Home Blog Page 5781

தேர்தல் முடிந்த பிறகும் மறுதேர்தல் நடத்த தயங்க மாட்டோம் ! : ராஜேஷ் லக்கானி

தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் முடிந்த பிறகும், புகார்கள் வந்தால் மறுதேர்தல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளார்..
 
சட்ட மன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், பணப் பட்டுவாடா தொடர்பாக இதுவரை 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
 
திருப்பூரில் கண்டெய்னர்களில் கைப்பற்றப்பட்ட பணம், விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் உரியவர்களிடம் அளிக்கப்படும் என்றும் ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

3 கண்டெய்னர்களில் சிக்கிய 570 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய அமைச்சர் தலையீடு : கருணாநிதி

 
 
3 கண்டெய்னர்களில் சிக்கிய 570 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தலையிட்டுள்ளதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 
கடந்த மாதத்தில் சிறுதாவூர் மெகா பங்களாவில் கன்டெய்னர்களில் பணம் இருந்தது என தமிழகத்தை சேர்ந்த பல அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் குற்றம் சாட்டினர். அது குறித்தான பல்வேறு கருத்துகளை அரசியல் கட்சியினர் கூறிய நிலையில் அனைத்து ஊடகங்களும் மெகா பங்களாவில் கன்டெய்னர்கள் இருந்ததை பட ஆதரத்துடன் செய்தி வெளியிட்டன.
 
ஆனால் அனைத்து அரசு துறை சார்ந்த அதிகாரிகளும் சோதனையிட செல்லாமலே அதுபோன்ற கன்டெய்னர் சம்பவம் எதுவும் நடக்கவில்லை தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு அறிவித்தனர் என்றும் அவர்களால் சொல்லபட்டதும் செய்தி வெளியானது .
 
அதை தொடர்ந்து நத்தம் விசுவநாதன் மற்றும் இரண்டு மூன்று அமைச்சர்களின் நெருங்கிய நண்பர் அன்புநாதன் வீட்டில் பணம் இருப்பதாக கிடைத்த தகவலால் நடந்த சோதனை பற்றிய செய்திகள் வந்தன
 
அன்பு நாதன் வீட்டிற்குசென்ற அமைச்சர்கள் யார் ? யார் ? அங்கே சட்டதிற்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்றன என்பது குறித்து அன்பு நாதன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த இருந்த பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்ட கண்காணிப்பு வீடியோ கேமராவை சோதனை செய்து பார்த்தால் எல்லாம் தெரிந்து விடும் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால் இதுவரை அது தொடர்பான எவ்விதமான தகவலையும் அரசு அதிகாரிகள் வெளியிடவில்லை. அந்த பிரச்னையில் சம்பந்தப்பட்ட அன்புநாதன் சில நாட்கள் தலைமறைவாக இருந்து விட்டு நீதி மன்றத்தின் மூலம் ஜாமீன் பெற்றுக் கொண்டு எங்கோ சென்று விட்டார்.
 
தற்போது 570 கோடி ரூபாயைக் கொண்டு சென்ற மூன்று கண்டெய்னரில் எந்த உரிய ஆவணங்களும் கொண்டு செல்லப்பட்ட பணம் திருப்பூரில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் துணை ராணுவத்தினருடன் பெருமாநல்லூர்-குன்னத்தூர் செல்லும் சாலையில் விரட்டிச் சென்று சோதனை நடத்தியதால் பிடிபட்டுள்ளது.
570 கோடி ரூபாயைக் கொண்டு சென்ற மூன்று கண்டெய்னரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்த முயன்ற போது ஏன் நிற்க வில்லை ?
 
மூன்று கண்டெய்னரில் கொண்டு செல்லக் கூடிய அளவுக்கு எந்த ஒரு வங்கியிலாவது பணம் வைத்திருக்கலாமா .?
 
ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு 570 கோடி ரூபாய் பணத்தை மூன்று கண்டெய்னரில் எடுத்துச் செல்ல காரணம் என்ன .?
 
அந்த வங்கியின் அங்கீகாரம் பெற்ற அதிகாரி எவரேனும் கன்டெய்னருடன் செல்லவில்லை ?
 
570 கோடி ரூபாய் பணத்தை எடுத்துச் செல்ல மூன்று கன்டெய்னர்கள் தேவையா .?
 
லுங்கி அணிந்த நிலையில் காவல்துறையினர் நிலையில் செல்ல காரணம் என்ன .?
 
570 கோடி ரூபாய் பணத்திற்கு இன்சூரன்ஸ் ஆவணங்கள் இல்லாமல் இருப்பதின் காரணம் .?
 
எந்த உரிய ஆவணங்களும் இல்லாமல் 570 கோடி ரூபாய் பணத்தை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்குக் பகலில் எடுத்துச் செல்லாமல் விடுமுறை நாளில் இரவில் எடுத்துச் செல்ல காரணம் என்ன .?
 
570 கோடி ரூபாய் உள்ள மூன்று கண்டெய்ருக்கும் சீல் வைக்கப்படவில்லை ?
 
அந்த வண்டியிலே இருந்தவர்கள் காட்டிய ஜெராக்ஸ் நகல்களிலும் முரண்பாடான தகவல்கள் இருப்பது என்ன .?
 
கோவை வங்கி அதிகாரிகள் திருப்பூரில் பணம் பிடிபட்டு 8 மணி நேரம் கழித்து பணத்திற்கு உரிமை கோரியது ஏன். ?
 
570 கோடி ரூபாய் பணம் பிடிபட்டுள்ள சம்பவம் குறித்து
இதுவரை தமிழகத்திலே அரசாங்கத்தின் சார்பில் ஒன்றும் பேசாமல் இருப்பது ஏன். ? என்பது போன்ற மேலும் பல்வேறான கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகிறது .
 
இந்த இந்த நிலையில் 570 கோடி ரூபாய் பணம் பிடிபட்டுள்ளதை விடுவிக்க தமிழகத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்ததின் காரணமாகவே மத்திய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தலையிட்டதால் தான், வங்கி அதிகாரிகள் பணத்திற்கு உரிமை கோர 18 மணி நேரம் கழித்து முடிவு செய்தார்கள் என்று வங்கி அதிகாரிகள் மூலம் கசிந்த தகவல் பொது மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறதே இதற்குச் சம்பந்தப்பட்டவர்கள் என்ன விளக்கம் தரப்போகிறார்கள்? இதற்குப் பிறகும் அரசினர் என்ன சொல்கிறார்கள் என்று தமிழக மக்கள் ஆவலோடும், பரபரப்போடும் எதிர்பார்க்கிறார்கள் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 
அரசாங்க ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிகாரம் படைத்த வர்கத்தினர் மக்களுக்கு எப்போதாவது உண்மையை சொன்னது உண்டா.? அவர்கள் உண்மையை சொல்லாமல் இருந்தால் நம்மால் என்ன செய்ய முடியும்.? என்கின்றனர் பொது மக்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிமுக மற்றும் திமுகவை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் ! : ராமதாஸ்

அதிமுக மற்றும் திமுக ஓட்டுக்கு பணம் தரப்பட்டதை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளதால் அந்த இரு கட்சிகளின் வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
 
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது :-
 
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் அளவுக்கு அதிகமாக பண வினியோகம் அதிகமாக இருப்பதாகக் கூறி, அத்தொகுதியின் வாக்குப்பதிவு மே 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பண வினியோகம் அதிக அளவில் நடைபெற்றதை தேர்தல் ஆணையம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது என்பதை தவிர, இந்த நடவடிக்கையால் வேறு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.
 
சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அதிமுகவும், திமுகவும் வாக்காளர்களுக்கு பணம் வாரி இறைக்கப்படவிருப்பதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், தேர்தல் ஆணையம் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இப்போது அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த சில வாரங்களில் மட்டும் ரூ.6.75 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், அதன் தாக்கத்தை தணிக்கும் வகையில் அங்கு ஒரு வாரத்திற்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதால் அரவக்குறிச்சி தொகுதியின் களநிலை எந்த வகையிலும் மாறப்போவதில்லை. மாறாக ஒரு வாரம் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் கிடைத்துள்ள கூடுதல் கால அவகாசத்தை பயன்படுத்தி அதிமுகவும், திமுகவும் இன்னும் அதிகமாக பணம் வினியோகிக்கும்.
அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளரும், திமுக வேட்பாளரும் ஓட்டுக்கு ரூ.5,000 வீதம் பணம் வினியோகித்துள்ளனர்.
 
அதுமட்டுமின்றி, ஒரு குடும்பத்தில் 5 வாக்காளர்கள் இருந்தால் அந்த குடும்பத்திற்கு ஓர் இரு சக்கர ஊர்தி வழங்கப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது. அ.தி.மு.க. சார்பிலும், திமுக சார்பிலும் ஓட்டுக்கு பணம் தரப்பட்டதை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளது.
 
ஓட்டுக்கு பணம் தருவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 123 ஆவது பிரிவின்படியும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 171(பி) பிரிவின் படியும் ஓராண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கத் தக்க குற்றம் ஆகும். எனவே, ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக, திமுக வேட்பாளர்கள் மீது இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, ஓட்டுக்கு பணம் கொடுத்த இரு வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்து விட்டு, மீதமுள்ளவர்களைக் கொண்டு தேர்தலை நடத்துவது தான் சரியானதாக இருக்கும். இது தான் எதிர்காலத்தில் ஓட்டுக்கு பணம் தருவதை தடுக்கும். ஆனால், இதை செய்ய ஆணையம் தயங்குவது ஏன்? எனத் தெரியவில்லை.
 
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை பார்த்தால், அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் தான் ஓட்டுக்கு பணம் வினியோகிக்கப்பட்டது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஆனால், தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் ரூ.500 முதல் ரூ.1000 வரை பணம் வினியோகிக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே. நகர், திமுக தலைவர் கலைஞர் போட்டியிடும் திருவாரூர், ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளிலும் ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டிருக்கிறது.
 
தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர், தேர்தல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த உண்மை தெரியும். எனவே, தமிழகத்தில் பண வினியோகம் நடைபெற்ற 234 தொகுதிகளிலும் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்க வேண்டும்.
 
பண வினியோகம் நடந்த 234 தொகுதிகளிலும் தேர்தலை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி முதல் தேர்தல் அதிகாரிகள் வரை ஆளுங்கட்சிக்கும், திமுகவுக்கும் ஆதரவாக செயல்பட்டதால் அவர்களை மாற்றி விட்டு வெளிமாநிலத்தைச் சேர்ந்த இ.ஆ.ப. அதிகாரி ஒருவரை தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்க வேண்டும். அத்துடன், தொகுதி தேர்தல் அதிகாரிகளாக வெளிமாநில அதிகாரிகளை நியமித்து, முழுக்க முழுக்க துணை ராணுவப் படைகளை பாதுகாப்புக்கு நிறுத்தி நியாயமான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

தேர்தல் அதிகாரியின் மேசை மீது பணத்தை வீசி வாக்கு வாதம் செய்த பாமக வேட்பாளர் !

பாமக வேட்பாளர் பாலு திருவாரூரில் மாற்று கட்சியினர் பணம் பட்டுவாடா செய்து வருவதாக கூறி பொது மக்களுடன் தேர்தல் அதிகாரியின் அறைக்கு சென்று தேர்தல் அதிகாரி ராஜேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அப்போது திடீரென சுமார் 30,000 ரூபாய் ரொக்க பணத்தை மேசை மீது வீசி வாக்கு வாதம் செய்தார் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருநாவலூர் ஒன்றியத்தின் சில கிராமங்களில் அதிமுக மற்றும் திமுக தரப்பில் வாக்காளர்களுக்குதலா 500 ரூபாய் வழங்கப்படுவதாக பொது மக்கள் தரப்பில் பறக்கும் படையினருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பணம் கொடுத்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் பொதுமக்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற பாமக வேட்பாளர் பாலு பணத்தை மேசை மீது வீசி வாக்கு வாதம் செய்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சினிமா பிரபலம் மூலம் நல்லது செய்யும் நடிகர்: ” மா ” விழாவில் இயக்குனர் பாண்டிராஜ்

‘ஜி மைம் ஸ்டுடியோ’ என்ற நிறுவனத்தின் மூலம், மைம் கலையை வளரும் இளைய தலைமுறையினரிடம் வெற்றிக்கரமாக கொண்டு சென்றுள்ள மைம் கோபி, சினிமாவுக்கான நடிப்பி பயிற்சியை கற்பித்து வருவதுடன், பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருபவர் .

வருடா வருடம் தனது “மைம்” கலையின் மூலமாக நடத்தும் நிகழ்ச்சி மூலம் ஆதரவற்றவர்களுக்கு பல உதவிகள் செய்து வருகிறார் . இந்த வருடம் HIV யினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நிகழ்ச்சி நடத்தப்பட்டது . சென்னை காமராஜர் அரங்கத்தில் 14 .மே மாலை 6 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் சினிமாத்துறை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர் .
நிகழ்ச்சியில் மைம் கலையில் இசைக்கருவிகளை வாசிப்பது போன்ற நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது . அம்மா வின் அருமை பற்றி மைம் கோபி குழுவினர் நடித்துக்காட்டியது பார்வையாளர்களை கண் கலங்க வைத்தது ..
விழாவுக்கு வந்திருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர் .

விழாவில் பேசிய இயக்குனர் பாண்டிராஜ் ….. மைம் கோபி நடத்தும் இந்த விழா மதிக்கத்தக்க ஒரு நிகழசசி …தனக்கு கிடைக்கும் சினிமா புகழ் மூலமாக இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி , நல்ல காரியங்களுக்காக தொடர்ந்து அவர் செய்து வரும் சேவைகளை நான் பாராட்டுகிறேன் .
சினிமாவில் பிரபலமாக இருக்கும் பலரும் இது போன்ற நல்ல காரியங்களுக்கு உதவ வேண்டும் , நானும் எனது பங்களிப்பை தொடர்ந்து கொடுத்து வருவேன் .

நான் குழந்தைகளை வைத்து படம் எடுத்து இருக்கிறேன் . இந்த மேடையில் இத்தனை குழந்தைகளை ஒரே நேரத்தில் இவ்வளவு அருமையாக நடிக்க வைப்பது பெரும் சிரமம் . கோபி அருமையான ஒரு நடிகர் மட்டுமல்ல , ஒரு நல்ல இயக்குனராக எனக்கு தெரிகிறார் . தொடர்ந்து எனது ஆதரவு எப்போதும் மைம் கோபிக்கும் இந்த குழுவினருக்கும் உண்டு என்று பேசினார் .

விழாவில் நடிகர் கிஷோர் பேசும்போது … கோபியை நான் பாராட்டுகிறேன் , பிரமாதமான ஒரு நிகழ்ச்சி ,எனக்கும் மைம் குழுவில் சேர்ந்து இது போன்று நடிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது , அடுத்த வருடம் நான் இந்த கலையை கோபியுடன் கற்றுக்கொண்டு இதே மேடையில் நடிப்பேன் என்றார் .

விழாவில் இயக்குனர்கள் சுசீந்திரன் , கரு பழனியப்பன் ,மகிழ் திருமேனி ,பாலாஜி மோகன் ,சிவா , ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியன் , நடிகர்கள் காளி வெங்கட் ,சரவணன் , பாண்டி ,முரளி ,ஆத்மா ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

பண பட்டுவாடாவைத் தடுக்க இயலாத ராஜேஷ் லக்கானி ராஜினாமா செய்ய கோரிக்கை !

 
இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக பணப்பட்டுவாடா புகாரின் பேரில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மே 23-ந் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
 
இதுதொடர்பக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டது குறித்து அதிக அளவில் புகார்கள் வந்துள்ளன.இதையடுத்து தொகுதியில் தேர்தல் மே 16 ஆம் தேதிக்குப் பதில் மே 23-ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் அந்த சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் லக்கானி மீது மிகுந்த கோபம் கொண்டுள்ளனர் .
 
அதன் வெளிப்பாடாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பல பதிவுகள் உலா வருகின்றன.
 
பேஸ்புக்கில் Anbalagan Geetha எனும் பக்கத்தில் பதிவிடப்பட்ட பதிவில் அவர் கூறியுள்ளதாவது : –
 
அரவக்குறிச்சி தேர்தல் ஒத்திவைப்பு தேர்தல் ஆணையம் செய்த தவறு ..மக்கள் கடுங்கோபம்… வாக்கு பதிவிற்க்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்த நிலையில் தேர்தல் ஒத்திவைப்பு தேவையில்லாத ஒன்று வெளிநாடு, வெளிமாநிலம் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து விடுமுறை எடுத்து வாக்களிக்க வந்த நிலையில்.பணம் பட்டுவாடா தடுக்க வக்கில்லாத தேர்தல் ஆணையம். தேர்தலை நிறுத்தியுள்ளது..மேலும் ஒரு வாரம் கழித்து தேர்தல் நடந்தால் எல்லாம் சரியாகிவிடுமா….. தள்ளிவைப்பு அரசியல்வாதிகளுக்கு சாதகம் தான்….ஆனால் மக்களை இன்னல்கலுக்கு உட்படுத்தி மகிழ்வது வேதனை அளிக்கிறது. அமைதியான் அரவவக்குறிச்சி தொகுதியை மோசமான தொகுதியாக சித்தரித்த லக்கானி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.untitled
Anbalagan Geetha வின் அந்த பதிவின் கீழ் அவரது பேஸ்புக் நண்பர்கள் பதிவிட்டுள்ள கருத்துகளாவது : –
 
பிரபாகரன் சேரவஞ்சி : Exactly ! ஓட்டு சதவிகிதம் தான் குறையும் !
 
Shareef Askar Ali : மிகத் தைரியமான அறிக்கை உங்களுடையது.மக்களை அலைக்கலைக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.இவர்கள் நோய்க்கு நாம் எப்படி கஷாயம் சாப்பிட முடியும்?
 
Esanathamr Selvaraj : தவறு செய்தவர்களுக்கு தண்டனையா அல்லது வாக்களர்களுக்கு தண்டனையா,தேர்தலை 23 ம் தேதிக்கு மாற்றுவதால் தண்டனை யாருக்கு,அப்படியானல் பணம் பறிவர்த்தனை சரியாகி விடுமா,பணம் கொடுத்தவர்கள் தேர்தல் ஆணையத்தால் ஆசீர்வதிக்கப்படுகிறார்களா,பணம் கொடுத்தற்கு என்ன பறிகாரம் செய்ய போகிறது தேர்தல் ஆணையம்,23 தேதி தேர்தல் என்றால் வாக்களர்களுக்கு மட்டும்தான் தண்டனையா, இதில் வேட்பாளர்களுக்கு இதில் பங்கு என்ன இதற்கு சாரியான தீர்வு கொடுக்க வேண்டும்,தீர்ப்ப மாத்துங் நாட்டாமை என்று சொல்லும் நிலைதான் இங்கு உள்ளது
 
Abu Thahir : 19 ந்தேதி வாக்கு எண்ணிக்கையை 25 ந்தேதியாக மாற்றியமைக்க வேண்டும்…. 233 தொகுதி வேட்பாளர்களையும் யோக்கிமானவர்களாக சித்தரித்து அரவாக்குறிச்சி தொகுதி வேட்பாளர்களையும் அத்தொகுதி மக்களையும் குற்றவாளியாக்கி அலைகலைக்க வைக்கும் தேர்தல் ஆனணயத்தின் செயல் வெட்கக்கேடானது….! பணப்பட்டுவாடவை தடுக்கத்தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க துணிவில்லாத ஆணையம்…. தேர்தல் ஒத்திவைப்பு ஜனநாயக நாட்டில் அதிகாரவர்க்கத்தின் ஆணவச்செயலாகவே தெரிகிறது…..!
 
Abu Thahir : அரவை ரிசல்ட் விமர்சனத்திலேயே பிரகாசமாக தெரிகிறது.
 
Ilango Nallamuthu : பணம் கொடுத்த அந்த இரண்டு வேட்பாளர்களையும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். கைது செய்யப்பட வேண்டும். தள்ளி வைப்பது தீர்வு ஆகாது. பணம் கொடுக்க உதவிய கட்சி ஊழியர்கள் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று பதிவிடப்பட்டுள்ளது.
 
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மே16 ஆம் தேதிக்குப் பதில் மே 23-ந் தேதி நடைபெறும் என்ற தேர்தல் ஆனணயத்தின் அறிவிப்பால்  என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது.? என்கிறது தமிழகம்.

தடையை மீறி பேஸ்புக்கில் பிரசாரம் செய்த பா. ஜ. க வேட்பாளர்.!

0

பாரதிய ஜனதா கட்சியின் திருவள்ளூர் மாவட்ட தலைவரான ஜே.லோகநாதன் அந்த கட்சியின் சார்பில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் சார்பில் ஆவடி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

01

அவர் தேர்தல் ஆணையம் விதித்துள்ள தேர்தல் பிரசார தடையை மீறி இன்று 14-05-2016 மாலை சுமார் 8.20 மணி அளவில் அவரது பேஸ்புக் பக்கத்தில் .Dear Social Media Friends.Please Vote for BJP in Avadi Constituency. ***Vote for Lotus***Jai Hind என கூறி அவர் வாக்கு கேட்டு பேசிய காணொளியை பதிவிட்டுள்ளதாக அவர் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது. பா. ஜ. க வேட்பாளர் ஜே.லோகநாதன் தடையை மீறி பிரசாரம் செய்தை உறுதி படுத்தும் வகையில் அவரது பேஸ்புக் பக்கத்தினை ஸ்ரின் ஸாட் எடுத்து வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவ விட்டுள்ளனர்.

02

 

பேஸ்புக், வாட்ஸ்ஆப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 14-05-2016ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் மணிக்கு மேல் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் கருத்துக் கணிப்புக்களை வெளியிட்டாலோ அல்லது பகிர்ந்தாலோ கடும் தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் விதித்துள்ள தேர்தல் பிரசார தடையை மீறி பா.ஜ. க வேட்பாளர் ஜே.லோகநாதன் பேஸ்புக் பக்கத்தில் பிரசாரம் செய்தமைக்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது .

 

 

தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் யாரையும் பழிவாங்க மாட்டேன்: கருணாநிதி

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா பயப்பட வேண்டியதில்லை. அவரை நான் பழிவாங்குவேனோ என்று அவர் பயப்பட வேண்டாம். அண்ணா அவர்கள் பழிவாங்குவது என்னவென்று எனக்கு கற்பிக்கவே இல்லை. பழிவாங்குவது என்னவென்பதை அறிஞர் அண்ணா எனக்கு கற்றுக் கொடுக்காததால், நான் பழிவாங்கமாட்டேன் என்றார்

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கோலி, டிவில்லியர்ஸ் அதிரடியில் பெங்களூர் அணி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – குஜராத் லயன்ஸ் அணிகள் இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் 114 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்ற

Royal Challengers Bangalore captain Virat Kohli celebrates reaching his century during match 44 of the Vivo IPL (Indian Premier League) 2016 between the Royal Challengers Bangalore and the Gujarat Lions held at The M. Chinnaswamy Stadium in Bangalore, India, on the 14th May 2016 Photo by Shaun Roy / IPL/ SPORTZPICS

து. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ராயல்
சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 248 ரன்கள் எடுத்தது. கோலி, டிவில்லியர்ஸ் இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். 249 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் லயன்ஸ் அணி 104 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்து.

மு.க.அழகிரி மீண்டும் நீக்கம்: திமுக., அறிவிப்பு?

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று மு.க அழகிரி அவரது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதால் மீண்டும் திமுக- வில் இருந்து அழகிரி நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக திமுக அறிவிப்பை விரைவில் வெளியிட கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மு.க ஸ்டாலினுக்கும் மு.க அழகிரிக்கும் இடையே ஏற்பட்ட பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக மு.க ஸ்டாலின் கொடுத்த குடைச்சலால் திமுக- வில் இருந்து ஏற்கனவே மு.க அழகிரி திமுக- வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

அதனால் கோபம் அடைந்த மு.கஅழகிரி கடந்த சில வருடங்களுக்கு முன் நாடாளுமன்ற தேர்தலின் போது கூட திமுக- விற்கு எதிராக பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டார். இந்த நிலையில் மு.கஅழகிரி – மு.க ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள விரோத போக்கு முடிவுக்கு வராதநிலையில் சட்டமன்றத் தேர்தல் அறிவித்ததும் மு.க அழகிரியை மீண்டும் கட்சிக்குள் சேர்த்ததாக திமுக அறிவித்தது.

அதற்கு அழகிரியின் துாதுவராக அவரது சகோதரி செல்வி நின்று எடுத்த முழு முயற்சியே. இருந்த போதிலும் மீண்டும் மு.க அழகிரியை கட்சிக்குள் இணைக்கும் பேச்சு வார்த்தை நீண்டுக்கொண்டே வந்தபோது மு.க அழகிரியும் வெகு நாட்களுக்கு பிறகு கடந்த மாதத்தில் மு.கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

அழகிரி – கருணாநிதிசந்திப்பு குறித்து மு.க ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அப்பாவும் மகனும் சந்தித்து கொண்டார்கள் இதில் அரசியல் எதுவும் இல்லை’ என்று செய்தியாளர்களிடம் கருத்துச்சொன்னார்.

மு.க அழகிரி அந்த சந்திப்பின்போது திமுக- வில்மீண்டும் இணைந்து செயல்பட பல நிபந்தனைகளை கருணாநிதியிடம் அழகிரி முன்வைத்ததாக கூறப்படுகிறது .

அதன் பின்னர் மு.க அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்வார் என்று செய்திகள் வலம் வந்த நிலையில் திமுக தனது சட்டமன்ற வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ஆனால் அந்த பட்டியலில் மு.க அழகிரி யின் ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்பு அளிக்கப்படும் என மு.க அழகிரி உட்டபட அனைவரிடமும் இருந்தது.

ஆனாலும் அதில் மு.க ஸ்டாலின் ஆட்களுக்கே பெருமளவு தேர்தலில் போட்டியிட வாய்பு அளிக்கப்பட்டது. அதனால் வெறுப்பு அ டைந்த
மு.க அழகிரி கடந்த சில நாட்களுக்கு முன் ‘மதுரையில் திமுக தோற்கும்’ என்று கொந்தளித்து கொதிப்பை வெளிப்படுத்தினார்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலின்போது மு.க அழகிரி ஊடகங்கள் வாயிலாக வாயை வாய் திறந்து திமுக- விற்கு எதிராக செயல் பட்டு விடுவார் என்றே அனைவரிடமும் கருத்து இருந்தது. அதன் காரணமாக தான் மு.க அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார் என பரவலாக சொல்லப் பட்டது .

இந்த நிலையில் மதுரையில் இன்று காலை தனது ஆதரவாளர்களை சந்தித்த மு.க.அழகிரி,’ நீங்கள் எல்லோரும் மறவாமல் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போது ஒரு பெண் எப்பவும் தி.மு.க.வுக்குத்தானே ஓட்டு போடச் சொல்லுவீங்க’ என்று கேட்டார். அதற்கு மு.க.அழகிரி நான் சொல்றத செய்யுங்கம்மாஎன்று அழுத்தமாக கூறிவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.

அழகிரியின் ஆதரவாளர்கள் கலைந்து போகாமல் அப்படியே நின்றிருந்தநிலையில் வீட்டிற்குள் போன அழகிரி மீண்டும் வெளியே வந்து அவரின் ஆதரவாளர்களிடம் வரும் 19 ம் தேதிக்குப் பிறகு இந்தக்கூட்டம் கூட இங்கு வரமாட்டீங்க” என்று கண் கலங்கி தெரிவித்தார். அதைக் கேட்ட அழகிரியின் ஆதரவாளர்கள்,” நாங்க எங்கேயும் போக மாட்டோம். எப்பொழுதும் உங்களுடன்தான் இருப்போம் என்றனர்.

அதற்கு அழகிரி “பார்க்கலாம். பார்க்கலாம். அனைவரும் அதிமுகவிற்கு ஓட்டுப்போடுங்கள்” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்

அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட மு.க அழகிரி அவரின் ஆதரவாளர்களிடம் தெரிவித்தமைக்காக மு.க. அழகிரி திமுக கட்சியில் இருந்து நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக மீண்டும் திமுக.அறிவிப்பை விரைவில் வெளியிட கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.