Home Blog Page 336

ஜூலை 28ல் தொடங்குகிறது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா!

pudukkottai literary festiv - 2026

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், முக்கியமான இலக்கிய ஆளுமைகள், கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வரும் ஜூலை 28-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை 10 நாட்கள் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறுகிறது.

காலை 9 மணிக்கு தொடங்கி, இரவு 9 மணி வரை நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவில் பல லட்சக்கணக்கான புத்தகங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குளில் வாசகர்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளன.

தினந்தோறும் மாலை 5 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், தொடர்ந்து 6 மணிக்கு சிறப்புச் சொற்பொழிவுகள், கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், கலைத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.

ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கும் புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியரும், புத்தகத் திருவிழாக் குழுத் தலைவருமான ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

தொடர்ந்து மாலையில் சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.தினகரன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

 ஜூலை 28 அன்று மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனின் சிறப்புரை, மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரனின் அறிவியல் உரை, கவிச்சுடர் கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

ஜூலை 29 அன்று மக்களிசைப் பாடகர்கள் செந்தில்கணேஷ் ராஜலட்சுமியின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஜூலை 30-ல் கவிஞர் நந்தலாலா, வழக்குரைஞர் த.ராமலிங்கம் ஆகியோரின் இலக்கியச் சொற்பொழிவுகள் இடம் பெறுகின்றன.

ஆக.1 அன்று எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், பேராசிரியர் வெ.பா.ஆத்ரேயா ஆகியோரின் உரைவீச்சு இடம்பெறுகிறது.

ஆக.2-ல் எழுத்தாளர் பவா.செல்லதுரை, எழுத்தாளர் நக்கீரன், முன்னாள் துணைவேந்தர் சொ.சுப்பையா ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

ஆக.3 அன்று கவிதா ஜவகரின் இலக்கிய உரையும், கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் கவியரங்கமும் நடைபெறுகிறது..

ஆக. 4 அன்று எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

ஆக.5 அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்

நிறைவு நாளான ஆக. 6 அன்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் கவிதா ராமு, நடிகர் தாமு, எழுத்தாளர் விழியன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

செய்தி: டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை

அரசுக் கூட்டத்தைப் புறக்கணித்து, கத்தோலிக்க சபைக் கூட்டத்தில் ஆஜர்: ஆசிரியர்கள் மீது நடவடிக்கை தேவை!

hindumunnani - 2026

பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு நடத்தும் முகாமை புறக்கணித்து கத்தோலிக்க சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்துமுன்னணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் வெளியிட்ட அறிக்கை:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்காக தமிழக அரசால் அவ்வப்போது CRC கூட்டம் நடத்தப்படும். இதில் மாணவர்களுக்கான கல்வித் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது, பள்ளிகளை எப்படி நிர்வகிப்பது என்பதுடன், பள்ளிக்கல்வித்துறை குறித்த முக்கியமான செயல்பாடுகளுக்கான பயிற்சி முறைகளும் இந்தக் கூட்டத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக CRC கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இதில் சாதாரண விடுப்பு கூட ஆசிரியர்களுக்கு பொதுவாக அனுமதிக்கப் படுவதில்லை.

இன்று (ஜூலை 22) திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு வட்டாரங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கான சிஆர்சி முகாம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அரசு உதவி பெறும் கத்தோலிக்க சபை சார்ந்த பள்ளி ஆசிரியர்களுக்கான கத்தோலிக்க சபை கூட்டம் பாளையங்கோட்டை மாதா மஹாலில் இன்று காலை நடைபெறுகிறது. இதில் அனைத்து கத்தோலிக்க பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும் என கத்தோலிக்க சபை நிர்வாகம் சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.

ALSO READ: இந்துக்களின் கடைசி நம்பிக்கையை சீர்குலைக்கும் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும்!

கத்தோலிக்க சபையின் இந்த உத்தரவுக்கு இணங்க, அரசு உதவி பெறும் கத்தோலிக்க சபை பள்ளிகளைச் சார்ந்த நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு பள்ளி ஆசிரியர்கள் அரசு வழிகாட்டுதலின் படி நடைபெறும் சி ஆர் சி முகாமில் பங்கேற்காமல், கத்தோலிக்க சபைக் கூட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

இது அரசு உத்தரவை அவமதிக்கும் செயலாகும். மத ரீதியாக சி.ஆர்.சி கூட்டத்திற்கு விதிவிலக்கு வழங்குவது ஏற்புடையது அல்ல. வரும் காலங்களில் இதுபோல் அனைத்து ஆசிரியர்களும் அவரவர் வசதிக்கேற்ப சி ஆர் சி முகாமை புறக்கணிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். இதனால் அரசாங்கத்தின் செயல் திட்டம் பெரிய அளவில் பாதிக்கப்படக் கூடும்.

இந்து ஆசிரியர்களுக்கு சாதாரண விடுப்புகூட எடுக்க அனுமதிக்கப் படாத நிலையில், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் சிஆர்சி பயிற்சி முகாமில் கத்தோலிக்க பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் எப்படி விதிவிலக்கு அளிக்கப்பட்டது?

அரசு வழிகாட்டுதல் படி நடைபெறும் சிஆர்சி கூட்டத்தில் இன்று பங்கேற்காத கத்தோலிக்க சபை பள்ளி ஆசிரியர்கள் மீது திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட கல்வி நிர்வாகம் துறை ரீதியாக உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் இது குறித்து விசாரித்து என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை பொதுமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் எனவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருஆடிப்பூர திருத்தேரோட்டம்..

IMG 20230722 WA0108 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருஆடிப்பூர திருத்தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்து ஸ்ரீஆண்டாளை தரிசனம் செய்தனர்

வைணவ திருத்தலங்களில் சிறப்பு மிக்கதாக திகழும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பல்வேறு உற்சவங்கள், வைபவங்கள் நடைபெற்ற போதிலும் ஆடிப்பூர திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரத்தை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும்.

IMG 20230722 135008 - 2026

இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு ஆண்டாள்-ரெங்கமன்னார் சேர்த்தியில் 16 வண்டி சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 5-ம் திருநாளான 18-ந்தேதி 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்டாள் பெரிய அன்னவாகனம், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத் தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனங்களிலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளி காட்சி அளித்தனர். 7-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு சயனசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 8-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஆண்டாள், ரெங்கமன்னார் மேளதாளங்களுடன் தேரில் எழுந்தருளினர்.

காலை 8.05 மணிக்கு தேரோட்டத்தை பக்தர்கள் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா…, கோபாலா… என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு தேர் செல்லும் 4 ரதவீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தேர் சக்கரங்கள் பதியாத வகையில் இரும்பு பிளேட்டுகள் போடப்பட்டு இருந்தன. மேலும் வேளாண்மைத்துறை சார்பில் பொக்லைன் எந்திரங்கள் தேரை பின்னால் இருந்து தள்ளும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதேபோல் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டிருந்தது.

வருகிற 24-ந்தேதி காலை இரட்டை தோளுக்கினியானில் வாழைக்குளத்தெரு தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளல் மற்றும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பன்னிரெண்டாம் திருநாளான 25-ந்தேதி காலை விடாயத்து மண்டபத்தில் உற்சவ சாந்தியும், மாலை 6 மணிக்கு ஆண்டாள்-ரெங்க மன்னார் திவ்ய தம்பதியினருக்கு புஷ்ப யாகமும் நடைபெற உள்ளது. அத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் மு.கரு.முத்துராஜா மற்றும் கோவில் பட்டர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருஆடிப்பூர திருத்தேரோட்டம்..

IMG 20230722 WA0108 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருஆடிப்பூர திருத்தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்து ஸ்ரீஆண்டாளை தரிசனம் செய்தனர்

வைணவ திருத்தலங்களில் சிறப்பு மிக்கதாக திகழும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பல்வேறு உற்சவங்கள், வைபவங்கள் நடைபெற்ற போதிலும் ஆடிப்பூர திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரத்தை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு ஆண்டாள்-ரெங்கமன்னார் சேர்த்தியில் 16 வண்டி சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 5-ம் திருநாளான 18-ந்தேதி 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்டாள் பெரிய அன்னவாகனம், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத் தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனங்களிலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளி காட்சி அளித்தனர். 7-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு சயனசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 8-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஆண்டாள், ரெங்கமன்னார் மேளதாளங்களுடன் தேரில் எழுந்தருளினர்.

காலை 8.05 மணிக்கு தேரோட்டத்தை பக்தர்கள் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா…, கோபாலா… என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு தேர் செல்லும் 4 ரதவீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தேர் சக்கரங்கள் பதியாத வகையில் இரும்பு பிளேட்டுகள் போடப்பட்டு இருந்தன. மேலும் வேளாண்மைத்துறை சார்பில் பொக்லைன் எந்திரங்கள் தேரை பின்னால் இருந்து தள்ளும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதேபோல் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டிருந்தது.

வருகிற 24-ந்தேதி காலை இரட்டை தோளுக்கினியானில் வாழைக்குளத்தெரு தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளல் மற்றும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பன்னிரெண்டாம் திருநாளான 25-ந்தேதி காலை விடாயத்து மண்டபத்தில் உற்சவ சாந்தியும், மாலை 6 மணிக்கு ஆண்டாள்-ரெங்க மன்னார் திவ்ய தம்பதியினருக்கு புஷ்ப யாகமும் நடைபெற உள்ளது. அத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் மு.கரு.முத்துராஜா மற்றும் கோவில் பட்டர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

A Book a Week- 7

0

A Book a Week- 7
By   Narasimhan Vijayaraghavan


adam grant - 2026

Adam Grant is an American organizational psychologist and a professor at the Wharton School of the University of Pennsylvania. Born on August 13, 1981, in Michigan, he has made significant contributions to the fields of organizational behavior, work motivation, and leadership.

Grant has written several best-selling books, including “Give and Take,” “Originals,” and “Option B” (co-authored with Sheryl Sandberg). These books explore topics such as generosity, creativity, and resilience, providing insights into how individuals can thrive in their personal and professional lives.

“Think Again: The Power of Knowing What You Don’t Know “ by Adam Grant is a well-written and thought-provoking book that challenges readers to think more critically and open-mindedly. Grant, a professor of organizational psychology at the Wharton School of the University of Pennsylvania, provides a wealth of evidence and anecdotes to support his argument that the ability to think again is essential for success in today’s world.

ALSO READ:  A Book a Week-5 

The book is divided into three parts: “The Anatomy of Not Knowing,” “The Power of Rethinking,” and “The Science of Persuasion.” In the first part, Grant discusses the different ways in which our thinking can be biased, and how these biases can lead us to make poor decisions. He also introduces the concept of “challenge networks,” which are groups of people who can help us to see things from different perspectives.

In the second part of the book, Grant focuses on the benefits of rethinking. He argues that rethinking can help us to learn from our mistakes, to make better decisions, and to be more creative. He also provides tips on how to overcome our biases and to become more open to new ideas.

In the third part of the book, Grant discusses the science of persuasion. He argues that persuasion is more likely to be successful when we appeal to people’s emotions, rather than their logic. He also provides tips on how to frame our arguments in a way that is more persuasive.

ALSO READ : A Book a Week-4

Organizational Psychology seems so esoteric. As if couched in academia beyond the ordinary you and me. But Adam Grant is talking about ‘Think’, ‘Think Again’, ‘Procrastination’ and more. All faculties we are aware of. And authors these days have understood the art of telling what they set out to say with stories. And the message reaches the reader with ease.

Grant tells the story of two surgeons who were both highly skilled but had very different approaches to surgery. The first surgeon was very confident in his own abilities and rarely questioned his decisions. The second surgeon was more humble and open to feedback, and he was constantly learning from his mistakes. The book argues that the second surgeon was more likely to be successful because he was willing to think again.

Grant discusses the “curse of knowledge,” which is a cognitive bias that occurs when we know something that others don’t. This can make it difficult for us to communicate effectively with others, because we assume that they know what we know. The book provides tips on how to overcome the curse of knowledge and become more open to new perspectives.

Grant tells the story of how Google Flu Trends, a project that used search data to predict flu outbreaks, made a series of inaccurate predictions. The book argues that the project failed because it was based on the assumption that people who search for flu symptoms are representative of the general population. However, this assumption was wrong, and as a result, Google Flu Trends was unable to accurately predict flu outbreaks.

Grant discusses the concept of a “challenge network,” which is a group of people who challenge our thinking and help us to see things from different perspectives. The book argues that challenge networks are essential for learning and growth, and it provides tips on how to build one.

Think Again is a valuable book for anyone who wants to improve their critical thinking skills and become more open-minded. It is full of insights and practical advice that can help us to make better decisions, to be more creative, and to be more persuasive.

“Think Again” is fine. For that, we need to ‘think’ first. Do we?


(Author of multiple books- is practicing advocate in the Madras High Court)


A Masterpiece of Simplicity and Power: Remembering Hemingway!

0
ernest hemingway - 2026

A Masterpiece of Simplicity and Power: Remembering Hemingway on his birthday

By Janaki Balasubramaniam

“Ernest Hemingway was a master of his craft, wielding words with the precision of a surgeon and the soul of a poet.”

Ernest Hemingway was indeed a master storyteller, and his influence on literature is undeniable. He developed a distinctive writing style marked by simplicity, brevity, and emotional depth, and his works such as “The Old Man and the Sea” and “A Farewell to Arms” showcase this beautifully.

Hemingway’s ability to convey powerful imagery with minimal words is one of the hallmarks of his writing. In “The Old Man and the Sea,” his description of Santiago as “thin and gaunt with deep wrinkles in the back of his neck” creates a vivid image in the reader’s mind.

Another defining characteristic of Hemingway’s work is his spare, realistic dialogue, which cuts to the heart of his characters’ emotions. This can be seen in “A Farewell to Arms,” where the exchange between Frederic Henry and Catherine Barkley about their fear of the rain is deeply moving.

Also Read:  A Book a Week-5 

Perhaps what sets Hemingway apart most, however, is his “iceberg theory” of writing, in which much remains unsaid beneath the surface of the story. “Hills Like White Elephants” is a prime example of this, as the reader is left to decipher the true emotional subtext of the conversation between the man and woman at the train station.

Overall, Hemingway’s legacy as a master of concise yet profound storytelling continues to influence writers worldwide today.

Some books you can pick and read

ernest hamingway books - 2026

Hemingway is renowned for his concise and impactful writing style, and each of these books offers unique insights into different aspects of human experience. Here is a summary of each book’s main themes:

1.  “The Sun Also Rises”: I appreciate the way Hemingway explores the aftermath of war and how it has affected people. It is so important to understand the emotional toll that these experiences can have on individuals and their relationships with one another. This novel seems like a great reflection on those themes.

2.  “For Whom the Bell Tolls”: It is admirable to see a character fight for what they believe in, even when it means taking significant risks. I think exploring bravery and sacrifices during war is an important message because it highlights how people can come together in times of hardship to achieve something greater than themselves.

3.  “To Have and Have Not”: It’s always fascinating to read about how economic hardship impacts society. This novel appears to take a deep dive into the lives of working-class individuals during the Great Depression, and how desperation can lead to tough decisions and moral compromises. The themes of this book seem to speak to the sacrifices that individuals have to make for themselves and their families during difficult times.

These books showcase Hemingway’s ability to create compelling narratives and capture the essence of human experiences. They are all excellent choices for anyone interested in delving into Hemingway’s work and exploring these diverse themes.

Also Read: A Book a Week -6

உலகக் கோப்பை கிரிக்கெட் (11): 2011 போட்டி!

worldcup cricket 2011 - 2026

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள்
பகுதி 11 – 2011 போட்டி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

2011 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை பத்தாவது கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகும். இது இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசத்தில் முதல் முறையாக விளையாடப்பட்டது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா, போட்டியை வென்றது. இதன் மூலம் சொந்த மண்ணில் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது. போட்டியின் நாயகனாக இந்தியாவின் ‘யுவராஜ் சிங்’ அறிவிக்கப்பட்டார்.

உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு ஆசிய அணிகள் இறுதிப்போட்டிக்கு வருவது இதுவே முதல் முறை. 1992 உலகக் கோப்பைக்குப் பிறகு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இடம்பெறாததும் இதுவே முதல் முறையாகும்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) 10 முழு உறுப்பினர்கள் மற்றும் நான்கு துணை உறுப்பினர்கள் உட்பட பதினான்கு அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. தொடக்க விழா 17 பிப்ரவரி 2011 அன்று டாக்காவில் உள்ள “பங்கபந்து நேஷனல் ஸ்டேடியத்தில்” நடைபெற்றது. மற்றும் போட்டி 19 பிப்ரவரி முதல் ஏப்ரல் 2 வரை நடைபெற்றது. டாக்காவின் மிர்பூரில் உள்ள “ஷேர்-இ-பங்களா” தேசிய மைதானத்தில் இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான முதல் போட்டி நடைபெற்றது.

தொடக்கத்தில் இந்த உலகக் கோப்பை போட்டியை பாகிஸ்தானும் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் 2009இல் லாகூரில் இலங்கை அணி மீதான பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அதை ரத்து செய்தது. மேலும் ஏற்பாட்டுக் குழுவின் தலைமையகம், முதலில் லாகூரில் இருந்தது; பின்னர் அது மும்பைக்கு மாற்றப்பட்டது. ஒரு அரையிறுதி உட்பட 14 போட்டிகளை பாகிஸ்தான் நடத்துவதாக இருந்தது. இந்த 14 ஆட்டங்களில் எட்டு ஆட்டங்கள் (அரையிறுதி உட்பட) இந்தியாவுக்கும், நான்கு இலங்கைக்கும், இரண்டு பங்களாதேஷுக்கும் வழங்கப்பட்டது.

14 அணிகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. குரூப் A பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜிம்பாபே, கனடா, கென்யா ஆகிய அணிகள் இடம்பெற்றன. இவற்றிலிருந்து பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நான்கு அனிகளும் காலிறுதிக்குத் தேர்வாயின. குரூப் B பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, மேற்கு இந்தியத்தீவுகள், வங்கதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்தன. இவற்றுள் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, மேற்கு இந்தியத்தீவுகள் ஆகிய அணிகள் காலிறுதிக்குத் தேர்வாயின.

காலிறுதியில் பாகிஸ்தான் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வென்றாது; இந்தியா ஆஸ்திரேலிய அணியை வென்றது; நியூசிலாந்து தென் ஆப்பிரிக்க அணியை வென்றது; இலங்கை இங்கிலாந்து அணியை வென்றது. அரையிறுதியில் இந்தியா பாகிஸ்தான் அணியை மீண்டும் ஒருமுறை வென்றது. இலங்கை நியூசிலாந்து அணியை வென்றது. இறுதிப் போட்டி ஏப்ரல் 2ஆம் நாள் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.

இந்த உலகக் கோப்பைக்காக ஒரு இந்தியிலும் சிங்கள மொழியிலும் ஒரு பாடல் வெளியிடப்பட்டது. “தே குமாகெ” (பேட்டை சுழற்றி ஆடு) என்ற இந்திப் பாடல்; “சிங்கா உடானே” என்ற சிங்களப் பாடல். மேலும் ஒரு விளையாட்டுச் சின்னமும் வெளியிடப்பட்டது. அது ‘ஸ்டம்பி’ எனப்படும் ஒரு யானைக் கன்று.

இந்த உலகக் கோப்பை போட்டியிலும் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. இலங்கையில் ஒரு ஆட்டம் முடிந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி பேருந்தில் ஹோட்டலுக்குத் திரும்பி வரும்போது அந்தப் பேருந்து மீது கல் எறியப்பட்டது.

ஒருவேளை பாகிஸ்தான் அரையிறுதியில் வெற்றி பெற்று மும்பையில் இறுதிப் போட்டியில் விளையாட வந்தால் நாங்கள் ஆட்டத்தை நடக்க விட மாட்டோம் என சிவசேனா கட்சி அறிக்கை வெளியிட்டது.

இறுதி ஆட்டத்தின்போது டாஸ் இரண்டு முறை போடப்பட்டது. முதல் முறை போடப்பட்டபோது மைதானத்தில் நிலவிய சத்தத்தால் நடுவர் ஜெஃப் க்ரோவே அவர்களுக்கு இலங்கை அணியின் அணித்தலைவர் என்ன கேட்டார் எனக் காதில் விழவில்லை. எனவே இரண்டாம் முறை டாஸ் போட்டார்.

ஆண்டாளின் ‘திரு’ நட்சத்திரம் – ‘திரு’ ஆடிப் பூரம்

andal srivilliputhur

ஆண்டாள் – பூரம் – வில்லிபுத்தூர் – திரு இன்றி இவை முழுமைபெறாது!

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர் கலைமகள்

தமிழகத்தில் உள்ள விருதுநகரில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். பன்னிரு ஆழ்வார்களில், பெரியாழ்வார் அவதரித்த ஸ்தலம் ஆகும் இது. ஆனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசியில், ஞாயிற்றுக்கிழமை சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார் பெரியாழ்வார். ஆடி மாத வளர்பிறை சதுர்த்தியில் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தார் ஸ்ரீ ஆண்டாள். எனவே ஆடிப்பூரம் விசேஷமானது!!

ஸ்ரீ ரங்கமன்னாருக்காக, நந்தவனத்தில் பூக்களைப் பறித்து வந்து தொடுத்துச் சார்த்துவார் பெரியாழ்வார். அப்படி ஒருநாள், நந்தவனத்துக்கு அவர் வந்த வேளையில், துளசி மாடத்துக்கு அருகில், சர்வ தேஜஸ் பொருந்திய குழந்தையைக் கண்டார். ஆசை ஆசையாய் குழந்தையைத் தூக்கி வளர்த்தார். குழந்தைக்கு பெரியாழ்வார் இட்ட பெயர் கோதை என விவரிக்கிறது புராணம்.

ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வாருடைய துளசித் தோட்டத்தில்( குழந்தைப்பேறு இல்லாத பெரியாழ்வாரால்) கண்டு எடுக்கப்பட்டவருக்கு கோதை எனத் திருநாமம் சூட்டிவளர்த்து வந்தார்.

Read also: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை..

பெரியாழ்வார் இறைவனுக்கு வைத்த மாலையைத் தம் பெண் அணிந்து கொண்டது உகந்தது அன்று என வருந்தம் அடைந்தார்‌.

வடபெருங்கோயிலுடையான் கனவில் தோன்றி, “அம்மாலை தமக்கு உகந்தது என்றும் இனி, கோதை சூடிக் களைந்த மாலையையே தனக்கு சூட்ட வேண்டும்” எனவும் பணித்தார். எனவே, அவர் தம் மகளை எம்பெருமானின் தேவிகளில் ஒருத்தி என எண்ணி ‘ஆண்டாள்’ எனவும் திருநாமம் சூட்டினார்.

ஆண்டாள் அவதாரம் செய்த நாள் நளவருடம், ஆடிமாதம் கூடிய பூர நட்சத்திரத்தில், இக்குறிப்பின்படி ஆண்டாள் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்கிறார்கள்.

பெருமாளின் 108 திருப்பதிகளில் ஆண்டாள் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்தே மொத்தம் 10 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

வைணவ சமய வழிபாட்டில் ஒன்றறக் கலந்து விட்ட ஒன்று திருப்பாவையாகும். திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் ஆண்டாள் அருளியவை.

மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்குப் பதில் திருப்பாவை பாடப்படுகிறது. இதற்கு முக்கிய காரண கர்த்தாவாக விளங்கியவர் ஸ்ரீ காஞ்சி பெரியவர். சிவன் கோவில்களில் மார்கழி மாதத்தில் திருவெம்பாவை பாடவும் ஏற்பாடு செய்தார் பெரியவர் என்பார்கள்!!

தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர்கள் அரியணை ஏறும்போது பாடப்படுகிறது.

பாவைப் பிரபந்தம் ஒரு முத்தமிழ் நூல் வகை. எப்படியெனில் வெண்பாவுக்குரிய வெண்தளை கொண்டு எட்டடித் தரவுக் கொச்சகக் கலிப்பாவாகப் பாடப்படுகிறது. எனவே இதில் இயற்றமிழ்ப் பாங்கு காணப்படுகிறது.

கன்னிப் பெண்கள் இசையுடன் பாடியாடும் பல்வரிக் கூத்தாக சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் அம்மானை, தோள்நோக்கம், சாழல் கூறும் முதலியவற்றோடு பேராசிரியர் வெள்ளவாரணர் பாவைப் பாட்டைச் சேர்த்துத் தமது பன்னிரு திருமுறை வரலாற்றில் எழுதுவார். அப்படியாக இசைத் தமிழ்க் கூறும் நாடகத் தமிழ்க் கூறும் பாவைப் பிரபந்தத்தில் அமைந்திருக்கக் காணலாம் என்கிறார்கள் தமிழ் ஆய்வாளர்கள்.

‘பாவை’ என்னும் சொல்லுக்குப் பொம்மை என்ற பொருளும் உண்டு! பஞ்சாய்க்கோரையால் பொம்மை செய்து இளம் பெண்கள் விளையாடுதல் பண்டைய வழக்கம். எனவே இளம் பெண்களைப் பாவையர் என்று அழைப்பதும் உண்டு

‘இது என்பாவை, பாவை இது என’ இது ஐங்குறுநூற்றுப் பாடல் தொடரில் வரும் வரியாகும். ‘பாவை’ என்பது இளம் பெண்ணையும், பொம்மையையும் முறையே குறிப்பதை அறிய முடிகிறது.

ஆண்டாள் அருளிய ‘நாச்சியார் திருமொழி’ பாடல்களைப் படிக்கும் போது, சாதாரண ஆண் – பெண் உறவை மனதில் கொண்டு படித்தல் கூடாது. திருப்பாவையை நிறைவு செய்யும்போது, “மற்ற காமங்களை நீக்கி விடு” என்று ஆண்டாள் நாச்சியார் எம்பெருமானிடம் பிரார்த்திக்கிறாள் என்பதையும் மறந்து விடக்கூடாது!!

அதே நினைவோடு நம் மனதில் உள்ள மனித இன்பங்களை அறவே ஒழித்து, ஓர் ஆன்மா, பரமாத்மா மீது கொண்ட காதலையும், பரமாத்மாவை நினைத்து ஏங்குவதையும், பரமாத்மாவை அல்லாது வேறு எதனுடனும் தனக்கு உறவு கூடாது என்பதையும், பரமாத்மாவுடன் அது திளைக்கும் இன்பத்தையும் மட்டுமே மனதில் திடமாகக் கொண்டு படிக்க வேண்டும். ஜீவாத்மா பரமாத்மா உறவை புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நாச்சியார் திருமொழி பாடல்களின் மிக உயர்ந்த கருத்துக்கள் புலப்படும்.

ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், என்ன வரம் வேண்டும்? என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்! என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.

ஆண்டாளின் இடத்தோளில் கிளி இருக்கும். ஆனால் மதுரை மீனாட்சி அம்மையிடம் கிளியானது வலத்தோளில் அமர்ந்திருக்கும். கிளிகள் வேதங்களை உலா வரும் பொழுது உச்சரிக்கும் என்கிற நம்பிக்கையும் இறை பக்தர்களிடம் உண்டு!! எனவேதான் அலங்காரம் செய்து அம்மன் உலா வரும் பொழுதும் ஆண்டாள் உலா வரும் பொழுதும் கிளியே பத்திரமாக சொருகுகி அழகு பார்க்கிறார்கள்.

ஆண்டாள் கோவில் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது. கிளி மூக்கு – மாதுளம் பூ, மரவல்லி இலை – கிளியின் உடல்; இறக்கைகள் – நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்;, கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்; கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன் என்று சொல்லப்படும் பொருளைப் பயன்படுத்துவார்கள். இவற்றை பயன்படுத்தி கிளியை உருவாக்குகின்றனர்.

சாதாரண மனிதர்களைக்காட்டிலும் முனிவர்கள் உயர்ந்தவர்கள். அவர்களை விட ஆழ்வார்கள் உயர்ந்தவர்கள்.அவர்களுள்ளும் பெரியாழ்வார் மிகவும் உயர்ந்தவர். பெரியாழ்வாரையும் விஞ்சி உயர்ந்து நிற்பவர் ஆண்டாள் என்பது ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை கருத்து.

வலது கையில் கிளி ஏந்திய மீனாட்சி யையும் இடது கையில் கிளி ஏந்திய ஆண்டாளையும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டத்தையும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அழகையும் கீழே புகைப்படமாகக் காண்கிறீர்கள்..

andal meenakshi - 2026

ஸ்ரீவிலியில் நாளை தேரோட்டம் ஸ்ரீரங்கம் கோயில் பகுமானங்கள் ஆண்டாளுக்கு சமர்ப்பணம்..

IMG 20230721 WA0176 - 2026

ஸ்ரீவிலி ஆண்டாள் ஆடிப்பூரத் தேரோட்டம் நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளதை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பகுமானங்கள் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சமர்ப்பிக்கப்பட்டன.திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், திருமாலுக்கு பூமாலை சூட்டியதுடன், பாமாலையும் சூட்டி இறுதியில் அவரிடமே மணமாலையும் சூடிக் கொண்டார். இதனால் அவருக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது.

ஆண்டாள் திருமணம் செய்து கொண்டது ஸ்ரீரங்கம் ரங்கநாதரை என்பதால், இவ்விரு ஊர்களுக்கும் சம்பந்த உறவும், மங்களப்பொருட்கள் பரிவர்த்தனையும் உண்டு.

இவ்வகையில் ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் தேர்த்திருவிழாவுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து மங்களப்பொருட்கள் காணிக்கையாகக் கொண்டு செல்லப்பட்டு ரங்கநாதருக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்திற்கு ஸ்ரீரங்கம் கோயில் மங்களப்பொருட்கள் பகுமானமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வகையில் இந்த ஆண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் ஜூலை 22ம் தேதி நடக்கவுள்ளதை முன்னிட்டு, இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து பட்டுச்சேலை, மஞ்சள், குங்குமம், பழங்கள், மாலைகள், தாம்பூலம் ஆகியற்றுடன் வடபத்ரசாயி பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட பகுமானங்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் சமர்ப்பிக்கப்பட்டன.

இதற்கென இன்று ஆண்டாள் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் நிர்வாக அதிகாரியும், இணை ஆணையருமான சிவராம்குமார், அர்ச்சகர் சுந்தர் பட்டர், அகிலா ராமசுப்பு, திருச்சி தொழிலதிபர் என்.வி.வி.முரளி, திருவாரூர் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்திவிழா கமிட்டி, சங்கீத ஆதி தமிழ்மூவர் மன்ற ஆகியற்றின் ஆலோசகர் சந்திரசேகரன் ஆகியோருடன் ஸ்ரீரங்கம் கோயில் அலுவலர்கள் பணியாளர்கள் ரங்கநாதர் கோயில் பகுமானங்களை ஆண்டாள் கோயிலில் சமர்ப்பித்தனர்.

இந்த பகுமானங்களை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா, ஸ்தலத்தார் மற்றும் ஸ்தானிகம் ரமேஷ் பட்டர், சுதர்சன் பட்டர் உள்ளிட்டோர் வரவேற்று பெற்றுக் கொண்டனர். உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பகுமானங்களை ஸ்ரீரங்கம் கோயில் சார்பில் இணை ஆணையர் சிவராம்குமார், அர்ச்சகர் சுந்தர் பட்டர், ஆகியோர் ஆண்டாள் கோயில் நிர்வாக அதிகாரி முத்துராஜா, ஸ்தானீகம் ரமேஷ்பட்டர், சுதர்சன் பட்டர் ஆகியோரிடம் வழங்கினர், அருகில் அகிலா ராமசுப்பு, திருச்சி தொழிலதிபர் என்.வி.வி.முரளி, மன்னார்குடி சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை..

IMG 20230714 WA0090 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா முக்கிய நிகழ்வாக திருதேரோட்டம் நாளை நடக்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா தேரோட்டம் நாளை நடக்கிறது. விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா தேரோட்டம் நாளை சனிக்கிழமை நடக்கிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வைணவ ஸ்தலங்களிவல் முக்கிய தலங்களில் ஒன்றான ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த தலம் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது.

கடந்த 18-ந்தேதி 5 கருட சேவை நடைபெற்றது. நேற்று 7-ம் திருவிழாவையொட்டி இரவில் ஆண்டாள்-ரெங்கமன்னார் சயன சேவை நடைபெற்றது. மேலும் திருவிழாவையொட்டி ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் தினமும் ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி, நாட்டிய நிகழ்ச்சி, பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகின்றன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளைசனிக்கிழமை நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள்- ரெங்க மன்னார் க்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதைத்தொடர்ந்து மேள தாளங்களுடன் கீழ ரத வீதிக்கு வந்து, தேரில் எழுந்தருள்கின்றனர்.

காலை 8.05 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. பக்தர்கள் தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கின்றனர். தேர் செல்லும் பாதை தேரோட்டத்தையொட்டி நான்கு ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு தேர் செல்லும் பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. தேரின் சக்கரங்கள் சீராக செல்லும் வகையில் திருச்சி பெல் நிறுவன அதிகாரிகள் குழுவினர் சரி செய்துள்ளனர். மேலும் தேர் வேகமாக நகரும்போது பிரேக் பிடித்து நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேர் சக்கரங்கள் பதியாமல் இருக்க ரதவீதிகளில் பல இடங்களில் ராட்சத இரும்பு பிளேட்டுகள் போடப்பட்டுள்ளன. தேரின் பின்புறம் இருந்து தள்ளுவதற்கு வேளாண்மை துறை சார்பில் பொக்லைன் எந்திரங்களும் வரழைக்கப்பட்டுள்ளன.

தேர் திருவிழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் அதிகாரிகள் செய்துள்ளளனர்.