தெற்காசிய விவகாரம் அறிந்த எவரும் சொல்வர்… இந்திய நிலைப்பாட்டை! டிரம்புக்காக மன்னிப்பு கோரிய அமெரிக்க எம்.பி.,!

trump imran - 2026

தெற்காசிய அரசியல் சூழலை அறிந்த எவரும் சொல்வார்கள், இந்தியா எந்த நிலையை எடுக்கும் என்பதை! ஆனால் அமெரிக்க அதிபரின் பேச்சுக்காக மன்னிப்பு கோருகிறேன் என்று கூறியுள்ளார் அமெரிக்க எம்.பி., ஒருவர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் மத்தியஸ்தராக செயல்பட என்னைக் கேட்டுக் கொண்டார் எனக் கூறியிருந்தார்.

ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்தக் கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாகிஸ்தான் விவகாரங்கள் எதையும், இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண்போம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சு குறித்து குறிப்பிட்ட அமெரிக்க எம்.பி பிராடு ஷெர்மேன், அதிபர் டிரம்ப் அறியாமல் பேசுகிறார். அவர் பேச்சுக்காக நான் மன்னிப்பு கோருவேன் என்று கூறியுள்ளார்.

`தெற்காசியாவின் வெளியுறவுக் கொள்கை சிறிதளவேனும் தெரிந்திருக்கும் நபர் எவரைக் கேட்டாலும் தெளிவாகச் சொல்வார்கள்… இந்தியா காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை விரும்பாது; மூன்றாம் நபரை இந்தியா ஆதரிக்காது என்று! எனவே, மோடி காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரை பரிந்துரைக்கவே மாட்டார். அதிபர் டிரம்புக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன்’ என்று கூறியுள்ளார்!

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

mr.sherman - 2026இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார். அப்போது அவர், அமெரிக்க அதிபர் டிரம்பை காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுமாறு பிரதமர் மோடி ஒருபோதும் கேட்டதில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்.

முன்னதாக, காஷ்மீர் விவகாரத்தில் தாம் தலையிடுவதாகக் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவைத்தலைவரிடம் நோட்டீஸ் வழங்கினர்.

இதை அடுத்து மாநிலங்களவையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் இது குறித்து விளக்கம் அளித்த போது, காஷ்மீர் விவகாரம் என்பது இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னை. இதனை இரு தரப்பினர் மட்டுமே பேசித் தீர்க்க முடியும். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடனான இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. காஷ்மீர் விவகாரத்தில் பிற நாட்டு தலையீட்டை இந்தியா விரும்பவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்பை தலையிடுமாறு பிரதமர் மோடி ஒருபோதும் கேட்டதில்லை என்று விளக்கம் அளித்தார்.

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories