தெற்காசிய விவகாரம் அறிந்த எவரும் சொல்வர்… இந்திய நிலைப்பாட்டை! டிரம்புக்காக மன்னிப்பு கோரிய அமெரிக்க எம்.பி.,!

trump imran - 2026

தெற்காசிய அரசியல் சூழலை அறிந்த எவரும் சொல்வார்கள், இந்தியா எந்த நிலையை எடுக்கும் என்பதை! ஆனால் அமெரிக்க அதிபரின் பேச்சுக்காக மன்னிப்பு கோருகிறேன் என்று கூறியுள்ளார் அமெரிக்க எம்.பி., ஒருவர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் மத்தியஸ்தராக செயல்பட என்னைக் கேட்டுக் கொண்டார் எனக் கூறியிருந்தார்.

ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்தக் கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாகிஸ்தான் விவகாரங்கள் எதையும், இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண்போம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சு குறித்து குறிப்பிட்ட அமெரிக்க எம்.பி பிராடு ஷெர்மேன், அதிபர் டிரம்ப் அறியாமல் பேசுகிறார். அவர் பேச்சுக்காக நான் மன்னிப்பு கோருவேன் என்று கூறியுள்ளார்.

`தெற்காசியாவின் வெளியுறவுக் கொள்கை சிறிதளவேனும் தெரிந்திருக்கும் நபர் எவரைக் கேட்டாலும் தெளிவாகச் சொல்வார்கள்… இந்தியா காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை விரும்பாது; மூன்றாம் நபரை இந்தியா ஆதரிக்காது என்று! எனவே, மோடி காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரை பரிந்துரைக்கவே மாட்டார். அதிபர் டிரம்புக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன்’ என்று கூறியுள்ளார்!

mr.sherman - 2026இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார். அப்போது அவர், அமெரிக்க அதிபர் டிரம்பை காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுமாறு பிரதமர் மோடி ஒருபோதும் கேட்டதில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்.

முன்னதாக, காஷ்மீர் விவகாரத்தில் தாம் தலையிடுவதாகக் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவைத்தலைவரிடம் நோட்டீஸ் வழங்கினர்.

இதை அடுத்து மாநிலங்களவையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் இது குறித்து விளக்கம் அளித்த போது, காஷ்மீர் விவகாரம் என்பது இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னை. இதனை இரு தரப்பினர் மட்டுமே பேசித் தீர்க்க முடியும். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடனான இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. காஷ்மீர் விவகாரத்தில் பிற நாட்டு தலையீட்டை இந்தியா விரும்பவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்பை தலையிடுமாறு பிரதமர் மோடி ஒருபோதும் கேட்டதில்லை என்று விளக்கம் அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories