Home Blog Page 371

யோகக் கலையும் சைவ உணவும்!

yoga - 2026

யோகம் என்ற சொல்லுக்கு லயம், ஐக்கியம் எனப் பொருள் கூறுவர். ஆன்மீகம், தத்துவ அடைப்படை நோக்கில் அனைத்து ஜீவன்களும், பரப் பிரம்மத்துடன் ஒன்றாக இணைந்து விடுவதையே குறிக்கும் சொல்லாகும் இது. கண்ணபிரான் அர்ச்சுனனுக்கு உபதேசிக்கும் கீதையில், கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகத்தையும் பற்றிக் கூறிவிட்டு, சுருக்கமாக, “சித்த அசித்தயோ: ஸமோ பூத்வா, ஸமத்வாம் யோகமுச்யதே…” எனக் கூறி முடிக் கிறார். அதாவது, வெற்றி, தோல்வி இரண்டிலேயும் மனிதன் மனதை அலையவிடுவதை நீக்கி, இரண்டையும் சமநோக்குடன் பார்ப்பதுவே யோக மாகும் எனக் கூறியுள்ளார்.

பின்னர் சித்தயோகம், சகஜயோகம், ஹடயோகம் போன்ற யோக முறைகள் தோன்றின. யோக மார்க்கத்தை விஞ்ஞான அடிப்படையில் ஒரு தனிப் பெரும் நூலாக ஆக்கிய சிறப்பும் பெருமையும் மாமுனிவர் பதஞ்சலி யையே சாரும். இவர் இந்த நூலை சிறுசிறு வாக்கியங்கள் (சூத்திரங்கள்) மூலம் நன்கு விளக்கியுள்ளார். இதை ராஜயோகம் என்றும் அஷ்டாங்க யோகம் எனவும் அழைப்பர். இந்நூலில் எட்டு அங்கங்களான யமா, நியமா, ஆஸனா, பிராணாயாமா, பிரத்யாஹாரா, தாரணா, தியானா, சமாதி இவைகளை மோக்ஷத்துக்கு அழைத்துச் செல்லும் படிகளாக பதஞ்சý கூறியுள்ளார். இவை பயிற்சி மார்“ணகங்களேயாகும்.

யோகம் என்பது, மனது, உடல், கவனம், சங்கல்பம், உணர்ச்சி வசமாவது, வீண் பேராசை இவற்றில் செல்லும் மனத்தின் மீது ஆட்சி செலுத்து வதில் தான் அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது. ஆக மனதை அடக்குவதில் வெற்றி காண்பவனே யோகியாவான்.

பதஞ்சலி முனிவர் தன்னுடைய நூலில் தொடக்க சூத்திரமாக “”யோக: சித்தவிருத்தி நிரோத:” எனக் கூறியுள்ளார். அதாவது மன அலைகளைத் தடுத்து ஒரு வழியில் திருப்புவது தான் யோகமார்க்கம் என உபதேசிக்கிறார். மனதைத் தூய்மைப்படுத்த எழுந்ததே யோகசாதனை. இதில் எவ்வகை மர்மத்துக்கும் சந்தேகத்துக்கும் இடமில்லை.

(1) யமா என்றால் அஹிம்சை, பிறர்பால் நட்பு, குற்றம் புரியாமை, மனம், வாக்கு, செயல் இவற்றில் நேர்மை, ஒழுக்கம் முதýய நற் குணங்களை வளர்த்து வாழ்வதே யாகும். (2) நியமம் என்றால் உடல் சுத்தி, ஆகாரக் கட்டுப்பாடு, இறை உணர்ச்சி, வழிபாடு, பெண் இச்சையிலிருந்து விலகல், தூய்மை உள்ளம் முதýயவைகளாகும்.

(3) ஆசனம். இதில் உடல் பயிற்சி, சூரிய நமஸ்காரம், பத்மாசனம், சித்தாசனம் முதலான ஆசனப் பயிற்சிகளைக் கையாளுதலாகும். இவை பிராணாயாமத்துக்குப் பெரிதும் உதவும். மற்றும் ஹடயோகம், மூல பந்தம், உட்யாண பந்தம், ஜாலேந்திர பந்தம், நெüலி முதலியவற்றைப் போதிக்கும் ஒரு தனிக்கலையாகும்.

(4) பிராணாயாமம்: இதில் மிகுந்த எச்சரிக்கையும், நுண் ணறிவும் தேவை. ஒரு சிறந்த ஆசிரியரின் மூலம் இதைப் பயில வேண்டும். இடது நாசியால் மூச்சை இழுத்து, வலது நாசியால் விடுவது, பின் வலது நாசியால் மூச்சை இழுத்து இடது நாசியால் விடுவது பெரும் தீமை பயக்கும். மூச்சை இஷ்டப்படி அடக்குவதும் விபரீதமாகும். நாடி சுத்தத்துக்கு ஏற்பட்டதே இந்த பிராணாயாம மாகும்.

(5) பிரத்யாஹாரம். உலக விவகாரங்களான கேளிக்கை முதலியவற்றிலிருந்து மனதைத் திருப்புவதாகும். (6) தாரணா என்றால் மனதை ஒரு புனித உருவம் அல்லது, இருதய மத்தி, சிரசு மத்தி ஆகியவற்றில் நிலைத்து நிற்கச் செய்யும் சாதனையாகும்.

(7) தியானா என்றால் மனதை அலையவிடாமல் காத்து நீடித்து ஒரு நிலைப்படுத்துவதாகும். (8) சமாதி – இது தியானத்தின் முற்றின நிலையாகும். நீடித்த காலம் மனதை அசைவற்ற ஆத்ம அறிவில் லயிக்கச் செய்வதாகும். சமாதி நிலை அடைந்தவர்களுக்கு பல சித்திகள் கை கூடும். பதஞ்சý முனிவர், எந்த ஒரு உயிரி னத்துக்கும் தீங்கு செய்வதில்லை என்ற முடிவில் ஒருவன் நிலைத்து நின்றால், எல்லா உயிர்களும் அவன் முன்னால் தங்கள் விரோதத்தை மறந்து நிற்கும் எனக் கூறியுள்ளார்.

பதஞ்சலி முனிவரின் யோகம் துறவிகளுக்குத்தான் ஏற்பட்டது. மற்றவர்களுக்கு அல்ல என்று எண்ணுவது முற்றி லும் தவறாகும். நம் எல்லோருக்கும் இது பொருந்தும். மனதைத் தூய்மைப் படுத்துவதற்கும், அதை சாந்தப்படுத்து வதற்கும்தான் யோக சாதனை ஏற்பட் டுள்ளது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

அஹிம்சையும் சைவஉணவும்

மாமிச உணவு அஹிம்சைக்கு விரோ தமாகும். காய்கறி உணவு அஹிம்சைக்கு ஏற்றதாகும். யோக வாழ்க்கையைக் கைக்கொள்ளுபவனுக்கு சைவ உணவு தான் நன்மை பயக்கும். மீன், முட்டை, மாமிச உணவினால் ஒருவனுக்குக் கிடைக்கும் உடல் சத்து, காய்கறி உண வினாலும் அதே அளவுக்குக் கிடைக் கும். இது விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து எடுத்த முடிவாகும்.

1985 இல் நோபல் பரிசு பெற்ற இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகளான டாக்டர். மைகேல் எஸ்.பிரெüன் மற்றும் டாக்டர் ஜோஸப் எல்.கோலட் ஸ்டீன், ரத்தத்தில் குளோசெஸ்டிரால் அதிகமாவதைத் தடுக்க, இது அதிக மாகக் காணப்படும் முட்டைகள், மாமிச உணவுகளைக் கைவிட வேண்டுமெனக் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் காய்கறிகளிலும் பழங்களிலும் இந்த குளோசெஸ்டிரால் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

முட்டைகளில் வைடமின் பி காம்ப்ளக்ஸ், வைடமின் சி கால்ஷியம், புரதப் பொருள்கள் காணப்படவில்லை என்றும் அவர்கள் கண்டுபிடித்துக் குறிப் பிட்டுள்ளனர்.

புள்ளிவிவரங்கள் மூலம், 100 கிராம் முட்டையில் 13.3 அளவு புரதச் சத்தும், மீன்களில் 22.6 அளவும், மாமிசத்தில் 18.5 அளவும் உள்ளன என்றும், பச்சைப்பயறில் 24.0 அளவும், சோயா பருப்புகளில் 43.2 அளவும், நிலக்கடலையில் 31.9 அளவும் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால் சைவ உணவு எவ்வளவு பயனுள்ளது என்பதை நாம் காணலாம்.

சாத்வீக உணவினால் மனம் சாத்வீகம் அடைகிறது என்பது யோகத் தத்துவமாகும். குடி, போதைப் பொருளைச் சாப்பிடுவது, புகை பிடித்தல் முதலியவை மூளையையும், இதயத்தையும் மிகவும் பாதிப்பவை என்பதை மருத்துவர்கள் நன்கு விவரித்துள்ளனர். சுவாச உறுப்பு களும் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

ஆக, யோகம், தியானம் பயிலும் அனைவரும் காய்கறி சேர்ந்த சைவ உணவுகளையும், பப்பாளி, வாழைப் பழம் முதலிய பழங்களையும், இளநீர் போன்ற திரவங்களையும் தவறாமல் சாப்பிட்டு வருவது மிகவும் அவசியமாகும். உடல் ஆரோக்கி யமே மன ஆரோக்கியத்துக்கும், யோக சாதனைகளுக்கும் மிக அவசியமாகும்.


“திலிப்’ இருமாத ஆங்கில இதழிலிருந்து (சுருக்கம்)
மூலம்: ஆர்.என். லகோடியா – தமிழில்: கே.ஆர்.கே

மந்திரங்களை புத்தகத்திலிருந்து படிக்கலாமா? அனைவரும் கற்கலாமா?

sringeri swamigal - 2026
  • மந்திரங்களை அனைவரும் கற்கலாமா?
  • மந்திரங்களை புத்தகத்திலிருந்து படிக்கலாமா?

இந்தக் கேள்விகளுக்கு, சிருங்கேரி சங்கராசார்யார் ஜகத்குரு ஸ்ரீ சச்சிதானதா சிவஅபிநவ நரசிம்மபாரதி சுவாமிகள் ஒரு சுவையான கதை மூலம் பதில் தந்துள்ளார்.

ஒரு பக்தர் இந்த கேள்வியைக் கேட்டார்.

பக்தர்: சுவாமிகளே! ஏன் சில மந்திரங்களை ஒருசில வகுப்பினர் மட்டுமே கற்கலாம் என்று சொல்லுகிறீர்கள்? ஏன் ஒருசில தகுதி அல்லது நிலையிலுள்ளவர்கள் மட்டுமே படிக்கலாம் என்று விதிமுறைகள் விதித்துள்ளனர்?

சுவாமிகள்: யாருக்காக ஒரு மந்திரம் உருவாக்கப்பட்டுள்ளதோ,அவர் சொல்லும்போதுதான் அது மந்திரம். மற்றவர் சொன்னால் அது வெறும் சப்தங்களின் தொகுப்புதான்.

பக்தர்: அது எப்படி? மந்திரங்களும் சப்தங்களின் தொகுப்புதானே?

சுவாமிகள் பதில்: சப்தங்களின் தொகுப்பு எல்லாம் மந்திரம் ஆகிவிடாது.

தகுதிபெற்றவர் ஒருவர் உச்சரிக்கும்போதுதான் அவை மந்திரம் ஆகும்

பக்தர்: எனக்குப் புரியவில்லையே?

சுவாமிகள்: உங்கள் கேள்விக்கு ஒரு சம்பவம் மூலம் பதில் சொல்லுகிறேன்.

நாயக்க வம்சத்தைச் சேர்ந்த ஒரு குறுநில மன்னரிடம், ஒரு பிராமண மந்திரி வேலை பார்த்தார்.அவர் மிக புத்திசாலி. அவரது மேதாவிலாசத்துக்கு அவர் தினமும் சொல்லும் காயத்ரீ மந்திரமே காரணம் என்பதை மன்னர் அறிந்தார். தனக்கும் காயத்ரீ மந்திரத்தை உபதேசம் செய்யவேண்டும் என்று மந்திரியை தினமும் மன்னர் நச்சரிக்கத் துவங்கினார்.ஆனால் மந்திரி மறுத்துவிட்டார். அந்த மன்னரிடம் வேறு ஒரு பிராமணர் சமையல்காரராக வேலை பார்த்துவந்தார். அவரை மன்னர் அழைத்தபோது,அவருக்கும் காயத்ரீ மந்திரம் தெரியும் என்பதை மன்னர் அறிந்தார். மிரட்டியும் லஞ்சம் கொடுத்தும், காயத்ரீ மந்திரத்தை அவரிடம் கற்றுத்தேர்ந்தார். ஒருநாள் அரசவையில் எல்லோருக்கும் முன்பாக மன்னர், தனக்கும் காயத்ரீ மந்திரம் தெரியும் என்று சொல்லவே, மந்திரி வியப்புடன் அதைச் சொல்லும்படி மன்னரிடம் வேண்டினார். மன்னர் கம்பீரமாக மந்திர உச்சாடனம் செய்தார். மந்திரியோ அது காயத்ரீ மந்திரம் இல்லை என்று சொல்லிவிட்டார். மன்னர் உடனே சமையல்காரனை அழைத்து காயத்ரீயை சொல்லச் சொன்னார். இதுதான் காயத்ரீ என்று மந்திரி சொன்னார்.அதைத் தானே நானும் சொன்னேன் என்று மன்னர் சொல்ல,அது காயத்ரீ மந்திரம் இல்லை என்று மந்திரி மீண்டும் கூறினார்.மன்னருக்கு ஒரே ஆத்திரம். ஒருவேளை மந்திரிக்கு மனக்கோளாறு போல என்று எண்ணினார்.

மன்னரின் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது என்பது மந்திரிக்குப் புரிந்தது. திடீரென்று மந்திரி சேவகனைப் பார்த்து, “ஏ சேவகா! மன்னர் கன்னத்தில் பளார் என்று இரண்டு அரை கொடு” என்றார். எல்லோரும் திகைத்து நின்றனர். மீண்டும் மந்திரி அதேக் குரலில் அதே உத்திரவைச் சொன்னார்.

சேவகன் ஒன்றும் செய்யவில்லை. மந்திரிக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதென்று எண்ணியிருந்த மன்னர், கோபத்தோடு,
“ஏ சேவகா! மந்திரி கன்னத்தில் பளார் என்று இரண்டு அரை கொடு” என்றார். சேவகன் ஒரு நொடி கூட தாமதிக்காமல், மந்திரியின் கன்னத்தில் இரண்டு அரை விட்டான் “மன்னரே! இதுதான் வித்தியாசம்.நானும் ஒரே கட்டளையைத் தான் இட்டேன். நீரும் அதே கட்டளையைத் தான் இட்டீர். நீர் சொன்னவுடன் என் கன்னத்தில் இரண்டு அரை கிடைத்தது. நான் சொன்னபோது ஒன்றும் நடக்கவில்லை. சொல்லக்கூடாதவர் சொன்னதால் எனக்கு தண்டனை கிடைத்தது.”இதுபோலத்தான் சில மந்திரங்களும். சொல்லக்கூடாதவர், சொல்லத் தகுதி இல்லாதவர், சொன்னால் எதிரிடை விளைவுகளை உண்டாக்கும். ஒரு மந்திரம் என்பது சப்தங்களின் தொகுப்புதான் என்றாலும் தகுதி உடைய ஒருவருக்கு, சாஸ்திர விதிகளின் படி, ஒரு குரு சொல்லும்போதுதான் அது மந்திர ரூபம் பெறுகிறது. இதனால்தான் புத்தகத்தில் இருந்து கற்கும் மந்திரங்கள் பலன் தருவதில்லை. இதை அறியாததால் மந்திரங்களைக் குறைத்து மதிப்பிடுகின்றனர்.தகுதி உடைய ஒருவர்கூட, சாஸ்திர விதிகளின்படி மந்திரங்களைச் சொன்னால்தான் பலன் கிடைக்கும். அப்படி இருக்கையில்,தகுதி இல்லாதோர் விதிமுறைகளைப் பின்பற்றாதவாறு மந்திரங்களைச் சொன்னால், நல்ல விளைவுகளைவிட எதிரிடை விளைவுகளைத்தான் எதிர்பார்க்கலாம்.
மந்திர விஷயங்களில் சாஸ்திரங்கள் சொல்லுவதைத்தான் நாம் பின்பற்றவேண்டும்.

  • சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்

கம்பசித்திரம்: ஞானச் சுடர்

rama and hanuman choodamani - 2026

–  B. R. கீதா 

வள்ளலும் இளவலும் வனத்திற்குச் செல்ல ஆயத்தமாகி விட்டனர். மண்மகள் சீதையும் மரவுரி அணிந்துவிட்டாள். தாய்மார் இருவரும் தடுக்க இயலாமல் தவித்து நிற்கின்றனர். கோசலையின் துயரமோ சொல்லத்தரமன்று; கன்றினைப் பிரிந்த பசுவாய்க் கதறுகின்றாள். சுமித்திரை அவளுக்கு ஆறுதல் கூறவும் வழியின்றித் தன்னிலை நொந்து நிற்கின்றாள்.

இந்தக் காட்சி கம்பன் கற்பனையில் விரிந்தது. அவன் திறமையும் உள்ளப்பாங்கும் கற்பவர் போற்றும் கவிதைப் பூக்களாய் மலர்ந்து மணம் பரப்பின. அப்பூக்களினின்றும் வடியும் தேனை மாந்தி மகிழத் தமிழர் யாவரும் தலைப்பட்டனர்.

கம்பராமாயணம் என்னும் கரும்பை எந்தப்பக்கம் சுவைத்தாலும் இனிக்கவே செய்யும். தீபாவளி இனிப்போடு, கம்பசித்திரம் என்னும் கரும்புச் சாற்றையும் பருகலாமே!

கம்பன் பாடிய பன்னீராயிரம் கவிதைகளில் இலக்கிய அன்பர்களின் இதயம் கவர்ந்த பாடல்கள் பல; பாத்திரங்கள் பல; காட்சிகள் பல; இவற்றைப் பட்டியலிட்டால் அடுத்த தீபாவளியே வந்துவிடும். எனவே, “நகர் நீங்கு படலத்தில்” இராமன் தாயாரிடம் விடைபெறும் காட்சியைப் பார்க்கலம்.

அயோத்தியா காண்டத்தில், “நகர் நீங்கு படலம்” நம் நெஞ்சை விட்டு நீங்காத படலம். ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் இங்கு கம்பன் கைவண்ணத்தில் அழகோவியமாய் மிளிர்கின்றன. வாக்குத் தவறாத தயரதன் மாண்பு, அவன் இராமன்பால் கொண்ட பாசத்தின் தவிப்பு, இருதலைக்கொள்ளி எறும்பென அவன் துடித்த துடிப்பு, தன்னலமே உருவான கைகேயியின் கல்நெஞ்சு, அநீதி பொறுக்காத இளவலின் சீற்றம், கணவரைப் பிரியவொண்ணாத கற்பரசி சீதையின் ஏற்றம், அயோத்தி மக்களின் ஆற்றொணாத் துன்பம், இவை அனைத்தையும் காட்டும் கம்பன், ஒரு மாதரசியின் மாண்பை இரண்டே பாடல்களில் வெளிப்படுத்தி, அவளை அனைவருக்கும் மேலாக உயர்த்திவிடுகிறான்.

“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்”

என்பது வள்ளுவன் வாக்கு. அத்தகைய நிறைமொழி மாந்தர் என்றும் தம் நிலையில் திரியாதவர். எப்போதும் அறத்தின் வடிவாகவே இலங்குபவர். கவியிற்பெரியவனான கம்பன் அம்மாந்தருள் ஒருவராக இங்கு சுமித்திரையைக் காண்கிறான்.

எப்போது துன்பம் மிகுந்தபோதிலும், நம்மை அரவணைத்து, அமைதி தருபவை ஆன்றோர்தம் அறிவுரைகள்தாம். நயத்தக்க நன்மொழிகளை நிறைமொழி மாந்தரால் மட்டுமே நல்கமுடியும்; நம்மை நல்வழிப் படுத்தவும் முடியும்.

எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் மாறுபடாதவர்களே நல்லவர்கள். அவர்கள் பகரும் அறிவுரைகள் எக்காலத்துக்கும், எல்லாருக்கும் ஏற்றவையாகவே அமைந்துவிடுவன. கொதிக்கும் பாலில் சிறிது நீர் தெளித்தார்போல், அவர்தம் நன்மொழிகள் நம்மை நெறிப்படுத்த வல்லன. நம் உள்ளப்பாங்கினைப் பண்படுத்தவல்லன.

சுமித்திரையும் இங்கு அப்படிப்பட்ட மாண்புடையவளாகத் திகழ்கிறாள். ஆதிகாவியமான வான்மீகி இராமாயணத்தை அடியொற்றியே செல்லும் கம்பன், ஆங்காங்கே தன் முத்திரைகளைப்  பதிக்கவும் தவறமாட்டான்.

இராமனுடன் வனம்புக நின்ற மகன் இலக்குவனை நோக்கி, “வனம் செல்ல வேண்டும் என்று உனக்கு எந்த ஆணையும் இல்லை. என்றாலும் உனக்கு வனம்தான் இனி அயோத்தி; இராமனே உன் தந்தை தசரதன்; சீதையே உன் தாய்; இனி இவ்வாறே நினைத்து ஒழுகு. இனி, நீ இங்கு நிற்பதும் தவறு, சென்று வா.”

“இராமனுக்குத் தம்பி என்ற முறையை மறந்துவிடு. ஏவலாள் ஆகவே நீ அவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். வையத்தைக் காக்கவே கோசலை இராமனைப் பெற்றாள். அதுபோல், இராமனுக்குத் தொண்டாற்றிடவே உன்னை நான் பெற்றெடுத்தேன். இராமன் அயோத்தி திரும்பினால் நீ வா; இல்லை எனில், நீ முன்னால் இறந்துவிடு.”

இவை சுமித்திரையின் ஆசியுரைகள்.

“ஆகாத தன்றால் உனக்குஅவ் வனம் இவ்வயோத்தி

மாகாதல் இராமன்அம் மன்னவன் வையம் ஈந்தும்

போகா உயிர்த்தாயர்நம் பூங்குழல் சீதை என்றே

ஏகாய் இனி இவ்வயின் நிற்ரலும் ஏதம் என்றாள்”

“பின்னும் பகர்வாள் மகனேஇவன் பின்செல் தம்பி

என்னும் படியன்று அடியாரின் ஏவல் செய்தி

மன்னும் நகர்க்கே இவன்வந்திடில் வாஅ தன்றேல்

முன்னம் முடிஎன் றனள்வார்விழி சோர நின்றாள்”.

தன் மகன் இராமனுக்கே அடிமை என்று வழங்கிய வள்ளல் சுமித்திரை. அவள் சொற்களால் எவரையும் துன்புறுத்தியதில்லை. தன் தவப் புதல்வர் இருவரையும் கோசலை மகனுக்கும், கைகேயி மகனுக்கும் ஈத்துவந்த பெரியவள். தசரதனின் பட்டத்தரசியரில் அறிவுச்சுடர் வீசி நின்ற அற்புதத் திருமகள். அடக்கத்தின் திருவுரு.

அவளுக்கு மீண்டும் ஒரு குறளையே காணிக்கையாக்கி நிறைவு செய்யலாம்.

“நிலையின் திரியாது அடங்கியார் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது”

தன் நிலையை விட்டு என்றும் பிறழாத நேர்மையுடையவர்கள் மலையைவிடப் பெரியவர்கள் என்பார் தெய்வப் புலவர். நிறைமொழி மாந்தருள் ஒருவராகத் திகழும் சுமித்திரையும் அத்தகையவளே – என்று கூறாமல் கூறித் தன் கவிதையில் உயர்கிறான் கம்பன்.

ஞானச் சுடரொளி நம்மிடமும் பரவட்டும்!      

14 வகை சிராத்தங்கள்

amavasai pitru tharpanam - 2026

1. பித்ரு ஸ்ராத்தம்:

            நாம் பெரிதும் அறிந்த மற்றும் பின்பற்றுகின்ற வருட ச்ரார்த்தம் நம் முன்னோர்கள் இறந்த திதியில் செய்யப்படும் பித்ரு ஸ்ரார்த்தம் ஆகும். இவையல்லாத மற்ற ச்ரார்த்தங்கள் பின்வருமாறு

2. பீமாஷ்டமி ஸ்ராத்தம்:

            தை(மகர) மாதத்தில் வரும் அஷ்டமி திதியில் செய்யப்படும் அந்த ஸ்ரார்த்தம் குழந்தை பெறுவதில் இடையூறுகள் ஏற்படும் பொழுதும், அடிக்கடி கருச் சிதைவுகள் ஏற்படும் பொழுதும் பீஷ்மருக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்துச் செய்யப்படும் ச்ரார்த்தமாகும்.

3. நாந்தி ஸ்ராத்தம்:

            நமக்கு நன்கு தெரிந்த இந்த ச்ரார்த்த முறைகள் யாத்திரை மற்றும் உபநயணம், திருமணம் குழந்தைப் பிறப்பு போன்ற வைபவங்களை ஒட்டிச் செய்யப்படுவது ஆகும்.

4. பார்வன ஸ்ராத்தம்:

            இறந்தவர்கள் தேவலோகம் சென்று “பார்வன” எனப்படும் முன்னோர்கள் அந்தஸ்தை அடையும்பொழுது செய்யப்படும் ச்ரார்த்தமாகும் இது. ஏக் பார்வன், த்விபார்வன், த்ரி பார்வன் என்ற ஒன்று, இரண்டு, மூன்று பார்வன வகைகள் இந்த ச்ரார்த்தத்தில் உண்டு.

5. மாளய ஸ்ராத்தம்:

            மாலயபட்சஷம் என்ற பெயரில் நாமெல்லாம் நன்கு அறிந்த இந்த பார்வன ச்ரார்த்தம் புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. தமிழக பிராமணர்களால் பெரிதும் பின்பற்றப்படும் இந்த ச்ரார்த்தம் மற்ற மாநில பிராமணர்களால் அனுஷ்டிக்கப்படுவதில்லை.

6. தீர்த்த ஸ்ராத்தம்:

            எல்லோரும் அறிந்த இந்த ஸ்ரார்த்தம் பிரயாகை, ராமேஸ்வரம், கயா, காசி போன்ற புனித நதி தீரங்களில் நம் பித்ருக்களுக்குச் செய்யும் ஸ்ரார்த்தம் ஆகும். இந்த ச்ரார்த்தத்தின் சிறப்பு முன்னோர்கள் இறந்த திதி என்று இல்லாமல் எந்த நாளிலும் இதைச் செய்யலாம் என்பதே ஆகும்.

7. கோஷ்டி ஸ்ராத்தம்:

            பிராமணர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து ஒரு புனித இடத்தில் ஒட்டுமொத்தமாகச் செய்யும் இந்த ச்ரார்த்தம் ஸ்ரார்த்த சிந்தனைகள் ஏற்படும் எல்லா சமயங்களிலும் செய்ய தகுந்த ச்ரார்த்தம் ஆகும்.

8. க்ருத்த (அ) யாத்ரா ஸ்ராத்தம்

            நெய்விட்டு நெருப்பு வளர்த்துச் செய்யப்படும் இந்த ஸ்ரார்த்தம் புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை புறப்படும்பொழுது நன்றாக அவை பூர்த்தி அடைய வேண்டும் என்று வணங்கிச் செய்யப்படும் ச்ரார்த்தம் ஆகும்.

9. ததி ஸ்ராத்தம் (தயிர்):

            வேண்டிக்கொண்டு சென்ற யாத்திரை வில்லங்கம் இல்லாமல் நிறைவுப் பெற்று வீடு திரும்பிய பின் செய்யப்படும் ஸ்ரார்த்தம்.

10. அஷ்டக ஸ்ராத்தம்:

            பௌர்ணமிக்குப் பின்வரும் 8ஆம் நாள் செய்யப்படும் இந்த ஸ்ரார்த்தம் எந்த மாத பௌர்ணமிக்கு பிறகும் செய்யப்படலாம் என்றாலும் வேத காலத்தில் மிருகசிருஷம், பௌஷம், மகம் மற்றும் பால்குண மாதங்களில் மட்டும் செய்யப்பட்டன. அக்னி, சூரியன், பிரஜாபதி, ராத்திரி, நட்சத்திரம் மற்றும் ருது ஆகியவற்றை ஸ்ரார்த்த தேவதைகளாக ஆவாகனம் செய்யப்பட்டு இந்த ஸ்ரார்த்தம் செய்யப்படும்.

11. தைய்விக ஸ்ராத்தம்:

            தெய்வ அனுக்ரஹகம் வேண்டிச் செய்யப்படுவதே இந்த ச்ரார்த்தம்.

12. இரண்ய ஸ்ராத்தம்:

            பிராமண போஜனம் இல்லாமல் அதற்குப் பதில் பணத்தையே தட்க்ஷணையாகக் கொடுத்துச் செய்யும் இந்த ச்ரார்த்தம் தற்காலத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.

13. அஸ்த ஸ்ராத்தம்:

            தகுந்த பிராமணர்களை அழைத்து அவர்களுக்கு போஜனம் அளித்துச் செய்யப்படும் இந்த ப்த்ரு ஸ்ரார்த்தம் பல்வேறு இன்னல்களுக்கிடையே பல காலம் பின்பற்றப்பட்டு வந்த ஸ்ரார்த்தம் ஆகும்.

14. ஆத்ம ஸ்ராத்தம்:

            பலர் இன்னும் அறிந்துகொள்ளாத இந்த அனுமதிக்கப்பட்ட ஸ்ரார்த்த முறை தனக்குத்தாமே உயிருடன் இருக்கும்பொழுதே செய்துகொள்ளும் ஸ்ரார்த்தம் ஆகும். குழந்தை இல்லாதவர்களும் ஸ்ரார்த்தம் செய்ய விருப்பம் இல்லாத குழந்தைகள் உள்ளவர்களும் முறைப்படி செய்துகொள்ளும் இந்த ஸ்ரார்த்த முறைகள் ஸ்ரார்த்த சாஸ்திரங்களில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

சர்வதேச யோகா தினத்தில் ‘உங்களை தேடி யோகா’: ஈஷாவின் இலவச யோகா வகுப்புகள்!

yogaisha - 2026
#image_title

சர்வதேச யோகா தினத்தையொட்டி சிறப்பு ஏற்பாடு

சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தியா முழுவதும் ‘உங்களை தேடி யோகா’ என்ற திட்டத்தை ஈஷா யோகா மையம் முன்னெடுத்துள்ளது.

இதன் மூலம், பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திலேயே நேரிலோ அல்லது ஆன்லைன் வாயிலாகவோ இலவசமாக யோகா கற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக, பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் குறைந்தப்பட்சம் 15 பேர் ஒன்றிணைந்தால் ஈஷாவின் யோகா பயிற்றுநர்கள் நேரில் வந்து யோகா கற்றுக்கொடுப்பார்கள்.

இவ்வகுப்பில், யோக நமஸ்காரம், நாடி சுத்தி, ஈஷா க்ரியா போன்ற மிகவும் எளிமையான அதேசமயம் சக்திவாய்ந்த யோக பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படும். இப்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் முதுகுதண்டும் நரம்பு மண்டலமும் வலுபெறும், மன அழுத்தம் குறையும், உடல் ஆரோக்கியம் மேம்படும்.

உங்கள் இருப்பிடத்தில் யோகா வகுப்பை நடத்த விரும்புபவர்கள் Isha.co/idysessionrequest என்ற லிங்கில் பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் வாயிலாக இலவசமாக யோகா கற்றுக்கொள்ள https://isha.co/free-yogawebinars என்ற லிங்கில் பதிவு செய்து கொள்ளலாம்.

வாஞ்சியை ‘பார்ப்பன பயங்கரவாதி’ எனக் குறிப்பிட்ட இயக்கத்தின் மீது நடவடிக்கை கோரி மனு!

petition to tutukudi sp - 2026
#image_title

வீர வாஞ்சிநாத ஐயரை ‘பார்ப்பன பயங்கரவாதி’ என ஓர் இயக்கம் குறிப்பிட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் காவல் கண்காணிப்பாளரிடமும் பிராமணர் அமைப்புகள் மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில் இன்று நேரில் மனு கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடியில் சனாதன எதிர்ப்பு கருத்தரங்கம் என்ற பெயரில் ஓர் அமைப்பு வரும் ஜூன் 20 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்று நடத்த உள்ளதாக போஸ்டர்கள் அடித்திருந்தது. அதில் மனிதநேயப் பண்பாளர் தூத்துக்குடி முன்னாள் உதவி ஆட்சியர் பார்ப்பன பயங்கரவாதி வாஞ்சிநாதனால் படுகொலை செய்யப்பட்ட சனாதன எதிர்ப்பாளர் ஆஷ் துரை நினைவு நாளில் கூட்டம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு பல்வேறு அமைப்புகளும் பிராமண சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கிறிஸ்துவ ஆங்கிலேயரின் கைப்பாவையாக செயல்பட்டு, சுதந்திரப் போராட்ட வீரர்களையும் வ உ சி சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட தலைவர்களையும் நாட்டு மக்களையும் அச்சுறுத்தி மிரட்டி துன்புறுத்தி கொடுங்கோலனாகத் திகழ்ந்த, ஆஷை நல்லவனாக சித்திரிக்கும் கிறிஸ்துவ திராவிட அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

பிரிட்டிஷ் ஆட்சியர் செய்த தவறுக்கு இளைஞர் வாஞ்சிநாதன் தண்டனை வழங்கிய இடம் மணியாச்சி என்றும் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை அடைந்திட துடிக்கும் தவிப்பு எத்தனை பெரியதாக இருந்திருக்கும் வருங்கால சந்ததிகளின் பொருட்டு நாமும் நமது வாழ்வை அர்ப்பணிப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் மன்கி பாத் மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றினார். ஆனால் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையினரும், அதற்கு மாற்றாக உள்ள தேசவிரோத சக்திகளின் பின்னே சென்று அவர்கள் கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதி கொடுப்பதுடன் பாதுகாப்பும் கொடுத்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் திங்கள்கிழமை இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்து பிராமண அமைப்புகள் மற்றும் ஹிந்து இயக்கங்கள் சார்பாக ஒரு மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து மனு கொடுத்தவர்கள் குறிப்பிட்ட போது, 

இன்று எம் சமுதாய மக்களின் நல் எழுச்சி. வீர வாஞ்சிநாதன் அவர்களையும் எமது சமுதாயத்தையும் அவமானம் செய்வதாக எண்ணி நாளை திராவிட தமிழர் கட்சி சார்பில்  20.06.2023 அன்று நடைபெறும் சனாதன எதிர்ப்பு கருத்தரங்கம் நடத்துவதனை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து கொடுத்தோம். இன்முகத்துடன் எங்களை வரவேற்று ஆவண செய்வதாக உறுதி அளித்தாள்ளார்கள். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுத்தோம்.  இதில் தூத்துக்குடி பாலாஜி, அய்யப்பன், ஹரிஹர கிருஷ்ணன், ரவி பொன்னப்பன், ஹரி, வரதன் அம்பி கண்ணன், கிருஷ்ணமூர்த்தி மற்றும்,  ஹிந்து முன்னணியைச் சேர்ந்த ராகவேந்திரா, விவேகானந்த கேந்திர கிருஷ்ணன், நெல்லை கயிலை கண்ணன்,சிவகங்கை வைத்தியநாதன், மதுரை அவனியாபுரம் பட்டம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்… என்று கூறினர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது….

பெறுநர்

1.உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி,

2. மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள், மாநகர காவல்துறை அலுவலகம்-தூத்துக்குடி.

பொருள்: 20.06.23 செவ்வாய்க்கிழமை தூத்துக்குடியில் நடைபெறவுள்ள திராவிடத் தமிழர் கட்சி நடத்த இருக்கும் கருத்தரங்கம் குறித்து.

மதிப்பிற்குரிய காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு,

ஐயா, இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று நாட்டுக்காக பொருள், குடும்பம் ஆகியவற்றை இழந்து இன்னுயிர் துறந்த வீரர்கள் பலர். இந்த வகையில் அதிக பங்களிப்புக் கொடுத்து முதன்மை இடத்தில் இருப்பது நெல்லை மாவட்டம். குறிப்பாக அப்போதைய நெல்லை மாவட்டம் தூத்துக்குடியில் கப்பலோட்டிய தமிழன் திருவ.உ.சிதம்பரம் பிள்ளை, திரு சுப்ரமண்யசிவா, வீரன் வாஞ்சிநாதன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று உயிர் துறந்தனர். அன்று அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த தியாகம் தான், இன்று சுதந்திரக் காற்றை நாம் சுவாசிக்கப் போடப் பெற்ற அடித்தளம் என்றால் மிகையல்ல.

இந் நிலையில் வரும் 20.06.2023 செவ்வாய்க்கிழமையன்று தூத்துக்குடி பெரியார் மையத்தில் தூத்துக்குடி மாவட்ட திராவிடத் தமிழர் கட்சி என்ற அமைப்பின் பெயரில் ஆஷ்துரை நினைவுநாளில் சனாதன எதிர்ப்பு கருத்தரங்கம் நடத்துவதாக அறிவித்து உள்ளார்கள். அதில் சுதந்திரப் போராட்ட வீரன் வாஞ்சிநாதனை, பார்ப்பன பயங்கரவாதி வாஞ்சிநாதனால் படுகொலை செய்யப்பட்ட ஆஷ்துரை நினைவு நாள் சனாதன எதிர்ப்பு கருத்தரங்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட ஜாதியினை, சமுகத்தை குறிப்பிட்டு கருத்தரங்கம் நடத்துவது இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பானதாகும். மூன்று மாதங்களுக்கு முன் எந்த ஒரு அமைப்பும் ஜாதி மதத்தினை இழிவுபடுத்தியோ பேசியோ கூட்டம் நடத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

.இத்தகைய கருத்தரங்கம் நடத்துவது நாட்டின் சுதந்திரத்தையும், அதற்காகப் போராடி உயிர் நீத்த சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் அவமதிக்கும் செயலாகும். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்களை அவமரியாதையாக சித்தரித்து அவ்வாறு கருத்தரங்கம் நடத்த இருப்பது எங்கள் மனதை மிகவும் புண்படச் செய்கிறது. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்களும் மாநகரக்காவல் கண்காணிப்பாளர் அவர்களும் இத்தகைய கருத்தரங்கம் நடைபெறுவதற்கு கொடுக்கப் பெற்றுள்ள அனுமதியினை ரத்து   செய்து தடை பிறப்பித்திடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது

வீட்டுக்கு வாங்கி வந்த ஹோட்டல் சாப்பாடில் பிளேடுத் துண்டு! மதுரையில் பரபரப்பு!

IMG 20230618 WA0031 - 2026
#image_title

மதுரையில் உணவகம் ஒன்றில் வாடிக்கையாளருக்கு கொடுக்கப்பட்ட உணவில் பிளேடு துண்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த முகமது. இவரது மனைவி , மதிய உணவு சாப்பிடுவதற்காக ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், சாப்பாடு பார்சல் ஒன்றை வாங்கி சென்றுள்ளார்.

இந்த நிலையில், வீட்டில், சாப்பாடு பார்சலை பிரித்து பார்த்த போது, வெள்ளை சாதத்தில் பாதி உடைந்த பிளேடு துண்டு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு நேரில் சென்று கடையில் வேலை பார்த்த ஊழியர் ஞானம் என்பவரிடம் கேட்ட போது அவர் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முகமது உணவுப் பாதுகாப்புத் துறைக்கு கொடுத்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகமது மனைவி ஆர்டர் செய்த உணவை சோதனை செய்ததோடு, உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, வெள்ளை சாதம் எதுவும் அங்கு வைக்கப்படாமல் இருந்துள்ளது. மேலும், பணியாளர்களிடம் மருத்துவசான்று, தலையுறை அணியாமல் உணவுகளை சமைத்து வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்துள்ளது.

மேலும், உணவுப் பாதுகாப்புத்துறை சுட்டிக்காட்டிய புகார்கள் குறித்து, உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மதுரையில் மதிய உணவிற்கு ஆர்டர் செய்த உணவில் பிளேடு துண்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொது சிவில் சட்டம் பற்றி மகா பெரியவர் என்ன சொன்னார் தெரியுமா?

kanchi maha periyava - 2026
#image_title

தொகுப்பு: வேதா டி .ஸ்ரீதரன்

உண்மையான ஸெக்யூலரிசம்

ஒரு நாட்டின் அரசாங்கம், ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே சார்ந்து பிற மதங்களை இழிவும் அழிவும் செய்யாமல், எல்லா மதங்களையும் ஏற்றத்தாழ்வின்றி சம பாவத்துடன் ஆதரிக்க வேண்டும். மதங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று பகை இல்லாமல் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே உண்மையான ‘ஸெக்யூலரிசம்’ ஆகும்.

மதக் கொள்கைக்கு முரணான சட்டங்கள் கூடாது

தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகளின் கொள்கைகளை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் மதங்களின் கோட்பாடுகளுக்கு விரோதமாக அரசாங்கம் சட்டம் இயற்றக் கூடாது..‘எந்த மதத்திலும் சம்பந்தப்படுவதில்லை’ என்று செக்யூலரிசத்துக்கு விளக்கம் சொல்லி விட்டு, அதற்கு விரோதமாக, மத விதிகளில் உள்நுழைந்து சட்டம் போடலாம் என்று அரசாங்கம் நினைத்தால் அதனை நாம் ஏற்பதற்கில்லை.

எல்லா மதங்களின் பிரதிநிதிகளையும் கொண்ட
சுதந்திரம் பெற்ற தனியமைப்பு (Autonomous Body)

ஏனைய துறைகளில் செய்வது போல – அரசாங்கம் தனக்கு ஆலோசனை தருவதற்காகக் குழு நியமிப்பது போல – மத விஷயங்களிலும் தனக்கு ஆலோசனை தரும் குழுவை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது.மாறாக, அரசாங்கம் மத விஷயங்களில் இருந்து முழுவதுமாக விலகி நிற்க வேண்டும். மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முழு நிர்வாகப் பொறுப்பும், சட்டப்படி முழுமையான அதிகாரமும் கொண்ட சுதந்திரமான ஓர் அமைப்பை (autonomous body) ஏற்படுத்த வேண்டியது கட்டாயம். மத விஷயங்களில் புதிய சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அந்த அமைப்பின் பரிந்துரைகள் அடிப்படையிலேயே சட்டம் இயற்ற வேண்டும்.

அரசாங்கம் இதில் நேரடியாகத் தலையிட்டு எந்த மாற்றமும் செய்யக் கூடாது. அரசாங்கத்துக்கும் நன்மை உண்டு

முற்காலத்தை விடத் தன்னிச்சையாக மக்கள் நடக்கத் தொடங்கி இருக்கும் காலம் இது. முந்தைய காலங்களை விட ஆசைகளையும், பேராசைகளையும் தூண்டிவிடக்கூடிய பொருள்களும், கொள்கைகளும் நாள்தோறும் மலிந்து வருகின்றன, இதனால் குற்றம் புரியும் வாய்ப்புகளும் பெருகிவிட்டன. விஷமயமான இத்தகைய சூழலுக்கு மாற்று மருந்தான அமிர்தமாகத் திகழ்வது மனிதர்களின் உள்ளங்களைப் பண்படுத்துவதே.இதற்கு அடிப்படையாக அமைவது மதங்களின் வளர்ச்சியே.நவீன விஞ்ஞானத்தாலும் புரட்சிக் கருத்துகளாலும் உலகாயத சிந்தனைகள் மேலோங்கி ஆன்மவியல் அடித்துச் செல்லப்படும் ஆபத்துக் கட்டத்தில் ஜன சமுதாயம் இருக்கிறது.இத்தருணத்தில், மக்கள் மாக்களாகி விடாமல் காக்க வேண்டுமெனில் இத்தகைய செக்யூலரிசமே நடைமுறையாக வேண்டும்.

kanchi maha periyava
kanchi periyava

அரசு போஷணை: ஹிந்து மதமும் பிற மதங்களும்

சுதந்திர பாரத அரசாங்கம் மக்களின் உள்ள உயர்வுக்குத் தனது பங்களிப்பை அளிக்க வேண்டும்.மதத்தின் மூலம்தான் அத்தகைய உயர்வு ஏற்படும் என்பதைக் கடந்த கால வரலாறுகள் தெளிவாகவே காட்டுகின்றன.ஆகவே, இங்குள்ள எல்லா மதங்களுக்கும் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டியது அரசின் கடமை.அதைச் செயல்படுத்தும்போது, மிகவும் பாதிப்புக்கு உள்ளானதும், பெரும்பாலான மக்களுக்கு உரியதுமான ஹிந்து மதத்துக்குத்தான் அதிகப் பொருளுதவி அளிக்க வேண்டும்.

தந்திரங்கள் மூலம் மதம் மாற்றுவது
கற்பழிப்புக்கு இணையான குற்றமாகக் கருதப்பட வேண்டும்

ஒரு பிரஜையின் மதச் சுதந்திரம் என்பது அந்நபர் சுதந்திரமாகவும், சுய விருப்பத்தின் பேரிலும் ஒரு மதத்தைத் தழுவியிருப்பதற்கான உரிமையாகும்.இது அவரது உள்ள உயர்வு என்ற மிகவும் உத்தமமான விஷயம் தொடர்பானது.உள்ள உயர்வு கண்ட பிரஜைகளால்தான் ஒரு நாட்டின் நலவாழ்வு அமைய முடியும்.எனவே, அதற்கு ஊறு விளைவித்தால் அது சாதாரணக் குற்றங்களில் சேராமல் பெரிய குற்றங்களிலேயே சேரும். மதச் சுதந்திரம் என்பது அரசியல் நிர்ணயச் சட்டத்தின் அங்கீகாரம் பெற்றுவிடும்போது அச்சுதந்திரத்தில் குறுக்கிடுவதும் மிகப்பெரும் குற்றமாகும் என்ற காரணத்தையும் கருத்தில் கொண்டால், பொய்ப் பிரச்சாரம், பலவந்தம், வசிய உபாயம் ஆகிவற்றால் மத மாற்றம் செய்வது எவ்வளவு பெரிய குற்றம் என்பது புரியும். எனவே, அதற்குரிய கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்.இத்தகைய குற்றங்களுக்கு deterrant punishment என்ற வகையிலான தண்டனை அளிக்கப்பட வேண்டும்.அதாவது, தண்டனை பற்றிய அச்சத்தினாலேயே ஒருவர் இத்தகைய குற்றச் செயலில் ஈடுபடாதபடி தடுக்குமளவு கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக அது சட்டபூர்வமாக ஆக்கப்பட வேண்டும்.

ஒருவரது உள்ள உயர்வுக்கே ஊறு விளைவித்து, அவரது கொள்கை நோன்பைக் குலைப்பது கொள்ளையடிப்பதற்கும் கற்பழிப்பதற்கும் இணையான குற்றமே.

மத மாற்றத் தடை என்பதுமத உரிமையைப் பறிப்பதல்ல

பழைய காலத்தில் இருந்து நவீன காலத்துக்கு வரும்போது எந்த ஒரு ராஜ்யமும் மற்ற ராஜ்யங்களின் மீது படையெடுப்பது தப்பு என்பதைக் கொள்கை அளவில் அத்தனை தேசத்தாரும் ஒப்புக் கொண்டிருக்கிறோம் அல்லவா? ஆதிகால ராஜ்ய விஸ்தரிப்புக் கொள்கையை இப்போதைய சூழ்நிலையில் சொல்லிக் கொண்டிருந்தால் சரிப்படுமா?

அதுபோலவே, ஆதிகாலத்தில் நடந்த மத மாற்ற, மத விஸ்தரிப்புக் கொள்கையை இந்தக் காலத்தில் சொல்வதும் கொஞ்சம் கூடச் சரிப்படாது.

மத மாற்றம் இருக்கும்வரை தாய்மதம் திருப்பும் பணிகளும் அவசியம்

சட்டம் இயற்றிவிடுவதால் மட்டுமே எந்தக் குற்றமும் நிகழாமல் தடுத்து நிறுத்திவிட முடிவதில்லை.எல்லா நாடுகளிலும் எல்லாக் குற்றங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.அதுபோலவே இத்தகைய மத மாற்றக் குற்றங்களும் நடைபெற வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. எனவே, இத்தகைய மத மாற்றங்கள் நடைபெறும் வரையில் அவற்றுக்கு எதிர் நடவடிக்கையாகத் தாய் மதத்திற்கே மீண்டும் மதம் மாற்றுவதைக் குற்றமாகக் கருதாமல் அரசாங்கம் அநுமதிக்க வேண்டும்.

சுதந்திரம் என்றால் என்ன?

இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்? தொன்மையான பாரத தேசத்தவர்களாகிய நாம் மீண்டும் நமது ஆன்மிக நாகரிகத்திற்கே திரும்பி, எளிமையான வாழ்க்கையைக் கொண்டவர்களாகவும், பண்பட்ட உள்ளத்தால் பெரியவர்களாகவும் விளங்கி, உலக நாடுகளிடையே தனி ஸ்தானம் பெற்ற உன்னத தேசமாகத் திகழ்ந்து, இதர தேசங்களுக்கும் நல்வழி காட்டி அனைவரும் உய்வடைய முயற்சி செய்யப் போகிறோமா? அல்லது நமது ஆன்மிக நாகரிகத்தில் இப்போது எஞ்சி நிற்கும் அம்சங்களையும் மனதறிந்து நாமாகவே பறிகொடுத்து, நமக்கு அரசியல் சுதந்திரம் கொடுத்து வெளியேறிய அந்நிர்களின் உலகியல் நாகரிகத்துக்கு அடிமைப்பட்டவர்களாகவே இனிமேலும் இருந்து, ஏனைய நாடுகளில் பின்தங்கிய ஒன்றாக ஓடிக்கொண்டிருக்கப் போகிறோமா? தற்போது இதுதான் எம் மனத்தை மிகவும் கவலைப்படுத்தும் பெரிய கேள்வியாக நிற்கிறது.

State Religion

மிகப் பெரும்பாலான பிரஜைகளால் பின்பற்றப்படுவதும் – உலகின் அனைத்து மதங்களுக்கும் முற்பட்டதும் – ஏராளமான பிற மதங்களுக்கும் ஆதாரக் கொள்கைகள், சடங்குகள் ஆகியவற்றை அளித்துள்ளதும் -, குறிப்பாக, பல்வேறு மதங்களும் ஒரே பரம்பொருளை அடைவதற்கான பல்வேறு வழிகள்தான் என்று பரந்த திருஷ்டியுடன் கூறி அவற்றின் உரிய வளர்ச்சிக்கு ஆதரவு தரும் ஒரே மதமாகத் திகழ்வதும் – எல்லாவற்றுக்கும் மேலாக, தான் விமரிசையாகக் கொடிகட்டிப் பறந்த பொற்காலத்திலும்கூட மத மாற்றத்தில் ஈடுபடாததுமான ஹிந்து மதத்தை சுதந்திர பாரதத்தின் State Religion என்பதாக — அரசாங்கத்தின் மதமாக — ஏற்பதில் மிகுந்த நியாயமிருப்பதாகக் கருதுகிறோம். இதனால் பிற மதங்களின் நியாயமான வளர்ச்சி ஒரு விதத்திலும் தடைப்படாது என்பது சரித்திர பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

கல்வித் திட்டத்தில் மாற்றம் தேவை

இன்றைய கல்விமுறையால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது ஹிந்து மதத்தினரே, ஹிந்து மதம் தவிர பிற மதங்களைச் சார்ந்தவர்கள் மாத்திரம் தங்களுக்கென இருக்கும் பள்ளிகளில் தமது மதபோதனையை நன்கு நடத்துவதாகவும், பெரும்பான்மையினரான ஹிந்து மாணவர்கள் அதனைப் பெறாமல் நன்னெறி போதனை (moral Instruction) என்று பெயரளவில் ஏதோ சிறிது படிப்பதுமாகவே உள்ளது. இளவயதில் பாடங்கள் நன்கு மனதில் பதியும். ஆனால், பள்ளிப் படிப்பு, அதன் தொடர்ச்சியாக வீட்டிலும் ஹோம்ஒர்க், சிறிது நேரம் விளையாட்டு முதலானவை மட்டுமே ஹிந்து மதச் சிறுவர்களின் நேரம் முழுதையும் ஆக்கிரமித்திருக்கும் நிலையில் அவர்களுக்குச் சமய அறிவும், அதனால் ஏற்படும் மத அபிமானமும் மறுக்கப்பட்டு விட்டன. ஹிந்துக்களுக்குத் தமது பண்பாட்டை இழுக்காகக் கருதும் புத்தியும், மேல்நாட்டு நாகரிகத்தில் மோகமும் ஏற்பட்டிருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் இந்தக் கல்விமுறையே.இத்தகைய கல்விமுறையை அதன் அடித்தளத்திலிருந்தே மாற்ற வேண்டியது அவசியம்.

மத சுதந்திரத்துக்காகவும் போராட வேண்டும்

அரசியல் சுதந்திரத்துக்காகப் போராடியது போல
மத சுதந்திரத்திற்காகவும் மக்களே போராட வேண்டும்

இப்போது பொது ஜனங்களேதான் – குறிப்பாக, அந்நிய நாடுகளின் உலகாயதம் சார்ந்த கொள்கைக்கு மாறாக பாரதத்திற்கே உரிய ஆன்மிக மரபில் நாட்டம் கொண்டவர்களாக இன்றைக்கும் வாழ்ந்து வரும் அறிஞர் பெருமக்களேதான் – செயற்களத்தில் முழுமூச்சுடன் குதித்து, சகப் பிரஜைகளையும் தட்டியெழுப்ப வேண்டும் என வற்புறுத்துகிறோம். சுதந்திரம் பெற்றுள்ள இந்தச் சூழ்நிலையில், பாரதத்தை உண்மையான ஸ்வ-தந்திர நாடாக – பாரத தேசத்துக்கே உரிய ஆன்மிகத்தைக் கைக்கொள்ளும்  நாடாக – புத்துயிர் கொள்ளச் செய்யும் அரிய வாய்ப்புக் கிட்டியுள்ளது. ஆனால், புதிய அரசாங்கம் அந்த வாய்ப்பை நெஞ்சாரப் பறிகொடுத்துவிடும் நிலைதான் ஏற்படுமோ என்றே எமக்குத் தோன்றுகிறது. எனவே, உண்மையை உணரும் அறிவு படைத்த மேன்மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை மனப்பூர்வமாக ஏற்று, மற்றவர்களையும் தட்டி எழுப்பும் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு ஆர்வமுடன் பணியில் ஈடுபடவேண்டும் என வற்புறுத்துகிறோம். அரசியல் சுதந்திரத்திற்காக ஆர்வத்துடன் போராடத் தொண்டர் படை திரண்டது போலவே, நமது ஆன்மிகச் சுதந்திரத்திற்காகப் போராடுவதற்கும் ஒரு சாத்துவிகப் படை திரள வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்! இதற்கு உறுதுணையாக என்றும் உடன் நிற்குமாறு ஈசனையும் கூவியழைத்து வேண்டுகிறோம்.அவ்வாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு நன்மக்கள் யாவரையும் தூண்டுகிறோம்.

அருளாசி

நமக்குக் கிடைத்துள்ள அரசியல் சுதந்திரம் அவருடைய அருளால் நமது தேசத்திற்கே உரிய ‘ஸ்வ’தந்திரமாகி, அரிய பயன்களாகிய அறத்தையும், அற வாழ்வின் மாறுபடாத பயன்களைத் தரும் இன்பத்தையும், இறுதியில் பேரின்பமான வீட்டையும் அளிக்கட்டும்!

பண்டைய பாரதம் போலவே இன்றைய சுதந்திர பாரதமும் உயரிய தியாக லட்சியத்தில் உலகுக்கே வழிகாட்டியாகத் திகழ வேண்டுமெனப் பிரார்த்தித்து வாழ்த்துகிறோம்.

திமுக.,வுடன் சேர்த்து அதிமுக.,வையும் எதிர்ப்பது, பாஜக.,வுக்கு அவசியமா? அது சாத்தியமா?

annamalai stalin edappadi
அண்ணாமலை – ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி

— ஆர். வி. ஆர்

தமிழகத்தில் திமுக-வும் அதிமுக-வும் தான் பல வருடங்களாகப் பெரிய கட்சிகள். பிற மாநிலங்களில் எப்படி இருந்தாலும், தமிழகத்தில் பாஜக சிறிய கட்சி.

ஜூலை 2021-ல் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, பாஜக இங்கு சிறிய கட்சி என்ற எல்லையில் முடங்க முடியாமல் துடிக்கிறது. காரணம், அண்ணாமலையின் அரசியல் வல்லமை மற்றும் மக்களை ஈர்க்கும் சக்தி. ஒரு தலைவரிடம் அந்த இரண்டு குணங்கள் இருந்தால்தான் அவர் கட்சி பெரிய கட்சியாக வளர முடியும். அப்படித்தான் அண்ணாத்துரையும் கருணாநிதியும் திமுக-வை நிலை நிறுத்தினார்கள், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அதிமுக-வை வளர்த்தார்கள். இந்த ஐவரின் தலைமைக் குணங்களும் நோக்கங்களும் வேறு. ஆனால் இவர்கள் அனைவரும் வல்லமை கொண்ட தலைவர்கள்.

ஒரு கட்சியைப் பெரிய கட்சியாக்கிய தலைவர் மறைந்து அடுத்து வரும் கட்சித் தலைவர் சாதாரணத் தலைவராக இருந்தாலும் பரவாயில்லை. அதன் பழைய கட்டமைப்பில், பழைய வாசனையில், பின்வரும் பல வருடங்கள் அது பெரிய கட்சியாக மக்கள் மனதில் நீடிக்கும் – இன்றைய திமுக-வும் அதிமுக-வும் மாதிரி.

ஸ்டாலின் தலைமையிலான இன்றைய திமுக, எல்லாவித அதிகார துஷ்பிரயோகத்திலும் முறைகேட்டிலும் ராட்சஸத் தன்மை கொண்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி, அதில் ஒரு துளி. சட்ட ரீதியாக வதம் செய்யப்பட வேண்டிய கட்சி திமுக. அதற்குப் பதிலாக அதிமுகவோ அதன் தலைமையிலான கூட்டணியோ ஆட்சிக்கு வருவதும் நல்லதல்ல.

ஊழலையும் அரசியல் முறைகேடுகளையும் எதிர்க்கும் கட்சி பாஜக, அது மக்களுக்கு முன்னேற்றமும் நல்லாட்சியும் தரும் கட்சி என்று சாதாரண மக்களிடம் – குறிப்பாக வட மாநிலங்களில் – பெரிதாகப் பெயர் எடுத்திருக்கிறது. இந்தியாவில், ஒரு அரசியல் தலைவன் நல்லவனோ இல்லையோ, அவன் வல்லவன் என்றால்தான் சாதாரண மக்கள் பலரும் ஒரு பணிவில் அந்தத் தலைவனுக்கு, அவனது கட்சிக்கு, வாக்களிப்பார்கள். வல்லமையோடு அவனிடம் நல்லதனமும் தூக்கலாக இருந்தால் அந்த மக்கள் அவனை மனதில் வணங்கிக் கொண்டாடுவார்கள். அப்படித்தான் பாஜக-வின் நரேந்திர மோடி கோடானு கோடி இந்திய மக்கள் மனதில் அமர்ந்திருக்கிறார். அதே வகையில் பல்லாயிரத் தமிழக மக்கள் மனதை அண்ணாமலை வென்றிருக்கிறார் – இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே.

நாள்தோறும் பெருகிவரும் தனது மக்கள் செல்வாக்கை வைத்து பாஜக-வைத் தமிழகத்தில் ஒரு பெரிய கட்சியாக ஆக்கவேண்டும் என்று அண்ணாமலை ஆசைப் படுகிறார். அதை அடிக்கடி வெளிப்படுத்துகிறார். அதைச் செயலாக்க, பாஜக திமுக-வை எதிர்த்தால் போதாது, அதிமுக-வையும் சேர்த்து எதிர்க்கவேண்டும். ஒன்றை மட்டும் எதிர்த்து மற்றதுடன் மாநிலத்திற்குள் கூட்டு வைத்தால், பாஜக-விற்குப் பெரிய கட்சி என்ற அடையாளம் கிடைக்க வாய்ப்பு குறைவு, சேர்ந்திருக்கும் கட்சியும் அதற்கு இடம் தராது.

அண்ணாமலையை உள்ளத்தில் போற்றும் சாதாரண மக்கள், அவர் திமுக-வைத் தில்லாக எதிர்க்கும் திறன் கொண்டவர் என்று நினைக்கிறார்கள், அதை வரவேற்கிறார்கள். அப்படியான மக்கள், அண்ணாமலை அதிமுக-வையும் சேர்த்து எதிர்த்தால் அதை ஆதரிப்பார்கள். காரணம்: ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகள் என்ற அடிப்படையில் அதிமுக-வை இன்னொரு திமுக-வாகத்தான், வேண்டுமானால் சற்று சாயம் வெளுத்த திமுக-வாக, அந்த மக்கள் பார்க்கிறார்கள்.

‘அண்ணாமலை என்னதான் நல்லவராக வல்லவராக இருந்தாலும், தேர்தல் சமயத்தில் இரண்டு பெரிய கட்சிகள் பெயரிலும் யாராவது பணத்தை மக்களிடம் வாரி இறைக்கப் போகிறார்கள், அதனால் மக்கள் அந்த இரண்டு கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டு அவை அதிக எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தொகுதிகளை வெல்லும். பாஜக பணம் தராது, அதனால் அதிக ஓட்டுக்களைப் பெறாது. பிறகு எப்படி இரண்டு பெரிய கட்சிகளையும் ஒன்றாக எதிர்த்து, பாஜக கணிசமான எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தொகுதிகளை வெல்ல முடியும்? பாஜக அதிமுக-வை எதிர்க்காமல் அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தால் தான், சில தொகுதிகளையாவது பாஜக ஜெயிக்க முடியும்’ என்ற வாதம் சிலரிடமிருந்து வருகிறது.

சாதாரண வாழ்க்கை வசதிக்கே போராடும் நமது மக்களிடம், யாராவது ஓட்டுக்காகப் பணம் கொடுத்தால், அதுவும் ஆயிரக் கணக்கில் கொடுத்தால், அவர்களின் ஏழ்மை நிலையில் அதை வாங்கிக் கொள்வார்கள். இது போக, ‘நம்மிடமிருந்து எடுத்த பணத்தில் சிறிது நமக்கு இப்படி வரட்டுமே’ என்றும் சிலர் நினைத்து வருவதை வாங்கிக் கொள்வார்கள். பிறகு அரசியலில் எந்தத் தலைவன் வல்லவன் என்று பார்த்து அதற்கு ஏற்பப் பணம் வாங்கியவர்கள் ஓட்டுப் போடுவார்கள். அதிக வல்லவன் அதிகப் பணம் கொடுத்து, அந்த வகையிலும் தன் வல்லமையை சாதாரண மக்களிடம் காண்பிக்கலாம். இதை எல்லாம் தாண்டி, மிக வல்லவனான ஒரு தலைவன் மிக நல்லவனாகவும் மக்களால் உணரப் பட்டால், அவனது கட்சியின் சார்பாகப் பணம் தரப்படா விட்டாலும் அவனால் ஈர்க்கப் பட்டு அவனுக்கு வாக்களிக்கும் சாதாரண மக்கள் இருக்கிறார்கள்.

இன்னொன்று. பணம் கொடுத்து மக்களிடம் ஓட்டைப் பெறலாம் என்றாகி விட்டால், எந்த அரசியல் தலைவர்தான் இதை மாற்ற முயல்வது? எப்போதுதான் மக்களின் வாழ்க்கைத் தரம் அரசின் நடவடிக்கைகளால் முன்னேறும் என்று அவர்களுக்கு நம்பிக்கை அளித்து, ஓட்டுக்கான லஞ்சம் அவர்களுக்குத் தேவையில்லை, அதைப் பெறுவது கௌரவமல்ல, என்று அவர்களுக்கும் ஒரு அரசியல் கட்சி உணர்த்துவது? கட்டாய சீரழிவுப் பாதையில்தான் தமிழக ஜனநாயகம் போக வேண்டுமா? இதற்கு விடிவே கிடையாது என்று எல்லா அரசியல் தலைவர்களும் நினைப்பதா ?

குயுக்தியான சுயநலத் தலைவர்கள் ஒரு நாட்டை, ஒரு மாநிலத்தை, வீழ வைப்பது எளிது. அது தமிழகத்தில் நடந்து விட்டது. பின்னர் அந்தப் பிரதேசத்தை மீட்டெடுப்பது கடினம். இப்போது ஒரு சரியான தலைவர் மூலமாகத் தமிழகத்தை மீட்க வாய்ப்பிருக்கிறது.

தமிழகத்தில் அதிமுக-வையும் சேர்த்து பாஜக எதிர்க்க முடிந்தால், அது அண்ணாமலை போன்ற தலைவர் இருப்பதால்தான் நினைத்துப் பார்க்க முடியும். இதைச் செயலாற்றினால் அது எந்த அளவிற்குப் பயன் தந்து பாஜக-விற்கு எத்தனை எம்.பி மற்றும் எம்.எல்.ஏ சீட்டுக்களைப் பெற்றுத் தரும், அது அதிமுக-வுடன் கூட்டணி சேர்ந்தால் கிடைக்கும் எண்ணிக்கையை விடவும் குறைவாகப் போகுமா என்று பார்ப்பது ஒரு நடைமுறை அவசியம்தான்.

சென்ற லோக் சபா தேர்தலில், தமிழகத்தின் 39 தொகுதிகளில் அதிமுக தலைமையில் ஏழு-கட்சிக் கூட்டணி ஒன்று போட்டியிட்டது. அதில் பாஜக-வும் உண்டு. அந்தக் கூட்டணியில் அதிமுக மட்டும் ஒரு தொகுதி வென்றது, மற்ற கூட்டணிக் கட்சிகள் ஒரு தொகுதியிலும் ஜெயிக்க முடியவில்லை. அதே தேர்தலில் திமுக-வின் ஒன்பது-கட்சிக் கூட்டணி போட்டியிட்டு, 38 லோக் சபா தொகுதிகளை வென்றது. அந்த ஒன்பது கட்சிகள் ஒவ்வொன்றுமே ஒரு தொகுதியிலாவது ஜெயித்தன. அதிலும், தலா ஒரு லோக் சபா தொகுதியில் மட்டும் போட்டியிட்ட திமுக-கூட்டணிக் கட்சிகள் நான்கு, அந்த ஒரு தொகுதியிலும் ஜெயித்தன. அடுத்த வருடம் 2024-ல், மீண்டும் லோக் சபா தேர்தல் வருகிறது.

இப்போது திமுக மெஜாரிட்டியில் உள்ள தமிழக சட்டமன்றத்தில் பாஜக-விற்கு நான்கு எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அது அதிமுக-வுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டதில் கிடைத்தது. மாநிலத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தல் 2026-ல் வரும்.

இத்தகைய பலமான திமுக-வை வீரியமாக எதிர்க்கின்ற தமிழக பாஜக, அதிமுக-வையும் சேர்த்து எதிர்ப்பதால் பாஜக-விற்குப் பெரிய நஷ்டமில்லை. இந்தக் காரியம் மிகப் பெரியது, மக்கள் நலன் கொண்டது. அண்ணாமலையின் தலைமையில் பாஜக இதை நினைக்க முடியும், செய்ய முடியும். இந்தக் காரியத்தைத் தானும் செய்து, தமிழகத்தில் மதிப்பிழந்து கிடக்கும் காங்கிரஸ் மீண்டும் இங்கு பெரிய கட்சி ஆக முடியுமா? முடியாது. அதைச் செய்யும் ஆர்வமும் தைரியமும் கௌரவமும் காங்கிரஸ் கட்சியில் இல்லை – மாநிலத்திலோ தில்லியிலோ. ஆனால் இன்றைய பாஜக வேறு ரகம்.

அரசியல் சட்டப் பிரிவு 370 நீர்த்துப் போகும் சட்ட நடவடிக்கையை நரேந்திர மோடி அரசு துணிவாக எடுத்தது – தேசத்திற்கும் ஜம்மு காஷ்மீருக்கும் அது நன்மை செய்யும் என்பதால். அதன் விளைவுகளைச் சந்திக்கும் ஆற்றலும் மோடி-யிடம் இருக்கிறது. இதே துணிவுடனும் ஆற்றலுடனும் அவர் பாகிஸ்தான் பாலகோட்டிற்குப் போர் விமானங்கள் அனுப்பி அங்கிருந்த பயங்கரவாதிகள் பயிற்சி முகாமைத் தகர்க்கும் முடிவை எடுத்தார். பின்பு எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் செய்த அத்துமீறல்களையும் நமது ராணுவத்தின் மூலம் தைரியமாக, சாமர்த்தியமாக, எதிர்கொண்டார்.

இதைப் போன்ற மனோ தைரியம் உள்ள ஒரு கட்சித் தலைமைதான், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் தமிழக பாஜக ஒரு சேர எதிர்க்கலாம் என்று அண்ணாமலைக்குப் பச்சைக் கொடி காட்ட முடியும். அதை எந்த நேரத்தில் செய்வது, எந்தத் தேர்தலில் செய்வது – 2024-லா, 2026-லா, அல்லது இரண்டையும் பார்த்துவிட்டு 2029-லா – என்ற சிக்கலான கூட்டல் கழித்தல் கணக்கும் கட்சித் தலைமைக்குத்தான் தெளிவாகத் தெரியும். அதற்கு ஏற்ப அதிமுக-வுடனான அணுகுமுறையும் இருக்கும்.

அரசியல் கட்சிகள் எப்போதும் தேர்தல்களை நோக்கி அவர்கள் பாணியில் நகரும். தேர்தல் போட்டிகள், ஒரு செஸ் விளையாட்டு. எப்போது எந்தக் காயை எங்கு நகர்த்துவது என்பது ஒரு கணக்கு, ஒரு கலை. சிறந்த தேர்தல் செஸ் வீரர்கள் பாஜக-வில் இருக்கிறார்கள். உத்திரப் பிரதேசத்தில் சமஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, என்ற இரு பெரிய கட்சிகளையும் எதிர்த்து வென்று அங்கு பாஜக-வை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள். அவர்கள் தமிழகத்திலும் வெல்லட்டும், தமிழகத்தையும் மீட்க வழி செய்யட்டும், என்று நாம் விரும்பலாம், அவர்களை வாழ்த்தலாம், காத்திருக்கலாம்.


Author: R. Veera Raghavan, Advocate, Chennai

A Book a Week-2

0
write thoughts - 2026
#image_title

By Narasimhan Vijayaraghavan 

Reading books is a habit. And the environment plays a huge part. There have been a number of polls and researches conducted in India on the reading habits of people. The results of these studies have shown that reading habits in India vary widely by region, age group, and socioeconomic status.

In general, people in India read less than people in other developed countries. I know for a fact. For, one finds it difficult to get books sold. And read ?That is another ball game altogether. 

In today’s world, it is becoming increasingly difficult for people to focus on anything for an extended period of time. This is due in part to the rise of social media, which bombards users with a constant stream of information and updates. As a result, people’s attention spans have become shorter and shorter.

A study by Microsoft found that the average attention span of a human being has decreased from 12 seconds in 2000 to 8 seconds in 2015. This is shorter than the attention span of a goldfish, which is 9 seconds.It has been exacerbated by invasion of AI. And in 2022, it was just a fraction of what it was in 2015. 

There are a number of reasons for this decline in attention spans. One reason is the rise of social media. Social media platforms like Facebook, Twitter, and Instagram are designed to be addictive. They use a variety of techniques, such as notifications, push alerts, and endless scrolling, to keep users engaged.Ask Tristan Harris and watch ‘Social Dilemma’ on Netflix, if you have the attention span. 

Another reason for the decline in attention spans is the increasing amount of information that is available to us. In the past, people had to rely on books, newspapers, and magazines for information. However, today, we have access to an endless amount of information online. This can be overwhelming and can make it difficult to focus on any one thing.And the deleterious consequences include stress and anxiety as Prof. Jonathan Haidt puts it. 

A 2017 survey by the National Book Trust of India found that only 11% of Indians read for pleasure at least once a week. This is significantly lower than the average of 58% in developed countries. And subsequent surveys have  returned dismal results. 

A  factor that contributes to the low levels of reading in India is the supposed ‘lack of time’ . Many Indians work long hours and have little free time. They claim to  be busy with other activities, such as taking care of their families and/or working on their careers. The National Book Trust of India’s survey found that the number of people who read for pleasure was dwindling despite marginal increases. 

Crossing continents, in 2018, Gallup conducted a poll of Americans and found that 57% of adults said they had read a book for pleasure in the past 12 months. This was down from 72% in 1989.In 2019, Pew Research Center conducted a poll of Americans and found that 44% of adults said they had read a book for pleasure in the past year. This was down from 65% in 2011. And in 2022, despite the Pandemic, reading habits plunged to less than 55%. 

These polls suggest that book reading habits have declined in recent decades. There are a number of possible reasons for this decline, including the  rise of electronic devices, such as smartphones and tablets, which offer a variety of entertainment options that compete with reading.

The decline of public libraries, which have traditionally been a source of books for people who cannot afford to buy them.Despite the decline in book reading, there are still a number of people who enjoy reading for pleasure. These people often find that reading helps them to relax, learn new things, and escape from the stresses of everyday life.

Jokes apart, I, for one, would suggest you make friends with those who read books. Not just reviews. And you, at least read reviews, if you will, for a start. 

I start where we must. Your day starts with your waking up. “Make Your Bed” is a brilliant work, which, as a habit, we would do well to practice, even if not read the book and/or even read the review. Shall we? 


(Author of multiple books and practicing advocate in the Madras High Court).