December 6, 2025, 5:02 AM
24.9 C
Chennai

பண்டிகை காலத்தில் கொரோனா பரவலுக்கு வணிகர்கள் காரணமாகி விடக் கூடாது: கரூர் ஆட்சியர்!

karur-collector-malarvizhi
karur-collector-malarvizhi

மக்களின் குறைகளை கேட்க தனி செல்போன் செயலி விரைவில் துவங்க உள்ளதாகவும், பண்டிகை காலத்தில் கொரனோ தொற்று பரவல் விசயத்தில் வணிகர்களும், பொதுமக்களும் அரசின் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக பதவியேற்றுள்ள மலர்விழி செய்தியாளர்களிடம் பேசியபோது கூறினார்.

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக மலர்விழி கடந்த வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை மாவட்ட ஆட்சியர் மலர்விழி கூட்டரங்கில் சந்தித்தார்.

அப்போது பேசிய ஆட்சியர், இன்னும் 6 மாத காலத்திற்குள் கரூர் மாவட்டத்தில் வீடு இல்லாமல், குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா இல்லாமல்  இருப்பவர்களுக்கு தகுதியான நபர்களுக்கு பட்டா வழங்கப்படும். தகுதியான நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஓய்வூதியம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,

பிளாஸ்டிக் குப்பைகள் சேராமல் இருக்கவும், வரும் பருவமழை காலங்களில் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க தினசரி குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் பொதுமக்கள் குறை தீர்க்கும் பணியை எளிமையாக்க, பொதுமக்கள் தங்கள் குறைகளை எளிமையாகத் தெரிவிக்க வசதியாக ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளோம், அதே போன்று கரூர் மாவட்டத்திலும் ஒரு வார காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் மூலம் அறிமுகப்படுத்தப்படும்… என்றார்.

டிஜிட்டல் பேனர் வைப்பதை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதில் நடைமுறைப் படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் என்ன என்பதை கண்டறிந்து மாவட்டத்தில் செயல்படுத்தப்படும். எந்த கட்சியினராக இருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

கொரோனோ தொற்று பரவல் தடுக்கும் விதமாக அரசு விதிகளை பொதுமக்கள், வணிகர்கள் கடை பிடிக்க வேண்டும், பண்டிகை காலங்களில் கூட்டம், கூட்டமாக பொதுமக்கள் வணிக நிறுவனங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், வணிகர்களும் அரசு விதிகளுக்கு உட்பட்டு விற்பனை செய்ய வேண்டும், கடைகளை சீல் வைக்கும் நிலைக்கு மாவட்ட நிர்வாகத்தை தள்ள வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories