Home Blog Page 5776

நடிகர் விஷால் மாணவர்களுக்கு உதவி செய்வதாக அறிவிப்பு !

நடிகர் விஷால் தான் உறுதியளித்திருந்தபடி சென்னை மதுரவாயல் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களின் கல்லூரி படிப்பு செலவை ஏற்று கொண்டுள்ளார்
 
நடிகர் விஷால் சென்ற ஆண்டு மதுரவாயலில் உள்ள ஒரு பள்ளி விழாவுக்கு சென்றிருந்த போது அங்கு கல்வி பயிலும் மாணவர்களில் 12 ஆம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுப்பவர்களை கல்லூரியில் தானே படிக்க வைப்பதாக தெரிவித்து இருந்தார் .
 
நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வில் அப்பள்ளியைச் சேர்ந்த பத்மப்ரியா ( 1137 / 1200), புவனேஸ்வரி ( 1128/1200), பி.சக்தி ( 1082 /1200) ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.vishal
இந்நிலையில் இந்த மாணவர்களின் கல்லூரி படிப்பு செலவுகளை நடிகர் விஷாலின் தேவி அறக்கட்டளை ஏற்றுக் கொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்களை அழைத்து விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார் .

தமிழகத்தில் பிடிப்பட்ட ரூ.570 கோடிக்கு விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி.!

தமிழகத்தில் திருப்பூர் அருகே கடந்த 14 ம் தேதியன்று ரூ.570 கோடி பணம் கொண்டு வந்த 3 கண்டெய்னர் லாரிகளை பறக்கும் படையினர் தடுத்து பறிமுதல் செய்தனர்.
 
சிக்கிய ரூபாய் 570 கோடி குறித்து சமூக ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விவாதம் எழுந்தது.
 
அந்த பணத்திற்கு உரிமை கோரிய பாரத ஸ்டேட் வங்கி, கோவையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தது.
 
இதுபற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், உண்மையான ஆவணங்களை வைத்து ஆய்வு செய்ததில், அந்த பணம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானதுதான் என்பது உறுதி செய்யப்பட்டது.
 
தேர்தல் செலவின பார்வையாளர் எஸ்பால் சாவ்லா தலைமையிலான விசாரணைக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி இருந்து இன்று (மே 17) காலை 5.30 மணிக்கு கோவை பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.
 
திமுக தலைவர் கருணாநிதி 3 கண்டெய்னர்களில் சிக்கிய 570 கோடி ரூபாயை விடுவிக்க தமிழகத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்ததின் காரணமாகவே மத்திய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தலையிட்டுள்ளதாக பல்வேறு கேள்விகளுடன் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
 
சிக்கிய 570 கோடி பணம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்தார்.
 
பிடிபட்ட ரூபாய் 570 கோடி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடையது என்றும் அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்து இருந்த பணம் எனவும் தோல்வி பயத்தால் கொடநாட்டில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்றபோது பிடிபட்டுள்ளது என யூகிப்பதாக ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கூறி இருந்தார்.
 
வழக்குரைஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் நேற்றுமுன்தினம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் மனோகர் சப்ரே, அஷோக் பூஷன் ஆகியோர் அடங்கிய கோடைக்கால விடுமுறை அமர்வு முன்பு ஆஜராகி பொதுநல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதி வேண்டும்என்று கோரிக்கை விடுத்ததார்.
 
அதற்கு நீதிபதிகள், ‘சம்பவத்தில் தொடர்புடைய லாரிகள் தமிழ்நாட்டுக்குள் கைப்பற்றப்பட்டதால் சென்னை உச்ச நீதிமன்றத்தை முதலில் அணுகி மனு தாக்கல் செய்யுங்கள்’ என்று தெரிவித்தனர்.
 
இதற்கிடையே, திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என்றும், அதுவரை தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டபஞ்சாயத்து இயக்கம் சார்பில் டிராபிக் ராமசாமி, வழக்கு தாக்கல் செய்தார்.
 
இந்த நிலையில் அந்த வழக்கு மனு மீது இன்று விசாரணை நடைபெற்றபோது ரிசர்வ் வங்கி அளித்த விளக்கமாவது :-
 
கோவை பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு ரூ.570 கோடி பணம் எடுத்துச்செல்லப்பட்டது. இதற்கான அனுமதி ஏப்ரல் 18-ம் தேதியே ரிசர்வ் வங்கியாகிய எங்களிடம் பாரத ஸ்டேட் வங்கி பெற்றுவிட்டது.
 
ஏற்கனவே இதுபோன்ற பெருந்தொகை பரிமாற்றம் நடைபெற்றுள்ள நிலையில், தேர்தல் நேரம் என்பதால் இந்த விவகாரம் பெரிதுபடுத்தப்படுகிறது” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது .
 
மேலும் ரிசர்வ் வங்கி அளித்த அனுமதியின் பெயரிலேயே தான் ரூ.570 கோடி பணம் எடுத்துச்செல்லப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
 

ஊக்க மருந்து விவகாரம்: விசாரணையில் ஷரபோவா பதிலளிக்க முடிவு

sharapovaஊக்க மருந்து உட்கொண்ட விவகாரம் தொடர்பாக, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நடத்தும் விசாரணை குழுவினரிடம், ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா பதிலளிக்க உள்ளார்.

ரஷ்ய டென்னிஸ் விராங்கனை மரியா ஷரபோவா, ஊக்கமருந்து உட்கொண்டது நிரூபணம் ஆனதை, கடந்த மார்ச் மாதம் ஒப்புக் கொண்டார். இருப்பினும் ஊக்கமருந்து சோதனை தடுப்புக் கழகம் தடை செய்துள்ள மெல்டோனியம் என்ற பொருள், தான் உட்கொண்ட மருந்துகளில் கலந்திருந்ததாகவும், இதனால் வேண்டும் என்றே ஊக்க மருந்து உட்கொள்ளவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே, மெல்டோனியம் தடை செய்யப்பட்ட பொருளாக அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் தான் கடந்த சில ஆண்டுகளாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளில் அந்தப் பொருள் கலந்திருத்ததால், தான் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், அவரை தற்காலிகமாக தடை செய்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்ய, நாளை லண்டனில் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் சார்பில் விசாரணை நடைபெற உள்ளது. அந்த விசாரணையின் போது, மரியா ஷரபோவா நேரில் ஆஜராக விளக்கமளிப்பார் என தெரிகிறது.

மெல்டோனியம் தடை செய்யப்பட்ட பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின், ஏராளமான வீரர்கள் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. ஊக்கமருந்து உட்கொண்டது நிரூபிக்கப்படும் பட்சத்தில், சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தால், நான்கு ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இருப்பினும் முதல் தடவை உபயோகித்திருந்தாலோ, அல்லது ஊக்கமருந்து உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், தெரியாமல் உடலில் ஊக்கமருந்து சென்றிருந்ததாலோ தண்டனைக் காலம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்திய வீரர்க்களே குற்றச்சாட்டில் சிக்காதவர்கள்: ஐ நா அறிவிப்பு

அனைத்து நாடுகளின் அமைதி படையினரின் இந்த ஆண்டுக்கான குற்றப் பின்னணி குறித்த விபரத்தை ஐ.நா., அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அமைதி படையினர் மீது எந்தவொரு பாலியல் குற்றச்சாட்டும் இல்லை. கடந்த ஆண்டும் இந்திய படையினர் மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவாகவில்லை. இந்திய படையினர் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றி வருவதால் ஏதாவது நடந்தால் கூட உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளின் அமைதி படையினருக்கு எதிராக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த 2 அமைதி படை வீரர்கள் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்றொரு வீரருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அதிக நேரம் கால்பந்து விளையாடி உலக சாதனை படைக்கும் முயற்சி தொடக்கம்

120 மணி நேரம் தொடர்ந்து கால்பந்து விளையாடி புதிய கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சி சிலி நாட்டில் நடைபெற்று வருகிறது. சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோ-வில் உள்ள பழமையான கால்பந்து மைதானமானத்தில், இந்த முயற்சி நேற்று தொடங்கியது. 60 நிமிடங்களைக் கொண்டதாக ஒரு போட்டி நடத்தப்படுகிறது.
அந்நாட்டு தேசிய அணியின் கோல் கீப்பர் கிறிஸ்டோஃபர் டொஸெல்லி உள்ளிட்ட தொழில்முறை கால்பந்து வீரர்கள் மற்றும் மூவாயிரம் பேர் இந்தச் சாதனைப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். வரும் 22-ம் தேதி வரை தொடர்ந்து போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஸ்காட்லாந்தில் தொடர்ந்து 105 மணி நேரங்கள் கால்பந்து விளையாடியதே இதுவரை சாதனையாக உள்ளது குறிப்பிடதக்கது.

வரும் 22-ம் தேதி பிசிசிஐ தலைவர் தேர்தல்: தலைவராகிறார் தாகூர்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தோ்தலுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சஷாங் மனோகர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்காக அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அப்பதவிக்கு வரும் 22-ம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பீகார் கிரிக்கெட் சங்கம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பி.சி.சி.ஐ தேர்தலுக்கு தடை விதிக்க கோரியது.

கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடையதாக ஓய்வு பெற்ற நீதிபதி லோதா கமிட்டி பரிந்தரைத்தவர்கள் போட்டியிடுவதால் தேர்தலுக்கு தடை விதிக்க பீகார் கிரிக்கெட் சங்கம் வலியுறுத்தியது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இது குறித்து ஏற்கனவே விசாரணை நடத்திய நீதிபதிகள் அமர்வை அணுக உத்தரவிட்டு பி.சி.சி.ஐ தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இதனால் திட்டமிட்டப்படி வரும்  22-ம் தேதி பிசிசிஐ தலைவர் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. தற்போதைய செயலாளர் அனுராக் தாகூர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

பெட்டி பெட்டியாக பணம் பெற்ற திமுக தலைவர் கருணாநிதியை காப்பாற்றவே கொலை ! : வைகோ

திமுக தலைவர் கருணாநிதி 2 ஜி ஊழலில் பெட்டி பெட்டியாக பணம் பெற்று அறிவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
 
மேலும் 2 ஜி ஊழலிருந்து கருணாநிதியை காப்பாற்றவே சாதிக்பாட்சா கொலை செய்யப்பட்டிருப்பது, தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியுள்ளார்.
 
செய்தியாளர்களிடம் வைகோ  தெரிவித்துள்ளதாவது :-
சாகித் பால்வாவிடமிருந்து வந்த பெரும்பாலான பணம் ஸ்டாலினிடம்தான் கொடுக்கப்பட்டது. மேலும் சாதிக் பாட்ஷாவுக்கு கிடைத்த பணத்தின் பெரும் பகுதி ஸ்டாலினுக்கு தரப்பட்டது. ஸ்டாலின் குறித்து சிபிஐக்கு சாதிக் பாட்ஷா அறிக்கை கொடுத்துள்ளார்.
நீரா ராடியா- கனிமொழி தொலைபேசி உரையாடலில் சாதிக் பாட்ஷாவின் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக திருச்சியை சேர்ந்த பிரபாகரன் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மையே. 2011ல் அரியலூரில் வைத்து இதே பிரபாகரன் என்னை சந்தித்து இந்த தகவல்களை கூறினார்.
கொலையை, தற்கொலை என்று மறைத்து நாடகம் நடந்து வருகிறது. காவல்துறை உயர் அதிகாரி ஜாபர்சேட்டுக்கும் தொடர்பு இருக்கிறது.திருச்சியில் பிரபாகரன் அளித்த தகவலின் அடிப்படையில் சாதிக்பாட்சா கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
பிரபாகரன் ஏற்கனவே இந்த தகவலை சிபிஐயிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அதனை கேட்காமல், அவரை சிபிஜ அதிகாரி அருணாச்சலம் மிரட்டியதாகவும் வைகோ குற்றம் சாட்டினார். எனவே சாதிக் பாட்சா மரணம் குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை வெளியே வரும் என்றார்.திமுக தலைவர் கருணாநிதியை காப்பாற்றவே சாதிக்பாட்சா கொல்லப்பட்டதாகவும் அவர் புகார் கூறினார்.
 
இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் வைகோ செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

திருமணமான ஒரே நிமிடத்தில் மணப்பெண்ணை விவகாரத்து செய்த மணமகன்

சவுதி அரேபியாவில் திருமணமான ஒரே நிமிடத்தில் மணப்பெண்ணை, மணமகன் விவகாரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த இந்த திருமணத்தின் போது, திருமண நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தாமல் மணமகள் தனது தோழிகளுடன் போனில் எஸ்.எம்.எஸ் செய்துசெய்துள்ளார். இதை பார்த்து கோபமடைந்த மணமகன், மணமகளை விவகாரத்து செய்துள்ளார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் ஒரு மணிநேரத்திற்கும் எட்டு விவாகரத்துகள் நடைபெறுகிறது. விவாகரத்து செய்பவர்களில் 50 சதவிகிதம் பேர் புதிதாக திருமணம் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற 232 தொகுதிகளிலும் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். காலை 9 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எல்லா தொகுதிகளிலும் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இல்லாமல் அமைதியாக வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 232 தொகுதிகளில் நேற்று முன்தினம் பதிவான வாக்கு பெட்டிகள் அனைத்தும் மத்திய துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும்.  தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 68 வாக்குப்பதிவு மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு மையத்திலும் 14 டேபிள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் 24 டேபிள் போடப்பட்டிருக்கும். ஒவ்வொரு டேபிளில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும். சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை சுற்றி துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். 2வது அடுக்கில் மாநில ஆயுதப்படை போலீசாரும், 3வது கட்ட பாதுகாப்பில் சாதாரண போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

வாக்குப்பதிவு மையத்திற்குள் வரும் ஏஜென்டுகள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. மின்தடை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் ஜெனரேட்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும். வாக்கு எண்ணிக்கையில் 9629 அரசு ஊழியர்கள் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையிலும் ஒரு மைக்ரோ அப்சர்வர் என மொத்தம் 3,971 மத்திய அரசு ஊழியர்கள் இருப்பார்கள். மத்திய-மாநில அரசு ஊழியர்கள் என மொத்தம் 13,592 பேர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுகிறார்கள். வழக்கமாக தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.  ஆனால், இந்த முறை தபால் வாக்கு மற்றும் மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகள் இரண்டுமே காலை 8 மணிக்கு எண்ணப்படும்.

ஆனால், கடைசி ரவுண்டு வாக்குகள் மின்னணு எந்திரத்தில் எண்ணி முடிக்கப்படுவதற்கு முன் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார். வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், காலை 9 மணிக்கு, 232 தொகுதியிலும் முதல் ரவுண்ட் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முன்னணி நிலவரங்கள் தெரியவரும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறினர். மறுவாக்குபதிவு: தென்காசி தொகுதியில் மட்டும் 56வது  பூத்தில் 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மாதிரி வாக்கு  நடைபெற்றபோது பதிவான 52 வாக்குகள் அதில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதை  மத்திய தேர்தல் பார்வையாளர் கண்டுபிடித்தார். இதையடுத்து அந்த பூத்தில்  மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல்  ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளார். அதனால் அந்த பூத்தில் இன்று  மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வாய்ப்புள்ளது…

விளம்பரப் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் ஆப்பு !

 
விளம்பரப் படத்தில் நடிக்கும் நடிகர்களே அதன் நம்பகதன்மைக்கும் பொறுப்பேற்கும் வகையில் நுகர்வோர் சட்டம் மத்திய அரசால் திருத்தப்படுகிறது. இதன் மூலம் நுகர்வோர்கள், பிரபலங்கள் மீது ரூ. 50 லட்சம் வரை நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடரலாம்.
 
அந்த சட்டதிருத்தம் விரைவில் அமலுக்கு வரும் என்று உணவு மற்றும் நுகர்பொருள் துறையின் அமைச்சர் ராமவிலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் .
 
சட்டம் திருத்தம் குறித்து மேலும் ராமவிலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளதாவது :-
 
தற்போது அமலில் இருக்கும் 1986 ஆண்டைய நுகர்வோர் சட்டத்துக்குப் பதில் இப்புதிய சட்டம் கொண்டுவர நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்- 2016-க்கு நாடாளுமன்றம் நிலைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
 
விளம்பரப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள், தாங்கள் முன்னெடுக்கும் பொருள்களுக்கு கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும். தரமற்ற பொருள்களை ஏமாற்றி விளம்பரம் செய்தால், விளம்பரத்தில் நடிப்பவர்களிடமிருந்து ரூ. 50 லட்சம் வரை நஷ்டஈடு கோரலாம். மேலும் அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
 
புதிய சட்டத்தின்படி மாவட்ட நுகர்வோர் குறைதீர் மையங்கள் இனி ரூ. 1 கோடி வரையிலான புகார்களையும், மாநில நுகர்வோர் குறைதீர் மையங்கள் ரூ.14 கோடி வரையிலான புகார்களையும் விசாரிக்கலாம் என்று ராமவிலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்