தர்ணாவை முடித்துக் கொண்டார் மம்தா! வெற்றி என பெருமிதம்! ஆனால் வெற்றி..?!

mamta - 2026

தர்ணா போராட்டத்தை முடித்துக் கொள்வதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும், அவர் தனது போராட்டம் குறித்துக் குறிப்பிட்டுள்ள போது, இந்த தர்ணா போராட்டம் ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புக்கும் கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.

ஆனால், மம்தா சொல்வது போன்ற வெற்றி நிச்சயம் அவருக்குக் கிடைக்கவில்லை என்பது நிகழ்வுகளின் மூலம் நன்கு வெளித் தெரிகிறது. மம்தாவின் தேவையற்ற இந்தப் போராட்டத்தின் மூலம், எல்லோரும் மறந்திருந்த சாரதா நிதி மோசடி பசுமையாய் மீண்டும் மக்கள் மனதில் பதிவு செய்யப்பட்டுவிட்டது.

பாஜக இந்த முறை ‘வளர்ச்சி’யை மட்டுமே வைத்து வாக்கு கேட்க நினைத்தது. ராமர் கோவிலில் விஷயத்தில் இந்து இயக்கங்களின் அழுத்தம் இருந்த போதும், நீதிமன்ற தீர்ப்பின் படி எல்லாம் அமைய வேண்டும் என்று நிதானம் காட்டுகிறது. அத்வானி ஆதரவாளர்களை திருப்திப் படுத்த வேண்டிய உள்கட்சி விவகாரம், இந்து இயக்கங்களை திருபதிப் படுத்த வேண்டிய நிலை எல்லாவற்றையும் கடந்து, பொதுத் தேர்தலை எதிர்நோக்கியிருந்த பாஜக.,வுக்கு கேரளமும் மேற்கு வங்கமுமே இப்போது அரசியல் செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன என்கிறார்கள் விமர்சகர்கள்.

ALSO READ:  இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

கேரளத்தில் சபரிமலை விவகாரம், அங்கும் கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸும்தான் பாஜக.,வுக்கு எதிரிகள். மேற்கு வங்கத்திலோ கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸின் துணை அமைப்பு போன்ற திரிணமுல் காங்கிரஸும் எதிரிகள். இப்போது இரு தரப்புமே பாஜக.,வுக்கு சில வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றன. இப்போது, ஊழல் எதிர்ப்பு என்ற ஆயுதத்தையும் வளர்ச்சியுடன் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளது பாஜக.,!

காங்கிரஸுக்கு மேற்கு வங்கத்தில் கெத்தாக ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால் நல்ல வாய்ப்பு இருந்தும், மம்தாவுகு மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தியை உணர்ந்து கொண்டு அரசியல் செய்ய வாய்ப்பு இருந்தும், மம்தாவிடம் சரணாகதியாகும் அளவிற்கு தன்னைக் கெடுத்துக் கொண்டது. இதற்கு ராகுல் காந்தியின் முதிர்ச்சியற்ற தன்மையே காரணமாகிப் போனது.

சபரிமலை விவகாரத்தைக் கையாண்டது போல், மேற்குவங்கத்திலும் ஓர் அறிக்கை விட்டு காங்கிரஸ் ஒதுங்கி யிருக்கலாம். ஆனால், பேராசை பிடித்த மம்தாவை குளிரவைத்தால் கல்கத்தாவில் கூட்டணி அமைக்கலாம் என்று தப்புக்கணக்கு போட்டு தன்னிலை இழந்து போயிருக்கிறது காங்கிரஸ். தன் பிடியில் இந்தக் கட்சிகளை வைக்காமல், அவர்களின் பிடிக்குள் காங்கிரஸ் போனதால்தான், ஆந்திராவைப் பிரித்து, மாநிலத்தை இழந்தது. தெலங்கானாவில் தோல்வி. இப்போது ஆந்திரத்தையும் நாயுடுவினால் இழந்துவிட்டு, தனி மரமாக நிற்கிறது.

ALSO READ:  சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

அதேபோன்ற நிலை கோல்கத்தாவிலும் வரலாம். சாரதா சிட் பண்ட் விவகாரத்தால் பாதிக்கப் பட்ட மக்களின் உள்ளக் குமுறல், மம்தா பானர்ஜியை இனி தூங்க விடாது. தான் வெற்றி பெற்றுவிட்டதாக மம்தா வெளியில் சொல்லிக் கொண்டாலும், உள்ளூர அவருக்கு உதறல் எடுத்துவிட்டதையே அவரது நடவடிக்கைகள் வெளிக் காட்டுகின்றன. மாநில பட்ஜெட்டை சமர்ப்பிப்பதைக் காட்டிலும், ஒரு தர்ணா போராட்டம் முக்கியமானதாகி விட்டது மம்தாவுக்கு! அதுவும் ஊழல் அதிகாரியைக் காப்பற்றத் துடிக்கும் காரணத்தை உலகம் அறிந்த போது… மம்தா இப்போது மாட்டிக் கொண்டு முழிக்கிறார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories