2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சென்னை சூப்பர் கிங்க்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
தொடக்கவிழா
சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று (22 மார்ச்சு 2024) ஐ பி எல் 2024 போட்டி கோலாகலமாகத் தொடங்கியது. கலை நிகழ்ச்சிகளில் பாலிவுட் நடிகர்களான அக்ஷய்குமார், ஜாக்கி ஷெராஃபின் மகனான டைகர் ஷெராஃப் ஆகியோர் நடனமாடினர். இசையமைப்பாளர் A.R, ரஹ்மான் வந்தேமாதரம் பாடலைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். A.R, ரஹ்மான் இசைக் குழுவினருடன் சோனு நிகம் அவர்களும் பாடினார். வாணவேடிக்கைகளுடன் தொடக்க விழா இனிதே நிறைவுற்றது. தமிழ்நாடு கிரிக்கட் அசோஷியேசனின் தலைவர் டாக்டர் அசோக் சிகாமணி (அமைச்சர் டாக்டர் பொன்முடியின் மகன்), இந்திய கிரிக்கட் வாரியத்தின் தலைவர் ஜெய்ஷா ஆகியோர் தொடக்க ஆட்டத்தைக் காணவந்திருந்தனர்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் முதல் போட்டியை நடிகர் தனுஷ் தனது பாடிகார்டுகளுடன் வந்து பார்த்து ரசித்தார். தங்கை ஷாமிலியுடன் அஜித் மனைவி ஷாலினி ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்தார். நடிகர் ஜெயம் ரவி மனைவியுடன் சேப்பாக்கம் வந்து மேட்ச்சை பார்த்து ரசித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தல தோனியின் தீவிர ரசிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் சதீஷும் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியை சேப்பாக்கம் வந்து கண்டு ரசித்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ராயல் சேலஞ்சர்ஸ் அணியை (173/6, அனுஜ் ராவத் 48, தினேஷ் கார்த்திக் 38*, டியு பிளசிஸ் 35, கோலி 21, முஸ்தஃபிகுர் ரஹ்மான் 4/29) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி (18.4 ஓவர்களில் 176/4, ரச்சின் ரவீந்திரா 37, ஷிவம் துபே 34*, ரஹானே 27, ஜதேஜா 25, கிரீன் 2/27) ஆறு விக்கட் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையாவில் பெங்களூரு அணி வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ட்யு பிளெசிஸ் (35), விராட் கோலி (21) ஆகியோர் 4.3 ஓவரில் 41 ரன்கள் சேர்த்தனர். நடுவில் அந்த அணியின் இன்னிங்ஸ் தடுமாறியது. கடைசியில் அனுஜ் ராவத் (48), தினேஷ் கார்த்திக் (38) ஆகியோர் ஆர்சிபியின் ஸ்கோரை 173 ரன்களுக்கு கொண்டு சென்றனர்.
ஆர்சிபி நிர்ணயித்த 174 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு 38 ரன்னில் முதல் விக்கட் விழுந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 15 ரன்களில் வெளியேறினார். இருப்பினும், இளம் பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திரா, 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு ஷிவம் துபே (34), ரவீந்திர ஜதேஜா (25) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழாமல் ஆடியதால் சிஎஸ்கே 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. இதில் ஷிவம் துபே சிஎஸ்கே அணி பேட்டிங்க் செய்யும்போது இம்பேக்ட் பிளேயராக முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கப் பதிலாக இறங்கினார்.
2008 ஐபிஎல் போட்டிக்குப் பிறகு சென்னை அணியை இன்னமும் பெங்களூர் அணி சேப்பாக்கத்தில் வீழ்த்த முடியவில்லை. முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்டது. சிபிஐ.,யின் மேல்முறையீட்டை விசாரணைக்கு ஏற்பதாக தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் அறிவித்தார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் இருந்து ஏ.ராஜா, கே.கனிமொழி மற்றும் 15 முக்கிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இன்று ஏற்றுக்கொண்டது.
முன்னதாக, 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரை விடுவித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, சிபிஐ.,க்கு மேல்முறையீடு செய்ய நீதிபதி தினேஷ் குமார் சர்மா அனுமதி அளித்தார். அப்போது, மேல்முறையீட்டுக்காக விடுவது என்பது, உயர் நீதிமன்றத்தின் முன், ஒரு முடிவை எதிர்த்து ஒரு தரப்பினருக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட முறையான அனுமதி என்று குறிப்பிட்டார்.
“இந்த நீதிமன்றம், முன்னர் அளிக்கப்பட்ட தீர்ப்பு மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்த பின்னர், முழு ஆதாரங்களையும் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டிய முதன்மையான வழக்கு என்று கருதுகிறது” என்று நீதிபதி சர்மா கூறினார்.
ஆறு ஆண்டுகள் மற்றும் 125 பட்டியலிடுதல்களுக்குப் பிறகு, மனு மீதான உத்தரவு இறுதியாக மார்ச் 14, 2024 அன்று ஒதுக்கப்பட்டது. இந்த வழக்கு 7 வெவ்வேறு நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டு இறுதியாக நீதிபதி சர்மாவிடம் வந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய ராஜா, கனிமொழி மற்றும் 15 பேரை பாட்டியாலா ஹவுஸில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் 2017 டிசம்பரில் விடுவித்தது. சிபிஐ.,யின் குற்றச்சாட்டின்படி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சியின் போது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா, அலைவரிசை உரிமங்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் குறைந்த கட்டணம் வசூலித்து, அரசு கருவூலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தினார். மொத்த இழப்பு ₹1.76 லட்சம் கோடி என இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கையாளர் மதிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முன்னாள் டெலிகாம் செயலர் சித்தார்த் பெஹுரா, ராஜாவின் முன்னாள் தனிச் செயலர் ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் ஷாகித் உஸ்மான் பல்வா மற்றும் வினோத் கோயங்கா, யுனிடெக் நிர்வாக இயக்குநர் டி.சஞ்சய் சந்திரா மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் மூன்று முக்கிய நிர்வாகிகள் சுரேந்திர பிபாரா மற்றும் ஹரி நாயர், கௌதம் தோஷி ஆகியோர் அடங்குவர்.
2012 பிப்ரவரியில், ஒன்பது நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 122 தொலைத்தொடர்பு உரிமங்கள் மற்றும் அலைக்கற்றை ஒதுக்கீடு செயல்முறை தவறானது எனக் கூறி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்ததை எதிர்த்து, மார்ச் 2018 இல் மேல்முறையீடு செய்ய சிபிஐ., தனது அனுமதியுடன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு முதல் முறையாக மார்ச் 21, 2018 அன்று விசாரணைக்கு வந்தது.
மூத்த சிறப்பு அரசு வழக்கறிஞர் (எஸ்பிபி) சஞ்சய் ஜெயின், உயர் நீதிமன்றத்தில் சிபிஐக்காக இந்த வழக்கை வாதிட்டார். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு முரண்பாடுகளால் பாதிக்கப்படுகிறது என்றும், மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்றும் அந்த நிறுவனம் வாதிட்டது.
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.
அதிமுக., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார்.
திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
இந்திய மக்கள் முன்னேற்றக் கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும், அமமுக., தேனி, திருச்சி தொகுதியிலும் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ், ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி 39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்ததாக பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இதில் 19 தொகுதிகளில் பாஜக., வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், 4 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலா ஒரு தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் சைக்கிள் சின்னத்திலும், பாமக 10 தொகுதிகளிலும் மாம்பழம் சின்னத்திலும், அமமுக 2 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்திலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மட்டும் சுயேச்சையாக தனிச் சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
முன்னதாக, சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, நாங்கள் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டிருந்தோம். அதிகமான தொகுதிகளை தர பாஜகவினர் விருப்பம் தெரிவித்தனர். தொண்டர்களின் பலத்தை அறிய ஒரு தொகுதியில் நிற்க முடிவு செய்துள்ளோம். அதனால், ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன். எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது என்றார்.
முன்னதாக, பாஜக., கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைப் போன்று, இந்தத் தேர்தலுக்கும் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜி.கே.வாசன் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக முடிவு செய்யப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பாமக., போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி தொகுதியில் தேவதாஸ், சேலம் தொகுதியில் அண்ணாதுரை, திண்டுக்கல் தொகுதியில் திலகபாமா, மயிலாடுதுறை தொகுதியில் ம.க.ஸ்டாலின், கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான், அரக்கோணம் தொகுதியில் பாலு, தர்மபுரி தொகுதியில் அரசாங்கம், ஆரணி தொகுதியில் கணேஷ்குமார், விழுப்புரம் தொகுதியில் முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
The reply dt. 21st March,2024 from Mr. N Murali, the President,Music Academy to RaGa is a candid confession that the President/Academy, in whichever order, is now not just approving/recognising what T M Krishna stands for as the ‘respected senior musician’, but seemingly associating themselves with all his egregious and outrageous pronouncements, over the years. By suggesting that RaGa’s comments were ‘vituperative/defamatory’, the holier than thou President ( of Academy not Bharat) has failed to fact-check in the ‘highest’ traditions ( now forgotten) of The Hindu stable. If he had, he would have noticed that the ‘vituperative’ ‘defamatory’ utterances were truly the Sangita Kalanidhi designate’s . The letter is a complete give-way that the choice was knowingly deliberate, except that the Academy did not anticipate this blowback.
The President a.k.a. Academy assumed that the artistes/rasikas would be the ever supine pushovers . They did not bargain for these sharp responses. One thing is clear and evident. The Academy/Committee chose who they chose, aware fully well that he was famous ( read notoriety) for the ‘extraneous factors’. Could the President and Academy please detail/identify those ‘extraneous factors’ which they excluded from the zone of consideration. They wont. They dare not. Therein lies the gravumen and nub of reasons for the ‘withdrawals’.
Beginning with 1929 awardees
Shri T.V. Subba Rao, Vidvan T.S. Sabhesa Iyer till 2023 awardee Bombay Smt Jayashri Ramnath, it is humbly requested of the President/Academy to affirm/confirm whether there were at all any ‘extraneous factors’ impinging on the value set of those awardees, that the Academy had to grapple with.Even one?
And if even one of the said awardees had or could be accused of using crass language against Saint Tyagaraja, MS Subbulakshmi or the Paramparyam in the divinity of Carnatic music traditions. Our friend, the designate, ‘overwhelmed’ by the recognition, has ‘overwhelming’ lexicon in oral and written forms recalled and recorded all over the place, in the last few days itself. The ‘musical excellence’ and the ‘accolade’ for which he was chosen by the committee includes usage of the term Poromboke for Parambaryam, as a pejorative.
The President/Academy/Committee wants us to believe that this genius was chosen for his musical prowess and not the ideological nonsense he vomits. T M Krishna the ‘respected senior musician’ cannot be divorced from the man/politician/public intellectual he claims to be, among his admirers,which we now know include the Academy and its President. Bravo!
RaGa had sent a polite, pointed, suave letter imbued with ‘respect’ to T M Krishna the ‘musician’. But, exposed the chinks and warts, as chips on the shoulders of the singer, as they were, are with convulsed moral compass. Yes, they are ‘extraneous factors’. But, they are intrinsic to him. He cannot be divorced from them. He is not the T M Krishna that Academy wants to adorn, without them.
As for the poser from His Excellency the President on the ‘intents’ and ‘purposes’ behind the missive being posted/shared on social media contemporaneous to being sent to him, can’t he see the reason? Simple. Of course, We the Rasikas matter more. For the Academy, we may not. You and your Academy’s self-anointed troopers trot during season time as if the Lords of all they Survey, including in the canteens and restrooms. But artistes know that ‘it is the rasikas who make them who they are’ as MS Amma generously acknowledged
RaGa kept this protocol in sharing the letter Live with us. These artistes know who ‘made’them. We. Not the Academy platform by itself. The Academy too is a product of our passion and attendance. But, you may not care. So, you are entitled to your misplaced surprise why the letter was shared with us.
All in all, the reply dt.21st March,2024 from the President, reaffirms his love for the man in the designate. How the Committee fell in line as lambs for…. is no mystery. They love to be Academy Officianados. It has become a cosy club of likeminded parasites. You don’t expect any better.
Surely, the Acdemy has proved itself to be among the UNESCO networks as a ‘creative’ city. The least we rasikas can reciprocate is to shun the Academy during the 2024-25 Margazhi season by attending all the other sabhas and concerts of artistes ( and not just mouth platitudes) who nobly withdrew to show they were men and women of much better value!
(Writer is practicing advocate in the Madras High Court)
சீனாவின் உளவுக் கப்பலை இலங்கை தன் கடற்பகுதியில் நிறுத்த அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவுக்கு இடையிலான உறவுகளில் மீண்டும் ஒரு புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது.
சீனாவின் புவி இயற்பியல் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கடந்த நவம்பர் மாதம் நிலை நிறுத்தப்பட்டது. இதற்கு இந்தியா தனது கவலையை இலங்கை அரசிடம் தெரிவித்தது.
இதை அடுத்து சர்வதேச ஆய்வுக் கப்பல்கள் தங்களது துறைமுகங்களில் நிறுத்த இலங்கை அரசு ஓர் ஆண்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், அண்மையில், ஜெர்மனி ஆய்வுக் கப்பலுக்கு மட்டும் இலங்கை அரசு அனுமதி அளித்தது. அதே நேரம் சீனக் கப்பலை திருப்பி அனுப்பியது.
தங்கள் நாட்டுக் கப்பல் திருப்பி அனுப்பப் பட்டதற்கு, இலங்கை அரசிடம் சீனா தனது கண்டனத்தைத் தெரிவித்தது. இந்நிலையில், இனி அனைத்து ஆய்வுக் கப்பல்களையும் தங்களது துறைமுகங்களில் நிறுத்த அனுமதிக்கப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இதை அடுத்து சீன ஆய்வுக் கப்பல்களுக்கு இலங்கை மீண்டும் அனுமதி அளிக்க உள்ளது தெளிவாகியுள்ளது. கடலில் ஆய்வு செய்வதாகக் கூறி சீன கப்பல்கள் இந்தியாவின் கடல் கட்டமைப்பை உளவு பார்ப்பதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் மீண்டும் இது போன்ற சூழல் எழுந்துள்ளதால், இந்தியத் தரப்பில் ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக., வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக., மத்திய தலைமை வெளியிட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார். நெல்லையில், தற்போதைய சட்டமன்ற பாஜக., தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.
இதேபோல், தென்சென்னையில் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், நீலகிரியில் எல்.முருகன் கிருஷ்ணகிரியில் நரசிம்மன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் அனைவரும் பாஜக.,வின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவதால், பாஜக., பட்டியலில் ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
முன்னதாக முதலில் வெளியான பட்டியலில், தவறுதலாக தூத்துக்குடி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது. சற்று நேரத்தில் திருத்தப்பட்ட பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் திருநெல்வேலியில் அவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் பாஜக., 20 தொகுதிகளிலும் பாமக., 10 தொகுதிகளிலும் மீதமுள்ள 9 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வந்த பிறகு தான் முழுமையான தமிழக போட்டி நிலவரம் தெரியவரும்.
Musicians Ranjani and Gayathri had withdrawn their presence from 2024 music conference arranged by Music Academy. Their letter says the story for what.
We have communicated our decision to withdraw from participating in the Music Academy’s conference 2024 and from presenting our concert on 25th December.
We have made this decision as the conference would be presided over by Mr. TM Krishna. He has caused immense damage to the Carnatic music world, wilfully and happily stomped over the sentiments of this community and insulted most respected icons like Tyagaraja and MS Subbulakshmi. His actions have tried to spread a sense of shame in being a carnatic musician and has been exhibited through his consistent denigration of spirituality in music.
He has vilified the Carnatic music fraternity that has collectively contributed millions of hours of artistry, hard work and literature.
It is dangerous to overlook Mr TM Krishna’s glorification of a figure like EVR aka Periyar who
Openly proposed a genocide of ‘brahmins’
Repeatedly called/abused every woman of this community with vile profanity
Relentlessly worked to normalize filthy language in social discourse
We believe in a value system that respects art and artists, vaggeyakaras, rasikas, institutions, our roots and culture. We will be in moral violation if we were to bury these values and join this year’s conference.
June,2015- Music Academy, announcement on Sangita Kalanidhi designate for 89th Conference:
Sanjay Subramanyan is the unanimous choice of the executive committee of the Academy and in selecting Mr. Subrahmanyan we have restored the practice of awarding the title both to veteran and young musicians who are at the peak of their career. The practice existed till the late 1970s. Mr Subrahmayan is a vocalist par-excellence and torchbearer of his generation of Carnatic musicians- Music Academy.
Facebook Post dt.June,2015 of T M Krishna
I would like to inform all of you that henceforth (beginning December 2015) I will not be singing in Chennai’s December Music Season… Unfortunately at the place I am today I am unable to reconcile my musical journey with that of the December 2015.
The two are unrelated. If you attribute peeve to TMK, you are peevish.
Origins of Sangita Kalanidhi
On the origins of Sangita Kalanidhi and connect with MS Amma- Considered the highest accolade in the field of Carnatic music, it came into existence in 1942. Prior to that, a senior musician/expert was invited to preside over the Music Academy’s annual conference. In 1942, it was decided that the musician so invited would be conferred the title of Sangita Kalanidhi, the award comprising a gold medal and a birudu patra (citation). Since 2005, the Sangita Kalanidhi also receives the MS Subbulakshmi Award instituted by The Hindu. This cash award has seen its value enhanced by generous contributions by P Vijaykumar Reddy, son of past Vice-President P Obul Reddy.
MS Subbulakshmi Award
Now, note that TMK would be honoured with ‘M S Subbulakshmi Award instituted by The Hindu, where he writes his ‘erudite’ pieces.And TMK said this on being ‘overwhelmed’ by the recognition: It is ….humbling because the recipients of the awardees include my teacher Semmangudi Srinivasa Iyer, T Brinda, MS Subbulakshmi who you admire and look up to for inspiration”.
It was no new found love for MS Amma. TMK had written this long ago. Yes, true:
TMK on MS Amma
“G N Balasubramanian’s love for MS has been underplayed, thanks to the latent patriarchy of Mylapore. The free-spirited young woman was to become the embodiment of the ideal Brahmin housewife, seen among the elite as the epitome of purity and devotion. The story is unsubstantiated, but even concocted tales can reveal something of the inner workings of the environment that produced them”.
He had said more. But, we need not.
Intellectual (Dis) Honesty
Well, TMK says he has always been ‘outspoken’. Never ‘Arrogant or Hypocritical’. He has been hypercritical of Carnatic music echelons as ‘elitist’ ‘chauvinistic’ and ‘Brahmin dominated’ a k.a. racist. Critiques/Attributes associated with Music Academy, across turfs (TMK unexcluded) for decades.
Now, TMK is ‘overwhelmed’ by the award/recognition from Music Academy and it is coming with M S Subbulakshmi award too. Perfect icing on the cake. How can he be called upon to reject it? He is not a fool. He is surely smart and intelligent to know which side of the bread is buttered.
If you think he is a hypocrite to accept the award, during Margazhi Season,which he has been boycotting since 2015, and would be Presiding over the Music Academy Conference in 2024-25 and possibly perform too (who knows, knowing his (lack of) balance and consistency), it is You & and I who would be peevish, petulant,racist – read brahminical, and worse.
(Writer is practicing advocate in the Madras High Court)
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக – இந்தக் கட்சிகள் ஒரு முக்கியச் செய்தியை அவரவர் பாணியில் சொல்கின்றன, கவனித்தீர்களா? சர்ரென்று பார்க்கலாம்.
அண்ணாத்துரை தனது தலைமைப் பண்பினால் பலரையும் ஈர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவினார், தமிழகத்தில் திமுக-வின் ஆட்சியை அமைத்தார். அவர் அகால மரணம் அடைந்த பின் திமுக-வின் முதல்வரான மு. கருணாநிதி தனது சாதுர்யத்தால், உழைப்பால் கட்சிக்குள் பெரிதும் உயர்ந்தார்.
49 வருடங்கள் திமுக-வில் கோலோச்சினார் கருணாநிதி. அப்போது, சில கட்சிக்காரர்கள் இரண்டாம் கட்டத் தலைவர்களாக வளர்ந்து பெருகத் துணை நின்றார். அந்தத் தலைவர்கள் கருணாநிதியின் குறிப்பறிந்து அவரைப் பாராட்டிச் சீராட்டித் தங்களையும் பக்கவாட்டில் கவனித்துச் செழித்தார்கள்.
அருமை மகன் ஸ்டாலினையும் செல்ல மகள் கனிமொழியையும் கட்சிக்குள் முன்னிலைப் படுத்தினார் தந்தை கருணாநிதி. திமுக-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் ஒதுங்கி நின்று அந்த வாரிசுத் தலைவர்களை ஆதரித்தார்கள். பிரதிபலனாக, தங்கள் தங்கள் வாரிசுகளும் கட்சிக்குள் வளர வழி செய்து கொண்டார்கள். கழகம் ஒரு குடும்பம்.
கருணாநிதியின் மறைவுக்குப் பின், தேர்தலில் மறுபடியும் திமுக ஜெயித்து ஸ்டாலின் இப்போது தமிழக முதல்வராக இருக்கிறார். கட்சிக்குள் இது ஸ்டாலினை மகிழ்விக்கும் காலம் என்பதால், திமுக–வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அவரது மகன் உதயநிதியை வணங்கிப் பணிந்து நிற்கிறார்கள். அவரும் பல்லக்கில் அமர்ந்து தடாலடி அரசியல் செய்கிறார்.
நடிகர் எம். ஜி. ஆர் திமுக-வில் இருக்கும்போதே சாதாரண மக்களின் நெஞ்சில் இடம் பிடித்தவர். திமுக-வில் இருந்து அவர் வெளியேற்றப் பட்டவுடன் அதிமுக-வை அவர் வளர்த்துத் தன் ஆயுட்காலம் வரை திமுக-வை வீழ்த்தி வைத்திருந்தார். அவரால் கட்சியில் அறிமுகம் செய்து ஊக்கம் தரப்பட்டவர் நடிகை ஜெயலலிதா. எம். ஜி. அர் மறைந்த பின் தனது உறுதியால், போராட்டக் குணத்தால், கட்சியின் தலைமைப் பொறுப்பைப் பிடித்து முதல்வர் ஆனவர் ஜெயலலிதா.
எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு மகன், மகள் என்ற குடும்ப வாரிசுகள் இல்லை. கட்சியில் எம். ஜி. ஆரைப் பக்தியுடன் போற்றியவர்கள், ஜெயலலிதாவை பயத்துடன் வணங்கியவர்கள், அங்கு இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருந்தார்கள். கருணாநிதியைப் போலவே, அந்த இரு தலைவர்களும் கட்சிக்குள் பெரும் திறமைகளை ஈர்த்தவர்களோ ஊக்குவித்தவர்களோ அல்ல.
இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாகப் பதினேழு வருடங்கள் இருந்தார் ஜவஹர்லால் நேரு. அவரது மகள் இந்திரா காந்தி. நேரு இருந்தவரை அவர் இந்திரா காந்தியைக் கட்சிக்குள் கனகாரியமாகத் தூக்கி விடவில்லை. அன்றைய காங்கிரஸ் தலைவர்களும் அப்படியான செயலை விரும்பி இருக்க மாட்டார்கள். நேரு மறைந்த பின் லால் பகதூர் சாஸ்திரியைப் பிரதமர் ஆக்கியது காங்கிரஸ். அவருக்குப் பின் அக்கட்சி இந்திரா காந்தியைப் பிரதமராக அமர்த்தியது.
இந்திரா காந்தி அமல் செய்த நெருக்கடி நிலைக் காலத்தில் அவர் மகன் சஞ்சய் காந்தி ஆட்டம் போட்டார். பிரதமர் இந்திரா அதை அனுமதித்தார். சஞ்சய் காந்தியும் இந்திராவும் அடுத்தடுத்து மரணித்த பின், அரசியல் அனுபவம் குறைந்த இந்திராவின் இன்னொரு மகன் ராஜீவ் காந்தியைக் காங்கிரஸ் கட்சி பிரதமர் ஆக்கியது.
ராஜீவ் காந்தியின் காலத்திற்குப் பின், ஒரு இடைவெளி விட்டு அவர் மனைவி சோனியா காந்தி கட்சியில் தலை தூக்கினார். இன்றும் கட்சியில் அவர் அதிகார மாதா. ராஜீவ்-சோனியாவின் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி, காங்கிரஸின் இளவரசர், இளவரசி என்று பல வருடங்களாகக் கட்சியில் மிதக்கிறார்கள். அந்த இளவரசர் ஒரு தத்துப்பித்து. அவர்தான் இப்போது கட்சிக்குள் ராஜ தர்பார் நடத்துகிறார்.
இந்த மூன்று கட்சிகளுக்கு மாறாக பாஜக செயல்படுகிறது. பாஜக-வில் வாரிசுகளோ தனிப்பட்ட முறையில் தலைவருக்கு வேண்டியவர்களோ வளர்க்கப் படுவதில்லை, தூக்கி நிறுத்தப் படுவதில்லை.
இந்திரா காந்தி, கருணாநிதி, எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர், தலைவரின் வாரிசு என்ற காரணத்தால் தலைவரே மேலே இழுத்துவிட்டுக் கட்சிக்குள் தலை எடுத்தவர்கள் அல்ல. ஆனால் இந்திரா காந்தியும் கருணாநிதியும் கட்சிக்குள் வாரிசுகளை அனுமதித்து உயர்த்திவிட்டார்கள்.
குடும்ப வாரிசு இல்லாத ஜெயலலிதா, தோழி சசிகலாவைத் தனது ‘உடன்பிறவா சகோதரி’ என்று அறிவித்து, சசிகலாவின் தகுதிக்கு மீறி அவருக்குக் கட்சிக்குள் செல்வாக்கு சேரக் காரணமாக இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக தலைவர்கள் சசிகலாவின் காலில் விழுந்து அடைக்கலமும் ஆதாயமும் தேடினார்கள். ஊழல் குற்றத்திற்காக சசிகலா ஜெயிலுக்குப் போனார் என்பதை ஒரு சமயோசித சாக்காக வைத்து, அவரைக் கட்சியில் இருந்து வெளியேற்றினார் அதிமுக-வின் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அவரே தனக்கான மக்கள் செல்வாக்கு இல்லாமல் தடுமாறுகிறார்.
அண்ணாத்துரை-கருணாநிதி காலத்து திமுக-வை விட, இப்போதைய திமுக-வின் வலிமை குறைவு. எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவின் அதிமுக-வை விட இந்நாள் அதிமுக-வின் சக்தி மிகக் குறைவு.
இந்திரா காந்தி காலத்து தமிழக காங்கிரஸ், திமுக-வால் பலமிழந்து நின்றது. இன்றைய தமிழக காங்கிரஸ் இன்னும் சோப்ளாங்கியாய் நிற்கிறது. தமிழக பாஜக மட்டும் கடந்த மூன்று வருடங்களில் அதிவேகமாக வளர்கிறது. எந்த அளவுக்கு? திமுக-வின் துரைமுருகனே, “தமிழகத்தில் பாஜக பிசாசு மாதிரி வளர்கிறது” என்று பயத்தில் சொல்லும் அளவுக்கு.
பிற மாநிலங்களிலும் தமிழகத்திலும் பாஜக வளர்ந்து கொண்டே இருக்கிறது என்றால், என்ன காரணம்? நேர்மை, திறமை, துணிவு, அர்ப்பணிப்பு, ஆகிய பண்பு கொண்டவர்களைத் தன்னிடத்தே ஈர்க்கிறது அந்தக் கட்சி.
தனது மகன் மகள் என்ற பாசத்தால், அல்லது ரகசியப் பலன்களுக்காகத் தனக்கு வேண்டியவர் என்பதால், ஒரு அரசியல் கட்சித் தலைவர் கட்சிக்குள் ஒருவரைத் தாங்கி முன்நிறுத்தினால், கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்களும் அதை ஏற்றுக் கொண்டால், என்ன நடக்கும்? ஒன்று, கட்சிக்குள் ஏற்கனவே இருக்கும் திறமை அடங்கி முடங்கித் தன் இடத்தைப் பாதுகாக்கும். இரண்டு, நேர்மையான, திறமையான, செயல்திறன் மிக்க வெளி மனிதர்கள் அந்தக் கட்சிக்குள் வரத் தயங்குவார்கள். ஏனென்றால் அந்த மனிதர்கள் தலைவருக்கு வேண்டியவர்களிடம் பணிந்து நின்று தங்கள் சுய மரியாதையை இழக்க விரும்பமாட்டார்கள், சிறுமைப்பட கூச்சப் படுவார்கள்.
வாரிசுகள், வேண்டியவர்கள் என்ற காரணத்தினால் ஒரு கட்சியில் திறமையற்ற சிலர் முக்கியத்துவம் பெறுவது ஒரு தீமையின் அறிகுறி. அவர்கள் கட்சிக்குள் முன்னிலைப் படுவதுதான் கட்சித் தலைவருக்கே அதி முக்கியம் என்றால், மக்கள் நலன் அந்தக் கட்சிக்கு இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கும். அந்தக் கட்சியின் ஆட்சியில் கண்துடைப்புத் திட்டங்கள் மட்டும் கோலாகலமாக நடக்கும். பார்க்கிறோமே?
திமுக, அதிமுக, இந்திரா தலைமையிலான காங்கிரஸ் ஆகிய கட்சிகள், செல்வாக்கான பெரும் தலைவர்களை முன்பு கொண்டிருந்தாலும், அந்தத் தலைவர்கள் நேர்மையும் திறமையும் கொண்ட இளைஞர்களைக் கட்சிக்கு ஈர்க்கவில்லை, அத்தகையவர்கள் புதிய தலைவர்களாகக் கட்சிக்குள் வளர வழி செய்யவில்லை. ஆனால் பாஜக அந்த உன்னதக் காரியத்தைத் தொடர்ந்து செய்து வருகிறது.
இன்னொரு பக்கத்தில், சாதாரண இந்திய மக்களிடம் உள்ள ஒரு நியாய-நேர்மை உணர்வு நமக்கு வரப்பிரசாதம். ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இதிகாசங்கள் பல நூற்றாண்டுகளாக நம் மக்களின் ரத்தத்தில் கலந்த பண்பின் மீதி மிச்சம் அது. அதை வைத்துத் தனது நேர்மையால், திறமையால், உழைப்பால், சேவை மனப்பான்மையால், சாதுர்யத்தினால், சாதாரண மக்களை ஈர்க்க முடிகிறது பாஜக-வின் நரேந்திர மோடியால். அதோடு நாட்டின் தீய அரசியல் சக்திகளின் வலுவைக் குறைக்க முடிகிறது அவரால்.
மோடியைப் போன்ற ஒரு தலைவர்தான் அண்ணாமலை மாதிரியான ஒரு அற்புதமான இளம் தலைவரை தமிழகத்திற்காக ஈர்க்க முடிகிறது. வாரிசு மற்றும் வேண்டியவர்கள் வளரும் ஒரு கட்சியால் அண்ணாமலை போன்ற ஒரு தலைவரைக் கவர முடியாது. அண்ணாமலையும் அவர் பங்குக்குத் துடிப்பான இளைஞர்களை பாஜக-வுக்கு ஈர்ப்பார். இது ஒரு தொடர் நன்மையாக அமையக் கூடியது. பெரிய விஷயமல்லவா இது?
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய நான்கு கட்சிகளும் சேர்ந்து, இந்த ஒரு செய்தியைச் சொல்கின்றன என்பது தெரிகிறது. அதாவது, ஒரு கட்சி எப்படி நடத்தப் பட்டால், ஒரு கட்சியின் தலைவர் எப்படிச் செயல்பட்டால் – வாரிசுகள், வேண்டியவர்கள் என்ற சுயநல விருப்பு வெறுப்பு இல்லாமல் அவர் கட்சி நடத்தினால் – மக்கள் நலன் அந்தக் கட்சியின் ஒரே குறிக்கோளாக இருக்கும், அந்தக் கட்சியின் ஆட்சியில் பொதுமக்கள் அதிக நன்மைகள் பெறுவார்கள், அரசாங்க கஜானாவும் நலமாக இருக்கும், என்பதை இப்படியும் அப்படியுமாகச் சொல்கின்றன இந்த நாலு கட்சிகள். சரிதானே?
Author:R. Veera Raghavan, Advocate, Chennai (veera.rvr@gmail.com)
Blog: https://rvr-india.blogspot.com
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்கள் முதல் கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு என்பதால், தேர்தல் கூட்டணிகள் வேட்பாளர் அறிவிப்பு எல்லாம் சூடு பிடித்துள்ளன, வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
அதன்படி இன்று திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதிமுக முதல் கட்ட பட்டியலை மட்டும் வெளியிட்டுள்ளது. திமுக தங்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
அதிமுக., கூட்டணியில் திண்டுக்கல் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். தேமுதிக., 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேமுதிக., குறித்த பட்டியல் இன்னும் வெளியாகவில்லை.
திமுக., வேட்பாளர்கள் பட்டியல்
மக்களவைத் தேர்தலுக்கான 21 தொகுதிகளுக்கான தி.மு.க., வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.
முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் கட்சியாக திமுக., கூட்டணித் தொகுதி பங்கீட்டை முடித்து முன்னதாகவே அறிவித்தது. அதன்படி, திமுக., 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முன்னதாகவே விருப்ப மனு பெற்று நேர்காணல் நடத்தி, வேட்பாளர்களை இறுதி செய்தது திமுக.,! கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம், சிதம்பரம் இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். காங்கிரஸுக்கு 10 தொகுதிகளும் இரு கம்யூனிஸ்ட்களு தலா இரு தொகுதிகளும், மதிமுக., முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று, திமுக., போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலுடன், தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்.
அதன்படி, திமுக., சார்பில் போட்டியிடுபவர்கள்…
வட சென்னை- கலாநிதி வீராசாமி தென் சென்னை- தமிழச்சி தங்கப்பாண்டியன் மத்திய சென்னை- தயாநிதி ஸ்ரீபெரும்புதுார் – டி.ஆர்.பாலு காஞ்சிபுரம் (தனி) – க.செல்வம் அரக்கோணம்- ஜெகத்ரட்சகன் வேலுார்- கதிர்ஆனந்த் தர்மபுரி – ஆ.மணி திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை ஆரணி- எம்.எஸ்.தரணிவேந்தன் கள்ளக்குறிச்சி – கே.மலையரசன் சேலம் – செல்வகணபதி ஈரோடு – பிரகாஷ் நீலகிரி (தனி) – ஆ.ராசா கோவை – கணபதி ப. ராஜ்குமார் பொள்ளாச்சி – கே.ஈஸ்வரசாமி பெரம்பலுார் – அருண் நேரு தஞ்சாவூர் – ச.முரசொலி தேனி – தங்க தமிழ்செல்வன் துாத்துக்குடி – கனிமொழி தென்காசி – ராணி ஸ்ரீகுமார்
இந்தப் பட்டியலின்படி, ஏற்கெனவே எம்.பி.யாக இருப்பவர்கள் 10 பேர். புதியவர்கள் 11 பேர்.
இவர்களில் பெண்கள் 3 பேர், பட்டதாரிகள் 19 பேர், மருத்துவர்கள் 2 பேர், வழக்கறிஞர்கள் 6 பேர்.
அதிமுக., வேட்பாளர் பட்டியல்
அதிமுக., தரப்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அதன்படி, அதிமுக., சார்பில் போட்டிடுபவர்கள்…
சென்னை வடக்கு – ராயபுரம் மனோ சென்னை தெற்கு – ஜெயவர்தன் காஞ்சிபுரம் – ராஜசேகர் அரக்கோணம் – ஏ.எஸ்.விஜயன் கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ் விழுப்புரம் – பாக்யராஜ் சேலம் – விக்னேஷ் நாமக்கல் – தமிழ்மணி ஈரோடு – அசோக்குமார் சிதம்பரம் – சந்திரஹாசன் நாகப்பட்டினம் – சுர்ஜித் சங்கர் கரூர் – தங்கவேல் மதுரை – டாக்டர் சரவணன் தேனி – நாராயணசாமி ராமநாதபுரம் – ஜெயபெருமாள் ஆரணி – கஜேந்திரன்
என்ன செய்யப் போகிறது பாஜக.,
தமிழகத்தில் பாஜக., கூட்டணியில், பாமக., தமாகா., அமமுக., புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் உள்ளன. இவர்களுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவும் இணைந்தது.
பாஜக., கூட்டணியில், பாமக.,வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு செய்வதற்காக, சென்னை கமலாலயத்தில், பாஜக, முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்றிரவு நடந்தது.
இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அமமுக., மற்றும் பன்னீர்செல்வத்தின் உரிமை மீட்புக் குழுவிற்கான தொகுதிப் பங்கீடு இன்று நடைபெற உள்ளது.