December 5, 2025, 11:43 PM
26.6 C
Chennai

சாதி கொடுமை… அம்மாவின் உடலை சைக்கிளில் சுமந்து சென்று… பரிதாபம்!

casteprob body taken - 2025

சாதிக் கொடுமை காரணமாக, இறந்துபோன தனது அம்மாவின் உடலை தனியாளாக சைக்கிளில் கொண்டு சென்று காட்டுக்குள் அடக்கம் செய்த சம்பவம் ஒடிசாவில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது!

ஒடிசா மாநிலம் சுண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் கிராமத்தைச் சேர்ந்த ஜானகி சின்ஹானியா(45) கணவர் இறந்தவிட்ட நிலையில், தன் 17 வயது மகன் சரோஜ் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.

இரு தினங்களுக்கு முன்னர், தண்ணீர் எடுக்கச் சென்ற ஜானகி, தடுமாறி விழுந்ததில் உயிரிழந்தார். அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய அவரது மகன் சரோஜ் முயன்றார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டார். யாரும் உதவ முன்வரவில்லை. அவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் எவரும் உதவ முன்வரவில்லை என்று கூறப் படுகிறது.

வேறு வழியின்றி சரோஜ் தனது அம்மாவின் உடலை சைக்கிளில் வைத்தார். பின்புற கெரியரில் இரண்டு கம்புகளை முட்டுக் கொடுத்து, அதன்மேல் மரக்கட்டையை வைத்து தாயின் உடலைக் கிடத்தினார். பின் தன் தலையில் ஒரு துண்டைப் போட்டுக் கொண்டு நான்கைந்து கி.மீ நடந்தே சைக்கிளை உருட்டிச் சென்று, உடலை சுடுகாட்டுக்குக் கொண்டு சென்றார்.

அவர் செல்லும் வழியில் எதிர்ப்பட்டவர்கள் யார் இது என்று கேட்டபோது, குரல் உடைந்த நிலையில், ’என் அம்மா’ என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார் சரோஜ்.

பின்னர் எவர் உதவியும் இன்றி, தனி நபராக காட்டுக்குள் தாயின் உடலை அடக்கம் செய்துவிட்டு வந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து செய்தி வெளியானதும், தகவலைப் படித்து பலரும் சோக மயமாகினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories