ஆளுக்கு ரூ.4,000; ரூ.89 கோடி விநியோகிக்க ஏற்பாடு! : வருமான வரித்துறை ஆவணம் வெளியீடு

Published:

சென்னை:
சென்னை, ஆர்.கே.நகரில் ரூ.89 கோடியை வாரி இறைக்க டிடிவி தினகரன் குழு திட்டமிட்டது அம்பலம் ஆகியுள்ளது. வாக்காளர் ஒவ்வொருவருக்கும் ரூ.4 ஆயிரம் வீதம், சுமார் ரூ.89 கோடிக்கு வாக்காளர்களை விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளனர்.

நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் கசிந்துள்ளன.
இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட 6 அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன.

ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பான ஆவணங்கள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணப் பட்டுவாடா செய்ய ரூ.89.65 கோடி வழங்க இருந்தது தெரிய வந்துள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான ஆவணங்களும் வெளியாகின; எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் பெயர்கள் ஆவணங்களில் உள்ளன.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 85% வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய இருந்ததும் தெரியவந்துள்ளது.

இதனிடையே தேர்தல் தள்ளிப் போகுமா என்பது நாளை தெரியவரும். வருமான வரித்துறை யினர் தாங்கள் நடத்திய சோதனை குறித்து இன்று இரவு தேர்தல் ஆணையத்துக்கு தகவலை அனுப்பி வைக்கும் என்றும், அதன் அடிப்படையில் நாளை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும் கூறப்படுகிறது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

வருமான வரித்துறை மூலம் கசிந்த ஆவணங்கள்:

rknagar election pattuvada - 2026

rknagar itraid1 - 2026rknagar itraid3 - 2026rknagar itraid2 - 2026rknagar itraid3 - 2026

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img