Home Blog Page 6339

சினிமா

[su_button url=”https://www.dhinasari.com/section/cinema/cinema-news/” background=”#307b35″ size=”7″ wide=”yes” center=”yes” radius=”round”]சினிமா செய்திகள்[/su_button]

[su_slider source=”category: 231″ link=”post” target=”blank”]

மேலும் …

[su_divider]

[su_button url=”https://www.dhinasari.com/section/cinema/gossips/” background=”#307b35″ size=”7″ wide=”yes” center=”yes” radius=”round”]சினி கிசு கிசு[/su_button]

[su_carousel source=”category: 232,233″ link=”post” target=”blank” items=”4″][su_carousel source=”media: 442,439,436,433,430,424,415,412,421,403″ link=”image” target=”blank”][/su_carousel]

மேலும்…

[su_divider]

[su_button url=”https://www.dhinasari.com/section/cinema/film-reviews/” background=”#307b35″ size=”7″ wide=”yes” center=”yes” radius=”round”]சினிமா விமர்சனம்[/su_button]

[su_post post_id=”004788″]சங்கராபரணம் – விமர்சனம்[/su_post]

[su_carousel source=”taxonomy: category/234″ link=”post” target=”blank” items=”4″][su_carousel source=”media: 442,439,436,433,430,424,415,412,421,403″ link=”image” target=”blank”][/su_carousel]

[su_button url=”https://www.dhinasari.com/categoryvideos/%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/” background=”#307b35″ size=”7″ wide=”yes” center=”yes” radius=”round”]இன்றைய காணொளி – பட டிரெய்லர்[/su_button]

[su_youtube_advanced url=”https://www.youtube.com/watch?v=8I_Eqt1xRRU” width=”620″ height=”480″ autoplay=”yes”][su_youtube url=”https://youtu.be/2mBG4vlhcCc” autoplay=”yes”] [/su_youtube_advanced]

[su_divider]

[su_button url=”https://www.dhinasari.com/section/photo-gallery/” background=”#307b35″ size=”7″ wide=”yes” center=”yes” radius=”round”]இன்றைய புகைப்படம்[/su_button]

unnamed (4)

[su_divider]

[su_button url=”https://www.dhinasari.com/section/photo-gallery/” background=”#307b35″ size=”7″ wide=”yes” center=”yes” radius=”round”]சினி புகைப்பட ஆல்பம்[/su_button]

[su_custom_gallery source=”category: 329″ link=”image” target=”blank” width=”150″ height=”120″]

தமிழ் மாதங்களும் அவற்றின் வடமொழிப் பெயர்களும்!

தமிழ் மாதங்கள்: சௌரமான ஆண்டுக் கணக்கீட்டில் மாதம் என்பது ஸூர்யன் ஒரு ராசியைக் கடக்க எடுத்துக் கொள்ளும் 30 நாட்களாக கணக்கிடப்பட்டுள்ளது. ஸூர்யன் எந்த ராசியில் என்று பிரவேசிக்கிறானோ அதுவே மாதத்தின் தொடக்க நாளாகவும் அந்த ராசியின் பெயரே மாதத்தின் பெயராகவும் உள்ளது. ஸங்கல்பத்தில் நாம் மாதத்தின் பெயரைக் கூறும்போது இந்தப் பெயர்களையே பயன்படுத்துகிறோம். ஆனால் நடைமுறையில் தமிழ் மாதங்களின் பெயர்கள்-அந்த மாதத்தில் எந்த நக்ஷத்திரத்தன்று பௌர்ணமி திதி வருகிறதோ அந்த நக்ஷத்திரத்தின் பெயரையே கொண்டதாக அமைந்துள்ளது.   மாதங்களின் பெயர்கள்


நடைமுறைப் பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது சித்திரை – மேஷ மாசம் வைகாசி – ரிஷப மாசம் ஆனி – மிதுன மாசம ஆடி – கடக மாசம் ஆவணி – சிம்ம மாசம் புரட்டாசி – கன்னி மாசம் ஐப்பசி – துலா மாசம் கார்த்திகை -விருச்சிக மாசம் மார்கழி – தனுர் மாசம் தை -மகர மாசம் மாசி – கும்ப மாசம் பங்குனி – மீன மாசம்  

  • எந்த மாசத்தில் பௌர்ணமி, அமாவாஸ்யை இல்லையோ அந்த மாஸத்துக்கு விஷமாசம் என்று பெயர்.

  • எந்த மாசத்தில் இரண்டு பௌர்ணமியோ, இரண்டு அமாவாஸ்யையோ வருகிறதோ அதற்கு மலமாசம் என்று பெயர்.

  • விஷ மாசத்திலும், மல மாசத்திலும் சுபகாரியங்களை விலக்க வேண்டும்.

  • ஆனால் சித்திரை, வைகாசி, மாதத்தில் இவை நிகழுமானால் அந்த இரு மாதங்களுக்கும் இந்த தோஷம் கிடையாது.

தமிழ் ஆண்டுகள் எத்தனை?

ஆண்டுகளைக் கணக்கிட நமது முன்னோர் சுழற்சி முறையில் அறுபது ஆண்டுகள் திரும்பத் திரும்ப வருவதாகக் கணக்கிட்டுத் தந்துள்ளனர். வான் மண்டலத் தொகுதி அல்ல ராசி மண்டலத் தொகுதி ஒரு வட்டப் பாதையாக 360 பாகைகளைக் கொண்டு விளங்குகிறது. நாம் முக்கியமானவை என்று கொண்டுள்ள 27 நக்ஷத்திரங்களும் இப்பாதையில் அமைந்துள்ளன. இதன் வழியாகவே ஒன்பது க்ரஹங்களும் சஞ்சரிக்கின்றன. 360 பாகைகளில் 12 ராசிகள் அடங்கியுள் ளன. எனவே ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளைக் கொண்டுள்ளது. சூரியன் வான் பாதையில் தினசரி 1 பாகை செல்கிறது. ஒருமுறை சுற்றிவர 365 நாள் 6 மணி நேரம் ஆகிறது. குரு சுமார் ஒரு வருடத்தில் ஒரு ராசியைத் தாண்டும். சனி மாதத்துக்கு ஒரு பாகை நகரும். எனவே குரு ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி வர 12 வருடங்கள் ஆகின்றன. சனி ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி வர 30 வருடங்கள் ஆகின்றன. சனியும் குருவும் சேர்ந்து அசுவதி நக்ஷத்திரத்தில் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படுகிறது. அதுவே பிரபவ வருடம்-இதுவே முதல் வருடம். இதிலிருந்து 60 வருடங்கள் கணக்கிடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டின் பெயரும் காரணப் பெயராக அமைந்துள்ளது.   ஆண்டுகள் 60


1.பிரபவ 2.விபவ 3.சுக்கில 4.ப்ரமோதூத 5 ப்ரஜோத்பத்தி 6.ஆங்கிரஸ

  1. ஸ்ரீமுக

8.பவ 9.யுவ 10.தாது 11.ஈசுவர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்கிரம 15.விஷு 16.சித்ரபானு 17.சுபானு 18.தாரண 19.பார்த்திப 20.விய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துர்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வரி 35.ப்லவ 36.சுபகிருது 37.சோபகிருது 38.குரோதி 39.விசுவாவசு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.சௌமிய 44.சாதாரண 45.விரோதிகிருது 46.பரிதாபி 47.ப்ரமாதீ 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.களயுக்தி 53.சித்தார்த்தி 54.ரௌத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்ரோத்காரி 58.ரக்தாக்ஷி 59.குரோதன 60.அக்ஷய

பஞ்சாங்கம் என்றால் என்ன?

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கம் எனப்படும். பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களாவன… திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் என்பவையே அவை. இதன் மூலம், பஞ்சாங்கம் பார்த்து பலன் சொல்ல நாமும் கொஞ்சம் கற்றுக் கொள்வோம்!

நட்சத்திரங்களின் அதிர்ஷ்ட தெய்வங்கள்

நட்சத்திரங்கள் – அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் அஸ்வினி – சரஸ்வதி பரணி – துர்காதேவி (அஷ்ட புஜம்) கார்த்திகை – முருகப் பெருமான் ரோகிணி – கிருஷ்ணர் (ஸ்ரீவிஷ்ணு) மிருகசீரிடம் – சந்திரசூடேஸ்வர் (சிவபெருமான்) திருவாதிரை – சிவபெருமான் புனர்பூசம் – ஸ்ரீராமர் (ஸ்ரீவிஷ்ணு) பூசம் – தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்) ஆயில்யம் – ஆதிஷேசன் மகம் – சூரிய பகவான் (சூரிய நாராயணர்) பூரம் – ஆண்டாள் உத்திரம் – மகாலட்சுமி அஸ்தம் – காயத்திரி தேவி சித்திரை – சக்கரத்தாழ்வார் சுவாதி – நரசிம்மமூர்த்தி விசாகம் – முருகப் பெருமான் அனுஷம் – லட்சுமி நாரயணர் கேட்டை – வராஹப் பெருமாள் (ஹயக்கிரீவர்) மூலம் – ஆஞ்சனேயர் பூராடம் – ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) உத்திராடம் – விநாயகர் திருவோணம் – ஹயக்கிரீவர் (மகாவிஷ்ணு) அவிட்டம் – ஸ்ரீ அனந்தசயன பெருமாள் (ஸ்ரீவிஷ்ணு) சதயம் – மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) பூரட்டாதி – ஏகபாதர் (சிவபெருமான்) உத்திரட்டாதி – மகா ஈஸ்வரர் (சிவபெருமான்) ரேவதி – அரங்கநாதர்

நட்சத்திரங்களுக்குரிய கிரகம் / தெய்வங்களும்

நட்சத்திரங்கள் – கிரகம் – தெய்வம் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் – சூரியன் (ஞாயிறு) – சிவன் ரோகிணி, அஸ்தம், திருவோணம் – சந்திரன் (திங்கள்) – சக்தி மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் – செவ்வாய் – முருகன் திருவாதிரை, சுவாதி, சதயம் – ராகு – காளி, துர்க்கை புனர்பூசம், விசாகம், பூரட்டாதி – குரு (வியாழன்) – தட்சிணாமூர்த்தி பூசம், அனுஷம், உத்திரட்டாதி – சனி – சாஸ்தா ஆயில்யம், கேட்டை, ரேவதி – புதன் – விஷ்ணு மகம், மூலம், அசுவினி – கேது – வினாயகர் பரணி, பூரம், பூராடம் – சுக்கிரன் (வெள்ளி) – மகாலட்சுமி

ராசிக்கு உரிய நட்சத்திரங்கள்

ராசி – அதற்குரிய நட்சத்திரங்கள் மேஷம் – அசுவினி, பரணி, கார்த்திகை 1-ஆம் பாதம் முடிய ரிஷபம் – கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய மிதுனம் – மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய கடகம் – புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய சிம்மம் – மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய கன்னி – உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய துலாம் – சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய விருச்சிகம் – விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய தனுசு – மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய மகரம் – உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய கும்பம் – அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய மீனம் – பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய

ஜானகிக்காகக் காத்திருப்பு!

sita-rama-in-the-forest-satchitananda-das வனவாசம் போன ராமன் வருடம் பதினான்கு வரமாய்ப் பெற்றான்! மா சம்பத்தாய் மனதில் குடிகொண்ட மனையாள் சீதையை மாசம் பத்தாய்ப் பிரிந்து மாய்ந்துதான் போனான்! மாசம்பத்தாய் அல்ல… வரு சம்பத்தைத் தேடி… வருசம் பத்தாய்க் காத்திருப்பு! ஜானகி யாரெனத் தெரியாமல்! பெண்ணுக்கே உரிய பிடிப்பாய் உடன் பிறந்த பிடிவாதம்… சட்டெனத் தோன்றும் சந்தேகம்… அதனால்… பிரிவு கண்டு ராமன் இளமையைச் சுட்டெரித்தாள் சீதை! பதிலுக்கு… சிதையெனத் தீயிட்டு சீதையின் மடமையைச் சுட்டெரித்தான் ராமன்! மாசம் பிறந்தால் மாயமானாய் மயக்கும் சம்பளப் பணம்..! இல்லறத்துக்கான இளமையைச் சுட்டெரித்து வாழ்க்கைக்கான வளமையைச் சுட்டெரித்து… வாழா வெட்டியாகவோ… வெட்டியாய் வாழ்வதாகவோ… காலம் கடத்தப் படுகிறது! ஜானகிக்கு மட்டுமல்ல..!

செங்கோட்டை ஆவுடையக்காளின் வேதாந்த ஆச்சே போச்சே!

avudaiakkal
avudaiakkal

செங்கோட்டை ஆவுடையக்காளின் பாடல் தொகுப்பில் இருந்து இந்த “வேதாந்த ஆச்சே போச்சே” பாடலை பொருள் புரிந்துணரும் வகையில் பதம் பிரித்து இட்டிருக்கிறேன்.

“போனதும் வந்ததும்” என்று இதனைக் கொள்ளலாம். ஏதாவது ஒன்று வெளியே போனால், அதனை ஈடுகட்ட அல்லது அதனினும் மகத்தான ஒன்று உள்ளே வந்து விடும். இது வெற்றிட நிரப்பல் போல் காலத்தால் அமைவது. இயற்கையாய் அமைத்துத் தருவது. போக வேண்டியதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு போகவிடாமல் காலம் தள்ளிச் சென்றால், வருகின்ற மேன்மையானது வராமல் போகும்.

இது இயற்கை நியதி. என்னால்தான் இது நடக்கிறது என்று ஒருவன் மமதை கொண்டு செல்வானேயானால், அவனை அங்கிருந்து அப்புறப்படுத்தி அவன் மமதைக்கு மருந்தாகி வேறொருவனை இயற்கை அங்கே நிரப்பி விடுகிறது. பூர்ணமதப் பூர்ணமிதம் பூர்ணாத்… எனும் வாக்கின்படி, ஒரு பூரணத்துவத்தில் இருந்து ஒன்றை எடுத்துவிட்டால், அந்தப் பூரணத்துவத்துக்கு இழப்பு ஏதும் ஏற்படாது. பூரணமாகவே இருக்கும். இதனை கணிதம் இன்ஃபினிட்டி என்கிறது.

முடிவற்ற ஒன்றில் இருந்து ஒரு சிறு துளியை அப்புறப்படுத்துவதால், முடிவற்ற பொருளுக்கு குறைவு ஏற்பட்டு விடுவதில்லை. ஆனால், மனித வாழ்க்கையில், ஒன்றின் இழப்பு மற்றொன்றின் வரவுக்கு வழி ஏற்படுத்தும். இதனையே அச்சே போச்சே என்று செங்கோட்டை ஆவுடையக்காள் பாடலாகக் குறிப்பிடுகிறார்.

இந்த ஆச்சே போச்சே விவகாரம், உலகியல் வாழ்க்கைக்கு உண்டான பொருளியல் சார்ந்த லௌகீக “வந்ததும் போனதும்” ஆக இல்லாமல், ஆன்மிக ஞானத்துக்கு உண்டான ஆச்சே போச்சே ஆகத் திகழ்கிறது.

ஆவுடையக்காளின் வேதாந்த ஆச்சே போச்சேயில் இருந்து எது போனது எது வந்தது என்பதை படித்து உணர்ந்து அறிந்தால், வேதாந்தமான, அத்வைத பரமான சிந்தனை உள்ளே தலைதூக்கும்.

(நான் விசிஷ்டாத்வைத மார்க்கத்தை ரசித்து ஏற்று, அழகியலை, ஸத்வ குணத்தை ஆராதித்து அனுபவிப்பவனாயினும், ஆவுடையக்காளின் சிறப்பை உணர்த்துதற்காய் இதனை வெளிப்படுத்துகிறேன்… ஆவுடையக்காள் இதில் 29 இருவரிக் கவிதையாக இதனைப் படைத்துள்ளார். கடைசியில் ஒரே ஒரு ‘இரு வரி’ வார்த்தைகளைச் சேர்ந்து 30 ஆக முடித்திருக்கிறேன்.

இந்த 30வது இரட்டை வரி அடியேன் சிறுமதிக்கு எட்டிய வரிகள். 30 ஆக முழுமை பெறட்டும் என்பதால் சேர்த்து வைத்தேன்.)
~~~~~~

வேதாந்த ஆச்சே போச்சே

ஆதி அந்தம் அற்ற ஆசாரியர் கிருபையினாலே ஆனதும் போனதும் அன்பாகச் சொல்வேன் கேட்பாய்! 1

ஆசைக் கயிற்று ஊஞ்சல் ஆடித் திரிந்ததும் போச்சே அசஞ்சலம் ஆன அகண்ட ஸ்வரூபம் ஆச்சே! 2

ஆண் என்றும் பெண் என்றும் அலைந்து திரிந்ததும் போச்சே… அசையாமல் ஞான ஸ்தலத்தில் இருக்கவும் ஆச்சே! 3

அனந்த ஜன்மத்திற்கு அடியிட்டு இருந்ததும் போச்சே… அனந்த ஜன்மங்களும் இல்லாது இருக்கவும் ஆச்சே! 4

அந்தகனாலே அதட்டி பயந்ததும் போச்சே… அவஸ்தை மூன்றுக்கு அப்புறப்பட்டவனும் ஆச்சே.! 5

அகங்கார துக்கம் அசூயை இடும்புகள் போச்சே… தூங்காமல் தூங்கி சுகமாய் இருக்கவும் ஆச்சே! 6

ஆறு குளங்களும் ஆடித் திரிந்ததும் போச்சே… அதுவே வடிவாய் திடமாய் இருக்கவும் ஆச்சே! 7

அலையில் துரும்பு போல் அலைந்து திரிந்ததும் போச்சே… அசையாத பருவதம் போலே இருக்கவும் ஆச்சே! 8

ஜன்ம இந்திரியங்கள் ஜரையும் தொடர்ந்ததும் போச்சே… ஜகம் எல்லாம் சித்து மயமாய் இருக்கவும் ஆச்சே! 9

தான் பிறர் என்கிற தாழ்த்தி உயர்த்தியும் போச்சே… சாஸ்திர வேதத்திற்கு அப்புறப்பட்டவன் ஆச்சே! 10

நாம ரூபம் நாம் என்ற பேர் எல்லாம் போச்சே… நான்முகனாலே அறியப் படாதவன் ஆச்சே! 11

நீரில் குளித்ததும் நீரில் களித்ததும் போச்சே… நித்திய நிர்மல ஸ்வரூபமே நான் என்பது ஆச்சே! 12

ஸ்தாவர ஜங்கமம் ஸத்தியம் என்பதும் போச்சே… ஸகல லோகங்களுக்கும் சின்மாத்திரம் மிச்சமது ஆச்சே! 13

பசிக்கு இரை தேடி பண்ணும் உபாயங்கள் போச்சே… பவ்யங்களுக்கு உள்ளதும் தானே வரும் என்பதும் ஆச்சே! 14

என்ன செய்வோம் என்று ஏக்கம் பிடித்ததும் போச்சே… ஏதேது வந்தாலும் எல்லாம் ஸ்வபாவமும் ஆச்சே! 15

காம குரோதாதிகள் காயக் கிலேசங்கள் போச்சே… காலத் திரயத்திலும் காணாத இன்னவன் ஆச்சே! 16

லோகாதி லோகங்கள் எனக்குள் இருந்ததும் போச்சே… ஒன்றும் இல்லை என்று தானாய் இருக்கவும் ஆச்சே! 17

கோத்திரங்கள் கல்பிதங் குணங்கள் குடிகளும் போச்சே… குணாதீதமான பரபிரம்மம் நான் என்பது ஆச்சே! 18

இனமும் பிள்ளை நான் என்ற பேர் எல்லாம் போச்சே… எப்போதும் பிரம்ம ஸ்வரூபமே நான் என்பது ஆச்சே! 19

வேத்து உருவமாகப் பார்த்து இருந்ததும் போச்சே… வேறு ஒன்றும் இல்லாமல் தானாய் இருக்கவும் ஆச்சே! 20

புத்திரனாலே கதி உண்டு என்பதும் போச்சே… புத்திரதாராதி பொய் பூர்ணம் நான் என்பது ஆச்சே! 21

பொய்யை மெய் என்று எண்ணி போகம் புசித்ததும் போச்சே… மெய்யை மெய் என்று எண்ணி மெய்யாய் இருக்கவும் ஆச்சே! 22

யக்ஞ யாகங்களும் ஏற்ற விதிகளும் போச்சே… யக்ஞாதி கர்மங்கள் என்னை பஜிக்கவும் ஆச்சே! 23

பஞ்ச கவ்வியத்தால் பலன் வரும் என்பதும் போச்சே… பஞ்ச தன்மாத்திரைக்கு பலனாய் இருக்கவும் ஆச்சே! 24

ஜனன மரணம் எனக்குள் இருந்ததும் போச்சே… ஜனனம் அது பொய் என்று சோதித்து இருக்கவும் ஆச்சே.! 25

சந்தைக் கூட்டம் வாழ்வுதானே மதித்ததும் போச்சே… அந்தக் கூட்டம் விட்டு ஆனந்த ரூபமும் ஆச்சே! 26

ஸப்த கோடி மந்திரம் சாஸ்திரங்கள் உள்ளதும் போச்சே… ஸத்து மயமான சாட்சியே நான் என்பது ஆச்சே! 27

மாயையை உபாசித்தால் வரும் மோட்சம் என்பதும் போச்சே… மாயைக்கு அதிஷ்டானம் மாயாவி நான் என்பது ஆச்சே! 28

எனக்கு எதிராக வெகுவாகப் பார்த்ததும் போச்சே… ஏகம் ஏகம் என்று எங்கும் நிறைந்தவர் ஆச்சே!~ 29

(செங்கோட்டை ஆவுடையக்காளின் வேதாந்த ஆச்சே போச்சே சம்பூர்ணம்)

~

காலனை வென்று காலமும் இருப்பதாய் எண்ணும் கர்வமும் போச்சே… காலத்துடன் கலந்து காலமாய் இருப்பதென எண்ணிய காலமும் ஆச்சே! 30

வெற்றித் திருநாள் விஜயதசமி

vijayadasami-kavithai வழிபடு வழிபடு வெற்றியை வழிபடு நித்தமும் வழிபடு சக்தியை வழிபடு வெற்றியைத் தந்திடும் விஜய தசமியில் சற்றே நினைந்திடு சக்தியின் வெற்றியை! ஒருமுக மனதாய் ஒன்பது இரவுகள் திருமகள் கலைமகள் மலைமகள் வணங்கி முப்பெரும் சக்தியை முழுதாய் உணர்ந்தோம் அப்பெரும் சக்தியே வெற்றியைத் தந்திடும்! செய்யும் தொழிலே தெய்வம் என்றிடும் மெய்யன் பர்பல் லாயிரம் இங்கே ஆயுள் முழுதும் சோறிடும் தொழிலை பயபக் தியுடன் வணங்குவர் இந்நாள்! வெற்றிக் கனியைத் தந்திடும் கதைகள் பாரத பூமியில் பலப்பல உண்டு அதிலும் குறிப்பாய் வெற்றியைப் பெறுவது வெற்றித் திருநாள் விஜய தசமியில்! மாபா ரதமும் ராமா யணமும் பாமர னுக்கும் பாடம் சொல்லும் இவ்விரு கதையிலும் வெற்றியை பெறுவது வெற்றித் திருநாள் விஜய தசமியில்! பெண்ணெனும் சக்தியே வெற்றியின் உருவெனும் உண்மையை உணரா மாந்தர் அரக்கர் மண்ணும் பெண்ணும் மகிழ்ச்சிக் குரிதாய் எண்ணிய அனைவரும் வீழ்ந்தழிந் தொழிந்தார் பத்துத் தலைகள் படைத்த ராவணன் செத்துப் போகவே சீதையைக் கொணர்ந்தான் வெற்றித் திருநாள் விஜய தசமியில் பத்துத் தலையையும் கொய்தனன் ராமன்! அண்ணன் செய்தான் அரும்பெருந் தவறு மண்ணை இழந்தான் மனிதம் இழந்தான் தன்னை இழந்தான் தம்பியர் இழந்தான் ஆண்மை கெடவே அனைத்தும் இழந்தான் தன்னைச் சேர்ந்த பொருளாய் எண்ணி பெண்ணையும் இழந்தான் பெருந்தவ றிழைத்தான் பெண்ணைப் பொருளாய் எண்ணிய தவறால் தண்டனை பன்னிரண் டாண்டுகள் பெற்றான் அஞ்ஞாத வாசமாய் ஓர்வரு டம்தனை பாண்டவர் ஐவரும் அடிமையில் கழித்தனர் ஆண்மையை இழந்து அலிவே டத்தில் மாண்டவன் போலே அர்ச்சுனன் வாழ்ந்தனன் நற்தவம் செய்தே சக்தியை வேண்டி பெற்றனன் மீண்டும் வெற்றியின் சக்தி! வெற்றித் திருநாள் விஜய தசமியில் வில்லினை மீட்டான் விஜயன் ஆனான்! பக்திப் பெருக்கால் நாம்கேட் டிருக்கும் இக்கதை கூறிடும் நீதியும் என்ன? கருமதி அறிவும் நிறைமதி போலே ஓங்கச் செய்வது சக்தியின் அருளே! வெற்றித் திருநாள் விஜய தசமியில் வெற்றியைக் கண்டனர் வேலையைத் தொடங்கி! ஐயமும் நீங்கியே அவ்வழி ஏற்று நயமுடன் வெற்றியை நாமும் பெறுவோம்! தோல்வியே படிகள் துயர்களே ஏணி வெல்வதே வாழ்வின் லட்சியம் கொண்டோம் வெற்றித் திருநாள் விஜய தசமியில் வெற்றியெனும் விரதம் பூணுவோம் வேங்கையரே! (14 வருடம் முன்பு எழுதிய கவிக் கிறுக்கல்! 14 வருட வனவாசம் முடிந்து இப்போது வான்வசம் வந்திருக்கிறது!  முதிர்ச்சியற்ற மொழிநடை; ஆனாலும் சிறு வயதில் என் சிந்தனை அப்போது எப்படி இருந்தது என்பதை வெளிக்காட்ட… இங்கே மறு வாசிப்பு)