கருத்து தெரிவிக்கக்கூடாது என்று கூறினார். 

நிர்மலா தேவியிடம் ஏப்.21ம் தேதி விசாரணை: கூடுதலாக பெண் அதிகாரிகள் நியமனம்

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருந்தார். எனவே இந்த விவகாரத்தில் உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வர தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அரசியல் மட்டத்தில் கோரிக்கைகள் வலுத்துள்ளன.
- 2026

தமிழகத்தில் ஊழல் ஒழிப்புக்கு லோக் ஆயுக்த அமையுங்கள்: மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

தமிழக ஆளுநரை களங்கப்படுத்தும் ‘செயல்’களுக்கு நாக்பூர் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!

அன்றைய தினம், ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியை தவறான கண்ணோட்டத்தில் சித்திரிக்க முயல்வது, வாழ்நாள் முழுவதும் பொது வாழ்க்கையில் நற்பெயருடன் செயல்பட்டு வருபவரை, சட்ட பூர்வமான உயர் பதவி வகித்து வருபவரை இது சிறுமைப்படுத்தும் முயற்சி மட்டுமல்ல, மட்டமான ரசனை கொண்டதும் கூட!

புதுவையில் காங்கிரஸாரின் அராஜகம்: நியமன எம்.எல்.ஏ., கார் கண்ணாடி உடைப்பு

புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏ சங்கரின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதை அடுத்து,  சம்பவம் குறித்து நியமன எம்எல்ஏ சங்கர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

கிரிக்கெட் பார்க்க புனேவுக்கே போகுது சிறப்பு ரயில்! போராட்டங்களால் தமிழக அரசுக்கே இழப்பு!

சென்னையில் இருந்து சிறப்பு ரயில் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் சிஎஸ்கே ரசிகர்களை புனேவுக்கு அனுப்பி வைத்துள்ளது. விசில் போடு எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தச் சிறப்பு ரயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புனேவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

ஆளுநரின் செயல்பாடுகள் கவனம் கொள்ளுமா மத்திய அரசு ? ஜி.கே.வாசன்

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாக அமைந்துள்ளதை மத்திய அரசு முக்கிய கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் ஜி.கே.வாசன்

பேராசிரியை விவகாரம் பசுந்தோல் புலிகள் யார் யார் ? விஜயகாந்த்

பேராசிரியை பின்னணியில் பசுந்தோல் புலிகள் யார் யார் என்பதை கண்டறிய வேண்டும்நிர்மலாதேவி விவகாரத்தில் நீதிமன்றமே தாமாக முன்வரவேண்டும்
- 2026

Recent articles