வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, புயலாக மாறியதால், தமிழகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ய கூடும், இப்புயல் அடுத்த 24 மணி நேரத்தில் காரைக்கால், நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடியில் நேற்றுமுன்தினம் இரவு முதல் சூறாவளி காற்றுடன் மழை பெய்துவருகிறது. தொலைதுார புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், ராமேஸ்வரம், பாம்பன் கடற்கரைகளில் நிறுத்தியுள்ள படகுகளை பாதுகாக்குமாறும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ.570 கோடி பறிமுதல் குறித்து பொதுநல வழக்கு போட சென்னை உயர் நீதிமன்றம் போங்க ! : உச்ச நீதிமன்றம் அறிவுரை
தமிழகத்தில் 73.76 சதவீத வாக்குகள் பதிவு
தமிழகத்தில் 73.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக ராஜேஷ் லக்கானி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
கொண்டு போயிட்டாங்க.! பிடிபட்ட ரூ.570 கோடி பணத்தை கொண்டு போயிட்டாங்க.!
நாகை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப் பெற்றுள்ளதால் நாகை துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாக்கியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப் பெற்றுள்ளதாகவும் இதனால் கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நூற்று கணக்கான பைபர் மற்றும் நாட்டு படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிடிபட்ட ரூபாய் 570 கோடிக்கு விளக்கம் அளித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி !
கருணாநிதிக்கு தேர்தல் ஆணையம் தடா !
நெல்லை எம்.பி.பிரபாகரன் வாக்களித்தார்
திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட தனது சொந்த ஊரான கீழப்பாவூரில் உள்ள இந்து நாடார் உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்

