IPL 2024: கலக்கிய லக்னோ அணி

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2024 – 30.03.2024 – லக்னோ
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்க்ஸ்

          லக்னோ அணி (199/8, டி காக் 54, க்ருணால் பாண்ட்யா 43*, பூரன் 42, சாம் கரன் 3/28, அர்ஷ்தீப் சிங் 2/30) பஞ்சாப் அணியை (178/5. ஷிகர் தவான் 70, ஜானி பெயர்ஸ்டோ 42, லிவிங்க்ஸ்டோன் 28*,  மயங்க் யாதவ் 3/27, மொஷின் கான் 2/34) 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்க்ஸ் அணிக்கும் லக்னோவில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. லக்னோ அணியின் தொடக்க வீரர் க்விண்டன் டி காக் (54 ரன்) நன்றாக ஆடினார்.

ராகுல் (15 ரன்), படிக்கல் (9 ரன்), பதோனி (8 ரன்), ரவி பிஷ்னோய் (பூஜ்யம்), மோஷின் கான் (2 ரன்) ஆகியோர் வந்தார்கள் போனார்கள் ரகம். நிக்கோலஸ் பூரன் (42 ரன்) மற்றும் க்ருணால் பாண்ட்யா (43 ரன் ஆட்டமிழக்காமல்) நன்றாக ஆடியதால் லக்னோ அணியின் ஸ்கோர் 20 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 199 ரன் என்ற நிலைக்கு வந்தது.

          இரண்டாவதாக ஆட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் (50 பந்துகளில் 70 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்) பெயர்ஸ்டோ (29 பந்துகளில் 42 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் அதற்குப் பின்னர் ஆடவந்த பிரப்சிம்ரன் சிங் (19 ரன்), ஜிதேஷ் ஷர்மா (6 ரன்), சாம் கரன் (பூஜ்யம்) ஆகியோர் வெற்றி பெறும் நிலையில் இருந்த பஞ்சாப் அணியை தோல்வியை நோக்கித்தள்ளினர்.

17ஆவது ஓவரின் அடுத்தடுத்தடுத்த பந்துகளில் மொஷின் கான் ஷிகர் தவான் மற்றும் சாம் கரன் விக்கட்டுகளை எடுத்தார். அந்த இடத்தில் பஞ்சாப் அணி தோல்வியைச் சந்தித்துவிட்டது. அதன் பின்னர் லியம் லிவிங்க்ஸ்டோன், ஷஷாங்க் சிங் இருவராலும் வெற்றி இலக்கை எட்டமுடியவில்லை. 20 ஓவரில் பஞ்சாப் அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 178 ரன் எடுத்துத் தோல்வியைத் தழுவியது.

          லக்னோ அணியின் மயங்க் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் அகமதாபாத்தில் குஜராத் அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையில் நடக்கவுள்லது. இரண்டாவது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் சென்னை அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே நடைபெற உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories