February 21, 2026, 3:20 PM
30.4 C
Chennai

அமைச்சரை விமர்சித்து எழுதியதால் சிறை சென்ற கரூர் நிருபருக்கு நிபந்தனை ஜாமீன்!

anandakumar vijayabaskar - 2026

திருச்சி: போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் செய்தி பகிர்ந்ததற்காக புகார் அளிக்கப் பட்டு கைது செய்யப் பட்ட கரூர் நிருபர் ஆனந்தகுமாருக்கு திருச்சி நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் அளித்துள்ளது. இதை அடுத்து அவர் நாளை வெளியில் வருகிறார்.

கரூர் பத்திரிக்கையாளர் ஆனந்தகுமார் கடந்த மாதம் 22ஆம் தேதி கைது செய்யப்பட்டு 14 நாட்களாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் கரூர் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தபடுவார் என எதிர்பா்க்கப்பட்டது. ஆனால், காணொளி மூலம் மேலும் 15 நாட்கள் சிறைக் காவலை நீட்டித்து உத்தவிட்டார் நீதிபதி.

இதனிடையே, கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிருபர் சார்பில் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் தாக்கல் செய்த ஜாமீன் மனு அக்டோபர் 4 ம்தேதி வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் அக்டோபர் 5ம்தேதி வரை அவகாசம் கோரியதால் இன்று மீண்டும் அம்மனுவை விசாரித்த கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி நம்பிராஜன், வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் வாதத்தை கேட்டார்.

நிருபர் ஆனந்தகுமார் மீது போடப்பட்ட சட்டப் பிரிவுகள் பொருந்துவதாக இல்லை என்று வழக்கறிஞர் கூறியதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நிருபரின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள், மற்றும் காவல் துறையால் பதியப்பட்ட வழக்கு பிரிவுகளின் தன்மைகள் குறித்து அரசு வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்டார்.

அதற்கு அரசு வழக்கறிஞரால் சரியான விளக்கம் அளிக்க இயலவில்லை. ஆனால், பின்னர் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் பொழுது சரியான சட்டப் பிரிவுகளை மாற்றி பதிவு செய்து, காவல் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்றார். இது நீதிமன்றத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நிருபர் ஆனந்த் குமார், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு. ஆனால், அவர் மீது பொருத்தமற்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறது என்றும், காவல் துறை திட்டமிட்டு தவறாக பதிவு செய்திருக்கிறது என்றும் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் கூறினார். மேலும், காவல் துறையினரின் நடவடிக்கை, தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், கருத்து வெளியிடும் உரிமையை பாதிப்பது என்றும் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மதியம் 2 மணிக்கு மேல் வழக்கை ஒத்திவைத்தார்.

தொடர்ந்து, மதியம் 3 மணிக்கு மேல் நிருபர் ஆனந்தகுமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டார். நிருபர் ஆனந்தகுமார் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மாதத்துக்கு வேலை நாட்களில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories