December 6, 2025, 3:04 AM
24.9 C
Chennai

காந்தி கொலையும் பின்னணியும் – பகுதி115

jinnah gandhi - 2025

பிர்லா ஹவுஸ் பணியாளர்கள் QUARTERSலிருந்து சுமார் 300 அடி தூரத்தில்,கதவிலக்க எண் 9 ALBUQUERQUE சாலை வீட்டு பணியாளர்கள் QUARTERSஅமைந்திருந்தது.

அதில் ஒரு விடுதியில்,நானக் சந்த் என்பவர் தன் இளம் மனைவி சுலோச்சனாவோடு வசித்து வந்தார்.

அவர்களுடைய மூன்று வயது மகன் மொஹிந்தர் அடிக்கடி,பிர்லா ஹவுஸ் பணியாளர்கள் QUARTERS பணியாளர்களின் பிள்ளைகளோடு விளையாட அங்கு ஓடி போய் விடுவான்.

ஜனவரி மாதம் 20ந் தேதி மாலை,தன் மகனை தேடி அங்கு வந்த சுலோச்சனா,’யாரோ ஒரு நபர் ஒரு வெடிகுண்டை வைத்து விட்டு,தீப்பெட்டியிலிருந்து,தீக்குச்சியை எடுத்துக் கொளுத்துவதைப் பார்த்தார்.

‘’ நான் என் குழந்தையை அவசர அவசரமாக தூக்கிக் கொண்டேன்……அந்த வெடிகுண்டோடு சேர்ந்திருந்த திரிபோன்ற ஒரு பொருளிலிருந்து நெருப்புப்பொறிகள் வந்ததைப் பார்த்தேன் ‘’ என்று பின்னாளில் தன் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

மதன்லால் பஹ்வா கூட சுலோச்சனாவை கவனித்து விட்டார்.குழந்தையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடும்படி அவரிடம் கூறினார்.

அங்கிருந்து மதன்லால் பஹ்வாவும் ஆப்தேயிடம் தெரிவிக்கக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு ஓடிச் சென்றார்.

பின்னாளில் இது பற்றி மதன்லால் பஹ்வா கூறுகையில் ‘’ GUN COTTON SLAB எந்த கணத்திலும் வெடிக்கும் என்று ஆப்தேயிடம் கூறினேன்.எல்லாம் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக அவர் தெரிவித்தார் ‘’.

தன்னுடைய முதல் நிலை வீரர்கள் திகம்பர் பாட்கேயும்,ஷங்கர் கிஷ்டய்யாவும்,காந்தியின் இரு பக்கத்திலும் தயார் நிலையில் நின்று கொண்டிருப்பதை ஆப்தே பார்த்தார்.

வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டவுடன் அவர்கள் இருவரின் ரிவால்வர்களிலிருந்தும் காந்தியை நோக்கி குண்டுகள் பாயும் என எதிர்பார்த்து அவர்களையே பார்த்திருந்தார்.

அவர்கள் ரிவால்வர்களால் சுட்டவுடன்,இரண்டாம் நிலையில் செயலில் இறங்க கார்கரே,மதன்லால் பஹ்வா,கோபால் கோட்ஸே ;

பாட்கேயும்,ஷங்கர் கிஷ்டய்யாவு ம் கூட கையெறி குண்டுகளை வீசுவார்கள்…..

வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது.

ஆனால் ரிவால்வர்களால் யாரும் சுடவில்லை;

யாரும் வெடிகுண்டுகளும் வீசவில்லை.

ஷங்கர் கிஷ்டய்யாவையே கவனித்தப்படியிருந்த மதன்லால் பஹ்வா,அங்கிருந்து அவர் ஓடுவதைப் பார்த்தார்.அவரோடு கூட திகம்பர் பாட்கேயும் ஓடிக் கொண்டிருந்தார்.

மதன்லால் பஹ்வாவின் தோளில் தட்டி ஆப்தே கூறினார் :

‘’ திட்டம் தோல்வியடைந்து விட்டது ‘’.

மதன்லால் பஹ்வா அதற்கு முன்பு பிர்லா ஹவுஸிற்கு வந்ததில்லை.ஆகவே எங்கு போவதென்றே அவருக்குத் தெரியவில்லை.

வெளியே செல்ல வழியிருக்கும் என்று எண்ணி ஒரு திசையில் ஓடினார்.

பிர்லா ஹவுஸின் பிரம்மாண்டமான முகவாயில் அருகே வந்து சேர்ந்து விட்டார்.

உடனே இங்குமங்குமாய் புதருகளுக்கிடையேயும் ,ஒரு பாதையின் வழியாகவும் ஓடியவர்,பிர்லா ஹவுஸின் பிரதான நுழைவாயிலை தான் நெருங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

அங்கே சில போலீஸ்காரர்கள் மிகுந்த பதற்றத்துடன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.

அவர் கால்சட்டையில் ஒரு வெடிகுண்டு இருந்தபடியால்,தன்னை அவர்கள் சோதனை செய்வதை அனுமதிக்க முடியாது என்று உணர்ந்த அவர்,மீண்டும் வந்த வழியிலேயே திரும்ப ஓடினார்.

தான் எந்த வழியில் பிர்லா ஹவுஸிற்குள் நுழைந்தாரோ அந்த பணியாளர்கள் QUARTERS ன் நுழைவாயிலை பார்த்து விட்டார்.

ஆனால்….

அவர் வந்து நின்ற இடம்…

வெடிகுண்டு வைத்த இடத்திற்கு அருகே….

அங்கே அந்த பெண்மணி சுலோச்சனா தன் மகனோடு நின்று கொண்டிருந்தார்.

அவரோடு துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவரும்,வேறு இரண்டு பேரும் இருந்தார்கள்.

மதன்லால் பஹ்வாவை கண்ட சுலோச்சனா ‘’ அந்த ஆள்தான் ‘’ என்று கத்தினார்.

( தொடரும் )

காந்திகொலையும்பின்னணியும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories