Home Blog Page 226

வைகோ.,வின் வாரிசு அரசியல்! தாயகத்தில் இருந்தல்ல… வையகத்தில் இருந்தே வெளியேறிய கணேசமூர்த்தி!

500x300 1873504 mdmk - 2026
#image_title

வைகோ.,வின் வாரிசு அரசியல், ஒருவரை தாயகத்தில் இருந்தல்ல… வையகத்தில் இருந்தே வெளியேற வைத்துவிட்டது. தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக, கடும் மன அழுத்தத்தில் இருந்த ஈரோடு மதிமுக., எம்பி., கணேசமூர்த்தி, திடீரென தன் உயிரை மாய்த்துக் கொள்ள தற்கொலைக்கு முயன்று, அதில் வெற்றி பெற்றிருக்கிறார். நேற்று காலை அவரது மரணச் செய்தி வெளியான போது, அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல சமூக தளங்களிலும் பலர் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியது இப்பப்டிதான்…

வாரிசு அரசியல் ஒருவரை போட்டு பார்த்து விட்டது! எந்த வாரிசு அரசியலுக்காக கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டேன் என்று தொண்டர்கள் 5 பேர் துடிதுடிக்க மரணித்த போதும் அதைச் சொல்லி கட்சியை வளர்த்து தொண்டர்களின் உணர்ச்சியைத் தூண்டி பேசி வந்த வைகோ, இன்று தனது வாரிசு அரசியலால் தன் கட்சியை சேர்ந்த ஒரு தியாகியை காவு கொடுத்து விட்டார். என்ற வகையில் கருத்துக்கள் பரவலாகக் காணக் கிடைத்தன.

பாஜக.,வின் மாநிலத் துணைத் தலைவர், நாராயணன் திருப்பதி இது குறித்துக் கூறிய போது, “அன்று கணக்கு கேட்டதால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஒருவர்… இன்று கணக்கு கேட்டதால். ‘வை’யகத்திலிருந்தே வெளியேறினார் ஒருவர்…. இது தான் திராவிட மாடலோ? அய்ய…. ‘கோ’ – என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டது… “ஈரோடு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை தமிழக அரசியலில் நிரந்தரமான கருப்பு புள்ளியை வைத்து விட்டது. வாரிசு அரசியலின் கோரம் அண்ணா அவர்களின் காலத்தில் அரசியலுக்கு வந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பலி வாங்கியுள்ளது என்றால் மிகையாகாது. வாரிசு அரசியலை எதிர்த்து வை கோ தனிக்கட்சி துவங்கிய போது பல தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரை விட்டது அந்த கட்சிக்கு உரம்போல் வித்திட்டது. ஆனால், பதவியும், பணமும், ஆசையும், நிலையில்லா எண்ணமும் வை கோ அவர்களையும், அவரின் ம தி மு கவையும் படுகுழியில் தள்ளி விட்டது. எந்த தி மு க வின் வாரிசு அரசியலை  எதிர்த்தாரோ, அதே தி மு கவின் நிழலில் அண்டிப்பிழைக்கும் நிலை அவருக்கு வந்தது, தன் வாரிசின் அரசியல் நலன் கருதியே. எந்த  தற்கொலைகள் ம தி மு கவின் துவக்கத்துக்கு, வளர்ச்சிக்கு வித்திட்டதோ அதே தற்கொலை தான் ம தி மு கவின் வீழ்ச்சிக்கும், முடிவுக்கும் வித்திட்டு விட்டது.

வை கோ அவர்களே, ம தி மு கவை இன்றே கலைத்து விடுவது தான் தற்கொலைகள் செய்து கொண்டு உயிர்நீத்த பல தொண்டர்களுக்கு நீங்கள் செய்யும் இறுதி மற்றும் ஒரே மரியாதை. – என்றார் நாராயணன் திருப்பதி.

ஈரோடு மக்களவைத் தொகுதி எம்.பி.,யாக இருந்தவர் கணேசமூர்த்தி. 2019-ம் ஆண்டு மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 72 மணி நேர சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை கணேச மூர்த்தி காலமானார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தெரிவித்தது.

முன்னதாக கடந்த 24 -ஆம் தேதி கணேச மூர்த்தியை பார்ப்பதற்காக அவரது மகன் கபிலன் வீட்டிற்கு சென்றார். அப்போது கணேச மூர்த்தி மயக்க நிலையில் இருந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது அவர் தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தைத் தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்பட்டது. இந்நிலையில் அவருக்கு நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்தது.

இது குறித்து, மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறிய போது, கணேசமூர்த்தியும், நானும் உயிருக்கு உயிராகப் பழகினோம். அவர் கொள்கைப் பிடிப்புடன் பணியாற்றியவர். கொங்கு மண்டலத்தின் சிங்கமாக இருந்தவர். அவர் இப்படி ஒரு முடிவுக்கு வருவார் என்று நினைக்கவில்லை. எனக்கு இடி விழுந்தது போல் இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் 2 சீட்டுகள் கிடைத்தால் நானும், துரையும் போட்டியிடுகிறோம் என்றார். ஒரு சீட் கிடைத்தால் துரையே நிற்கட்டும் என்றார். அதன் பிறகும் அவர் மகிழ்ச்சியாக தான் இருந்தார். எம்.பி. சீட் கிடைக்காததால் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்தார் என்று கூறப்படுவதில் துளி கூட உண்மை இல்லை. என்னை அவர் நட்டாற்றில் விட்டு விட்டுப் போவது போல செல்வார் என நினைக்கவில்லை. அவர் மறைந்த செய்தியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனஉறுதி கொண்டவர் மருந்து குடித்தார் என்பதை நம்ப முடியவில்லை. அவரது மன உளைச்சலுக்குக் காரணம் அவரது குடும்பத்தினரிடம் கேட்டால் தான் தெரியும். கணேசமூர்த்தி என்றும் திராவிட இயக்கத்தின் அழியா நட்சத்திரமாக இருப்பார்… என்றார்.

கணேசமூர்த்தியுடன் நெருங்கிப் பழகியவரும், மதிமுக., தொடக்க காலத்தில் வைகோவுடன் கரம் கோத்து வெளிவந்து மதிமுக.,வின் தூண்களின் ஒருவருமாக இருந்த வழக்குரைஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன், குறிப்பிட்ட போது, அனபு நண்பர் ஈரோடுகணேசமூர்த்தி காலமானார்…. வேதனை.. ஆழ்ந்த இரங்கல். இரவில் கடந்த நாட்களில் தன் நிலைமையை சொல்லி என்னிடம் பேசுவார். அவரிடம் மதிமுக ஆரம்பகட்ட முக்கியமாக இருந்த இன்னும் ஒன்றும் பெறா சிலர் பொன் முத்தராமலிங்கம், அடியேன், மாமீ, தங்கவேலு போன்றோர் பல ரணங்களை ஏற்று இருக்கிறோம். நீங்களாவது ஒரு முறை எம்எல்ஏ, மூன்று முறை எம்பி., சில தேர்தலகளில் வாய்ப்பைப் பெறமுடிந்தது. உங்களுக்கு என்ன விவசாயம், நல்ல குடும்பம் உள்ளது என சொல்லி அவரை ஆறுதல் படுத்துவேன். ஐயையோ மதிமுகவில் பயணித்த உணர்வுள்ள ஒரு மனிதர் மதிமுகவுக்காக உழைத்த தன் உயிரையே இழந்திருக்கிறார்.” என்று தனது வருத்தங்களைப் பதிவு செய்தார்.

கணேசமூர்த்தியின் மறைவு குறித்து சமூகத் தளத்தில் எழுதிய கே.எஸ்.இராதாகிருஷ்ணன், கணேச மூர்த்திகள்… பெண்கள் பொது வெளியில் தேவையற்று சிரிக்கக் கூடாது. ஆண்கள் பொது வெளியில் அழக்கூடாது. தண்ணீர் விட்டா வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்! – என்று தலைப்பிட்டு எழுதியிருக்கிறார். அவர் எழுதியதிலிருந்து…

பெண்கள் பொது வெளியில் தேவையற்று சிரிக்கக் கூடாது .ஆண்கள் பொது வெளியில் அழக்கூடாது. இது ஒரு மரபு இந்த மரபு ஏன் பாதுகாக்கப்படுகிறது என்றால் இந்த இரண்டிலுமே சமூகம் சந்தித்த கோளாறுகள் அதிகம்.

மிகுந்த அனுபவங்களுக்கு பிறகு தான் இத்தகைய முடிவுகள் மக்கள் மத்தியில் பேசப்படுகின்றன.  மதிமுகவின் ஈரோடு கணேச மூர்த்தி அவர்களின் மறைவிற்கு வைகோ குலுங்கி அழுகிறார். சரிதான் … துயரம்

எதற்கு இந்த அழுகை ?என்ன அப்படி துக்கம் பற்றிப் பரவுகிறது. உங்கள் ஏற்பாட்டின் படி தேர்வின் படி அவரை மூன்று முறை நாடாளுமன்றத்திற்கும் ஒருமுறை  1989இல் திமுக சட்டசபைக்கும் பரிந்துரைத்து ஜெயித்தார்.

பிறகு என்ன தான் அவருக்கு குறை ஏன் இறந்துவிட்டார். உங்களுக்கு ஏன் துக்கம். அப்படி அவர் உங்களுக்கு கொடுத்த விசுவாசத்திற்கு நீங்கள் கொடுத்த கொடுப்பினைகளுக்கு நாங்கள் சங்கடப்பட ஏதுமில்லை.

1996 சட்டமன்றத் தேர்தலில் மதிமுக சார்பில் நூற்றி என்பது பேர் போட்டியிட்டு நான்கு பேர் தான் அதில் வெற்றி பெற முடிந்தது. கோவில்பட்டி தொகுதியில் அதிக வாக்கு பெற்று கூட நான் அதில் தோல்வி அடைந்தேன் என் போன்றோர் தவிர.

பல இடங்களில் மதிமுக டெபாசிட்டைக் கூட காப்பாற்ற முடியவில்லை. பம்பர சின்னம் பெற பாடுகள். எத்தனை பாடுகள் எத்தனை சிரமங்கள் எத்தனை விதமான பிரச்சாரங்கள்  அலப்பறைகள் மதிமுக நிலைத்து ஒரு நதியைப் போல ஓடிக் கொண்டிருக்கும் என்று நம்பி அதில் உழைத்த திமுகவை விட்டு வெளியே வந்த எங்களை போல எத்தனை பேருடைய கனவு  தமிழ்நாட்டின் அரசியல் வாழ்க்கையில் வீணாகப் போய்விட்டது .

வைகோ குலுங்கி குலுங்கி அழுகிறார். யாருக்காக அழுகிறார்? அவருடைய வாரிசுகளுக்காக அவர் அரசியல் பங்கு பற்றலின் சுயநலத்திற்காக மதிமுகவின் உன்னதமான மிகச்சிறந்த தனித்துவமான மாற்று அரசியல் நிலைப்பாட்டை தமிழகத்தில் கொண்டுவர வேண்டிய வந்திருக்க வேண்டிய வலிமைகளை இழந்து போய்  ஏன் அழுகிறார்.

நடந்தது என்ன அரசியல்வாதிகளின் பல பேருடைய மரணம் கிரிமினல் மரணமாக தமிழக வரலாற்றில் முடிந்து இருக்கிறது. ஆனால்  மதிமுகவை நம்பி வாழ்ந்தவர்கள்  எங்களை போன்ற பலரின் இருப்பு என்பது ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தவிர  இன்றளவில் துக்கரமான சிவில் மரணங்களாக மாறிக் கொண்டிருக்கிறது. நீங்கள் உண்மையில் எதற்காக அழுகிறீர்கள் வைகோ.

வாரிசு அரசியல் கூடாது என்பதற்காக கம்பு சுழற்றினீர்கள் இன்று திமுகவில் உங்கள் அரசியல் வாரிசு ஆன துரை வைகோவை பாராளுமன்றத்தில் நிப்பாட்டுவதற்கு கடின முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். கணேச மூர்த்திகள் முடிந்து விட்டார்கள். வாரிசு எதிரி என சொன்னது நீங்கள்…. ஆனால்,இப்பொழுது உங்கள் மகன்  தந்தைக்காகத்தான் அரசியலுக்குள்  வந்தேன் என்கிறார் . நீங்கள் வேறு பாவம் ஏன்அழுது கொண்டிருக்கிறீர்கள். கண்ணீரைத் துடையுங்கள். எங்களுக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது.

#வைகோ #வாரிசுஅரசியல் #கணேசமூர்த்தி #மதிமுக

IPL 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

ipl 2024 - 2026

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2024 – 28.03.2024 – ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

          ராஜஸ்தான் அணி (185/5, ரியான் பராக் 84*, அஷ்வின் 29, ஜுரல் 20) டெல்லி அணியை (173/5, வார்னர் 49, ஸ்டப்ஸ் 44*, ரிஷப் பந்த் 28, மார்ஷ் 23, பர்ஜர் 2/29, சாஹல் 2/19) 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஜெய்ப்பூரில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ராஜஸ்தான் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கும் யஸஸ்வி ஜெய்ஸ்வால் இன்றும் சரியாக ஆடவில்லை.

இரண்டாவது ஓவரில் 5 ரன்னுக்கு அவர் ஆட்டமிழந்தார். பவர்பிளே ஓவர்கள் முடிவதற்குள் சஞ்சு சாம்சனும் (15 ரன்) ஆடமிழந்தார். எட்டாவது ஓவரில் ஜாஸ் பட்லர் 11 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 36/3. அந்த இடத்தில் இருந்து 20ஆவது ஓவர் முடிவில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 185 ரன் எடுத்தது என்றால் அதற்கு  அஷ்வின் (19 பந்துகளில் 29 ரன், 3 சிக்சர்) துருவ் ஜுரல் (12 பந்துகளில் 20 ரன், 3 ஃபோர்) ஆகியோர் விளையாடிய விதம்தான் காரணம். இவர்களோடு ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன், ஏழு ஃபோர், ஆறு சிக்சர்) மிகச் சிறப்பாக ஆடினார். குறிப்பாக 20ஆவது ஓவரில் 20 ரன் எடுத்தார்.

          இரண்டாவதாக ஆட வந்த டெல்லி அணியின் பேட்டிங் ஆரம்பத்தில் நன்றாக இருந்தது. நாலாவது ஓவர், இரண்டாவது பந்தில் மார்ஷ் (12 பந்தில் 23 ரன்) அவுட்டானபோது அணி 30 ரன் எடுத்திருந்தது. அந்த ஓவரிலேயே ரிக்கி புயி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த வார்னர் (34 பந்துகளில் 49 ரன்)12ஆவது ஓவரில் அவுட்டானார். அதன் பின்னர் ஸ்டப்ஸ் சிறப்பாக ஆடியும் டெல்லி அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் அந்த அணி 12 ரன் கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

          ராஜஸ்தான் அணியின் ரியான் பராக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை பெங்களூருவில் கொல்கொத்தா அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையில் ஆட்டம் நடைபெற உள்ளது.

IPL 2024: அம்மாடியோவ்.. அசத்தல் ரன்கள்!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2024 – 27.03.2024 – ஹைதராபாத்
ம்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ்

ஹைதராபாத் அதிரடி ஆட்டம்
ஐபிஎல் ஆட்டங்களில் மிக அதிகமான ஸ்கோர்

          ஹைதராபாத் அணி (277/3, ஹென்ரிச் கிளாசன் 80*, ட்ராவிஸ் ஹெட் 62, அபிஷேக் ஷர்மா 63, மர்க்ரம் 42* ) மும்பை அணியை (246/5, திலக் வர்மா 64, டிம் டேவிட் 42*, இஷான் கிஷன் 34, நமன் தீர் 30, ) 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ஹைதராபாத்தில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அனி மூன்று விக்கட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது. ஒருநாள் ஆட்டத்திற்கே இது ஒரு சிறப்பான ஸ்கோர். டி20 ஆட்டத்திற்கு ரன் மழை என்றுதான் சொல்ல வேண்டும். விளையாடிய ஐந்து ஹைதராபாத் ஆட்டக்காரர்களில் மாயங்க் அகர்வால் மட்டும் சரியாக விளையாடவில்லை. மற்றவர்களின் ஸ்கோரிங் ரேட் 150க்கு மேல் இருக்க இவர் மட்டும் 84 என்ற வீதத்தில் ரன் சேர்த்தார். ட்ராவிஸ் ஹெட் (24 பந்துகளில் 62 ரன், 9 ஃபோர், 3 சிக்சர்) 18 பந்துகளில் 50 அடித்தார் என்றால், அபிஷேக ஷர்மா (23 பந்துகளில் 63 ரன், 3 ஃபோர், 7 சிக்சர்) 16 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர்களது இன்னிங்க்ஸ் இறுதியில் மர்க்ரம் (28 பந்துகளில் 42 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் கிளாசன் (34 பந்துகளில் 80 ரன், 4 ஃபோர், 7 சிக்சர்) இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர், பந்துவீச்சாளர்களில் பும்ராவைத் தவிர மீதமுள்ள அனைவரும் அதிக ரன் கொடுத்தனர்.

          இரண்டாவதாக ஆட வந்த மும்பை அணியின் பேட்டிங் ஆரம்பத்தில் அமர்களமாக இருந்தது. இஷான் கிஷன் முதலில் 3.2 ஓவரில் ஆடமிழந்தார். அவர் 13 பந்துகளில் 2 ஃபோர் மற்றும் 4 சிக்சருடன் 34 ரன் கள் அடித்தார். அடுத்த ஓவரில் ரோஹித் ஷர்மா அவுட் ஆனார். அவர் 12 பந்துகளில் 1 ஃபோர் மற்றும் 3 சிக்சர்களுடன் 26 ரன் அடித்தார். நமன் தீர் 14 பந்துகளில் 30 ரன், திலக் வர்மா 34 பந்துகளில் 64 ரன் அடித்தனர். ஆனாலும் ரன்ரேட் மளமளவெனக் குறைந்தது. இறுதியில் கடைசி இரண்டு ஓவர்களில் 54 ரன்கள் அடிக்கவேண்டியிருந்தது. அப்போது 19ஆவது ஓவரில் மும்பை அணியால் 7 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. கடைசி ஓவரில் 15 ரன் அடித்தும் மும்பை அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

          ஹைதராபாத் அணியின் அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை ஜெய்ப்பூரில்  ராஜஸ்தான் அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையில் ஆட்டம் நடைபெற உள்ளது.

எம்பி., டிக்கெட்தான் கிடைக்கலைன்னு பாத்தா… இதுக்குமா டிக்கெட் இல்ல?!

ipl 2024 - 2026

MP டிக்கெட்டா? IPL டிக்கெட்டா?

வேட்பாளர் டிக்கெட் கிடைத்துவிடும் ஆனால IPL டிக்கெட் கிடைக்காது

1000 ரூபாய் டிக்கெட் 10000 ரூபாய்.
திரையரங்கில் 50 ரூபாய் டிக்கெட் பிளாக்கில் விற்றவனை அழிக்கிறேன் என்று சொல்லி, மெகா மால் கட்டியதில், குறைந்தபட்சம் டிக்கெட் விலை ரூ. 200 ஆனது.

ஆன்லைன் மட்டுமே டிக்கெட் விற்பனை என்று கூறி IPL டிக்கெட் குறைந்த பட்சம் 11,000 ரூபாய்க்கு விற்பவன் பாமரனா இல்லை படித்தவனா?

இத்தனை விலை கொடுத்து டிக்கெட் வாங்கி குடிக்க தண்ணீர் கூட காசு கொடுத்து வாங்கி குடித்து வருபவன் படித்தவனா? பைத்தியமா?

பத்தாயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கும் ஏழைக்கு இலவச பஸ் பயணம் கொடுக்கும் அரசு? போக்குவரத்துத் துறை லாபத்தில் இயங்குகிறதா?

ஆயிரக் கணக்கில் செலவு செய்து டிக்கெட் வாங்குபவனுக்கு பாவம் பஸ் டிக்கெட் வாங்க பணமில்லை!

பல மெகாபைட் வேகம் உள்ளவன் மட்டும் டிக்கெட் பதிவு செய்ய முடியும் என்றால் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது?

புக்கிங் தொடங்கிய இரண்டு நிமிடத்தில் முடிவடைகிறது என்றால் 36,000 சீட் யார் கையில்?

பார்கோட் , டெக்னாலஜி எல்லாம் ஏமாற்று வேலையா?

அரசு நடவடிக்கை எடுக்க காத்திருக்காமல் நாம் புறக்ககணிக்க வேண்டும்…!

விளையாட்டு வீரர் லஞ்சம பெற்றால் வஞ்சிக்கும் நாம் விளையாட்டை நடத்துபவர்கள் இப்படி விளையாடினால் என்ன தண்டணை?

எதிலும் நேர்மையில்லாத இந்த IPL தேவையா?

  • கணேஷ் கிருஷ்ணன்

IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைடன்ஸ்

ipl 2024 - 2026

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2024 – 26.03.2024 – சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைடன்ஸ்

சென்னை அணி (206/5, ஷிவம் துபே 51, ருதுராஜ் 46, ரச்சிந்திரா 46, ரஷீத்கான் 2/49) குஜராத் அணியை (143/8, சாய் சுதர்ஷன் 37, சாஹா 21, தீபக் சாஹார் 2/28, முஸ்தஃபிகுர் ரஹ்மான் 2/30, துஷார் தேஷ்பாண்டே 2/21) 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே சென்னையில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசத்தீர்மானித்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் சிறப்பாக ஆடினார்கள். ரச்சின் (20 பந்துகளில் 46 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்) முதலில் 5.2 ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் இருக்கும் வரை சுமாராக ஆடிய கெய்க்வாட் (36 பந்துகளில் 46 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), ரச்சின் ஆட்டமிழந்த பின்னர் அதிரடியாக ஆடினார். அதன்பின்னர் அஜிங்க்யா ரஹானே 12 பந்துகளில் 12 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அச்சமயத்தில் ஷிவம் துபே தன்னுடைய வாணவேடிக்கைகளைத் தொடங்கினார். அவர் 23 பந்துகளில், 2 ஃபோர், 5 சிக்சருடன் 51 ரன் எடுத்தார். கடைசி இரண்டு ஓவர்களில் மூன்று விக்கட் விழுந்தபோதும் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 206 ரன் எடுத்தது.

இரண்டாவதாக ஆட வந்த குஜராத் அணியின் பேட்டிங் ஆரம்பத்திலிருந்தே சொதப்பல்தான். தொடக்கத்தில் மெதுவாக ஆடினாலும் பின்னர் சற்று வேகமாக ஆடக்கூடியவர் ஷுப்மன் கில். இன்று அவர்தான் முதலில் அவுட்டானார். விருத்திமான் சாஹா 21 ரன்னிற்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சாய் சுதர்ஷன் (37 ரன்), விஜய்ஷங்கர் (12 ரன்), டேவிட் மில்லர் (21 ரன்), ஒமர்சாய் (11 ரன்) என சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தனர். சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். இதனால் குஜராத் அணி 18ஆவது ஓவர் முடிவில் மீதமுள்ள 12 பந்துகளில் 79 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது. அதாவது எல்லா பந்துகளிலும் சிக்சர் அடித்தால் கூட வெற்றிபெற வாய்ப்பில்லாத நிலை. அந்த இரண்டு ஓவர்களிலும் குஜராத் அணி ஒரு விக்கட்டை இழந்து 15 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. சென்னை அனி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷிவம் துபே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை ஹைதராபாத்தில் மும்பை அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையில் ஆட்டம் நடைபெற உள்ளது.

Vinash Kale Viprit Buddhi

0
music academyy letter - 2026

By        Narasimhan Vijayaraghavan

“Vinash Kale Viprit Buddhi”- In the wake of impending doom your intellect takes leave. That is a famous Sanskrit phrase quoted often, as and from Chanakyaneethi. It was made colloquially famous and aptly understandable,  when the venerable Jaiprakash Narayan spoke  it, in the wake of declaration of Internal Emergency by Madam Indira Gandhi on 26th June,1975. We know it proved true,  as she met her ignominious Waterloo moment in 1977.

On reading the exchanges between RaGa sisters and Music Academy President N Murali, and huge backlash on print and electronic and social media, one was reminded of this adage,  as aptly describing the decision of Music Academy to designate T M Krishna for Sangita Kalanidhi.

Dr. Goutam Desiraju, with impeccable credentials as a renowned scientist and a trained carnatic musician with fifty plus years exposure to the Academy,  as a member in attendance for the conferences, poignantly and pointedly asked, “ What was the reason for the Academy to announce the name in March,2024, breaking the tradition of revealing the name only by September or thereabouts, or even say little earlier but never in March, for a December season? Why?”. He does provide an answer in his expositions now gone viral on YouTube.

The vehemence, not virtuosity with  which the Academy President defended the designation , made it amply clear it was ‘his decision’  nodded in by the Committee/coterie/limpets ( you take your pick). The choice was thrust on the committee and they chose to digest, not accept. And if ‘he’ has picked the nominee, a scan across the media turf would reveal who else was behind it or what motivated them to pick ‘him’ and in March,2024.

Rasikas are not fools,  as Academy would like us to believe.Why are Rasikas up in arms? Not physically but metaphorically. They are sad and anguished. Not angry. Upset that an undeserving pick was made for ‘extraneous factors’ which the President claims were irrelevant. No they mattered. They alone mattered with this nominee.

‘He’ had norespect for the community he happened to be born in. That is fine. That is  his chosen ideology. He trained in Carnatic music. Revered as divine by the Trinity. Religiosity was imbued in the Sahityas. ‘He’ may reject them. Excuse me, it was by singing them, teaching them ( to mint his moolah with his undeniable vidwat) he attained the stature he had/has. Yet, he called names of Saint Tyagaraja and bad mouthed even M S Amma. What hypocrisy that is? Make a living ( far higher and more than most) on Tyagaraja Kritis and then trashing his divine compositions, which by mutilating  them to yield to his political proclivities.

Does such a person deserve the Sangita Kalanidhi? Why are rasikas anguished? Because they revere Carnatic music. They value the Music Academy as a hallowed institution. If the Academy disdainfully rejects such premises and yields to baser political instincts, it is shame on them. RaGa and others could not stomach it. They were ‘made’ by the  divinity for their passion, devotion and vidwat. They could not see it being taken to the cleaners,  when a ‘respected fellow musician’ who represented the very opposite of these tenets,  being designated  as the ‘repository of Carnatic music’. It is nothing short of sacrilege, blasphemy and  intolerable Abaswaram.

Murali is not Music Academy  (Indira did not prove to be India as as her crony D K Bharooah proclaimed) . The composition of minions in the committee do not make it either. It is the rasikas who made it and make it. These ‘characters’  would come to pass. They will not be remembered for whatever they may  have done earlier in the last two decades. But, they  will never be forgotten  for what they have perpetrated in 2024-25.

The Music Academy is beyond these characters as an institution. Carnatic Music is a limitless, vast and divine ocean. . These characters cannot ruin either of them . They can and  may have besmirched its  pure standing,  transiently. Just in  2024-25, for now. The commoner rasikas ought to unite to shun the Music Academy this year. That is the least we can do to support the artistes who have stood up. And attend concerts in every other Sabha which does  not host T M Krishna.

‘They’ must go. And go ‘they’  will. Not long from today. Rasikas must continue to speak and act. And they will be heard. It takes time for good things to happen,while it may take no time  to perpetrate such a nonsense, you see.

Vinash Kale Viprit Buddhi.

IPL 2024: ராயல் செலஞ்சர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

ipl 2024 - 2026

ஐபிஎல் 2024 – 25.03.2024 – பெங்களூரூ
ராயல் செலஞ்சர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பஞ்சாப் அணி (176/6, ஷிகர் தவான் 45, ஜிதேஷ் ஷர்மா 27, பிர்ப்சிம்ரன் சிங் 25, சிராஜ் 2/26, மேக்ஸ்வெல் 2/29)  பெங்களூரு அணி (விராட் கோலி 77, ரபாடா 2/23, ஹர்பிரீத் ப்ரார் 2/13)

இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே பெங்களூருவில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசத்தீர்மானித்தது. பஞ்சாப் அணியில் ஷிகர் தவான் (45 ரன்), ஜிதேஷ் ஷர்மா (27 ரன்), பிரப்சிம்ரன் சிங் (25 ரன்) நன்றாக ஆடினர். தொடக்கத்தில் மெதுவாக ஆடினாலும் பிந்தைய ஓவர்களில் சிறப்பாக ஆடினர்.

முதல் 42 பந்துகளில் 50 ரன்களும், அடுத்த 33 பந்துகளில் அடுத்த 50 ரன்களையும் எடுத்தனர். அடுத்த 31 பந்துகளில் 150 ரன்னையும் மீதமுள்ள 14 பந்துகளில் 26 ரன்களையும் அந்த அணி சேர்த்தது. இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 176 ரன் எடுத்திருந்தது. பந்துவீச்சாளர்களில் முகம்மது சிராஜ் மற்றும் யஷ் தயால் இருவரைத் தவிர மற்றவர்கள் ரன் அதிகம் கொடுத்தனர்.

          இரண்டாவதாக ஆடவந்த பெங்களூரு அணியில் ட்யு பிளேசிஸ் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் சொற்ப ரங்களுக்கு ஆட்டமிழந்தனர். ரஜத் படிதர் 18 ரன் எடுத்தார். கிளன் மேக்ஸ்வெல் 3 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மறுபுறம் நன்றாக ஆடிய விராட் கோலி 16ஆவது ஓவர் முடிவில் 77 ரன்னுக்கு (49 பந்துகள், 11 ஃபோர், 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். தொடர்ந்து அனுஜ் ராவத்தும் 11 ரன்னுக்கு அவுட் ஆனார். அப்போது 22 பந்துகளில் 47 ரன் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் தினேஷ் கார்த்திக், மஹிபால் லோமரும் அதிரடியாக ஆடி பெங்களூரு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.

விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை சென்னையில் சென்னை அணிக்கும் குஜராத் அணிக்கும் இடையில் ஆட்டம் நடைபெற உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம்!

IMG 20240325 WA0233 - 2026

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பங்குனி மாத திருக்கல்யாணம் திங்கட்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது.காலை செப்பு தேரோட்டம். இரவு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ தேசங்களில் முதன்மை பெற்றதாகும். இங்கு கோவில் கொண்டுள்ள ஆண்டாள் ரங்க மன்னார் திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளன்று திருக்கோவில் முன்புள்ள ஆடிப்பூர பந்தலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழும் வண்ணம் சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டு ஆண்டாள் ரெங்க மன்னார் பங்குனி மாத திருக்கல்யாண திருவிழா கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. அன்று தொடர்ந்து தினமும் ஆண்டாள் ரங்க மன்னார் ரத வீதிகள் வழியே வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பங்குனி மாத திருக்கல்யாண திருவிழா இன்று (25ஆம் தேதி) காலை துவங்கியது.

ஆண்டாள் ரங்க மன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிகள் காலை 7 மணிக்கு மேஷ லக்னத்தில் செப்புத்தேர் எனும் கோ ரதத்தில் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்கி செப்புத் தேரினை நான்கு ரத வீதிகள் வழியே இழுத்து நிலையம் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு சுவாமிகள் வீதி புறப்பாடாகியது.

IMG 20240325 WA0234 - 2026

முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள் ரங்க மன்னார் திருக்கல்யாண திருவிழா இரவு 7:30 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் சுதர்சன பட்டர் திருக்கல்யாணத்தினை நடத்தி வைத்தார். தலைமை அர்ச்சகர் ஸ்ரீ வாரி முத்துப்பட்டர் ஸ்தானிகம் ரங்கராஜன் என்ற ரமேஷ் மணியம் கோபி கிச்சப்பன் வெங்கடேச ஐயங்கார் ஆகியோர் பூஜைகள் நடத்தி வைத்தனர்.

திருக்கல்யாண திருவிழாவில் முக்கிய பிரமுகர்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவினை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் சுமங்கலி பெண்களுக்கு திருமாங்கல்ய பாக்கெட் வழங்கப்பட்டது. ஆண்டாள் பெரியாழ்வார் ட்ரஸ்ட் சார்பில் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பக்தர்கள் சிரமமின்றி திருக்கல்யாணத்தினை தரிசிக்க பல இடங்களில் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு திருமண நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

விழா ஏற்பாடுகளை மதுரை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் க. செல்லத்துரை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர்கள் மற்றும் கோவில் அலுவலர்களும் திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

திருக்கல்யாண திருவிழாவில் செவ்வாய் கிழமை மாலை முத்துக் குறி ஊஞ்சல் சேவை தலபுராண வாசித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது .இவ் விழாக்களில் உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது

சபரிமலை ஐயப்பனுக்கு பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா!

sabarimalai nadai open - 2026
#image_title

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா இன்று பம்பை நதியில் கோலாகலமாக நடைபெற்றது.பம்பையில் இருந்து சுவாமி சன்னிதானம் வந்ததும் இரவு கொடி இறக்கப்பட்டது.

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கடந்த 16-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

FB IMG 1711359782875 - 2026

விழாவையொட்டி தினமும் வழக்கமான பூஜைகளுடன் உத்சவ பலி, படிபூஜை நடைபெற்று வந்தது. 9-ம் திருவிழாவான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெற்றது.

இதை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) பம்பை ஆற்றில் ஐய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெற்றது.

இதனையொட்டி காலை 8 மணிக்கு ஐய்யப்ப விக்ரகம் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட யானை ஊர்வலம் மேள, தாளம் முழங்க சன்னிதானத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ஊர்வலம் காலை 11.30 மணிக்கு பம்பை வந்து சேர்ந்தது.திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பின்னர் பம்பை நதிக்கரையில் அலங்கரிக்கப்பட்டுள்ள ஆராட்டு கடவில் ஐய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெற்றது. ஆராட்டு சடங்குகளை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு நிறைவேற்றினார். களபம், மஞ்சள் பூசி ஆராட்டு கடவில் 3 முறை மூழ்கி ஐய்யப்பனுக்கு ஆராட்டு சடங்கு நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து புத்தாடை அணிவித்து அய்யப்ப பக்தர்களின் தரிசனத்திற்காக அய்யப்ப விக்ரகம் பம்பை கணபதி கோவிலில் வைக்கப்பட்டது. மாலையில் ஐய்யப்ப விக்ரகம் ஊர்வலமாக மீண்டும் சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அத்துடன் திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெற்றது. தொடர்ந்து அரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்பட்டது.

பிறகு விஷு பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஏப்ரல் 10-ந் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.

உதகையில் அண்ணாமலை ஆர்ப்பாட்டம்!

annamalai bjp tn leader - 2026

காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்து எல். முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் உதகையில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் இன்று ஊட்டியில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.இரு கட்சியினரும் உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக செல்ல தயாராக ஒரே பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

IMG 20240325 WA0150 - 2026

பாஜகவினருக்கு 10 மணியும் அதிமுகவினருக்கு 11 மணியம் நேரம் ஒதுக்கப்பட்டது. பாஜகவினர் வேட்பு மனு தாக்கல் செய்ய கிளம்ப தாமதமானதால் அதிமுகவினர் தாங்கள் முன்னே செல்வதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.இரு கட்சியினரும் மாறி மாறி கோஷமிட்டனர்.

பின்னர் நீலகிரி தொகுதி வேட்பாளர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் வந்த பின்பு ஊர்வலம் தாமதமாக தொடங்கியது.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் காவல் துறையோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாகனத்தை தாக்கம் முயன்ற அதிமுகவினரை காவல்துறை கட்டுப்படுத்தியது தொடர்ந்து பாஜகவினரை வேகமாக செல்ல அறிவுறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் நீலகிரி பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்து எல். முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்