Home Blog Page 6018

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

வாஷிங்டன்:

வீட்டோ அதிகாரம் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலை விரிவுப்படுத்த விவாதிக்கக் கோரும் வரைவுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந் நிலையில், இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. வாஷிங்டனில், இந்திய – அமெரிக்க அதிகாரிகளிடையே முதன்முறையாக நடைபெற்ற வர்த்தக ரீதியிலான பேச்சுவார்த்தையின் முடிவில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அந்தக் கூட்டறிக்கையில், பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் நீண்டகால முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டதாம்.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை நிர்வகிக்கும் பணியில், தொடர்ந்து இருநாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல், ஆசிய-பசிபிக் மண்டலம் உட்பட உலகம் முழுவதும் அமைதி, ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவற்றை கடைபிடிப்பதில் இருநாடுகளும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாகவும் கூட்டறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பாவூர்சத்திரம் அருகே ஆட்டோ டிராக்டர் மோதல்

பாவூர்சத்திரம் அருகே ஆட்டோ மீது டிராக்டர் மோதல்: 2 பேர் பலத்த காயம்
 பாவூர்சத்திரம் அருகே நேற்றிரவு  ஆட்டோ மீது டிராக்டர் மோதியல் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
  பாவூர்சத்திரம் அருகேயுள்ள சிவகாமிபுரத்தைச் சேர்ந்தவர் வீ.ஜெயராஜ்(47). ஆட்டோ ஓட்டுனரான இவர் புதன்கிழமை இரவு சிவகாமிபுரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பாவூர்சத்திரத்திற்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.
  திருநெல்வேலி – தென்காசி சாலையில் கீழப்பாவூர் விலக்கு அருகே வரும்போது எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்ய 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.
  அப்போது அந்த வழியாக வந்த திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன் மற்றும் அவரோடு வந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு  உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்பு போக்குவரத்து நெரிசலை காவல் துறையோடு இணைந்து எம்.பி.பிரபாகரன் மற்றும் குழுவினர் இணைத்து ஒழுங்குபடுத்தினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியதும் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தும் எம்.பி என்பதும் சற்று நேரம் கழித்துதான் பொதுமக்களுக்கு தெரியவந்தது
விபத்துக்கான முக்கிய காரணம் ஆட்டோவின் வேகம் ,மற்றொன்று டிராக்டரில் இண்டிகேட்டர்  வசதி இல்லாதது இதை சரி செய்ய வேண்டும் மேலும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல் துறையினர் மிதமான வேகத்தில் செல்லவும் அதிக அளவில் பயணிகளை ஏற்றுவதையும் கண்காணிக்க வேண்டும்
  விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியை கொடுமைப்படுத்தியதாக புகார்: சோம்நாத்பாரதி சரண் அடைய உத்தரவு

ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சோம்நாத் பாரதி. அரவிந்த் கெஜ்ரிவால் முதல் முறையாக டெல்லி முதல்–மந்திரியாக பதவி ஏற்றபோது இவர் சட்ட மந்திரியாக பதவி வகித்தார்.

ஆம்ஆத்மி ஆட்சி கவிழ்ந்து மீண்டும் கெஜ்ரிவால் முதல்–மந்திரியான பின்பு சோம்நாத் பாரதி மந்திரி சபையில் இடம்பெறவில்லை. தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

இவருக்கு எதிராக மனைவி லிபிகா மித்ரா சமீபத்தில் போலீசிலும், பெண்கள் ஆணையத்திலும் குடும்ப வன்முறை புகார் அளித்தார். தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாகவும் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் கூறியிருந்தார்.

அதன் பேரில் சோம்நாத் பாரதி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினார்கள். இதையடுத்து போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க விசாரணை கோர்ட்டில் சோம்நாத் பாரதி முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு தள்ளுபடியானதால் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவும் நேற்று முன்தினம் தள்ளுபடியானது. எனவே எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்பாரா? அல்லது சரண் அடைவாரா? என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே சோம்நாத் பாரதியை சரண் அடையுமாறு முதல்–மந்திரி கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ‘‘சோம்நாத் சரண் அடைய வேண்டும், ஏன் அவர் தலைமறைவாக ஓட வேண்டும், ஜெயிலுக்கு போக ஏன் பயப்பட வேண்டும், இதனால் கட்சிக்கு கெட்ட பெயர், அவர் போலீசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

 

விஜயகாந்த் கூட்டத்தில் தீக்குளித்த தொண்டர் மரணம்

மதுரை:

விஜயகாந்த் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் தீக்குளித்த தேமுதிக தொண்டர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தார்.
 
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் பணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்பொது பொதுக்கூட்டம் முடியும் தருவாயில், திண்டுக்கல் 8வது வார்டு கிளைச் செயலாளர் கஜேந்திரபிரபு அந்தக் கூட்டத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
மதுரை மருத்துவமனையில் விஜயகாந்த் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். அப்பொது கஜேந்திர பிரபு, மாவட்ட செயலாளர் ரவிக்குமார் பற்றி பல புகார்களை தெரிவித்தார். தன்னிச்சையாக செயல்படுகிறார். தன்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். அவர் பதவி விலக வேண்டும் என்பதற்காகவே தான் தீக்குளித்ததாகவும், அவர் அந்தப் பதவியில் இருந்தால் கட்சியில் முன்னேற்றம் ஏற்படாது என்றும் விஜயகாந்திடம் தெரிவித்துள்ளார்.
 
இது பற்றி விசாரணை செய்த விஜயகாந்த், அந்த மாவட்ட பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசனை செய்து, புதன் கிழமை அன்று திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ரவிக்குமாரை பதவியில் இருந்து நீக்கினார்.
 
இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல், மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரபிரபு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர்.

டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை: சி.பி.ஐ. விசாரணையுடன் வழிகாட்டுதல் குழுவும் அமைக்க தமிழிசை அறிக்கை

நாமக்கல் மாவட்ட ‘டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணையுடன் வழிகாட்டுதல் குழுவும் அமைக்க வேண்டும்’’, என்று தமிழக அரசுக்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விஷ்ணுபிரியாவின் உயிரிழப்பு பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டுக் கொண்டிருக்கிறது. அவரின் உயிரிழப்பு முழுமையாக விசாரிக்கப்பட்டு அவர் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது முக்கியம். அதே நேரத்தில் ஒவ்வொரு உயிரிழப்புகளுக்கும் சி.பி.சி.ஐ.டி. போதுமா சி.பி.ஐ. வேண்டுமா? என்று விவாத பொருளாகி சில நாட்கள் உரக்க பேசப்பட்டு அடுத்த சம்பவம் நடைபெறும் வரை மறக்கப்பட்டு, மறுபடியும் விவாதப் பொருளாக மாற்றப்படும் என்ற நிலையிலேயே ஒவ்வொரு சம்பவமும் சென்று கொண்டிருக்கிறது என்பது வேதனையளிக்கிறது.

குறிப்பாக பெண் அதிகாரிகள் பலவித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். பணியின் காரணமாக வெளிப்படை தன்மையோடு விவாதிக்க இயலாத நிலையில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். பொது கலவரங்களில் கூட தங்களின் தன்மான உணர்வுகள் இடற்படுத்தப்பட்டு அவமானத்திற்கு உள்ளாகிறார்கள். அதனால் அவர்களின் பிரச்சனைகளை உண்மையாக உள்வாங்கி வழிகாட்டும் ஒரு குழு அமைக்கப்படுவது நலம் என கருதுகிறேன்.

ஒய்வு பெற்ற பெண் நீதிபதி, உயர் பெண் காவல்துறை அதிகாரி, பெண்கள் நல மருத்துவர், மனநல மருத்துவர், இவர்களை போன்றவர்களை இணைத்து ஒரு குழு அமைத்து வழிகாட்டினால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு வரும் என்றும், தொல்லைகள் எல்லை மீறி போகாது எனவும், மன அழுத்தத்திற்கு வடிகால் கிடைக்கும் என்பதும், அதன் மூலம் அவர்கள் பணியாற்ற வழிகாட்டுதல் கிடைக்கும் என்பதும் எனது கருத்தாக இருக்கிறது.

தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி விசாரணை போதுமென்று அறிவித்துள்ளது. ஆனால் அதிலும் கட்டுப்பாடுகள் அதிகம் என்பதும் முழுமையான விசாரணை முடிவடையாத வழக்குகள் பல உள்ளன என்பது யாவரும் அறிந்ததே. ஏதோ சி.பி.ஐ. வேண்டாம் என்று சொல்வதன் மூலம் உண்மைகள் மறைக்கப்படுகின்றனவா? என்ற நிலை உருவாவதும் சரியல்லை.

சி.பி.ஐ. விசாரணை அறிவிப்பதோடு, ஒரு வழிகாட்டுதல் குழுவை அமைத்து அரசாங்கம் நடைமுறை படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனை வலியுறுத்தி பா.ஜ.க. மாநில இளைஞரணி சார்பில் திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் 26-ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெறும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

அதிமுக.,வின் 2011ம் ஆண்டு தேர்தல் அறிக்கை

2011 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கான அதிமுகவின் சிறப்பு தேர்தல் அறிக்கை இது.
2016 ஆம் ஆண்டு தேர்தலுக்கு அறிக்கை தயாரிக்கும் போது, இதை ஒரு முறை நினைவூட்டிக் கொள்ளலாம்…
==========
தமிழகத்தை ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைக்கவும், தமிழர்களின் மொழி, இன கலாச்சார உணர்வுகளை மீட்டெடுத்து, எதற்கும் கை ஏந்தும் ஏழ்மை நிலையை மாற்றி, தன்மான மிக்க தமிழினத்தை மீண்டும் உருவாக்கும் சுய மரியாதையை மீட்டெடுத்து, எதிர்கால தமிழ் இளைஞர்கள், இளம் பெண்கள் தலை நிமிர்ந்து சொந்தக் காலில் நிற்க, ஏற்ற வழியை உருவாக்கவும்; கல்வி, மருத்துவம், விவசாயம், நதிநீர், அடிப்படை கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து – இழந்த பெருமையை மீட்டெடுத்து, தமிழகத்தை தலை நிமிரச் செய்வது தான் அதிமுகத்தின் லட்சியம். வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பை உருவாக்கி, தனி நபர் வருமானத்தை 2 மடங்குக்கு மேல் உயர்த்துவோம். ஒவ்வொரு தமிழனும் எதற்கும் ஏங்கும் நிலையை மாற்றி, சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்யப்பட்டு, “நாடென்ன செய்தது நமக்கு?” என்ற நிலை மாறி, “நான் நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று சொல்லும் நிலைக்கு மக்களையும், இளைஞர்களையும் தயார்படுத்தி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிமுறைகள் வகுக்கப்படும்.
தமிழகத்தின் ஒட்டு மொத்த ஒருங்கிணைந்த நீடித்த தன்னிறைவு பெற்ற வளர்ச்சிக்கு அதிமுக அரசின் சிறப்புத் திட்டங்கள் பின்வருமாறு:-
1. இரண்டாம் விவசாய புரட்சித் திட்டம் :
தமிழகத்தில் இரண்டாம் விவசாய புரட்சித் திட்டம் மக்கள் இயக்கமாக அறிவிக்கப்படும். விவசாய உற்பத்தியை இரண்டு மடங்காகப் பெருக்கி, மதிப்பு கூட்டப்பட்ட விவசாய பொருட்களின் உற்பத்தியால் 9 சதவீத விவசாய வளர்ச்சியை அடைவோம். தற்போதைய 8.6 மில்லியன் டன் அரிசி உற்பத்தியை 13.45 மில்லியன் டன்னாக உயர்த்துவோம்.
விவசாயியின் தனிநபர் வருமானத்தை 2 முதல் 3 மடங்குக்கு மேல் உயர்த்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
30,000 ஹெக்டேர் நிலப்பரப்பை சிறப்பு சிறுபாசன திட்டத்தில் கொண்டு வருவோம்.
அதிமுக அரசால் பிப்ரவரி 2006ல் மத்திய அரசின் கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு உதவும் வகையில் வழங்க இருந்த விவசாய கருவிகளை, அதனை அடுத்து வந்த திமுக அரசு கொடுக்க மறுத்ததால், அத்தொழிலாளர்களுக்கு உதவுகிற வகையில் மீண்டும் விவசாய கருவிகளை அதிமுக அரசு இலவசமாக வழங்கும்.
தரமான விதைகள், விவசாய இடுபொருள்கள் ஆகியவை தள்ளுபடி விலையில் விவசாயிகளுக்கு கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தாமதமின்றி இழப்பீடு கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். வன விலங்குகள் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மதிப்பு கூட்டப்பட்ட விவசாயத்தை தொழிலாக அறிவிக்கப்பட்டு – உணவு பதப்படுத்தும் சிறப்பு மையங்கள் (குடிடின யீசடிஉநளளiபே யீயசமள) உருவாக்கப்பட்டு, விவசாயிகள் விவசாய நிறுவனங்களில் பங்குதாரர்கள் ஆக்கப்படுவார்கள்.
அனைத்து மாவட்டங்களிலும் தேவைக்கேற்ற குளிர் பதன கிடங்குகள் ஏற்படுத்தப்படும். விவசாய விளை பொருள்கள் சேகரிப்பு நிலையங்களை நவீனப்படுத்துவோம்.
குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி பயனாளிகள் அனைவருக்கும்
20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.
விலைவாசியை குறைக்க சிறப்புத் திட்டம் :
விலைவாசி உயர்வினால் இன்றைக்கு அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டிய மத்திய மாநில அரசுகளின் செயலற்ற தன்மையால் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். விவசாய உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் பயனில்லாமல், இடையில் உள்ள இடைத்தரகர்களும், பதுக்கல்காரர்களும்,
மொத்த விற்பனையாளர்கள், வரன்முறையாளர்களினால் திட்டமிட்டு ஏற்றப்படும் விலைவாசியின் ஏற்றம் தடுக்கப்பட்டு, அதைத் தடுக்க அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். விலைவாசி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும்.
விவசாய உற்பத்தி மற்றும் லாபத்தை கணக்கிட்டு அதன் அடிப்படையில் குறைந்த ஆதரவு விலை அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும், கரும்பின் விலையை நிர்ணயிப்பதைப் போல விலை நிர்ணயம் செய்யப்படும். கடைகளில் வாங்கி உண்ணும் உணவு பொருட்களுக்கு இடைத்தரகர்கள் நீக்கப்பட்டு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட்டு உபயோகிப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும் பயன் தரக்கூடிய நடவடிக்கை எடுக்கப்படும்.
2. கரும்பு உற்பத்தி புரட்சித் திட்டம் :
கரும்பு உற்பத்தி 475.5 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 1000 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்படும். நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் ஹெக்டேரில் கரும்பு பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உற்பத்தி இரண்டு மடங்காகப் பெருக்கப்படும்.
“எத்தனால்” எரிபொருள் உற்பத்தியை பெருக்குகிற வகையில், கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு 2,500/- ரூபாயாக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனப்படுத்தப்பட்டு, நிர்வாகம் சீரமைக்கப்படும்.
கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக அரசு மற்றும் தனியார் அரசு ஆலைகள் கொள்முதல் விலையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆலை அதிபர்கள் பணப் பட்டுவாடாவை நிலுவையில் வைக்க அனுமதிக்கப்பட மாட்டாது.
பல்வேறு சிறப்பு கொள்கைகளின் மூலம் சர்க்கரை ஏற்றுமதி ஊக்குவிக்கப்பட்டு வரன்முறைப் படுத்தப்படும்.
புதிய எத்தனால் (நுவாயnடிட) தயாரிப்புக் கொள்கை வகுக்கப்படும். அதன் வாகனப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
நலிந்த கரும்பு ஆலைகள் புதுப்பிக்கப்பட்டு, சர்க்கரை மற்றும் எத்தனால் எரிபொருள் தயாரிப்பு விரிவாக்கப்படும்.
3. நுண்ணிய வேளாண்மை புரட்சித் திட்டம் :
நுண்ணிய வேளாண்மை திட்டத்தை செம்மைப்படுத்தி, அதன் மூலம் விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட விவசாய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, சொட்டு நீர்ப் பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.
ஆண்டிற்கு 7 லட்சம் டன் பருப்பு உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பருப்பு கொள்முதல் கொள்கையை உருவாக்கி, தர வேறுபாடு இல்லாமல் துவரம் பருப்பு கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய்க்குக் குறையாமல் கொள்முதல் செய்யப்படும். உற்பத்தித் தள்ளுபடியாக 300 கிலோ பருப்புக்கு உற்பத்தி செலவு ஊக்கத் தொகையாக 500 ரூபாய் வழங்கப்படும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் பருப்பு, மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து நுகர்வோருக்கும் வேறுபாடு இல்லாமல் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
4. சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் திட்டம் :
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடி தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்.
இதன் மூலம் 5.6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு புதிதாக உருவாக்கப்படும்.
புதிதாக 1 லட்சம் பேருக்கு போக்குவரத்துத் துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் 20,000 தொழிற்சாலைகள் உருவாக வாய்ப்பு ஏற்படும்.
5. அனைவருக்கும் தரமான மருத்துவம் :
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மற்றும் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
கிராமங்கள் தோறும் நடமாடும் மருத்துவமனை கிராமத்திற்கே வரும் உன்னத திட்டம் செயல்படுத்தப்படும்.
1500 கிராமங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தொலை தூர மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும்.
6. நவீன பசுமை வீடு கட்டமைப்பு :
கருணாநிதியின் வீட்டு வசதித் திட்டம் நடைமுறை சாத்தியம் இல்லாத வகையில் இருப்பதாலும் மற்றும் மக்களுக்கு மேலும் நிதிச் சுமையை ஏற்றக் கூடிய ஏமாற்று வேலை என்பதாலும், அதிமுக அரசு நவீன பசுமை வீட்டு வசதித் திட்டத்தை அறிமுகப்படுத்தும்.
நவீன பசுமை வீட்டு வசதித் திட்டம் – அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள, சூரிய சக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை (ழுசுநுநுசூ ழடீருளுநுளு) வீடுகள் கட்டித் தரப்படும்.
வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் 1,80,000/- ரூபாய் செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு இத்திட்டம் 1 லட்சம் ரூபாய் மானியத்துடன் விரிவாக்கம் செய்யப்படும்.
வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்ட 3 சென்டில் இடம் அளிக்கப்படும்.
கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வாங்கப்பட்ட வீட்டுக் கடன் மற்றும் வட்டிகளால் அல்லலுறும் கடனாளிகளின் பிரச்சனைகள் களையப்படும்.
7. இருண்ட தமிழகம் ஒளி பெற தடையில்லா மின்சாரம் :
இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும். மின்சார வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, மின் விநியோகம் சீராக்கப்பட்டு, மின் திருட்டு தடுக்கப்படும். வீடு, தொழில் மற்றும் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகம் ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் இதற்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயம், குடும்பம், தொழில்களுக்கான மின்சார விநியோகம் தனியாக பிரிக்கப்பட்டு, அதை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விநியோக முறையில் மாற்றம் செய்து சீரமைப்போம். கம்ப்யூட்டர் முறையில் மின்சார மீட்டர் அளவு கணக்கிடப்படும். மேலும் அரசு துறைகளிலும், தனியார் துறைகளிலும் மின்சாரம் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டு மின்சாரம் சேமிக்கப்படும்.
அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சார இணைப்பு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
மின்சார திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சார பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.
2013ஆம் ஆண்டுக்குள் 5000 ஆறு மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம்:
2012ஆம் ஆண்டுக்குள், அதாவது இரண்டு வருடங்களுக்குள் 151 நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், நகராட்சிக் கழிவைக் கொண்டு 1000 ஆறு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் தமிழக நகரங்கள் தூய கார்பன் நியூட்ரல் நகரங்களாக மாற்றப்பட வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
2013ஆம் ஆண்டுக்குள் பத்து 300 ஆறு உருவாக்கப்பட்டு 3000 ஆறு மின்சாரம் அதன் மூலம் தயாரிக்கப்படும்.
காற்றாலை மின்சாரம் 30 சதவீதமாகவும் மற்றும் அணுசக்தி மின்சாரம் 25 சதவீதமாகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இயற்கை எரிவாயு மின்சாரம்:
தெரிந்தெடுக்கப்பட்ட 160 கிராமப் பஞ்சாயத்துக்களில் 200 கிலோ வாட் உயிரிதிரள் (க்ஷiடி ழுயள) இயற்கை எரிபொருள் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கிராமப் புறங்களில் 64000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
வீடுகள் மற்றும் தெருக்களுக்கு சூரிய ஒளி இலவச மின்சாரம்:
வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும்.
கிராமப்புற தெரு விளக்குகள் சூரிய ஒளி மின்சாரத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட சிறப்புத் திட்டங்கள் மூலம் தமிழ் நாட்டை பன்முக சமூக, பொருளாதார வளம் பெற்ற மாநிலமாக மாற்றி, 1,20,000/- கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை 5 வருடங்களில் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்வோம். சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாத, அமைதியான, பாதுகாப்பான, ஒட்டு மொத்த வளர்ச்சி அடைந்த சமத்துவ தமிழகத்தை அமைப்போம். இந்தப் பிரத்தியேக திட்டங்களின் மூலம்
தமிழ் நாட்டை ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைகுனிவில் இருந்து மீட்டு, ஒவ்வொரு தமிழரும் தலை நிமிர்ந்து நிற்கவும், தன்மானத்துடன் வாழவும், தமிழ் நாடு ஒருங்கிணைந்த தன்னிறைவு கொண்ட, தொடர்ச்சியான நீடித்த வளர்ச்சி பெற்ற மாநிலமாக்க வழிவகை செய்யப்படும். அதற்கான தொடர் ஊக்க முயற்சிகளுக்கு பெரிதும் உதவுகிற வகையில் பல புதிய திட்டங்கள் தீட்டப்படும்.
8. சிறப்பு உணவுப் பூங்கா :
குளிர்பதன கிடங்குகள் மற்றும் தொழிற்பூங்கா: விவசாய உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் பூங்காக்கள், குளிர்பதன கிடங்குகள், தொழிற் பூங்காக்கள் மாவட்டத்தில் அமைக்கப்படும்.
9. நவீன மக்கள் சந்தைகள் மற்றும் குளிர்பதன கிடங்குகள்:
குறைந்த விலையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் அனைத்து விவசாய விளை பொருட்களும் மக்களுக்கு விரைந்து கிடைக்கின்ற வகையில் நவீன மக்கள் சந்தைகள் மற்றும் பொருட்களை பதப்படுத்தப்பட வேண்டிய குளிர்சாதன வசதிகள் செய்து தரப்படும்.
10. பருத்தி உற்பத்தியை இரண்டு மடங்காக்க நடவடிக்கை:
தற்போது ஏறக்குறைய பாதியாக குறைந்துவிட்ட பருத்தி உற்பத்தியை மற்றும் விளைச்சலை இரண்டு மடங்காக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு, ஏற்றுமதிக்கு ஊக்கம் அளிக்கப்படும். பருத்தி விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை 2 மடங்காக உயர்த்த சிறப்புத் திட்டங்கள் தீட்டப்படும்.
11. ஆடை அலங்கார பொருட்களுக்கான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் :
விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட 6 ஆடை அலங்கார சிறப்பு பொருளாதார மண்டலங்கள் துவக்கப்படும். இதன் மூலம் தமிழ் நாட்டில் 70 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
சணல் உற்பத்தி நவீனப்படுத்தப்பட்டு, தென்னை மட்டையின் பல்வேறு பயன்பாடுகளை கருத்தில் கொண்டு புதிய தொழில்கள் தொடங்க ஊக்குவிக்கப்பட்டு, அதை ஏற்றுமதிக்குரிய வகையில் மதிப்பு கூட்டி ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
12. கைத்தறித் துறை மறுசீரமைப்பு:
நலிவடைந்த கைத்தறித் துறையை சீர்படுத்தி, கைத்தறி கூட்டுறவு சங்கங்களை மீண்டும் சீரமைத்து; நெசவாளர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்து; கிராமங்களில், புதிய டிசைனில் ஆடைகள், உடைகள், வீட்டு அலங்காரப் பொருள்கள் ஏற்றுமதிப் பொருட்களாக உருவாக சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
10 ஆடை அலங்கார பூங்காக்கள் உருவாக்கப்படும்.
கைத்தறிப் பொருள்கள் ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில், கைத்தறி ஏற்றுமதி கார்ப்பரேஷன், அரசு மற்றும் தனியார் பங்கேற்பு முறையில் (ஞஞஞ) உருவாக்கப்படும்.
13. மீண்டும் ஒரு வெண்மைப் புரட்சிக்கு தமிழகம் தயார் :
மீண்டும் ஒரு வெண்மை புரட்சியை உருவாக்க திட்டம் தீட்டப்படும். 2016ஆம் ஆண்டுக்குள் 6000 கிராமங்களில் சீரமைக்கப்பட்ட பால் பண்ணைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பால் உற்பத்தியை தினமும் 2.5 மில்லியன் லிட்டரில் இருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அதை ஊக்குவிக்கும் வகையில் 6000 கிராமங்களில் சுமார் 60,000 பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்க வழிவகைகள் செய்யப்படும்.
2015க்குள் 100 பெரிய பால் பண்ணைகள், பால் பதப்படுத்தும் நிலையங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கும்
சிறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு இதன் மூலம் கிராமப் புறங்களில் சுய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
14. ஏழை மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உடனடி நடவடிக்கை:
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். கால்நடை வளத்தைப் பெருக்கும் வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
15. நகர்ப்புற வசதிகள் கிராமப்புறங்களுக்குக் கிடைக்க திட்டம்:
நகர்ப்புற வசதிகள், கிராமப்புறத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
30லிருந்து 40 கிராமங்கள் வரை இணைக்கப்பட்டு, அவற்றிற்குத் தேவையான அடிப்படை சாலை மற்றும் கட்டமைப்புகள், தொலைத் தொடர்பு இணைப்புகள், அறிவுசார் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாக கிராமப்புற பொருளாதார மேம்பாடு அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நகரத்திற்கும், கிராமத்திற்கும் உள்ள இடைவெளி குறைக்கப்படும்.
சமூக பொருளாதார வேறுபாடற்ற சமதர்ம சமுதாயம் அமைக்கப்படும்.
16. பள்ளிக் கல்வி சீரமைப்பு:
மாணவர்களின் புத்தகச் சுமை குறைக்கப்படும்.
தரமான, இலவச கல்வி அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
பள்ளிக் கல்வியின் நடைமுறை குறைபாடுகள் சீரமைக்கப்படும். அறிவார்ந்த குழு அமைக்கப்பட்டு, திறமையை வெளிக் கொணரும் அடிப்படைக் கல்வி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
பள்ளி அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
மாணவர்களுக்கு 4 சீருடைகளும், காலணிகளும் இலவசமாக வழங்கப்படும்.
10-12ஆம் வகுப்பு வரை வேறுபாடு இல்லாமல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 1,000/- ரூபாய் முதல் 5,000/- ரூபாய் வரை வழங்கப்படும்.
பள்ளியில் படிக்கும் +1 மற்றும் +2 மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும்.
பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்க மாணவர் சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்படும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை பற்றிய பயம் பெற்றோர்களுக்கு இல்லாத நிலை உருவாக்கப்படும்; தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்.
கற்றல் குறைபாடு (னுலளடநஒயை) மற்றும் மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு சிறப்புத் திட்டம் வகுக்கப்படும்.
17. தமிழகத்தில் உயர் கல்வியை உயிர்ப்பிக்க 12 அம்ச திட்டம்:
தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் தொடங்குவது பெரிதல்ல – தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், தனித் தன்மையுடன் இயங்க 12 அம்ச திட்டம் தீட்டப்பட்டு அதன்படி பல்கலைக்கழகங்களின் தரம் உலகத் தரத்திற்கு இணையாக உயர்த்தப்பட்டு, சீர்படுத்தப்படும்.
18. மாணவர்களின் தனித் திறமை மற்றும் அறிவுசார் வளர்ச்சிக் கழகம்:
மாணவர்களின் பன்முக திறனை ஊக்குவிக்க தனித் திறமை மற்றும் அறிவுசார் வளர்ச்சிக் கழகம் உருவாக்கப்பட்டு, அனைவருக்கும் தனித் திறமை பயிற்சி புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அளிக்கப்படும். அதன் மூலம் அவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்படும்.
அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் (கலை, அறிவியல் மற்றும் பொறியியல்) மற்றும் பல் தொழில் பட்டய கல்லூரிகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச டுயயீவடியீ ஊடிஅயீரவநச வழங்கப்படும்.
19. மீன்பிடி தொழிலை நவீனப்படுத்தி, ஏற்றுமதியை அதிகரிப்பு: மீனவர் பாதுகாப்பு படை அமைக்கப்படும்.
இயந்திர மீன்பிடி படகுகள் வாங்கத் தேவையான மானியம் வழங்கப்படும். 13 குளிர்சாதன மீன் பூங்காக்கள் (குiளா ஞசடிஉநளளiபே ஞயசமள) அமைக்கப்படும். பாரம்பரிய மீனவர்கள் பயன்பெறும் வகையில் ஏற்றுமதி நோக்கோடு நடுக்கடல் மீன் பதப்படுத்தல் மற்றும் மதிப்பு கூட்டல் ஏற்றுமதி கப்பல் பூங்கா அமைக்கப்படும்.
மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கான உதவித் தொகை 2,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
பருவ காலத்தால் 4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத சூழ்நிலையில் இருக்கும் மீனவ குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4,000/- ரூபாயாக வழங்கப்படும்.
கச்சத் தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர் நலன் காக்கப்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
20. தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு சிறப்புத் திட்டம்:
தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகி உள்ள துறைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் வேலை வாய்ப்புக்கு தகுதி உடையவர்களாக உருவாக்கப்படுவர்.
தொழில் தொடங்க முனைவோருக்கு 25 சதவீத மானியத்தில் கடன் உதவித் தொகை வழங்கப்படும்.
அரசுப் பணியில் காலி இடங்கள் நிரப்பப்படும். புதிய வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் மாணவர்களுக்கு தங்கும் விடுதிகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். உணவு கட்டணம் மற்றும் உதவித் தொகைகள் கூட்டி வழங்கப்படும்.
21. தொழிலாளர்களுக்கு சிறப்புத் திட்டம் :
தென்னை மற்றும் பனை விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து அவர்களது வாழ்க்கைத் தரம் உயரவும் மற்றும் தொழிலுக்கு உத்தரவாதம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவந்து, அவர்களது தனி நபர் வருமானத்தை 3 மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மாவட்டம் தோறும் அவர்கள் வசிக்கும் பகுதியில் மதிப்புக் கூட்டப்பட்ட மண்பாண்ட தொழிற்கூடங்கள் அமைத்துத் தரப்படும். டெரக்கோட்டா முறையில் மண்பாண்டங்கள் செய்ய சிறப்பு தொழிற்பயிற்சி கூடங்கள் அமைத்துத் தரப்படும். செங்கல் தொழிலில் இருக்கும் பிரச்சனைகள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
வியாபாரிகளுக்கு உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து, ஒரு சிறப்பு குழு அமைத்து, அவர்களை கலந்து ஆலோசித்து அவர்களது பிரச்சனைகள் உடனடியாக களையப்படும்.
22. இளைஞர்களுக்கான சிறப்புத் திட்டம் :
படித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, லாப நோக்கத்துடன் சுய தொழில் தொடங்க – அரசு பங்குத் தொகை தகுதிக்கேற்ப 25 லட்சம் ரூபாய் வரை அளித்து, வங்கிக் கடன் ஏற்பாடு செய்து தரப்படும்.
தமிழகத்தில் தொழில் தொடங்கும் அல்லது தொழில் நடத்தும் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு தொழில் பூங்காக்களில் 25 சதவிகிதம் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்தும் ஒப்பந்தப் புள்ளிகளில் 25 சதவிகிதம் தமிழகத்தைச் சேர்ந்த இந்த புதிய மற்றும் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
வீடுகளில் நடைபெறும் திருட்டு, கொள்ளைகளை முற்றிலும் தடுக்க தற்காப்பு கலை (ஆயசவயைட ஹசவள) பயின்ற இளைஞர்களைக் கொண்டு சிறப்பு சுய பாதுகாப்பு படைகள் அமைக்கப்படும். அவர்கள் சம்பவம் நடக்கும் இடத்திற்கு விரைந்து வந்து தடுத்து பாதுகாக்க நவீன முறைகளுடன் பயிற்சி அளிக்கப்படும். வீட்டை பூட்டி வெளியூர் செல்லும் மக்களின் வீடுகளும் பாதுகாக்கப்படும்.
23. சுய உதவிக் குழு சிறப்புத் திட்டம்:
சுய உதவிக் குழுக்கள் சீரமைக்கப்பட்டு, சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். அதில் 25 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படும்.
ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டுறவு முறையில் ஒரு பெரிய தொழில் ஏற்றுமதி நோக்கத்தோடு தொடங்கப்படும். அதில் அனைவரும் வேலை செய்ய வாய்ப்பளிக்கப்பட்டு, அதன் லாபத்தில் பங்குதாரர்களாகவும் ஆக்கப்படுவார்கள்.
பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு – தொழில்நுட்பத்தின் மூலம் கிராமப்புறச் சாலைகள் அனைத்தும் புதிதாக போடப்பட்டு, பிளாஸ்டிக் கழிவு இல்லாத கிராமங்கள், நகரங்கள் உருவாக்கப்படும்.
தெரிந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத்திற்கும், கம்யூனிட்டி சோலார் சக்தி மையங்கள், எரிவாயு மையங்கள் உருவாக்கப்பட்டு, கிராமப்புற தெரு விளக்குகள் மற்றும் வீடுகளுக்கு தேவையான மின்சார வசதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதில் வரும் லாபம், சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.
திருநங்கைகளுக்கான சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்பீட்டில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும்.
24. தாய்மார்களுக்கு சிறப்பு சலுகை:
தாய்மார்களுக்கு ஒரு காற்றாடி, ஒரு மிக்ஸி, ஒரு கிரைண்டர் ஆகிய மூன்று பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
குழந்தையை பேணி பாதுகாக்க பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறையும், 12,000/- ரூபாய் நிதி உதவியும் வழங்கப்படும்.
25. முதியோர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு சிறப்புத் திட்டம்:
58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளில் பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய தலைமையகங்களில், முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற முதிய ஆண்கள் மற்றும் பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள் தங்குவதற்கு சிறப்பு தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும். அங்கு அவர்களுக்கு மூன்று வேளை உணவும், புத்தக நிலையமும், தியான மண்டபமும், இனிமையான இயற்கை சூழலும் ஏற்படுத்தப்பட்டு, ஆதரவற்ற முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகள் மத்தியில் அன்பு, பாசம் மற்றும் அறிவு பரிமாற்றம் ஏற்படும்படியாக திட்டம் தீட்டப்பெற்று, அங்கு ஒருவருக்கொருவர் ஆதரவு என்ற இனிமையான சூழல் ஏற்படுத்தப்படும். அவர்களுக்கு தொலை தொடர்பு மருத்துவ வசதியும் ஏற்படுத்தித் தரப்படும். அந்தந்த மாவட்டங்களில் சிறப்பாக பணி செய்யும் சூழுடீ-க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுடன் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தும். அதற்குத் தேவையான நிலம், கட்டமைப்பு மற்றும் அதை நடத்த தேவையான நிதியும் தரப்படும்.
பெரிய தொழில் நிறுவனங்களின் உதவி பெற்று இத்திட்டத்தை தொடர்ந்து நடத்த வழிவகை செய்யப்படும்.
26. இலங்கை தமிழ் அகதிகளுக்கு சிறப்பு மறுவாழ்வு திட்டம் :
தரமான இருப்பிடம், தண்ணீர் மற்றும் சுற்றுப்புற சுகாதார மேம்பாடு போன்றவை வழங்கப்படும்.
தரமான மருத்துவ வசதி செய்து தரப்படும். கல்வி பயில தேவையான உதவிகள், சிறப்பு வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.
அகதிகளாக வந்தவர்கள் தமிழகத்திலே கௌரவமாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இலங்கை தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் அடிமைகள் போல் வாழும் நிலைமையை மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
இலவச திட்டங்கள் இலங்கை தமிழ் அகதிகள் முகாமுக்கும் நீட்டிக்கப்படும்.
27.சுற்றுலாத் துறை மேம்பாடு:
தமிழகம் ஒரு சர்வதேச சுற்றுலாத் தலமாக ஆக்கப்படும்.
உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வரத்தை 60 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரத்தை 40 லட்சமாக உயர்த்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
28. தமிழ் நாடு நதிகளை இணைக்கும் நவீன நீர்வழிச் சாலை:
தமிழக நதிகளை நீர்வழிச் சாலைகள் மூலம் இணைத்து, தண்ணீர் வீணாகாமல், வெள்ளப் பெருக்கு நீரையும் வரைமுறைப்படுத்தி மற்றும் தேக்கி, தேவையான பாசனப் பகுதிக்கு, தேவையான பொழுது பயன்படுத்துவோம். தமிழ் நாட்டு நதிகளை இணைக்கும் நவீன நீர்வழிச் சாலை ஞஞஞ முறையில் உலக வங்கி கடன் பெற்று செயல்படுத்தப்படும்.
காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்டை மாநில நதி நீர் பிரச்சினைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண நல்லிணக்க நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்.
முல்லை பெரியாறு மற்றும் அனைத்து நதி நீர் பிரச்சினைகளை தீர்க்க நிலையான தீர்வு எட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
29. தமிழ் மொழி மேம்பாடு :
தமிழ் மொழியின் பெருமையை மற்ற மொழியினரும் உணர்ந்து அதைப் பற்றி அறிய, திருக்குறள், தமிழ் காப்பியங்கள், இலக்கண இலக்கியங்கள், புராண, இதிகாச நூல்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் மற்றும் பல்வேறு வரலாற்று புகழ் பெற்ற நூல்களை பல்வேறு இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், சீன, அரேபிய மற்றும் உலகில் அதிக மக்கள் பேசும் மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, இணையதளத்தில் இடம்பெறச் செய்து, நமது தமிழ் மொழியின் பெருமை உலகமெல்லாம் பரவ வழிவகை செய்யப்படும்.
தமிழை இந்திய ஆட்சி மொழியாக்க மத்திய அரசை வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும்.
கணினி வழித் தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தனித் தன்மையை இழந்த தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களை சீரமைத்து, தமிழ் மொழி உலகம் எல்லாம் பரவும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ் மொழியை நீதிமன்றங்களில் நீதித் துறையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
30. அரசு ஊழியர் நலன் மற்றும் மின் ஆளுமை:
அரசு ஊழியர்கள் நலன்கள் பாதுகாக்கப்பட்டு, அவர்களது சேவை நாட்டு மக்களுக்கு முழுவதுமாக சென்றடையும் வகையில் இனிமையான, சுமூகமான சூழல் உருவாக்கப்பட்டு, அவர்களது உடல் நலம், மனநலம் பேணப்பட்டு, தமிழக அரசு ஊழியர்கள் இந்தியாவிலேயே திறம்பட பணியாற்றும் சூழல் உருவாக்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரன்முறை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது நிறைவு செய்யப்படும்.
அரசு நிர்வாகத்தில் இருக்கும் துறை மற்றும் நிர்வாக ரீதியான பணி சிக்கல்கள் ஆராயப்பட்டு அவற்றை சீராக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு ஊழியர்கள் தற்போது அனுபவித்து வரும் அனைத்து சலுகைகளும் தொடரும்.
31. மாற்றுத் திறனாளிகள் :
மாற்றுத் திறனாளிகளுக்கென 3 சதவீத இட ஒதுக்கீடு அரசுப் பணியில் ஒதுக்கப்படும். அதை உடனடியாக அரசு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கென சிறப்பு பயிற்சி அளித்து, அவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் ஒதுக்கீடு மற்றும் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். அதற்குரிய சிறப்பு சலுகைகள் பரிசீலிக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
அரசு கட்டிடங்கள் மற்றும் பொது இடங்கள், பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மாற்றுத் திறனாளிகள் உபயோகிக்கும் வகையில் உடனடியாக மாற்றம் செய்யப்படும். அதற்கான அரசாணை, அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டமைப்பில் செயல்படுத்தும் வகையில் சிறப்பு அனுமதி பெற சட்டம் இயற்றப்பட்டு உத்தரவு வழங்கப்படும்.
32. கேபிள் டிவி அரசுடமை :
தமிழகத்தில் கேபிள் டிவி தொழில் அரசுடமையாக்கப்படும்; ஏகபோகம் தடுக்கப்படும். அனைவருக்கும் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டிவி இணைப்பு அரசு மானியத்துடன் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.
குசநந வடி ஹசை னுகூழ சேவைகள் மக்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கேபிள் டிவி மூலமாக கடைசி மைலில் வீட்டுக்கு இணைப்பு கொடுப்பவர்களது தொழில் பாதுகாக்கப்படும். அவர்கள் தொடர்ந்து தொழில் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
33. தகவல் தொழில்நுட்பத் துறை மேம்பாடு:
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை இரண்டு மடங்காக்குவோம். மின்அணு ஆளுமையை அரசுத் துறைகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
செயல்படாத தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை மேம்படுத்தி, சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம். மற்றும் தமிழக தொழில் முனைவோருக்கு முன்னுரிமை அளித்து, தமிழ் நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை அதிகரிப்போம்.
மொபைல் மின்அணு ஆளுமை திட்டம் செயல்படுத்தப்படும்.
செயல்படாத கிராமப்புற க்ஷஞடீ மையங்களின் இன்றைய வடிவத்தை மாற்றம் செய்து, மாவட்டம் தோறும், கிராமங்களில் 150 கிராமப்புற க்ஷஞடீ மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு அரசு மற்றும்
அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலமாக வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும்.
இதன் மூலம் 15,000 இளைஞர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும்,
1 லட்சம் கிராமபுற மக்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
34. மோனோ ரெயில் திட்டங்கள்:
சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூருக்கு சிங்கப்பூரில் உள்ளபடி மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
35. திருமண உதவித் தொகை:
தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000/- ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, 4 கிராம் (1/2 சவரன்) தங்கம் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.
இளநிலை அல்லது டிப்ளொமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை 50,000/- ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.
36. காவல் துறை சீரமைப்பு:
சட்டம் ஒழுங்கு கண்டிப்பாக எவ்வித தயவு தாட்சண்யமும் இல்லாமல் நிலை நாட்டப்படும். மக்கள் அமைதியாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
காவல் துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
முதல் தகவல் அறிக்கையை உடனடியாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து காவல் நிலையங்களும் மின் அணு ஆளுமையின் கீழ் கொண்டுவர திட்டங்கள் தீட்டப்படும். புலனாய்வு மற்றும் சைபர் குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு நவீனபடுத்தப்படும்.
காவல் துறைக்கு அதி நவீன பயிற்சிகள், மேலும் தேவையான நவீன ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் வழங்கப்படும்.
காவல் துறை சார்ந்த பழைய சட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, நவீன குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், நவீன வசதிகளுடன் தேவையான சட்டத் திருத்தம் செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல் துறையினரின் தேவையற்ற வேலை பளுவை குறைத்து, அவர்கள் மக்களின் பாதுகாப்பு மற்றும் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, ஏஐஞ மற்றும் பாதுகாப்பு படைகள் தனியாக பிரிக்கப்பட்டு, அவர்களது எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்த வழி வகை செய்யப்படும். அவர்களது பணி சார்ந்த செயல்பாடுகள் சீர்முறைப்படுத்தப்படும்.
காவல் துறையின் அதிரடிப்படை, சிறப்பு காவல் படை போன்றவைகளின் எண்ணிக்கைகள் உயர்த்தப்பட்டு, செயல்பாடுகள் நவீனபடுத்தப்படும்.
காவல் துறையினரின் குடும்ப பாதுகாப்பு மற்றும் வாழ்வுரிமை உறுதி செய்கிற வகையில் –
வாரிசுகளுக்கு வேலை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
பணியில் மரணமடையும் காவலர்களுக்கு – கருணைத் தொகை 3 லட்சம் ரூபாய் அளவிற்கு உர்த்தப்படும்.
காவல் துறையினருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் சிறப்பு மன வளக்கலை பயிற்சி நடத்தப்படுவதோடு, அவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஒவ்வொரு வருடமும் இலவசமாக நடத்தப்படும்.
37. தமிழக தொழில் துறை சீரமைப்பு:
சென்னையை மட்டுமே சார்ந்து புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதால், தமிழகத்தின் தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கும் அதை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆட்டோமொபைல், தொலைத் தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கட்டுமானத் துறை, கப்பல் கட்டும் துறை போன்ற துறைகள் ஊக்குவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
நடைமுறையில் உள்ள மதுரை – தூத்துக்குடி – அருப்புக்கோட்டை காரிடார் – “தன்னிறைவு கொண்ட இன்டஸ்டிரியல் காரிடார்” ஆக அறிவிக்கப்பட்டு அதற்கு தேவையான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
கப்பல் கட்டுமானத் துறையில் 10,000 கோடி ரூபாய் அந்நிய நாட்டு முதலீடு ஈர்க்கப்படத் தேவையான பல்முனை முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் – அதன் மூலம் தமிழகத்தை கப்பல் கட்டும் துறையில் முன்னோடியாக்குவோம்.
தென் தமிழகத்தில் “ஏரோ பார்க்” ஏற்படுத்தத் தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
திருப்பூர் சாயக் கழிவு பிரச்சனையை பரிசீலித்து அதன் கழிவுகளை சுத்திகரிக்கத் தேவையான தொழில்நுட்பத்துடன் விஞ்ஞான வழியில் கழிவு அகற்றும் நிலையம் உருவாக்கப்படும்.
சிறப்பு தொழில் கொள்கை உருவாக்கப்பட்டு, ஒற்றை சாளர முறையில் வெளிநாட்டு முதலீட்டை கவர திட்டம் தீட்டி தொழில் துறை முன்னேற்றத்திற்கு சீர்மிகு நடவடிக்கை எடுக்கப்படும்.
நிலம் கொடுக்கும் விவசாயிகளை பங்குதாரர்களாக கொண்ட, மாற்றி அமைக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படும்.
38. முதியோர், ஊனமுற்றோர் மற்றும் ஆதரவற்றோர் —
உதவித் தொகை:
முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு மாத உதவித் தொகை 1,000/- ரூபாய் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும்.
பெண்களுக்கு, முதியோர்களுக்கு மற்றும் அனைத்து தரப்பினரும் பெற்று வரும் உதவித் தொகைகள் பரிசீலிக்கப்பட்டு, விலைவாசி உயர்வுக்கு ஏற்ற முறையில் கூட்டி வழங்கப்படும்.
39. அரசு விடுதி மேம்பாடு :
அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அரசு மானியம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவைக்கு ஏற்றபடி அரசு விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுத்துவதோடு, அவைகளின் கூட்டமைப்புகள்,
நவீன யுக்தியோடு மேம்படுத்தப்படும்.
40. கிராம ஊராட்சி மன்றங்கள் :
கிராம ஊராட்சி மன்றங்கள் சிறப்பாக செயல்படத் தேவையான நிதியை மேலும் உயர்த்தி வழங்க சிறப்பு குழுக்கள் மூலம் ஆய்வு செய்யப்படும்.
41. ஊராட்சி தலைவர்கள் :
ஊராட்சி தலைவர்களுக்கு கௌரவ ஊதியம் வழங்க பரிசீலிக்கப்படும். ஊராட்சி எழுத்தர்கள் – ஊராட்சி செயலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டு ஊதிய உயர்வு அளிக்க பரிசீலிக்கப்படும்.
42. பிற மொழி பயிற்சி :
பள்ளிகளில் தாய் மொழியோடு பிற இந்திய மொழிகள் மற்றும் அன்னிய மொழிகள் பயில விரும்புபவர்கள் விரும்புகின்ற வகையில் பயில சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.
43. அரசு பணி வேலை வாய்ப்பு :
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், வாரிசு வேலைகள் வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக அரசின் சிறப்புத் திட்டங்களை அமுல்படுத்தத் தேவையான எண்ணிக்கையில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.
தற்போது அனைத்து அரசு தேர்வு நிறுவனங்களில் வெளியிடப்படாமல் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு முடிவுகள் உட்பட அனைத்து தேர்வு முடிவுகளும் உடனடியாக வெளியிட ஆவன செய்யப்படும்.
44. நுழைவுத் தேர்வு :
மருத்துவ கல்வி பொது நுழைவுத் தேர்வு முறை தமிழகத்தில் அமுல்படுத்தப்பட மாட்டாது.
45. உழவர் பாதுகாப்புத் திட்டம் :
உழவர் பாதுகாப்புத் திட்டம் மீண்டும் நவீன காலத்திற்கு ஏற்ற வடிவில் புதிய பொலிவுடன் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும்.
46. 108 ஆம்புலன்ஸ் மேம்பாட்டுத் திட்டம் :
சில மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள, தமிழகத்தில் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் மேம்படுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் ஊர்திகளின் எண்ணிக்கையை கூட்டி, நடைமுறையில் உள்ள நிர்வாக குறைகளை களைந்து சிறப்பாக செயல்படுத்தப்படும்.
47. பள்ளியிலேயே ஜாதிச் சான்றிதழ் :
ஒவ்வொரு வருடமும் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் மற்றும் பள்ளி சார்ந்த இதர சான்றிதழ்கள் அனைத்தும் பள்ளியிலேயே வழங்கப்படும்.
48. சத்துணவு பணியாளர்களின் மேம்பாடு :
சத்துணவுப் பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பாக பிரச்சனைகள் முன்னுரிமையோடு அணுகப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.
49. ஊக வணிகம் :
ஊக வணிகம் தடுக்கப்பட்டு, பதுக்கல் ஒழிக்கப்படும்.
50. போக்குவரத்துத் துறை :
போக்குவரத்துத் துறை நவீனப்படுத்தப்படும். கூடுதலான நவீன பேருந்துகள் அனைத்து வழித் தடங்களிலும் இயக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர் நலன் பேணப்பட சிறப்புத் திட்டங்கள் தீட்டப்படும்.
51.ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் மீட்பு:
கருணாநிதியின் குடும்பத்தினர்களாலும், திமுக மந்திரிகளாலும், அவர்களது கூலிப் படைகளாலும் மக்களை அநியாயமாக மிரட்டி பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு, அவற்றை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
52. கடலோர சாலை திட்டம் :
சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு திட்டம் நடைமுறை படுத்தப்படும்.
53. திரைப்படத் துறை பிரச்சனைகளுக்குத் தீர்வு :
திரைப்படத் துறையில் உள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து, ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும்.
54. மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் :
நடைமுறையில் உள்ள மக்களுக்குப் பயன் அளிக்கும் திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை: சி.பி.ஐ. விசாரணையுடன் வழிகாட்டுதல் குழுவும் அமைக்க தமிழிசை அறிக்கை

நாமக்கல் மாவட்ட ‘டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணையுடன் வழிகாட்டுதல் குழுவும் அமைக்க வேண்டும்’’, என்று தமிழக அரசுக்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விஷ்ணுபிரியாவின் உயிரிழப்பு பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டுக் கொண்டிருக்கிறது. அவரின் உயிரிழப்பு முழுமையாக விசாரிக்கப்பட்டு அவர் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது முக்கியம். அதே நேரத்தில் ஒவ்வொரு உயிரிழப்புகளுக்கும் சி.பி.சி.ஐ.டி. போதுமா சி.பி.ஐ. வேண்டுமா? என்று விவாத பொருளாகி சில நாட்கள் உரக்க பேசப்பட்டு அடுத்த சம்பவம் நடைபெறும் வரை மறக்கப்பட்டு, மறுபடியும் விவாதப் பொருளாக மாற்றப்படும் என்ற நிலையிலேயே ஒவ்வொரு சம்பவமும் சென்று கொண்டிருக்கிறது என்பது வேதனையளிக்கிறது.

குறிப்பாக பெண் அதிகாரிகள் பலவித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். பணியின் காரணமாக வெளிப்படை தன்மையோடு விவாதிக்க இயலாத நிலையில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். பொது கலவரங்களில் கூட தங்களின் தன்மான உணர்வுகள் இடற்படுத்தப்பட்டு அவமானத்திற்கு உள்ளாகிறார்கள். அதனால் அவர்களின் பிரச்சனைகளை உண்மையாக உள்வாங்கி வழிகாட்டும் ஒரு குழு அமைக்கப்படுவது நலம் என கருதுகிறேன்.

ஒய்வு பெற்ற பெண் நீதிபதி, உயர் பெண் காவல்துறை அதிகாரி, பெண்கள் நல மருத்துவர், மனநல மருத்துவர், இவர்களை போன்றவர்களை இணைத்து ஒரு குழு அமைத்து வழிகாட்டினால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு வரும் என்றும், தொல்லைகள் எல்லை மீறி போகாது எனவும், மன அழுத்தத்திற்கு வடிகால் கிடைக்கும் என்பதும், அதன் மூலம் அவர்கள் பணியாற்ற வழிகாட்டுதல் கிடைக்கும் என்பதும் எனது கருத்தாக இருக்கிறது.

தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி விசாரணை போதுமென்று அறிவித்துள்ளது. ஆனால் அதிலும் கட்டுப்பாடுகள் அதிகம் என்பதும் முழுமையான விசாரணை முடிவடையாத வழக்குகள் பல உள்ளன என்பது யாவரும் அறிந்ததே. ஏதோ சி.பி.ஐ. வேண்டாம் என்று சொல்வதன் மூலம் உண்மைகள் மறைக்கப்படுகின்றனவா? என்ற நிலை உருவாவதும் சரியல்லை.

சி.பி.ஐ. விசாரணை அறிவிப்பதோடு, ஒரு வழிகாட்டுதல் குழுவை அமைத்து அரசாங்கம் நடைமுறை படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனை வலியுறுத்தி பா.ஜ.க. மாநில இளைஞரணி சார்பில் திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் 26-ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெறும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

ஸ்டாலின் மதுரை வருகை கட்சி நிகழ்ச்சிகள் ரத்து

மதுரையில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வருகையால் கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி (வடக்கு) மணிமாறன் (தெற்கு), முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா ஆகியோர் கூறியதாவது:மதுரையில் ஸ்டாலின் பங்கேற்கும் ‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ நாளை (செப்.,25) காலை அவனியாபுரத்தில்
துவங்குகிறது.

ஸ்டாலின் நிகழ்ச்சிகளுக்கு செப்.,14ம் தேதியே போலீஸ் அனுமதி கேட்டுள்ளோம். மக்களை சந்திப்பதற்காகவே இப்பயணம். இதனால் செயல்வீரர்கள் கூட்டம் உட்பட கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம், திருமங்கலம், நக்கலக்கோட்டை, செக்கானுாரணி, சோழவந்தான், அலங்காநல்லுார், ஊமச்சிகுளம், வண்டியூர், ஒத்தக்கடை வழியாக மேலுாரில் முடிகிறது. பெண்கள்,மாணவர்கள், தொழிலாளர், விவசாயி உட்பட அனைத்து தரப்பினரையும் சந்தித்து குறைகள் கேட்கிறார்.

நிர்வாகிகள், தொண்டர்கள் இடையூறு செய்யக்கூடாது. பயணத்திற்குஎவ்வித நெருக்கடியும் இல்லை. பிரச்னை ஏற்பட்டால் சமாளித்து பயணத்தை வெற்றி பெற செய்வோம், என்றனர்.

ஆன்மிக ஜோதி தயானந்த சரஸ்வதி மறைவு தமிழகத்துக்குப் பேரிழப்பு: ராம.கோபாலன் இரங்கல்

சென்னை:
ஆன்மிக ஜோதி தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் மறைவு தமிழகத்துக்குப் பேரிழப்பு என இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
அவரது இரங்கல் அறிக்கை:

தமிழகத்தின் ஆன்மிக ஜோதியாய் விளங்கிய சுவாமி தயானந்த சரஸ்வதி மறைவு தமிழகத்துக்குப் பேரிழப்பு ஆகும்.

தஞ்சை மாவட்டத்தில் மஞ்சக்குடி எனும் குக்கிராமத்தில் பிறந்த தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் சின்மயானந்தர் மூலம் துறவறம் மேற்கொண்டு உலகம் முழுவதும் இந்து தர்மத்தை கொண்டு சென்றவர். சேவையை ஆன்மிகத்தின் மூலம் கொண்டு சென்று அனைத்து மக்கள் வாழ்வும் மேம்பட வைக்க அரும்பாடுபட்டவர். அவரது மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பாகும்.

தர்ம ரட்சண சமிதி, எய்ம்ஸ் ஃபார் சேவா (சேவையே நோக்கம்) போன்ற அமைப்புகளில் இளம் தலைமுறையினரை ஈர்த்து சமுதாய கண்ணோட்டத்தையும் ஆன்மிக ஞானத்தையும் ஒருங்கே கொண்டு சென்றவர் சுவாமிகள். உலகில் ஆக்கிரமிப்பு மதங்களால் புறந் தள்ளப்பட்ட அனைத்து மதங்களையும், சமயங்களையும் மதித்து அனைத்து மதங்களையும் ஒருங்கிணைத்து உண்மையான சமய நல்லிணக்கத்திற்கு வித்திட்டவர். உலகம் பூராவும் இந்து சமய பெருமையையும் வேதாந்தக் கருத்துக்களையும் கொண்டு சென்றவர்.

தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் நெடுநோக்குப் பார்வையுடன், திட்டமிட்ட உருவாக்கிய அமைப்புகள் என்றும் நிலைத்து நின்று ஆன்மீக விழிப்பு உணர்வுடன் கூடிய சமுதாய, சமய பணியை நிறைவேற்றும் என்பதில் ஐயமில்லை.

பாரத நாட்டில் உள்ள பல பெரியோர்களாலும், பிரமுகர்களாலும் போற்றப்பட்டவர் சுவாமிகள். அகில உலக அளவில் பல தலைவர்களை சந்தித்து உலகில் அமைதி நிலவ பாடுபட்டவர். தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு இந்து முன்னணி சார்பில் சிரம் தாழ்ந்த சிரத்தாஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன். எல்லா ஆலயங்களிலும் மோட்ச தீபம் ஏற்றி வழிபட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

பள்ளி மாணவிக்கு மிஸ்டு கால்: தற்கொலைக்கு தூண்டிய 3 வாலிபர் கைது. மூன்று பேருக்கு போலீஸ் வலை வீச்சு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நெசவாளர் காலனியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளியின், 14 வயது மகள், அரசு மேல்நிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார்.மாணவி பள்ளிக்கு தினமும், காலை, மாலை தனியார் பஸ்சில் சென்று வந்தார். மாணவி தினமும் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு காலதாமதமாக வருவதையும், அவ்வாறு வந்தாலும் மொபைல் போனில் அடிக்கடி மிஸ்டுகால் வருவதையும் கண்காணித்து வந்த பெற்றோர், இது குறித்து மகளை கண்டித்ததுடன், எச்சரிக்கையும் விடுத்தனர்.

இந்நிலையில், கடந்த, 22ம் இரவு மாணவி மொபைல் போனில் மிஸ்டு கால் வந்துள்ளது. அதை பார்த்த பெற்றோர், மாணவியை கடுமையாக எச்சரித்துள்ளனர். அதனால், மனமுடைந்த மாணவி, நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்தவர், அன்று மாலை, 6 மணிக்கு, வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

அதை பார்த்த பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவியின் மொபைல் போனுக்கு மீஸ்டு கால் கொடுத்தது யார் என, ஆய்வு செய்தனர்.அப்போது, பிரசாத், ரஜினி, கோகுலகண்ணன், பூலாம்பட்டி அருள், 19, இடைப்பாடி சீனிவாசன், 21, சுரேஷ், 21, ஆகியோர் தொடர்ந்து மாணவிக்கு மிஸ்டு கால் கொடுத்தது தெரியவந்தது.அதை தொடர்ந்து, மாணவியை தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிந்து, அருள், சீனிவாசன், சுரேஷ் ஆகிய, மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற, மூன்று பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.