February 11, 2025, 12:50 AM
26 C
Chennai

ஆபாசப் பேச்சு… வக்கிரம்… ‘தற்குறி’ திருமாவளவனுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு!

பெண்கள் குறித்து அருவெறுக்கத்தக்க வகையில் பேசியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தங்கள் கட்சியின் மகளிர் கூட்டத்தில், இந்துக் கோயில்கள் குறித்து மிக மோசமான சொல்லாடல்களைக் கையாண்டிருந்தார்.

திருமாவளவனுக்கு எதிராக, தமிழர்கள் பெரும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். திருமாவளவன் தாம் நம்பும் ஹிந்து மத கடவுளர்க்கு எதிராக கொச்சையாகப் பேசி, தமது நம்பிக்கையை களங்கப் படுத்தி விட்டதாகக் கூறி, நடிகையும் பாஜக., உறுப்பினருமான காயத்ரி ரகுராம் டிவிட்டர் பதிவிட்டிருந்தார்.

அதில், “திருமாவளவனை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடியுங்கள். நவ.27 காலை 10 மணிக்கு மெரினாவிற்கு தனியாக வருகிறேன். அப்போது திருமாவளவன் என்னை நேரில் மிரட்ட தயாரா?” என சவால் விடுத்திருந்தார். இதைஅடுத்து காயத்ரி ரகுராமின் வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். தொடர்ந்து, காயத்ரி ரகுராமின் டிவிட்டர் கணக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் முடக்கப்பட்டது.

இந்நிலையில் திருமாவளவன் இந்து கடவுள்கள் குறித்த தனது பேச்சை நியாயப்படுத்தும் வகையில் விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து காயத்ரி ரகுராமின் சவாலுக்கு பதிலளிக்கும் வகையில், அதேநேரம் காயத்ரியின் பெயரை குறிப்பிடாமல் பேசி, தில்லியில் இருந்து பேஸ்புக் நேரலையில் திருமாவளவன் பேசியுள்ளார்.

அதில், ” விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி போன்றோர் இந்து தர்மத்தில் உள்ள குறைபாடுகளை சீர்திருத்த வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் கத்துக் குட்டிகளுக்கு தெரியாது. குடித்து விட்டு கார் ஓட்டுகிற தற்குறிகளுக்கு தெரியாது. பெண்களை வைத்து தொழில் செய்து, கைதாகி, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாகி, ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்த தற்குறிகளுக்கு தெரியாது. அவர்களுக்கு என்ன தெரியும்? அவிழ்த்துப் போட்டு, ஆடைகளை அகற்றி விட்டு நடிப்பது என்பது அவர்களுக்கு தொழில். ஆகவே, அது அவர்களுக்கு கலையாகத் தெரியலாம்.

அதை கலை என்ற அடிப்படையில் தான் அவர்கள் கற்றிருக்கிறார்கள். அந்த கற்றுக் குட்டிகளுக்கு விடை சொல்லப் போகிறோம் என்ற முறையிலே, அவர்களுக்காக நாம் நமது சக்தியை விரயம் ஆக்குவது என்பது வீண் என என்னை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிற தோழர்களுக்கு நான் விடுக்கிற வேண்டுகோள்.

நாம் மோடி போன்ற பெரிய சக்திகளை எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். இது போன்ற பதர்களுக்கு பதில் சொல்வதற்காக காலத்தை வீணடிக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

நடிகைகள் குறித்த திருமாவளவனின் அறுவெருக்கத்தக்க இந்தப் பேச்சுக்கு மகளிர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருமாவளவனின் இந்தப் பேச்சைக் கேட்டு, மகளிர் அமைப்பினர் கொந்தளித்துப் போயுள்ளனர். நடிகையர் என்றால் இளக்காரமா என்று கேட்டு, மிகவும் கேவலமான வகையில் பெண்ணினத்தை தனது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவுடிகளிடம் சொல்வதா என்று கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

ஏற்கெனவே மற்ற சாதிப் பெண்கள், அவரவர் சாதியில் உள்ள ஆண்களைத் திருமணம் செய்ய மறுக்கிறார்கள், அவர்களுக்கு சரக்கு இல்லை மிடுக்கு இல்லை என்று, மற்ற சாதிப் பெண்கள் ஏதோ உடல் இச்சைகளுக்காகத்தான் பட்டியலின ஆண்களைத் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று மிகக் கேவலமாக இழித்தும் பழித்தும் பேசியிருந்தார்.

இந்நிலையில், இப்போதும் மகளிர் குறித்த தனது அசிங்கமான பார்வையால் திருமாவளவன் தான் யார் என்பதை தமிழ் கூறும் நல்லுலகுக்குக் காட்டியிருக்கிறார் என்று மகளிர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

Topics

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Ind Vs Eng ODI: ரோஹித் சர்மா அதிரடியில் இந்தியா வெற்றி!

ஆட்ட நாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

Entertainment News

Popular Categories