Home Blog Page 5639

ரஜினி வாய்ஸ்: அன்புமணி, தமிழிசை எதிர் வாய்ஸ்

rajini tamilisai anbumani - 2026

சென்னை:

நடிகர் ரஜினி காந்த், ரசிகர்களுடனான சந்திப்பில் பேசியபோது, மு.க.ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் ஆகியோர் குறித்தும் பேசினார். அவரது பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்புமாக கருத்துகள் எழுந்துள்ளன.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ரஜினி கருத்து குறித்துக் குறிப்பிட்டபோது, ஊழலுக்கு காரணமான ஸ்டாலினை ரஜினி புகழ்ந்தது ஏன்? அரசியல் மாற்றம் தேவை என ரஜினி பேசியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் மு.க.ஸ்டாலின் நல்ல திறமையான நிர்வாகி என்று பாராட்டி இருக்கிறார். தமிழகத்தில் அரசியல் கெட்டு விட்டதாக ஆதங்கப்படும் ரஜினி தி.மு.க.வை பாராட்டி இருப்பது வியப்பாகத்தான் இருக்கிறது. ஊழலுக்குக் காரணமான ஸ்டாலினை, ரஜினி ஏன் புகழ்ந்தார் என தெரியவில்லை. போருக்கு தயாராவது அவ்வளவு எளிதல்ல. பிரதமர் மோடி குறித்து ரஜினி எதுவும் கூறாதது ஏன் என கூறியுள்ளார்.

இதனிடையே, பாமக., நிறுவுனர் ராமதாஸ் எப்போதும் கூறிவரும் கருத்தான, நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்லதல்ல என்பதைப் பிரதிபலிக்கும் வகையில், அன்புமணி ராமதாஸ் கூறியபோது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலுக்கு நிர்வாக திறன் கொண்டவர்தான் தேவை, நடிகர்கள் அல்ல என்று கூறியுள்ளார்.

இதனிடையே, ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய ராதாரவி இது பற்றி கருத்து தெரிவித்த போது “ரஜினிகாந்த் அரசியலுக்கு வர விரும்பினால் அதை வரவேற்கிறேன். தமிழக மக்களிடம் இருந்து அதிக பணம் மற்றும் புகழை அவர் சம்பாதித்துள்ளார். எனவே, அதை அவர்களுக்கே செலவு செய்ய அவர் தயாராக இருப்பதாக நினைக்கிறார். தீபாவின் கணவர், டிரைவர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை” எனக் கூறினார்.

ரசிகர் சந்திப்பு மகிழ்ச்சி: ரஜினி ட்வீட்

 

IMG 20170515 122312 - 2026

சென்னை:

ரசிகர்களுடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததாக, நடிகர் ரஜினி காந்த் டிவிட்டரில் கூறியுள்ளார். இது நினைவில் கொள்ளத்தக்கது, மறக்க இயலாதது என்றும் ஹாஷ் டாக் அடித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த நான்கு தினங்களாக ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவர்களுடன் பேசினார் ரஜினிகாந்த். அப்போது அரசியல் பேச்சுக்களும் எழுந்தது.

ரஜினியின் ரசிகர் சந்திப்பு என்றாலே பெருத்த எதிர்பார்ப்பு இருக்கும். அண்மைக் காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால், அந்த எதிர்பார்ப்பு இப்போது மேலும் கூடிவிட்டது. ஜெயலலிதா மறைவு, கருணாநிதி உடல் நலமின்றி முடங்கிக் கிடப்பது, ஆட்சியாளர்களிடையே ஏற்பட்ட பிளவு என்று பலவித நிலையற்ற சூழலால், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஊடகங்கள் பெரிதும் ரஜினி குறித்த செய்தியை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ரசிகர் சந்திப்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக ரஜினி காந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது ட்வீட்:

 

ரஜினியை திமுக.,வுக்கு அழைப்பீர்களா?: கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில்

Stalin DMK - 2026

சென்னை:
ரஜினியை திமுக.,வுக்கு அழைப்பீர்களா? என்று திமுக., துணைத்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப் பட்டது. அதற்கு அவர், அழைக்கவும் மாட்டோம், அழைக்காமலும் இல்லை என்று தெளிவாகக் குழப்பினார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகள், ஓ.பன்னீர்செல்வத்தின் தில்லி பயணம் என பரபரப்பான செய்திகள் தமிழகத்தில் உலுக்கி வரும் நிலையில், தற்போதைய அரசியல் சூழல் குறித்து மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில்,
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கேள்விகள் கேட்கப் பட்டன. அதற்கு பதிலளித்த ஸ்டாலின், அரசியலுக்கு வருவது என்பது அவருடைய தனிப்பட்ட முடிவு என்று கூறினார்.

மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் இருந்து….

ஸ்டாலின்: ரஜினி என்னைக் குறித்து, நல்ல நண்பர், நல்ல நிர்வாகி என்று குறிப்பிட்டதாக நான் அறிந்தேன். சோ என்னைக் குறித்து பாராட்டியுள்ளார். அவருடைய பாணியில் சொல்லப் போனால் மகிழ்ச்சி. அரசியலுக்கு வருவது என்பது அவரது தனிப்பட்ட முடிவு.

நிருபர்: ரஜினி திமுக.,வில் இணைய வேண்டும் என்று அவரை அழைப்பீர்களா?

ஸ்டாலின்: திமுகவுக்கு வரவேண்டும் என்று விரும்பினால் அது குறித்து அவர்தான் முடிவு எடுக்க முடியும். நாங்கள் அழைக்கவோ அல்லது அழைக்காமலோ இருக்கப் போவதில்லை. எந்த வற்புறுத்தல்களையும் அவர் ஏற்கப் போவதில்லை. அவர் ஒரு தனிப்பட்ட மனிதர், அவரே முடிவு எடுத்துக் கொள்வார்.

நிருபர்: ஆனால், ஒவ்வோர் அரசியல்வாதியும் ஊழல் கறை படிந்தவர்கள் என்று அவர் சொல்கிறார். (அது அவரையும் சேர்த்துதான்; திமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ரஜினி ஏற்கெனவே மறுப்பு தெரிவித்துள்ளார்)

ஸ்டாலின்: தமிழ்நாட்டில் கடந்த ஆறு வருடங்களாகத்தான் ஊழல் பிரச்னை பெருகியுள்ளது.

நிருபர்: பாஜக ரஜினியை ஈர்க்கும் முயற்சியில் உள்ளது…

ஸ்டாலின்: பாஜக.,வுக்கு தமிழ்நாட்டில் காலடி வைக்க ஏதோவொரு வழி தேவைப்படுகிறது. அதற்காக என்னவெல்லாமோ முயற்சி செய்கிறது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது.

நிருபர்: ஓ.பன்னீர்செல்வம் தில்லிக்குச் சென்றிருக்கிறார் பிரதமரைச் சந்திக்க…

ஸ்டாலின்: ஓபிஎஸ்ஸோ ஈபிஎஸ்ஸோ அவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள தில்லி செல்கிறார்கள். மக்களைக் காப்பதற்காக அல்ல. இப்போது ஹிந்தி பிரச்னை உள்ளது. நீட் பிரச்னை உள்ளது. அதற்காகவெல்லாம் பிரதமரை அவர்கள் சந்திக்கவில்லை. ஓபிஎஸ் இங்கே திரும்பியதும், அவரிடம் சென்று இதனைக் கேளுங்கள்.

நிருபர்:தமிழ்நாட்டில் முன்னதாகவே தேர்தல் வரும் என்று நினைக்கிறீர்களா?

ஸ்டாலின்: தேர்தல் முன்னதாகவே வரலாம், வராமல் போகலாம். திமுக தேர்தலை சந்திக்க தயாராகவே உள்ளது.

– என்று குறிப்பிட்டார் ஸ்டாலின்.

சசிகலாவுக்கு பொதுச்செயலராக செயல்பட உரிமை இல்லை; கட்சியை நடத்தும் உரிமை எனக்கே: தில்லியில் ஓ.பி.எஸ்

panneerselvam tn - 2026

புதுதில்லி:
சசிகலாவுக்கு பொதுச்செயலராக செயல்பட உரிமை இல்லை; கட்சியை நடத்தும் உரிமை எனக்கே உள்ளது என்று தில்லியில் ஓ.பி.எஸ் பேட்டி அளித்தார்.

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணியினர் தாக்கல் செய்தனர். இதற்காக, புதுதில்லி வந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி உடன் இருந்தார். அப்போது பேசிய ஓபிஎஸ்,

திகார் சிறையில் இருக்கும் அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

மறைந்த மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவேவிற்கு அதிமுக சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிமுக சட்டவிதியின்படி, தேர்தல் நடத்தித்தான் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுச் செயலாளர் இல்லாத போது பொருளாளர்தான் பொறுப்பேற்று கட்சியை நடத்த வேண்டும். எனவே, சசிகலாவிற்கு பொதுச்செயலாளராக செயல்பட உரிமை இல்லை. பொருளாளரான எனக்கே அந்த உரிமை உள்ளது.

இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் டிடிவி தினகரன் தீர விசாரிக்கப்பட வேண்டும். ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

திண்டுக்கல் சீனிவாசன் அதிக அளவில் பணத்தை வங்கியில் இருந்து எடுத்து வருவதை தடுக்கவும் தேர்தல் கமிஷனிடம் கோரியுள்ளோம். ஏற்கேனவே வங்கி கணக்கை முடக்க கடிதம் அளித்தும் வங்கிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

குடியரசுத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று இன்னும் அறிவிக்கப்பட வில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் யாருக்கு ஆதரவு என்பது பற்றி முடிவு செய்வோம் என்று கூறினார்.

ரஜினி அரசியலுக்கு வருவதால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை: ஓ.பன்னீர்செல்வம்

pannerselvam - 2026

ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதால், அதிமுக.,வுக்கு ஒன்றும் பாதிப்பில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அளித்தார்.

தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாம், அவர் நல்ல மனிதர்; யார் தலைவராக வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்றார். மேலும்,

நடிகர் ரஜினிகாந்தின் வருகை, அதிமுகவை எந்த விதத்திலும் பாதிக்காது என்று குறிப்பிட்டார்.

மேலும்,
தினகரன் , சுகேஷ் சந்திரசேகர் மீதான விசாரணையை துரிதப்படுத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளோம்.
தேர்தல் ஆணையத்தில் உரிய ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம்.
ஆர்கே நகரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தியுள்ளோம்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது.
கட்சி விதிப்படி பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம்.
தற்போது பொருளாளருக்கு தான் கட்சியை நடத்த அதிகாரம் உள்ளது.

– என்று குறிப்பிட்டார் பன்னீர் செல்வம்.

இதனிடையே இன்று மாலை 4 மணி அளவில் அவர் பிரதமரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்தும், தமிழக அரசியல் சூழல் குறித்தும் பேசுவார் என்று கூறப்படுகிறது.

அரசியல் சிஸ்டம், ஜனநாயகமே கெட்டுப் போய் உள்ளது; மொத்தத்தையும் சரி செய்தால்தான் தமிழகம் உருப்படும்: ரஜினி ஆவேசம்!

IMG 20170515 122312 - 2026

சென்னை:

அரசியல் சிஸ்டம், ஜனநாயகமே கெட்டுப் போய் உள்ளது என்று ஆவேசத்துடன் குறிப்பிட்டார் ரஜினி காந்த்.

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் ரசிகர்களிடம் குறிப்பிட்டவை:

முதல் நாளில் அரசியலுக்கு வருவது பற்றி பேசினேன்;
எதிர்ப்பு இல்லாமல் வளர முடியாது, அரசியலில் எதிர்ப்பு தான் அவசியம்

தமிழக அரசியல் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. மொத்தத்தையும் சரி செய்தால்தான் தமிழகம் உருப்படும்.

மக்களின் சிந்தனையை உருவாக்கினால் மட்டுமே நாட்டில் மாற்றத்தை கொண்டுவர முடியும்.

போர் வரும்போது பார்த்து கொள்வோம்; அதுவரை பொறுமை காப்போம்.

நல்ல உள்ளங்கள் வாழும். தமிழக மக்களுடன் தான் நான் இருக்க வேண்டும்

23 வருடங்கள் கர்நாடகாவில் வாழ்ந்தேன். 43 வருடங்கள் தமிழகத்தில் வாழ்கிறேன். நான் பச்சை தமிழன்; என்னை தமிழனாக ஆக்கியவர்கள் நீங்கள்.

மு .க .ஸ்டாலினை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் நன்றாகச் செயல்படுவார்

தமிழகத்தில் அரசியல் நிலவரம் நன்றாக இல்லை

அரசியல் குறித்த எனது பேச்சு இவ்வளவு சர்ச்சையாகும் என எதிர்பார்க்கவில்லை

அனைவரும் அவரவர் கடமையை செய்யுங்கள்; போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்

அரசியல் சிஸ்டம், ஜனநாயகமே கெட்டுப் போய் உள்ளது.

ஸ்டாலின் நல்ல நிர்வாகி, சீமான் போராளி, அன்புமணி சிறந்த சிந்தனை வளம் மிக்கவர்.

தமிழகத்தில் இருந்து என்னைத் தூக்கி போட்டால் இமயமலையில் போய் தான் விழுவேன்; என்னை வாழ வைத்த தமிழக மக்கள் நன்றாக இருக்க நினைக்கக் கூடாதா? என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார் ரஜினி காந்த்.

ஆந்திராவில் ஒரே நாளில் கடும் வெயிலுக்கு 58 பேர் பலி

andhra heat wave claim - 2026

திருப்பதி: ஆந்திராவில் கடுமையான வெயிலுக்கு 58 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று முன்தினம் ஓரே நாளில் 58 பேர் வெயில் தாக்கத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி இறந்தனர். சித்தூர் மாவட்டத்தில் சேர்ந்த  கிருஷ்ணம்மா(66), சின்னாரெட்டி(70), கிருஷ்ணம்மா(53), நரசிம்மலநாயுடு(65), பிரம்மாயி ஆச்சாரி(60), பிரதாப்ரெட்டி(67) மற்றும்  த லட்சுமியம்மா(60) உள்பட 7 பேர்  வெயில் கொடுமைக்கு பரிதாபமாக நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.

இதேபோல், பிரகாசம் மாவட்டத்தில் 13 பேரும், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 7 பேர், குண்டூர் மாவட்டத்தில் 10 பேர், கிருஷ்ணா மாவட்டத்தில் 3 பேர், விஜயநகரம் மாவட்டத்தில் 7 பேர், நெல்லூர் மாவட்டத்தில் 10 பேரும் பலியாகினர்.  மேலும்,அனந்தபுரம் மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 58 பேர் பலியாகி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக ராஜமுந்திரி மாவட்டத்தில் 113 டிகிரி பாரன்ஹீட் வெயிலும்,112 டிகிரியும், சித்தூரில் 109 டிகிரியும், திருப்பதியில் 111 டிகிரியும் பதிவாகி இருந்தது. இருப்பினும், ஒரு சில உள்மாவட்ட கிராமங்களில் சூறைச் காற்றுடன் கனமழை பெய்தது.

கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு!

chidambaram karthi - 2026

புது தில்லி:

மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிந்துள்ளது.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரம், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த பயண ஏற்பாட்டின் படி, லண்டன் சென்றுள்ளதாக கூறப்பட்டது. அண்மையில், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

எ பில்லியன் ட்ரீம்ஸ் குறித்து விளக்க மோடியை சந்தித்த சச்சின்

modi sachin tendulkar - 2026

புது தில்லி:

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது விரைவில் அவர் நடித்து வெளிவரவுள்ள சச்சின்: எ பில்லியன் டிரீம்ஸ் படத்தை பற்றி விவரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பு குறித்து பெருமிதத்துடன் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஒவ்வொரு இந்தியரும் சச்சின் குறித்து பெருமைப் படுவதாகவும், அவருடைய வாழ்க்கை 125 கோடி மக்களுக்கு உந்துசக்தியாக விளங்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது டிவிட்டர் செய்தி:

குழந்தைகளையும் ஊத சொல்லும் போக்குவரத்து காவலர்

marina police force break protesters3545 - 2026
சென்னை ராயபுரம் போக்குவரத்து காவலர் ஒருவர் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறார்.

வர போற வாகனங்களை மடக்கி எல்லோரையும் ஊத சொல்கிறாராம். பெற்றோருடன் சென்றாலும் யாராக இருந்தாலும் விடுவதில்லையாம். கடமை உணர்வு என்கின்றனர் சிலர்.இராயபுரம் பழைய காவல நிலையம் முன்பே கனரக வாகனங்களை விதியைமீறி நிறுத்தி லஞ்சம் பணத்தை பொதுமக்கள் முன்னிலையில் பெறுகின்றனர்.

காவல்துறை உடைக்கு களங்கம் சேர்க்கின்றனர். இவ்வளவு தவறுகளை செய்வதை உயர் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று வேதனையோடு கூறுகின்றனர். அரசு நிர்வாகத்தில் நேர்மையானவர்களை தேட வேண்டியதுள்ளது.

விஸ்வரூபம்