Home Blog Page 5775

தமிழக மக்களுக்கு நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன் : ஜெயலலிதா

 
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்ட நிலையில் வாக்களித்த வாக்களர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-
 
எழுகின்ற நன்றி உணர்ச்சி இவைகளை விவரிக்க அகராதியில் வார்த்தைகளே இல்லை. தி.மு.க-வின் பொய் பிரச்சாரங்களை பொடிப் பொடியாக்கி, உன்னதமான, உத்தமமான, உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டிய தேர்தல் இந்தத் தேர்தல். குடும்ப ஆட்சிக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் இந்தத் தேர்தல். குடும்பத்தோடு வாக்கு கேட்டவர்களைகுழிதோண்டி புதைத்த தேர்தல் இந்தத் தேர்தல். தமிழக மக்களை நம்பாமல் கருத்துக் கணிப்புகளை நம்பிய கட்சிக்கு எதிர்பார்த்த தோல்வியைக் கொடுத்த தேர்தல் இந்தத் தேர்தல்.
 
என் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, எனது அன்பான வேண்டுகோளினை ஏற்று, மகத்தான, அபரிமிதமான, அளப்பரிய வெற்றியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அளித்துள்ள தமிழக மக்களுக்கு என்றென்றும் நான் நன்றிக் கடன் பட்டவளாக இருப்பேன் என்றும்; தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்க தொடர்ந்து அல்லும், பகலும் அயராது உழைப்பேன் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்.
 
இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, 1984-ஆம் ஆண்டுக்கு பிறகு, தொடர்ந்து ஆட்சியில் உள்ள கட்சியே வெற்றி பெற்ற பெருமையை எனக்கு அளித்த தமிழக மக்களுக்கும், இந்தத் தேர்தலில் மெய் வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல், ‘கருமமே கண்ணாயினார்’ என்பதற்கேற்ப, ஓயாமல் கழகத்தின் வெற்றிக்காக உழைத்த ரத்தத்தின்
ரத்தமான, என் உயிரினும் மேலான, எனது அருமை கழக உடன் பிறப்புகளுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், தோழமை கட்சித் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
 
புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள ஏழு சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜெயலலிதா அறிக்கையில் தெரிவித்துள்ளார்

மே 23ல் ஜெயலலிதா பதவியேற்பு?

சென்னை:
தமிழகத்தில் மே 16ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.
இதில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெறும் வகையில் பல தொகுதிகளில் அதிமுக., முன்னிலையில் உள்ளது.
இதை அடுத்து, முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்று, ஆட்சி அமைக்கவுள்ளார்.
இதற்காக, சென்னை பல்கலைக்கழகம் தயாராகி வருகிறது. வரும் மே 23 – ல் முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழா நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: முன்னிலை நிலவரம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 68 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் அதிமுக 42 சதவீத வாக்குகளுடன் முன்னிலை வகித்துள்ளது. திமுக 29.8 சதவீதம், பா.ம.க. 6.2 சதவீத வாக்குகளும் காங்கிரஸ் 6.8 சதவீதமும் மதிமுக 0.6 சதவீதமும் தேமுதிக 2.1 பா.ஜ.க 2.1 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.

முன்னணி வேட்பாளர்கள் நிலவரம்

கடலூர்- சம்பத் எம்.சி.- அதிமுக

கும்மிடிப்பூண்டி- கே. எஸ். விஜயகுமார்- அதிமுக

பொன்னேரி – பி. பலராமன்- அதிமுக

ராதாகிருஷ்ணன் நகர் – ஜெ. ஜெயலலிதா- அதிமுக

கொளத்தூர் – மு.க.ஸ்டாலின்- திமுக

சைதாப்பேட்டை- மா. சுப்பிரமணியன்- திமுக

மயிலாப்பூர் – ஆர். நடராஜ்- அதிமுக

வாணியம்பாடி- நீலோபர் கபில்- அதிமுக

ஜோலார்பேட்டை- கே. சி. வீரமணி- அதிமுக

கிருஷ்ணகிரி- வி. கோவிந்தராஜ்- அதிமுக

வேப்பனஹள்ளி- ஏ.வி.எம். மது (எ) ஹேம்நாத்- அதிமுக

பாலக்கோடு- கே. பி. அன்பழகன்- அதிமுக

பென்னாகரம் – இன்பசேகரன் பி.என்.பி.- திமுக

தர்மபுரி- செந்தில்- பாட்டாளி மக்கள் கட்சி

பாப்பிரெட்டிப்பட்டி- சத்திய மூர்த்தி – பாட்டாளி மக்கள் கட்சி

அரூர்- முரளி எஸ்.- பாட்டாளி மக்கள் கட்சி

செங்கம்- மு.பெ. கிரி – திமுக

திருவண்ணாமலை- எ.வ.வேலு- திமுக

கீழ்பெண்ணாத்தூர்- கு.பிச்சாண்டி- திமுக

கலசப்பாக்கம்- வி. பன்னீர்செல்வம்- அதிமுக

போளூர்- சி. எம். முருகன்- அதிமுக

ஆரணி- சேவூர் எஸ். ராமச்சந்திரன்- அதிமுக

செய்யாறு- தூசி கே. மோகன்- அதிமுக

வந்தவாசி- எஸ். அம்பேத் குமார்- திமுக

செஞ்சி- செஞ்சி கே.எஸ். மஸ்தான்- திமுக

மயிலம்- மாசிலா மணி ஆர்- திமுக

வானூர்- மைதிலி ஆர். – திமுக

விழுப்புரம்- சண்முகம் . சி .வி- அதிமுக

விக்கிரவாண்டி- கு. இராதாமணி- திமுக

திருக்கோயிலூர்- கே. பொன்முடி- திமுக

உளுந்தூர்ப்பேட்டை- குமரகுரு- அதிமுக

இரிஷிவந்தியம்- வசந்தம் க. கார்த்திகேயன்- திமுக

சங்கராபுரம் – உதயசூரியன் டி- திமுக

கள்ளக்குறிச்சி- காமராஜ் பி- திமுக

கங்கவள்ளி- அ.மருதமுத்து- அதிமுக

ஆத்தூர் – சேலம்- ஆர்.எம்.சின்னதம்பி- அதிமுக

ஏற்காடு- கு.சித்ரா- அதிமுக

ஓமலூர்- எஸ்.வெற்றிவேல்- அதிமுக

மேட்டூர்- மணி ஜி.கே.- பாட்டாளி மக்கள் கட்சி

எடப்பாடி- எடப்பாடி பழனிச்சாமி- அதிமுக

சேந்தமங்கலம்- சி.சந்திரசேகரன் -அதிமுக

நாமக்கல்- பாஸ்கர்- அதிமுக

பரமத்தி-வேலூர்- கே. எஸ். மூர்த்தி – திமுக

குமாரபாளையம்- தங்கமணி பி- அதிமுக

ஈரோடு கிழக்கு- கே.எஸ். தென்னரசு- அதிமுக

ஈரோடு மேற்கு- ராமலிங்கம் கே.வி.- அதிமுக

மொடக்குறிச்சி- சச்சிதானந்தம்- திமுக

பெருந்துறை- தோப்பு என்.டி.வெங்கடாசலம்- அதிமுக

பவானி- கருப்பணன் கே.சி- அதிமுக

அந்தியூர்- இ.எம்.ஆர்.ராஜா (எ) ராஜா கிருஷ்ணன்- அதிமுக

கோபிச்செட்டிப்பாளையம்- செங்கோட்டையன் கே.ஏ- அதிமுக

பவானிசாகர்- எஸ்.ஈஸ்வரன்- அதிமுக

கூடலூர்- திராவிடமணி மு.- திமுக

மேட்டுப்பாளையம்- சின்னராஜ் ஒ .கே- அதிமுக

கோயம்புத்தூர் வடக்கு – மீனா லோகு- திமுக

தொண்டாமுத்தூர் வேலுமணி எஸ்.பி- அதிமுக

கோயம்புத்தூர் தெற்கு- அம்மன் கே.அர்ச்சுணன்- அதிமுக

சிங்காநல்லூர்- சிங்கை என்.முத்து- அதிமுக

கிணத்துக்கடவு- ஏ.சண்முகம்- அதிமுக

வால்பாறை – கஸ்தூரி வாசு- அதிமுக

ஒட்டன்சத்திரம்- சக்கரபாணி ஆர்- திமுக

ஆத்தூர் – திண்டுக்கல் – ஐ. பெரியசாமி- திமுக

நிலக்கோட்டை- ஆர்.தங்க துரை- அதிமுக

திண்டுக்கல் – திண்டுக்கல் சி.சீனிவாசன்- அதிமுக

கரூர்- எம்.ஆர்.விஜயபாஸ்கர்- அதிமுக

கிருஷ்ணராயபுரம்- எம்.கீதா- அதிமுக

குளித்தலை- எ. ராமர்- திமுக

மணப்பாறை- சந்திரசேகர் ஆர்.- அதிமுக

திருவரங்கம்- வளர்மதி- அதிமுக

திருச்சிராப்பள்ளி மேற்கு- கே.என். நேரு- திமுக

திருச்சிராப்பள்ளி கிழக்கு- வெல்லமண்டி நடராஜன்- அதிமுக

திருவெறும்பூர்- அன்பில் மகேஷ் பொய்யாமொழி- திமுக

இலால்குடி – சௌந்தர பாண்டியன் ஏ.- திமுக

மண்ணச்சநல்லூர்- பரமேஸ்வரி முருகன்- அதிமுக

முசிறி- எம்.செல்வராஜ் – அதிமுக

பெரம்பலூர் – இளம்பை இரா.தமிழ்ச்செல்வன்- அதிமுக

குன்னம்- ஆர்.டி.ராமச்சந்திரன்- அதிமுக

அரியலூர்- தாமரை எஸ்.ராஜேந்திரன்- அதிமுக

ஜெயங்கொண்டம்- ஜே.கே.என்.ராம ஜெயலிங்கம்- அதிமுக

திட்டக்குடி- வெ. கணேசன்- திமுக

விருத்தாச்சலம்- வி.டி.கலைச்செல்வன்- அதிமுக

நெய்வேலி – சபா ராஜேந்திரன்- திமுக

பண்ருட்டி- சத்யா பன்னீர்செல்வம்- அதிமுக

குறிஞ்சிப்பாடி- பன்னீர்செல்வம் எம்.ஆர்.கே- திமுக

காட்டுமன்னார்கோயில் – முருகுமாறன் என். – அதிமுக

பூம்புகார் – பவுன்ராஜ் எஸ்.- அதிமுக

நாகப்பட்டினம்- தமிமுன் அன்சாரி எம்.- மனித நேய ஜனநாயக கட்சி

கீழ்வேளூர்- மதிவாணன் உ- திமுக

வேதாரண்யம்- மணியன் ஒ.எஸ்.- அதிமுக

திருத்துறைப்பூண்டி- ப. ஆடலரசன் – திமுக

மன்னார்குடி- ராஜா டி.ஆர்.பி.- திமுக

திருவாரூர் – கலைஞர் கருணாநிதி – திமுக

நன்னிலம்- ஆர்.காமராஜ்- அதிமுக

திருவிடைமருதூர்- சேட்டு- அதிமுக

கும்பகோணம்- குத்தாலம் அன்பழகன் கே.- திமுக

பாபநாசம்- துரைக்கண்ணு ஆர்.- அதிமுக

திருவையாறு- துரை சந்திரசேகரன்- திமுக

ஒரத்தநாடு – ராமச்சந்திரன்- திமுக

பட்டுக்கோட்டை- சி.வி.சேகர்- அதிமுக

பேராவூரணி- என். அசோக்குமார்- அதிமுக

கந்தர்வக்கோட்டை- நார்த்தான்மலை பா.ஆறுமுகம் – அதிமுக

விராலிமலை- விஜயபாஸ்கர் சி- அதிமுக

புதுக்கோட்டை- அரசு பெரியண்ணன்- திமுக

திருமயம்- ரகுபதி எஸ். – திமுக

ஆலங்குடி – சிவ. மெய்யநாதன்- திமுக

அறந்தாங்கி – இ.ஏ.இரத்தினசபாபதி- அதிமுக

காரைக்குடி – ராமசாமி கே.ஆர்.- இந்திய தேசிய காங்கிரசு

திருப்பத்தூர், சிவகங்கை- பெரியகருப்பன் கே.ஆர்- திமுக

சிவகங்கை – ஜி.பாஸ்கரன்- அதிமுக

மானாமதுரை- எஸ்.மாரியப்பன் கென்னடி- அதிமுக

ஆண்டிப்பட்டி- தங்க தமிழ்செல்வன்- அதிமுக

பெரியகுளம்- டாக்டர் கே.கதிர்காமு – அதிமுக

இராஜபாளையம்- தங்கபாண்டியன் எஸ்- திமுக

திருவில்லிபுத்தூர்- எம்.சந்திரபிரபா- அதிமுக

சாத்தூர்- வே. சீனிவாசன்- திமுக

சிவகாசி- கே.டி.ராஜேந்திர பாலாஜி – அதிமுக

விருதுநகர் -கே.கலாநிதி- அதிமுக

அருப்புக்கோட்டை- ராமச்சந்திரன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.- திமுக

தூத்துக்குடி – அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்- திமுக

சங்கரன்கோவில்- வி.எம்.ராஜலெட்சுமி- அதிமுக

வாசுதேவநல்லூர் -அ.மனோகரன்- அதிமுக

கடையநல்லூர்- கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

தென்காசி- சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் – அதிமுக

ஆலங்குளம்- எப்சி கார்த்திகேயன்- அதிமுக

திருநெல்வேலி- நயினார் நாகேந்திரன்- அதிமுக

பாளையங்கோட்டை- எஸ்.கே.ஏ. ஹைதர் அலி- அதிமுக

இராதாபுரம்- இன்பதுரை- அதிமுக

கன்னியாகுமரி- ஆஸ்டின் எஸ்.- திமுக

நாகர்கோவில்- சுரேஷ் ராஜன் என்.- திமுக

குளச்சல்- பிரின்ஸ் ஜி.ஜெ- இந்திய தேசிய காங்கிரசு

பத்மனாபபுரம்- மனோ தங்கராஜ்- திமுக

விளவங்கோடு- விஜய தரணி- இந்திய தேசிய காங்கிரசு

கிள்ளியூர்- ஆர். ராஜேஷ் குமார்- இந்திய தேசிய காங்கிரசு

மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புது தில்லி:
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் செய்தி:

 

Modi congratulate mamta for her victory

New Delhi:
Prime Minister Narendra modi congratulate West Bengal Chief Minister Mamta banarji via telephone for her assembly election victory.
Modi’s tweet:

 

Prime Minister Narendra Modi congratulate TN CM Jayalalitha

New Delhi:
Prime Minister Narendra Modi congratulate TN CM Jayalalitha for her Assmebly victory.
PM’s Twitter message:

 

வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

தமிழகத்தில் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது.
இதில் அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள அதிமுக., அடுத்து தொடர்ந்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
அதிமுக பெற்ற வெற்றிக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றிக்கும் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனைத் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார் மோடி.

 

உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்துக்கு பின்னடைவு

உளுந்தூர்ப்பேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பின்னிலையில் உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு மே 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் உளுந்தூர் பேட்டை தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயகாந்த் பின்னிலையில் உள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதியில் ஒன்று உளுந்தூர்பேட்டை. மாவட்டத்தில் மிகப்பெரிய தொகுதியாகவும், அதிக வாககாளர்களை கொண்ட தொகுதியாக விளங்கும் உளுந்தூர்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதி தொகுதி 1952 முதல் 1994-ம் ஆண்டு வரை கடலூர் மாவட்டத்தில் இருந்தது. அதில் உந்தூர்பேட்டை, ஒன்றியம், திருநாவலூர் ஒன்றியம், திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில் திருவெண்ணைநல்லூர், அரசூர், சித்தானங்கூர் உட்பட உளுந்தூர்பேட்டை தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 1952 முதல் 2011 வரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் 6 முறை திமுக, 4 முறை அதிமுக, 3 முறை காங்கிரஸ், ஒருமுறை சுயேட்சை வென்றார்.
கடந்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலின் போது திமுகவைச் சேர்ந்த திருநாவுக்கரசும், 2011-ல் உள்ள அதிமுகவைச் சேர்ந்த குமரகுருவும் வெற்றி பெற்றனர்.

அன்புமணிக்கு பெரும் பின்னடைவு

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பாமக முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப் பட்ட அன்புமணி ராமதாஸ் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.

தற்போதைய நிலவரப்படி, தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 4958 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

திமுக வேட்பாளர் இன்பசேகரன் 6765 வாக்குகள் பெற்று முதலிடத்திலும்,
அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி 5365 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

Assembly elections – 2016- Results

[iframe src=”https://www.elections.in/results/” width=”100%” height=”4000″]