Home Blog Page 102

IPL 2025: பந்து வீச்சாளர்களுக்கு வலு சேர்த்த போட்டி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – பெங்களூரு vs பஞ்சாப் சின்னசாமி மைதானம், பெங்களூரு – 18.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை (14 ஓவர்களில் 95/9,  டிம் டேவிட் 50, ரஜத் படிதர் 23, அர்ஷதீப் சிங் 2/23, மார்கோ ஜேன்சன் 2/10, சாஹல் 2/11, ஹர்பிரீத் ப்ரார் 2/25, சேவியர் பார்லெட் 1/26) பஞ்சாப் கிங்க்ஸ் அணி (12.1 ஓவர்களில் 98/5, நெஹல் வதேரா ஆட்டமிழக்காமல் 33, பிரியன்ஸ் ஆர்யா 16, ஜோஷ் இங்கிகிஷ் 14, பிரப்சிம்ரன் சிங் 13, ஜோஷ் ஹேசல்வுட் 3/14, புவனேஷ்குமார் 2/26) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பெங்களூருவில் மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. இழந்த நேரம் காரணமாக ஆட்டம் 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது, பூவாதலையா வென்ற பஞ்சாப் கிங்க்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் முதலில் ஆடவந்த பெங்களூரு அணியில் ரஜத் படிதர் (18 பந்துகளில் 23 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் டிம் டேவிட் (26 பந்துகளில் 50 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) ஆகியோரைத் தவிர மற்ற மட்டையாளர்கள் சரியாக ஆடவில்லை. எனவே 14 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கட் இழப்பிற்கு 95 ரன் எடுத்தது.

          14 ஓவரில் 96 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த பஞ்சாப் அணியும் அடிக்கடி தனது விக்கட்டுகளை இழந்து வந்தது. பிரியன்ஷ் ஆர்யா (11 பந்துகளில் 16 ரன்), பிரப்சிம்ரன் சிங் (9 பந்துகளில் 13 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (10 பந்துகளில் 7 ரன்), ஜோஷ் இங்க்லிஷ் (17 பந்துகளில் 14 ரன்) ஆகியோர் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை.

ஆனால் நெஹல் வதேரா (19 பந்துகளில் 33 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) அதிரடியாகவும் இறுதிவரையும் ஆடி 12.1 ஓவர்களில் பஞ்சாப் அணிக்கு 5 விக்கட் இழப்பிற்கு 98 ரன் சேர்த்து வெற்றியைத் தேடித்தந்தார்.

          பெங்களூரு அணிக்காக 50 ரன் அடித்த அந்த அணியின் மட்டையாளர் டிம் டேவிட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – ஹைதராபாத் vs மும்பை வான்கடே, மும்பை – 17.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை (162/5, அபிஷேக் ஷர்மா 40, ஹென்றி கிளாசன் 37, ட்ராவிஸ் ஹெட் 28, நிதீஷ் குமார் ரெட்டி 19, அனிகேத் வர்மா 18, வில் ஜேஜ்ஸ் 2/14, ட்ரண்ட் போல்ட், பும்ரா, பாண்ட்யா தலா ஒரு விக்கட்) மும்பை இந்தியன்ஸ் அணி (18.1 ஓவர்களில் 166/6, வில் ஜேக்ஸ் 36, ரியன் ரிக்கிள்டன் 31, ரோஹித் ஷர்மா 26, சூர்யகுமார் யாதவ் 26, திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 21, ஹார்திக் பாண்ட்யா 21, பாட் கம்மின்ஸ் 3/26, ஈஷா மலிங்கா 2/36, ஹர்ஷல் படேல் 1/31) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி முதலில் மட்டையாடவந்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா (28 பந்துகளில் 40 ரன், 7 ஃபோர்) மற்றும் ட்ராவிஸ் ஹெட் (29 பந்துகளில் 28 ரன், 3 ஃபோர்). இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர்.

மூன்றாவதாகக் களமிறங்கிய இஷான் கிஷன் இன்று சோபிக்கவில்லை. அதன் பின்னர் வந்தவர்கள் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் வில் ஜேக்ஸ் பந்துவீச்சில் விரைவாக ரன் சேர்க்க முடியாமல் திணறினர்.

நிதீஷ் குமார் ரெட்டி (21 பந்துகளில் 19 ரன்) ஹென்றி கிளாசன் (28 பந்துகளில் 37 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), அனிகேத் வர்மா (8 பந்துகளில் 18 ரன்), பாட் கம்மின்ஸ் (4 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 8 ரன்) ஆகியோர் அதிரடியாக ரன் குவிக்க முடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 5 விக்கட் இழப்பிற்கு 162 ரன் எடுத்தது.

          163 ரன் என்ற எளிய இலக்கை அடைய இரண்டாவதாக விளையாட வந்த மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா (16 பந்துகளில் 26 ரன், 3 சிக்சர்) மற்றும் ரியன் ரிக்கிள்டன் (23 பந்துகளில் 31 ரன், 5 ஃபோர்) இன்று சிறப்பான தொடக்கம் தந்தனர்.

மூன்றாவதாகக் களமிறங்கிய வில் ஜேக்ஸ் (26 பந்துகளில் 36 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) சிறப்பாக ஆடினார். அவருக்குப்பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் (15 பந்துகளில் 26 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), திலக் வர்மா (17 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 21 ரன், 2 ஃபோர்), ஹார்திக் பாண்ட்யா (9 பந்துகளில் 21 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) ஆகிய அனைவரும் வெற்றியை உறுதி செய்யும் வகையில் விளையாடினர்.

இருப்பினும் இறுதியில் 17.2 ஆவது ஓவரில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்படுகையில் பாண்ட்யா கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, 17.5ஆவது ஓவரில் நமன் தீர் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். இருந்தாலும் 18.1 ஓவர்களிலேயே 6 விக்கட் இழப்பிற்கு 166 ரன் எடுத்து மும்பை அணி வெற்றி பெற்றது.

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

tamilnadu waqf board - 2026

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ஃப் வாரியத்தை கண்டிப்பதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை…

சமீபத்தில் வக்ஃப் வாரிய திருத்தத் சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் இறைவங்காடு என்ற கிராமத்தில் வசிக்கும் 150 இந்து குடும்பங்களின் பூர்வீக சொத்துக்கள் வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தம் எனவும் அவர்கள் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய அநீதியை எதிர்த்து எந்த அரசியல் கட்சியும் வாயைத் திறக்கவில்லை. ஆனால் வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஊர் ஊராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். ஆனால் வேலூர் இறைவங்காடு கிராமத்து அப்பாவி இந்துக்களின் சொத்தின் உரிமையை பாதுகாக்க எந்த அரசியல்வாதிகளும் போராட முன்வரவில்லை. இந்து முன்னணி முன்னின்று போராடி வருகிறது.

ஓட்டு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினர் தாஜா என்பது மாறி இந்துக்களின் சொத்து, வியாபாரத்தை அபகரிப்பதற்கு துணைபோவது. மதமாற்றத்தால் இந்து குடும்பங்களை சீரழிப்பது, கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு சலுகையில் சிறுபான்மையை திணிப்பது என அக்கிரம செயல்களுக்கு அரசியல்வாதிகள் துணைப்போகின்றனர்.

இதனை இந்துக்கள் இன்னமும் உணரவில்லை என்றால் நாளை நாம் அகதிகளாக அடைக்கலம் தேடி திரியவேண்டி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வக்ஃப் வாரியத்தின் அநியாயமான செயல்பாடு குறித்து தமிழகத்தில் தான் முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. திருச்சி – திருச்செந்துரை கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் மற்றும் பல நூறு ஏக்கர் இந்துக்களின் பரம்பரை சொத்துக்கள் வக்ஃப் வாரிய சொத்து என சொந்தம் கொண்டாடியது. இஸ்லாம் தோன்றுவதற்கு பல நூறு ஆண்டுகள் முன்பே இருந்த சிவன் கோவில் வக்ஃப் வாரியச் சொத்து என்று கூறியதை திமுக எம்.பி.க்கள் மழுப்பினார்கள்.

ஆனால் இதே திமுக அரசு மாவட்ட ஆட்சியர் மூலம் தற்காலிகமாக வக்ஃப் வாரிய தடையில்லா சான்றிதழ் இல்லாமல் சொத்து விற்பனையை பதிவு செய்ய வாய்மொழி உத்தரவு கொடுக்க வைத்தார்கள். உண்மையை சில நாட்களுக்கு மறைக்கலாம். எப்போதும் முடியாது.

இந்துக்கள் தங்களது சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்துக்களின் சொத்துக்களை அபகரிக்கும் வக்ஃப் வாரியத்தை ஆதரிக்கும் எந்த அரசியல்வாதிளையும் தார்மீக ரீதியாக எதிர்க்கத் துணிய வேண்டும்.

மேற்கு வங்காளத்தில் வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இது இந்திய பிரிவினை காலத்தில் நடந்த மனித வேட்டையை நினைவுபடுத்துகிறது. இதன் ஆபத்தை நாடு முழுவதிலும் உள்ள இந்துக்கள் உணர வேண்டும்.

திருச்சி – திருச்செந்தூரை, திருப்பூர் – மங்கலம், சென்னை – திருவல்லிக்கேணி என பல மாவட்டங்களில் இந்துக்களின் சொத்துக்களை வக்ஃப் வாரியச் சொத்து எனக்கூறி வக்ப் வாரியம் சொந்தம் கொண்டாடி வருகிறது. ஏன் திருப்பரங்குன்றம் முருகன் மலையே வக்ஃப் சொத்து என்று திமுக எம்பி நவாஸ் கனி கூறினார்.

இன்று வேலூர் இறையங்காடு கிராமமே வக்ஃப் வாரியச் சொத்து என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இன்னமும் இந்துக்கள் யாராவது வந்து நம்மையும் நமது சொத்துக்களையும் காப்பாற்றுவார்கள் என்று சும்மா இருந்தால் இந்த சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியல்வாதிகள் இந்துக்களை அனாதைகளாக, அகதிகளாக ஆக்கிவிடுவார்கள்.

இலங்கையில் நடந்தது போல் இனப் படுகொலை நடந்தாலும் இந்துக்களின் சொத்துக்கள் பறிபோனாலும் இந்த அரசியல்வாதிகள் வேடிக்கை தான் பார்ப்பார்கள்.

வேலூர் – இறைவங்காடு இந்துக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி, அக்கிரமம் முடிவுக்கு கொண்டு வருவதுடன் இனி வருங்காலத்தில் இந்துக்கள் சொத்தினை அபகரிக்க வக்ஃப் வாரியம் கைகளை நீட்டாது இருக்க புதிய வக்ஃப் வாரிய திருத்தச்சட்டம் தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்தப்பட இந்துக்கள் தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்.

கேரளாவில் உள்ள மக்களின் விழிப்புணர்வால் அங்கு ஆளுகின்ற கம்யூனிச அரசு புதிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

எனவே இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி – 16.04.2025
சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

டெல்லி கேபிடல்ஸ் அணி (188/5, அபிஷேக் பொரல் 49, கே.எல், ராகுல் 38, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 34, அக்சர் படேல் 34, அஷுதோஷ் ஷர்மா 15, ஆர்ச்சர் 2/32, மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா தலா ஒரு விக்கட்) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (188/4, யசஷ்வி ஜெய்ஸ்வால் 51, சஞ்சு சாம்சன் 31, நிதீஷ் ராணா 51, துருவ் ஜுரல் 26, ஷிம்ரோன் ஹெட்மயர் ஆட்டமிழக்காமல் 15, மிட்சல் ஸ்டார்க், அக்சர் படேல், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கட்) மேட்ச் சமனில் முடிவடைந்தது. அதனால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் 0.5 ஓவரில் 11/2, டெல்லி கேபிடல்ஸ் 0.4 ஓவரில் 13/0. எனவே டெல்லி அணி வென்றது.

          பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாடவந்த டெல்லி அணியின் தொடக்க வீரர் ஜேக் மெகர்க் (9 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கருண் நாயர் (பூஜ்யம் ரன்) நாலாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வரிசையாக நான்கு வீரர்கள் சிறப்பாக ஆடினர்.

மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் போரல் (37 பந்துகளில் 49 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), கே.எல். ராகுல் (32 பந்துகளில் 38 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (18 பந்துகளில் 34 ரன்), அக்சர் படேல் (14 பந்துகளில் 34 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), அஷுதோஷ் ஷர்மா (11 பந்துகளில் 15 ரன், 2 ஃபோர்) என அதிரடியாக விளையாடியதால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 188 ரன் எடுத்தது.

          189 ரன் என்ற வெற்றை இலக்கை அடைய இரண்டாவதாக விளையாடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் யசஶ்வீ ஜெய்ஸ்வால் (37 பந்துகளில் 51 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் சஞ்சு சாம்சன் (19 பந்துகளில் 31 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) நல்ல தொடக்கம் தந்தனர். மூன்றாவதாகக் களமிறங்கிய ரியன் பராக் 8 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் நிதீஷ் ராணா (28 பந்துகளில் 51 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்), துருவ் ஜுரல் (17 பந்துகளில் 26 ரன், 2 சிக்சர்), ஷிம்ரோன் ஹெட்மயர் (9 பந்துகளில் 15 ரன்) என நன்றாக ஆடினர். இருப்பினும் கடைசி ஓவரில் 6 பந்துகளில் 9 ரன் தேவைப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணியால் 8 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் ஸ்கோர் சமனில் முடிந்தது. எனவே ஆட்டம் சூப்பர் ஓவருக்குப் போனது.

          சூப்பர் ஓவரில் முதலில் ராஜஸ்தான் அணி மட்டையாடியது ஷிம்ரோன் ஹெட்மயரும் ரியன் பராகும் ஆடவந்தனர். டெல்லி தரப்பில் இருந்து மிட்சல் ஸ்டார்க் பந்து வீசினார். முதல் பந்தில் ரன் எடுக்க முடியவில்லை. இரண்டாவது பந்தில் ஹெட்மயர் ஒரு ஃபோர் அடித்தார்.

மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். நாலாவது பந்து ஒரு நோபால்; அதில் பராக் ஃபோர் அடித்தார். அதனால் 5 ரன் வந்தது. அடுத்த பந்தில் ப்ராக் ரன் அவுட் ஆனார். அதற்கடுத்த பந்தில் ஜெய்ஸ்வால் ஒரு ரன் ஓடி ரன் அவுட் ஆனார். அதனால் ஐந்து பந்துகளில் ராஜஸ்தான் அணி 11 ரன் எடுத்தது.

          டெல்லி தரப்பில் இருந்து ஸ்டப்ஸ் மற்றும் ராகுல் மட்டையாடக் களமிறங்கினர். ராஜஸ்தான் தரப்பில் இருந்து சந்தீப் ஷர்மா பந்துவீசினார். முதல் மூன்று பந்துகளில் ராகுல் 2, 4, 1 என ஏழு ரன் எடுத்தார். நாலாவது பந்தை சிக்ஸ் அடித்து ஸ்டப்ஸ் டெல்லி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

          டெல்லி அணியின் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.  

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா முல்லன்பூர் – 15.04.2025

தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பஞ்சாப் கிங்க்ஸ் அணி (15.3 ஓவர்களில் 111, பிரப்சிம்ரன் சிங் 30, பிர்யன்ஷ் ஆர்யா 22, ஷஷாங்க் சிங் 18, நெஹல் வதேரா 10, ஹர்ஷித் ராணா 3/25, வருன்சக்ரவர்த்தி 2/21, சுனில் நரேன் 2/14, வைபவ் அரோரா 1/26, நோர்ஜே 1/23) கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை (15.1 ஓவர்களில் 95, அங்க்ரிஷ் ரகுவன்ஷி 37, அஜிங்க்யா ரஹானே 17, ஆண்ட்ரு ரசல் 17, யஸ்வேந்திர சாஹல் 4/28, மேக்ரோ ஜேன்சன் 3/17, சேவியர் பார்லெட், அர்ஷதீப் சிங்க், கிளன் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கட்) 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்குகிறார்கள். இன்று பஞ்சாபில் உள்ள முல்லன்பூரில் உள்ள மைதானத்தில் பஞ்சாபும் கொல்கொத்தாவும் மோதிய ஆட்டமும் அவ்வகையில்தான் இருக்கும் என அனைவரும் நினைத்தனர். ஏனெனில் பஞ்சாபின் தொடக்க வீரர்களில் ஒருவர் பிரியன்ஷ் ஆர்யா ஏற்கனவே ஒரு சதம் அடித்திருக்கிறார்.

ஷ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக ஆடிவருகிறார். மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் நன்றாக ஆடிவருகிறார். கொல்கொத்தா அணியில் சுனில் நரேன், க்விண்டன் டி காக், அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரு ரசல், ரிங்கு சிங் என அனைவருமே அதிரடி மட்டையாளர்கள். ஆனால் இன்றைய ஆட்டம் பந்துவீச்சாளர்களின் ஆட்டமாக இருந்தது. முதலில் ஆடிய பஞ்சாப் அணி 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்றால் இரண்டாவதாக ஆடிய கொல்கொத்தா அணி 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது.

          கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டபோது அதிக வெற்றிகரமான சேஸிங்கை செய்தது. இந்த ஆண்டு, அவர்கள் மிகக் குறைந்த டோட்டலை வெற்றிகரமான தற்காத்து, வெறும் 111 ரன்களுக்குப் பிறகு கொல்கொத்தாவை 95 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தனர். இதே பஞ்சாப் அணிதான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 245 ரன்களை தற்காத்துக் கொள்ளத் தவறிய அணியாகும்.

          கொல்கொத்தா அணி ஒருசமயத்தில் 3 விக்கெட்டுக்கு 62 ரன் என இருந்தது. அப்போது கொல்கொத்தா அணி வெற்றிபெற 98 விழுக்காடு வாய்ப்பு இருந்தது. ஆனால் அச்சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டைப் போலவே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக இருந்த சூழ்நிலையில் யுஸ்வேந்திர சாஹல் ஒரு பரபரப்பான கொல்கொத்தா அணியின்  சரிவைத் தூண்டினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் சவப்பெட்டியின் இறுதி ஆணிகளை அடித்தனர். கூர்மையான ஷார்ட் பந்துவீச்சுடன் ஆட்டத்தை முடித்தனர். இது கொல்கொத்தா அணி அற்பமான ஒரு ஸ்கோருடன் அனைத்து விக்கட்டுகளையும் இழக்கக் காரணமானது.

          இரண்டு பேட்டிங் அணிகளும் அதிக ரன்கள் அடிக்கும் நோக்கத்துடன்   நோக்கத்துடன் ஆட்டத்தை அணுகின. ஆடுகளத்தின் வேகம் காரணமாக பந்துகள் எல்லைக்கோட்டை நோக்கி விரைவாகப் பறந்தன. ஆனால் விக்கெட்டுகள் விழுந்தவுடன், ஆட்டம் கைவிட்டுப் போனது. அதனால், விஷயங்கள் விரைவாக நடந்தன, ஆட்டம் பரபரப்பாக மாறியது. பஞ்சாப் அணி 19 பந்துகளில் 0 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்களில் இருந்து அடுத்த 17 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 15 ரன்களை மட்டுமே எடுத்தது. கடைசி 6 விக்கெட்டுகளை 37 ரன்களுக்கு இழந்தது. கொல்கொத்தா அணி 1.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 7 ரன்களை எடுத்தது, ஆனால் அடுத்த 38 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தது. சாஹல் அதன் பின்னர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆண்ட்ரே ரஸ்ஸல் சாஹல் வீசிய ஒரு ஓவரில் 16 ரன்கள் எடுத்து சாஹலின் பந்துவீச்சுக் கணக்கை 4-0-28-4 என மறுசீரமைத்தார், ராமன்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா இணைந்து பவர்பிளேயில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்,

          கொல்கொத்தா அணி, அன்ரிச் நார்ட்ஜேவுடன் தங்கள் வேகப் பந்துவீச்சை மேம்போக்காக உயர்த்தியது, ஏனெனில் அவர்கள் பஞ்சாப் அணியின் இளம் இந்திய பேட்டர்களை சோதிக்க விரும்பினர். இருப்பினும், தொடக்க ஆட்டக்காரர்கள் வைபவ் அரோராவின் இரண்டாவது ஓவரை இலக்காகக் கொண்டு, அவர்களின் அதிக ரன்கள் அடித்து மீண்டும் அச்சுறுத்தினர். ஹர்ஷித் ராணா, குறைந்த நீளப் பந்துகளுடன் விஷயங்களை மாற்றினார். பிரியான்ஷ் ஆர்யா டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு ஷார்ட் அண்ட் வைட் பந்தை நேராக டீப் பாயிண்டிற்கு கட் செய்து அவுட் ஆனார். மேலும் பிரப்சிம்ரன் சிங் கட் செய்ய முயன்று ஆட்டமிழந்தார். மூன்று கேட்சுகளையும் ரமன்தீப் சிங் பிடித்தார்.

கொல்கொத்தா அணி சுழல் பந்துவீச்சாளர்கள் ஆட்சி

          அனேகமாக வேகப்பந்துவீச்சாளர்களிம் ஆதிக்கத்தை எதிர்பார்த்து, பஞ்சாப் அணி மார்கஸ் ஸ்டோனிஸுக்குப் பதிலாக ஜோஷ் இங்கிலிஸைக் கொண்டு வந்தார்கள். இருப்பினும், அவர்களின் இரு வெளிநாட்டு பேட்டர்களும் வருண் சக்ரவர்த்தியின் சுழலில் அவுட் ஆயினர். ஸ்லாக்-ஸ்வீப் செய்ய முயன்ற இங்கிலிஸ் ஒரு தவறான பந்துவீச்சில் ஆட்டமிழந்தார், க்ளென் மேக்ஸ்வெல் ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.

          பஞ்சாப் அணி ஒரு SOS மாற்றீட்டிற்குச் சென்றது, இதனால் மேக்ஸ்வெல் ஐந்தாவது பந்துவீச்சாளராகக் களமிறங்க வேண்டியிருந்தது.  சுனில் நரைன், அவர் இம்பாக்ட் பிளேயர் சூர்யன்ஷ் ஷெட்ஜ் மற்றும் ஜான்சனை வெளியேற்றினார்.

ஜான்சன் மற்றும் பார்ட்லெட் ஆரம்பத்தில் தாக்கினர்

          இந்த போக்கில் தொடர்ந்து, அர்ஷ்தீப்புக்கு முன்னால் முதல் ஓவரை கொடுத்த ஜான்சன், ஆடுகளத்தின் நடுப்பகுதியில் சோதனை செய்வதில் நேரத்தை வீணடிக்கவில்லை. பந்து நரைனின் புல்லைத் துடைத்து, ஸ்டம்பின் மேல் பட்டது. பிபிஎல்லில் புதிய பந்து விக்கெட்டுகளுக்குப் புகழ்பெற்ற பார்ட்லெட், டி காக் ஃபிளிக்கில் ஒரு பெரிய டாப் எட்ஜ் கிடைத்ததால், அரிய பாரம்பரிய லெந்த் பந்தில் குயின்டன் டி காக்கைப் பெற்றார்.

          ஒரு சில பீல்டிங் பிழைகள் அஜிங்க்யா ரஹானே மற்றும் அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு இடையேயான பார்ட்னர்ஷிப்பைப் பெற்றன, மேலும் கொல்கொத்தா அணி அட்டவணையில் முதலிடத்தைப் பெற உதவும் நிகர-ரன்-ரேட் அதிகரிப்பு பற்றிய கணக்கீடுகள் இருந்தன.

சாஹல் பஞ்சாப் அணியை மீண்டும் கொண்டு வந்தார்

          ஐபிஎல்லின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாஹல், இந்த ஆண்டு முதல் ஐந்து போட்டிகளில் வெறும் இரண்டு விக்கெட்டுகளுடன் அலட்சியமாகத் தொடங்கினார். அவர் ஒரு உடற்தகுதி தேர்வை எடுக்க வேண்டியிருந்தது, பின்னர் ரிக்கி பாண்டிங்கை இந்தப் போட்டியில் விளையாட அவர் உறுதியளிக்க வேண்டும். எல்லையில் இருந்து பார்ட்லெட் வீசிய ஒரு பந்து உண்மையில் அவருக்குப் பின்னால் நான்கு ஓவர்த்ரோக்களுக்கு எப்படி நழுவியது என்பதைப் பார்க்கும்போது, ​​பனி ஏற்கனவே ஆரம்பித்திருந்தது. ஆனாலும், சாஹல் பந்தைத் தட்டிக்கொண்டே இருந்தார், அவரது வேகத்தைக் குறைத்தார், மேலும் செட் பேட்டர்களான ரஹானே மற்றும் ரகுவன்ஷியை மட்டுமல்ல, ரின்கு சிங் மற்றும் ரமன்தீப் ஆகியோரையும் வெளியேற்றினார்.

          ரஹானே ஸ்வீப்பில் அடிக்கப்பட்டார், அவர் லைனுக்கு வெளியே இருந்தார், ஆனால் எல்பிடபிள்யூ அழைப்பை மறுபரிசீலனை செய்யத் தவறினார். சாஹலின் வேகமான பந்துகளில் 84.3 கிமீ வேகத்தில் அதுவும் இருந்தது, ஆனால் அவர் ஒரு முறை பார்த்தவுடன், அவர் அதை லூப் செய்யத் தொடங்கினார். ரகுவன்ஷி, ரிங்கு இருவரும் பந்த தூக்கி அடிக்க முயன்று, ஆட்டமிழந்தனர். ரகுவன்ஷி ஒரு தடிமனான விளிம்பில் பின்தங்கிய புள்ளியைப் பெற்றார், மேலும் டிப் மற்றும் டிரிஃப்ட் மூலம் கிரீஸுக்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்ட பிறகு ரிங்கு ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ராமன்தீப் ஒரு துடுப்பு ஸ்வீப் முதல் பந்தை முன்கூட்டியே திட்டமிட்டு அதை லெக் ஸ்லிப்பில் டாப்-எட்ஜ் செய்தார், அங்கு எதிர்பார்த்த ஐயர் ஏற்கனவே முதல் ஸ்லிப்பில் இருந்து ஓடி கேட்ச் பிடித்தார்.

ரஸ்ஸல் பஞ்சாப் அணியை பயமுறுத்தினார்

          லீக் கட்டத்தில் ஏறக்குறைய பாதியிலேயே, ரஸ்ஸலின் ஸ்டிரைக் ரேட் 92 ஆக இருந்தது, அவரது சீசன் எண்ணிக்கை 25 ரன்களில் 23 ஆகவும், மேட்ச் ஸ்கோர் 4 ஆஃப் 4 ஆகவும் இருந்தது. அவருக்கு ஆதரவாக இருந்த கடைசி வீரரான ராணா, ஜான்சனின் ஷார்ட் பிட்ச் பந்துவீச்சால் ஆட்டமிழந்தார். இன்னும் இரண்டு விக்கெட்டுகள் கைவசம் இருக்க கொல்கொத்தாவுக்கு இன்னும் 33 ரன்கள் தேவைப்பட்டது. அப்போதுதான் ரஸ்ஸல் சஹாலை இரண்டு சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்து தேவையான ரன்களை பாதியாகக் குறைத்தார்.

          இறுதியில், ரசல் இன்னும் இலக்கை நோக்கி மற்றொரு ஷாட்டை அடித்தார். இருப்பினும், அடுத்த ஓவரின் முதல் பந்தை அவர் கீழே எட்ஜ் செய்து முல்லன்பூரில் உற்சாகமான கொண்டாட்டங்களைத் தொடங்கினார்.

          நமக்கு ஒரு அற்புதமான ஆட்டம் காணக் கிடைத்தது.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

mkstalin - 2026

— ஆர். வி. ஆர்

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

மாநில சுயாட்சியின் முக்கியத்துவம் பற்றி சட்டசபையில் இப்போது மு. க ஸ்டாலின் பேசி இருக்கிறார். “மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக இருந்தால்தான் அவை வளர்ச்சி அடையும்” என்பதும் அவர் வார்த்தைகள். இது தொடர்பாக அரசமைப்பு சட்டத்தின் விதிகளை ஆராய்ந்து மறு மதிப்பீடு செய்து அறிக்கை தர, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒரு குழுவைத் தமிழக அரசு அமைத்திருக்கிறது என்றார் ஸ்டாலின்.

சுயாட்சி என்றால் என்ன அர்த்தம்? ‘நம்மை, நமது பிரதேசத்தை, நாமே ஆள்வது’ என்பது அதன் நேரடி அர்த்தம். ‘மத்திய அரசின் தலையீடு இல்லாமல், தமிழ் நாடே அனைத்து விஷயங்களிலும் தன்னை ஆள வேண்டும் – ஒரு தனி நாடு மாதிரி’ என்ற அர்த்தம் ‘மாநில சுயாட்சி’ என்ற வார்த்தையில் தெரிகிறது. தேவையானால் “ஆமாம், அதுதான் அர்த்தம்” என்று ஓங்கிப் பேசவும், வழக்கு வந்தால் “அதற்கு அர்த்தம் அதுவல்ல. தமிழர்களுக்கு சட்ட ரீதியாக அதிக அதிகாரம் பெறும் மந்திரச் சொல் அது” என்றும் நழுவிக் கொள்ளலாம்.

‘சில குறிப்பிட்ட அதிகாரங்கள் இப்போது மத்திய அரசிடம் இருக்கின்றன. அவற்றை மத்திய அரசிடமிருந்து எடுத்து மாநிலங்களுக்கு மாற்றித் தரவேண்டும்’ என்பதுதான் நடைமுறையில் திமுக கேட்கும் மாநில சுயாட்சியாக இருக்க முடியும். இந்தப் புள்ளியிலிருந்து சில விஷயங்களைப் பார்க்கலாம்.

திமுக விரும்பும் மாநில சுயாட்சி முன்பே கையில் இருந்தால், திமுக தமிழகத்தை ஆண்ட நாட்களில் மக்கள் நலனுக்காக என்னென்ன சாதனைகள் செய்திருக்கும் என்று ஸ்டாலினால் சொல்ல முடியுமா? முடியாவிட்டால் இப்போது மாநில சுயாட்சி தேவை என்று அவர் பேசுவது ஏமாற்று வேலை.

தெருவுக்கு வந்தும் ஒரு விஷயம் பேசலாம். எல்லா மாநிலங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. மாநிலங்களில் புதிய புதிய நெடுஞ்சாலைகளை மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அமைக்கிறது. எல்லா தேசிய நெடுஞ்சாலைகளையும் அந்த அமைப்பே பாராமரிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நல்ல தரம் என்ன, தமிழக அரசு மற்றும் உள்ளாட்சிகள் அமைத்துப் பராமரிக்கும் பல்லிளிக்கும் சாலைகளின் தரம் என்ன? தெரிந்ததுதான். மற்ற துறைகளில் அதிக அதிகாரங்கள் கிடைத்தால் மட்டும் அவற்றை வைத்து ஒரு திமுக ஆட்சி மாநிலத்தில் எதைச் சிறப்பாகச் செய்யும்?

மாநில அரசின் அதிகாரங்களை வைத்து, தமிழக அரசு பொதுமக்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும். இதில் மத்திய அரசு ஒரு முட்டுக்கட்டையும் போட முடியாது. அதாவது, குடிநீர் வழங்கும் விஷயத்தில் மாநில அரசுகளுக்கு வானளாவிய சுயாட்சி உண்டு. நமது மாநில மக்கள் அனைவரும் குடிநீருக்காகக் காத்திருக்காமல், குடம் வாளி தூக்கி அலையாமல், அவர்களுக்குத் தேவையான குடிநீர் கிடைக்கச் செய்துவிட்டதா திமுக? பிறகு எதற்கு மாநில சுயாட்சி?

இப்போதைய திமுக ஆட்சியில், முன்பு இரண்டரை வருடங்கள் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. தற்போது அவர் வனத்துறை அமைச்சர். பொதுமேடையில் ஒரு மூன்றாம் தர ஆசாமியும் பேசத் தயங்கும் ஆபாசப் பேச்சை அவர் சமீபத்தில் மேடையேறிப் பேசினார். இத்தனைக்கும் அவர் மூன்று எம்.ஏ பட்டங்கள், பி.எட் பட்டம், பி.எல் பட்டம், அதோடு பி.எச்.டி பட்டமும் வாங்கியவர். எப்படித்தான் அவர் இத்தனை பட்டங்கள் வாங்கினாரோ – வாங்கியவருக்குத் தான் தெரியும்!

மாநில சுயாட்சி முன்பே கிடைத்திருந்தால் அதன் கீழ் திமுக என்ன செய்திருக்கும்? மாநில சுயாட்சி அதிகாரத்தைக் கண்ணும் கருத்துமாக உபயோகித்து, உண்மையிலேயே கல்வியில் சிறந்த, கண்ணியத்திற்கும் உதாரணமான, ஒரு கனவானைத் திமுக உயர்கல்வித் துறை அமைச்சராக்கி இருக்குமா?

இப்போது பணச் சலவைக் குற்றங்களை (money laundering) விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு, மத்திய அரசின் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இருக்கிறது. மாநில சுயாட்சிக் கொள்கையின் படி, இத்தகைய விசாரணையை மாநில அரசே செய்ய வேண்டும் என்று திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆசைப் படுவார். அதன் அனுகூலங்கள் அவருக்குத் தெரியும். ஸ்டாலினும் அதையே விரும்புவாரே?

ஸ்டாலின் விரும்பும் மாநில சுயாட்சி அதிகாரங்களை விடக் கூடுதல் அதிகாரங்களை முன்பு கொண்ட ஒரு இந்திய மாநிலம், ஜம்மு காஷ்மீர். அதற்கென்று தனியாக ஒரு அரசமைப்புச் சட்டமே இருந்தது. தனிக் கொடியும் இருந்தது. முன்பு மத்திய ஊழல் தடுப்பு சட்டமும் அங்கு அமல் ஆகவில்லை.

அரசியல் சட்டப் பிரிவு 370 மாற்றம் செய்யப் படுவதற்கு முன், மாநில மஹா சுயாட்சி கொண்டிருந்த ஜம்மு காஷ்மீர் அதை வைத்து என்ன முன்னேற்றத்தைக் கண்டது, மக்களின் பொருளாதார நல்வாழ்விற்கு என்ன செய்தது? ஒன்றுமில்லை. அந்த சட்டப் பிரிவு முடக்கப் பட்டபின், மத்திய அரசின் உதவியுடன் – ஜம்மு காஷ்மீர் இன்னும் யூனியன் பிரதேசமாக இருக்கும் நிலையில் – அந்தப் பிரதேசத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிதும் பரவியிருக்கின்றன. அந்த மக்களுக்கான கல்வி வசதிகள், மருத்துவ வசதிகள், வருமான வாய்ப்புகள் உயர்ந்திருக்கின்றன. அங்கு சட்டம் ஒழுங்கும் மேம்பட்டிருக்கிறது. இதற்கு என்ன பதில் சொல்வார் ஸ்டாலின்?

தனது அதிகாரங்களை வைத்து மத்திய அரசு ரயில் போக்குவரத்தை நன்றாக நிர்வகிக்கிறது, ரயில்வே நிலையங்களை சிறப்பாகப் பாராமரிக்கிறது. மாநில அதிகாரங்களின் கீழ் பேருந்து நிலையங்களைத் திமுக அரசு எப்படிப் பராமரித்து வருகிறது? லொட லொட அரசு பஸ்களே நமது மாநில அரசு செயல்படும் லட்சணத்தை சத்தம் போட்டுச் சொல்லுமே?

“மாநில அரசுக்கு ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அதிகாரம் இல்லை. மத்திய அரசைப் போல் அந்த அதிகாரம் எங்களுக்கும் இருந்தால் நிதிப் பிரச்சனை இல்லாமல் மாநிலத்தில் எல்லாப் பணிகளையும் செய்து முடிப்போம்” என்று எந்த அரசியல் தலைவரும் பேசமாட்டார் என்று நாம் பிரார்த்திக்க வேண்டும். அந்த அதிகாரம் தமிழகத்திற்கு இருந்தால், லாட்டரி சீட் மாதிரி ஒரே சீரியல் நம்பரில் எத்தனை ஐநூறு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப் படுமோ, யார் கண்டது!

ஒரு மாநிலத்தை ஆளும் முதலமைச்சரின் சிந்தையில் நேர்மையும், செயலில் முனைப்பும், நெஞ்சில் மக்கள் நலனும் இருந்தால் தற்போதுள்ள மாநில அதிகாரங்களை உபயோகித்தே அவர் மாநிலத்திற்கு எல்லா நன்மைகளும் கிடைக்கச் செய்யலாம். திமுக தலைவர்களிடம் அந்த குணங்கள் இல்லை. அதுதான் அவர்களின் உள் கோளாறு – மாநில சுயாட்சி ஜுரம் அவற்றின் ஒரு வெளி அடையாளம். இதுதான் விஷயம்.

மாநில சுயாட்சி இல்லாமல் ஒரு மாநிலத்துக்கு அதன் முதல்வரால் சிறந்த ஆட்சி தர முடியாது என்று ஸ்டாலின் நிஜமாகவே நினைக்கிறாரா? அப்படியானால், மத்தியில் பத்தாண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தபோதும் நரேந்திர மோடியால் அதே நேரம் குஜராத்தில் எப்படி மிகச் சிறந்த ஆட்சி தர முடிந்தது என்று ஸ்டாலின் தெளிவு படுத்தட்டும்.

மாநில சுயாட்சி ஜுரத்தில் பிதற்றாமல், ஒரு மாநில முதல்வர் பதவியில் இருந்த மோடி எப்படி நாட்டின் பிரதமர் ஆனார் என்பதையும் ஸ்டாலின் புரிந்து கொள்வது அவருக்கே நல்லது. பிரதமர் கனவில் மிதக்கும் ஸ்டாலினுக்கு அவருடைய கனவு நிறைவேற ஒரு எளிய வழியும் கிடைத்து விடுமே!

Author: R. Veera Raghavan Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான்!

annamalai bjp tn leader - 2026

“திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான்.” என்று, அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை….

தமிழகத்தில் சீரழிந்த சட்டம் ஒழுங்கு, குழந்தைகள், பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள், போதைப் பொருட்களின் புழக்கம், காவல் துறையினருக்கே பாதுகாப்பின்மை, என திமுக அரசுக்கு எதிராக தமிழக மக்கள் கடுங்கோபத்தில் இருக்கையில், தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், பொதுமக்கள் தனது ஆட்சியைப் பாராட்டுகிறார்கள் என்ற கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தேவையற்ற விளம்பர நாடகங்களில் மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு. ஸ்டாலின், மீண்டும் ஒருமுறை மக்கள் வரிப்பணத்தை வீணடிக்க, மத்திய அரசுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைப்பதற்கான தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, திமுக அரசு அமைத்துள்ள பல குழுக்களில் இதுவும் ஒன்று. மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பதற்கு முன், கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு அமைத்துள்ள குழுக்களுக்கு எவ்வளவு நிதி செலவிட்டுள்ளது என்பதையும், இந்தக் குழுக்களினால் என்ன தீர்வு கிடைத்துள்ளது என்பதையும், முதலமைச்சர் முதலில் அறிவிக்க வேண்டும்.

இன்று முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் பேசும்போது, கல்வி மற்றும் நீதி நிர்வாகம், மாநிலப் பட்டியலிலிருந்து, பொதுப் பட்டியலுக்கு ஏதோ கடந்த வாரம் மாற்றப்பட்டது போல் பூடகமாகப் பேசியிருக்கிறார். கடந்த 1976 ஆம் ஆண்டு, 42வது சட்டத் திருத்தம் மூலம் அவை பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன. கடந்த 40 ஆண்டுகளாக, மத்திய அரசில் குறிப்பிடத்தக்க பல அமைச்சரவைப் பதவிகளை வகித்த திமுக, இதற்காக ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. மத்திய அரசில் எதிர்க்கட்சிகளின் வரிசையில் இருக்கும்போது மட்டுமே மாநில உரிமைகளைப் பற்றி திமுகவுக்கு ஞாபகம் வருகிறது.

இன்றைய தீர்மானத்தில் திரு. மு.க. ஸ்டாலின் நீட் பற்றிப் பேசினார். தனது கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் சுகாதாரத் துறை இணை அமைச்சருமான திரு.காந்தி செல்வன் தான், கடந்த 21/12/2010 அன்று நீட் தேர்வை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார் என்பதை, முதலமைச்சர் தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். கடந்த 2013 ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணி அரசுதான், நீட் தேர்வை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் 2 ரிட் மனுக்களை தாக்கல் செய்தது, மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டு, நீட் தேர்வை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் யார் வாதிட்டார்கள் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். மேலும், கடந்த 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றனர் என்பதை திரு.மு.க. ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும், ஏனெனில் இந்த முக்கியமான தகவல், முன்னாள் நீதிபதி திரு. ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையில் வேண்டுமென்றே விடுபட்டுள்ளது.

கடந்த 1969 ஆம் ஆண்டு, அன்றைய திமுக அரசு அமைத்த மத்திய-மாநில உறவுகள் விசாரணைக் குழுவைப் பற்றியும் திரு.மு.க. ஸ்டாலின் இன்று தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது தந்தையும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான திரு கருணாநிதி, சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி திரு. பி.வி. ராஜமன்னார் அவர்கள் தலைமையில், கடந்த 1969 ஆம் ஆண்டு மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழு தனது அறிக்கையை, கடந்த 1971 ஆம் ஆண்டு மே மாதம், தமிழக அரசுக்கு சமர்ப்பித்தது. பின்னர் 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழக சட்டமன்றம் இந்த அறிக்கையை மத்திய அரசை ஏற்றுக்கொள்ளக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

கடந்த 1971 ஆம் ஆண்டு திமுக அரசு வெளியிட்ட ராஜமன்னார் குழு அறிக்கையின் பரிந்துரைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

நாடாளுமன்றத்தால் அறிவிக்கப்பட்ட, நாட்டின் பாதுகாப்பு மற்றும் போர்ச் சூழல் சார்ந்த தொழில்கள் குறித்த Entry 7 ல், ஆயுதத் தொழிற்சாலைகள் தவிர மற்றவை அனைத்தும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று இந்தக் குழு விரும்பியது.

மத்திய அரசு பட்டியலில் உள்ள எண்ணெய் வயல்கள் மற்றும் கனிம எண்ணெய் வளங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் சார்ந்த Entry 53, 54 மற்றும் 55 ஆகியவை மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.

Entry 76 – மாநிலங்களின் செலவுக் கணக்குகளின் தணிக்கை, மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.

Entry 48 – எதிர்காலச் சந்தைகள், மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.

Entry 5, 8, 17, 19, 22, 23, 24, 25, 28, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40 மற்றும் 42 – இந்தப் பதிவுகள் முழுவதுமாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.

எந்தவொரு மாநிலத்திலும், அந்த மாநிலத்தின் அனுமதி இல்லாமல் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை அனுமதிக்கக்கூடாது

மாநில அமைச்சரவையின் ஒப்புதலின் பெயரிலேயே ஆளுநரை நியமிக்க வேண்டும்.

அகில இந்தியப் பணிகளுக்கான தேர்வு மொழியாக, ஆங்கில மொழிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். (மாநில மொழிகளைக் குறிப்பிட மறந்து விட்டார்கள்)

மக்கள்தொகையைப் பொருட்படுத்தாமல், நாடாளுமன்றத்தில் மாநிலங்களுக்கு சம பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். (இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிய 2 ஆண்டுகளுக்குப் பிறகு, திரு. கருணாநிதி அவர்கள், மக்களவையில் தமிழகத்திற்கான இடங்கள் அதிகரிக்காமலேயே, மக்களவையில் மொத்த இடங்கள் 525 இலிருந்து 545 ஆக அதிகரிக்கப்பட ஒப்புக்கொண்டார்.)

ஆங்கிலம் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும்.

இந்தப் பரிந்துரைகள் குறித்து கடந்த 1971 ஆம் ஆண்டு, நமது முன்னாள் பாரதப் பிரதமர், பாரத ரத்னா திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பேசுகையில், திமுக அமைத்துள்ள குழுவின் பரிந்துரைகள், பிரிவினைவாதத்தை ஆபத்தான அளவிற்கு ஊக்குவிக்கும் என்றும், நீதிபதி ராஜமன்னார் போன்ற மரியாதைக்குரிய நபரை, பிரிவினைவாத அரசியலின் அடையாளமாக முன்வைத்திருக்கிறது திமுக என்றும் குற்றம் சாட்டினார். அதன் பின்னர், மத்திய அரசு திமுக குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து, அந்தப் பரிந்துரைகள் நடைமுறைக்கு ஏற்றவை அல்ல என்று தெளிவுபடுத்தியது.

திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் முதல் இன்று வரை, அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் பிரிவினையை தூண்டுவதாகத்தான் அமைந்திருக்கிறது. அதன் ஒரு பகுதிதான், மாநில சுயாட்சி என்ற முகமூடி. உண்மையில் திமுக அரசின் இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் மாநில சுயாட்சிக்கானவை அல்ல.

தங்கள் அரசு பல வழிகளில் ஊழல் செய்யவும், அந்த ஊழல்கள், எவ்வித விசாரணைக்கு உள்ளாகாமல், தாங்கள் தப்பித்துக் கொள்ளவும் மட்டுமே இது போன்ற பல பரிந்துரைகள் ராஜமன்னார் குழு அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. திரு. கருணாநிதி ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே, வருங்காலத்தில் தனது கட்சியின் ஊழல் பாதைக்கு அடித்தளம் அமைக்க நடந்த முயற்சிதான் இது.

ராஜமன்னார் குழுவின் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்றான, மாநிலங்களுக்கு வரிப் பங்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற பரிந்துரையை, மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசாங்கங்கள் பெரிய அளவில் செயல்படுத்தவில்லை, ஆனால் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து, மாநில அரசுக்கான வரிப்பங்கீட்டை விரைவாக மேம்படுத்தியிருக்கிறார்.

கடந்த 2004 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில், பத்து ஆண்டுகளில் மத்திய அரசின் வரிப்பங்கீடு மற்றும் மானியங்கள், தமிழகத்திற்கு ₹1,52,902 கோடியாக இருந்தன. நமது பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆட்சியில், கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை, 11 ஆண்டுகளில் இது ₹6,21,938 கோடியாக அதிகரித்துள்ளது. எனவே, தமிழகத்திற்கு போதிய வரிப்பங்கீடு வழங்கப்படவில்லை என்று முதலமைச்சர் உள்ளிட்ட திமுகவினர் கூறுவது முழுப்பொய்யே.

தனது ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டை மறைக்க, வாரம் ஒரு நாடகமாடுவதை வழக்கமாக வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள், திமுகவின் பிரிவினைவாதத்தை தமிழக மக்கள் எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை என்பதை உணர வேண்டும். வீண் விளம்பரங்களுக்கு மக்கள் வரிப்பணத்தைச் செலவு செய்து நாடகமாடுவதை நிறுத்திவிட்டு, சீர்குலைந்து கிடக்கும் மாநில நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் !

IPL 2025: வரிசையான தோல்விகளுக்குப் பின் மீண்ட சென்னை அணி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – லக்னோ vs சென்னை
லக்னோ – 14.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (166/7, ரிஷப் பந்த் 63, மிட்சல் மார்ஷ் 30, ஆயுஷ் பதோனி 22, அப்துல் சமத் 20, ஜதேஜா 2/24, பதிரணா 2/45, கலீல் அகமது, அன்ஷுல் காம்போஜ் தலா ஒரு விக்கட்) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி (19.3 ஓவர்களில் 168/5, ஷிவம் துபே ஆட்டமிழக்காமல் 43, ரச்சின் ரவீந்திரா 37, ஷேக் ரஷீத் 27, எம்.எச். தோனி ஆட்டமிழக்காமல் 26, ரவி பிஷ்னோய் 2/18, திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், எய்டன் மர்க்ரம் தலா ஒரு விக்கட்) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் எய்டன் மர்க்ரம் (6 ரன்) முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடி பேட்ஸ்மென் நிக்கோலஸ் பூரன் (8 ரன்) நாலாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மிட்சல் மார்ஷ் (25 பந்துகளில் 30 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), ரிஷப் பந்த் (49 பந்துகளில் 63 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்), ஆயுஷ் பதோனி (17 பந்துகளில் 22 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்), அப்துல் சமத் (11 பந்துகளில் 20 ரன், 2 சிக்சர்) ஆகிய நால்வர் மட்டும் சிறப்பாக ஆடினர்.

மற்ற வீரர்களான டேவிட் மில்லர் ரன் எடுக்க வில்லை; ஷர்துல் தாகூர் (4 ரன்) விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 20 ஓவர் முடிவில் லக்னோ அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 166 ரன் எடுத்தது. ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங் செய்த விதத்திலும் அப்துல் சமதை ரன் அவுட் ஆக்கிய விதத்திலும் தோனி சிறந்து விளங்கினார்.

          167 என்ற எளிய இலக்குடன் இரண்டாவதாகக் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷேக் ரஷீத் (19 பந்துகளில் 27 ரன், 6 ஃபோர்) மற்றும் ரச்சின் ரவீந்திரா (22 பந்துகளில் 37 ரன், 5 ஃபோர்) இன்று சிறப்பான தொடக்கம் தந்தனர்.

அதன் பின்னர் ஆட வந்த ராகுல் திரிபாதி (10 பந்துகளில் 9 ரன்), ரவீந்த்ர ஜதேஜா (11 பந்துகளில் 7 ரன்) இன்று சோபிக்கவில்லை. சென்னை அணி இன்றும் தோல்வியுமோ என்று அனவரும் எண்ணியபோது  ஷிவம் துபே (37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 43 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் எம்.எஸ். தோனி (11 பந்துகளில் 26 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றியைத் த்மஎடித்தந்தனர்.

விஜய் ஷங்கர் (8 பந்துகளில் 9 ரன், 1 ஃபோர்) இடையில் வந்துபோனார். இதனால் 19.3 ஓவர்களில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு சென்னை அணி 168  ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

          சென்னை அணியின் அணித்தலைவர் மற்றும் விக்கட் கீப்பரான எம்.எஸ். தோனி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

வக்ப் திருத்தச் சட்டம் இஸ்லாமியருக்கு பாதுகாப்பானதா?

tamilnadu waqf board - 2026

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் திருத்தச் சட்டம் ஏப்.,8 கடந்த செவ்வாய்க் கிழமை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இந்நிலையில், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் வக்ப் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறைகள் அவிழ்த்து விடப்பட்டன. அஸ்ஸாமில் தலைதூக்கிய வன்முறையை காவல் துறை உடனே அடக்கியது.

முன்னதாக, வக்ப் வாரியத்தை சீரமைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு வக்ப் திருத்தச் சட்ட மசோதாவை அறிமுகம் செய்தது. நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வு செய்து அறிக்கை வழங்கிய பிறகு இந்த மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில் சட்டம் இறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த சட்டம், நாடு முழுவதும் ஏப்.,8 கடந்த செவ்வாய்க் கிழமை முதல் அமலுக்கு வந்தது என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் இந்தச் சட்டத்தை எதிர்த்து திமுக.,, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அறிவித்தன. தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை எதிர்பார்த்திருந்த மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்தது.

வக்ப் சட்டத்தை எதிர்த்து யாரேனும் மனு தாக்கல் செய்தால், தங்களது கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று வலியுறுத்தி மத்திய அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்தை எதிர்க்கும் மனுக்கள் மீதான விசாரணை ஏப்.,15 நாளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வக்ப் திருத்தச் சட்டத்தின் முக்கியமான அம்சங்கள் குறித்து பலரும் ஊடகங்களில் குறிப்பிட்டு வருகிறார்கள்.

வக்ப் திருத்த மசோதா இந்தியாவில் வக்ப் சொத்துக்களின் மேலாண்மை மற்றும் நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட நிர்வாகம்:

1) வக்ப் வாரியங்களுக்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை ஒழுங்குபடுத்தவும், மென்மையான நிர்வாகத்திற்கு வழிவகுக்கும் வகையில் இந்த மசோதா முயல்கிறது.

2) முடிவெடுக்கும் செயல்முறைகளை எளிதாக்குவதையும், சொத்து பதிவுகளின் சரியான நேரத்தில் கணக்கெடுப்புகள் மற்றும் புதுப்பிப்புகளை உறுதி செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

வக்ப் சொத்துக்களின் பாதுகாப்பு:

1) வக்ப் சொத்துக்களின் ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத பரிமாற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்த மசோதா வலுப்படுத்துகிறது.

2) நீண்டகால சொத்து தகராறுகளைத் தீர்ப்பதும், இந்த சொத்துக்கள் அவர்களின் நோக்கம் கொண்ட தொண்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதும் இதன் நோக்கமாகும்.

பெண்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களுக்கு அதிகாரம் அளித்தல்:

1) மரபுரிமை மற்றும் நலன் சார்ந்த விஷயங்களில் முஸ்லிம் பெண்கள், குறிப்பாக விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான விதிகள் இந்த மசோதாவில் அடங்கும்.

2) கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதிக்கான வக்ஃப் நிதியை சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலம் ஏழைகள் மற்றும். வாய்ப்பு கிடைக்க பெறாத சமூகங்களுக்கு ஆதரவை வழங்குவதிலும் இது கவனம் செலுத்துகிறது.
வக்ஃப் வாரியங்களில் அதிக பெண் பிரதிநிதித்துவத்தையும் இது கட்டாயமாக்குகிறது.

உள்ளடக்கம் மற்றும் பிரதிநிதித்துவம்:

இந்த மசோதா பல்வேறு முஸ்லிம் சமூகங்களின் சிறந்த பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத பிரதிநிதித்துவத்திற்கான ஏற்பாடுகளையும் உள்ளடக்கியது.

சர்ச்சைத் தீர்வு மேம்பாடுகள்:

வக்ஃப் சொத்துக்கள் தொடர்பான தகராறுகளைத் தீர்ப்பதற்கான செயல்முறையை மேம்படுத்தவும், இந்த தகராறுகளை வழக்குகளில் நடத்தக்கூடிய கால அளவைக் கட்டுப்படுத்தவும் இந்த மசோதா முயல்கிறது.

சாராம்சத்தில், வக்ஃப் திருத்த மசோதா வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தை நவீனமயமாக்கவும் மேம்படுத்தவும் முயல்கிறது, இது அமைப்பை மிகவும் திறமையானதாகவும், வெளிப்படையானதாகவும், சமூகத்திற்கு நன்மை பயக்கும் வகையிலும் மாற்றுகிறது.

வசந்தத்தை வரவேற்கும் புத்தாண்டு

visuvavasu new year copy - 2026

பத்மன்

பாரதப் பண்பாட்டில் பண்டிகைகள் எல்லாமே, உட்பொருள் நிறைந்த தத்துவங்களை உள்ளடக்கியபடி, வெளிப்புறச் சடங்குகளால் விமரிசையாகக் கொண்டாடப்படும் வகையில் அமைந்துள்ளன. புத்தாண்டும் அவ்வகையில் பொருள் பொதிந்த விழாவே! தமிழகம் உட்பட பாரதத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வசந்தத்தை வரவேற்கும் திருநாளே, சித்திரையில் பிறக்கும் புத்தாண்டு தினம்.

பூமத்திய ரேகைக்கு நேர் மேலே சூரியன் செங்குத்தாக வந்து, பகலும் இரவும் சரிசமமாக இருக்கும் நாளை, பகலிரவுச் சமநாள் (Equinox) என்பார்கள். அந்தச் சமநாளில் இரவுப் பொழுதும், பகல் பொழுதும் சரிசமமாக இருக்கும். இந்தச் சமநாள் ஆண்டுக்கு இரு முறை வரும். பகல் பொழுது அதிகமாக இருக்கும் வேனில் காலத்தின் தொடக்கத்திலும், அதற்குப் பின் 6 மாதங்கள் கழிந்து, இரவுப் பொழுது அதிகமாக இருக்கும் குளிர்காலத்தின் தொடக்கத்திலும் இந்தச் சமநாள் வரும்.

இவற்றில், முடக்கிப் போடும் பனிக்காலம் நீங்கி, சூரியனின் பொற்கதிர்கள் வீரியம் பாய்ச்சும் இளவேனிற்காலத்தின் தொடக்கத்தையே நம் முன்னோர்கள் புத்தாண்டு தினமாக வகுத்தனர். ஒரு நாளின் தொடக்கம் எவ்விதம் சூரியனின் முதல் கிரணம் பூமியில் விழுகின்ற விடியலில் தொடங்குகிறதோ, அதைப்போல வருடத்தின் தொடக்கமும் சூரியனின் கதிர்கள் இதமளிக்கும் வெம்மையாக விழத் தொடங்குகின்ற இளவேனில் காலத்தில் தொடங்குகிறது.

ஆறுவகைப் பருவங்களில், சித்திரை, வைகாசி என்ற இரு மாதங்களே இளவேனில் பருவகாலத்துக்கு உரியவை. வானியல் கணக்கின்படி சித்திரை மாதத்தை மேஷ மாதம் என்பார்கள். மேஷம் என்றால் ஆடு. வானத்தில், ஆடு போல் தோற்றம் அளிக்கின்ற ராசிக் கூட்டத்தின் ஊடாக சூரியன் பிரவேசிக்கின்ற நாளே ஆண்டின் தொடக்கமாகும். சித்திரை மாதமே ஆண்டின் தொடக்க மாதம் என்பதற்கு, சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான நெடுநல்வாடை சான்று பகர்கிறது.

“திண்நிலை மருப்பின் ஆடு தலைஆக, விண்ஊர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து” என்பன அந்தப் பாடல் வரிகள் (160-161). வீங்குசெலல் மண்டிலம் என்பது சூரியனைக் குறிக்கும். “ஆகாயத்திலே, திண்மையான நிலைத்த கொம்பைக் கொண்ட ஆடு போல் தோற்றமளிக்கும் மேஷ ராசி தொடங்கி, ஏனைய ராசிகளில் சென்று திரிகின்ற, மிகுதியான இயக்கத்தைக் கொண்ட சூரியன்” என்று இதற்குப் பொருள். ஆகையால்தான், சூரியனின் பயணம் தொடங்குகின்ற சித்திரை முதல் நாளைப் புத்தாண்டு தினமாக நம் முன்னோர்கள் கொண்டனர்.

மேஷ மாதம் என்ற சித்திரை மாதத்தைத்தான் ஆண்டின் தொடக்கமாகக் கொள்ள வேண்டும் என்பதற்குக் கூடுதல் ஆதாரங்களும் உள்ளன. பத்துப்பாட்டைச் சேர்ந்த மலைபடுகடாம் என்ற மற்றொரு நூலில் “தலைநாள் பூத்த பொன்இணர் வேங்கை” என்ற வரி (305) வருகிறது. தலைநாள் என்றால் ஆண்டின் தொடக்க நாள் என்று பொருள்.

பொன் போன்ற நிறத்தில் கொத்துக் கொத்தாகப் பூக்கும் இயல்பைக் கொண்ட வேங்கைப் பூ, சித்திரையில்தான் பூக்கும். ஆகையால்தான் ஆண்டின் தொடக்கத்தில் பூத்தது என்பதைக் குறிக்க “தலைநாள் பூத்த” என்று மலைபடுகடாம் ஆசிரியர் பெருங்கௌசிகனார் கூறியுள்ளார்.

இதேபோல், புலவர் நத்தத்தனார் பாடியுள்ள சிறுபாணாற்றுப்படை என்ற நூலிலும் சித்திரை முதல் தேதி தலைநாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்” என்பது அந்தப் பாடல் வரி (147). இளவேனிற்காலம் தொடங்குகின்ற சித்திரை முதல் நாளில் பூத்துள்ள செருந்திப் பூ (நெட்டுக்கோரைப்பூ), தன்னைக் கண்டாரைப் பொன்னோ என்று வியக்கவைக்கிறது என்று இதற்குப் பொருள்.

இதேபோல் சித்திரையில் பொன்போலும் பூக்கள் பூக்கத் தொடங்குவதை வால்மீகி மகரிஷி எழுதியுள்ள ராமாயணமும் தெரிவிக்கிறது. “சைத்ர: ஸ்ரீமான் அயம் மாஸ: புண்ய: புஷ்பிதகானன:” என்பன அவ்வரிகள். “சித்திரை மாதம் ஸ்ரீ எனப்படும் வளமையோடு கூடியிருக்கிறது. இதேபோல் மகாவிஷ்ணுவும் ஸ்ரீ எனப்படும் திருமகளோடு கூடியிருக்கிறார்.

மாதங்களில் ஆதி மாதம், சித்திரை. தேவர்களில் ஆதிமூலர், மகாவிஷ்ணு. சித்திரை மாதத்தில் தொடங்கப்படும் செயல்கள் நற்பலன்களைத் தருவதைப்போல், திருமாலும் புண்ணியமாகிய நற்பலனைத் தருகிறார். சித்திரை மாதத்தில் செடிகளின் உச்சியில் பூக்கள் பூத்திருப்பது செடிகளுக்கு மகுடம் வைத்தாற்போல் இருக்கும். திருமாலும் பூக்கள் நிறைந்த மகுடத்தைச் சூடியுள்ளார்” என்று வால்மீகி சிலேடையாகக் கூறியுள்ளார்.

இவ்விதம் பூக்கள் பூக்கத் தொடங்கும் இளவேனில் காலத்தைத்தான் வசந்தகாலம் என்று நம் முன்னோர்கள் வரவேற்றனர். இவ்வகையில் வசந்த காலத் தொடக்கமாகிய சித்திரையில் புத்தாண்டும் மலர்கிறது. இந்தச் சித்திரைப் புத்தாண்டு, தமிழர்களுக்கு மாத்திரம் உரியது அல்ல, நாட்டின் பெரும்பாலான பகுதியினருக்கும் சித்திரை முதல் நாளே புத்தாண்டு. ஆயினும் சூரிய நாட்காட்டி, சந்திர நாட்காட்டி ஆகிய இருவேறுபட்ட நாட்காட்டிகளின் அடிப்படையில் புத்தாண்டு பிறக்கும் தினம் மாறுபடுகிறது.

சூரிய நாட்காட்டியைப் பின்பற்றும் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில், சித்திரை மாதத்தின் முதல் நாளன்று, பெரும்பாலும் ஆங்கில மாதம் ஏப்ரல் 14ஆம் தேதி, புத்தாண்டு பிறக்கிறது. தமிழர்களால் “புத்தாண்டு” கொண்டாடப்படும் இதே தேதியில் கேரளத்தில் சித்திரை விஷு என்ற பெயரில் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது.

மேலும், பஞ்சாப், ஹரியாணாவில் பைசாகி என்ற பெயரிலும், ஜம்மு, ஹிமாசலப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் மேஷ சங்கராந்தி என்ற பெயரிலும், கர்நாடக மாநிலத்தில் துளு பேசும் பகுதிகளில் பிஷு பர்ப என்ற பெயரிலும், பிகாரில் மைதிலி மொழி பேசும் பகுதிகளில் ஜுயிர் சீத்தல் என்றும், ஒடிஷாவில் பனா சங்கராந்தி என்றும், வங்காளத்தில் பெஹ்லா பைசாக் என்றும், அஸ்ஸாமில் போஹாக் பிஹு என்ற பெயரிலும் இதே நாளன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

சந்திர நாட்காட்டியைப் பின்பற்றும் மாநிலங்களில், நமது தமிழ் மாதத்தின் பங்குனியின்போதே சித்திரைக்கு நிகரான சைத்ர மாதம் தொடங்கிவிடுகிறது. அதற்கேற்ப அப்பகுதிகளில் புத்தாண்டு தினம் மாறுபடுகிறது. இவற்றில் ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உகாதி என்ற பெயரிலும், கர்நாடக மாநிலத்தில் யுகாதி என்றும், மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களில் குடி படுவா என்றும், உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகள், மத்தியப்பிரதேசம், பிகார், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சைத்ர நவ்வர்ஷ் என்றும், ஜார்க்கண்டில் சர்ஹுல் என்றும், காஷ்மீரில் நவ்ரே என்றும், சிந்தி மொழி பேசுபவர்களால் சேத்தி சந்த் என்ற பெயரிலும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது.

ஆண்டின் தொடக்கமான சித்திரை மாதத்தை மிகவும் தெய்வீகமானதாகப் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. சித்திரை மாதம் முதல் நாளன்றுதான் பிரும்மா இந்த உலகைப் படைத்தாராம். இதேபோல் சித்திரை மாதம் முதல் நாளன்றுதான் அகத்திய முனிவருக்கு சிவபெருமான், ரிஷப வாகனத்தில் வீற்றிருந்தபடி உமையம்மை உடனான தமது திருமணக் காட்சியைக் காண்பித்து அருளினாராம்.

உயிரினங்கள் செய்யும் நன்மை, தீமைகளைக் கணக்கெடுக்கும் சித்திரகுப்தனை சித்திரை மாதம் சித்திரை நட்சத்திர தினத்தன்றுதான் சிவபெருமான் தோற்றுவித்தாராம். சித்திரை மாதம் சுக்லபட்ச அஷ்டமி திதியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது.

சித்திரை மாதத்தில் வரும் அட்சய திருதியை, பொன் உள்ளிட்ட பொருட்களை வாங்கவும், தானம் வழங்கவும், பிற நற்செயல்களைப் புரியவும் உகந்த நாளாக மதிக்கப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு தொன்மை வாய்ந்த ஆலயங்களில் சித்திரை மாதத்தில்தான் பிரும்மோத்ஸவம் நடைபெறுகிறது. இத்தனைத் தெய்வீகச் சிறப்புகள் வாய்ந்திருப்பதால்தான் சித்திரை முதல் நாள் புத்தாண்டு தினத்தன்று, கோவில்களில் புத்தாண்டுப் பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது.

வசந்தகாலத்தில் பகலிரவுச் சமநாளை ஒட்டித் தொடங்குவது அல்லவா சித்திரைப் புத்தாண்டு! அதற்கேற்ப வாழ்வில் எது நடந்தாலும் சமநிலையில் அதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தத்தான் புத்தாண்டு தினத்தில் அறுசுவையும் கொண்ட பச்சடி பரிமாறப்படுகிறது.

இனிப்புக்கு வெல்லம், கசப்புக்கு வேப்பம்பூ, காரத்துக்கு மிளகாய்வற்றல், உவர்ப்புக்கு உப்பு, புளிப்பு மற்றும் துவர்ப்புக்கு மாங்காய் என அறுசுவையும் கலந்து இருக்கும் பச்சடியைச் சுவைப்பதுபோல் வாழ்க்கையின் அனைத்து அனுபவங்களையும் சமநிலையில் நுகர்வோம். அதே நேரத்தில், சூரிய ஒளி மிகுந்திருக்கும் இளவேனிலில் புத்தாண்டு தொடங்குவதை மனத்தில் நிறுத்தி, இறை நம்பிக்கை ஒளியோடு இனிய செயல்களை ஆற்றுவோம்!