December 6, 2025, 5:02 AM
24.9 C
Chennai

பிள்ளையார் நோன்பு விழாவில் சுவாரஸ்யம்! ஒரு கிலோ உப்பு ரூ.33,000 மாலை 16,000..!

karur pillaiyar nonbu - 2025

கருவூர் வாழ் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்களின் உலகளாவிய சமுதாய நோன்பு விழாவான பிள்ளையார் நோன்பு விழா செவ்வாய்க் கிழமை மாலை பி.எல்.ஏ. திருமண மண்டபத்தில் தலைவர் அக்ரி சுப.செந்தில்நாதன் தலைமையில் பொருளர் கும.குமரப்பன் முன்னிலையில் நடைபெற்றது

செயலாளர் மேலை பழநியப்பன் நோன்பின் மாண்பினை விளக்கிக் கூறி வரவேற்புரை ஆற்றினார். விநாயகர் சிறப்பு கூட்டு வழிபாடு தீபாராதனை நடைபெற்றது.

சமூகப் பெரியவர்கள் வைரவன், அருணாசலம் கெளரவிக்கப்பட்டு அவர்கள் இளை எடுத்து நோன்பு களைந்து பின் அவர்கள் கூடியிருந்த 600 பேருக்கு இளை எடுத்துக் கொடுக்க அனைவரும் நோன்பு களைந்தனர்

தொடர்ந்து வழிபாட்டில் பக்தர்களால் வாங்கி வைக்கப்பட்ட உப்பு, தேங்காய், வாழைப்பழம், சர்க்கரை, கற்கண்டு,சட்டை, ஸ்கூல் பேக், மணமாலை, குபேரன், விளக்கு, பிள்ளையார் உள்ளிட்ட 21 பொருட்களை சமூக அறங்களுக்கான நிதித் திரட்டலாய் மேலை பழநியப்பன் ஏலம் நடத்தினார்

இதில் ௹சிகரமாக உப்பு ஒரு கிலோ 33000/- மாலை 16,000 , கற்கண்டு 1 கிலோ 6000/- என மொத்தம் இரண்டு லட்சத்து ஒரு ஆயிரம் ஏலம் நடைபெற்றது

சிறந்த மதிப்பெண் பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. குழந்தைகள் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டினர். தொடர்ந்து ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம் குழுவினரின் பாட்டுப் பட்டி மன்றம் நடைபெற்றது!

இரவு 12 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ரெத்தினம், வைஷ்ணவி மெய்யப்பன், அகல்யா மெய்யப்பன், சோபிகா பழனியப்பன், கைலாசம் கணேசன், அருணாசலம் ராமையா, அழகப்பன் உள்ளிட்ட திரளானவர்களும் குளித்தலை புலியூர் அய்யர்மலை, வேலூர், புகழூர், வெள்ளியனை காந்தி கிராமம், வெங்கமேடு, தான்தோன்றி மலை பகுதி வாழ் சமூக மக்களும் பங்கேற்றனர்! 

அனைவருக்கும் சிறப்பு விருந்தும் நாட்காட்டி சிறப்புப் பரிசாய் ஜமுக்காளமும் வழங்கப்பட்டது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories