Home Blog Page 103

குரு பெயர்ச்சி பலன்கள் (2025-26): மேஷம்

gurupeyarchi image common - 2026

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026

இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025  நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது


குரு பெயர்ச்சி பலன்கள் – 2025

மேஷம்

இதுவரை உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் இருந்த குரு இனி முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தையும், பாக்கியஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்வை இடுவது மிக சிறப்பு.

தனஸ்தானத்தில் இதுவரை இருந்து பல்வேறு நன்மைகளை செய்து வந்த குரு பகவான் திருமண தடைகளால் தள்ளி போன காரியங்கள் சிறப்பாக அமையும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். எடுத்த சில காரிங்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். கூட்டு தொழிலின் மூலம் சிறப்பான நற்பலன்களை பெறுவீர்கள்.

உங்களின் பாக்கியஸ்தானாதிபதி வீட்டை அவரே பார்வை இடுவதால் பல்வேறு காரணங்களால் தள்ளிபோய் கொண்டிருந்த காரியம் செயல்பட துவங்கும். குழந்தை பாக்கியம், குல தெய்வத்தின் வழிபாடுகள், தீர்த்த யாத்திரை சென்று வருதல் வீட்டில் சுபகாரிய நிகழ்வுகள் சிறப்பாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கொண்டு சிறப்பாக செயல்படுவீர்கள்.

உங்களின் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். லாபஸ்தானத்தில் சனி ராகுவை பார்ப்பதால் செய்யும் தொழில் பலவழிகளில் பொருளாதார வளர்ச்சி உண்டாகும். 11-05-2025 முதல் குரு உங்களுக்கு நற்பலன்களை தருவார். 06-06-2025 முதல் 06-07-2025 வரை அஸ்தங்கம் ஆவதால் தங்கத்தை பத்திரமாக வைத்து கொள்வது நல்லது. 08-10-2025 முதல் குரு அதிசாரமாக கடகத்திற்கு செல்வதால் அதுவரை நன்மை உண்டாகும். சிலருக்கு இழத்த சொத்துகளை மீட்கவும், எதிர்ப்புகளை குறைத்து சுமூகமான சூழ்நிலையும் உருவாகும். தொடர்ந்து இறை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் பார்வை பலன்கள்: 

குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டை சர்ச்சைகள் வந்துபோனாலும் சந்தோஷத்துக்குக் குறைவிருக்காது. மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். விஐபிகள் அறிமுகமாவார்கள். குருபகவான் 9-ம் இடத்தைப் பார்ப்பதால், பூர்வீகச் சொத்துகள் சேரும். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகள் விலகும். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். குருபகவான் லாபஸ்தானமாகிய 11-ம் இடத்தைப் பார்ப்பதால், சகல வகையிலும் லாபம் உண்டு. காரியத் தடைகள் விலகும். சொத்துப் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும் 

பரிகாரங்கள்:

வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்திக்கு நெய் தீபமிட்டு மஞ்சள் நிற வஸ்திரம் இட்டு உங்களின் வேண்டுதலை சொல்லி வர பல வழிகளில் நன்மைகள் உண்டாகும்.

ஹரிஜனங்களின் உயர்வைக் காணத் துடித்த ‘ஐயர்’!

madurai vaidhyanatha iyer - 2026
  • ராம்குமார். வி

‘மதுரை வைத்தியநாத ஐயர்’ – இந்த பெயரை எங்கோ கேள்விப்பட்டது போல் இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். இல்லை என்றால் மேலே படிக்கவும்.

தமிழ் நாட்டில் தாழ்த்தப் பட்டோருக்காக பாடுபட்டவர்கள் தாங்கள் தான் என உரிமை கொண்டாடி அதனை அரசியல் ஆதாயத்திற்காக உபயோகப்படுத்திக்கொள்ளும் பலர் நிஜ தியாகிகளை சமூகத்திற்காக பாடுபட்டவர்களை திட்டமிட்டு மறைத்து விடுவர். சமூகத்தில் நடக்கும் இது போன்ற வெற்றுக் கூச்சல்கள் மதுரை வைத்யநாத ஐயர் போன்றவர்களை மறக்கடிக்கச் செய்துவிடும். அத்தகைய ஒருவரை பற்றி பார்ப்போம்.

தமிழ்நாட்டின் மறக்கப்பட்ட அல்லது மறக்கடிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகி இவர். ஹரிஜனங்களின் தந்தை என்று அழைக்கப்பட்டவர். தியாகி ‘கக்கன்’ இவருடைய சீடர். 1935 முதல் 1955 வரை தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தலைவர். இவர் வாழ்க்கையில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்.

மதுரை ஆலயப்பிரவேசம்:

1939 ஜூலை 8 ஐ தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஹரிஜன ஆலயப்பிரவேசம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை நடத்திக்காட்டியவர் மதுரை வைத்யனாதய்யர். இன்றைக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்காக வக்காலத்து வாங்கிப் பேசும் பலரும் பிராமணர்களுக்கெதிரான வசைகளையே முன்னிறுத்தி பேசுவார்கள். அதே தாழ்த்தப்பட்டவர்கள் என அழைக்கப்பட்ட மக்களை ஆலங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என போராட்டம் நடத்தி அதற்கு தலைமை தாங்கியவர் இந்த பிராமணர்.

அத்தகைய ஆலய பிரவேச தினத்தன்று தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கச்செயலாளர் எல்.என்.கோபால்சாமி, P.கக்கன், உசிலம்பட்டி V.முத்து, P.R.பூவலிங்கம், V.S.சின்னையா, முருகானந்தம், ஆலம்பட்டி S.S.சண்முக நாடார் மற்றும் பல ஹரிஜன அன்பர்கள் வைத்யனாதய்யருடன் ஆலய பிரவேசம் செய்தனர். மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் திரு R.S.நாயுடு இந்த நிகழ்வுக்குமிகவும் உதவியாக இருந்தார். மேலும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததோடு தன் தோழர்களை அய்யருக்கு துணையாக அனுப்பினார்.

இந்த நிகழ்ச்சி மதுரையில் நடக்கும் போது மதுரை காந்தி என்று அழைக்கப்பட்ட திரு N.M.R.சுப்பராமன் மதுரை நகராட்சி தலைவராக இருந்தார். இவர் ஒரு ஹரிஜனரை அறங்காவலர் குழுவில்நியமிக்கச் செய்தார். தமிழகத்தில் இது ஒரு முன் மாதிரி நடவடிக்கை.

திரு. வைத்தியநாத ஐயர் தமிழகத்தின் முக்கிய சுதந்திர போராட்டங்களான உப்பு சத்தியாகிரகம், கள்ளுக்கடை மறியல் போன்ற முக்கிய போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். அய்யரும் அவர் குடும்பமும் பல முறை தேசத்திற்காக சிறை சென்றுள்ளனர்.

ஈ.வெ.ரா.வை காப்பாற்றிய ஐயர்

‘பாம்பைக் கண்டால் விடு பாப்பானைக் கண்டால் அடி’ என்று துவேஷப் பிரச்சாரம் செய்தும், பிராமணர்களை எதிர்த்தும் அவமதித்தும் பேசிவந்த ராமசாமி நாயக்கர் பிராமணராலேயே காப்பற்றப்பட்ட சம்பவத்தைப் பார்க்கலாம்.

1946 ம் ஆண்டு வைகை வடகரையில் தி.க மாநாடு நடந்தது. தி.க தொண்டர்கள் மீனாட்சி கோயிலுக்கு சென்று கிண்டலும் கேலியும் செய்துள்ளனர். மதுரை மக்கள் தி.க தொண்டர்களை விரட்டி, மாநாட்டுப் பந்தலுக்கு தீ வைத்துள்ளனர். ஷெனாய் நகரில் இருந்த ஈ.வே.ரா வை மக்கள் சூழ்ந்து விட்டனர். போலீஸாரால் தடுக்க முடியவில்லை. இதனைக் கேள்விப்பட்ட வைத்தியநாத ஐயர் அங்கு சென்று மக்களை அமைதிப்படுத்தி ஈ வெ ரா உட்பட அனைவரையும் ஊருக்கு பத்திரமாக அனுப்பினார். ஆக பிராமணரை அடி என்று கூறிய ராமசாமி நாயக்கருக்கு பிராமணரான வைத்தியநாத ஐயர் பாதுகாப்பளித்த சம்பவம் இன்றும் அழியாத வரலாறாக இருக்கிறது. ஆனால் என்ன நடந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என வெட்கமில்லாமல் திரியிம் திராவிடக்காரர்கள் இந்தச் சம்பவங்களை வஞ்சகமாக மறைத்து ராமசாமி நாயக்கருக்கு குருட்டுத்தனமான பக்தர்கள் உருவாக பெரிதும் பாடுபட்டனர்.

மதுரை வைத்தியநாத ஐயர் தான் இறக்கும் வரை (1955) ஹரிஜன சேவா சங்க தலைவராக இருந்தார். ஹரிஜன சேவா சங்கம் இவரை பாராட்டி ஹரிஜனங்களின் தந்தை என்று அழைத்தனர். சுதந்திரப் போராட்ட தியாகியை ஹரிஜனங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பின்னர் வஞ்சகமாக மறக்கடிக்கப்பட்ட இந்த மாமனிதரை நெஞ்சினில் நிறுத்திடுவோம்.

நினைவில் வைத்துப் போற்றுவோம்.

மேலதிக தகவல்களுக்கு

1) ‘விடுதலை போரில் தமிழகம்’ ஸ்டாலின் குணசேகரன் – பாகம் 2
இந்த புத்தகத்தில் இந்த கட்டுரையை இயற்றியவர் தியாகி மாயாண்டி பாரதி. இவர் வைத்யனாதய்யருடன் நெருங்கி பழகியவர்.

2) ‘மதுரை காந்தி’ , நா.மா.ரா.சுப்பராமன் அல்லயன்ஸ் பதிப்பகம். சென்னை.

இப்படிப் பட்ட பல தியாகிகளின் தியாகங்கள் பெரும்பாலும் பேசப்படுவதில்லை. இந்த தியாகங்களை பற்றி வருங்காலத்திற்கு தெரிவிக்க வேண்டியது நம் கடமை.

கு. அண்ணாமலை போஸ்ட்

சுதந்திரப் போராட்ட வீரரும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவருமான, அமரர் மதுரை அ. வைத்தியநாத ஐயர் அவர்கள் பிறந்த தினம் இன்று. தீண்டாமை, சமூக ஏற்றத் தாழ்வு முதலானவற்றை ஒழிக்கப் பாடுபட்டவர். சுதந்திரப் போராட்டத்தில், கதர் ஆடை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், சட்ட மறுப்பு இயக்கம், என அனைத்துப் போராட்டங்களிலும், தாம் மட்டுமல்லாது, தமது குடும்பத்தினரையும் ஈடுபடச் செய்தவர். சுதந்திரப் போராட்டத்துக்காக, தமது வழக்கறிஞர் பணியோடு, தமது சொத்துக்களையும் தியாகம் செய்தவர். ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக, பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு, மக்களின் அன்பைப் பெற்றிருந்த அமரர். வைத்தியநாத ஐயர்

டாஸ்மாக் முறைகேடு: ஈடி அலுவலகத்தில் விசாகனிடம் விசாரணை!

visagan questioned by ed - 2026

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, ஈடி அலுவலகத்தில் விசாகனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 8 மணி நேரத்துக்கு மேலாக அவரது வீட்டில் விசாரணை நடந்த நிலையில் விசாகனை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடி முறைகேடு தொடர்பாக விசாரித்து வருகின்றனர். 

முன்னதாக, சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

டாஸ்மாக் மேலாளர்கள் சங்கீதா மற்றும் ராமதுரை முருகன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சென்னை, சூளைமேடு, கல்யாணபுரத்தில் உள்ள எஸ்.என்.ஜே அலுவலகத்தில அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

டாஸ்மாக் ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு புகாரில் விசாகனை அழைத்துச் சென்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன், அவரது மனைவி ஆகியோரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். காலையில் இருந்து அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் விசாகனை காரில் அழைத்துச் சென்றனர். விசாகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அன்று தடபுடல் கல்யாணம்; இன்று தடாலடி சோதனைகள்!

akash marriage stalin participated - 2026

மு.க.ஸ்டாலின் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது! டாஸ்மாக்கில் நடந்த முறைகேடு தொடர்பாக சென்னையில் உள்ள பல்வேறு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் மே 16 இன்று சோதனை நடத்தி வரும் சூழ்நிலையில், இவர்களுடன் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடக்கிறது.

தனுஷ் நடிக்கும் ‛இட்லி கடை’, சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‛பராசக்தி’, சிம்பு நடிக்கும் 49வது படம் என ஒரேநேரத்தில் மூன்று முக்கிய நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறார் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன். இதுதவிர இதயம் முரளி என்ற படத்தையும் இயக்கி, தயாரிக்கிறார்.

இதயம் முரளி தவிர்த்து மற்ற படங்கள் ஒவ்வொன்றுமே தலா ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாராகிறது. ஒரே நேரத்தில் இத்தனை படங்கள் தயாரிக்க பணம் வந்தது எப்படி என்ற கேள்விகளின் அடிப்படையில் இந்த சோதனை நடப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஆகாஷ் பாஸ்கரன் யார் தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தில் பெண் எடுத்து திருமணம் செய்தவர். மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் வழி பேத்தி தாரணியை திருமணம் செய்தவர்.

கடந்த 2024 நவம்பர் மாதம் நடைபெற்ற திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் தனது மனைவி மகன் மருமகள் என குடும்பத்தோடு பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இதன் முழுமையான விசாரணையில் இன்னும் யார் யார் சிக்குவார்களா, இல்லை இது வெறும் கண் துடைப்பாக ஆகுமா என்பதை வரும் காலம் வெளிப்படுத்தும்.

எனினும் மு.க.ஸ்டாலின் நெருங்கிய உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதனிடையே இந்த சோதனைகளை தொடர்பு படுத்தி, பல்வேறு கேள்விகள் சமூகத் தளங்களில் முன் வைக்கப்பட்டன.

மது தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து டாஸ்மாக் கருவூல கணக்குக்கு காட்டாமல் 4 ஆயிரத்துக்கு அதிகமான டாஸ்மாக் கடைகளுக்கு நேரடியாக அனுப்பி ஆயிரக்கணக்கான கோடி லாபம் பார்த்த பணத்தை திரைப்படங்களில் முதலீடு செய்து இருக்கிறார்களா?

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விக்னேஷ் சிவன் உதவியாளராக இருந்த இந்த ஆகாஷ் பாஸ்கருக்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எப்படி ஆயிரக்கணக்கான கோடி கிடைத்தது? நூற்றுக்கணக்கான கோடி பணம் முதலீட்டில் திரைப்படங்களை தயாரிக்கிறார் என்னும் கேள்வி தமிழ்நாட்டிலுள்ள டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் மத்தியில் இப்போது எழும்பி இருக்கிறது .

விக்னேஷ் சிவனிடம் உதவியாளராக இருந்தவர் திடீரென்று திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரம் கோடி முதலீட்டில் ஒரு திரைப்பட நிறுவனத்தை தொடங்கி பெரிய பெரிய நடிகர்களை வைத்து எப்படி படம் தயாரிக்க முடியும்? சிவகார்த்திகேயன் சிம்பு போன்ற முன்னணி நடிகர்களை வைத்து தற்போது திரைப்படம் தயாரித்துக் கொண்டு வருகிறார்.

யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?

சேலத்தை சேர்ந்த பெரும் தொழில் அதிபர் பாஸ்கரனின் மகன் ஆகாஷ். தற்போது திரைப்பட தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். ஆகாஷ்க்கு அண்மையில் கெவின்கேர் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகள் தாரணியுடன் திருமணம் நடைபெற்றது. கெவின்கேர் ரங்கநாதனின் மகளுடன் திருமணம் நிச்சயமான பிறகே ஆகாஷ் தயாரிப்பாளராக உருவெடுத்ததாக தகவல் வெளியானது.

கெவின்கேர் ரங்கநாதன் மகளை திருமணம் செய்த பிறகு அடுத்தடுத்து திரைப்படங்களுக்கு பூஜை போட்டுள்ளார் ஆகாஷ். இட்லி கடை திரைப்படம் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நிலையில் அந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் ஆகாஷ்.

சுதா கொங்காராவின் பராசக்தி படத்தை பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் ரூ.200 கோடி பட்ஜெட்டில் ஆகாஷ் தயாரிக்கிறார். பிரபல அரசியல் கட்சிகளின் தலைவர்களின் வாரிசுகளுடன் ஆகாஷ் பாஸ்கருக்கு நல்ல நட்பு உள்ளராம்.

ஆகாஷ் பாஸ்கரன் திருமண விழாவில் முக்கிய அரசியல் தலைவர்கள், முன்னணி ஹீரோக்கள், ஹீரோயின்கள் கலந்து கொண்டனர் ஆகாஷ் பாஸ்கர் – தாரிணி திருமண நிகழ்வில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்நிலையில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

இதனிடையே, அதிமுக., ஐ டி விங் வெளியிட்ட பதிவில், @AIADMKITWINGOFL டாஸ்மாக் வழக்கில் ED-யின் தொடர் ரெய்டுகள்: வசமாய் சிக்கும் முதல் குடும்பம்? உதயநிதியின் நெருங்கிய நண்பரான ரத்தீஷ் வீட்டிலும், உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர் அமைச்சர் அன்பில் மகேஷின் உறவினர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் இன்று நடைபெற்று வரும் @dir_ed ரெய்டு! TASMAC ஊழல்- பத்து ரூபாய் பாலாஜி- ரத்தீஷ்- ஆகாஷ் பாஸ்கரன்- அன்பில் மகேஷ்- உதயநிதி- Connect The Dots! – என்று குறிப்பிட்டிருந்தது.

சுதந்திர பலூசிஸ்தான் ‘எக்ஸ்’ பதிவுகள் எல்லாம் போலியாம்!

balochistan army issues - 2026

பலூச்சிஸ்தான் தேசிய இயக்கத்தின் (Baloch National Movement) தலைவர் நியாஸ் பலூச் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “பலூச்சிஸ்தான் சுதந்திரம் அடைந்து விட்டதாக சில விஷமிகள் இட்ட பதிவை ஊடகங்களும் நம்பி அதை செய்தியாக்குகின்றன. அது உண்மையில்லை. பலூச் விடுதலை பற்றி எங்களைப் போன்ற அமைப்புகள் வெளியிடும் வரை பொறுத்திருக்கவும். அந்த விஷமிகள் எதிர்களால் (பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ) குழப்பம் உருவாக்க ஏற்படுத்தப் பட்டவர்கள்! – என்று சொல்லியிருக்கிறார்.

அவரது முழுமையான பதிவு:

கடந்த சில நாட்களாக, மே 14 அன்று பலூசிஸ்தான் சுதந்திரம் அடைந்ததாக தவறான கூற்றுகளைப் பரப்பும் அதே அறியப்படாத மற்றும் சரிபார்க்கப்படாத கணக்குகளை நாங்கள் கண்டிருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, சில சர்வதேச ஊடகங்கள் இந்த ட்வீட்கள் உண்மையா என்பதை சரிபார்க்காமல் பகிர்ந்துள்ளன.

தெளிவாகச் சொல்லப் போனால், பலூச் சுதந்திர இயக்கத்தை பலூச் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் வழிநடத்துகின்றன. இதுபோன்ற எந்தவொரு அறிவிப்பும் பலூச் தலைமையிடமிருந்து வர வேண்டும்.

இந்த வகையான வதந்திகளும் போலிச் செய்திகளும் நமது நோக்கத்திற்கு உதவாது, அவை அதற்கு தீங்கு விளைவிக்கும். இது நல்ல நோக்கத்துடன் நண்பர்களால் செய்யப்படுகிறது என்றால், தயவுசெய்து நிறுத்துங்கள். இது எதிரிகளால் செய்யப்படுகிறது என்றால், அது பலூச் சுதந்திரப் போராட்டத்தை சேதப்படுத்தும் முயற்சியை மட்டுமே காட்டுகிறது.

இந்த போலி கணக்குகள் உடனடியாகப் புகாரளிக்கப்பட்டு பின்தொடரப்படாமல் இருக்க வேண்டும். தயவுசெய்து விழிப்புடனும் பொறுப்புடனும் இருங்கள். – என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக, பலூசிஸ்தான் தனது விடுதலையை அறிவித்து விட்டதாக இரு தினங்களுக்கு முன் சமூகத் தளங்களில் செய்திகள் பரவின. அதை எண்ணி இந்தியாவிலும் பலரும் செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர். அவற்றில் இந்தியாவின் உதவியைக் கோரும் வகையில் அவற்றின் செய்திகள் இருந்தன. குறிப்பாக, இந்தியா பாகிஸ்தானை கிழக்குப் பக்கம் இருந்து தாக்கினால், தாங்கள் மேற்குப் பக்கம் இருந்து தாக்குவோம் என்றும், இந்தியா தனது நாட்டில் ஒரு தூதரகத்தைத் திறக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சமூகத் தளங்களில் ஒரு கடிதமும் பரவியது. ஆனால் அவை போலியாக பாகிஸ்தானால் உருவாக்கப் பட்டவை என்று பலூச் தலைவர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பலூசிஸ்தான் தனிநாடு விவகாரம் அத்தனை எளிதல்ல. நேரடியாகவே அதில் பல பிரச்சினைகள் உள்ளன என்பதால் இது குறித்து சிந்தித்து சமூகத் தளங்களில் பதிவுகள் செய்யுமாறு சிலர் அறிவுறுத்துகின்றனர்.

  1. இந்தியாவின் முக்கிய வெளியுறவுத் துறை கொள்கை என்பது அயல்நாட்டு உள்விவகாரங்களில் தலையிட மாட்டாம் என்பது ( வெளிப்படையாக )
  2. கிழக்கு வங்க பிரச்சினையில் நேரடி ஆக்ஷன் எடுத்ததன் காரணம் விவகாரம் முற்றி அகதிகள் மிக அதிக அளவில் இந்தியாவிற்கு புகுந்தது ( இன்று‌வரை அது‌ பெரிய தலைவலி)
  3. தெரிந்தோ தெரியாமலோ இலங்கை விவகாரத்தில் எடுத்த பின்பு மாற்றிக் கொண்ட முடிவுகள். அதற்கு நாம் கொடுத்த விலை முன்னாள் பிரதமரின் உயிர் (அவரை பலருக்கும் பிடிக்காது என்றாலும் )
  4. சீனா பலூசிஸ்தானில் செய்துள்ள முதலீடுகள். பாகிஸ்தானில் அவர்கள் செய்துள்ள 65 பில்லியன் டாலர்கள் (2022 வரை ). அதில் பெரும்பான்மையான முதலீடு பலூசிஸ்தான் பகுதியில்தான். எனவே சீனா அது தனி நாடாவதை எதிர்க்கும்
  5. அங்கு கனிம வளங்களை கணிசமாக உள்ளன. அமெரிக்காவிற்கு தேவையான கனிமங்கள் அங்கிருந்தால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் பச்சைக் கொடி ( நடக்கலாம் ) காட்டினால் அமெரிக்காவும் பலூசிஸ்தான் தனி நாடாவதை எதிர்க்கும்.
  6. திபெத் தனி நாடாக இருந்தது. அதை சீனா ஆக்ரமித்ததால் இந்தியாவில் அதன் தலைமறைவு அரசு செயல்பட இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளது. பலூசிஸ்தான் விவகாரம் அப்படி அல்ல.
  7. அதே போல் அவர்களும் அதே ‘அமைதி’ மார்க்கத்தவர்களே. அவர்களை நம்புவதும் கடினம். தனி நாடாகப் பிரிந்த பின் அவர்களது திட்டம் / செயல்பாடுகள் என்ன என்பது தெளிவாக இல்லை. அவை இல்லையெனில் உள்நாட்டுப் போரால் சீரழியும் மற்றுமொரு நாடாக மாறி விடும் அபாயமும் உண்டு.
  8. நமக்கு அவர்களுடன் நேரடி எல்லை இல்லை. ஈரானுடன்தான் அவர்களின் எல்லை உள்ளது. அவர்களுடனும் சண்டை நடக்கிறது அவ்வப்பொழுது.

எனவே அவசரப்படுவதில் எந்த நன்மையும் இல்லை.

அந்த நான்கு நாட்கள் : ஆபரேஷன் சிந்தூரின் ஆச்சரியமான விளைவுகள்!

terrorist camps hitted by indian army - 2026

ஆபரேஷன் சிந்தூர் – OS

  • பிரகாஷ் ராமசாமி

இந்தியா இன்னமும், OS ஐ முடிக்கவில்லை. இதை போர் நிறுத்தம் என்று பலரும் சொன்னாலும், இது ஒரு தாற்காலிகமான அமைதி. இந்த இடைவெளியை பாகிஸ்தான் வெற்றியாக கொண்டாடுகிறது. அமெரிக்காவின் அதிபர், இந்த அமைதிக்கு காரணம் நான்தான் என்று அவரின் பெர்மார்மன்ஸ் அப்ரைசலில் மார்க் போட்டுக்கொண்டார்.

முதலில், ட்ரம்ப், இந்தியாவிற்கு இரண்டுதவறுகள் செய்து விட்டதை,  இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் கடுப்புடனே பார்க்கின்றனர். ட்ரம்பால் மட்டுமே ஒரு நண்பனை, இப்படி காயப்படுத்திவிட முடியும். இப்படியான முட்டாள்தனத்தை, ஜெலன்ஸ்கி கூட செய்யவில்லை. தான் சொல்லித்தான் போர் நிறுத்தம் நடந்தது என்று, இந்திய தரப்பில் எந்தவித அறிவிப்பும் வெளியாகாதபோது, முந்திரி கொட்டை போல உளறியது, அமெரிக்க உறவில் விரிசல் ஏற்படுத்தி விட்டது.

அமெரிக்க ஜனாதிபதி செய்த முதல் தவறு, இந்திய பாக் நாடுகளுக்கிடையில், காஷ்மீர் பிரச்சினைக்கான தீர்வுக்கு உதவுகிறேன் என்கிற சிவப்பு விளக்கை முதலில் கடந்தார். பிஓகே என்பது இந்தியாவின் ஒரு பகுதி, பாக் அதை ஆட்டையைப்போட்டிருப்பது தாற்காலிகம்தான். அதனால், இதை எந்த ராஜா வந்தாலும், இந்தியா பாக் தாண்டி எவருக்கும் இதில் இடமேயில்லை, என்று பின்னர் மோதி பேசும்போது குறிப்பிட்டது, முக்கியமானது.

அடுத்த சிவப்பு சிக்னல்… இந்த போர் நிறுத்தத்தை, இரு நாடுகளும் ஒத்துக்கொண்டால், நிறைய அமெரிக்க வர்த்தகம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்றதில், இந்தியா மரண காண்டானது. வர்த்தகம் என்பதை, ஒரு ஓரமாய் வையுங்கள். இந்தியா பாக் இரண்டையும் ஒரே தட்டில் வைத்து பேசியதை இந்தியா சுத்தமாய் ரசிக்கவில்லை. இந்திய அமெரிக்க உறவுக்கு அமோகமாய் கொள்ளிவைத்த ட்ரம்பு காரணம், பச்சை பூமர்கள், பிதுக்கப்பட்ட கோஷ்டிகள், தீவுக்கார பாய்கள் என்று பலரும் இந்தியா, ஒரு அமெரிக்க அடிமை என்று, ஒரு எழவும் புரியாமல், மீம்ஸூம், போஸ்ட்டும் போட்டு தன் அறியாமையை, திறம்பட வெளிச்சம் போட்டு காட்டி விட்டதில், தலையில் அடித்துக்கொள்ளத்தான் தோன்றுகிறது.

ஒரு போரை முடிவுக்கு கொண்டு வருவது என்பது, போர் தொடுத்த இருநாடுகளின் கையில்தான் இருக்கிறது. ஆனால், இரு நாடுகளும், உக்கிரமாக போர் புரிந்தால், அது காலத்துக்கும் முடியாது. இதற்கு உதாரணமாய், ஈரான்-ஈராக் சண்டை, தற்போது உக்ரைன்- ரஷ்யா சண்டை. ஏன், ஹமாஸுடனான போர் கூட இன்று வரை ஒரு முடிவுக்கு வரவில்லை.

இந்த சாதுர்யம், இந்திய ராணுவத்துக்கு இருக்கிறது. இது புதிய பாரதம். 90000 பாக் ராணுவ ஆசாமிகளை தந்துவிட்டு, நம் பைலட்டுகளை திருப்பி வாங்காத இந்தியா அல்ல. இது பாகிஸ்தானுக்கு புதுசு. அத்தனை  ராணுவ தளவாடங்களில், ரஷ்ய, அமெரிக்க, இஸ்ரேலிய தளவாடங்கள் இருந்தாலுமே கூட, இந்திய தயாரிப்புகள், மோதி ஆட்சிக்குப்பிறகு அதிகமாகி விட்டது. அது போரில் நிருபணப்படுத்தவில்லை. பாகிஸ்தான் தயவால், இன்று அதுவும் மங்களகரமாய் நிறைவேறிவிட்டது.

BEL, HAL,SOLAR,ZENTECH, BDL,PARAS, Mazagaon, Cochin Shipyards, Bharath Forge, Mahindra Defence, Tata Advanced Systems, Astra Microwave, Brahmose Aerospace, Kalyani Group, Sika மற்றும் அடானி கம்பெனிகள் பெரிய அளவில் நிறைய ராணுவ தளவாடங்கள், துப்பாக்கிகள், ட்ரோன்கள், லேசர்கன்கள், ஏவுகணைகள், ஷூ முதல், யூனிஃபார்ம் வரை இந்திய தயாரிப்புகளின் தரம் உயர்ந்து விட்டது.

மே-7

பெஹல்காமால் கோபமடைந்த இந்தியா.. மே -7 அன்று, 9 தீவிரவாத கேம்புகளை தாக்கியது. மதரஸா வீரர்கள் மண்ணைக்கவ்வ, பதற்றம் தொற்றிக்கொண்டது. 90 இந்திய விமானங்கள் இந்திய எல்லைக்குள், பறந்தது.. ஆனால், BVR, Beyond Visual Rangeஇல், ரஃபேலின் ஸ்கால்ப், AASM ஹாமர் மிஸ்ஸைல்கள், ப்ரஹமோஸ் மிஸைல்கள் பறந்து அழித்தன. பாகிஸ்தானின் ஆர்மி, இறந்த தீவிரவாதிகளின் இறுதிச்சடங்கில் பங்கேற்றபோது, இந்தியா எடுத்த முடிவு, பாக் ஆர்மியும், தீவிரவாதிகளும் ஒன்றுதான். உடுப்புதான் வித்தியாசம் என்று முடிவெடுத்தது.

மே-8

போரின் இரண்டாவது கட்டமாக, இந்தியா, பாகிஸ்தானின் வான்வெளி தடுப்பு சிஸ்டங்களை குறிபார்த்து வீழ்த்தியது. லாகூரில் இவை சின்னாபின்னமானது. சீன தயாரிப்பான HQ-16 பேட்டரிகள், பாக் முழுவதும் இருந்த ரடார் சிஸ்டங்கள், துடைத்து எறியப்பட்டது. இரவு முழுவதும், சைரன் அலற, நெருப்பு சில இடங்களில் எறிந்து கொண்டிருந்தது. பாக், வான்வெளி, எந்தவித தடுப்புமில்லாமல் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தது. 

மே-9

பாகிஸ்தானின் 11 ஏர்பேஸ்கள் இந்தியாவால் அடித்து நொறுக்கப்பட்டது. கிழக்கிலிருந்து, தெற்குவரை, இந்தியா வீசிய ப்ரம்ஹோஸ், ஹாமர், காமிகஸி ட்ரோன்களை பாகிஸ்தான் ஆர்மி, மக்களோடு மக்களாய் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. ராவல்பிண்டியில்தான் ராணுவு ஹெச் க்யூ இருக்கிறது. நூர்கான் உடைத்ததில் மரண அதிர்ச்சி. இதுவரை எவரும் இஸ்லாமாபாத்தை தொடவில்லை. இம்முறை அதற்கு அருகில் இருந்த, இந்த பேஸை அடித்ததில் பேஸ் அடித்து போனது பாகிஸ்தான்.

எதையுமே தடுக்க முடியாத பாகிஸ்தான் கடுப்பாகி, தன்னிடம் இருந்த ஆறு பாலியஸ்டிக் மிஸ்ஸைல்களை இந்தியா நோக்கி அனுப்பியது. இதில், தில்லியை நோக்கி வந்ததை ஹரியானா சிர்ஸாவில் வைத்து தடுத்து அடித்தது S-400. மற்ற அனைத்து மிஸைல்களையும் S-400 தடுத்து விட்டதில் எதை தின்னால் பித்தம் தெளியும் என்று, பாக் ஜெனரல்கள் மசிரை பிய்த்துக்கொண்டனர்.

மே-10

இதற்கு நடுவில், துருக்கி இரண்டு சரக்கு விமானங்களில் ட்ரோன்களை இறக்கிவிட்டு, அதை இயக்கவும் ஆட்களை தந்துவிட்டு போனது. அதாவது, நேரடியாகவே இது போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுவிட்டது. அத்தனை ட்ரோன்களையும் இந்தியாவின் கண்ணுக்கு தெரியாத ஒரு இரும்பு கவசம் காப்பாற்றியது. BEL இன், laser drone detection and interdiction systems. இதை, முப்படைகளிலும் கொண்டு சேர்த்தாகிவிட்டது. 11 வருடமாக இதை இந்த அரசாங்கம் பாடுபட்டு உருவாக்கியது மிகவும் பெருமையான விஷயம். இதில் பல எலக்ட்ரானிக் சங்கதிகள் உண்டு, அதாவது, பல அடுக்குகளில் ட்ரோனை கண்டுபிடித்து அழிப்பது. அதாவது, ரேடியோ, ரேடார் ஃப்ரிக்வன்ஸியை கண்டுபிடித்து அழிப்பது. மின் மற்றும் ஒளியியலை வைத்து கண்காணிப்பு, GPS spoofing அதவது  ட்ரோனை ஏமாற்றுதல்,லேசர் கன்களை வைத்து soft அல்லது hard Kill களை முப்படைகளும் சாத்திவிட்டது. ஸ்வார்ம் ட்ரோன்கள் எனப்படும் கூட்டமாய் வரும் ட்ரோன்களை, லேசர்களையும், L-70துப்பாக்கிகள், Zu-23 mm துப்பாக்கிகள், மிஸைல்களுக்கு S-400 என்று அடித்து பின்னி விட்டார்கள். இந்த L-70 எல்லாம் அறுத பழசு, ஆனால் இதை மேம்படுத்தி ஒன்று விடாமல் அடித்தது அழித்தது வரலாறு.

இந்தியா சர்கோதா ஏர்பேஸை அடித்தது. இங்கு தான் அணுஆயுத கமேண்ட் சென்டர் இருக்கிறது. இதில், முற்றிலும் பயந்துபோன பாகிஸ்தான் வாலறுந்த நரியாக அமெரிக்காவிடம் சரண்டைந்து.. பின் அமைதி.. இன்று பெஹல்காம், புல்வாமா தீவிரவாதிகளை காஷ்மீரில் போட்டாகிவிட்டது.

ஆப்பிள் முதல், அண்டர்வேர்வரை துருக்கியிடம் எதுவும் வேண்டாம் என்று சொல்லியாகிவிட்டது. நிறைய டூரிஸ்டுகள் டிக்கெட் கேன்ஸல் செய்ய, அஸர்பெய்ஜானும் பரவால்ல வராட்டி போங்க என்றது.

சென்னை, மும்பை தில்லி ஏர்போர்ட்டுகளல் துருக்கியின் செலபை ஆசாமிகள் க்ரவுண்ட் வேலைகளை பார்க்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் கல்தா அவசரமாய் தந்தாகிவிட்டது. ட்ரோன் முதல், பிசினஸ் வரை ஏர்டோகன் இழந்தது அந்த நாட்டுக்கு தேவைதான்.

ஜெய் ஹிந்த். 

ஆபரேஷன் சிந்தூருக்காக மூவர்ணக் கொடி யாத்திரை; விளக்கிய நயினார் நாகேந்திரன்!

nainar nagendran in madurai meet - 2026

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி விடுதியில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.

செய்தியாளர்களை சந்தித்தபோது, நாட்டில் முதன்மையான பிரச்சனை தேசிய உணர்வு. நமது நாட்டின் பாதுகாப்பிற்காக போராடிய ராணுவ வீரர்களை கௌரவப்படுத்தும் விதமாகவும் பிரதமரை பாராட்டும் விதமாக மூவர்ணக் கூடிய யாத்திரை தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது .

நேற்று திருச்சியிலும் நாளை மதுரையிலும் இன்று திருப்பூர் ஆகிய பகுதிகளில் மூவர்ணக் கொடி யாத்திரை நடைபெறுகிறது. மேலும் சட்டமன்றத் தொகுதி வாரியாக மூவர்ண கொடி யாத்திரையும் நன்றி தெரிவிக்கும் கூட்டமும் நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி படமும் தேசியக்கொடி மட்டுமே பங்குபெறும்.

இன்று மதுரை மேற்கு . கிழக்கு சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து டாஸ்மார்க் அலுவலர்கள் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்ட செய்து தொடர்வது, குறித்த கேள்விக்கு, ஈடி என்பது ஒரு தனிப்பட்ட அமைப்பு அதில் தேவை இல்லாமல் ரெய்டுகள் நடைபெறாது. புகார்கள் ஏதேனும் இருப்பின், அதனைத் தொடர்ந்து ரைடு குறித்த ஆலோசனைகள் நடைபெறும்.

குறிப்பாக , தமிழக அமைச்சர்களின் வீடுகளில் வீடு குறித்த கேள்விக்கு,
இதுபற்றி எனக்கு முழுமையாக தெரியாது எதனால் அந்த ரெய்டு நடைபெறுகிறது என, தெரிந்த பின் பதில் கூறுகிறேன் நீங்கள் சொல்லித்தான் எனக்கே ரெய்டு நடைபெறுகிறது என தெரிகிறது.

த வெக தலைவர் விஜய் பாஜ த கூட்டணியில் பங்கு பெற விருப்பமில்லை எனக் கூறிய கருத்து குறித்து அது அவருடைய சொந்த விருப்பம். தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சியை அகற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதுவே எனது விருப்பமும். நாட்டு மக்கள் நலன் கருதி அந்தந்த கட்சி தலைவர்முடிவு எடுக்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது தேர்தலுக்கு பேச்சுவார்த்தை நடக்க வேண்டும். ரொம்பவும் அவசரமாக இருக்கிறீர்கள் பொறுமையாக இருங்கள்தேர்தல் கூட்டணி குறித்து உங்களுக்கு சொல்கிறேன்.

தமிழக முழுதும் 2031ல் திமுக தான் ஆட்சி அமைக்கும் என முதல்வர் கூறுவது குறித்து?

கருத்துக்கள் சொல்வதற்கு அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது அதை தீர்மானிக்கக் கூடிய சக்தி மக்களிடம் உள்ளது. கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியும் திமுகவும் சமமாக போட்டியிட்டார்கள் யார் முதலமைச்சர் என்பது கேள்வியாக இருந்தது திமுகவா காங்கிரசா என்ற நிலை ஏற்பட்டபோது எம்ஜிஆரும் நாட்டின் முதலமைச்சர் யார் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் கட்சி தீர்மானிக்க கூடாது என முடிவு எடுத்ததன் பேரில் தமிழக மக்கள் முதலமைச்சரை தேர்வு செய்தனர் அவர் சொல்வதை என்னுடைய கருத்தாக நானும் நினைக்ககிறேன்.

அமைச்சர் செல்லூர் ராஜீ குறித்த கேள்விக்கு?

இந்தியாவை பாதுகாக்கிறது ராணுவம் ஒன்று தான் அவர்களை பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பு

பத்தாம் வகுப்பு தேர்வு குறித்த கேள்விக்கு பரீட்சை எழுதி பாஸ் ஆகியுள்ளனர் போதுமானதாக ஆனதா இல்லையா என்பது எவ்வாறு சொல்ல முடியாது அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ளவர்களே உள்ளனர்.

தேசிய கல்வி கொள்கை திட்டத்திற்கு, ஏற்கனவே, தமிழ் ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக ஒன்று எடுக்கலாம் அது மலையாளம் கன்னடம் இன்னொரு மொழி கூட இருக்கலாம் அந்த மொழியின் கலாச்சாரம் பண்பாடு அறிவியல் தெரிந்து கொள்ள முடியும் ஆகையால் மூன்றாவது கல்வியை தேர்ந்தெடுக்க அவசியம் வேண்டும் இன்றைய நாகரீக காலத்தில் செல்போன் பயன்படுத்துகிறோம் செல்போன் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது மூன்று வயது குழந்தை முதல் செல்போன் உபயோகிக்கின்றனர் நாளுக்கு நாள் அறிவியல் வளர்ச்சி எல்லாம் வளர்ந்து கொண்டே உள்ளது அதனால் மாணவர்களுக்கு கல்வித் தரன் உயர்த்துவதற்காக எடுக்கக்கூடிய நிலைப்பாடு எடுத்துக்கொள்ள வேண்டும்

அமித்ஷா சென்னை வருகையின் போது ஓபிஎஸ்ஐ சந்திக்க முடியாதது குறித்த கேள்விக்கு,
அமித்ஷா வந்தது வேறு விஷயம் அந்த அதனால் அன்னைக்கு ஓபிஎஸ்சி சந்திக்க முடியவில்லை ஆனால் இருவருமே கூட்டணியில் உள்ளனர் இபிஎஸ்சும் சரி ஓபிஎஸ்சும் சரி தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் பொதுச் செயலாளர் இபிஎஸ் அவர்களின் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ளது அது குறித்து ஏதும் பேச வேண்டாம் தற்போதுள்ள நிலையில் பொதுச்செயலாளராக இபிஎஸ் உள்ளார் ஆகையால் அதை மட்டுமே பேச முடியும்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் சேர மாட்டோம் என திருமா கூறியது குறித்த கேள்விக்கு திருமா எனது நண்பர் தான். பாஜக உடன் கூட்டணியா அல்லது திமுகவுடன் கூட்டணி தொடர்கிறாரா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட கட்சிகள் ஆளும் கட்சியில் இருந்து ஒரு மீன்தானார் என்ற கேள்விக்கு
தமிழகத்தில் எத்தனை கட்சிகள் உள்ளது திமுக அதிமுக போன்றவை தான் உள்ளது எல்லா கட்சிகளும் சேர்ந்தால் நிச்சயமாக நல்லது தான்.

அதிமுக தொண்டர்கள் ஒற்றுமை வேண்டும் என கூறியுள்ளனர். இல்லாவிட்டால் வரும் தேர்தலில் தோல்வி நிலை ஏற்படும் என கூறியது குறித்து ஒரு கட்சி ஆரம்பிப்பது என்பது வெற்றி பெற தான் தோற்றுப் போக வேண்டும் யாரும் ஆரம்பிப்பதில்லை.

உச்ச நீதிமன்றத்தில் கவர்னர் மீது அளித்த மனு ஜனாதிபதி குறித்த கேள்விக்கு
ஆளுநருக்கு என்று சில அதிகாரங்கள் உள்ளது சட்டப்பிரிவு 200ரை ஆளுநர் தான் பயன்படுத்த முடியும் 201 சட்டப்பிரிவை குடியரசு தலைவர் தான் பயன்படுத்த முடியும்இதில் நீதி மன்றத்திற்கு எந்த நீதி வழங்க வேண்டும் என்று சில நிதி முறைகள் உள்ளது விதிமுறைகள் மீறும் போது யார் என சர்ச்சைகள் போடக்கூடாது நீதிமன்றங்கள் குறித்து நாம் விவாதங்கள் செய்யக்கூடாது. நீதிமன்றமே சட்ட போடும் சூழ்நிலை ஏற்பட்டால் நாளைக்கு அரசியலமைப்பு சட்டங்கள் எவ்வாறு ஏற்ற முடியும்

பாஜக கட்சி குறித்த கேள்விக்கு கட்சி தற்போது வளர்ந்துள்ளது.

தமிழக அரசியலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு இருக்குமா என்ற கேள்விக்கு, முதலில் வெற்றி பெறுவோம் அதன் பின்பு பார்ப்போம் மதுரை நக்கீரருக்கு நீதி கிடைத்த மண் இது கண்டிப்பாக நீதி கிடைக்கும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

மதுரை விழா முடிந்து அழகர்மலை திரும்பிய கள்ளழகர்!

kallalagar return to alagar malai - 2026

கோவிலுக்கு திரும்பிய அழகர்!

திருமாலிருஞ்சோலை என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட அழகர்கோவில் கள்ளழகர் மதுரை சித்திரை திருவிழா முடிந்து மீண்டும் அழகர்கோவிலுக்கு வந்தடைந்தார்.

சித்திரை திருவிழாவின் போது, வைகை ஆற்றில் எழுந்தருள மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர், திருவிழா முடிந்து இன்று காலை மீண்டும் அழகர்கோவில் வந்தடைந்தார். சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 10ஆம் தேதி மாலை தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர்கோயிலில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார்.

11ம் தேதி மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்ற நிலையில், மே 12ல் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. மே 13ல் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். மே 14ல் மோகன அவதாரத்தில் பக்தி உலாவுதல், கள்ளழகருக்கு விடிய விடிய தசாவதாரம் நடைபெற்றது.

மே 15ல் பூப்பல்லத்தில் எழுந்தருளல், இதனை தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கள்ளர் திருக்கோலத்தில் அழகர்மலை நோக்கி புறப்பட்டார்.

இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கடச்சனேந்தல், காதக்கிணறு, சுந்தரராஜன்பட்டி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி, பொய்கைகரைப்பட்டி வழியாக வந்த கள்ளழகர் இன்று காலை 10.30 மணிக்கு மேல் தனது இருப்பிடமான அழகர்கோவில் வந்தடைந்தார்.

கள்ளர் திருக்கோலத்தில் அழகர்கோவிலுக்கு வந்தடைந்த கள்ளழகருக்கு வண்ணமலர்கள் தூவி வரவேற்பு அளிக்கபப்ட்டதோடு, கற்பூரம் ஏற்றி சுவாமியை மூன்று முறை சுற்றி 21 திருஷ்ட்டி பூசணிக்காய் உடைக்கப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து
கொண்டதோடு, வாசல் வரை வந்து நின்று கள்ளழகரை வரவேற்று தரிசனம் செய்தனர்.

நீதிமன்றம் பதில் தர வேண்டியதில்லை என்ற வாதம், அது பதில் தந்துவிடக் கூடாதே என்ற கவலையின் வெளிப்பாடு!

governor and president - 2026

அரசியல் அமைப்பு பற்றிய விளக்கங்களை சுப்ரீம் கோர்ட்டிடம் கேட்கும் அதிகாரத்தை அரசியல் சட்டம் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. அதன்படியே அவர் 14 கேள்விகளைக் கேட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பரிசீலனையில் இருந்த மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டே ஒப்புதல் அளித்ததாலும், அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்படாத காலக்கெடுவை அவருக்கும் கவர்னருக்கும் சுப்ரீம் கோர்ட் நிர்ணயித்ததாலும், இக்கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியைப் பொறுத்த வரை இது உரிமைப்பிரச்னை.

இதற்கு சுப்ரீம் கோர்ட் பதிலளிப்பதற்கு முன்பாகவே தமிழக முதல்வர் பதில் அளித்துள்ளார்.

‘ சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து முடிந்து போன விவகாரத்தில், ஜனாதிபதியின் மூலமாக மத்திய அரசு விளக்கம் கேட்கிறது. இது அரசியல் அமைப்பையே நிலைகுலைய வைக்கும் செயல். இதிலிருந்தே, கவர்னரை மாநில அரசுக்கு எதிராக பாஜக தூண்டுவது தெரிகிறது. மத்திய பாஜக அரசின் தீய எண்ணம் வெளிவந்துள்ளது… ‘என்ற வகையில் அவர் கூறியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வெளியானபோதே, ‘ இது சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் தன் அதிகார வரம்பை மீறியுள்ளதோ என்ற சந்தேகம் உருவாகும் வகையில் உள்ளது. மத்திய அரசு திருத்த மனு போட்டால்தான் தெளிவாகும் என்று எழுதியிருந்தேன்.

மத்திய அரசு திருத்த மனு போடவில்லை. ஜனாதிபதியே விளக்கம் கேட்டுள்ளார்.

எந்த மசோதாவும் ஜனாதிபதி அல்லது கவர்னர் ஒப்புதல் அளித்த பிறகே சட்ட அந்தஸ்தைப் பெறும். சுப்ரீம் கோர்ட்டே அதைச் செய்தது புதிய முறையாக உள்ளது. எனவேதான் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி எப்படி மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்படுகிறாரோ, அப்படி கவர்னர்கள் மாநில அரசின் பிரதிநிதியாக செயல்பட வேண்டும் என்று மாநில அரசுகள் எதிர்பார்க்கின்றன. ஆனால், உண்மையில் கவர்னரும் மத்திய அரசின் பிரதிநிதிதான்.

மாநில அரசு தவறான திசையில் செல்வதாகத் தோன்றினால் அதைத் தடுப்பது அவரது கடமையாகிறது.

மத்திய அரசுக்கு முரண்பாடான மசோதாக்களை மாநில அரசு அனுப்பினால் அவற்றை கவர்னர் எப்படி ஏற்க முடியும்? மாநில அரசிடம் கேட்டுப் பார்ப்பார். முடியாவிட்டால் ஜனாதிபதிக்கு அனுப்பி விடுவார். அவ்வளவுதான் ஒரு கவர்னர் செய்ய முடியும்.

இது புரியாமல், ‘ கவர்னர் ஒரு போஸ்ட்மேன். கையெழுத்து போடுவதுதான் அவருடைய வேலை ‘ என்று மாநில அரசு கூறும்போது சிக்கல் ஏற்படுகிறது.

ஜனாதிபதி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க அரசியல் சட்டப்படி சுப்ரீம் கோர்ட் கடமைப்பட்டுள்ளது. அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது என்பது சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரியாமல் இருக்க முடியாது.

சுப்ரீம் கோர்ட் பதில் தர வேண்டியதில்லை என்ற வாதம், அது பதில் தரக்கூடாதே என்று கவலைப்படுபவர்களின் எண்ணம்.

ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முழுமையாக விசாரித்து பதில் அளித்தால், முந்தைய தீர்ப்பு மாற்றப்படும் வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.

சரக்கு இல்லா சரக்குகள்! சோதனையில் டாஸ்மாக்கும் சினிமா தயாரிப்பும்!

tasmac shops - 2026

தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் உறவினர் வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமைச்சர் அன்பில் மகேஷ் உறவினரான ஆகாஷ் பாஸ்கரன் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. டான் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை ஆகாஷ் பாஸ்கரன் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இது உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமானதாகும்.

முன்னதாக, இன்று காலை முதல் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். டாஸ்மாக் மூலம் எப்படி ஆயிரக்கணக்கான கோடிக் கணக்கில் பணத்தை எளிதாகக் கொள்ளையடிக்கலாம் என்னும் முன்னாள் டாஸ்மாக் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆலோசனைகளை அரசுத் தரப்பில் சரியாக மேற்கொண்டது இவர் தான் என்ற குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களில் கூறப்பட்டிருக்கிறது என்பதால், இந்த சோதனைகள் பழைய வழக்குகளை மையமாக வைத்தே பொருத்திப் பார்க்கப் படுகின்றன.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2024 வரையிலான நான்கு வருட அதிமுக ஆட்சி மற்றும் நான்கு வருட திமுக ஆட்சியில் ஒட்டுமொத்தமாக தமிழக காவல்துறையினர் சுமார் 41 வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இந்த 41 வழக்குகளின் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை இதன் உள்ளே வந்திருக்கிறதே தவிர, டாஸ்மாக் தொடர்பில் அமலாக்கத்துறை ஒன்றும் பொய் வழக்கு போடவில்லை என்கிறார்கள் இந்த விவகாரத்தை உற்று நோக்குபவர்கள்.

இந்த 41 வழக்குகளும், அதிமுக மற்றும் திமுக ஆட்சி காலத்தில் பதியப்பட்டது தான்! எம்ஆர்பியை விட அதிக விலைக்கு விற்பனை செய்தது, அட்டைப்பெட்டி டெண்டர் முறைகேடு, போக்குவரத்து டெண்டர் முறைகேடு, கடை வாடகை டெண்டர் முறைகேடு, ஊழியர்கள் டிரான்ஸ்பர் செய்வதில் முறைகேடு மற்றும் லஞ்சம், அதிகாரிகள் கமிஷன் வாங்கியது இதுபோன்ற வழக்குகள் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு ஆட்சி காலத்திலும் பதியப்பட்டு இருக்கிறது.

ஆனால் மது தயாரிப்பு ஆலைகளிடமிருந்து டாஸ்மாக் கருவூலக் கணக்குக்குக் காட்டாமல் நேரடியாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு பாட்டில்கள் அனுப்பி விற்பனை செய்யப்பட்டது, திமுக ஆட்சிக் காலத்தில் தான் நடந்திருக்கிறது என்கிறார்கள். மாநில லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்தபோது சில கடைகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கணக்கில் வராத பாட்டில்கள் இருந்ததால், அது இந்த வழக்கில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

இந்த அனைத்து ஊழல்களின் ஒட்டுமொத்த மதிப்பீடு ஆயிரம் கோடி என்ற அளவில் இருக்கும் என்றாலும், டாஸ்மாக் கருவூலக் கணக்கில் காட்டாமல் நேரடியாக டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பில்லில் காட்டாமல் விற்பதன் மூலம் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடிக்கும் மேல் பணம் புரண்டிருக்கிறது என்றும், கடந்த நான்கு ஆண்டுகளில் எப்படியும் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் பணம் கரைபுரண்டிருக்கும் என்றும் கணக்குகள் சொல்லப்படுகின்றன.

சில மது தயாரிப்பு ஆலைகளை ஒப்புக்கு தயார் செய்து அவர்களிடமிருந்து நேரடியாக பாட்டில்களை வாங்கி டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பும் வேலையை கனக்கச்சிதமாகச் செய்து வந்தார் டாஸ்மார்க் நிர்வாக இயக்குனர் விசாகன் என்ற குற்றச் சாட்டு சமூக மற்றும் அரசியல் மட்டத்திலும் கூறப்பட்டு வந்தது.

இவர் குறித்து அடிக்கடி தனது யுடியூப் சேனல்கள் மற்றும் பொதுத் தளத்தில் பரபரப்பு குற்றச்சாட்டுகளைக் கூறி வந்த சமூக ஆர்வலர் சவுக்கு சங்கர், இவருடைய லேப்டாப்பை சோதனை செய்தபோது மூன்று இ-மெயில் கணக்குகளை வைத்து தகவல்களை பரிமாறிக் கொண்டு வந்திருப்பதாகவும், ஒரு இமெயிலில், மது தயாரிப்பு ஆலைகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், இன்னொரு இமெயில் ஐடியுடன் முதல்வரின் மருமகனுடன் தொடர்பு வைத்திருக்க பயன்படுத்தியதாகவும், இன்னொரு இமெயில் ஐடி மூலம் டாஸ்மாக் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியுடன் தகவல் தொடர்பு வைத்திருந்தார் என்றும் கடந்த காலங்களில் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

எனவே இந்த சோதனை மத்தியப் பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் நடத்தப் படுகிறது என்பதும், இதன் பின்னர் பெரும் அரசியல் பூகம்பம் தமிழகத்தில் ஏற்படும் என்றும் சமூகத் தளங்களில் பலரும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.