January 19, 2025, 3:23 PM
28.5 C
Chennai

IPL 2024: கலக்கிய லக்னோ அணி

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2024 – 30.03.2024 – லக்னோ
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்க்ஸ்

          லக்னோ அணி (199/8, டி காக் 54, க்ருணால் பாண்ட்யா 43*, பூரன் 42, சாம் கரன் 3/28, அர்ஷ்தீப் சிங் 2/30) பஞ்சாப் அணியை (178/5. ஷிகர் தவான் 70, ஜானி பெயர்ஸ்டோ 42, லிவிங்க்ஸ்டோன் 28*,  மயங்க் யாதவ் 3/27, மொஷின் கான் 2/34) 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்க்ஸ் அணிக்கும் லக்னோவில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. லக்னோ அணியின் தொடக்க வீரர் க்விண்டன் டி காக் (54 ரன்) நன்றாக ஆடினார்.

ராகுல் (15 ரன்), படிக்கல் (9 ரன்), பதோனி (8 ரன்), ரவி பிஷ்னோய் (பூஜ்யம்), மோஷின் கான் (2 ரன்) ஆகியோர் வந்தார்கள் போனார்கள் ரகம். நிக்கோலஸ் பூரன் (42 ரன்) மற்றும் க்ருணால் பாண்ட்யா (43 ரன் ஆட்டமிழக்காமல்) நன்றாக ஆடியதால் லக்னோ அணியின் ஸ்கோர் 20 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 199 ரன் என்ற நிலைக்கு வந்தது.

ALSO READ:  பக்தர்கள் நெரிசலில் சபரிமலை; விபத்துகளைத் தடுக்க போலீஸார் எச்சரிக்கை!

          இரண்டாவதாக ஆட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் (50 பந்துகளில் 70 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்) பெயர்ஸ்டோ (29 பந்துகளில் 42 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் அதற்குப் பின்னர் ஆடவந்த பிரப்சிம்ரன் சிங் (19 ரன்), ஜிதேஷ் ஷர்மா (6 ரன்), சாம் கரன் (பூஜ்யம்) ஆகியோர் வெற்றி பெறும் நிலையில் இருந்த பஞ்சாப் அணியை தோல்வியை நோக்கித்தள்ளினர்.

17ஆவது ஓவரின் அடுத்தடுத்தடுத்த பந்துகளில் மொஷின் கான் ஷிகர் தவான் மற்றும் சாம் கரன் விக்கட்டுகளை எடுத்தார். அந்த இடத்தில் பஞ்சாப் அணி தோல்வியைச் சந்தித்துவிட்டது. அதன் பின்னர் லியம் லிவிங்க்ஸ்டோன், ஷஷாங்க் சிங் இருவராலும் வெற்றி இலக்கை எட்டமுடியவில்லை. 20 ஓவரில் பஞ்சாப் அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 178 ரன் எடுத்துத் தோல்வியைத் தழுவியது.

          லக்னோ அணியின் மயங்க் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் அகமதாபாத்தில் குஜராத் அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையில் நடக்கவுள்லது. இரண்டாவது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் சென்னை அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே நடைபெற உள்ளது.

ALSO READ:  பிரயாக்ராஜில் களைகட்டிய மகாகும்பமேளா; முதல் நாள் காலையிலேயே 60 லட்சம் பேர் புனித நீராடல்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.