காந்தி கொலையும் பின்னணியும் – பகுதி 116

godse gandhi - 2026

ஆப்தேயையும் மற்றவர்களையும் பிர்லா ஹவுஸிற்கு அழைத்து வந்த டாக்ஸி டிரைவர் சுர்ஜித் சிங் இதற்கு முன்பு காந்தியை பார்த்ததில்லை.

அன்றைய தினம் பிரார்த்தனக் கூட்டத்திற்கு காந்தியை ஒரு நாற்காலியில் அமர வைத்து தூக்கி வந்தனர்.

உண்ணாவிரதம் முடிந்த பிறகு அவர் முதல் முறையாக மக்கள் முன் தோன்றும் நிகழ்ச்சி அது.
நடக்க முடியாத அளவிற்கு அவர் பலவீனமாக இருந்தார்.

கூட்டத்திற்குள் செல்லாமல், வெளிபக்கமாகவே நின்றிருந்த சுர்ஜித் சிங் கீதை ஸ்லோகங்கள் கூறப்படுவதைக் கேட்டார்.

அதன் பிறகு காந்தி கூட்டத்தினரிடையே உரையாற்றினார்.

ஆனால் சுர்ஜித் சிங் காதில் விழுந்ததெல்லாம் வெறும் முணுமுணுப்பு மட்டுமே.

20 நிமிடங்கள் சென்றிருக்கலாம்.
கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர் மைக் சரியில்லை என்று கூறினார்.

ஏமாற்றத்துடன், டாக்ஸியை நிறுத்தியிருந்த இடத்திற்கு சுர்ஜித் சிங் திரும்பினார்.

அப்போது அவர் ஒரு வெடிசத்தத்தை கேட்டார்.

இந்த வெடிசத்தத்தை அவர் கூட்டத்தில் இருக்கும் போது கேட்டாரா அல்லது டாக்ஸி இருக்கும் இடத்திற்கு திரும்பிய பிறகு கேட்டாரா என்று தெரியவில்லை.

ALSO READ:  தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

கோபால் கோட்ஸே கூற்றின்படி( பின்னாளில் இது குறித்து அவர் நினைவுகூர்ந்தபோது ),வெடிசத்தம் கேட்ட சில நிமிடங்களுக்கு பிறகுதான், டாக்ஸி இருக்கும் இடத்திற்கு அவர் திரும்பி இருக்க வேண்டும்.

காந்தியின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து எழுதிய டெண்டுல்கர் எழுதுகிறார் :

’ வெடிசத்தம் வெகு தூரத்திற்கு கேட்கும் அளவிற்கு இருந்தது ; ஆனால் ‘ காந்தி கலக்கமடையவில்லை.எதுவுமே நடக்காதது போல தன் உரையை தொடர்ந்தார்.

அவர் மீண்டும் பேசத் தொடங்கியதும் கூட்டமும் அமைதியடைந்தது.

கூட்டம் வழக்கமான வரிசைக்கிரமத்தில்,கோரஸ் இசை,காந்தியின் உரை,குரான்,பைபிளிலிருந்து வாசகங்கள் மற்றும் பகவத் கீதையிலிருந்து ஸ்லோகங்கள் என தொடர்ந்து இறுதியாக, ‘ அனைவருக்கும் ஞானம் அருளும்படி’ பிரார்த்திக்கும் ரகுபதி ராகவ ராஜாராம் பாடல் பாடப்பட்டது’.

இந்த வெடிகுண்டு சம்பவத்தைப் பற்றி அன்று மாலையில் பேசிய காந்தி மதன்லால் பஹ்வாவை புகழ்ந்து பேசினார்.

‘ அந்த சிறுவன் ( மதன்லால் பஹ்வா ) ஒரு பஹதூர் ( வீரன் ) ; ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட,தேசிய கதாநாயகன் ஆகிவிட்ட தீவிரவாதி பகத்சிங் போன்றவன் போன்றவன் ;

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

அவர் மேலும் கூறுகையில் ‘ BACHE HAIN,AHBI YEH SAMAJHTE NAHIN,MAROONGA TAB YAAD KARENGE,KE BOODHA THEEK KEHTA THA ‘ ( அவர்கள் குழந்தைகள் போன்றவர்கள்.அவர்களுக்கு புரியவில்லை.நான் போன பிறகு ( இறந்த பிறகு ),அந்த வயதானவன் சொல்லி வந்ததெல்லாம் உண்மையே ) என்று புரியும்.

இவையெல்லாம் டெண்டுல்கர் தன் ‘ காந்தி வரலாறு ‘ புத்தகத்தில் எழுதியுள்ளது.

ஷங்கர் கிஷ்டய்யாவும்,திகம்பர் பாட்கேயும் ஓடுவதைக் கண்ட கோபால் கோட்ஸே தானும் தப்பிவிட வேண்டுமென்றுதான் முதலில் எண்ணினார்.

அவர் காத்திருந்த டாக்ஸியை நெருங்கிய போது,பின்னால் இருக்கையில் ஒரு வெள்ளை துணி மூட்டையைக் கண்டார்.அதில் இருப்பது என்னவென்றும் அவருக்கு புரிந்து போய் விட்டது.டாக்ஸி டிரைவரும் அங்கில்லை.

‘ காந்தியை கொல்ல ஒரு கடைசி வாய்ப்பு ; நானே அதை செய்து முடித்து விடுகிறேன் ‘ என தீர்மானித்தார்.

ரிவால்வர்கள் இருந்த வெள்ளை மூட்டையை,தான் கையெறி குண்டை வைத்திருந்த பையிற்குள் போட்டுக் கொண்டு,பணியாளர்கள் QUARTERS நோக்கி ஓடினார்.

வெடிகுண்டு சத்தத்தை கேட்டு பலரும் பல திசைகளில் ஓடிக்கொண்டிருந்ததால்,கோபால் கோட்ஸேயை யாரும் கவனிக்கவில்லை.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

மேலும் வெடிசத்தத்தை கேட்டவுடன்,பணியாளர்கள் QUARTERS ல் இருந்த அனைவரும் பயந்துபோய் போட்டது போட்டபடி,அறைகளின் கதவுகளையெல்லாம் கூட திறந்து போட்டுவிட்டு ஓடி போய் விட்டனர்.

கோபால் கோட்ஸே,சோட்டு ராமின் அறைக்குள் தைரியமாக நுழைந்தார்.

கதவை உள்புறமாக சாத்திக் கொண்டு,அதை அங்கிருந்த,பூட்டுவதற்காக வைத்திருந்த சங்கிலியால் பூட்டிக்கொண்டார்.
தன்னுடைய .38 ரிவால்வரை கையில் எடுத்தார்.

( தொடரும் )

காந்திகொலையும்பின்னணியும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories