தெற்காசிய விவகாரம் அறிந்த எவரும் சொல்வர்… இந்திய நிலைப்பாட்டை! டிரம்புக்காக மன்னிப்பு கோரிய அமெரிக்க எம்.பி.,!

Published:

trump imran - 2026

தெற்காசிய அரசியல் சூழலை அறிந்த எவரும் சொல்வார்கள், இந்தியா எந்த நிலையை எடுக்கும் என்பதை! ஆனால் அமெரிக்க அதிபரின் பேச்சுக்காக மன்னிப்பு கோருகிறேன் என்று கூறியுள்ளார் அமெரிக்க எம்.பி., ஒருவர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் மத்தியஸ்தராக செயல்பட என்னைக் கேட்டுக் கொண்டார் எனக் கூறியிருந்தார்.

ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்தக் கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாகிஸ்தான் விவகாரங்கள் எதையும், இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண்போம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சு குறித்து குறிப்பிட்ட அமெரிக்க எம்.பி பிராடு ஷெர்மேன், அதிபர் டிரம்ப் அறியாமல் பேசுகிறார். அவர் பேச்சுக்காக நான் மன்னிப்பு கோருவேன் என்று கூறியுள்ளார்.

`தெற்காசியாவின் வெளியுறவுக் கொள்கை சிறிதளவேனும் தெரிந்திருக்கும் நபர் எவரைக் கேட்டாலும் தெளிவாகச் சொல்வார்கள்… இந்தியா காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை விரும்பாது; மூன்றாம் நபரை இந்தியா ஆதரிக்காது என்று! எனவே, மோடி காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரை பரிந்துரைக்கவே மாட்டார். அதிபர் டிரம்புக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன்’ என்று கூறியுள்ளார்!

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

mr.sherman - 2026இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார். அப்போது அவர், அமெரிக்க அதிபர் டிரம்பை காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுமாறு பிரதமர் மோடி ஒருபோதும் கேட்டதில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்.

முன்னதாக, காஷ்மீர் விவகாரத்தில் தாம் தலையிடுவதாகக் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவைத்தலைவரிடம் நோட்டீஸ் வழங்கினர்.

இதை அடுத்து மாநிலங்களவையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் இது குறித்து விளக்கம் அளித்த போது, காஷ்மீர் விவகாரம் என்பது இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னை. இதனை இரு தரப்பினர் மட்டுமே பேசித் தீர்க்க முடியும். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடனான இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. காஷ்மீர் விவகாரத்தில் பிற நாட்டு தலையீட்டை இந்தியா விரும்பவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்பை தலையிடுமாறு பிரதமர் மோடி ஒருபோதும் கேட்டதில்லை என்று விளக்கம் அளித்தார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img