2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்து எல். முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் உதகையில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் இன்று ஊட்டியில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.இரு கட்சியினரும் உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக செல்ல தயாராக ஒரே பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜகவினருக்கு 10 மணியும் அதிமுகவினருக்கு 11 மணியம் நேரம் ஒதுக்கப்பட்டது. பாஜகவினர் வேட்பு மனு தாக்கல் செய்ய கிளம்ப தாமதமானதால் அதிமுகவினர் தாங்கள் முன்னே செல்வதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.இரு கட்சியினரும் மாறி மாறி கோஷமிட்டனர்.
பின்னர் நீலகிரி தொகுதி வேட்பாளர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் வந்த பின்பு ஊர்வலம் தாமதமாக தொடங்கியது.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் காவல் துறையோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாகனத்தை தாக்கம் முயன்ற அதிமுகவினரை காவல்துறை கட்டுப்படுத்தியது தொடர்ந்து பாஜகவினரை வேகமாக செல்ல அறிவுறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் நீலகிரி பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்து எல். முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அ.தி.மு.க., வின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என கூறிய உயர்நீதிமன்றம். இரட்டை இலைக்காக தேர்தல் கமிஷனை அணுக வேண்டும் என பன்னீர்செல்வத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.
அ.தி.மு.க., கொடி, சின்னம், பெயர், லெட்டர் பேடு ஆகியவற்றை பன்னீர்செல்வம் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அக்கட்சி பொதுச்செயலர் இ.பி.எஸ்., ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், கட்சி பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு, இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதிமுக.,வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து கடந்த 18ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு இன்று(மார்ச் 25) நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.தி.மு.க.,வின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது. பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தேர்தல் முடிந்த பிறகு வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் எனக் கூறி, வரும் ஜூன் 10ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கடந்த 16-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி தினமும் வழக்கமான பூஜைகளுடன் உத்சவ பலி, படிபூஜை நடைபெற்று வந்தது. 9-ம் திருவிழாவான நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெற்றது. இதை தொடர்ந்து திங்கட்கிழமை இன்று, பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது.
இதனையொட்டி இன்று காலை 8 மணிக்கு ஐயப்ப விக்ரகம் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட யானை ஊர்வலம் மேள, தாளம் முழங்க சன்னிதானத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ஊர்வலம் காலை 11 மணிக்கு பம்பை வந்து சேர்கிறது. பின்னர் பம்பை நதிக்கரையில் அலங்கரிக்கப்பட்டுள்ள ஆராட்டு கடவில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.
ஆராட்டு சடங்குகளை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு நிறைவேற்றுவார். களபம், மஞ்சள் பூசி ஆராட்டு கடவில் 3 முறை மூழ்கி ஐயப்பனுக்கு ஆராட்டு சடங்கு நிறைவேற்றப்படும்.
இதனை தொடர்ந்து புத்தாடை அணிவித்து அய்யப்ப பக்தர்களின் தரிசனத்திற்காக ஐயப்ப விக்ரகம் பம்பை கணபதி கோவிலில் வைக்கப்படும். மாலையில் அய்யப்ப விக்ரகம் ஊர்வலமாக மீண்டும் சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அத்துடன் திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்படும்.
பிறகு விஷு பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஏப்ரல் 10-ந் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலில் தங்கத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலில், பங்குனித் திருவிழாவையொட்டி, தங்கத்தேரோட்டம் நடைபெற்றது. இத்திருக்கோயிலில் பங்குனித் தேர்த்திருவிழா, கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாள்கள் திருவிழா நடைபெற்றது. திருவிழா நாள்களில் தினமும் பெருமாள் மற்றும் திருவரமங்கை தாயாருக்கு சிறப்பு அலங்காரம், பூஜை வழிபாடு நடைபெற்றது. பெருமாள் தாயாருடன் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து காட்சியளித்தார்.
பத்தாம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக தாயார் மற்றும் பெருமாளுக்கு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து திருவரமங்கை தாயாருடன் பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் எழுந்தருளினார். பின்னர் மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் தேர் இழுத்தனர்.
கோயிலைச் சுற்றியுள்ள ரத வீதிகளில் தேர் வலம் வந்து பின்னர் நிலைக்கு வந்து சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து கோயில் மண்டபத்தில் தாயாருக்கும், பெருமாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என ஒரு தூண் போல் இல்லாமல் ஒரு ஆலமரமாக நிற்கிறார். அதற்கு என் குடும்பமும் பின்னால் நிற்கிறது” என்று, அருப்புக்கோட்டையில் ராதிகா சரத்குமார் பேசினார்.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராதிகா சரத்குமார் அருப்புக்கோட்டை ஆத்திபட்டி அருகே உள்ள பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சியினரின் ஆர்வத்தையும் வெறியையும் பார்க்கும் போது மிக சந்தோசமாக உள்ளது. பணியாற்றுபவர்களை மரியாதையாக நடத்தக்கூடிய கட்சி பாரதிய ஜனதா கட்சி.
சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் பெண்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். தன்னம்பிக்கை இருக்க வேண்டும் சுயமரியாதையோடு வாழ வேண்டும். வேலை வாய்ப்பு இருக்க வேண்டும் அதற்கு ஒரே நம்பிக்கை மோடிஜி தான். நான் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்தவள்.
உழைப்பு மட்டுமே என் வாழ்வில் எனக்கு துரோகம் செய்யாதது. உழைப்பு அனைவருக்கும் பலமாக இருக்கும். சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்து கொடுத்து நீ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன் என ஒரு தூண் போல் இல்லாமல் ஒரு ஆலமரமாக நிற்கிறார் அதற்கு என் குடும்பமும் பின்னால் நிற்கிறது. எனக்கு அதுதான் மிக்க மகிழ்ச்சி.
இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது அவர்தான் அவருக்கு நான் நன்றி சொல்லி கொள்கிறேன். 50 வருடமாக இந்த திராவிட கட்சிகள் என்ன செய்தது அவர்கள் குடும்பம் மட்டும் தான் உயர்ந்துள்ளது என பேசினார்.
நிகழ்ச்சியில் இறுதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ராதிகா சரத்குமார்.
தங்களது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என செய்தியாளர்கள் கேட்டதற்கு
கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை கொடுக்க முடியும் எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு வெற்றி வரும் என பேசினார். மக்களை கணிக்க முடியாது அவர்கள் நிச்சயம் ஒரு வெற்றியை கொடுப்பார்கள் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார்.
மேலும் இந்த தொகுதியில் செயல்படுத்த படாத திட்டங்களை தெரிந்து கொண்டோம் அதை நிச்சயம் செயல்படுத்துவோம். வீடு தண்ணீர் விட்டு அடிப்படை விஷயங்களை மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்போம் என பேசினார்.
முன்னதாக அருப்புக்கோட்டை தேர்தல் அலுவலகத்திற்கு வந்த ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமாருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
டி. எம். கிருஷ்ணா ஒரு மிகச் சிறந்த கர்நாடக சங்கீத வித்வானா? ஆம். சென்னை மியூசிக் அகாடமி அவருக்கு 2024-க்கான சங்கீத கலாநிதி பட்டம் அளிப்பதோடு விஷயம் முடிகிறதா? இல்லை.
டி. எம். கிருஷ்ணாவின் பாட்டுக்கு எண்ணற்ற ரசிகர்கள் உண்டு. அவரது தடாலடிப் பேச்சாலும் எழுத்தாலும் அவரது பிரபல்யம் மேலும் அதிகரித்தது. பொதுவாக பிராமணர்கள் பற்றி, மற்ற சீனியர் வித்வான்கள் பற்றி, அரசியல் சார்ந்த விஷயங்கள் பற்றி, அவர் தாட்பூட்டென்று, கன்னாபின்னாவென்று, கருத்துகள் சொல்லியும், பெரியார் என்று அழைக்கப்படும் ஈ. வெ. ராமசாமியைப் போற்றியும் கூடுதலான கவனம் ஈர்த்தார். இதனால் பல கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு அவர்மீது அதிருப்தியும் வருத்தமும் உண்டு.
கர்நாடக சங்கீதம் பயில்பவர்கள், மேடைக் கச்சேரி செய்பவர்கள், அந்த இசையை ரசிப்பவர்கள் ஆகியோரில் பிராமணர்கள் தொன்றுதொட்டு அதிகம் இருக்கிறார்கள். டி. எம். கிருஷ்ணாவும் ஒரு பிராமணர்.
பொதுவாக பிராமணர்கள் அதிக தெய்வ நம்பிக்கை உடையவர்கள். ஹிந்து தெய்வங்கள் மீதான ஸ்தோத்திரங்கள் கற்று மனப்பாடம் செய்கிறவர்கள் – இப்போது அந்தச் சமூகத்துச் சிறுவர்களிடம் அந்த வழக்கம் குறைந்து வந்தாலும்.
ஹிந்து மதத்தை, ஹிந்து தெய்வங்களை, மிக இழிவாகப் பேசி, ராமருக்குச் செருப்பு மாலை அணிவித்த ஊர்வலத்தில் பிரதானமாக இருந்து, பிராமணர்களையும் கேவலம் செய்து வந்தவர் ஈ. வெ. ராமசாமி. ஆகையால் அவர் மீது மனக் கசப்பு கொண்ட நிறைய ஹிந்துக்கள் உண்டு, அவர்களுள் நிறைய பிராமணர்கள் உண்டு. அத்தகைய பிராமணர்கள் – அதுவும் தெய்வத்தைப் புகழ்வது மிக முக்கிய அம்சமாக இருக்கும் கர்நாடக இசையைப் பயின்றவர்கள் – ஈ. வெ. ரா-வைச் சிலாகித்துப் பேசும் டி. எம். கிருஷ்ணாவை அந்தக் காரணத்தினாலும் மனதளவில் தள்ளி வைப்பார்கள். தெய்வ நம்பிக்கை உள்ள மற்ற இசைக் கலைஞர்களும் அப்படித்தான்.
தெய்வ நம்பிக்கை உள்ள ஹிந்துக்களுக்கு வாழ்வில் அது மிக முக்கியம். தெய்வத்தை வலிய இகழ்கிற ஒருவரை, ஈ. வெ. ரா-வைப் பெரிதும் புகழ்கிற ஒருவரை, அவர்கள் கச்சை கட்டி பதிலுக்கு எதிர்க்காமல் இருக்கலாம், ஆனால் அந்த நபரிடமிருந்து விலகி இருப்பார்கள், அவருடன் கூடிக் குலவ மாட்டார்கள். இதற்காக இப்படி விலகி நிற்கும் போக்கு படித்தவர்களிடம் அதிகம் இருக்கும். சரித்திரக் காரணங்களால் அநேக பிராமணர்கள் படித்தவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள் டி. எம். கிருஷ்ணா போன்ற பெரியார் அபிமானியிடமிருந்து – அவரே ஒரு பிராமணர் என்றாலும் – கசப்புடன் விலகி இருக்க நினைப்பார்கள்.
பகுத்தறிவுத் தந்தை எனப்படும் ஈ. வெ. ரா – வைப் போற்றும் ஒரு புதிய பாடலை டி. எம். கிருஷ்ணா சென்ற வருடம் கர்நாடக சங்கீத பாணியில் பாடினார். அதன் வீடியோ இன்டர்நெட்டில் இருக்கிறது. அந்தப் பாடலை அறிமுகம் செய்து அந்த வீடியோவில் சில வார்த்தைகள் பேசுபவர், “பயன்படாத எதையும் பெரியார் திரும்பிக்கூட பார்க்க மாட்டார். அதில் இசை முதலிடம் பெறும்” – அதாவது, பெரியாருக்கு இசை பிடிக்காது, ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை இசையினால் யாருக்கும் எதுவும் பிரயோஜனம் இல்லை – என்றும் தெரிவிக்கிறார். பெரியாரைப் போற்றும் டி. எம். கிருஷ்ணா, பெரியார் நிராகரித்த இசையிலேயே அவரைப் புகழ்ந்து பாடுகிறார். இது என்ன பகுத்தறிவோ?
பகுத்தறிவு விஷயத்தை விட, அடிப்படை மனித இயல்பு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம், டி. எம். கிருஷ்ணா விருதுக்கான எதிர்ப்பில் உள்ளது. அதுதான் முக்கிய விஷயம்.
மனதளவில் நான் மிகவும் கசந்த ஒருவரிடம் திறமைகள் இருந்தால், அவர் திறமையை நான் மறுக்க அவசியம் இல்லை. ஆனால், அந்தத் திறமைக்காக அந்த நபரை நான் மனமுவந்து கொண்டாடத் தயங்குவேன், அவரைக் கொண்டாடும் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற விரும்ப மாட்டேன். அதுவும் என் ஜென்மத்தில் நான் பணிந்து வணங்கும் தெய்வத்தைத் தூற்றிய ஈ. வெ. ரா என்ற மனிதரின் அபிமானியாக, அந்த மனிதரைப் போற்றுபவராக, அந்த மற்ற நபர் இருந்தால் நான் அந்தக் காரணத்திற்காகவும் அந்த நபரை நிச்சயம் கொண்டாட மாட்டேன். அவர் மீது எனக்குப் பொறாமை இல்லை. ஆனால் முடிந்தவரை என் மதிப்பை என் செயலால் நான் காப்பாற்றுவேன்.
மேற்சொன்ன காரணத்தால், சங்கீத கலாநிதி விருது டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்கப்படும் என்று சில தினங்கள் முன் மியூசிக் அகாடமி அறிவித்த உடன், கர்நாடக சங்கீத உலகைச் சேர்ந்தவர்கள், உபன்யாசம் மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள், என்று சிலர் தங்கள் அதிருப்தியையும் எதிர்ப்பையும் தெரிவித்திருக்கிறார்கள். ரஞ்சனி-காயத்ரி, திருச்சூர் சகோதரர்கள், சித்திர வீணை ரவிகிரண், விசாகா ஹரி, துஷ்யந்த் ஸ்ரீதர், ஆகியோர் அந்த எதிர்ப்பாளர்கள். கடிதம் மற்றும் சமூக வலைத் தளம் மூலமாக, கவலை தோய்ந்த அவர்களின் உணர்வுகள் நாகரிகமாக வெளியாகி இருக்கிறது.
அகாடமியின் தேர்வுக்கு வெளிப்படையாக எதிர்ப்புச் சொன்னவர்கள் போக, தங்கள் எதிர்ப்பைப் பகிரங்கமாக வெளிப்படுத்தாத கர்நாடக இசைக் கலைஞர்கள், அதுவும் வளரும் கலைஞர்கள், இருப்பார்கள். அவர்கள் என்ன நினைப்பார்கள்? ‘நமது எதிர்ப்பை வெளியில் சொன்னால், வருவது வரட்டும் என்று டி. எம். கிருஷ்ணாவுக்கே துணிச்சலாக சங்கீத கலாநிதி பட்டம் கொடுக்கும் மியூசிக் அகாடமி, வளர்ந்துவரும் நமக்கு வேண்டுமென்றே என்ன கெடுதல் செய்வார்களோ?’ என்று அவர்கள் கவலைப் படுவார்களே? அதனால் அவர்கள் மௌனம் காப்பார்கள். அதிருப்தி அடைந்த மற்ற பல முன்னணிக் கலைஞர்கள் கூட, சக்திவாய்ந்த அகாடமியைக் குறைசொல்ல சற்று யோசிக்கலாம். போகப் போகத் தெரியும்.
மியூசிக் அகாடமியின் இப்போதையத் தலைவர் என். முரளி. அவர் ‘ஹிந்து’ பத்திரிகை வெளியிடும் கம்பெனியில் ஒரு இயக்குனரும் கூட. ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் அகாடமிக்கு வருத்தப்பட்டு எழுதிய எதிர்ப்புக் கடிதத்திற்கு அவர் எழுதிய பதிலில் கடுகடுப்பும் அதிகார தோரணையும் அதிகமாக இருக்கிறது. பிரச்சனையின் தன்மை, அதன் அடிப்படை, அவருக்குப் புரிந்த மாதிரி இல்லை. அல்லது அதையெல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை.
என்னதான் ஒருவர் சிறந்த விளையாட்டு வீரராக இருந்தாலும், பதக்கங்கள் வென்றாலும், அவர் தேசியக் கொடியை அவமதித்து வந்தால் – அல்லது, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் பேசியது போல், இந்தியா-சைனா மோதலில் இந்தியாவை சங்கடப் படுத்தி சைனா சந்தோஷப்படும் வகையில் பேசி வந்தால் – அவருக்கு மத்திய அரசு அர்ஜுனா விருதை வழங்காமல் இருப்பது நல்லது. தெய்வத்தைத் துதிக்கும் கர்நாடக இசை உலகில், ஹிந்து மதத்தை அனுதினமும் இழிவு செய்த ஒருவரைப் போற்றி வந்த டி. எம். கிருஷ்ணாவுக்கு – மேற்சொன்ன மற்ற காரணங்களுக்காகவும் – பாரம்பரியமான அகாடமி இயந்திர நோக்கில் ஒரு பெரிய கௌவரத்தை அளிக்காமல் இருக்கலாம்.
ஒருவேளை, தேசிய அரசியலை ஹிந்து பத்திரிகை பொறுப்பில்லாமல் காண்பிப்பது போல், மியூசிக் அகாடமியும் இனி அப்படி நடத்தப் படுமா – தனக்குள்ள சட்ட உரிமைகளை மட்டும் உயர்த்திக் காட்டி? திமுக-வின் கனிமொழியும் தமிழக மார்க்சிஸ்ட் கட்சியும் கூட, மியூசிக் அகாடமியின் தேர்வைப் பாராட்டி எதிர்ப்பாளர்களுக்குக் கண்டனம் தெரிவித்து, அறிக்கை கொடுத்துவிட்டார்களே?
ஐபில் 2024இல் மூன்றாம் நாளான இன்று 24.03.2024, ஞாயிற்றுக்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையில் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. முதல் ஆறு பவர் பிளே ஓவர்களில் ராஜஸ்தான் அணி 2 விக்கட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சனும் (52 பந்துகளில் ஆட்டமிழக்கமல் 82 ரன், 3 ஃபோர், ஆறு சிக்ஸர்) ரியன் பிராயாக்கும் (29 பந்துகளில் 43 ரன், ஒரு ஃபோர், 3 சிக்சர்) நன்றாக ஆடினர். கடைசில் களம் இறங்கிய துருவ் ஜுரல் 12 பந்துகளில் 20 ரன் அடித்தார். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது.
அதன்பிறகு ஆடவந்த லக்னோ அணி பவர்பிளேயில் 3 விக்கட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் இம்பேக்ட் பிளேயராக தீபக் ஹூடா இறங்கினார். ராகுல் (44 பந்துகளில் 58 ரன்கள், 4 ஃபோர், 2 சிக்சர்), தீபக் ஹூடா (13 பந்துகள் 26 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), பூரன் (41 பந்துகளில் 64 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) நன்றாக ஆடினர். இருப்பினும் அந்த அணியால் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியவில்லை. இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக அறிவிக் கப்பட்டார்.
குஜராத் vs மும்பை
குஜராத் அணி (168/6, சாய் சுதர்ஷன் 45, கில் 35, தேவாத்தியா 22, பும்ரா 3/14, கோயட்சி 2/27) மும்பை அணியை (டிவால்ட் ப்ரீவிஸ் 46, ரோஹித் ஷர்மா 43, திலக் வர்மா 25, நமன் தீர் 20, மோஹித் ஷர்மா 2/32, ஒமர்சாய் 2/27, உமேஷ் யாதவ் 2/31, ஸ்பென்சர் ஜான்சன் 2/25) 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. மட்டையாட வந்த குஜராத் அணி பவர்பிளே ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்தது. குஜராத் பேட்டர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள், ஆனாலும் அவர்களால் அதிரடியாக ஆடமுடியவில்லை. பும்ரா நாலாவது ஓவரை வீச வந்தார்; அந்த ஓவரின் இறுதியில் விருத்திமன் சாஹாவை கிளீன் போல்ட் செய்தார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த கில் சாவ்லா பந்தில் எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சம இடைவெளிகளில் விக்கட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. 17ஆவது ஓவரில் பும்ரா இரண்டு விக்கட்டுகள் எடுத்தார். பும்ரா மொத்தத்தில் நாலு ஓவர் வீசி 14 ரன் கொடுத்து 3 விக்கட்டுகள் எடுத்தார். எனவே குஜராத் அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 168 ரன் எடுத்தது.
இதன் பின்னர் ஆடவந்த மும்பை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது, இஷான் கிஷன் நாலாவது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால் ரோஹித் ஷர்மா (29 பந்தில் 43 ரன்), நமன் தீர் (10 பந்துகளில் 20 ரன்), டிவால்ட் ப்ரீவிஸ் (38 பந்துகளில் 46 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். மும்பை அணி வெற்றி பெற்றுவிடும் என்று இருந்த நிலையில் ஸ்பின்னர்கள் அருமையாக பந்து வீசி ரன் ரேட்டைக் குறைத்தனர். அதன் பின்னர் வேகப்பந்து வீச்சாளர்கள், குறிப்பாக 18ஆவது ஓவரில் ஒரு விக்கட், 19 மற்றும் 20 ஆவது ஓவர்களில் தலா 2 விக்கட் என மொத்தம் ஐந்து விக்கட்டுகள் வீழ்த்தினர். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
குஜராத் அணியின் சாய் சுதர்ஷன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை பெங்களூருவில் பஞ்சாப், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் பயோ-எத்தனால் தொழிற்சாலை தொடங்கி, விவசாயிகள் ஒவ்வொருவரையும் முதலாளிகளாக மாற்றுவேன் என்று திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக., வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமன் கூறினாா்.
தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்களையும், வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன. அவ்வகையில், திருவண்ணாமலை தொகுதிக்கு, பாஜக., வேட்பாளராக அஸ்வத்தாமன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
வேட்பாளராக கட்சித் தலைமையினால் அறிவிக்கப்பட்ட அ.அஸ்வத்தாமன் சனிக்கிழமை நேற்று மாலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். கிரிவலப் பாதையில் உள்ள தெற்கு மாவட்ட பாஜக., அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகளை வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமன் சந்தித்துப் பேசினாா்.
பின்னர் அவா் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியவை…
திருவண்ணாமலை மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம். இங்கே கரும்பு, நெல், மணிலா அதிகம் விளைகிறது. இவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது விவசாயிகள் அதிக லாபம் பெறும் வகையிலான எந்தத் திட்டமும் மாவட்டத்தில் செயல்படுத்தவில்லை. கரும்பு விவசாயிகள் தங்களுக்குச் சேர வேண்டிய பல கோடி ரூபாய் நிலுவைத் தொகையை பெற்றுத்தரக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனா்.
நான் வெற்றி பெற்றால் தொகுதியில் பயோ-எத்தனால் தொழிற்சாலையைத் தொடங்க நடவடிக்கை எடுப்பேன். இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். பயோ-எத்தனால் தொழிற்சாலை மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்படும்.
இங்கே, இளைஞா்கள் ராணுவத்தில் சேருவதற்கான இலவசப் பயிற்சி மையம் தொடங்கப்படும். பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் வகுக்கப்படும்.
தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மாதம்தோறும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி இளைஞா்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தருவேன்.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி மக்களுக்கு பயன்தரக்கூடிய எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை. வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய எந்தத் தொழிற்சாலையையும் திமுக., மக்களவை உறுப்பினா் கொண்டு வரவில்லை.
இன்று தமிழகமே பாஜக.,வின் கோட்டையாக மாறி வருகிறது. பிரதமர் மோடியின் திட்டங்களின் வாயிலாக, தமிழகத்தில் பல மக்கள் நலத் திட்டங்கள் உருவாகியுள்ளது.
விவசாயிகளுக்கு கொடுக்கின்ற ரூ. 6 ஆயிரம் ஆகட்டும், வீட்டுக்கு குடிநீர் தரும் திட்டம், விவசாயிகளுக்கு என வங்கி கணக்கு ஆரம்பித்தல் என எல்லோருக்கும் பயன் அளிக்கக்கூடிய திட்டங்களை பிரதமர் நிறைவேற்றியுள்ளார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஒரு எழுச்சி இருக்கிறது.. என்றார்.
வேட்பாளருக்கு வரவேற்பு:
தேசிய ஜனநாயகக் கூட்டணி திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் திருவண்ணாமலை நகருக்கு வந்தார்.
அப்போது அவரை பாஜக வேலூர் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலாளர் குணசேகரன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் வாசுதேவன், நாடாளுமன்ற அமைப்பாளர் நேரு, கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் சங்கர், திருவண்ணாமலை வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் வழக்கறிஞர் கிஷோர் குமார், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பாஜகவினருடன் பொதுமக்களை சந்தித்து தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு வேட்பாளர் அஸ்வத்தாமன் தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேட்பாளர் அஸ்வத்தாமன் . கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா புகைப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர். தந்தையார் பெயர் அல்லி முத்து , இவருடைய தாத்தா பரசுராம கவுண்டர்.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி வேட்பாளர் அஸ்வத்தாமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ளார். இவர் தற்போது பாஜக.,வின் மாநிலச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
ஐபில் 2024 தொடங்கிய இரண்டாம் நாளான இன்று, சனிக்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையில் பஞ்சாப், சண்டிகருக்கு அருகில் உள்ள முல்லன்பூரில் உள்ள மஹராஜா யதுவிந்தரசிங் மைதானத்தில் நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் கொல்கொத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது.
பஞ்சாப் vs டெல்லி
டெல்லி அணியை (174/9, அபிஷேக் போரல் 32*, ஷாய் ஹோப் 33, வார்னர் 29, மார்ஷ் 20, அக்சர் படேல் 21, அர்ஷதீப் 2/28, ஹர்ஷல் 2/47) பஞ்சாப் அணி (19.2 ஓவரில் 177/6, சாம் கரன் 63, விலிங்க்ஸ்டோன் 38, பிரப்சிம்ரன் சிங் 26, ஷிகர் தவான் 22, கலீல் அகமது 2/43, குல்தீப் 2/20) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. முதல் ஆறு ஓவர்கள் பவர் பிளே ஓவர்கள். அதில் டெல்லி அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்தது. முதல் நாலு பேட்ஸ்மென்களும் நன்றாக ஆடினர். 17.2ஆவது ஓவரில் அபிஷேக் போரல் ஆடவந்தார். அவர் ஒரு இம்பேக்ட் பிளேயெர். அந்த ஓவரின் மீதமுள்ள 4 பந்துகளில் அவர் 6 ரன் எடுத்தார். இருபதாவது ஓவரில் 4, 6, 4, 4, 6 என அபாரமாக ஆடினார். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பிறகு ஆடவந்த பஞ்சாப் அணி பவர்பிளேயில் 2 விக்கட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சாம் கரன் 47 பந்துகளில் 6 ஃபோர் ஒரு சிக்சருடன் 63 ரன்கள் எடுத்தார். லியம் லிவிங்க்ஸ்டோன் 21 பந்துகளில் 2 ஃபோர், 3 சிக்சர்களுடன் 38 ரன்கள் எடுத்தார். இதனால் 19ஆவது ஓவரில் இரண்டு அடுத்தடுத்த விக்கட்டுகள் விழுந்தபோதிலும் பஞ்சாப் அணி ஆறு விக்கட்டுகள் இழப்பிற்கு 177 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சாம் கரன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
கொல்கொத்தா vs ஹைதராபாத்
கொல்கொத்தா அணி (208/7 ரசல் 64*, பில் சால்ட் 54, ரமன்தீப் சிங் 35, ரிங்கு சிங் 23, நடராஜன் 3/32, மார்கண்டே 2/39) சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை (ஹென்றிச் கிளாசன் 63, மயங்க் அகர்வால் 32, அபிஷேக் ஷர்மா 32, ராகுல் திரிபாதி 20, மர்க்ரம் 18, ஹர்ஷித் ராணா 3/33, ரசல் 2/25) 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. கொல்கொத்தா அணியில் சுனில் நரேன் (2 ரன்), வெங்கடேஷ் ஐயர் (7 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (பூஜ்யம் ரன்) நிதீஷ் ராணா (9 ரன்) ஆகியோர் மோசமாக ஆடினர். ஆனால் மறுபுறம் பில் சால்ட் 40 பந்துகளில் 54 ரன் குவித்தார். 13.5ஆவது ஓவரில் சால்ட் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 119/6. 16ஆவது ஓவரில் ரசல் மூன்று சிக்சர் அடித்தார். 17ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார். 18ஆவது ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸ். 19ஆவது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு போர் அடித்தார். 20ஆவது ஓவரை நடராஜன் திறமையாக வீசியதால் அதிக ரன் எடுக்க முடியவில்லை. 20 ஓவர் முடிவில் கொல்கொத்தா அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 208 ரன் எடுத்தது.
இதன் பின்னர் ஆடவந்த சன் ரைசர்ஸ் அணி முதல் ஐந்து ஓவர்கள் வரையிலும் சிறப்பாக ஆடியது. அதன் பின்னர் சுனில் நரேன் வீசிய நான் கு ஓவர்களில் (ஒவர் 4, மெய்டன் இல்லை, 19 ரன், ஒரு விக்கட்) ஆட்டம் திசை மாறியது. சுனில் தன்னுடைய நாலு ஓவரையும் வீசி முடிக்கும்போது, 13ஆவது ஓவர் முடிவில் சன் ரைசர்ஸ் அணி 4 விக்கட் இழப்பிற்கு 111 ரன் எடுத்திருந்தது. அதன் பின்னர் ஹென்றிச் கிளாசன் அதிரடியாக ஆடினார். அவர் 29 பந்துகளில் 8 சிக்சர் அடித்து 63 ரன்கள் எடுத்தார். இருப்பினும் சன்ரைசர்ஸ் அணியால் 20 ஓவரில் ஏழு விக்கட் இழப்பிற்கு 204 ரன் கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கொத்தா அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரூ ரசல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
தொடக்கவிழா
சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று (22 மார்ச்சு 2024) ஐ பி எல் 2024 போட்டி கோலாகலமாகத் தொடங்கியது. கலை நிகழ்ச்சிகளில் பாலிவுட் நடிகர்களான அக்ஷய்குமார், ஜாக்கி ஷெராஃபின் மகனான டைகர் ஷெராஃப் ஆகியோர் நடனமாடினர். இசையமைப்பாளர் A.R, ரஹ்மான் வந்தேமாதரம் பாடலைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். A.R, ரஹ்மான் இசைக் குழுவினருடன் சோனு நிகம் அவர்களும் பாடினார். வாணவேடிக்கைகளுடன் தொடக்க விழா இனிதே நிறைவுற்றது. தமிழ்நாடு கிரிக்கட் அசோஷியேசனின் தலைவர் டாக்டர் அசோக் சிகாமணி (அமைச்சர் டாக்டர் பொன்முடியின் மகன்), இந்திய கிரிக்கட் வாரியத்தின் தலைவர் ஜெய்ஷா ஆகியோர் தொடக்க ஆட்டத்தைக் காணவந்திருந்தனர்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் முதல் போட்டியை நடிகர் தனுஷ் தனது பாடிகார்டுகளுடன் வந்து பார்த்து ரசித்தார். தங்கை ஷாமிலியுடன் அஜித் மனைவி ஷாலினி ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்தார். நடிகர் ஜெயம் ரவி மனைவியுடன் சேப்பாக்கம் வந்து மேட்ச்சை பார்த்து ரசித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தல தோனியின் தீவிர ரசிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் சதீஷும் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியை சேப்பாக்கம் வந்து கண்டு ரசித்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ராயல் சேலஞ்சர்ஸ் அணியை (173/6, அனுஜ் ராவத் 48, தினேஷ் கார்த்திக் 38*, டியு பிளசிஸ் 35, கோலி 21, முஸ்தஃபிகுர் ரஹ்மான் 4/29) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி (18.4 ஓவர்களில் 176/4, ரச்சின் ரவீந்திரா 37, ஷிவம் துபே 34*, ரஹானே 27, ஜதேஜா 25, கிரீன் 2/27) ஆறு விக்கட் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையாவில் பெங்களூரு அணி வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ட்யு பிளெசிஸ் (35), விராட் கோலி (21) ஆகியோர் 4.3 ஓவரில் 41 ரன்கள் சேர்த்தனர். நடுவில் அந்த அணியின் இன்னிங்ஸ் தடுமாறியது. கடைசியில் அனுஜ் ராவத் (48), தினேஷ் கார்த்திக் (38) ஆகியோர் ஆர்சிபியின் ஸ்கோரை 173 ரன்களுக்கு கொண்டு சென்றனர்.
ஆர்சிபி நிர்ணயித்த 174 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு 38 ரன்னில் முதல் விக்கட் விழுந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 15 ரன்களில் வெளியேறினார். இருப்பினும், இளம் பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திரா, 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு ஷிவம் துபே (34), ரவீந்திர ஜதேஜா (25) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழாமல் ஆடியதால் சிஎஸ்கே 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. இதில் ஷிவம் துபே சிஎஸ்கே அணி பேட்டிங்க் செய்யும்போது இம்பேக்ட் பிளேயராக முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கப் பதிலாக இறங்கினார்.
2008 ஐபிஎல் போட்டிக்குப் பிறகு சென்னை அணியை இன்னமும் பெங்களூர் அணி சேப்பாக்கத்தில் வீழ்த்த முடியவில்லை. முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.