December 6, 2025, 12:19 PM
29 C
Chennai

பணத்தை அவர்களே வைத்து… எடுத்து… எங்கள் மீது பழி போடுகிறார்கள்: துரைமுருகன்!

duraimurugan - 2025

சென்னை: தேர்தல் நேரத்தில் பழி சுமத்தி சோதனை என்ற பெயரில் எங்களை சிக்க வைக்க சூழ்ச்சி நடக்கிறது. பணத்தை அவர்களே வைத்துவிட்டு, எடுப்பதாக நாடகம் ஆடி, சிக்க வைக்கிறார்கள் என்று திமுக., பொருளாளர் துரைமுருகன்  கூறியுள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்… அரசியலில் எதிரும் புதிருமாக நின்று கருத்துப் போர் புரிய வேண்டும். ஆனால் மத்திய மாநில அரசுகள் தேர்தல் நேரத்தில் எங்களை பழிவாங்க முயற்சிக்கின்றன.

கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரி சோதனைகள், அவரது வெற்றியை சீர்குலைக்க நடக்கும் சதி. இது ஜனநாயகத்திற்கு புறம்பானது.

இதுவரை எங்கள் வீடு, கல்லுாரிகளில் நடந்த சோதனைகளில் ஏதும் கைப்பற்றப் பட வில்லை. ஆனால், எங்கள் இடங்களில் ஏதாவது பொருளை வைத்துவிட்டு, எங்கள் மீது பழி சுமத்தப் பார்க்கின்றனர்.

அரசியலில் வெற்றியும், தோல்வியும் சகஜம். எதிரும் புதிருமாக இருப்பவர்கள் கருத்துப் போர் புரிவது தான் அரசியல். மாறாக பழிவாங்கி, அவமானப்படுத்த முயற்சிக்கக் கூடாது.

எங்களுக்கு வந்துள்ள தகவல்கள் படி, எங்களை சுற்றி கண்காணிப்பு வளையம் அமைக்கப் பட்டுள்ளது… என்று குற்றம் சாட்டியுள்ளார்.

[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”74″ order=”desc”]

துரைமுருகன் தன் வீட்டில் கல்லூரியில் வருமான வரி சோதனை செய்து, தன்னை நெருக்குகிறார்கள் என்று சொல்லி, இதனால் எங்களுக்கு அனுதாப ஓட்டுகள் நிறைய வரும் என்று சொல்லிப் பார்த்தார்.

இப்போது விவகாரத்தை திசை திருப்ப, அவர்களே வைத்து அவர்களே எடுத்து பழி போடுவதாகக் கூறியுள்ளார்.

தொகுதி வாரியாக பணத்தைப் பிரித்து, கவர் போட்டு வைத்து, தளபதி பிரிண்ட் அடித்த சாக்கு மூட்டையில் பணத்தை வைக்கும் அளவுக்கு வருமான வரித்துறையில் பொழுது போகாத வேலை வெட்டி இல்லாத அதிகாரிகள் இருப்பதுபோல், துரைமுருகன் கூறியுள்ளதைக் கேட்டு மேலும் மேலும்  சிரிக்கிறார்கள் தமிழக மக்கள்.

கல்லூரி மூலம் எத்தனை கோடிகளை, அப்பாவி மாணவர்களிடம் அடித்துப் பிடித்து கறந்து சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்பதை கோடி கோடியாக ஐடி சோதனையில் அதிகாரிகள் காட்டியபோது சபித்ததும் இந்த மக்கள்தான்!

வெறும் ஏழு ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத போதும் இத்தனை கோடிகளை இவர்களால் அடித்து  பதுக்கி வைக்க முடிகிறதே என்று ஆச்சரியப் படுகிறார்கள் மக்கள். மத்திய அரசு இது போன்ற பதுக்கல்காரர்கள், கருப்புப் பண முதலைகளுக்காகத்தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கையே எடுத்தது. ஆனால் துரைமுருகன் போன்ற திமுக.,வினர், உள்ளிட்ட திராவிடக் கட்சிகளின் அரசியல் பண முதலைகள், எந்த வகையில் எல்லாம் ஏய்த்து தங்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றினர் என்பதையும் இந்தத் தமிழகம் கண்டுவிட்டது.

வங்கிகள், பெட்ரோல் பங்குகள், பேருந்துகள், பஸ் முதலாளிகள் மூலம், போக்குவரத்துக் கழகங்கள் மூலம் என்று எத்தனை முறைகேடுகளைச் செய்து, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கேலிக்கூத்தாக்கி தோல்வி அடையச் செய்தனர் என்பதையும் இந்த நாடு கண்டுவிட்டது.

இப்போது, துரை முருகன் சொல்வதையும் நாம் நம்பித்தான் ஆகவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலும்!


[poll id=”16″]


 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories