Home Blog Page 5838

நாங்க பெட்ரோல் வாங்கிக் கொடுத்து நீங்க தீ குளிச்சிட்டா? : மதுரை மாநகர போலீஸ்

 
இரு சக்கர மோட்டார் வாகனத்தில் கைக்குழந்தைகளுடன் சென்ற இரண்டு இளம் பெண்களிடம் மதுரை மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர் “நாங்க பெட்ரோல் வாங்கிக் கொடுத்து நீங்க தீ குளிச்சிட்டா? நாங்க என்ன செய்ய?” எனும் கேள்வியை எழுப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
 
 
இந்திய குடியரசு தினத்தையொட்டி நேற்று 26-01-2106 அன்று மதுரையில் பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.மேலும் காவல் ஆணையாளர் சைலேஷ் குமார் யாதவ் உத்தரவின்பேரில் மதுரை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8.15 மணியளவில் ஒபுலா படித்துறை பகுதியிலுள்ள காவல் சோதனை சாவடியில் எட்டுக்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் இருந்தனர். அவர்கள் அனைவரும் எவ்விதமான சோதனைப் பணிகளிலும் ஈடுபடாமல் அங்கு இருந்த இருக்கைகளில் அமர்ந்து சொந்தக் கதைகளை பேசிக்கொண்டு அரட்டை அடித்தவாறு இருந்ததாக கூறப்படுகிறது.
 
அப்போது அந்த வழியாக இரண்டு இளம் பெண்கள் நகைகள் நிறைய அணிந்து கொண்டு கைக்குழந்தைகளுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு விட்டு ஒரு இரண்டு சக்கர மோட்டார் வாகனத்தில் ஒன்றாக சேர்ந்து வீட்டிற்கு செல்ல திரும்பிக் கொண்டு இருந்தினராம். எதிர்பாராதவிதமாக அவர்களுடைய வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து செய்வதறியாமல் விழி பிதுங்கி நடு ரோட்டில் தவித்துள்ளனராம்.
 
 
அப்போது சோதனை சாவடியில் அரட்டை அடித்துக் கொண்டு இருந்த ஒரு காவலர் அந்த இளம் பெண்களிடம் “எதற்காக நடு வழியில் இங்கு நின்று கொண்டு உள்ளீர்கள்? என வினா எழுப்பியுள்ளார். அதற்கு அந்த இளம் பெண்கள் வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்த விபரத்தையும், அவர்களது வீடு நெடும் தொலைவில் உள்ளதால் அவர்களுக்கு உதவி செய்ய எவரும் இல்லை எனக் கூறினார்களாம்.
 
அதைக் கேட்ட மற்றொரு காவலர் எழுந்து வந்து வினா எழுப்பிய காவலரைப் பார்த்து “வாங்க நீங்க பாட்டுக்கு சொல்லிகிட்டு இருந்த கதையை நடுவிலேயே நிறுத்திவிட்டு ஏன் அந்த பெண்களிடம் பேசிகிட்டே இருக்கீங்க? நாங்க எல்லோரும் காத்துகிட்டு இருக்கோம். அந்த கதை ரொம்ப சீரியஸா இருக்கு. வந்து கதையை தொடர்ந்து சொல்லுங்க” என்று கூறினாராம்.
 
மேலும் கதையை சொல்லச் சொன்ன காவலர் அந்த இரண்டு இளம் பெண்களை பார்த்து, “உங்களுக்கு நாங்க பெட்ரோல் வாங்கிக் கொடுத்து அதை வாங்கி நீங்க உடனே இங்கு தீ குளிச்சிட்டா? பழி எங்க மேல விழுந்திடும்” என்று கூறிவிட்டு கதை சொன்ன காவலரை அழைத்துக் கொண்டு சென்று விட்டாராம்.
 
பணிநேரத்தில் அரட்டை அடித்துக் கொண்டு இருந்த காவலர்களிடம் எந்த விதமான உதவியும் செய்ய அந்த இரண்டு இளம்பெண்களும் வேண்டுகோள் வைக்காத நிலையில் அவர்களை பார்த்து அநாகரீகமான முறையில் மனது புண்படும்படியான “தீ குளிச்சிட்டா?” என்ற கேள்வியை காவல் துறையில் பணியாற்றுபவர் எப்படி கேட்கலாம் என அவர்கள் இருவரும் புலம்பிக் கொண்டே இருந்தார்களாம்.
 
மேலும் இளம் பெண்கள் அணிந்திருந்த நகைளை எவரேனும் வழிப்பறி செய்து கொண்டு சென்றால் கூட அரட்டை அடித்து கொண்டு இருந்த காவலர்கள் அவர்களை பிடிப்பார்களோ! எனும் பயத்துடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த நடு ரோட்டில் காத்து இருந்தனராம். நீண்ட நேரத்திற்குப்பின் ஒரு பெண்ணின் கணவரின் நண்பர் பெட்ரோல் பாட்டில் வாங்கி வந்து அவர்களுக்கு உதவி செய்த பின் அவர்கள் அந்த இடத்தில் இருந்து கிளம்பி சென்றனராம்.
 
காவல் துறை பொதுமக்களின் நண்பன் என்று தொடர்ந்து கூறிக் கொண்டு எந்த உதவியாக இருந்தாலும் பொதுமக்கள் எப்போதும் எங்களை அழைக்கலாம் என்பதை மார்தட்டிக் கொண்டு தம்பட்டம் அடித்து கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு ஏற்ப காவல் துறையில் மனிதாபிமான அடிப்படையில் சில நேர்மையான அதிகாரிகள் பொது மக்களுக்கு உதவி செய்து பணியாற்றிக் கொண்டுதான் வருகிறார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.
 
காவல் துறையில் காக்கி உடை அணிந்து காட்டுதர்பார் செய்து கொண்டு சுயநல நோக்கத்தில் தன்னிச்சையாக பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அராஜகமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு பெரும்பாலானோர் பணியாற்றி வருவது தொடர்கதையாகத்தான் உள்ளது எனும் என்ணம் அனைவர் மத்தியிலும் உள்ளது.
 
காவல் துறையில் பணிநேரத்தில் அரட்டை அடித்துக் கொண்டு மனிதாபிமான அடிப்படையில்கூட பொதுமக்களுக்கு உதவி செய்ய முன் வராமல் மனதும் புண்படும்படியாக பேசுவோர் இருந்தால் அவர்களால் காவல் துறைக்கு நற்பெயரா கிடைக்கும் ?

ஊடகத்தினரை கடுமையாக திட்டிய மத்திய அமைச்சர் !

 
மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங்.பத்திரிகையாளர்களை அநாகரீகமான முறையில் Prestitutes எனும் மிக கடுமையான வார்த்தையை பயன்படுத்தி மோசமாக விமர்சித்து என ட்வீட் செய்துள்ளார்.மற்றொரு பதிவில், நண்பர்களே இதற்கு தகுந்த பதிலடி கொடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த விஜய் பால் தோமர் என்பவர் அமித் ஷாவின் காலில் விழுந்து ஆசி பெற்றாராம்.
 
அப்போது எடுக்கப்பட்ட விடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங்தான் அமித் ஷா காலில் விழுந்து வணங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக வி.கே.சிங் பயன்படுத்தியுள்ள prestitutes என்ற வார்த்தை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள வி.கே.சிங், ஒருசார்பாக செயல்படும் பத்திரிக்கையாளர்களால் இத்தகைய குழப்பம் ஏற்படுத்தப்படுகிறது என்றும் அதில் கூறியுள்ளார்
ராணுவ தலைமைத் தளபதியாக இருந்தபோது, பொய்யான சான்றிதழ்கள் கொடுத்து உண்மையான வயதை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் மன்மோகன் சிங் அரசுடன் மோதி, உச்ச நீதிமன்றத்தில் குட்டுப்பட்டவர் விகே சிங். என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா காலில் விழுந்து வழங்குவது போன்ற ஒரு காணொளி வெளியாகியுள்ளதை வி.கே.சிங் வன்மையாக மறுத்துள்ளார்.

நான் வரல! அரசியலுக்கு நான் வரல! என்னை அரசியலுக்கு கூப்பிடாதீங்க! : சகாயம் ஐ.ஏ.எஸ்

 
சமூக ஊடகங்களில் இளைஞர்கள் தமிழகத்தை சேர்ந்த, ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன், அவருக்கு ஆதரவான பிரசாரங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில், இளைஞர்கள் பேரணி, மாநாடு, பேன்றவகைளை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், சகாயம் மவுனம் கலைத்து இளைஞர்களுக்கு காணொளி ‘வாயிலாக வேண்டுகோள் விடுத்த காணொளியை அரசியலுக்கு அழைத்த அமைப்பின் முகனூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
காணொளி வாயிலாக சகாயம் விடுத்துள்ள வேண்டுகோளாவது :-
 
அனைவருக்கும் என் வணக்கம்..
 
“கடந்த 2 மாதங்களாக சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதனை ஒட்டி ஆதரவு திரட்டும் வகையில் பேரணி நடத்துகிறார்கள், கூட்டங்களை எல்லாம் ஏற்பாடு செய்கிறார்கள் என்று ஊடகங்கள் வாயிலாக அறிய வருகிறேன்.
 
இளைஞர்களுடைய இந்த வேட்கை, ஆதரவு திரட்டக்கூடிய இந்த முயற்சி அவர்கள் என் மீது அளப்பறிய நம்பிக்கையை கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல. அவர்கள் தமிழ்நாட்டை, தமிழ் சமூகத்தை உலமாற நேசிக்கிறார்கள் என்பதற்கு இது சான்றாக அமைகின்றன என்று தான் நான் கருதுகிறேன். எனவே, இந்த முயற்சிகளை மேற்கொள்ள கூடிய இந்த இளைஞர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது எல்லாம், நீங்கள் விரும்பக்கூடிய இந்த அரசியலில் நேர்மை, தூய்மை, அரசு நிர்வாகங்களில் ஊழலற்ற தன்மை இவைகளை உருவாக்க வேண்டும் என்கின்ற எண்ணம் உயர்வானதுதான்.
 
ஆனால், நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், இந்த அரசியல் என்பது சமூகத்தின் உடைய ஓர் அம்சமாக, ஓர் அங்கமாக பார்க்க வேண்டும். இன்றைக்கு அரசியலிலே நேர்மை இல்லை, தூய்மை இல்லை என்று சொல்லக்கூடிய நாம் சமூகத்தின் உடைய பிற தலங்களிலே நேர்மையின்மை, உண்மையின்மை புறையோடி போயிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே, அரசியலில் நேர்மையை கொண்டு வர வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள் தொடங்க வேண்டிய இடம் சமூகத்தில் இருந்துதான் என்று நான் கருதுகிறேன்.
 
சமூகத்தில் நாம் ஒரு நேர்மை விழிப்புணர்வை உருவாக்கி, ஒரு தூய நேர்மையான சமூகத்தை கொண்டு வருவோமானால் நேர்மையான அரசியலை கொண்டு வந்துவிட முடியும் என்று நான் நம்புகிறேன்.எனவே, அன்புக்குரிய இளைஞர்களே.. இந்த தேர்தல் அரசியலைத் தாண்டி சமூகத்தை நோக்கி சொல்ல வேண்டும் என்று எண்ணுகிறேன்.
 
இன்றைக்கு நான் வேண்டுவது நீங்கள் உங்களுடைய அந்த அளப்பரிய ஆற்றலை சக்தியை அறிவை நம்முடைய சமூக மேம்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்று நான் கருதுகிறேன். இன்னும் சொல்லப்போனால் உங்களை நான் சமூக பணிகளிலே ஈடுபடுத்த ஆசைப்படுகிறேன். தமிழகத்தின் பசுமை பரப்பை அதிகரிக்க, லட்சகணக்கான மரங்களை நட்டு பராமரிக்கலாம், பாதுகாக்கலாம். இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கக்கூடிய விவசாயிகளுக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய ஏரி, குளங்களை நாம் பாதுகாத்திடலாம், வழிப்படுத்தலாம். நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நதிகள் அவை போற்றப்படக்கூடிய பாதுகாக்கப்பட வேண்டிய செல்வங்கள். அவைகளை நாம் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளிலே ஈடுபடலாம்.
 
இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை நாம் தடுக்க முடியும். அதைப்பற்றிய விழிப்புணர்வை நாம் சமூகத்திலே ஏற்படுத்திடலாம். இன்றைக்கு விவசாயத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கக்கூடிய விவசாய பெருமக்கள் வாழ்வில் வறுமையும், வெறுமையும் நிரம்பி இருக்கிறது. அவர்களுக்கு படித்த நாம், படித்த அளப்பறிய ஆற்றல் கொண்டிருக்க கூடிய நாம் அவர்களுக்கு உதவ எத்தனிக்கலாம். நெசவாளர்களுடைய நிலை பரிதாபகரமாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட கிராம கை விளைஞர்களுக்கு எல்லாம் நாம் கரம் நீட்டலாம். கருணை காட்டலாம். அதே போல மாற்றுத் திறனாளிகளுக்கு, திருநங்கைகளுக்கு அவர்களுடைய மேம்பாட்டிற்கு நம்மால் ஆனதை செய்ய முடியும்.
 
அதே போல பேரிடர், இயற்கை சீற்றங்கள் இவைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் உதவ முன்வரலாம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் நம்முடைய ஊரக பகுதிகளிலே இருக்கக்கூடிய அரசுப் பள்ளிகள், தமிழ் வழியிலே படிக்க கூடிய மாணவ செல்வங்கள், பள்ளிக் குழந்தைகளுடைய ஆங்கில ஆற்றலை விஞ்ஞான ஆற்றலை மேம்படுத்த படித்த நாம் அவர்களுக்கு உதவிடலாம், வழிகாட்டலாம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
 
எனவே, ஆக்கபூர்வமான சட்டத்திற்கு உட்பட்ட இத்தகைய சமூக பணிகளிலே நீங்கள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். எனவே தேர்தலைத் தாண்டிய, தேர்தல் அரசியலைத் தாண்டிய இத்தகைய ஆக்கப்பூர்வமான சமூக பணிகளை நீங்கள் செய்கிற பொழுது இந்த சமூகம் ஒரு மேம்பட்ட சமூகமாக மாறும். ஏன் இந்த 2016 சட்டமன்ற தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு கண்ணியமான தேர்தலை நடத்த நேர்மையான தேர்தலை நடத்த எத்தனிக்கிறது. எனவே அத்தகைய தேர்தலில் நம்முடைய ஆயிரக்கணக்கான் இளைஞர்கள், நம்முடைய வாக்காளர் பெருமக்கள் நேர்மையோடு வாக்களிக்க எந்த அரசியல் கட்சியினரிடமும் லஞ்சம் வாங்காமல் வாக்களிக்க நாம் ஒரு பெரிய பரப்புரையை விழிப்புணர்வை நாம் ஏற்படுத்திவிட முடியும்.
 
ஏன் லஞ்ச ஊழல் நடவடிக்கைகளில் கூட உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். ஏனென்றால் லஞ்சத்திற்கு எதிரான நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அந்த விழிப்புணர்வை இந்த சமூகத்தில் உங்களால் கொண்டுவர முடியும். இப்படி நீங்கள் இந்த சமூகத்தை நோக்கி பாடுபடுகின்ற பொழுது, விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற பொழுது இந்த தமிழ் சமூகம் ஒரு மேம்பட்ட சமூகமாக மாறும். மேம்பட்ட ஒரு நேர்மையான சமூகம், ஒரு நேர்மையான அரசியலை கொண்டு வர முடியும்.
 
எனவே, அன்பிற்குரிய இளைஞர்களே உங்களை நான் அன்போடு கேட்டுக் கொள்வது இத்தகைய ஆக்கப்பூர்வமான சமூகப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் மாநில அளவிலோ, மாவட்ட அளவிலோ செயல்படலாம். உங்களுடைய இந்த ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு துணையாக நான் இருப்பேன். நானே உங்களோடு இத்தகைய பணிகள் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். நாம் எல்லோரும் சேர்ந்து இந்த சமூகப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.. நன்றி. என்று அந்த காணொளியில் சகாயம் கூறியுள்ளார் .
 

ஊருக்கு உபதேசம் செய்யும் மருத்துவர் ராமதாஸ் முதலில் திருந்துவாரா? தமிழக பொதுமக்கள்!

 
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மற்றவர்கள்மீது ஏதேனும் ஒரு குற்றச்சாட்டைக் கூறியே மிரட்டல் அரசியல் செய்து காலத்தைக் கடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள் ராமதாஸின் மகன் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த போது அவர் சுயநல நோக்கத்தில் தன்னிச்சையாக பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது . மேலும் அவரது கட்சியினர் சிலர் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு சிலர் தண்டனையும் பெற்றுள்ளனர்.
 
பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கெனவே சாதி அரசியல் கட்சி எனும் பெயர் எடுத்துள்ள நிலையில் குடும்ப அரசியல் கட்சி எனும் பெயரையும் எடுக்க ஆயத்தமாகியுள்ளதா எனும் கேள்வியையும் தமிழகம் எழுப்புகிறது.
 
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அந்த கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் தேர்தல் தொடர்பான பணிகளையும் அக்கட்சி முடுக்கி விட்டுள்ளது.
 
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அந்த கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியாவையும் களமிறக்க பாமக முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் விரும்பும் சென்னை என்ற பெயரில் சென்னை மக்களை நேரடியாக சந்தித்துள்ளார் அன்புமணி. கடந்த 3 நாட்களில் 23 இடங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை அவர் சந்தித்து பேசியுள்ளார்.
அதேபோல், தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளரான அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா, தனது நாத்தனார் கவிதாவுடன் தொகுதி முழுவதும் சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தனது கணவர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களை சொல்லி ஓட்டு கேட்கிறார். குறிப்பாக, பொது இடங்களில் புகை பிடிக்க தடை, 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பொதுமக்களிடம் கூறி தொடர்ந்து ஆதரவு திரட்டி வருகிறார்.
 
அரசின் திட்டங்கள், சட்டங்கள் பற்றியெல் லாம் விமர்சித்துப் பேசுகின்ற மெத்தப் படித்தவர்களும் வசதி படைத்தவர்களும் தேர்தல் நாளன்று வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என்ற கருத்து பரவலாகவே இருந்துவருகிறது. ஆனால், வசதி படைத்தவர்களாக இருந்தாலும், அரசியல்வாதிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றால், தவறாமல் வாக்களித்து விடுகின்றனர். அத்துடன், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போட்டிக் களத்தில் இருந்தால், அவர்களின் வெற்றிக்காக அந்தக் குடும்பத்துப் பெண்கள் தெருவில் இறங்கி பிரச்சாரம் செய்வதையும் பார்க்க முடிகிறது.
 
கனிமொழி, பிரேமலதா போன்றவர்கள் நட்சத்திரப் பேச்சாளர்களாக தமிழகம் முழுவதும் வலம் வந்து பிரச்சாரத்தில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களைப்போல இல்லாவிட்டாலும், சில முக்கிய அரசியல் குடும்பத்துப் பெண்கள் தேர்தலில் போட்டியிடும் தங்கள் கணவரின் வெற்றிக்காக குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் தெருத் தெருவாக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இந்த பெரிய குடும்பத்துப் பெண்களின் தெருப் பிரச்சாரம், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் வெற்றிக்கு உதவுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏற்கனவே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் அவர்களது கட்சி சாதி அரசியல் கட்சி இல்லையெனக் கூறி வருகின்றனர். நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளைத் திரட்ட என்னதான் அவ்வாறு தொடர்ந்து மாறி மாறி கூறி வந்தாலும் அந்த முயற்சி பலன் அளிக்கப் போவதில்லை என்றுதான் பரவலாகக் கூறப்படுகின்றது.
 
திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் பலர் அந்த கட்சியில் முக்கியப் பதவிகளை வகிப்பதால் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் அந்த கட்சி குடும்ப அரசியல் செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.திமுக தலைவர் கருணாநிதியைப் போன்று தற்போது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவரது குடும்பத்தினரை கட்சியின் முக்கியப் பதவிகளை அடைய தொடர் முயற்சி மேற்கொண்டுதான் உள்ளார்.
 
மேலும் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ராமதாஸின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதாக மருத்துவர் ராமதாஸ் அறிவித்ததை ரத்து செய்து அந்த கட்சியின் அடிமட்ட உறுப்பினரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் தைரியமும், தெம்பும் அவருக்கு உள்ளதா எனும் கேள்வியை பாமக கட்சியைச் சேர்ந்தவர்களே சிலரும், தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலானோரும் எழுப்புகின்றனர்.
 
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மற்றவர்கள்மீது ஏதேனும் ஒரு குற்றச்சாட்டைக் கூறியே மிரட்டல் அரசியல் செய்து காலத்தைக் கடத்தி வருவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
 
முதலில் அவரும் அவரது கட்சியினரும் செய்யும் தவறுளை எண்ணிப் பார்த்து திருத்திக் கொண்டு ஊருக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
 
ஊருக்கு உபதேசம் செய்யும் முன் மருத்துவர் ராமதாஸ் முதலில் திருந்துவாரா என்ன? என்கிறது தமிழகம்.

தெறி டீசர் பணி தொடங்கியது: ஜி.வி.பிரகாஷ்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தெறி படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. படத்திற்கான பின்னணி இசைச் சேர்ப்பு வேலைகளும், டப்பிங் வேலைகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.

இப்படத்தின் டீசர் பொங்கலுக்கு வரும், குடியரசு தினத்திற்கு வெளியாகும் என்று இணையத்தில் தொடர்ந்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியது. ஆனால் அந்நாளில் ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்ததே மிஞ்சம்.இந்நிலையில் இப்படத்தின் டீசர் உருவாக்கும் பணிகள் தற்போதுதான் தொடங்கியுள்ளதாம்.

தெறி படம் தன்னுடைய 50வது படம் என்பதால் இப்படத்தின் இசைக்கு தனிகவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெறி படத்தின் டீசர் பற்றிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, தெறி டீசர் பணிகள் தொடங்கியது. விரைவில் டீசர் வெளியாகும். கொண்டாட்டம் ஆரம்பம்… என்று தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

பிள்ளைகளுக்கு ஊக்கமூட்டி துணிச்சலை ஏற்படுத்துவதே பெற்றோரின் இன்றைய சவால்!

 
விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று கல்லூரி மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தின் மீதான எதிர்ப்பைக் காட்ட கடிதம் எழுதி வைத்துவிட்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
 
நடைபெற்ற சம்பவம் தொடர்பாக கல்லூரியைக் குற்றம் சொல்ல நிறையவே முகாந்திரம் இருந்தாலும் பிரச்னைகளை எதிர்த்துப் போராட முடியாத ஒரு சமுதாயத்தை மெல்ல உருவாக்கி வருகிறோம் என்பதுதான் அதிக அச்சத்தை ஏற்படுத்துகிறது.
 
சில கல்லூரி விடுதியில் மாணவர்கள் தங்கி படிக்கும் போது ஏதேனும் தேவையியில்லாத ஒரு பிரச்னையை காரணமாக கூறி அந்த கல்லூரி நிர்வாகியால் மாணவர்களை விரட்டிய விடுதியை விட்டு வெளியேற்றிய பல சில சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும் தொடர்ந்து நடந்து நடைபெற்று கொண்டே தான் உள்ளது.
 
கல்லூரியில் இருந்து மாணவரை தற்காலிக நீக்கம் செய்து பெற்றோரை அழைத்து வரும்படி சொல்லி கடிதமும் அனுப்பியும் உள்ளனர். அந்த நிலையில் ஒரு சில மாணவர்கள் நிலத்தை விற்று, அல்லது பல இடங்களில் கடன் வாங்கி கட்டணம் கட்டிப் படிக்க வைத்துக் கொண்டிருந்த பெற்றோரிடம் தயங்கித் தயங்கி விரட்டிய விஷயத்தை கூறியும்
உள்ளனர்.
 
அதை கேட்ட ஒரு சில பெற்றோர்கள் “அடப் போனா மயிராச்சு.. கையுங்காலும் இருக்குதுல்ல, பைண்டிங் செய்வது, காஜா எடுப்பது, பட்டன் வைப்பது, மளிகைக் கடையில் பொட்டலம் கட்டுவது, டைப் ரைட்டிங் என்று பொழச்சுக்கலாம் போடா… என்றும் கூறி அவரது பிள்ளைகளை ஊக்கப் படுத்தி அவர்களை அனுப்பி தயார் படுத்தி பலரை உருவாக்கியும் இருந்தனர்.
 
சில பெற்றோர்கள் ஊக்கப் படுத்தின் அடிப்படையில் அவரது பிள்ளைகள் கல்லூரிப் பிரச்னையை எதிர்கொள்வதில் எந்த வித தயக்கமும் கட்டியது இல்லை. அவர்களும் பல்வேறான வேலைகளை பார்த்து இந்த சமூகத்தில் உயந்த நிலையை பலரும் அடைந்து தான் உள்ளனர்.
 
பொதுவாக பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே சென்றால் சாதி, மதம், மொழி, காதல், மதிப்பெண், கல்லூரி நிர்வாகம், வேலை, கடன் என்று தொடர்ந்து போராட்டங்களை சந்தித்தவாறுதான் இருக்கப்போகிறார்கள். அதற்கு அவர்களைத் தயார்படுத்தி அனுப்புவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.
 
போச்சு.. படிக்கலைன்னா வாழ்க்கையே போச்சு, என்று அவர்களின் காதுமடல்களில் அமர்ந்து ஓதிக் கொண்டே இருக்கும் பெற்றோருக்கும் இந்தப் பிள்ளைகளின் மரணத்தில் பங்குண்டு.
 
பன்னிரண்டாம் வகுப்பு முடிப்பதற்குள் அவர்களால் சுயமாக வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். தெரிந்தவர்கள் கடைகளிலோ நிறுவனங்களிலோ வேலைக்கு அனுப்பலாம். அது ஒரு சாதாரண வேலையாக இருப்பது அவசியம். இதுவும் படிப்புதான்.
 
பெற்றோர்கள் அவரது பிள்ளைகளை ஊக்கப் படுத்தி போராடுவதற்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் . அப்படி ஏதாவது சிக்கலில் மாட்டி பிள்ளைகள் பெற்றோரிடம் வந்தால் “போனா மயிராச்சு, கையும் காலும் நல்லா இருக்குதுல்ல..” என்று சொல்லும் துணிச்சலை முதலில் பெற்றோர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இன்றைய தேவை. .
 
ஷான் –
செய்தியாளர்,(வாசகர்)
தினசரி இணைய தமிழ்ச் செய்தித் தளம்
 

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரராகவன் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு !

இந்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் மிக சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகளை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து அவர்களை கெளரவபடுத்தும் விதத்தில் உயரிய விருதுகளில் ஒன்றான குடியரசு தலைவர் விருது பலருக்கு 
வழங்கபட்டு வருகிறது.
 
இந்த ஆண்டு நடைபெறும் இந்திய குடியரசு தினத்தையொட்டி 
தமிழக காவல் துறையில் மிக சிறப்பாக பணியாற்றி வரும் பலர் குடியரசு தலைவர் விருதுக்கு  தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
வேலூர்  மாவட்டத்தில்  பிறந்து வளர்ந்த வீரராகவன் அவர்கள் யோகா,   கராத்தே, பாடி பில்டிங், ஆகியவற்றில் அதிக நாட்டம் கொண்டு சிறந்த பயிற்சி பெற்றவர்.கராத்தே, பாடி பில்டிங், ஆகியவற்றில் மிக சிறந்து விளங்கியமைக்காக 1984ம் அவர் மிஸ்டர் தமிழ்நாடு எனும் பட்டதை பெற்றவர்.  
 
காவல்துறைக்கு வரும் முன்பே கடந்த (1981 ம் ஆண்டு) மறைந்த முன்னால் தமிழக  முதலமைச்சர் எம். ஜி.ஆர். ஆட்சி காலத்தில் தமிழக காவல் துறையில் பணியாற்றிய பெண் காவலர்களுக்கு கராத்தே, யோகா உள்ளிட்ட பயிற்சிகளை அளித்த பெருமை இவரையே சாரும்.
 
1987ம்  வருடம் தமிழக  காவல் துறையில் வேலூர்  மாவட்டத்தில்  நேரடியாக உதவி ஆய்வாளராக பயிற்சி பெற்று  கோவையில் உதவி ஆய்வாளராக சேர்ந்து  சென்னை, திருவண்ணாமலை,வேலூர்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  சிறப்பாக பணியாற்றி பதவி உயர்வு பெற்று வந்தார். கடந்த 2007ம்  வருடம் தமிழக காவல் துறையில் மிக சிறப்பாக பணியாற்றியமைக்காக அவருக்கு முதலமைச்சர் விருதும் வழங்கப் பட்டது.
 
வீரராகவன் அவர்கள் தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும்  நிலையில் கடந்த ஆண்டு (2015) சிறப்பாக பணியாற்றியமைக்காக சிறந்த மெச்சத்தகுந்த ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.

ஏமாந்த இலவு காத்த கிளிகளை மீண்டும் ஏமாற்ற திட்டம் போடும் அரசியல் கட்சிகள் !

ஆட்சி கட்டிலில் அமர தேர்தல் நடைபெறும் காலங்களில் மீண்டும் மீண்டும் ஏமாந்து கொண்டே இருக்கும் இலவு காத்த கிளிகளை எப்படியெல்லாம் ஏமாற்றலாம்.என்ன திட்டம் போட்டால் இலவு காத்த கிளிகள் மீண்டும் ஏமறுவதற்குத் தயாராகும் என்பது அரசியல் கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும்!

ஆட்சிக்கு வந்தால் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்ய மூத்த குடிமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் இப்போது அமர்ந்திருக்கும் அஇஅதிமுகவின் 2011ஆ்ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இந்த வாக்குறுதி இடம் பெற்றிருந்தது.

மூத்த குடிகளுக்கு வாயெல்லாம் பல். இலவசத்தில் ஊறிப்போனதின் – ஊசிப்போனதின் விளைவு. அக் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதும் கட்சியினரைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி இவர்களுக்கே. அளித்த வாக்குறுதிகளில் சில ஒன்றன் பின் ஒன்றாக நடைமுறைக்கு வந்தபோது தங்களுக்கான அறிவிப்பு அடுத்து வந்து விடும் என்று இலவு காத்த கிளி போல் காத்திருந்த இலவச எதிர்பார்ப்பாளர்கள் நம்பினர்.

ஆனால் ‘குடி’மக்கள் மீது காட்டிய அக்கறையை மூத்த குடியினர் மீது அரசு காட்டாததைக் கண்டு வெம்பினர். வாக்களித்தவர்கள் வைத்தனர்; வசை பாடினர்.

சட்டப் பேரவைக் கூட்டத்தில் ஆளும், எதிர்க் கட்சியினர் யாரும் இது குறித்து வாயைத் திறக்கவில்லை. பொதுவுடமை பேசும் புண்ணியவான்கள் கூட மவுனிகளாக வலம் வந்தனர். எந்தக் கூட்டணியில் இடம் பெறுவது, எத்தனை இடங்கள் பெறுவது? ஒருத்தர் கழுத்தறுத்தால் அடுத்து யாரிடம் ஓடுவது என்ற சிந்தனையில் மூழ்கி விட்டனர் போலும்!

 

நாணயமில்லாமல் கடன் சுமையினால் அரசு அல்லாடுவதாகக் கூச்சலிடும் எதிர்க்கட்சியினர், மூத்தோர் விஷயத்தில் அரசு நாணயம் இல்லாமல் நடந்து கொண்டதை கண்டு கொள்ளாததைக் காணும் போது, மூத்தோரை அவமதிப்பதில் கட்சி பேதம் ஏதுமில்லை என்பது வெட்டவெளிச்சமானது.

 

நா நயமாகப் பேசுவோருக்கு நாணயம் முக்கியமே தவிர நாணயமல்ல என்பதை மூத்தோர்கள் உணர்ந்து கொண்டனரா என்பதும் கேள்விக்குறியே! ஏமாந்த இலவு காத்த கிளிகளும், மீண்டும் ஏமறுவதற்குத் தயாராகவே இருக்கும் என்பது அவற்றுக்கும் தெரியும்!

வரும் தேர்தலையொட்டி இன்னும் எத்தனை விதமாக மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து வாக்காளர்களையும் அரசியல் கட்சிகள் முட்டாளாக்கப் போகின்றன என்பதைக் காண சில மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்.

– ராமச்சந்திரன் முத்துசாமி –
  மூத்த பத்திரிக்கையாளர்

பாலம் அமைக்க கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி.அடிக்கல் நாட்டினார்

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மேலச்சேவல் பகுதியிலிருந்து கீழச்செவல் செல்லும் சாலையில் பாளையங்கால்வாயின் குறுக்கே ரூ.20 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணிக்கு திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர்  கே.ஆர்.பி.பிரபாகரன்  அடிக்கல் நாட்டினார் உடன்  திருநெல்வேலி புறநகர்  மாவட்ட செயலாளர் ஆர்.முருகையாபாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள்

பிப்ரவரி 12ல் வெளியாகும் டெட் பூல்!

20th century பாக்ஸ் நிறுவனத்தார் தரமான ஆங்கிலப் படங்களை இந்தியாவில் விநியோகம் செய்து வருகின்றனர். சூப்பர் ஹீரோஸ் படங்களுக்கு என்றும் இருக்கும் மவுசை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு படங்கள் இவர்களது விநியோகத்தில் வெளி வந்து உள்ளது. வருகின்ற 12 ஆம் தேதி வெளி வர இருக்கும் ‘டெட் பூல்’ சூப்பர் ஹீரோக்களின் சாகசத்தையும் தாண்டிய ஒரு படமாகும்.

கூலி படைக்கு தலைமை தாங்கும் வெட் வில்சன் தன்னுடைய சின்ன வயதில் பல்வேறு சோதனகளுக்கு உட்பட்டவர். தன்னால் கொலை செய்ய படுவதற்கும் ஒரு தகுதி வேண்டும்ம் என்று நினைப்பவர் இவர். சர்வதேச அளவில் ஒருப் பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கும் டெட் பூல் தனக்கு புற்று நோய் வந்து இருப்பது அறிந்ததும், தான் ஆற்ற வேண்டிய காரியங்களை விரைவில் சாதிக்க நினைக்கிறார்.

அந்த நேரத்தில் நடக்கும் ஒரு தாக்குதலில் அவர் தவறுதலாக தன்னுடைய சகாவைக் கொன்று விடுகிறார். அதன் தொடர்ச்சியாக மருத்துவ மணியிலும் அனுமதிக்கபடுகிறார். அங்கு நடக்கும் அட்டூழியங்களும் அநியாயங்களும் அவரை கோபப்படுத்துகிறது. அங்கு இருக்கும் ஒரு மூத்த மருத்துவ சிம்பந்தி அடுத்தாக மரணம் அடைய போகும் நோயாளி யார் என்பதை பந்தயம் கட்டி, அவர்களை கொல்லவும் செய்வதை கண்டு கொதிக்கிறார். அவர் அந்தக் கொடிய சூழ் நிலையிலம் இருந்து எப்படி தப்பிக்கிறார், அவருடைய சக நோயாளிகள் எப்படி தப்பினர் என்பதே; டெட் பூல்.