நமது கோபம் யார் மீது?!

Published:

thirumavalavan chidambaram - 2026

சிதம்பரம் கோவில் திருமாவிற்க்கு மரியாதை குறித்து… தெளிவாக புரிந்து கொள்ளுங்க

நமது கோபம் என்பது திருமாவுக்கு மரியாதை செய்த அந்த சில தீட்சிதர்கள் மீது மட்டுமே..ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் அல்ல..அந்த ஒட்டு மொத்த சமூகம் மற்றும் அர்சசகர்கள் அத்தனை பேரும் அப்படி தான் என்ற வாதம் நாம் ஏற்புடையது அல்ல..அதை ஒப்பு கொள்ளவும் மாட்டோம்….

திருமாவளவனை கோவிலுக்குள் விட கூடாது விரட்டி அடி வெட்டு குத்து எனவும் சொல்லவில்லை…சனாதான தர்மத்தை வேரறுப்பேன் என பகிரங்கமாக மேடை போட்டு பேசியவன்…இந்து மத கடவுள்களை கேவலமாக பேசுபவர்களுக்கு மேடை அமைத்து கொடுத்தவன்….இவனுக்கு ஏன் நீங்க மரியாதை செய்ய வேண்டும் என்பதே கேள்வி…

வாக்கு கேட்டு வருபவனுக்கு என்ன அவசியத்துக்கு மாலை மரியாதை,,இந்து கோவில்கள் புத்த விஹாரங்கள் அதை உடைத்து விட்டு புத்த விஹாராக மாற்றும் காலம் தொலைவில் இல்லை என்றவனுக்கு ஏன் நெற்றியில் வீபூதி பூசி அழகு பார்க்கும் வேலை…

ALSO READ:  வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

thirumavalavan chidambaramdikshitar - 2026

அடுத்து, அப்படி நாங்கள் சிதம்பரத்தில் செய்தால் எங்களை வெட்டி விடுவான் ..எங்கள் பெண்கள் தெருவில் நடமாடமுடியாது என்ற வாதம்…சிதம்பரம் கோவிலை அரசு கையகபடுத்திய போது டெல்லி உயர்நீதிமன்றம் வரை சென்று தங்கள் உரிமைகளை நிலைநாட்ட தெரிந்தவர்களுக்கு சில ரவுடிகளின் மிரட்டலுக்கு பயம் என்பது நகைப்புக்குரியது…சிறு மண்புழு கூட தனக்கு தீங்கு நேருமானால் தனது எதிர்ப்பை ஏதோ ஒரு வகையில் காட்டும்…ஆனால் நீங்க…? மண்புழுவை விட கேவலமானவர்களா நீங்கள்..

எங்களுக்கு யார் இருக்கா ..ஏதாவது ஒன்று என்றால் நீங்க வருவீங்களா என எகத்தாள பேச்சு…நாங்க வராமல் வேற யார் வருவார்கள்…எந்த இடத்தில் பிராமண சமூகம் தாக்குதலுக்கு உள்ளானாலும் முதலில் கிளம்புவது இந்து இயக்க நண்பர்களே..சாதி பார்ககாமல் முதலில் கிளம்புவது நாங்க தான்…உதாரணம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அர்சசகருக்கு விபரீத சம்பவம் நடந்த போது யாரும் ஒதுங்கலையே…எல்லாம் கைகோர்த்து உதவி தானே செய்தார்கள்….

மேலிட உத்தரவு அவங்க தந்த அழுத்தம் என பேச்சு… சிதம்பரத்தில் என்ன மேலிடம்…இவங்க தானே மேலிடம்…. இதுக்கு மேலே என்ன மேலிடம்.. அடுத்து, என்ன சார் அழுத்தம்..ஒரு சாண் வயிறு தானே… முனக கூட மாட்டீங்களா… அப்படி என்ன சார் வெல்லகட்டி உசுரு.. போகட்டுமே… அதிகபட்சம் ஆஞ்சநேயருக்கு தீபாராதானை செய்யும் போது தவறி விழுந்தால் போகும் உயிர் இது..!

ALSO READ:  அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

உங்களை தாக்க சொல்லவில்லை.. வன்முறையில் இறங்க சொல்லவில்லை… தயவு செய்து நிமிர்ந்து நில்லுங்க என்று தான் சொல்கிறோம்..!

தேசமே தெய்வம்

Related articles

Recent articles

spot_img