தெற்காசிய விவகாரம் அறிந்த எவரும் சொல்வர்… இந்திய நிலைப்பாட்டை! டிரம்புக்காக மன்னிப்பு கோரிய அமெரிக்க எம்.பி.,!

trump imran - 2026

தெற்காசிய அரசியல் சூழலை அறிந்த எவரும் சொல்வார்கள், இந்தியா எந்த நிலையை எடுக்கும் என்பதை! ஆனால் அமெரிக்க அதிபரின் பேச்சுக்காக மன்னிப்பு கோருகிறேன் என்று கூறியுள்ளார் அமெரிக்க எம்.பி., ஒருவர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் மத்தியஸ்தராக செயல்பட என்னைக் கேட்டுக் கொண்டார் எனக் கூறியிருந்தார்.

ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்தக் கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாகிஸ்தான் விவகாரங்கள் எதையும், இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண்போம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சு குறித்து குறிப்பிட்ட அமெரிக்க எம்.பி பிராடு ஷெர்மேன், அதிபர் டிரம்ப் அறியாமல் பேசுகிறார். அவர் பேச்சுக்காக நான் மன்னிப்பு கோருவேன் என்று கூறியுள்ளார்.

`தெற்காசியாவின் வெளியுறவுக் கொள்கை சிறிதளவேனும் தெரிந்திருக்கும் நபர் எவரைக் கேட்டாலும் தெளிவாகச் சொல்வார்கள்… இந்தியா காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை விரும்பாது; மூன்றாம் நபரை இந்தியா ஆதரிக்காது என்று! எனவே, மோடி காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரை பரிந்துரைக்கவே மாட்டார். அதிபர் டிரம்புக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன்’ என்று கூறியுள்ளார்!

mr.sherman - 2026இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார். அப்போது அவர், அமெரிக்க அதிபர் டிரம்பை காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுமாறு பிரதமர் மோடி ஒருபோதும் கேட்டதில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்.

முன்னதாக, காஷ்மீர் விவகாரத்தில் தாம் தலையிடுவதாகக் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவைத்தலைவரிடம் நோட்டீஸ் வழங்கினர்.

இதை அடுத்து மாநிலங்களவையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் இது குறித்து விளக்கம் அளித்த போது, காஷ்மீர் விவகாரம் என்பது இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னை. இதனை இரு தரப்பினர் மட்டுமே பேசித் தீர்க்க முடியும். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடனான இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. காஷ்மீர் விவகாரத்தில் பிற நாட்டு தலையீட்டை இந்தியா விரும்பவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்பை தலையிடுமாறு பிரதமர் மோடி ஒருபோதும் கேட்டதில்லை என்று விளக்கம் அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories