Home Blog Page 61

விநாயகர் சதுர்த்தியை அரசு விழாவாக அறிவிக்கக் கோரி மனு!

thiruvannamalai atheenam in madurai - 2026

விநாயகர் சதுர்த்தியை அரசு விழாவாக அறிவிக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதன் பின் வண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசினார்.

மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ஆதினத்தோடு இணைந்து தென்னிந்திய இஸ்லாமிய மக்கள் எழுச்சி கழக தலைவர் சுல்தான் என்பவரும் மனு அளித்த சுவாரஸ்யம்:

சிபிஐ அமைப்பை பாஜக ஆர் எஸ் எஸ் அமைப்பின் கைக்கூலிகள் என, பேசிய த.வெ.க. தலைவர் விஜய் பேசியதைக் கண்டிக்கிறோம் என்று குறிப்பிட்ட திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டதாவது…

விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாடு அரசு, மகாராஷ்டிரா மாநிலத்தை முன்மாதிரியாக கொண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என கூறி அகண்ட இந்து ராஷ்டிரா தலைவர் திருவண்ணாமலை ஆதினம் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது, மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் கருணாநிதி சுவாமிகள் ஆதினத்தோடு இணைந்து தென்னிந்திய இஸ்லாமிய மக்கள் எழுச்சி கழகத்
தலைவர் சுல்தான் என்பவரும் வருகை தந்து கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்து பேசிய கருணாநிதி சுவாமிகள் :-
மகாராஷ்டிரா மாநிலத்தை போல தமிழகத்திலும் திமுக அரசு இந்து மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு விநாயகர் சதுர்த்தியை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

மேலும், அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது சிபிஐ விசாரணை அமைப்பை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடைய கைக்கூலி போல செயல்படுவதாக பேசியது கண்டிக்கத்தக்கது அரசியல் மேடையில் விசாரணை அமைப்பு குறித்து அவதூறாக பேசுவது ஏற்கத்தக்கது அல்ல; இது தொடர்பாக, விரைவில் விஜய் மீது புகார் அளிக்க உள்ளோம் என, தெரிவித்தார் மேலும் தலைமையிடம் பேசி விஜய்க்கு எதிராக போராட்டம் குறித்தும் முடிவெடுக்க உள்ளோம் என்றார்.

இது குறித்து, பேசிய சுல்தான் மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தியை அரசு விழாவாக அறிவிக்க வேண்டுமென மனு அளிப்பதற்காக சுவாமிகளுடன் சேர்ந்து தானும் வந்துள்ளதாகவும் விநாயகர் சதுர்த்தியை வைத்து மத ரீதியாக பேசிவரும் அமைப்புகள் மத்தியில் மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் மனு அளிக்க வந்திருப்பதாக தெரிவித்தார்.

சபரிமலை நிறைபுத்தரி பூஜை நெற்கதிர் ஒப்படைக்கும் நிகழ்வுக்கு தென்காசி ஹரிஹரன் தேர்வு!

hariharan tenkasi - 2026

சபரிமலை நிறைபுத்தரிசி நெற்கதிர்கள் அச்சன்கோவிலில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாகக் கொண்டு வர அச்சன்கோவில் திரு ஆபரணப்பெட்டி தமிழக பொறுப்பாளர் ஹரிஹரன் குருசாமி பெயரில் தேவசம்போர்டு உத்தரவு வழங்கியுள்ளது.

கேரளாவில் விளைந்த நெற்கதிர்களை கோவிலில் வைத்து பூஜை செய்த பின்னரே அறுவடையை தொடங்குவார்கள். இதற்கு நிறை புத்தரிசி பூஜை என்று பெயர்.

இந்த நிறை புத்தரிசி பூஜை ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும். இந்த பூஜை நடத்துவதற்கான நாள் நேரம் ஆகியவற்றை திருவனந்தபுரம் அரண்மனையில் ஜோதிடர்கள் குறித்துச் சொல்கின்றனர். இந்த ஆண்டு வரும் ஜூலை 30ல் நாள் குறிக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இப்படி நடக்கும் நிறைபுத்தரிசி பூஜை விசேஷமானது.

இதற்காக நெற்கதிர்கள் தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு அருகில் உள்ள அச்சன்கோவிலில் இருந்து கொண்டு செல்லப்படும். இவ்வாறு நெற்கதிர்கள் கொண்டு செல்லப்படும் நிகழ்ச்சிக்கு நிறை புத்தரி கோஷ யாத்திரை என்று பெயர். செங்கோட்டைக்கு அருகில் உள்ள அச்சன்கோவிலில் இருந்து ஆண்டுதோறும் பல்வேறு கோயில்களுக்கு நெற்கதிர்கள் கொண்டு செல்லப்படும்.

இந்த ஆண்டு இந்த வைபவம் வரும் 29ஆம் தேதி நடக்க உள்ளது. இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த்துடன் அச்சன்கோவில் திருஆபரண கமிட்டி தலைவர் ஏ.சி.எஸ்.ஜி.ஹரிஹரன் குருசாமி நிர்வாகிகள் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதன்படி, சபரிமலைக்கான நிறைபுத்தரி கோஷயாத்திரை அச்சன்கோவிலில் இருந்து வரும் 29ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தலைமையில் தொடங்குகிறது. அங்கிருந்து ஆரியங்காவு ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில், புனலூர் கிருஷ்ணன் கோவில், உள்ளிட்ட 21 கோவில்களுக்கு ஊர்வலமாக சென்று அந்தந்த கோவிலுக்கான நிறைபுத்தரி நெற்கதிர்களை ஒப்படைத்து விட்டு பம்பையை அடைகிறது

இந்நிலையில், சபரிமலை நிறைபுத்தரி பூஜைக்கான நெற்கதிர்கள் கோஷ யாத்திரையாக அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி கமிட்டி தமிழக பொறுப்பாளர் தென்காசி ACS ஹரிஹரன் குருசாமி மற்றும் கமிட்டியினர் தேவசம் போர்டு அதிகாரிகள் மேற்பார்வையில் சன்னிதானம் கொண்டு சென்று ஒப்படைக்கும் உத்தரவுக் கடிதத்தை தேவசம் போர்டு வழங்கியது.

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படுவது இதுவே முதல் முறை. நிறை புத்தரிசி பூஜை கேரளாவில் குறிப்பாக சபரிமலையில் அறுவடை காலம் தொட்டு நடக்கும் பூஜைகளில் மிகச் சிறப்பானது. விளைந்த நெற்கதிர்களை அறுவடைக்கு முன் சுவாமிக்கு படைப்பது இதன் தாத்பரியம்!

ஆடி மாத பூஜைக்கு சபரிமலை நடை திறப்பு..

1000831651 - 2026

ஆடி கற்கடகம் மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று புதன் கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபம் ஏற்றி வைத்தார்.

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நவக்​கிரக பிர​திஷ்டை வழி​பாட்​டுக்​காக கடந்த 11-ம் தேதி மாலை​யில் நடை திறக்​கப்​பட்​டது.தொடர்ந்​து, 12-ம் தேதி பல்​வேறு வழி​பாடு​கள் நடை​பெற்​றன. கடந்த 13-ம் தேதி நவக்​கிரக கோயில் புனர்​பிர​திஷ்டை மற்​றும் கும்​பாபிஷேகம் நடை​பெற்​று, அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்​தப்​பட்​டது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். அதன்படி ஆடி மாத பூஜைக்காக கோவில் நடை இன்று (புதன் கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டது. நடை திறப்பையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் மட்டும் நடைபெறும்.

நாளை (வியாழக்கிழமை) முதல் 21 -ந் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். மேலும் 21-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

நிறை புத்தரி பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை மீண்டும் 29-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.

பயங்கரவாதிகள் குறித்து கண்காணிப்பின்றி கோட்டை விடும் தமிழக உளவுத்துறை!

kadeswara subramaniam hindu munnani - 2026

தமிழகத்தில் இஸ்லாமிய மத பயங்கரவாதச் செயலை கண்காணிக்காமல் இருக்கும் தமிழக உளவுத்துறை மற்றும் தமிழக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

1998 ஆம் ஆண்டு அல் -உம்மா பயங்கரவாதிகளால், கோவையில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்து 58 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய, முக்கிய குற்றவாளிகளை கடந்த வாரம் முதல் தமிழக பயங்கரவாத தடுப்பு போலீசார்(ATS) கைது செய்து வருகின்றனர். பிடிபட்ட பயங்கரவாதிகளிடமிருந்து பல அதிர்ச்சி தரும் தகவல்கள் விசாரணையில் தெரிய வருகிறது .

இரண்டு நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் கைது செய்யப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளான அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி ஆகியோர் தங்களது வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்களை தந்துள்ளனர்.

அதில் அவன், அல்-உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா தங்கள் ஊரான நாகப்பட்டினத்திற்கு வந்து ரகசிய கூட்டங்கள் நடத்தி போலீஸாரிடம் சிக்காமல் தப்பிப்பது எப்படி என்ற வித்தைகளை கற்றுக் கொடுத்தார் எனக் கூறி இருப்பதும்,

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தபோதும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடிக்கு வெடி மருந்துகள் வாங்க இரண்டு முறை வந்ததாகவும் தெரிவித்து இருப்பது, தமிழ் உளவுத்துறை செயலிழந்து இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தேடப்படும் பயங்கரவாதிகளான இவர்கள் தமிழகத்தில் சுதந்திரமாக வந்து வெடி பொருட்களுக்கான மருந்துகள் வாங்கிய போது தமிழக உளவுத்துறை உறக்கத்தில் இருந்துள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? இவர்கள் வெடி மருந்துகள் வாங்கி மீண்டும் ஒரு சதித் திட்டத்தை அரங்கேற்ற முயற்சி செய்தார்களா? என்பதை பற்றி தமிழக காவல்துறை, இவர்கள் பிடிபடும் வரை கண்டுகொள்ளவில்லையா? என்பதும் பல சந்தேகங்களை எழுப்புகிறது .

பாகிஸ்தானில் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி பெற்ற இவர்கள் தமிழகத்தில் நாச வேலைக்கு சதி செய்துள்ளனர். அது மட்டுமல்லாது இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன், பாஜக நிர்வாகி அரவிந்த ரெட்டி ஆகியோரை படுகொலை செய்த போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய மூவரும் அபூபக்கரிடம் பயிற்சி பெற்றவர்களாக அவன் சொன்ன வேலையை செய்து முடித்துள்ளனர். பல படுகொலைகளுக்கு இவன் மூளையாக செயல்பட்டுள்ளான்.

இந்து முன்னணி வெள்ளையப்பன், பாடி சுரேஷ், பாஜகவின் அரவிந்த் ரெட்டி ஆகியோர் ஜிகாதிகளால் கொலை செய்யப்பட்ட பொழுதே இதற்குப் பின்னணியில் மிகப்பெரிய பயங்கரவாத சதி இருக்கிறது என்று இந்து முன்னணி தெரிவித்தது.

உடனடியாக தலைமறைவான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் இந்து முன்னணி வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டது.

ஆனால் அதனை அலட்சியப்படுத்திய காவல்துறை உயர் அதிகாரி ராமானுஜம் அவர்கள், ஒவ்வொரு கொலைக்கும் வேறு வேறு பொய்யான காரணங்களைச் சொல்லி அறிக்கையாக வெளியிட்டார்.

காவல்துறையின் அலட்சியப் போக்கால் துணிச்சல் பெற்ற இஸ்லாமிய பயங்கரவாதிகள் தொடர் கொலைகளில் ஈடுபட்டனர்.

பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அதில் கிடைத்த பணத்தை கொண்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யும் பண முதலைகளாக மாறி உள்ளதைக் கூட அறியாதவர்களாக உளவுத்துறை இருந்திருக்கிறது.

தற்போது பிடிபட்டிருக்கும் அபூபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோருக்கு பயிற்சி தந்த கொடூரன் பாஷா இறந்தபோது பல்வேறு அரசியல் கட்சியினர் அந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பயங்கரவாதி பாஷாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அரசியல்வாதிகள், இந்த பயங்கரவாதிகளுக்கு பின்னணியில் இருக்கிறார்களா என்று கேள்வி எழுகிறது.

குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பயங்கரவாதி பாஷாவை அப்பா என்று கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

தற்போது அபூபக்கர் சித்திக்கின் தூண்டுதலால் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்த போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் போன்ற கொடிய பயங்கரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என சீமான் குரல் கொடுக்கிறார்.

அப்படி என்றால் பயங்கரவாதிகளுக்கும் சீமானுக்கும் தொடர்புள்ளதா? என்ற கோணத்திலும் தீர விசாரிக்க வேண்டும்.

மத்திய அரசின் மூலம் தகவல் பெற்று பயங்கரவாத தடுப்பு போலீஸார் இவர்களை பிடித்துள்ளனர். ஏ. டி .எஸ் உருவாக்கப்படுவதற்கு முன்பு தமிழக உளவுத்துறையும், காவல்துறையும், பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை அறியாமல் இருந்ததே பல படுகொலைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

இவர்கள் எங்கிருந்து, எதற்காக வெடி மருந்துகள் வாங்கினார்கள், இன்னும் என்னென்ன சதி செயலுக்கு திட்டம் தீட்டி இருந்தார்கள் என்பது பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும்.

அது மட்டுமன்றி இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களையும், பண உதவி செய்தவர்களையும், இந்த பயங்கரவாதிகளின் உறவினர்களையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்!

நல்லதங்காள் கோயிலில் அறநிலையத்துறை பாலாலயம் செய்ய எதிர்ப்பு; மக்கள் தீக்குளிக்க முயற்சி!

nallathangal temple issue - 2026

வத்திராயிருப்பு அருகே நல்லதங்காள் கோயிலில் அறநிலையத்துறை பாலாலயம் நடத்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்; பக்தர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம்  வத்திராயிருப்பு அருகே  அர்ச்சுனாபுரத்தில் அமைந்துள்ளது நல்லதங்காள் கோயில்.   தமிழக பெண்களின் கலாச்சாரத்திற்கும்,  அண்ணன் தங்கை உறவிற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய நல்லதங்காள்,  அவர் வாழ்ந்த 15-ம் நூற்றாண்டில் நாட்டில் நிலவிய கடும் பஞ்சம் காரணமாக பசியால் துடித்த தனது ஏழு பிள்ளைகளையும் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தானும் அந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.   

அவர் தற்கொலை செய்து கொண்ட கிணறு அவர் தங்கிய  இடம் ஆகியவை நினைவுச் சின்னமாகவும் கோயிலாகவும் எழுப்பப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வருகிறது. 

 அக்கோயிலில் நல்லதங்காள் பத்திரகாளியம்மன் வடிவில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். தமிழகம் முழுவதிலும் இருந்தும் குழந்தை வரம் வேண்டி ஏராளமானோர் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இக்கோயில் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி    கோயில்  கதவுகள் உடைக்கப்பட்டு நல்லதங்காள் சிலை உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

அர்ச்சுனாபுரம் கிராம மக்கள் புதிய சிலை வைப்பதற்காக அக்கோயிலில் பாலாலயம் செய்தனர். அதற்கான பணிகளை செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலைத்துறை சார்பாக பாலாலயம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு அதிகாரிகள் அங்கு வருவதாக இருந்தது. இதை அறிந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயிலுக்குள் பொதுமக்கள் செல்லாமல் போலீசார் தடுத்ததால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளும் முள்ளும் ஏற்பட்டது. கிராம மக்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் பாட்டில்களை அப்புறப்படுத்தினர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏ டி எஸ் பி அசோகன், ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தைக் கண்டித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு போராட்டம் நடத்தும் என்று அறிவித்தது. அந்த அமைப்பின் சார்பில் பா.சரவண கார்த்திக் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள புகழ் பெற்ற நல்லதங்காள் கோவிலை ஊர் மக்களிடம் இருந்து கைப்பற்ற அறநிலையத்துறை காவல்துறையை வைத்து பொதுமக்களை மிரட்டுவது, கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது. பொதுமக்களை திரட்டி மிக பெரிய அளவில் காவல்துறை மற்றும்
அறநிலையத்துறையை கண்டித்து விசுவ ஹிந்து பரிஷத் திருக்கோவில் அர்ச்சக்
புரோகித் பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும். பொதுமக்கள் இத்தனை ஆண்டுகளாக தங்கள் சொந்த பணத்தில் பராமரித்த ஒரு கோவிலை அறநிலையத்துறை கைப்பற்ற நினைப்பது வெட்கக்கேடானது. ஹிந்துக்களிடமிருந்து கோவிலை அபகரிக்கும் செயலை விட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள புகழ் பெற்ற நல்லதங்காள் கோவிலை ஊர் மக்களிடம் இருந்து கைப்பற்ற அறநிலைய துறை காவல்துறையை வைத்து மக்களை மிரட்டுவது கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது. பொது மக்களை திரட்டி மிக பெரிய அளவில் காவல்துறை மற்றும் அறநிலைய துறையை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்..” என்று, விருதுநகர் மாவட்ட பாஜக., சார்பில் ஸ்ரீவி ராஜா குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் மது பாட்டிலால் தாக்குதல்; ஆசிரியர் மண்டை உடைப்பு!

teacher attacked by student by tasmac bottle - 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் சீ. ரா. அரசு மேல்நிலை பள்ளியில் 4 மாணவர்கள் மது போதையில் வந்தனர்

மது போதையில் வந்த மாணவர்களை தட்டி கேட்டு தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் செல்வதாக கூறிய பொது அறிவியல் பிரிவு ஆசிரியர் சண்முக சுந்தரத்தை மறைத்து வைத்திருந்த மது பாட்டிலால் தலையில் தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது

நான்கு பேரில் இருவர் அது போதையில் இருந்ததும் ஆசிரியரை கடந்த ஆண்டு செய்முறை தேர்வில் மதிப்பெண்ணை குறைத்ததால் திட்டமிட்டு தாக்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது

மு.க. ஸ்டாலின் முதலில் செய்ய வேண்டியது இதைத்தான்!

kamarajar birthday - 2026

செய்தியும் சிந்தனையும்!

சிதம்பரம் அரசு மேநிலைப்பள்ளியில் நடைபெற்ற காமராஜரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று, மலர் தூவி மரியாதை செய்து, பெரியார் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்தியவர் காமராஜர் – என்று கூறியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

உண்மையில் காமராஜரைத் தொடுவதற்கு திமுக., தகுதியானதா என்பது தமிழகத்தின் வரலாறு அறிந்தவர்கள் முன் உள்ள கேள்வி!

காமராஜரை பற்றி கருணாநிதி கூறியவை…

அண்டங்காக்கா,எருமைத் தோலர், காண்டாமிருகத் தோலர், பனை ஏறி,மரமேறி, நாடான், சாணான், நனைச்ச பனை, கட்டைப்பீடி காமராஜர், கோமாளி ராஜா, அறிவிலி, அலி, வெறுந் தலைவன் என்று 1 சதவிகிதம் கூட அரசியல் நாகரீகமோ, பண்பாடோ இல்லாமல், வாய்க்கு வந்தபடி காமராஜரை வசைபாடியவர் கருணாநிதி

விருதபட்டியில், கருவாட்டு வியாபாரம் செய்த, கருவாட்டுக்காரி சிவகாமியின் சீமந்த புத்திரன் தான் இந்த காமராஜர் என்றவர் கருணாநிதி.

” துறவியாகிவிட்ட பட்டினத்தடிகளை, அவர் தாய் துறந்து விட்டதை போல, நானும் என் மகனை இந்த நாட்டுக்காக, துறந்து விட்டு நிற்கிறேன் “ என்று மூத்த எழுத்தாளர் சாவியிடம், கண்கலங்கி கதறி அழுதிருக்கிறார், காமராஜரின் தாய் சிவகாமி அம்மையார்.

அந்த புண்ணியவாதியைத்தான், “ கருவாட்டக்காரி “ என்று கரித்துக்கொட்டினார் கருணாநிதி.

4000 நாட்களுக்கு மேல், கொடுஞ்சிறையில் கழித்த தாலும், குடும்பம், குழந்தை, குட்டிகள் என்றிருந்தால், பரிசுத்தமாக மக்கள் பணியாற்ற முடியாது என்றும், தன் தாய் எவ்வளவோ வேண்டியும், “ திருமணம் வேண்டாம் “ என்று மக்கள் தலைவராக திகழ்ந்தார் காமராஜர்.

அதற்கு, “ காமராஜருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை “ என, ‘ நாகரீகத்தோடு ‘ நல்கினார் கருணாநிதி.

“ காமராஜர் என்ன மெத்த படித்தவரா? முன்பெல்லாம் ரஷ்யாவிற்கு எருமை தோலை தான், இந்தியா ஏற்றுமதி செய்தது. இன்று எருமையையே அனுப்பியுள்ளது “ என காமராஜர், ரஷ்யா சென்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல், பொறாமைப்பட்டு பேசினார் கருணாநிதி.

இன்னும், இன்னும் ஏராளம்…

இன்றோ….கருணாநிதியின் தவப்புதல்வன் மு.க.ஸ்டாலின், காமராஜர் புகழை ஓங்கி உரக்க முழங்குகிறார்.

ஸ்டாலின் அவர்களே, நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே… ” கர்ம வீரர், தியாக சீலர் காமராஜரை இழித்தும், பழித்தும் பேசிய என் தந்தை கருணாநிதி அவர்கள் செய்த தவற்றிற்கு ( பாவத்திற்கு ) நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன் ” என்று பகிரங்கமாக அறிவித்தால் போதுமானது.

காமராஜரின் படத்திற்கு மாலை அணிவிப்பது போன்ற போலித்தனங்களில் நீங்கள் ஈடுபடாதீர்கள் !!

  • யா.சு.கண்ணன்

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய சுபான்ஷு சுக்லா; குவியும் வாழ்த்துகள்!

subhanshu sukla - 2026

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மேற்கொண்ட பயணத்தை முடித்துக் கொண்டு, இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர், டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக கடலில் தரையிறங்கினர்.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா குழுவினர் இன்று, பத்திரமாக பூமிக்குத் திரும்பினர்.  22 மணி நேர பயணத்திற்குப் பின், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்பில் இன்று மாலை 3 மணிக்கு, ‘ஸ்ப்லாஷ் டவுன்’ முறையில் விண்கலம் பத்திரமாக தரையிறங்கியது. அதை அடுத்து, சுக்லா உள்ளிட்டோர் வெளியே அழைத்து வரப்பட்டனர். சுபான்ஷூ சுக்லாவுக்கு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ ஆகியவை இணைந்து அமெரிக்காவின் ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயண திட்டத்தில் ஈடுபட்டது. இத்திட்டத்தின்படி, இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25ம் தேதி, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின், ‘பால்கன் 9’ ராக்கெட் வாயிலாக பூமியில் இருந்து புறப்பட்டனர்.  அவர்களைச் சுமந்து சென்ற ‘டிராகன்’ விண்கலம், 28 மணி நேர பயணத்திற்குப் பின் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. 

அவர்கள் நால்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்த இவர்கள், விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர். பின்னர் தங்கள் பயணத்தை நிறைவுசெய்து திட்டமிட்டபடி டிராகன் விண்கலம் வாயிலாக நேற்று பூமியை நோக்கி புறப்பட்டனர். 22 மணி நேர பயணத்திற்குப் பின், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்பில் இன்று மாலை 3 மணிக்கு, ‘ஸ்ப்லாஷ் டவுன்’ முறையில் டிராகன் விண்கலம் கடலில் இறங்கியது.

தொடர்ந்து அந்த விண்கலம் கப்பலுக்குக் கொண்டு வரப்பட்டு, கதவு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திறக்கப்பட்டது. விண்கலத்தில் இருந்து முதலாவதாக நாசாவின் பெக்கி விட்சன் வெளியே அழைத்து வரப்பட்டார். இரண்டாவது நபராக சுபான்ஷூ சுக்லா விண்கலத்தில் இருந்து வெளியே வந்தார். மற்றவர்களும் அடுத்தடுத்து வெளியே அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் 7 நாட்கள் தனிமையில் இருப்பார்கள்.

சுபான்ஷூ சுக்லா பூமிக்கு திரும்பியதை இஸ்ரோ விஞ்ஞானிகள் நேரலையில் பார்த்தனர். லக்னோவில் உள்ள சிட்டி மான்டெசரி பள்ளியில் சுக்லாவின் குடும்பத்தினர் நேரலையில் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். பின் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். சுபான்ஷு சுக்லாவின் தாயார் ஆஷா சுக்லா செய்தியாளர்களிடம் பேசிய போது, என் மகன் பாதுகாப்பாக திரும்பியுள்ளார். இறைவனுக்கு நன்றி. இந்த நிகழ்வை வெளியில் நின்று, தகவல்களை பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி. நான் உணர்ச்சிவசப்பட்டேன்.எப்படியிருந்தாலும், என் மகன் பல நாட்களுக்குப் பிறகு திரும்பியுள்ளார் என்று கூறினார்.

பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: விண்வெளிக்கான வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பும் சுபான்ஷூ சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன். சர்வதேச விண்வெளி நிலையணத்தை பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக, தன அர்ப்பணிப்பு, தைரியம் மூலம் 100 கோடி மக்களின் கனவுகளுக்கு முன்மாதிரியாக உள்ளார். இது, நமது சொந்த விண்வெளி பயணமான ககன்யானை ககன்யானை நோக்கிய மற்றொரு மைல்கல் ஆகும் எனத் தெரித்துள்ளார்.

இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவுக்கு அடுத்தபடியாக விண்வெளி பயணம் மேற்கொண்ட இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சுபான்ஷு சுக்லா.

திருச்சி: ஜூலை 16 முதல் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமே செயல்படும்!

bus - 2026

திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாகக் (Terminus) கொண்டு இயக்கப்படும் அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு 16.07.2025 அன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் வெளியிட்ட அறிவிப்பில் கண்ட தகவல்…

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாகக் (Terminus) கொண்டு இயக்கப்பட்ட அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு 16.07.2025 அன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

செய்தியாளர் சந்திப்பின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்ததாவது:

திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாகக் கொண்டு இயக்கப்படும் அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகளும் பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு 16.07.2025 அன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

விரைவுபேருந்துகள் / புறநகரப் பேருந்துகள். 

சென்னை/திருப்பதி/வேலூர்/விழுப்புரம்/காஞ்சிபுரம்/புதுச்சேரி மார்க்கம்

மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் நெ.1 டோல்கேட், பழைய பால்பண்ணை, தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.

தஞ்சாவூர்/கும்பகோணம்/வேளாங்கண்ணி/காரைக்கால் மார்க்கம்

மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் துவாக்குடி, திருவெறும்பூர், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட் மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முனையத்திற்கு செல்லவேண்டும். பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை, டிவிஎஸ் டோல்கேட், பழைய பால்பண்ணை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.

நாமக்கல்/சேலம் /பெங்களுரு மார்க்கம்

மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் பேருந்துகளும் நெ.1 டோல்கேட், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், அனைத்து மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை, டிவிஎஸ் டோல்கேட், நெ.1 டோல்கேட் வழியாக திரும்பச் செல்லவேண்டும்.

புதுக்கோட்டை/அறந்தாங்கி/ராமேஸ்வரம் மார்க்கம்

மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் விமான நிலையம், டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து இதே வழித்தடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.

கரூர்/ஈரோடு/திருப்பூர்/கோயம்புத்தூர் மார்க்கம்

மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் சத்திரம் பேருந்து நிலையம், கரூர் புறவழிச்சாலை, சாஸ்திரி சாலை, மாவட்ட நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வ.உ.சிசாலை, மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து இதே வழித்தடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.

மணப்பாறை/திண்டுக்கல்/பழனி/குமுளி மார்க்கம்

மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் கருமண்டபம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.

மதுரை/தூத்துக்குடி/விருதுநகர்/திருநெல்வேலி மார்க்கம்

மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும்  அனைத்து பேருந்துகளும் தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். இவைபஞ்சப்பூர் முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.

நகரப் பேருந்துகள்

மத்திய பேருந்து நிலையத்தை முனையமாகக் (Terminus) கொண்டு இயங்கும் அனைத்து நகரப் பேருந்துகளும் மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.

ஆம்னி பேருந்துகள்

மத்திய பேருந்து நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் ஒப்பந்த ஊர்தி ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது. இவை பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு அருகில் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள காலி இடத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்.

உள் வருகை மற்றும் வெளிச்செல்கை (Entry and Exit)

அனைத்து பேருந்துகளும் பேருந்து முனையத்திற்கு உள்வரும்போது (Entry) காவல் சோதனை சாவடி எண்.2 (CP-2) வழியாக சென்று பேருந்து முனையத்தின் பின்வழியாக உள்ளே வரவேண்டும். பேருந்து முனையத்திலிருந்து வெளிச்செல்லும் (Exit) அனைத்து பேருந்துகளும் (மதுரை மார்க்கம் தவிர்த்து) தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் சந்திப்பு வரை சென்று திரும்பி (U Turn) செல்ல வேண்டும்.

பயணிகளுக்கான வசதிகள்

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான உணவு, சிற்றுண்டி, தேநீர், காபி மற்றும் குளிர்பானங்கள் போன்ற உணவு பொருட்கள் விற்பனைக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை ஒவ்வொரு மணி நேரமும் சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்க 228 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு தொடர்ந்து தூய்மை செய்யும் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

பயணிகள் மற்றும் அவர்தம் உடைமைகளின் பாதுகாப்பிற்கு காவல் துறையினர் 52 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.

பயணிகளின் தேவைக்கேற்ப ஆட்டோ, டாக்ஸி மற்றும் இ-டாக்ஸி சேவைகள் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

பயணிகளுக்கு உதவி செய்ய தன்னார்வலர்கள் 30 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பேருந்து முனையத்திற்குள் நடந்து  செல்ல சிரமப்படும் நோயாளிகள் முதியவர்கள் பயன்பாட்டிற்காக 3 எண்ணிக்கையிலான பேட்டரி வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. 

பயணிகளின் அவசரத் தேவைக்காக அழைப்பின் பேரில் (On call) மருத்துவர் குழு (Health Desk) தயார் நிலையில் உள்ளது

உசிலம்பட்டியில் காமராஜர் பிறந்த நாள் விழா

kamaraj birthday celeb in madurai - 2026

உசிலம்பட்டியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா வை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கொண்டாட்டம்!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில், முன்னாள் முதல்வரும் மறைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பெருந் தலைவர் காமராஜரின் 123 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காமராஜர் வேடமணிந்து ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பிறந்த நாளை கொண்டாடினர் .

இந்த ஊர்வலம் நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில், தொடங்கி கவணம்பட்டி சாலை, பேரையூர் சாலை என உசிலம்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியில் நிறைவு செய்தனர்.

இதனை, திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித் பாண்டி தலைமையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மதன் பிரபு முன்னிலையில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, காங்கிரஸ் கட்சியின் சார்பில் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதேபோன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முருகன் கோவில் அருகில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் மற்றும் விசிக கட்சி தலைவர் திருமாவளவன் தந்தை தொல்காப்பியர் நினைவு தினத்தை முன்னிட்டு,
திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பிறந்தநாள் மற்றும் வீரவணக்கம் செலுத்தினர்.