Home Blog Page 225

சூடுபிடித்த கச்சத்தீவு விவகாரம்: திமுக., வின் சதிகளை அம்பலமாக்கிய அண்ணாமலை!

bjp annamalai - 2026
#image_title

அண்ணாமலை மூலம் மீண்டும் கச்சத்தீவு விவகாரம் சூடுபிடித்துள்ளது. இன்று பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை என கச்சத்தீவு பற்றிக் குறிப்பிட்டு, மீண்டும் அதை ஒரு விவாதப் பொருள் ஆக்கி விட்டனர். கச்சத்தீவு தேர்தல் நேர சர்ச்சைக்கானது அல்ல என்றாலும், அது எந்நேரமும் பேசப்படக் கூடிய தேசப் பாதுகாப்பு தொடர்பான சர்ச்சைக்கு உரியது என்பதால், இந்நேரம் அது தேசிய அளவில் விவாதப்பொருளாகியிருக்கிறது.

இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்த்தது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு இருந்தார்.

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்த பதில்:

கச்சத்தீவு தொடர்பாக நாட்டின் முதல் பிரதமர் நேரு 1961 மே 10ல் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். இந்த தீவு தொடர்பாக அவர், இந்த சிறிய தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை. அதற்கான நமது உரிமையை விட்டுக் கொடுக்க தயங்க மாட்டேன். இந்த விவகாரம் நீண்ட நாட்கள் நிலுவையில் இருப்பதையும் மீண்டும் பார்லிமென்டில் எழுப்பப்படுவதை விரும்பவில்லை என்றார்.

இந்த பதிலானது அப்போதைய அட்டர்னி ஜெனரல் எம்சி செடல்வாட் 1960 ல் கச்சத்தீவை இந்தியா உரிமை கோர வலுவான ஆதாரங்கள் இருந்தன எனக் கூறியதற்கு எதிராக இருந்தது. கிழக்கு இந்திய கம்பெனி, ராமநாதபுரம் ராஜாவுக்கு அளித்த உரிமை பற்றியும் செடல்வாட் குறிப்பிட்டு இருந்தார். நாட்டில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்ட பிறகும் ராமநாதபுரம் ராஜா கொழும்புவுக்கு எந்த வரியும் கட்டாமல் கச்சத்தீவை நிர்வகித்து வந்தார்.
1968 ல் கச்சத்தீவு தொடர்பாக இந்தியா – இலங்கை பிரதமர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தை தொடர்பாக பார்லிமென்டில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி, அரசை விமர்சித்தனர்.

அதற்கு அரசு அளித்த பதிலில், கச்சத்தீவை ஒப்படைப்பதற்கான ஆவணத்தில் கையெழுத்திடவில்லை என்றதுடன் அந்த பகுதியை சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்தது எனக்கூறியது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. 1969 ல் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பையும் மீறி, இலங்கையின் உரிமையை நிறைவேற்றும் வகையில் ஒப்பந்தம் போடுவதை நோக்கி இரு நாடுகளும் நகர்ந்தன.
கொழும்புவில் 1973ல் இரு நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு அடுத்த ஆண்டு (1974) ல் கச்சத்தீவை தாரை வார்ப்பது குறித்த முடிவு, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம், அப்போதைய வெளியுறவுத்துறை செயலர் கேவல் சிங் தெரிவித்தார்.

இது குறித்து கேவல் சிங் கூறுகையில், கச்சத்தீவு மீது ராமநாதபுரம் ராஜாவிற்கு அசல் உரிமை இருந்தது என்ற ஆவணங்களை காட்ட தமிழக அரசு, தவறிவிட்டது. 1925 முதல் இந்தியாவின் எந்த எதிர்ப்பும் இல்லாமல் இலங்கை கச்சத்தீவை நிர்வகித்து வந்தது எனக்கூறினார். இவ்வாறு அந்த தகவலில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.

இதனை மேற்கோள் காட்டி ‛எக்ஸ்’ சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி தாரை வார்த்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிவந்துள்ளன. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியதுடன், காங்கிரசை நாம் ஒரு போதும் நம்ப முடியாது என்பதை மக்கள் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவதை எண்ணியே கடந்த 75 ஆண்டுகளாக காங்கிரஸ் உழைத்துக் கொண்டு உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி அந்த பதிவில் கூறியுள்ளார்.

இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கை:

காங்கிரஸ் கட்சியினர் மனமுவந்து கச்சத்தீவை விட்டுக் கொடுத்தார்கள். அதைப் பற்றி எந்த வருத்தமும் இல்லை. சில சமயங்களில் காங்கிரஸின் எம்.பி., நாட்டைப் பிளவுபடுத்துவதாகவும், இந்திய கலாசாரம் மற்றும் மரபுகளை இழிவுபடுத்துவதாகவும் பேசுகிறார். அவர்கள் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானவர்கள் என்பதையே இது காட்டுகிறது. அவர்கள் நம் தேசத்தை பிளவுபடுத்த வேண்டும் என விரும்புகிறார்கள்

கச்சத்தீவு தொடர்பாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கச்சத்தீவை பற்றி தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கிறோம். 1968-ல் பிரதமராக இருந்த இந்திராகாந்தியும், இலங்கை பிரதமராக இருந்த செனாயும் போட்ட ரகசிய ஒப்பந்தம்தான் கச்சத்தீவு. 1948ம் ஆண்டு வரை கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1974ம் ஆண்டு கச்சத்தீவு முழுமையாக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. எதற்காக கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்ற ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றுள்ளோம். இதை படித்தால் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரத்தம் கொதிக்கும். நேரு பிரதமராக இருந்தபோது பைல் நோட்டிங் எழுதுகிறார். இந்த குட்டி தீவுக்கு நான் எந்தவிதமான மரியாதையும் தரப்போவதில்லை. வேறு ஒரு நாட்டிற்கு தர தயாராக இருக்கின்றேன். இது 10-5-1961 ல் நேரு எழுதிய பைல் நோட்டிங்.

முழுமையாக கச்சத்தீவு நம்மிடம் தான் இருக்க வேண்டும் என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தும், இலங்கையில் அரசியல் சூழ்நிலை சரியில்லை என்பதால் இந்த பிரச்சனையை தள்ளி போட்டுக்கொண்டே சென்றார்கள். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட முதல் பகுதி இன்று வெளியாகி உள்ளது. நாளை இதன் இரண்டாம் பகுதி வெளியாகும் போது கலைஞர் கருணாநிதி கச்சத்தீவு விவகாரத்தில் செய்த துரோகம் குறித்து பேசுவோம். நாட்டின் எல்லையை சுருக்கியது காங்கிரஸ் கட்சி.

1960-ல் இருந்து ஒவ்வொரு செங்கல்லாக பிரித்து கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் கட்சி தாரை வார்த்துவிட்டது. இன்று வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முதல் பகுதி மூலம் காங்கிரஸ் எப்படி துரோகம் செய்துள்ளது என்பது தெரிய வருகிறது. நாளை வெளியாகும் இரண்டாவது பகுதியில் கலைஞர் கருணாநிதி செய்த துரோகம் என்ன என்பது தெரியும்.

ஆர்ட்டிக்கிள் 6 ன் படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டாலும் இந்திய மீனவர்கள் அங்கு மீன்பிடிக்கலாம் என தெரிவிக்கிறது. ஆனால் தற்போது ஆர்ட்டிக்கிள் 6 இல்லாத காரணத்தினால் மீனவர்கள் தற்போது கச்சத்தீவுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. நாளை மக்களின் பார்வைக்காக இரண்டு பகுதியாக வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அனைத்து ஆவணங்களையும் தருகிறோம்.

கச்சத்தீவை இலங்கைக்கு எப்படி தாரை வார்த்து கொடுத்தார்கள் என யாருக்கும் தெரியாது. எனவே மக்கள் முதலில் கச்சத்தீவை எப்படி கொடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது எல்லையை நம் நாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

கச்சத்தீவை தாண்டி நெடுந்தீவு வரை நாம் சென்றோம்… ராமநாத சுவாமி கோவில் சிவபெருமானுக்கு நெடுந்தீவிலிருந்து பால் கொண்டுவரப்பட்டது. கச்சத்தீவை மீட்பது எங்கள் கோரிக்கை மட்டுமல்ல. கண்டிப்பாக மீட்போம் என கங்கணம் கட்டியுள்ளோம். 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டி எல்லாம் சுற்றி இருக்கிறேன். ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் இல்லை.

IPL 2024: கலக்கிய லக்னோ அணி

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2024 – 30.03.2024 – லக்னோ
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்க்ஸ்

          லக்னோ அணி (199/8, டி காக் 54, க்ருணால் பாண்ட்யா 43*, பூரன் 42, சாம் கரன் 3/28, அர்ஷ்தீப் சிங் 2/30) பஞ்சாப் அணியை (178/5. ஷிகர் தவான் 70, ஜானி பெயர்ஸ்டோ 42, லிவிங்க்ஸ்டோன் 28*,  மயங்க் யாதவ் 3/27, மொஷின் கான் 2/34) 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்க்ஸ் அணிக்கும் லக்னோவில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. லக்னோ அணியின் தொடக்க வீரர் க்விண்டன் டி காக் (54 ரன்) நன்றாக ஆடினார்.

ராகுல் (15 ரன்), படிக்கல் (9 ரன்), பதோனி (8 ரன்), ரவி பிஷ்னோய் (பூஜ்யம்), மோஷின் கான் (2 ரன்) ஆகியோர் வந்தார்கள் போனார்கள் ரகம். நிக்கோலஸ் பூரன் (42 ரன்) மற்றும் க்ருணால் பாண்ட்யா (43 ரன் ஆட்டமிழக்காமல்) நன்றாக ஆடியதால் லக்னோ அணியின் ஸ்கோர் 20 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 199 ரன் என்ற நிலைக்கு வந்தது.

          இரண்டாவதாக ஆட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் (50 பந்துகளில் 70 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்) பெயர்ஸ்டோ (29 பந்துகளில் 42 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் அதற்குப் பின்னர் ஆடவந்த பிரப்சிம்ரன் சிங் (19 ரன்), ஜிதேஷ் ஷர்மா (6 ரன்), சாம் கரன் (பூஜ்யம்) ஆகியோர் வெற்றி பெறும் நிலையில் இருந்த பஞ்சாப் அணியை தோல்வியை நோக்கித்தள்ளினர்.

17ஆவது ஓவரின் அடுத்தடுத்தடுத்த பந்துகளில் மொஷின் கான் ஷிகர் தவான் மற்றும் சாம் கரன் விக்கட்டுகளை எடுத்தார். அந்த இடத்தில் பஞ்சாப் அணி தோல்வியைச் சந்தித்துவிட்டது. அதன் பின்னர் லியம் லிவிங்க்ஸ்டோன், ஷஷாங்க் சிங் இருவராலும் வெற்றி இலக்கை எட்டமுடியவில்லை. 20 ஓவரில் பஞ்சாப் அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 178 ரன் எடுத்துத் தோல்வியைத் தழுவியது.

          லக்னோ அணியின் மயங்க் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் அகமதாபாத்தில் குஜராத் அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையில் நடக்கவுள்லது. இரண்டாவது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் சென்னை அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே நடைபெற உள்ளது.

அருப்புக்கோட்டையில் பாஜக., வேட்பாளர் ராதிகாவுக்கு வேலூர் இப்ராஹிம் வாக்கு சேகரிப்பு!

vellore ibrahim in virudhunagar - 2026

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவில் அருகே நேற்று விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கண்டுபிடிக்க முடியாத நபராக, தேடப்படக்கூடிய நபராக உள்ள மாணிக்கம் தாகூரை சென்ற முறை தேர்ந்தெடுத்ததன் விளைவு, அருப்புக்கோட்டையில் சாலை வசதி குடிநீர் வசதி, ரயில் வசதிகள் என அனைத்து வசதிகளும் மோசமாக உள்ளதை பார்க்கிறோம்.

சென்ற முறை அவர் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் நிறைய தொழிற்சாலைகளை கொண்டு வருவோம் என‌ கூறினார். எதுவும் செய்யவில்லை. அருப்புக்கோட்டை தொகுதி இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளனர். அப்படிப்பட்ட மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார்.

அதே போல விஜயகாந்த் இந்த மண்ணில் இருக்கும் வரை திமுகவையும் அதிமுகவையும் எதிர்த்தார். விஜயகாந்த் கொள்கைக்கு நம்பிக்கை எதிராக தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார்கள் என குற்றம் சாட்டி பேசினார். விஜயகாந்த் ஆன்மா சாந்தியடைய வேண்டுமென்றால் விஜயகாந்த் ரசிகர்கள் தாமரைக்கு தான் வாக்களிப்பார்கள். மோடி அரசால் சிறுபான்மையிருக்கு எந்த விதமான பாதிப்பும் கிடையாது ஆனால் திமுக கூட்டணியினர் வேண்டுமென்று பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை மெயின் பஜாரில் உள்ள கடைகளில், பொது மக்களிடம் பிஜேபி தேர்தல் அறிக்கை மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினார். பிரசாரத்தில் பிஜேபி மாவட்ட நிர்வாகி கஜேந்திரன், மற்றும் பிஜேபி மாவட்ட விவசாய அணி செயலாளர் அழகர்சாமி,பாண்டி ,சுந்தரம், சிறுவாமன் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

‘பாம்’ வெடித்ததால் பாசம் போச்சு! பாகிஸ்தானில் அணை கட்டுமானப் பணிகளை நிறுத்திய ‘கோபக்கார’ சீனா!

china works in pakistan stops - 2026

பாகிஸ்தானில் 3 அணைகளின் கட்டுமானப் பணிகளில் சீனாவை சேர்ந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதில், 1,250 சீனர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் அவர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில், 5 சீனப் பொறியாளர்கள் மற்றும் பாகிஸ்தானியர் ஒருவர் உயிரிழந்தனர். எனவே அணைகட்டும் பணிகளை சீன நிறுவனம் நிறுத்திவிட்டது.

இதுகுறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த அதிகாரி கூறுகையில்,’பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து சீன ஒப்பந்த கட்டுமான நிறுவனம் 3 அணைகளின் கட்டமைப்புப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளது. சீனர்கள் பணிபுரியும் இடங்களில் மீண்டும் வேலையைத் தொடங்கும் முன் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சீன அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இவ்வாறு சீனத் தொழிலாளர்களை குறிவைத்து தாக்குவது இரு நாடுகளுக்கு இடையில் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால் புதிய பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துமாறு பாகிஸ்தான் அரசிடம் சீன நிறுவனம் கோரியுள்ளது. தாக்குதலையடுத்து சீன பொறியாளர்கள் வசிக்கும் எல்லையை விட்டு வெகுதூரம் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன” என்றார்.

சீன ஒப்பந்ததாரர்கள் பாகிஸ்தான் அரசாங்கத்தை சிறந்த பாதுகாப்புக் கட்டமைப்பை அமல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர். பாதுகாப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உறுதியளித்த பின்னரே பணிகள் மீண்டும் தொடங்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த வாரம் ஐந்து சீனப் பொறியாளர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் கொல்லப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், பாகிஸ்தானில் இரண்டு பெரிய அணைக்கட்டுத் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை சீன ஒப்பந்தக்காரர்கள் நிறுத்தினர். சுமார் 1,250 சீனர்கள் பணிபுரியும் தளங்களை மீண்டும் திறப்பதற்கு முன் பாகிஸ்தான் அதிகாரிகளால் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும் என்று சீன ஒப்பந்த நிறுவனங்கள் கோரியுள்ளன.

சீனத் தொழிலாளர்களின் பாதுகாப்பு பெய்ஜிங் மற்றும் இஸ்லாமாபாத் இரண்டிற்கும் முக்கியமானதுதான்! எனினும், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அடிக்கடி சீன நாட்டினரை குறிவைக்கிறார்கள். செவ்வாய் அன்று தற்கொலைப் படையைச் சேர்ந்தவர், அணைக்கட்டு தளங்களில் ஒன்றின் அருகே மலைப்பாங்கான சாலையில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை சீனர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி சீனத் தொழிலாளர்களைக் குறிவைத்தார். ஓர்ஆழமான பள்ளத்தாக்கில் அவர்கள் சென்ற வாகனம் வெடித்துச் சிதறி உருண்டது.

சைனா கெஜோபா குரூப் நிறுவனம், மாகாணத்தில் உள்ள தாசு அணையின் பணியை நிறுத்தியுள்ளது. பவர் சீனா டயமர் பாஷா அணையின் பணியை நிறுத்தியுள்ளது. இதனை, கைபர் பக்துன்க்வாவைச் சேர்ந்த மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“அவர்கள் அரசாங்கத்திடம் புதிய பாதுகாப்பு திட்டங்களைக் கோரியுள்ளனர். தாசு அணை திட்டத்தில் சுமார் 750 சீன பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர், மேலும் 500 பேர் டயமர் பாஷா அணையில் பணிபுரிகின்றனர்,” என்றார் பாகிஸ்தான் அதிகாரி ஒருவர்.

சீன பொறியாளர்களின் நடமாட்டம் அவர்கள் வசிக்கும் வளாகங்களுக்கு, தளங்களுக்கு அருகில் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பாகிஸ்தானை சீனா பலமுறை வலியுறுத்தி வந்தது. கைபர் பக்துன்க்வாவில் முகமந்த் அணை இருக்கும் இடத்தில் சீன பொறியாளர்கள் இன்னும் பணிபுரிகின்றனர்.

சீனாவின் நெருங்கிய பிராந்திய கூட்டாளியாக பாகிஸ்தான் இருந்தாலும், அந்நாட்டுக்கு சீனா உடனடி நிதி உதவிகள் பல வழங்கியிருந்தாலும், போராளிகள் அடிக்கடி போராடும் பாகிஸ்தானில், சீனாவுக்கு எதிரான வெறுப்புணர்வு என்பது புதிய நிகழ்வு அல்ல.

சீனா தனது பெல்ட் அண்ட் ரோடு முதலீட்டுத் திட்டத்தின் கீழ் உலகெங்கிலும் இரண்டு டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டங்களால் உருவாக்கப்படும் பணியிடங்கள் அல்லது நிதிச் சேரல்களில் நியாயமான பங்கு தங்களுக்கு கிடைக்கவில்லை என்று பாகிஸ்தானியர்கள் நீண்ட காலமாக புகார் கூறி வருகின்றனர்.

செவ்வாய் கிழமை நடந்த தாக்குதல் இஸ்லாமாபாத்தில் உள்ள சீன தூதரகத்தில் ராஜதந்திர நடவடிக்கைகளில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. பிரதம மந்திரி ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சர்கள் அடுத்தடுத்து இரங்கல் தெரிவித்தனர். சீனாவின் வெளியுறவு அமைச்சகம்,”சீன குடிமக்கள், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க” பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டது.

தென்மேற்கில் உள்ள குவாதர் ஆழ்கடலில் உள்ள அலுவலகங்களை பயங்கரவாதிகள் தாக்க முயன்ற சில நாட்களுக்குப் பிறகு செவ்வாய்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குவாதர் ஆழ்கடல் துறைமுகம் பாகிஸ்தானில் சீன முதலீட்டின் அடித்தளமாகும்!

பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் ஏன் வர வேண்டும்? 

pm modi in ap meeting - 2026

காரணங்கள் நிறைய உண்டு. ஆனால் மிகச் சுருக்கமாக சொல்வதென்றால், பட்ட அனுபவங்கள் அப்படி!

நெருக்கடி நிலை – எமர்ஜென்ஸி வருடத்தில் பிறந்தவன் நான். இப்போது 50வது வயதில் இருக்கிறேன். 1984ல் நான் 5ம் வகுப்பு படித்த காலத்தில் இருந்து அரசியல் நிகழ்வுகள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. இன்றும் நினைவில் கொண்டு வர முடிகிறது. 

தொடக்கப் பள்ளிக்கூடத்தில்  தினசரி காலைக் கூடுதலில்  பேப்பர்களின் தலைப்புச் செய்தி படிக்க வைத்தார்கள். அன்று  ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் பற்றியும், பயங்கரவாதக் குழுக்கள் பற்றியும் செய்திகள் படித்தோம். பிரதம மந்திரி இந்திரா சுடப்பட்ட தினம் – பள்ளிக்குச் சென்று அப்போதுதான் முதல் கால வகுப்பு நடந்து கொண்டிருந்தது. தகவல் சொல்லி, பள்ளியில் இருந்து ஒன்றரை கி.மீ., வீட்டுக்கு நடந்தே  வந்ததும் அதன் பின் பேப்பர் படித்து நிகழ்வுகளை அறிந்து கொண்டதும் நினைவலைகள்! 

ராஜீவ் காலம், வி பி சிங் காலம்… ஃபோபர்ஸ் ஊழல் பற்றி தீவிரமாகப் பேசினார்கள்.  பின் மண்டல் கமிஷன் என ஒரே பரபரப்பு, இட ஒதுக்கீடு பற்றி காரசாரமாக விவாதித்தார்கள். மாணவர்  போராட்டங்கள், தீவைப்பு எல்லாம் தலைப்புச் செய்திகளாய் நிரம்பியிருந்தன. இடையில் ராமஜன்மபூமி இயக்கம். அத்வானியின் ரத யாத்திரை குறித்த செய்திகள். ஸ்ரீராம் என அச்சிடப்பட்ட பன்னிரண்டு செங்கற்கள் வீட்டுக்கு வர, ஒரு மேடை அமைத்து ராமர், சீதை, லட்சுமணர் அனுமன் கொலு பொம்மைகளை வைத்து ஒரு மண்டலம் பூஜித்து லாரியில் ஏற்றி அனுப்பி வைத்து, ஊர்வலம் சென்று அது ஓர் அனுபவம்…

தொடர்ந்து சந்திரசேகர் வந்தார். ஜனதா கட்சிகள் பலப்பல உச்சரிக்கவும் நினைவில் கொள்ளவும் தடுமாறும் வகையில்  அன்று கட்சிகள் உடைந்ததும் தொடங்கியதும் என ஒரு நிலையற்ற தன்மை! 

இடையில் எம்.ஜி.ஆர்., மறைவு, தொடர்ந்து கட்சியில் நடந்த சண்டைகள், ஜெயலலிதாவின் தலைவிரி கோலம் எல்லாம் பத்திரிகைகளின் வழியே நெஞ்சில் பதிந்தன.  

89 சட்டமன்ற தேர்தல். பத்தாம் வகுப்பு படித்தேன். ஆசிரியர்கள் திமுக., சார்பில் இருந்தார்கள். வகுப்புகளில் பேரறிஞர் பெரியார் பாடம்தான். தென்காசி கோபுரம் முன் வை.கோவால்சாமி முழங்கிக் கொண்டிருந்தார். கூட்டங்களுக்கு ஆள் சேர்க்க எங்களையும் அழைத்துச் சென்றார்கள். வீடுகளுக்கு பூத் சிலிப் கொடுக்கவும், நோட்டீஸ் கொடுக்கவும் நாங்கள் பயன்பட்டோம். இலங்கைத் தமிழர் விவகாரம், பத்மநாபா கொலை பின்னர் ஆட்சிக் கலைப்பு, ஜெயலலிதா எழுச்சி என ரேடியோ செய்திகள் ஒருபுறம், பேப்பரும் தூர்தர்ஷன் நியூஸும் காட்சிகளைக் கண்ணில் காட்டின.  91ல் முதல் சுதந்திர தின உரையில் கச்சத்தீவை மீட்போம் என ஜெயலலிதா முழங்கியது காதில் ஒலித்தது. “கச்சத்தீவு விஷயம் என்னது மாமா?” என்று அடுத்த வீட்டு மாமாவிடம் கேட்டேன். சொன்னார். 

1991 – நரசிம்மராவ் வந்தார். மன்மோகன் சிங் நிதி அமைச்சர். நான் தென்காசி ஐசிஐ பள்ளியில் பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இந்தியா பொருளாதார நெருக்கடியில்  உள்ளது என்றது செய்தி. இந்தியாவில் இருந்து தங்கத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு ரெண்டு ப்ளேன்கள் இங்கிலாந்துக்குப் போகுது. நம்ம நாட்டு தங்கத்தை அவங்கள்கிட்ட அடமானம் வெச்சி நாம பணம் புரட்டணும் என்று பேசிக்கொண்டார்கள். பக்கத்து வீட்டு மாமா இண்டியன் எக்ஸ்பிரஸ் வாங்குவார். முகப்புப் படத்தைக் காட்டி ஏதோ விவாதித்தார். ரிசர்வ் பேங்க் தங்கத்தை பெருமளவு கொண்டு போய் அடகு வைக்குது, அதான் இந்தப் படம் என்று காட்டினார். ரூவாய் நோட்டு நாம அடிக்கிறதுதானே… தேவையான அளவுக்கு நாம அடிச்சிக்கலாமே என்று அப்பாவியாய்க் கேட்டபோது, தங்கத்தின் திருவிளையாடல்கள் புரிந்தது.  அப்போது தான் உலகப் பொருளாதாரம் உலக மயமாக்கல் என்பது குறித்தெல்லாம் படிக்க நேர்ந்தது. சுயபெருமிதமும், தன்மான உணர்ச்சியும் ஆழப் பதிந்திருந்த அந்த மாணவ உள்ளத்தில், இந்தச் செய்திகள் எல்லாம் ரணமாக மனதைக் குடைந்தன. நாட்டை நேசித்த ஒருவனாக  ஜீரணிக்கவே இயலாத செய்திகளாக சுற்றிச் சுற்றி வந்தன. 

இந்தியாவில் தாராள மயக் கொள்கை அமல் என்றது செய்தி. உலகத்தோடு இயைந்து இந்தியா பயணிக்கும் என்றார்கள். அயோத்தி பிரச்னை, முலாயம் சிங் அத்துமீறல்கள், பலர் மரணம், அரசியல் சூழலின் இருண்ட பக்கங்களை எல்லாம் கேட்டும் படித்தும் அறிந்து கொண்டேன். 

92ல் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் கணிதம் படிக்க சேர்ந்திருந்தேன்.  பொருளாதாரம் அவ்வளவாக மண்டையில்  ஏறவில்லை. என்றாலும் ஹர்ஷத் மேத்தா, பங்குச் சந்தை, போலி முத்திரைத்தாள் ஊழல் என்றெல்லாம் காதில் செய்திகள் ரீங்காரமிட்டன. ஊழல் என்றால் எத்தகையது, எப்படி ஒரு சிலரால் நாட்டின் பொருளாதாரம் சீரழியும் என்பதைக் கேட்டு, கண்டுகொண்ட நேரம் – எனக்கு அதுதான்! பங்குச் சந்தை முதலீடு என்று சொல்லி, சிலர் அரற்றி அழுத காட்சிகளையும் காண நேர்ந்தது.

பின்னாளில்… வாஜ்பாய் தலை தூக்கியது, 13 நாள் அமைச்சரவை, அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை கண்கொட்டாது தூர்தர்ஷனில் பார்த்தது…  அவரை நிர்கதியாக்கி தேவகவுடாவை கொண்டு வந்தது, அவர் எப்போதும் தூங்கி வழிந்து கொண்டு மானத்தை வாங்கியது, குஜ்ரால் என்று ஒருவர் வந்தது, மியூசிக்கல் சேர் மாதிரி பிரதமர் நாற்காலியை பலரும் சுற்றிச் சுற்றி வந்தது இப்படி கூத்துகளை எல்லாம் பார்த்து மனம் ரொம்பவே நொந்து போனது. அதன் பின்னர் நானும் அந்த 99 இறுதியில் இதழியல்துறைக்கு வந்துவிட்டேன். பிறகென்ன? செய்திகளுடனேயே தான் வாழ்க்கையும் பயணமும்! 

சுப்பிரமணிய சாமி, ஜெயலலிதா நடத்திய டீ பார்ட்டி, வாஜ்பாய் அமைச்சரவையை ஒத்தை ஓட்டில் கவிழ்த்தது, கருணாநிதி அந்த இடத்தில் சரேலெனப் புகுந்தது, மத்திய அமைச்சரவையில் முரசொலி மாறனை ஆளாக்கியது, 2001ல் சென்னை டைடல் பார்க் திறப்புக்கு வாஜ்பாயும் கருணாநிதியும் ஒன்றாகக் கலந்து கொண்டு மேற்கொண்ட சூளுரைகள்….  

இவை எல்லாம் என் நினைவலைகளின் முதற்பாதியான இருபதாண்டுகள் –  அடுத்த இருபதாண்டுகள் இதோ நிகழ்வுகள் அனைத்தும் விரல் நுனியில்! அதுவும் 2004-2014 கால கட்டத்தில் நடந்த ஊழல்கள் ஒவ்வொன்றும், 2ஜி, நிலக்கரி, சுரங்கம், சேது சமுத்திர திட்ட ஊழல், காமன்வெல்த் விளையாட்டுக்கு அரங்கம் சாலை கட்டிய ஊழல் என்றெல்லாம் எண்ணற்ற ஊழல்கள் ஒவ்வொரு கணமும் இந்த நாட்டின் வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருந்தன. கட்டமைப்பு, அடிப்படைக் கட்டுமானம் பற்றி பேச வாயெடுக்கும் போதெல்லாம் நிதி நெருக்கடி, நிதி இல்லை என்ற கைவிரிப்புகள். வாஜ்பாய் தொடங்கிய தங்க நாற்கர சாலைகள் ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருந்ததால், அதுபோன்ற வளர்ச்சி தொடராமல் போனது பெரும் வருத்தத்தையே தந்தது.

இந்த நாற்பதாண்டு  தேசிய, மாநில அரசியல் சூழல்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவனாக – இப்போதுதான் – மோடியின் காலத்தில் – ஒரு சுய கௌரவத்தையும், இந்தியன் என்றால் ஒரு பெருமிதத்தையும், உலக நாடுகளில் நாட்டின் மரியாதை உயர்ந்து தனித்திருப்பதையும் உணர்கிறேன்! கடந்த கால அரசியல் சூழல்களை உன்னிப்பாகக் கவனித்த எவரும், இன்றைய மோடி அமைச்சரவையின் செயல்பாடுகளை ஒதுக்கித் தள்ள மாட்டார்கள். சிறு சிறு குறைகள் இருக்கலாம், ஆனால் மிகப் பெரும் ஓட்டைகளையும் ஊழல்களையும் கண்டு கொண்டிருந்த நமக்கு இப்போதுதான் நம்பிக்கைக் கீற்று நன்றாகத் தெரிகிறது. இன்றைய 20 அல்லது 30 வயதுக் காரர்களுக்கு பழைய வரலாறு தெரியாது என்பதால் பொய்களால் நிரப்பப்படும் திமுக., காங்கிரஸின் பசப்புப் பேச்சுகளுக்கு ஏதோ கவனம் கிடைக்கக் கூடும்! ஆனால் நம் முன் அவை எடுபடாது! காரணம் சுயபுத்தியோடு நிகழ்வுகளின் சாட்சியாய் வாழ்ந்து கொண்டிருப்பதால்! 

எனவேதான் மீண்டும் மோடி கோஷத்துக்கு நான் வலு சேர்க்கிறேன்! வரவேற்கிறேன்! 

அன்பன்

செங்கோட்டை ஸ்ரீராம்

IPL 2024: அதிரடி காட்டிய கோல்கத்தா அணி!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2024 – 29.03.2024 – பெங்களூரு
ராயல் சேலஞ்சர்ஸ் vs கொல்கொத்த நைட் ரைடர்ஸ்

பெங்களூரு அணியை (182/6, விராட் கோலி 83*, கிரீன் 33, மேக்ஸ்வெல் 28, தினேஷ் கார்த்திக் 20, ஹர்ஷித் ராணா 2/39, ரசல் 2/29) கொல்கொத்தா அணி (வெங்கடேஷ் ஐயர் 50, சுனில் நரேன் 47, ஷ்ரேயாஸ் ஐயர் 39*, பில் சால்ட் 30,  ) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும்  கொல்கொத்த நைட் ரைடர்ஸ் அணிக்கும் பெங்களூருவில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற கொல்கொத்தா அணி முதலில் பந்து வீசத்தீர்மானித்தது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர் கிங் கோலி அபாரமாக ஆடினார். அவர் 59 பந்துகளில் 83 ரன் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 4 ஃபோர் மற்றும் 4 சிக்சர் அடித்தார்.

மற்றொரு தொடக்க வீரர் பிளேசிஸ் இந்த ஆட்டத்திலு சோபிக்கவில்லை. காமரூன் கிரீன் (21 பந்துகளில் 33 ரன்) மற்றும் கிளன் மேக்ஸ்வெல் (19 பந்துகளில் 28 ரன்) நிலைத்து ஆடவில்லை. ரஜத் படிதர் (3 ரன்) அனுஜ் ராவத் (3 ரன்) இருவரும் ஏமாற்றினார்கள். ஏறத்தாழ விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தினேஷ் கார்த்திக் 8 ஓந்துகளில் 20 ரன் அடித்தார். அதில் 3 சிக்சர்களும் அடங்கும். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது.

          இரண்டாவதாக ஆட வந்த கொல்கொத்தா அணியின் பேட்டிங் ஆரம்பத்திலிருந்தே அதகளமாக இருந்தது. 22 பந்துகளில் 2 ஃபோர், 5 சிக்சர்களுடன் 47 ரன் அடித்த சுனில் நரேன் முதலில் அவுட்டானார். அதன் பின்னர் உடனேயே சால்ட் (20 பந்துகளில் 30 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) ஆட்டமிழந்தார்.

உண்மையில் கொல்கொத்தா அணியின் முதல் ஆறு ஓவர்களில் அந்த அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. அந்த அணி முதல் ஆறு ஓவரில் விக்கட் இழப்பின்றி 85 ரன் எடுத்தது. ரன்ரேட் 14.16; தேவயான ரன்ரேட் 7.0; அதாவது மீதமுள்ள 84 பந்துகளில் 98 ரன் எடுக்கவேண்டும்.

          இவர்களுக்குப் பதிலாக ஆடவந்த வெங்கடேஷ் ஐயரும் (30 பந்துகளில் 50 ரன், 3ஃபோர், 4 சிக்சர்) ஷ்ரேயாஸ் ஐயரும் (24 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) அவர்கள் விட்ட இடத்திலிருந்து அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதனால் கொல்கொத்தா அணி 16.5 ஓவரில் இலக்கை எளிதாக எட்டினர். பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் மைதானத்தின் தன்மை அறிந்து அதற்குத் தகுந்தார்போல பந்துவீசவில்லை.  

          கொல்கொத்தா அணியின் சுனில் நரேன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை லக்னோவில் பஞ்சாப் அணிக்கும் லக்னோ அணிக்கும் இடையில் ஆட்டம் நடைபெற உள்ளது.

சமூக நீதி பற்றிப் பேச காங்கிரஸுக்கு என்ன தகுதி உள்ளது?

BJP Narayanan Thiruppathi - 2026
#image_title

நாராயணன் திருப்பதி

ஏன் நிர்மலா சீதாராமன் திருச்சியில் நிற்கவில்லை? ஏன் ஜெய்சங்கர் தென் சென்னையில் நிற்கவில்லை? வெயிலில் சுத்துவதற்கும், களப்பணியில் இருப்பதற்கும் விளிம்பு நிலை மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் எந்த வித சிரமமும் இல்லாமல் அனுபவிப்பதற்கு ஜெய்சங்கரும், நிர்மலா சீதாராமனும். இதற்கு பாஜக தெளிவான பதிலை மழுப்பாமல் சொல்ல வேண்டும். சமூக நீதி எந்த அடிப்படையில் பாஜகவில் இருக்கிறது, இயற்கை எந்த அளவில் பாஜகவில் இருக்கிறது என்பதை சொல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.

மாநிலங்களவை உறுப்பினர் மன்மோகன் சிங்கை பிரதமராகவே கொண்டு வந்த காங்கிரஸ் கட்சிக்கு இது போன்று பேசுவதற்கு அருகதை உள்ளதா? செல்வ பெருந்தகைக்கு வரலாறும் தெரியவில்லை, அரசியலும் புரியவில்லை என்பதே உண்மை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள 9 வேட்பாளர்களில் ஒருவர் கூட பிராமணர் இல்லை என்பது அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தெரியாதா? பிராமண சமுதாயத்தின் மீது வெறுப்பை உமிழும் செல்வப்பெருந்தகை, அந்த வெறுப்பின் காரணமாகத்தான் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களில் ஒருவர் கூட பிராமணர் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறாரா?

அமெரிக்கை நாராயணன், எஸ்.வி.ரமணி, பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் மணிசங்கர் ஐயர் போன்ற பிராமண தலைவர்களை ஏன் காங்கிரஸ் கட்சி போட்டியிட அனுமதிக்கவில்லை என்பதற்கு விளக்கமளித்து விட்டு, பின்னர் பாஜகவை கேள்வி கேட்கட்டும் செல்வப்பெருந்தகை. பாஜகவில் ஐந்து பட்டியலின சமுதாய வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில், ஐ ஏ எஸ் அதிகாரியாக அரசு பணியாற்றிய சசிகாந்த் செந்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சியில் பட்டியிலன வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நெடுங்காலமாக பணியாற்றிய பட்டியிலன தலைவர்கள் யாரும் காங்கிரஸ் கட்சியில் இப்போது இல்லையா? இது தான் சமூக நீதியா?

தினந்தோறும் பிராமணர்கள் மீது வெறுப்பை உமிழும் தி மு க, காங்கிரஸ். விசிக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பிராமணர்களை தேர்தல் அரசியலில் ஒடுக்கப்பட்டவர்களாக, ஒதுக்கப்பட்டவர்களாக கருதி வன்மத்தை கொட்டித் தீர்க்கும் நிலையில், அச்சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சொல்வது அந்த சமுதாயத்தின் மீதான செல்வப்பெருந்தகையின் உச்சக்கட்ட வன்மம். ‘நான் ஒரு கவுல் பிராமணன்’ என்று மார் தட்டிக்கொண்ட ராகுல் காந்தி மீது அதே வெறுப்பை உமிழ்வாரா செல்வப்பெருந்தகை? காங்கிரஸ் கட்சியே பிராமணர்களால் வளர்க்கப்பட்ட கட்சி தான் என்ற வரலாறு, அக்கட்சிக்கு புதிதாய் காங்கிரசுக்கு வந்த செல்வப்பெருந்தகைக்கு தெரியாததில் வியப்பில்லை.

சமூக நீதி பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு அருகதை இல்லை என்பதை செல்வப்பெருந்தகை அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் வார்டு கவுன்சிலர் துவங்கி அமைச்சர்கள் வரை பிராமணர்கள், பட்டியலினத்தவர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரும் இருக்கும் ஒரே கட்சி பாஜக தான் என்பதை செல்வப்பெருந்தகை அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளில் 234 சட்டசபை தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி ஒரு பிராமணரையாவது வேட்பாளராக நிறுத்தியுள்ளதா? காங்கிரஸ் கட்சியில் பிராமணர்கள் இல்லையா அல்லது பிராமணர்கள் மீதான வெறுப்பா? துணிவிருந்தால் காங்கிரஸ் பிராமணர்களுக்கு எதிரான கட்சி என்று செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிடுவாரா?

‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி’ என்ற சொல்லுக்கேற்ப, ஓட்டுக்காக, அந்த ஓட்டு தரும் சுகத்துக்காக ஜாதிகளுக்கிடையே எழும் பிரச்சினைகளை ஊதி ஊதிப் பெரிதாக்கி அனைத்திற்கும் பிராமணர்கள் தான் காரணம் என்று தப்பி பிழைப்பது படு கேவலமான அரசியல் பிழைப்பு அல்லவா?

தமிழகத்தை பொறுத்தவரை ஜாதியும், அரசியலும் பிரிக்க முடியாதவை. மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சமுதாயம் மதிக்கப்படமாட்டாது என்பது தமிழக அரசியலின் எழுதப்படாத விதி. அதை புரிந்து கொண்டு தான் கடந்த 25 வருடங்களாக ஒரு சில விதிவிலக்குகளை தவிர பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்களை இரு பெரிய அரசியல் கட்சிகளும் தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பை தவிர்த்து வந்தன. குறிப்பாக தி மு க வின் தற்போதைய கூட்டணி கட்சிகள் இந்த விவகாரத்தில் வெறியோடும், வெறுப்போடும் இருந்து கொண்டிருப்பது கண்கூடு.

ஜாதியை ஒழித்து விட்டதாக கூறிக்கொண்டு ஜாதிய அரசியலை மட்டுமே வெறி பிடித்து பின்பற்றிக்கொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், பிராமணர்களால் துவக்கப்பட்ட, வளர்க்கப்பட்ட காங்கிரஸும், கம்யூனிஸ்டுகளும் பிராமணர்களுக்கு எதிராக தமிழகத்தில் ஓலமிடுவது அரசியல் அற்பத்தனம்.

ஜெயலலிதா என்ற பிராமண பெண்மணியை ‘அம்மாவாக’ கொண்டாடும் அ தி மு க வும் ஒரு பிராமண வேட்பாளரை கூட நிறுத்தாதது தற்போதைய தலைமையின் அச்சமுதாயத்தின் மீதான வெறுப்பை உணர்த்துகிறது.

பாஜகவில் கூட ஒரு பிராமண வேட்பாளர் இல்லாதது மேலெழுந்த வாரியாக ஒரு சிலருக்கு உறுத்தலாக இருந்தாலும் கூட, இது நாள் வரை மனித குலம் ஒன்று தான் என்ற நிலைப்பாட்டோடு செயல்பட்டுக்கொண்டிருக்கும் பாஜகவில் மட்டுமே அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும் ஒற்றுமையோடு தேசப்பணியில், மக்கள் பணியில் ஈடுபாட்டோடு பணிபுரியும் சூழ்நிலையை, சந்தர்ப்பத்தை பெறமுடியும் என்பது உறுதி!

வீடியோ பழசுதான்! பொய்ப் புகார் பற்றி நடவடிக்கை எடுக்க போலீஸுக்கு பரிந்துரை : கோவை ஆட்சியர் பதில்!

annamalai bjp tn leader - 2026

தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை ஆரத்தி எடுக்கும் பெண்ணுக்கு பணம் கொடுத்ததாக ஒரு வீடியோவை சமூகத் தளங்களில் சுற்ற வைத்து பொய்யான புகார் கொடுத்த விவகாரத்தில், புகார் குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் போலீஸிடம் பதில் அளித்துள்ளார்.

கோவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை, ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுப்பது போன்று வெளியான வீடியோ குறித்து விசாரிக்க மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், அது முன்னர் எப்போதோ எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதும், தேர்தல் தொடர்பானது இல்லை என்றும் தெரியவந்ததால், போலி புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரசாரம் மேற்க்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்த பெண் ஒருவருக்கு பணம் கொடுப்பது போன்று சித்திரிக்கப்பட்டு, வீடியோ ஒன்று வெளியிடப் பட்டது. ஆனால், இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இது குறித்து தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதை அடுத்து, இந்த வீடியோவை போலீஸ் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கிராந்திக்குமார் கூறினார். மேலும்,, அது குறித்து விசாரிக்க உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

வீடியோ நம்பகத் தன்மையை சரிபார்க்க ஆட்சியர் கிட்டயே அத்தனை ஆதாரம் இருக்கே..!

இந்நிலையில், ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்ததாக பரவும் வீடியோ குறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, ஒரு வீடியோவில் நம்பகத் தன்மையை தாமே சரிபார்க்க ஆதாரங்கள் இருந்தும் ஏன் விசாரணைக்கு உத்தரவிட்டார் என்று கேள்வி எழுப்பினார் அண்ணாமலை. இது குறித்து அவர் குறிப்பிட்டபோது,

ஒரு காணொளியின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் அத்தனை ஆதாரங்கள் இருந்தும், அதற்குப் பதிலாக, @CollectorCbe அவர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 29.07.2023 அன்று, எங்கள் #EnMannEnMakkal யாத்திரையின் போது எடுக்கப்பட்ட ஒரு காணொளிக்கு, தற்போது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறார்.

அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நமது தமிழகக் கலாச்சாரத்தில் உள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் இதனை நாங்கள் கடைப்பிடிப்பதில்லை.

பிறரைப் போல, பணத்தின் மூலம் கிடைக்கும் வாக்குகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். இன்று இதுபோன்ற பொய்களைப் பரப்பும் கட்சிகள், உண்மையில் வாக்குகளுக்காக பணம் கொடுக்கும்போது நடவடிக்கை எடுக்க, @CollectorCbe அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். – என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், இந்த வீடியோ பழைய வீடியோ என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்படாது என்றும் மாவட்ட ஆட்சியர் பதில் அளித்தார்.

மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தும் ‘மலை எனும் சிந்தனை’!

chozhavanthan annamalai tour - 2026
#image_title

Dr. சோம. தர்மசேனன்

நிகழ மறுத்த அற்புதம் தற்போது இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதை கட்டியம் கூறி எவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அதற்கான பயணத்தை அதுவே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.

திடீரென வந்து நிற்கும் காட்டாறு போல் அல்லாமல், தொடர்ச்சியாக அலைபாய்ந்து சென்று கொண்டிருக்கும் நதியில், படிந்துவிட்ட கழிவுகளையும், கசடுகளையும் துடைத்தெறிந்துச் செல்லும் புது வெள்ளமாக பாய்ந்து, நிலைத்து நிற்கும் நதி இது என்று நாம் கட்டியம் கூறி உரைக்கலாம்.

புழுங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு ஓர் விடுதலையாக… நிர்கதியாக நின்றவர்களுக்கு ஒரு விமோசனமாக… ஒரு சிந்தனை, ஒரு முகம், ஒரு சாட்சி, ஒரு செயல்பாடு தற்போது அரங்கேறத் தொடங்கியுள்ளது.

அது, அவர்களுக்கு சித்தாந்த ரீதியில் மாபெரும் நம்பிக்கையூட்டும் பயணத்தைக் கொடுத்து, உத்வேகத்தை அளித்து, செயல்பட வைத்துக்கொண்டுள்ளது.

தீய சக்திக் கூட்டத்தை சேர்ந்தவர்களை தலைவன் என்றும், சகோதரன் என்றும் தனக்குப் பிடித்த தலைமை பண்பு உள்ளவன் என்றும் இந்த முகாமில் இருந்த பலரும் கூறிக்கொண்டிருந்தனர்.
மனதார அப்படிக் கூறாவிட்டாலும், சூழல் அவர்களை அப்படிக் கூற வைத்தது. அதையெல்லாம் கேட்டு, அழுது புலம்பி, வெளியில் கூட சொல்ல இயலாத நிலையில் பலர் துடித்துக்கொண்டிருந்தனர்.

அப்படிப்பட்டவர்களுக்கு ஓர் ஆறுதலாய், நம்பிக்கையூட்டும் கலங்கரை விளக்காய் இந்த சக்தி செயல்படுகிறதென்றால் அது மிகையாகாது.

“நான் உள்ளதை உள்ளபடி எடுத்து இயம்புவேன். எவருக்கும் நாம் சிந்தனா ரீதியில் அடிமையாக இருக்க வேண்டியது இல்லை. எதையும் நாம் வீழ்த்த முடியும்” என்ற நம்பிக்கையைக் கொடுத்த ஒரு மாபெரும் சிந்தனை, மாபெரும் முகம், மாபெரும் செயல்பாடு இது என்றே நாம் சொல்லலாம்.

சிந்தனைக்குத் தேவை எங்கிருந்து வந்தது? இதற்கு முன் ஏதேனும் முன்னுதாரணங்கள் இங்கு இருந்தனவா? இருந்த முன்னுதாரணங்கள் எப்படி இருந்தன?

“அவள் ஒன்றும் படி தாண்டா பத்தினியும் அல்ல; நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும் அல்ல” என்று கூறியதைக் கேட்டு, அவரது தொண்டர் அடிப்பொடிகள் சிலாகித்து, அதில் இலக்கிய நயத்தை தேடிக் கொண்டிருந்த ஒரு மூடர் கூட்டத்தின்பால் இந்தச் சமுதாயம் அடிமைப்பட்டுக் கிடந்தது.

அதுமட்டுமின்றி, திராவிட நாட்டை பாவாடைக்குள்ளே காணலாம் என உளறிக் கொட்டிய அவனைத் தலைவன் என்று வைத்து, ஐம்பது ஆண்டுகள் கொண்டாடிய மாகாணம் இது.

இந்தச் சூழலில் தங்களுக்கு நம்பிக்கை ஒளி கிடைக்கும் என்று யாராவது நம்ப இயலுமா? அதுமட்டுமின்றி தொடர்ந்து சிந்தனைத் தாக்குதலில் கிரிப்டோக்களின் ஆதிக்கம் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த மாகாணத்தில் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் இருக்கத் தான் செய்து வந்தது.

annamalai in avinasi - 2026
#image_title

அறிவு, ஒழுக்கம், ஒற்றுமை, சர்வஸ் ஸ்பரிஷி, எல்லோருக்கும் ஓர் இடம், எல்லோருக்கும் ஓர் பணி என்று நாம் கூறி தொடர்ந்து இயங்கி வந்தோம். ஆனால் அந்த முத்திரையை அழுத்தம் திருத்தமாக இந்த தீய சக்திகளின் ஆதிக்கத்திற்கு இடையே பதிய வைக்க முடிந்ததா என்றால்…. இந்த சமுதாயம் அதற்கு இடம் கொடுத்ததா என்றால்… அறுதியிட்டு ‘ஆம்’ என்று நம்மால் சொல்ல முடியாமல் தான் இருந்து வந்தோம். இதுவே நிதர்சனம்.

தீய சக்திகளிடமிருந்து சமுதாயத்திற்கு விடிவைக் கொண்டுவர, வெறும் அறிவு, ஒழுக்கம் மட்டும் போதுமானதாக இல்லை. அதைவிட மிகவும் தீவிரமான ஒரு உத்வேகமும், ஆற்றலும் தேவைப்பட்டது. அதை ஏதோ ஒரு வகையில் தர இயலாமல் நம் சித்தாந்தம் பயணம் செய்து கொண்டிருந்தது.

இது எவருடைய கோளாறும் கிடையாது. சமுதாயம் என்ன பிரதிபலிக்கிறதோ, அதுவே இங்கு உள்ளது என்பது ஒரு பொதுவான கண்ணோட்டம். அந்த கண்ணோட்டத்தின்படி சிந்திக்கும் போது, சமுதாயமானது தனக்கு இத்தகையத் தேவை உள்ளது என்று எடுத்து இயம்பவே இல்லை. கடந்த 50 ஆண்டுகளாகவே இந்த நிலை தொடர்ந்து இருந்தது எனவும் கூறலாம்.

இந்நிலையில், இது மாற்று சக்தி அல்ல… காலத்தின் கட்டாயம். இந்த கட்டாயமான சக்தி தேவை, ஆற்றல் தேவை என்று சமுதாயம் இதுவரை எடுத்து இயம்பாமல் இருந்த நிலையில் இன்று, வேண்டும் வேண்டும்… மலை வேண்டும்… மலை வேண்டும் என்கிறது.

இதோ…நமக்கு இன்னது தான் வேண்டுமென்று யாரும் சமுதாயத்தில் முன்னெடுத்து எதையும் கூறவில்லை. இருந்தபோதிலும், அதன் தேவை இங்கு இருந்து கொண்டிருப்பதை பலரும் அறிவர். ஆனாலும் அதை இட்டு நிரப்ப நம்பிக்கைக்குரிய எவரும் முன்வரவில்லை.

எதையோ ஒன்றைத் தேடி திக்கற்ற நிலையில் சமுதாயம் அலைந்து கொண்டிருந்தது. நாமும் அலைந்து கொண்டிருந்தோம். நமக்கு முன்னே இருந்தவர்கள் எவரும் அவ்வாறு காட்சி தரவில்லை; நம்பிக்கை ஊட்டவில்லை; நம்பிக்கையை தொலைக்கக் கூடியவர்களாகத் தான் இருந்து கொண்டிருந்தார்கள்.

annamalai in madurai yatra - 2026

இந்த நிலையில் நமக்கு கிடைத்தது தான் ஒரு புதிய சிந்தனை; புதிய செயல்பாடு; புதிய வரவு. அதுதான் மலை… மலை எனும் புதிய சிந்தனை வெறும் நம்பிக்கை மட்டுமல்ல ஓர் தலைமைப் பண்பு; ஒரு செயலாற்றல், ஒரு உத்வேகம், ஒரு முன்னுதாரணம், ஒரு பண்பாடு, ஒரு கலாச்சாரம் என்று பல வார்த்தைகளை இட்டு அதை நாம் அழைக்கலாம்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த சிந்தனைக்கு பெயர் தான் மலை எனும் அண்ணாமலை.

திடீரென அலை அலையாகக் கூட்டம், மக்கள் கூட்டம். எங்கெங்கு காணினும் செல்லும் இடம் எல்லாம் தலைகள். எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது? திடீரென எவர் சொல்லி வந்தார்கள் இவர்கள்? யாராவது ஆணையிட்டார்களா? எவருக்கும் முன்பே தெரியுமா இப்படி இவர்கள் திரள்வார்கள் என்று? எது இவர்களை ஆட்டுவிக்கிறது?

புதியதோர் உலகம் செய்வோம் என்று அவர் அழைக்கவில்லை. ஆனால், இருப்பது சரியில்லை புதியதோர் உலகை அமைக்கும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எனவே நாம் இணைந்து பணியாற்றும் நேரம் வந்துவிட்டது.

annamalai in thiruvannamalai - 2026
#image_title

நமது சுயநலத்தை ஒதுக்கி, பொதுநலத்தை முன்னிறுத்தி, பணியாற்றும் காலம் வந்துவிட்டது. சுயநலத்திற்கான கூட்டத்தின் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கூக்குரலை அவர் இட்டதும்…இத்தனை நாட்களாக இவர் எங்கிருந்தார்…. இந்த நம்பிக்கையை நமக்கு ஊட்ட ஒருவரும் இதுவரை இருந்ததில்லையே…இப்போது வந்திருக்கிறார். புதிய நம்பிக்கை பிறந்துள்ளது என்ற உத்வேகத்தில், மக்கள் திரள் திரளாக வரத் தொடங்கியுள்ளனர்.

இது தானாகச் சேர்ந்த கூட்டம். அவர் குரலுக்குக் கிடைத்த பிரதிபலிப்பு. இதுதான் தலைமைப் பண்பு; மக்களின் நம்பிக்கையை சம்பாதிப்பது என்று இதை தெளிவாகச் சித்தரிக்க முடியும்.

இருந்தபோதிலும் ஏன் வருகிறார்கள்…எப்படி வருகிறார்கள்… எது அவர்களை வரத் தூண்டுகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலைத் தேடும் போது தான், மக்கள் இவ்வளவு நாட்களாக தங்களுக்கு இப்படி ஒரு சிந்தனை, இப்படி ஒரு பண்பு, இப்படி ஒரு ஆற்றல் வேண்டும் என்று ஏங்கித் தவித்து இருக்கிறார்கள் என்பது நமக்கு புரிய வருகிறது.

தற்போது தான் இந்தச் சூழலில் இவ்வாறு ஒரு தேவை இருப்பதை அறிந்து, ஒரு சக்தி தன்னை முன்னிறுத்த தொடங்கிய நேரத்தில், மக்கள் அதை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

annamalai at tiruchendur - 2026
#image_title

அதன் அடிப்படையில் மட்டுமே இந்த கூட்டம் தானாகச் சேர்ந்த கூட்டமாக, பெரும் திரளாக வந்து கொண்டிருக்கிறது. மேலும் மேலும் வந்து கொண்டிருக்கிறது. மேலும் மேலும் வரும் என்று நாம் அறுதியிட்டுக் கூற முடிகிறது.

மக்கள் விரும்பும் அனைத்தையும் தன்னகத்தே கொண்ட ஒரு ஜீவன், ஒரு சிந்தனை, ஒரு ஆற்றல் நம் முன்னே விஸ்வரூபம் எடுத்து, தன் திருவிளையாடலை தொடங்கியுள்ளது.

ஓர் தீட்சண்யத்தை, தெளிவை, இலக்கை முன்னிறுத்தி தொடர்ந்து போராடத் தூண்டும் தலைமை பண்பு தற்போது அமையத் தொடங்கியுள்ளது. இது மக்களுக்கு தெளிவாக புரியத் தொடங்கியுள்ளது.

நம்பிக்கையும், தெளிவும், உண்மையும், சத்தியமும் ஒரு தலைவனுக்குத் தேவை. அது இவனிடம் உள்ளது என்று மக்கள் கருத தொடங்கியதின் விளைவே, இத்தகைய தொடர் ஆதரவிற்கு காரணம் என்று நாம் அறுதியிட்டு கூற முடியும்.

annamalai in chozhavanthan - 2026

வெற்றி வெற்றி என்று கூறுவது இரண்டாம் பட்சம் தான். ஏனெனில் வெற்றிக்கான இலக்கை நோக்கிய பயணமே பெரும் பயணம். அது மட்டும் இன்றி 50 ஆண்டுகள் ஒரு தீய சக்தி இந்த மாகாணத்தை சிந்தனா ரீதியில் தீவிரமாக அடிமைப்படுத்தியிருந்தது. அந்தச் சூழலில் அதை மாற்றுவதற்கான முயற்சி என்பதே ஒரு பெரும் பிரயத்தனம்.

அந்தப் பிரயத்தனத்தை தருவதற்கு தேவையான தலைமையே நம்முடைய கண்ணுக்குப் புலப்படாமல் இருந்தது. மக்களாகிய நாம் நொந்து நூலாகி இருந்தோம். நமக்கெல்லாம் விடிவு காலம் வரவே வராது; நம்மை வழிகாட்ட ஒருவன் வரவே மாட்டான் என்கிற நிலைமையில் தான் நாம் இருந்தோம்.
அப்போது தான் இதையெல்லாம் மாற்றுவதற்கு நான் புறப்பட்டு வந்துள்ளேன் என்று வெறும் வார்த்தைகளால் கூறாமல், தொடர்ந்து செயலில் நின்று, நிதானமாக அடித்து ஒரு பெரும் சூறாவளியை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்.

என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை தன்னுடைய வார்த்தைகளால் விளக்காமல், மக்களுக்கு தானாக புரிய வைத்த ஓர் தலைமைப் பண்பு. அது மக்களிடம் ஒரு பெரும் பயணத்தை நாம் மேற்கொண்டுள்ளோம் என்பதை உணர்த்தியுள்ளது.

இவருடன் சேர்ந்து செல்லும் நம்முடைய பயணம் பாதுகாப்பானதாக இருக்கும், வெற்றித் திசையை நோக்கி மட்டுமே செல்லும் என்ற நம்பிக்கையை நம் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது இவரின் செயல்பாடுகள் என்றால் அது மிகையாகாது.

மலை எனும் புதிய சிந்தனை மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது என்று நாம் கட்டியம் கூறத் தேவையில்லை.

பாஜக., தொண்டர்களுக்கு உத்ஸாகம் கொடுக்கும் மோடி! ‘எனது பூத் வலிமையான பூத்’ முழக்கத்துடன் பேச்சு!

modi in covai - 2026

எனது பூத் வலிமையான பூத் – என்ற முழக்கத்துடன் பாஜக., தொண்டர்கள் கடுமையாக களப்பணி ஆற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி, இன்று மாலை தொண்டர்களுடன் செயலியின் வாயிலாக பேசுகிறார்.

நாடாளுமன்றத் தேரதல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி தமிழகத்துக்கு 5 முறை வந்துள்ளார். மீண்டும் அவர் பிரசாரத்துக்காக தமிழகம் வருவதற்கு திட்டமிட்டுள்ளார். இதனிடையே தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களைத் தொலைபேசியில் அழைத்து, அவர்களுக்கு உத்ஸாகம் ஊட்டி, அவர்கள் தொகுதியில் என்ன பிரச்னை உள்ளது, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றெல்லாம் கேட்கிறார். இந்த உரையாடலை வீடியோவாக சமூகத் தளங்களில் வெளியிட்டும் வருகிறது பாஜக.,!

பிரதமர் மோடி அவ்வாறு கேரள மாநிலத்தில் போட்டியிடும் சரசு என்ற பேராசிரியையிடம் பேசும் வீடியோ சமூகத் தளங்களில் வைரலானது. அது போல் மேலும் பல வேட்பாளர்களிடம் பிரதமர் மோடி, போனில் பேசி, மக்களிடம் கொண்டு செல்ல பாஜக.,வினர் திட்டமிட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் வலைதள பக்கத்தில், தி.மு.க. ஆட்சியை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில்…

“நமோ செயலி” மூலமாக இன்று மாலை 5 மணிக்கு நமது கடின உழைப்பாளிகளான பாஜக., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் “எனது பூத் வலிமையான பூத்” என்ற தலைப்பில் கலந்துரையாட உள்ளேன். தமிழக பாரதிய ஜனதா கட்சியினரின் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் உள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகள், திட்டங்களை பாரதிய ஜனதா கட்சியினர் மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் திறம்பட கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள்.

திமுக.,வின் தவறான ஆட்சியால் தமிழக மக்கள் சலிப்படைந்து சோர்ந்து போய் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் நம்பிக்கையோடு பார்க்கிறார்கள் என்பதே உண்மையாகும். .. என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பேச்சுக்காக தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதனிடயே, தமிழக உளவுத் தகவல்கள் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக., இரண்டாம் இடத்திற்கு முன்னேறுவதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், திமுக., அதிமுக., இரனடு கட்சிகளுமே கைகோத்து செயல்படத் தொடங்கியிருக்கின்றன. பொது எதிரி பாஜக., என்பதாகக் கூறிக் கொண்டு, இரு திராவிடக் கட்சிகளும் இணைந்து செயல்படுவது, அதிமுக.,வுக்கு வாக்களித்து வரும் எம்ஜிஆர்., ரசிகர்களிடம் கடும் அதிருப்தியைத் தோற்றுவித்திருக்கிறது.