Home Blog Page 101

மக்கள் உடல்நலத்துடன் விளையாடி, ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தும் அமைச்சர் நேரு!

kadeswara subramaniam hindu munnani - 2026

திருச்சி மக்கள் உடல்நிலை பாதிப்பிலும் திமுகவின் இந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துவதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது…

திருச்சியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குடிநீரில் கழிவுநீர் கலந்து இருந்ததால் இந்த பாதிப்பு என்று பத்திரிகை செய்திகள் தெரிவித்தன. பல நகரங்களில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சினை எப்போதும் எழுந்து வருபவைதான்.

சமீபகாலமாக பெரும்பாலன மக்கள் நகராட்சி குடிநீரை சமைக்க பயன்படுத்துவதற்கு பதிலாக கேன் தண்ணீரை விலைக்கு வாங்கிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.

இந்தப் பிரச்சினை குறித்து 21.4.25 ல் சட்டசபையில் பதிலளித்த அமைச்சர் திரு‌. கே.என். நேரு குடிநீரில் பிரச்சினை இல்லை என்றும் திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோவிலில் அளித்த அன்னதான உணவு, இலவசமாக தரப்பட்ட குளிர்பானங்கள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என பதில் அளித்துள்ளார். இத்தகைய கருத்தை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

இத்தகைய பதில் திமுகவின் இந்து விரோத போக்கையே காட்டுகிறது. எந்த முகாந்திரமும் இல்லாமல் இந்துக்கள் புண்ணியமாகக் கருதி, தூய்மையாக செய்து, இலவசமாக அளிக்கும் அன்னதானம் பற்றி அவதூறு பரப்புவது திமுகவின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

சில மாதங்களுக்கு முன்பாக அன்னதானம் செய்ய உணவு கட்டுப்பாட்டு துறையின் தரச் சான்று பெற வேண்டும் என்று கூறியது திமுக அரசு. மேலும் திருவண்ணாமலை உட்பட பல இடங்களில் அன்னதானம் செய்வதை தடுக்கும் நடவடிக்கையிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மேலும் ஒவ்வொரு கோவில்களிலும் பிரசாதக்கடை, ஸ்வீட் ஸ்டால் நடத்தப்படுகிறது. அதற்கு உணவு கட்டுப்பாட்டுத் துறை லைசென்ஸ் மற்றும் பரிசோதனை நடத்தப்படுகிறதா?

அதுவே கோவில் விழாக்களில் வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். ஆனால் அதனை மத நல்லிணக்கம் என விளம்பரப் படுத்தி பாராட்டுகிறது இதே அரசு.

சமீபத்தில் பிரபல ஓட்டல் ஒன்றில் பிரியாணி சாப்பிட்ட பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்கச்சென்ற உணவு கட்டுப்பாட்டு அதிகாரி பாதியிலேயே ஏதோ காரணத்தால் திரும்பினார் என்று செய்தி வெளிவந்து பரபரப்பானது. இதனை குறித்து சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பிய இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் திரு.ஜெகன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தது காவல்துறை.

ஆனால் எந்த முகாந்திரமும் இல்லாமல் அமைச்சர் திரு.கே.என். நேரு, கோவில் அன்னதானத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறை இவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்பது மக்கள் கேள்வியாக இருக்கிறது.

கோவிலுக்கு வந்தவர்களுக்கு அங்கு தரப்பட்ட உணவை சாப்பிட்டவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டனர் என்பதை எதன் அடிப்படையில் அமைச்சர் தெரிவித்தார்?

அதே சமயம் நகராட்சி குடிநீர் நிறுத்தப்பட்டு லாரிகளில் குடிநீர் வழங்குவதாக கூறுகிறார் அமைச்சர். அப்படி குடிநீரில் கழிவுநீர் கலப்பு இல்லை என்றால் அதனை ஏன் நிறுத்த வேண்டும்? அரசின் அலட்சியத்தை மறைக்க இந்த நடவடிக்கையா?

அமைச்சர் திரு.கே.என். நேரு தெய்வ நம்பிக்கை உடையவர். அவர் இவ்வாறு தரம் தாழ்ந்து பேசியதை கண்டிக்கிறோம். மக்கள் பாதிக்கப்பட்டதற்குக் காரணம் அவர் வெக்காளியம்மன் கோவிலில் அளித்த அன்னதான உணவாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டதை வாபஸ் வாங்கி, சட்டசபை குறிப்பில் இருந்து நீக்குவதற்கு சபாநாயகரிடம் முறையிட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ப்ளீஸ்… கூட்டத்துல இதையெல்லாம் பேசுங்களேன்! – தென்காசி எம்.பி.க்கு ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் கோரிக்கைகள்!

railway news - 2026
#image_title

மைசூர் – தூத்துக்குடி தினசரி விரைவு ரயில் மதுரை வரும் நேரம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வரும் 24.4.25 வியாழன் அன்று, மதுரையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர், மதுரை கோட்டத்தின் கீழ் வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்தவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில், விருதுநகர் – தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை பொது மேலாளரிடம் வைக்க வேண்டும் என்று விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் சார்பில், செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார்.

அதில், “தினசரி இயங்கும் மைசூர் – தூத்துக்குடி விரைவு ரயில், மதுரை ரயில் நிலையத்துக்கு காலை 07.35 க்கு வந்து 07.40க்கு புறப்பட்டுச் செல்கிறது.
ஆனால் தினசரி இயங்கும் மதுரை – செங்கோட்டை முன்பதிவில்லா ரயில் இந்த மைசூர் – தூத்துக்குடி விரைவு ரயில் மதுரைக்கு வரும் முன்பாகவே காலை 07.20 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்று விடுகிறது.

இதனால் மைசூர் – தூத்துக்குடி ரயிலில் மதுரை வந்து இணைப்பு ரயிலைப் பிடிக்க வரும் திருத்தங்கல் முதல் செங்கோட்டை வரை ( வழி சிவகாசி – ராஜபாளையம் – தென்காசி) செல்ல உள்ள பயணிகள் இணைப்பு ரயில் வசதி உடனே கிடைக்காமல் மதுரை ரயில் நிலையத்தில் 4 மணி நேரம் காத்துக் கிடக்கும் சூழ்நிலை தற்போது உள்ளது. ஏனெனில் இவர்களுக்கு தமது ஊர்களுக்கு செல்ல மதுரையிலிருந்து இயக்கப்படும் அடுத்த ரயில் காலை 11.35 க்கு புறப்படும் மதுரை – குருவாயூர் ரயில்தான்.

எனவே தெற்கு ரயில்வே அதிகாரிகள் தென் மேற்கு ரயில்வே அதிகாரிகளுடன் கலந்து பேசி ஆவன செய்து மைசூர் – தூத்துக்குடி விரைவு ரயில் காலை 07.00 மணிக்கு மதுரை வந்தடையத் தேவையான உடனடி நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம். – என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும், செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் எல்.எம். முரளி, செயலர் கே.ஹெச். கிருஷ்ணன், துணைத் தலைவர் ராஜேந்திர ராவ், இணை செயலர் எம்.செந்தில் ஆறுமுகம், பொருளாளர் எஸ். சுந்தரம், பிஆர்ஓ ராமன், எஸ். லிவிங்ஸ்டன் சாமுவேல், வி.மகேந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டு, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஶ்ரீகுமாருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…

தெற்கு ரயில்வே பொது மேலாளர் 24.04.25 அன்று மதுரையில் மதுரை கோட்டத்தின் கீழ் வரும் நாடளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்த இருக்கிற கலந்தாய்வு கூட்டத்தில் தாங்கள் எங்கள் சங்கத்தின் கீழ்காணும் கோரிக்கைகளை பொது மேலாளரிடம் எடுத்துரைத்து ஆவன செய்ய பரிந்துரைக்க வேண்டுகிறோம்.

(I) கீழ்க்காணும் புதிய ரயில்களை இயக்குதல் மற்றும் தேவைப்படும் இதர ரயில் சேவைகள்

(1) தினசரி காலையிலும் மாலையிலும் முன்பதிவில்லா திருநெல்வேலி – திருவனந்தபுரம் & திருவனந்தபுரம் – திருநெல்வேலி ரயில்கள் வழி அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி பாவூர்சத்திரம் தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம்.
(2)இதே போல தினசரி முன்பதிவில்லா ரயில்கள் மதுரை – திருவனந்தபுரம் & திருவனந்தபுரம் – மதுரை வழி விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம்.
செங்கோட்டை கோயம்புத்தூர்& கோயம்புத்தூர் செங்கோட்டை வழி பழனி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் தென்காசி
(3)தற்போது வாரம் மூன்று நாட்கள் ஓடிக்கோண்டிருக்கும் செங்கோட்டை தாம்பரம் சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் செங்கோட்டை தாம்பரம் எக்ஸ்பிரஸ் வழி திருநெல்வேலி ஆகியவற்றை தினசரி ரயில்களாக்க வேண்டும்.
(4) திருவனந்தபுரம் / கொல்லம் இவற்றிலிருந்து செங்கோட்டை வழியாகவோ அல்லது திருநெல்வேலியில் இருந்து அம்பை பாவூர்சத்திரம் தென்காசி வழியாகவோ கீழ்கண்ட ஊர்களுக்கு விரைவு ரயில்கள் உடனடியாக தேவை.
a)மும்பாய்
b)டெல்லி
c)மைசூர் / பெங்களூர்
d)மங்களூர்
e)வாரணாசி
f)ஹைதராபாத் வழி திருப்பதி 5)செங்கோட்டையில் இருந்து தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் மதுரை திருச்சி விருத்தாசலம் விழுப்புரம் வழியாக
சென்னைக்கு அம்ருத பாரத் ரயில்கள் விடவேண்டும்
6)தென்காசி -விருதுநகர் வழித்தடத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கலாம் என ரயில் சோதனை ஓட்ட ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதால் தென்காசியிலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
7)2018ல் சில நாட்களே ஓடி பிறகு நிறுத்தப்பட்ட செங்கோட்டை – தாம்பரம் பகல் நேர முன்பதிவில்லா அந்தியோதயா ரயில்களை மீண்டும் இயக்க ஆவன செய்ய வேண்டும்.
8)தற்போது வாரம் ஒருமுறை ஓடும் தாம்பரம் திருவனந்தபுரம் வடக்கு விரைவு ஏசி ரயில்களில் சாதாரண பயணிகளின் வசதிக்காக மூன்று முன்பதிவில்லா பெட்டிகளும் மூன்று சாதாரண இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும் உடனடியாக இணைக்கப்பட வேண்டும். மேலும் இந்த ரயிலை வாரம் இரு முறை இயக்க வேண்டும்.
9)தற்போது இயங்காமல் உள்ள திருநெல்வேலி தாம்பரம் வாராந்திர ரயில் வழி தென்காசி ராஜபாளையம் சிவகாசி மீண்டும் இயக்கிட விரைந்து ஆவன செய்ய வேண்டும்.
10)தற்போது புனலூரோடு நிற்கும் ரயில்களை தென்காசி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.குறிப்பாக கன்னியாகுமரி – புனலூர் ரயிலை தென்காசி வரை உடனடியாக நீட்டிக்க வேண்டும்.
11) கீழ்கண்ட முன்பதிவில்லா ரயில்கள் ஒவ்வொன்றிலும் நான்கு பொது பெட்டிகளும் மகளிருக்கான ஒரு பொது பெட்டியும் இணைக்க ஆணையிட வேண்டும்.
அ) செங்கோட்டை ஈரோடு செங்கோட்டை ரயில்கள்.
ஆ) செங்கோட்டை மயிலாடுதுறை செங்கோட்டை ரயில்கள்.
இ) செங்கோட்டை திருநெல்வேலி செங்கோட்டை ரயில்கள்.
ஈ) செங்கோட்டை மதுரை செங்கோட்டை ரயில்கள்.
12) பாலக்காடு தூத்துக்குடி பாலக்காடு பாலருவி விரைவு ரயில்களில் இரண்டு மூன்றடுக்கு ஏசி பெட்டிகளும் ஒரு ஈரடுக்கு ஏசி பெட்டியும் இணைக்க வேண்டும்.

(II)நிறுத்தங்கள் தேவை கோரிக்கை

1) சென்னை – செங்கோட்டை 12661 செங்கோட்டை —சென்னை 12662 பொதிகை அதிவேக ரயில்கள் தென் மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்களின் வசதிக்காக நிரந்தரமாக மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும்.
(2) சென்னை – கொல்லம் 16101 கொல்லம் – சென்னை 16102 விரைவு ரயில்கள் பாம்பகோவில்சந்தை , திருத்தங்கல் ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும.

III ) புதிய ரயில் நிலையங்கள் அமைத்தல்

செங்கோட்டை – ராஜபாளயம் ரயில் பாதையில் முன்பு மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கி பிறகு மூடப்பட்ட சோழபுரம், கரிவலம்வந்தநல்லூர், நயினாரகரம் ரயில் நிலையங்களை மீண்டும் அமைக்க வேண்டும்.இது நடந்தால் இப்பாதையில் ரயில்களின் கால தாமதம் தவிர்க்கப்படும.

(IV)இதர கோரிக்கைகள்

1) செங்கோட்டையில் தற்போது 3 நடைமேடைகளே உள்ளன. மேலும் இரண்டு நடைமேடைகள் அமைக்க வேண்டும்.
2) செங்கோட்டை – தென்காசி மற்றும் தென்காசி – விருதுநகர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும்
3) செங்கோட்டையில் பிட்லைன் அமைக்க வேண்டும். இதை அமைத்தால் மட்டுமே தமிழ்நாட்டின் தென்மாவட்ட மக்களின் வசதிக்காக மதுரையோடு நின்று விடும் தொலைதூர ரயில்களை செங்கோட்டை வரை நீட்டிக்க இயலும்.
4) பகவதிபுரம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டிகளுக்கான தண்ணீர் மற்றும் இதரவசதிகள் நடைமேடைகள் அமைக்கப்பட்டு பொதிகை,சிலம்பு, தாம்பரம் ரயில்கள் இவை செங்கோட்டை வந்து சேர்ந்த பிறகு பகவதிபுரம் செல்ல வேண்டும். மீண்டும் மாலையில் செங்கோட்டைக்கு வர வேண்டும்.
5) செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளின் நலனுக்காக எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெட்டிகள் நிற்கும் இடத்தை , ரயில்களின் பெயர் மற்றும் நம்பர் இவற்றுடன் காட்டுகிற எலக்ட்ரானிக் போர்டுகளை அனைத்து நடைமேடைகளிலும் உடனடியாக அமைத்து தர வேண்டும்.
6)தென்காசி – திருநெல்வேலி பாதையிலும் செங்கோட்டை கொல்லம் பாதையிலும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடைகளின் உயரம் கூட்டப்பட்டு 24 ரயில் பெட்டிகள் நின்றிடும் வண்ணம் நடைமேடைகளின் நீளத்தையும் அதிகரிக்க விரைந்து ஆவன செய்ய வேண்டும்.

இது ஒரு முக்கியமான கோரிக்கை! எளிதாக நிறைவேற்றக் கூடியது தான்.
காலையில் பொதிகை அதிவேக விரைவு ரயில் வண்டி எண் 12661 சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு வரும்போது தென்காசிக்கு காலை 06.50 மணிக்கு வந்து விடுகிறது . ஆனால் எல்லா நாட்களும் அதை தென்காசியில் செங்கோட்டை மயிலாடுதுறை ரயில் வரும் வரை 20 நிமிடம் வரை நிறுத்தி வைக்கிறார்கள்.. இதனால் பொதிகை ரயிலில் செங்கோட்டைக்கு வருகின்ற பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் .
அதனால் பொதிகை எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வந்த பின்பு செங்கோட்டை மயிலாடுதுறை வண்டி புறப்பட்டால் சரியாக இருக்கும்.. பொதிகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகும் அதை 20 நிமிடம் தென்காசியில் நிறுத்தி வைப்பது சரியாகாது… ஆதலால் பொதிகை ரயில் செங்கோட்டைக்கு வந்தவுடன் செங்கோட்டை – மயிலாடுதுறை வண்டி புறப்பட வேண்டும்.

IPL 2025: அனைத்திலும் ஜொலித்த குஜராத் அணி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – குஜராத் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா – 21.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

குஜராத் டைடன்ஸ் அணி (198/3, ஷுப்மன் கில் 90, சாய் சுதர்ஷன் 52, ஜாச் பட்லர் ஆட்டமிழக்கமல் 41, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, ஆண்ட்ரூ ரசல் தலா ஒரு விக்கட்) கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை (159/8, அஜிங்க்யா ரஹானே 50, ரகுவன்ஷி ஆட்டமிழக்காமல் 27, ரசல் 21, சுனி நரேன் 17, ரிங்கு சிங் 17, பிரசித் கிருஷ்ணா 2/25, ரஷித் கான் 2/25, சிராஜ், இஷாந்த் ஷர்மா, வாஷிங்க்டன் சுந்தர், சாய் கிஷோர் தலா ஒரு விக்கட்) 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாட வந்த குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (36 பந்துகளில் 52 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ஷுப்மன் கில் (55 பந்துகளில் 90 ரன், 10 ஃபோர், 3 சிக்சர் ஒரு மிக அருமையான தொடக்கம் தந்தனர்.

மூன்றாவதகக் களமிறங்கிய ஜாஸ் பட்லர் (23 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 41 ரன், 8 ஃபோர்) இன்னிங்க்ஸ் இறுதி வரை விளையாடினார். ராகுல் திவாத்தியா (பூஜ்யம் ரன்) இன்று சோபிக்கவில்லை. ஷாருக் கான் ( 5 பந்துகளில் 11 ரன்) கடைசி ஓவரில் ஒரு சிக்சர் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 198 ரன் எடுத்தது.

          199 ரன் என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அஜிங்க்யா ரஹானே (36 பந்துகளில் 50 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி (13 பந்துகளில் 27 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) இருவர் மட்டுமே சிறப்பாக ஆடினர். மற்றாவர்களால் அதிரடியாக ஆட்டமுடியவில்லை.

அவர்களின் நன்கு விளையாடக்கூடிய மட்டையாளர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் (1 ரன்) (டி காக் இன்று விலையாடவில்லை), சுனில் நரேன் (13 பந்துகளில் 17 ரன்), வெங்கடேஷ் ஐயர் (14 பந்துகளில் 17 ரன்), ரசல் (15 பந்துகளில் 21 ரன்), ரமந்தீப் சிங் (1 ரன்), மொயின் அலி (பூஜ்யம் ரன்) ஆகியோர் இன்று அவர்களது வழக்கமான ஆட்டத்தை ஆடமுடியவில்லை. இதனால் கொல்கொத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 159 ரன் எடுத்து 39 ரன் களில் தோல்வியைத் தழுவியது.

          குஜராத் அணியின் அணித்தலைவர், இன்று 90 ரன் எடுத்த ஷுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அமைச்சர் பொன்முடியை கைது செய்யக் கோரி மனு!

protest in madurai to remove ponmudi - 2026

பெண்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பெண்களைப் பற்றி தரக்குறைவாகவும், இரு பெரும் ஹிந்து சமயங்களான வைணவ, சைவ சமயங்களை கொச்சைப்படுத்தி இழிவாகவும் பேசிய தமிழக அமைச்சர் பொன்முடியைக் கைது செய்ய வலியூறுத்தி, தமிழக ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இன்னொரு நிகழ்ச்சியாக, திமுக அமைச்சர் பொன்மொடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி, அதிமுக மகளிரணி சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார்.

திமுகவின் வனத்துறை அமைச்சராக இருந்து வரும் பொன்முடி அண்மையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில், விலைமாதர்களை சைவம் வைணவம் ஆகியவற்றோடு ஒப்பிட்டு பேசிய பேச்சு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் தமிழக முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மகளிர் அமைப்பினர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியை, திமுகவின் துணை பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அமைச்சர் பொன் முடியை கட்சி பொறுப்பில் இருந்து நீக்குவது ஏற்புடையதல்ல,
அவரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக மகளிர் அணி சார்பாக முன்னாள் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை செல்லூர் 60 ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில், அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 –இரண்டு ஆட்டங்கள்- 20.04.2025

ரோஹித், கோலி அதிரடி ஆட்டம்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பஞ்சாப் vs பெங்களூரு

பஞ்சாப் கிங்க்ஸ் அணியை (157/6, பிரப்சிம்ரன் சிங் 33, ஷஷாங்க் சிங் 31, ஜோஷ் இங்கிஷ் 29, மார்கோ ஜேன்சன் 25, பிரியான்ஷ் ஆர்யா 22, க்ருணால் பாண்ட்யா 2/25, சுயேஷ் ஷர்மா 2/26, ஷெப்பர்ட் 1/18) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (18.5 ஓவர்களில் 159/3, விராட் கோலி ஆட்டமிழக்காமல் 73, தேவதத் படிக்கல் 61, அர்ஷதீப் சிங், ஹர்பிரீத் ப்ரார், சாஹல் தலா ஒரு விக்கட்) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த பஞ்சாப் அணியின் முதல் நான்கு மட்டையாளர்களில் மூவர் சிறப்பாக ஆடினர். ஷ்ரேயாஸ் ஐயர் (6 ரன்) இன்றும் சரியாக ஆடவில்லை.

பிரியான்ஷ் ஆர்யா (15 பந்துகளில் 22 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), பிரப்சிம்ரன் சிங் (17 பந்துகளில் 33 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), ஜோஷ் இங்கிலிஷ் (17 பந்துகளில் 29 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். பொதுவாக பஞ்சாப் அணியின் மட்டையாளர்கள் புவனேஷ் குமார், க்ருணால் பாண்ட்யா, சுயேஷ் ஷர்மா ஆகியோரின் பந்துவீச்சில் ரன் அடிக்க முடியாமல் தடுமாறினர்.

நெஹல் வதேரா (5 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (1 ரன்) விரைவில் ஆட்டமிழந்தனர். ஷஷாங்க் சிங் (33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ரன், 1 ஃபோர்), மார்கோ ஜேன்சன் (20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 25 ரன்) இறுதியில் வேகமாக ரன் சேர்க்க முயன்றனர். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கட் இழப்பிற்கு 157 ரன் எடுத்தது.

          157 ரன் என்ற எளிய வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் (1 ரன்) முதல் ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரரான விராட் கோலி (54 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 73 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் தேவதத் படிக்கல் (35 பந்துகளில் 61 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடினர்.

படிக்கல் இன்று அதிரடியாக ஆடினார்; கோலி அவருக்குப் பக்கபலமாக நின்றார். படிக்கல் ஆட்டமிழந்த பின்னர் ரஜத் படிதர் (12 ரன்), அவருக்குப் பின்னர் ஜிதேஷ் ஷர்மா (ஆட்டமிழக்காமல் 11 ரன்) இருவரும் கோலியுடன் இணைந்து வீளையாடி, அணியை 18.5 ஓவர்களில் மூன்று விக்கட் இழப்பிற்கு 159 ரன் எடுக்க வைத்து வெற்றியைத் தேடித்தந்தனர்.

          ஆட்டநாயகனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டார். 

சென்னை vs மும்பை

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (176/5, ரவீந்தர் ஜதேஜா 53, ஷிவம் துபே 50, ஆயுஷ் மஹத்ரே 32, ஷேக் ரஷீத் 19, பும்ரா 2/25, தீபக் சாஹார், அஷ்வினி குமார், சாண்ட்னர் தலா ஒரு விக்கட்) மும்பை இந்தியன்ஸ் அணி (15.4 ஓவர்களில் 177/1, ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 76, சூர்யகுமார் யாதவ் 68, ரியன் ரிக்கிள்டன் 24, ரவீந்தர் ஜதேஜா 1/28) 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாடக் களமிறங்கிய சென்னை அணியில் இன்று முதல் முறையாகக் களமிறங்கிய ஆயுஷ் மஹத்ரே (15 பந்துகளில் 32 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ஷிவம் துபே (32 பந்துகளில் 50 ரன், 2 ஃபோர், 4 சிக்சர்) தவிர பிற மட்டையாளர்கள் எவராலும் மும்பை அணியின் பந்துவீச்சில் அதிரடியாக ஆடமுடியவில்லை.

அதிக ரன் குவித்த ரவீந்தர் ஜதேஜா (35 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 53 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) வேகமாக ரன் குவிக்க முடியவில்லை. தொடக்க வீரர்கள் ஷேக் ரஷீத் (20 பந்துகளில் 19 ரன்), ரச்சின் ரவீந்த்ரா (9 பந்துகளில் 5 ரன்) மற்றும் பிற வீரர்களான எம்.எஸ். தோனி (6 பந்துகளில் 4 ரன்), ஓவர்டன் (3 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 4 ரன்) ஆகியோர் மும்பை பந்துவீச்சாளர்களை அதிரடியாக அடித்து ஆட்டமுடியவில்லை. இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 176 ரன் எடுத்தது.

          177 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த மும்பை அணியில் ரோஹித் ஷர்மா (45 பந்துகளில் 76 ரன், 4 ஃபோர், 6 சிக்சர்) இம்பாக்ட் பிளேயராக, தொடக்கவீரராகக் களமிறங்கினார்.

அவர் முதலில் ரியன் ரிக்கிள்டன் (19 பந்துகளில் 24 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) உடனும் பின்னர் சூர்யகுமார் யாதவ் (30 பந்துகளில் 68 ரன், 6 ஃபோர், 5 சிக்சர்) உடனும் இணைந்து ஆடி 15.4 ஓவர்களில் அணிக்கு ஒரு விக்கட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்து, வெற்றியைத் தேடித்தந்தார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பிளேஆஃப் சுற்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. சென்னை அணி இனி பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லவியலாது.

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

image 1 - 2026

20.04.2025 இரவு வரை நடந்த ஆட்டங்களுக்குப்பின்னர் புள்ளிகள் பட்டியல்

அணிமேட்ச்வெற்றிதோல்விபுள்ளிநெட் ரன் ரேட்
குஜராத்752100.984
டெல்லி752100.589
பெங்களூரு853100.177
பஞ்சாப்853100.065
லக்னோ853100.088
மும்பை84480.483
கொல்கொத்தா73460.547
ராஜஸ்தான்8264-0.633
ஹைதராபாத்7254-1.217
சென்னை8264-1.392

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

amitsha in chennai with nda leaders - 2026

அதிமுக-பாஜக கூட்டணி
2026 வரை நிலைக்குமா?
பாஜக அவசரப்பட்டு விட்டதா?

— ஆர். வி. ஆர்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, போன வாரம் சென்னை வந்து அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார். முடிவில், 2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக அதிமுக-பாஜக கட்சிகளிடையே கூட்டணி அமைந்தது என்று அறிவித்தார். அப்போது பழனிசாமியும் அருகில் அமர்ந்திருந்தார்.

பழனிசாமியின் ஒரு சமீபத்திய பேச்சால் அதிமுக-பாஜக கூட்டணியில், குறிப்பாக பாஜக பக்கம், அதிர்வலைகள் தென்படுகின்றன. இப்போது பல பாஜக ஆதரவாளர்கள் மனதில் எழக்கூடிய கேள்விகள் இவை. 2026 தேர்தல் வரை இந்தக் கூட்டணி நிலைக்குமா? அதிமுக-வை நம்பி பாஜக கூட்டணி அமைத்தது சரிதானா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

இதற்கான விடைகளை நாம் பல கோணங்களில் தேட வேண்டும்.

அதிமுக-வோ பாஜக-வோ 2026 தேர்தலில் திமுக கூட்டணியை வெல்ல முயற்சிக்க, அவைகளுக்கு ஒரு வலுவான கூட்டணி அவசியம். ஆகையால் அவை திமுக-வை எதிர்க்கப் போகும் ஒரு கூட்டணியைத் தங்களுக்குள் அமைத்திருக்கின்றன. இந்தக் கூட்டணியில் இன்னும் சில கட்சிகளைச் சேர்க்க வேண்டும்.

பழனிசாமியின் தற்போதைய அறிவிப்பு, செய்தியாளர்களிடையே அவர் பேசியபோது வெளிவந்தது. அவர் சொன்னது: ‘அதிமுக-பாஜக கட்சிகள் 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் கூட்டணியாக வெற்றி பெற்றால், புதிய மாநில அரசில் பாஜக பங்கு பெறாது, அதிமுக மட்டும் தனித்து ஆட்சி அமைக்கும்’. அமித் ஷாவும் அப்படிப் புரிந்து கூட்டணியை அறிவித்தார் என்றும் பேசியிருக்கிறார் பழனிசாமி. ஆனால் பத்திரிகைச் செய்திகள் அந்த ரீதியில் இல்லை.

பழனிசாமியின் அறிவிப்பை பாஜக ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருக்க முடியாது. இது பற்றிய கேள்விக்குப் பதில் சொன்ன பாஜக-வின் புதிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “மாநில ஆட்சியில் அதிமுக-வோடு பாஜக-வும் பங்கு கொள்வது பற்றி அமித் ஷாவும் அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் உரிய நேரத்தில் கலந்து பேசி முடிவெடுப்பார்கள்” என்று பழனிசாமியின் கருத்தை ஏற்காமலும் மறுக்காமலும் நாசூக்காகப் பேசினார்.

அதிமுக தலைவர் பழனிசாமி, அவரது கட்சியினரால் போற்றப் படுபவரல்ல. தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு உடையவர் அல்ல. தலைமைப் பண்புகள் கொண்டவரும் அல்ல. அதிமுக-வுக்காக எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பிரபலப் படுத்திய இரட்டை இலை சின்னத்தைக் கொண்ட அந்தக் கட்சிக்கு, சந்தர்ப்ப வசத்தால் தலைவராகி இருப்பவர்.

பாஜக என்ற கட்சியோ, அதன் தமிழகப் பிரிவோ, அதிமுக மாதிரியான கட்சி அல்ல. தமிழக பாஜக-வின் தலைவர்கள், பாட்டன் சொத்தில் சுகிக்கும் வம்சா வழிகள் அல்ல. அவர்கள் அனைவரும் தேசாபிமானத்துடன் துடிப்பாகச் செயல்பட்டுத் தமிழகத்தில் நேர்மையான ஆட்சியும் திறமையான நிர்வாகமும் நிலவவேண்டும் என்று விரும்புகிறவர்கள்.

இத்தகைய தமிழக பாஜக, அதிமுக-வோடு கூட்டணி அமைத்து என்ன செய்யவேண்டும் என்று பழனிசாமி நினைக்கிறார்? அதிமுக-வை ஆட்சியில் அமர்த்திப் பழனிசாமி முதலமைச்சராகத் தேவையான சில எம்.எல்.ஏ-க்களைக் கூட்டணிக்கு நிரந்தரக் காணிக்கையாக்கி பாஜக ஓரமாக அமர்ந்திருக்க வேண்டுமா?

அண்ணாமலை பாஜக-வின் மாநிலத் தலைவராகத் தொடராமல் இருப்பதற்கு பழனிசாமியின் விருப்பமும் ஒரு காரணமாக இருக்கும் என்ற சந்தேகம் பாஜக அதரவாளர்களிடையே உண்டு – அமித் ஷா இதை லாவகமாகக் கையாளக்கிறார் என்பது வேறு விஷயம். இதுபோக, அதிமுக-பாஜக கூட்டணி 2026 சட்டசபைத் தேர்தலில் வென்றாலும், மாநில ஆட்சியில் பாஜக பங்கு கொள்ளாமல் வைக்கப் படும் என்றால், அது அண்ணாமலை அபிமானிகளுக்கு இரட்டை இடியாக வரும், அதை பாஜக ஏற்பதும் எளிதல்ல. இதைப் பழனிசாமி உணரவில்லையா?

அதிமுக மட்டும் தனியாக மாநில ஆட்சியில் அமர்ந்து, யாரும் பார்க்காமல் என்ன செய்ய விரும்புகிறது? புரிகிறது, புரியாமலும் இருக்கிறது.

இன்னொன்று. 2026 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும் அதிமுக-வுக்குத் தனி மெஜாரிட்டி இல்லை, பாஜக எம்.எல்.ஏ-க்களும் ஆதரவு கொடுத்தால் தான் ஆட்சிக்கு மெஜாரிட்டி உண்டு என்றானால், அப்போதும் பாஜக-வை ஆட்சியில் சேர்க்க விரும்பாதா அதிமுக? இல்லை, பாஜக-வுக்கு அந்த அளவு எம்.எல்.ஏ-க்கள் எப்படியும் கிடைக்க முடியாத படி அந்தக் கட்சிக்கு மிகக் குறைந்த தொகுதிகளை ஒதுக்க அதிமுக எண்ணுகிறதா? பழனிசாமியின் அறிவிப்புக்குப் பின்னால் தெளிவான முதிர்ச்சியான சிந்தனை இல்லை.

இதுதான் இப்போதைய நிலை. ஆனால் என்ன இருந்தாலும், பாஜக ஆதரவாளர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தங்களுக்குள் அவர்கள் அதிமுக-வைப் பற்றியும், அதன் பேராசைகள் மற்றும் தந்திரங்கள் பற்றியும் வெளிப்படையாகப் பேசலாம். அவை அனைத்தும் பாஜக தலைவர்கள் நொடியில் அறிந்தது தான். ஆனால் மோடி, அமித் ஷா போன்ற தலைவர்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசக் கூடாது, பேசவும் மாட்டார்கள்.

மோடியும் அமித் ஷாவும் தாங்கள் கொண்ட உயர்ந்த இலக்கு, ஆகவேண்டிய காரியம், அதில் தான் குறியாக இருப்பார்கள். அவர்கள் வெளியில் பேசுவது தேவையான அளவு மட்டும்தான் இருக்கும். ஆகையால் பாஜக ஆதரவாளர்கள் அவர்களின் மதியூகத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

எப்படியான மனிதர்களை சமாளித்தவர்கள், வென்றவர்கள், மோடியும் அமித் ஷாவும்? காங்கிரஸ் கட்சியின் சோனியா குடும்பம், ஷரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி, நிதிஷ் குமார், பரூக் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி, சந்திரபாபு நாயுடு மற்றும் கேஜ்ரிவால். மோடிக்கும் அமித் ஷாவுக்கும் பழனிசாமியை அரசியல் ரீதியாக எங்கு விட்டு எங்கு பிடிக்கவேண்டும் என்று பல கணக்குகள் இருக்கும்.

திமுக-வை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும் என்பது பாஜக-வின் பிரதான இலக்கு. இதற்காக, முதலில் அதிமுக-வுடன் கூட்டணியைப் பேசி முடித்துவிட்டு பாஜக காத்திருக்கும். பின்னர் நாள் ஆக ஆகப் பழனிசாமி கூட்டணிக்கு ஒவ்வாத பேச்சுக்களைப் பேசி முரண்டு பிடித்தால் – யார் கண்டது, நடிகர் விஜய்யிடமிருந்து பழனிசாமிக்கு எப்போது என்ன ஒப்புதல் வருகிறதோ! – அதிமுக கூட்டணியிலிருந்து வேறு வழி இல்லாமல் பாஜக அப்போது விலகலாம். ஆனால் பாஜக இப்போது அதிமுக-விடமிருந்து விலகி நின்று, தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதிமுக-வுடன் கூட்டணி பற்றிப் பேச ஆரம்பிக்க முடியாது. ஆகையால் அதிமுக-வுடன் முதலில் கூட்டணியை அமைத்து வைப்பது பாஜக-வுக்கு அவசியம் – நன்றாகப் போனால் அதைத் தொடரலாம்.

இது போக, தேர்தலுக்கு முன்போ பின்போ அதிமுக-வில் அதிருப்தி கொண்ட அக் அக்கட்சியின் தலைவர்கள் அதிமுக-வைப் பிளக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரம் பழனிசாமியும் பாஜக-விடம் முரண்டு பிடித்து முறைத்துக் கொண்டிருந்தால், அதிமுக-வில் ஏற்படும் பிளவும் பாஜக-விற்கு அனுகூலம் என்றால், அப்போது பாஜக அந்தத் திசையிலும் பார்க்கலாம். இது போன்ற மாற்று வாய்ப்புகள் பாஜக பக்கத்திலிருந்து அதிமுக-வுக்குக் கிடைக்காது.

அதிமுக-வுடனான தேர்தல் கூட்டணியைப் பாஜக தொடர்ந்து நிர்வகிப்பது ஒரு செஸ் ஆட்டம் மாதிரி. நாம் வியக்கும் பாஜக செஸ் வீரர் அந்த விளையாட்டில் கில்லி என்றால், அவர் மீது நம்பிக்கை வைத்து நாம் அவரது ஆட்டத்தைக் கடைசி வரை அமைதியாகப் பார்க்க வேண்டும்.

நாம் போற்றும் செஸ் வீரர் இந்த ஆட்டத்தின் முடிவில் பெரிய வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, அவரிடம் சாம்பியனுக்கான ஆட்டத் திறமையும் துடிப்பும் யுக்தியும் இருக்கிறது. இன்றோ நாளையோ, ஒருநாள் அவர் எப்படியும் அபாரமாக வென்று வருவார். அவருக்குக் கை தட்டுவோம்!

Author: R. Veera Raghavan, Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 –இரண்டு ஆட்டங்கள்- 19.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

டெல்லி கேபிடல்ஸ் அணியை (203/8, அக்சர் படேல் 39, அஷுதோஷ் ஷர்மா 37, கருண் நாயர் 31, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 31, அபிஷேக் போரல் 18, பிரசித் கிருஷ்ணா 4/41, முகம்மது சிராஜ், அர்ஷத் கான், இஷாந்த் ஷர்மா, சாய் கிஷோர் தலா ஒரு விக்கட்) குஜராத் டைடன்ஸ் அணி (19.2 ஓவர்களில் 204/3, ஜாஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 97, ரூதர்ஃபோர்டு 43, சாய் சுதர்ஷன் 36, ராகுல் திவாத்தியா ஆட்டமிழக்காமல் 11, முகேஷ் குமார், குல்தீப் ஷர்மா தலா ஒரு விக்கட்) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாட வந்த டெல்லி அணியின் தொடக்க வீரர் அபிஷேக் போரல் (9 பந்துகளில் 18 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தபோதும் அதிரடியாக விளையாடினார்.

மற்றொரு தொடக்க வீரர் கருண் நாயர் (18 பந்துகளில் 31 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) கே.எல். ராகுல் (14 பந்துகளில் 28 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) உடன் இணைந்து விளையாடி ஐந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்த அக்சர் படேல் (32 பந்துகளில் 39 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (21 பந்துகளில் 31 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), அஷுதோஷ் ஷர்மா (19 பந்துகளில் 37 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இதனால் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி எட்டு விக்கட் இழப்பிற்கு 203 ரன் எடுத்தது.

          20 ஓவர்களில் 204 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக விளையாட வந்த குஜராத் அணியின் தொடக்க வீரரும் அணியின் அணித்தலைவருமான ஷுப்மன் கில் (7 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரர், தமிழக வீரர் சாய் சுதர்ஷன் (21 பந்துகளில் 36 ரன்) எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மூன்றாவதாகக் களமிறங்கிய ஜாஸ் பட்லர் (54 பந்துகளில் 97 ரன், 11 ஃபோர், 4 சிக்சர்) இன்று அற்புதமாக ஆடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவரோடு இணைந்து ஆடிய ரூதர்ஃபோர்டு (34 பந்துகளில் 43 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ராகுல் திவாத்தியா (3 பந்துகளில் 11 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் குஜராத் அணிக்கு 19.2 ஓவர்களில் வெற்றியைத் தேடிதந்தனர்.

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

லக்னோ vs ராஜஸ்தான்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி (180/5, எய்டன் மர்கரம் 66, ஆயுஷ் பதோனி 50, அப்துல் சமத் 30, ஹசரங்கா 2/31, ஆர்ச்சர், சந்தீப் ஷர்மா, துஷார் தேஷ்பாண்டே தலா ஒரு விக்கட்) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (178/5, யசஷ்வீ ஜெய்ஸ்வால் 74, ரியன் பராக் 39, வைபவ் சூர்யவன்ஷி 34, ஆவேஷ் கான் 3/37, ஷர்துல் தாகூர் 1/34, எய்டன் மர்கரம் 1/18) 2 ரன் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. ஆனால் அந்த அணியின் தொடக்க வீரர் மிட்சல் மார்ஷ் (4 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான எய்டன் மர்க்ரம் (45 பந்துகளில் 66 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) நிக்கோலஸ் பூரன் (11 ரன்), ரிஷப் பந்த் (3 ரன்) மற்றும் ஆயுஷ் பதோனி (34 பந்துகளில் 50 ரன், 5 ஃபோர் 1 சிக்சர்) நன்றாக ஆடினார். கடைசி ஓவரில் நாலு சிக்சர் அடித்து, அப்துல் சமத் (10 பந்துகளில் 30 ரன்) அணியின் ஸ்கோரை, 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 180 ரன் என உயர்த்தினார்.

          181 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் இன்று சஞ்சு சாம்சன் ஆடவில்லை. தொடக்க வீரர்கள் யசஸ்வீ ஜெய்ஸ்வால் (52 பந்துகளில் 74 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்), இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (20 பந்துகளில் 34 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) ராஜஸ்தான் அணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர்.

நிதீஷ் ராணா (8 ரன்) இன்று சரியாக ஆடவில்லை. ரியான் பராக் (26 பந்துகளில் 39 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), துருவ் ஜுரல் (ஆட்டமிழக்காமல் 6 ரன்), ஷிம்ரோன் ஹெட்மயர் (12 ரன்), ஷுபம் துபே (ஆட்டமிழக்காமல் 3 ரன்) ஆகியோர் வெற்றி இலக்கை எட்ட முயற்சி செய்தும் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணியால் 178 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

          14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி இன்று ராஜஸ்தான் அணிக்காக முதன் முறையாக ஆடி 34 ரன் எடுத்தது சிறப்பானது. லக்னோ அணியின் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மதுரையிலிருந்து ராஜஸ்தானுக்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில்!

railway news - 2026
#image_title

கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரையிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் அருகே உள்ள பகத் கீ கோத்தி ரயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி மதுரை – பகத் கீ கோத்தி சிறப்பு ரயில் (06067) மதுரையில் இருந்து ஏப்ரல் 21 திங்கட்கிழமை காலை 10.45 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை மதியம் 12.30 மணிக்கு பகத் கீ கோத்தி சென்று சேரும். மறு மார்க்கத்தில் பகத் கீ கோத்தி – மதுரை சிறப்பு ரயில் (06068) பகத் கீ கோத்தியில் இருந்து ஏப்ரல் 24 வியாழக்கிழமை அதிகாலை 05.30 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை காலை 08.30 மணிக்கு மதுரை வந்து சேரும்.

இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், சூலூர்பேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, கம்மம், வாரங்கல், பல்ஹார்ஷா, சந்திராபூர், வார்தா, தன்மண்டேல், பட்னேரா, அகோலா, மால்காபூர், புஷாவால், ஜால்கன், நந்துர்பர், உத்னா, அங்கலேஸ்வர், வடோடரா, ஆனந்த், சபர்மதி, மகேசேனா, படண், பில்டி, ராணிவாரா, மார்வார் பின்மால், மட்ரன், ஜலோர், மொகல்சர், சம்தாரி, லுனி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 12 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

சுமங்கலி கேபிள் விஷன், ரெட் ஜெயண்ட் வரிசையில்… ‘வானம்’!

vaanam - 2026

டின்சிப் – இது TNSIP 2025 என்கிற தமிழ் நாடு விண்வெளி கொள்கை 2025 என்பதின் விரிவாக்க சுருக்கம் ஆகும்.

சரி, அது என்ன விண்வெளி கொள்கை?

இது அடுத்த ஐந்து ஆண்டு திட்டமாக கொள்கையளவில் கொண்டு வந்து இருக்கிறார்கள். இதில் என்ன செய்ய இருக்கிறார்கள்? எதையெல்லாம் இதனுள் வகைப்படுத்த போகிறார்கள்?- என்பது குறித்தான விவாதங்கள் எழுந்தன வண்ணம் இருக்கின்றன.

10,000 கோடி ரூபாய் மூலதன முதலீடு. 10,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துவிட்டு தான் மறுவேலை என்பது போலான அறிக்கைகள்… முதல் ஆண்டில் 30 % மானியம். அதற்கு அடுத்த ஆண்டு 20% என்கிறார்கள்.

ரூபாய் 25 கோடிக்கு கீழுள்ள அதுபோலவே ஐந்து கோடிக்கு மேலுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு…. அவர்களுக்கு, சலுகை விலையில் பேட்டன் செய்து கொடுக்க போகிறோம். இதில் வரும் 50% தொகையை இந்த டின்சிப் ஏற்கும் என்கிறார்கள்.

ஐந்து ஆண்டு திட்டமாக உள்ளது என்றால், ஆண்டொன்றுக்கு ரூபாய் 2000 கோடி ரூபாய் வருகிறது. இதில் மேற்சொன்ன விகிதாசார முறைப்படி, ரூபாய் 25 கோடி ரூபாய்க்கு கீழ் வருபவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டால் சுமார் 80 நிறுவனங்களும் ஐந்து கோடிக்கு மேல் என்பதாக எடுத்துக் கொண்டால் சுமார் 400 நிறுவனங்களும் விகித மாறிலி முறையில் பகுப்பு செய்யும் பட்சத்தில் 220 முதல் 310 நிறுவனங்கள் வரும்.

ஆக இத்தனை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு இருக்கின்றனவா அல்லது அடையாளங் காணப்பட்டு இத்திட்டம் செயல் பாட்டிற்கு கொண்டு வந்து இருக்கிறார்களா என்பது குறித்தெல்லாம் எந்த ஒரு விளக்கும் இல்லை.

இவையெல்லாம் போக… சபரீசன் முன்னெடுத்து செயல்படுத்தி வரும் வானம் என்கிற அவரது நிறுவனத்தின் உறுதுணையாகவே இந்த விண்வெளி கொள்கை வெளியிடப்பட்டுள்ளது என்கிற ரீதியிலான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு விவாத பொருளாகி வருகிறது. அதில் உண்மை இல்லாமல் இல்லை.

சரி இதில் பிரதான சர்ச்சை என்ன? விஷயம் கொஞ்சம் விவகாரமாகி இருக்கிறது.

நம் தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பலவும் ஏரோ டைனமிக் மற்றும் அது சார்ந்த ட்ரோன் டெக்னாலஜி மற்றும் AI என்கிற செயற்கை நுண்ணறிவு துறையை சார்ந்தே இருக்கிறது. அடுத்ததாக வரவிருக்கும் இருபத்தி ஐந்து ஆண்டுகள் முதல் நாற்பது ஆண்டுகளுக்கு இத்துறையே கோலோச்சப்போகிறது என கணித்து வைத்திருந்தார்கள்.

ஏற்கனவே இத்துறையில் நடிகர் அஜித் குமார் தலைமையில் இயங்கும் குழு கிட்டத்தட்ட கடந்த எட்டு ஆண்டுகளாக பல்வேறு விதத்தில் இயங்கி… தானியங்கி வர்த்தக சிறு விமானங்கள், ஏர் டாக்ஸி போன்றவற்றில் முன்னணியில் இருக்கிறார்கள். மத்திய மாநில அரசுகளின் அனுமதிக்காக காத்து நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்திருக்கிறது என்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க….
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து புதியதாக விண்வெளி ஓடத்தை நிர்மாணித்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி காண்பித்திருக்கின்றார்கள். அது போக செயற்கை கோள் ஏவு வாகனத்தை விண்ணில் ஏவிய நிகழ்வும், அது இந்திய அளவில் முழுக்க முழுக்க தனியார் ஏவிய முதல் செயற்கை கோள் ஏவு வாகனம் என்கிற சாதனையை ஏற்படுத்தியது.

நம் ஊடகங்களில் இவையெல்லாம் பெரிய அளவில் செய்தியாக வரவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் சென்னையில் மாத்திரம் இன்றைய தேதியில் சுமார் 82 தனியார் நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் பாணியில் கடந்த ஆறு ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக 29 நிறுவனங்களின் மதிப்பு ஒவ்வொன்றும் குறைந்து 14 முதல் 20 கோடிகளாக அடையாளம் காண்பித்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் வருடாந்திர கணக்கு அடிப்படையில்.

இவர்கள் அனைவரும் ஆரம்பித்த காலத்தில் அதாவது ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ஒரு சில ஆயிரங்கள் மட்டுமே மூலதன முதலீடாக காண்பித்து கொண்டு இருக்கிறார்கள். சரியாக சொல்வதென்றால் கொரானா பெரு நோய் தொற்று காலத்திற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் ஆகும். இன்று மிகப் பெரிய அளவில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார்கள் என்பதற்கு மூலதன மதிப்பு உயர்வே சான்று.

மேற்சொன்ன நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை நூறுக்கும் குறைவாகவே இருக்கின்றது, அவர்கள் அனைவரும் முப்பது ஐந்து வயதினருக்கு கீழே என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது சுமங்கலி கேபிள் விஷன் வந்த போதான விளைவுகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.

புரிந்து கொள்ள முடிந்தால் சரி. விவரித்து எழுதும் எண்ணம் இல்லை. ஆனால் விஷயங்கள் மாத்திரம் அது ஒட்டியே நடக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

எல்லாவற்றையும் நல்ல விதமாகவே எடுத்து கொள்ள வேண்டியது தான்….. ஆனால் இப்படியான ஒரு சந்தேகமும் இருப்பதாக கொண்டால்! இதனால் ஏற்படும் விளைவுகளையும் நாம் அனுமானிக்க வேண்டியிருக்கிறது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் கண்டுபிடிக்கப்படும் புதிய புதிய பங்களிப்பாளர்களின் வர்த்தக வாய்ப்பு ஒரு புறம் இருக்க…. அவற்றுக்கான பேட்டன் எனப்படும் அறிவு சார் காப்புரிமை., அதன் ஊடாக வரும் அறிவு சார் சொத்துரிமை வேறெங்கோ மடைமாற்றம் செயப்படுவது கண்கூடாக பார்க்க முடிகிறது. போதாக்குறைக்கு இவர்கள் போல் உள்ளவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் நிழலுருவங்களின் கைகளுக்கு செல்வதும் நன்றாக தெரிகிறது.

இதன் பின்னணியில் பணப்புழக்கம் என்பதும்….. மிகப் பெரிய சுழலுக்குள் நம்மை இழுத்து விடுவதால் மேற்படியான விஷயங்களை வழி நடத்த…. கண்காணிக்க… எந்த ஒரு வழிமுறைகளும் தற்சமயம் வரையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இதில் தென்படவில்லை. ஏற்கனவே ஸ்டிக்கர் பொட்டு அழிச்சாட்டியம் தனி.

இதில் கொள்கை அளவிலேயே ஏகப்பட்ட சில்லுண்டு வேலைகளின் அஸ்திவாரம் தெரிகிறது. ஆக இது நல்லதா… கெட்டதா… தெரிலேயேப்பா…!!
சுடாமல் சொல்லுங்கள் பார்க்கலாம். இல்லை விண்வெளி நாயகன் பட்டம் பெற்றவரின் வார்த்தையில் விளக்கம் சொன்னாலும் சரி.

எப்படியும் ஒன்றும் விளங்கப் போவதில்லை…! ஆனால் ஊர்ஜிதமாகிவிடும். புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் பாருங்கள்.

  • ‘ஜெய் ஹிந்த் ஸ்ரீ ராம்

காகித கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு!

kadeswara subramaniam hindu munnani - 2026

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது காகிதக் கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு வெறும் கண்துடைப்பு வசனங்களை பேசவேண்டாம் என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது…

17.4.25 அன்று தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் துறையின் அமைச்சர் சேகர்பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை ஒவ்வொன்றும் காகித கப்பல் தான் என்றால் மிகையில்லை.

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுக்க 19.80 கோடி ரூபாயில் கடல் அரிப்பு தடுப்பு பணி நடைபெறுவதாகவும் அதை தமிழக முதல்வர் 17/02/2024 அன்று தொடங்கி வைத்ததாகவும் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது .

ஆனால் நேற்றைய அறிவிப்பில் அமைச்சர் சேகர்பாபு ரூ.30 கோடி செலவில் திருச்செந்தூர் கடற்கரை கடல் அரிப்பு தடுப்புப் பணி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்,

அந்த வகையில் கடந்தாண்டு வெற்று அறிவிப்பாக 19.80 கோடி கடலில் கொட்டப்பட்டது. இந்த ஆண்டு மேலும் 30 கோடி வெற்று அறிவிப்பாக கொட்டப்படவிருக்கிறது என்றுதான் வேதனைப்பட வேண்டியுள்ளது.

தற்போது சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் கோயில் பணத்தில் ஆயிரம் ஜோடிக்கு திருமணம் மற்றும் 4 கிராம் தாலிக்கு தங்கம் வழங்குவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

அரசு நிதியில் ஏழை எளியோருக்கு சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்த வேண்டிய மாநில அரசு அதை மடைமாற்றி கோயில் நிதியை எடுத்து திருமணம், தங்கத்தாலி திட்டம் செயல்படுத்துவது திமுக ஓட்டு வேட்டையாட கோயில் பணத்தை சுரண்டுவதேன்றி வேறில்லை.

நேற்றைய அறிவிப்பில் மயிலாப்பூர், பழனி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 10 கோயில்களில் திருவிழாக்காலங்களில் மட்டும் தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் அறிவித்துள்ளதை இந்து முன்னணி வரவேற்கிறது.

அதே சமயத்தில் அனைத்து கோயில்களிலும் எல்லா நாட்களிலும் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வருஷத்திற்கு 500 பேருக்கு 1 லட்சம் மானியம் வழங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தொகை அறநிலையத்துறை நிதியில் இருந்து வழங்கப்படுவது ஏற்புடையதல்ல.

மெக்காவுக்கும், ஜெருசலேமுக்கும் செல்ல அரசு நிதியில் மானியம் கொடுப்பதும், இந்துகளுக்கு மட்டும் கோயில் நிதியை எடுத்து மானியம் வழங்குவதும் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாடுக்கு உடைத்த கதைக்கு ஒப்பானதாகும்.

திமுக ஆட்சியில் மூவாயிரம் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக் கூறும் அமைச்சர் அந்த கோயில் திருப்பணிகளுக்கு அனுமதி அளித்தத்தைத் தவிர அரசின் நிதி பங்களிப்பு என்ன என்பதை பற்றி கூறவில்லை.

பக்தர்களின் நன்கொடையில் திருப்பணி முதல் கும்பாபிஷேகம் வரை நடத்தபடும் நிலையில் திமுக அரசு அறிவித்த 1000 கோடி நிதியும் இதுவரை ஒதுக்கப்படாத நிலையில் அமைச்சர் பெருமை பட்டுக்கொள்ள என்ன இருக்கிறது என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.

பாடசாலை மற்றும் கல்லூரி நடத்துவது அரசின் கடமை என்றும் அதை கோயில் நிலத்தில், கோயில் பணத்தில் நடத்தக்கூடாது என்றும் கோயில் சொத்துகளும் நிதியும் கோயிலுக்கும் பக்தர்களுக்குமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் பல வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் தற்போது செவிலியர் கல்லூரி முதல் தொழில்பயிற்சி நிறுவனங்கள் வரை கோயில் நிலங்களில், கோயில் நிதியில் நடத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்திருப்பது திமுக அரசின் தோல்வியையும் கோயில் சொத்தை, நிதியை மடைமாற்றும் செயலன்றி வேறில்லை.

அமைச்சர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பேசி அனைத்து மொழி மக்களும் தமிழக கோயில்களுக்கு வந்து, தமிழகம் உலகத்திலேயே தலைசிறந்த ஆன்மீக பூமி என்று பேசுவதாக பெருமைபட்டுள்ளர். அந்த வகையில் தமிழகம் தொன்று தொட்டு இன்றுவரை ஆன்மீக பூமிதான் ஒருபோதும் திராவிட பூமி அல்ல என்பதை அமைச்சர் ஏற்றுகொண்டார் என்பது மகிழ்ச்சியே.

தவிர அமைச்சரின் அனைத்து அறிவிப்புகளும் காகித கப்பல்களாகவும், கானல்நீராகவும் அமைந்துள்ளது என்பது சிறிதும் சகித்துகொள்ள முடியாத ஒன்று. எனவே அறநிலையத்துறை நிதி முறையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய மத்திய தணிக்கைத்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்.

கோயில் நிலங்கள் மற்றும் நிதியை முறைகேடாக கல்வி நிறுவனங்கள் நடத்த பயன்படுத்தக் கூடாது.அரசின் அறிவிப்புக்கள் வெற்று அறிவிப்புகளாக இல்லாமல் உருப்படியான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.