திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் தரிசனம்
தமிழ் இதழ் கலைமணி விருது

திருவாவடுதுறை ஆதீனத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆடல்வல்லான் ஆனித் திருமஞ்சன விழாவில், விருது பெற்றவர்களுடன் திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்
தமிழ் இதழ் கலைமணி விருது
திருவாவடுதுறை ஆதினகர்த்தர், ஆனித்திருமஞ்சன விழாவின்போது, பத்திரிகையாளர் என்ற முறையில், தமிழ் இதழ் கலைமணி என்ற விருதினை அளித்து கவுரவித்தார். அப்போது, ஒரு பொன்னாடையைப் போர்த்தி, ருத்திராட்ச மாலை அணிவித்து, பட்டயம் ஒன்றையும் அளித்தார்.
அண்மையில் விகடன் பிரசுர வெளியீடாக வெளிவந்திருக்கும் என் ‘தட்சிணாமூர்த்தி வழிபாடு’ நூலைப் பார்த்துவிட்டு, மிகவும் சிலாகித்து கடிதம் அனுப்பியிருந்தார் ஆதினகர்த்தர். அதன் தொடர்ச்சியாக இந்த விருதை அளித்து, ஆன்மிகப் பணி மேன்மேலும் தொடரவேண்டும் என்று பாராட்டி வாழ்த்தினார்.
முன்னர் மஞ்சரியில் ஆசிரியப் பணியில் இருந்தபோது, என் கட்டுரைகளைப் படித்து வாழ்த்து தெரிவிப்பார். தமிழார்வமும், தமிழ் இலக்கியப் பணிகளைப் பாராட்டி ஊக்குவிக்கும் மனமும் கொண்ட திருவாவடுதுறை ஆதினத்துக்கு நெடுஞ்சாண்கிடையாக ஒரு வணக்கம்…
இது குறித்த தினமணி செய்தி கீழே…
—————————————————————————-
மயிலாடுதுறை, ஜூலை 10: நாகை மாவட்டம், திருவாவடுதுறை ஆதீனத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆடல்வல்லான் ஆனித் திருமஞ்சன விழாவில் 12 பேருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் முன்னிலையில், காலை 8 மணிக்கு ஆடல்வல்லானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மதியம் மாகேஸ்வர பூஜை நடைபெற்றது.
ஓதுவா மூர்த்திகளின் இசை நிகழ்ச்சியுடன் பிற்பகல் நிகழ்ச்சிகள் தொடக்கப்பட்டன.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் தா.ராசவன்னியன் “உமாபதி சிவாச்சார்யரின் இலக்கியங்கள் ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் பேசினார்.
ஆதீனப் புலவர் ஆதி. முருகவேள் எழுதிய “முப்பால் உணர்த்தும் மூன்று பொருள்’ என்ற விழா மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
ஆதீன குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் விழா மலரை வெளியிட்டார்.
வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
சென்னை கண் மருத்துவ நிபுணர் சந்திரேஷ்பெய்டு 2-ம் பிரதியைப் பெற்றார்.
விருது வழங்கும் விழா
ஓதுவா மூர்த்திகள், சிவாச்சார்யர்கள், இலக்கியச் சிந்தனையாளர்கள் 12 பேருக்கு ஆதீனத்தின் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதுகளை குருமகா சந்நிதானம் வழங்கினார்.
விருது பெற்றோர் பெயர்- விருது :
தூத்துக்குடி ஆலாலசுந்தரம் வேத சிவாகம வித்யாலயம் ஆசிரியர் கல்யாணசுந்தரம் பட்டர்- சிவாகமச் செல்வர்.
திருநெல்வேலி தாழையூத்து அருள்மிகு அழகிய கூத்தன் திருக்கோயில் ஸ்தானிகர் ஆர்.எம். கணேசபட்டர்- சிவாகமத் திருத்தொண்டர்.
சிவகிரி அருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில் ஸ்தானிகர் எஸ்.கணபதிசுந்தரம்- சிவாகமத் திருத் தொண்டர்.
திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஓதுவார் சோ. கனகசபாபதி- தெய்வத் தமிழிசைச் செல்வர்.
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் ஓதுவார் வே. பாலசுப்பிரமணியம் – தெய்வத் தமிழிசைச் செல்வர்.
உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் கோயில் ஓதுவார் ஆர். சுந்தரவடிவேல்- தெய்வத் தமிழைச் செல்வர்.
சென்னை, அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் சு. விக்ரமன் என்ற வேம்பு- இலக்கியத் தமிழ்ச் செல்வர்.
சென்னை நாடக ஆசிரியர் கவிஞர் ஞா. மாணிக்கவாசகன்- இலக்கியத் தமிழ்ச் செல்வர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் த.ராசவன்னியன்- இலக்கியத் தமிழ்ச் செல்வர்.
சென்னை விகடன் பிரசுரம் பொறுப்பாசிரியர் செங்கோட்டை ஸ்ரீராம்- தமிழ் இதழ் கலைமணி.
காஞ்சிபுரம் ஸ்தபதி எஸ். சுப்பையா- சிற்பக்கலைப் பேரரசு.
திருமுருகன்பூண்டி ஸ்தபதி சு.கனகரத்தினம்- திருக்கோயில் கலைச் செல்வர்.
விருது வழங்கும் விழா மற்றும் சிறப்பு பூஜைகளில் ஆன்மிக அன்பர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் பங்கேற்றனர்.
தமிழ் இதழ் கலைமணி விருது

திருவாவடுதுறை ஆதீனத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆடல்வல்லான் ஆனித் திருமஞ்சன விழாவில், விருது பெற்றவர்களுடன் திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்
தமிழ் இதழ் கலைமணி விருது
திருவாவடுதுறை ஆதினகர்த்தர், ஆனித்திருமஞ்சன விழாவின்போது, பத்திரிகையாளர் என்ற முறையில், தமிழ் இதழ் கலைமணி என்ற விருதினை அளித்து கவுரவித்தார். அப்போது, ஒரு பொன்னாடையைப் போர்த்தி, ருத்திராட்ச மாலை அணிவித்து, பட்டயம் ஒன்றையும் அளித்தார்.
அண்மையில் விகடன் பிரசுர வெளியீடாக வெளிவந்திருக்கும் என் ‘தட்சிணாமூர்த்தி வழிபாடு’ நூலைப் பார்த்துவிட்டு, மிகவும் சிலாகித்து கடிதம் அனுப்பியிருந்தார் ஆதினகர்த்தர். அதன் தொடர்ச்சியாக இந்த விருதை அளித்து, ஆன்மிகப் பணி மேன்மேலும் தொடரவேண்டும் என்று பாராட்டி வாழ்த்தினார்.
முன்னர் மஞ்சரியில் ஆசிரியப் பணியில் இருந்தபோது, என் கட்டுரைகளைப் படித்து வாழ்த்து தெரிவிப்பார். தமிழார்வமும், தமிழ் இலக்கியப் பணிகளைப் பாராட்டி ஊக்குவிக்கும் மனமும் கொண்ட திருவாவடுதுறை ஆதினத்துக்கு நெடுஞ்சாண்கிடையாக ஒரு வணக்கம்…
இது குறித்த தினமணி செய்தி கீழே…
—————————————————————————-
மயிலாடுதுறை, ஜூலை 10: நாகை மாவட்டம், திருவாவடுதுறை ஆதீனத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆடல்வல்லான் ஆனித் திருமஞ்சன விழாவில் 12 பேருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் முன்னிலையில், காலை 8 மணிக்கு ஆடல்வல்லானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மதியம் மாகேஸ்வர பூஜை நடைபெற்றது.
ஓதுவா மூர்த்திகளின் இசை நிகழ்ச்சியுடன் பிற்பகல் நிகழ்ச்சிகள் தொடக்கப்பட்டன.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் தா.ராசவன்னியன் “உமாபதி சிவாச்சார்யரின் இலக்கியங்கள் ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் பேசினார்.
ஆதீனப் புலவர் ஆதி. முருகவேள் எழுதிய “முப்பால் உணர்த்தும் மூன்று பொருள்’ என்ற விழா மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
ஆதீன குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் விழா மலரை வெளியிட்டார்.
வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
சென்னை கண் மருத்துவ நிபுணர் சந்திரேஷ்பெய்டு 2-ம் பிரதியைப் பெற்றார்.
விருது வழங்கும் விழா
ஓதுவா மூர்த்திகள், சிவாச்சார்யர்கள், இலக்கியச் சிந்தனையாளர்கள் 12 பேருக்கு ஆதீனத்தின் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதுகளை குருமகா சந்நிதானம் வழங்கினார்.
விருது பெற்றோர் பெயர்- விருது :
தூத்துக்குடி ஆலாலசுந்தரம் வேத சிவாகம வித்யாலயம் ஆசிரியர் கல்யாணசுந்தரம் பட்டர்- சிவாகமச் செல்வர்.
திருநெல்வேலி தாழையூத்து அருள்மிகு அழகிய கூத்தன் திருக்கோயில் ஸ்தானிகர் ஆர்.எம். கணேசபட்டர்- சிவாகமத் திருத்தொண்டர்.
சிவகிரி அருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில் ஸ்தானிகர் எஸ்.கணபதிசுந்தரம்- சிவாகமத் திருத் தொண்டர்.
திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஓதுவார் சோ. கனகசபாபதி- தெய்வத் தமிழிசைச் செல்வர்.
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் ஓதுவார் வே. பாலசுப்பிரமணியம் – தெய்வத் தமிழிசைச் செல்வர்.
உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் கோயில் ஓதுவார் ஆர். சுந்தரவடிவேல்- தெய்வத் தமிழைச் செல்வர்.
சென்னை, அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் சு. விக்ரமன் என்ற வேம்பு- இலக்கியத் தமிழ்ச் செல்வர்.
சென்னை நாடக ஆசிரியர் கவிஞர் ஞா. மாணிக்கவாசகன்- இலக்கியத் தமிழ்ச் செல்வர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் த.ராசவன்னியன்- இலக்கியத் தமிழ்ச் செல்வர்.
சென்னை விகடன் பிரசுரம் பொறுப்பாசிரியர் செங்கோட்டை ஸ்ரீராம்- தமிழ் இதழ் கலைமணி.
காஞ்சிபுரம் ஸ்தபதி எஸ். சுப்பையா- சிற்பக்கலைப் பேரரசு.
திருமுருகன்பூண்டி ஸ்தபதி சு.கனகரத்தினம்- திருக்கோயில் கலைச் செல்வர்.
விருது வழங்கும் விழா மற்றும் சிறப்பு பூஜைகளில் ஆன்மிக அன்பர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் பங்கேற்றனர்.
மறந்து போன பக்கங்கள் – ஒரு கடிதம்
அவருடைய எண்ணச் சிதறல்கள் இங்கே…
Sunday, May 04, 2008
கோபமும் வீரமும் வேறு படுவது எங்கே?
விகடன் பிரசுரத்தில் வெளிவந்துள்ள செங்கோட்டை ஸ்ரீராம் எழுதிய ‘மறந்து போன பக்கங்கள்’ நூலைப் படித்தேன்..ஒவ்வொரு விஷயத்தையும் நம் அனுபவத்தால் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு நம் வாழ்நாள் முழுதும் கூட போதாமல் போகலாம். ஆனால் அதையே அனுபவம் பெற்ற பல பெரியவர்களிடமிருந்து பெற்றால் குறைந்த காலத்தில் நிறைய அனுபவங்களைத் தெரிந்துக் கொள்ளலாம்.
ஆனால் கையைச் சுடும் என்றாலும் தீயைத் தொட்டுப் பார்த்து ஆமாம் ‘சரி தான், சுடுகிறது என்று சொல்லும் ஆசாமிகள் ஆயிற்றே நாம்!!இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் மிக எளிதில் கோப்ப்படக்கூடிய பெண் நான். கோபத்தில் என்ன சொல்கிறேன், என்ன செய்கிறேன் என்று தெரியாமல் எதையாவது செய்து விட்டு பின் வருத்தப்படுவேன். பெற்றோரும், நண்பர்களும் சொல்லி இப்போது கோபத்தை கட்டுப்படுத்தக் கற்றுக் கொண்டுருக்கிறேன்.
நான் கோபத்தில் எதையாவது சொல்லிவிட்டு 5 அல்லது 10 கழித்து நான் யோசிக்க ஆரம்பிக்கும் பொழுது தான் என் தவறு எனக்கு உறைக்கும். உடனே சம்பந்தபட்டவர்களிடம் ‘சாரி கேட்டுக் கெஞ்சி அவர்களை சமாதனப்படுத்திவிடுவேன். அவர்கள் அப்போது சமதானம் ஆனாலும் அவரகள் மனதில் அந்த வடு இருக்கத் தானே செய்யும். இந்தக் கட்டுரையை படிக்கும் போது தான் என் மரமண்டையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.
சுவாமி விவேகனந்தரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் சிஷ்யையின் பெயரை எனக்கு வைத்ததால், அவர் எனக்குச் சிறு வயதிலேயே அவர் அறிமுகம் ஆகிவிட்டார். பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டியில் அவரைப் பற்றி பேசி பல முதல் பரிசிகளைப் பெற்று இருக்கிறேன்.அவர் கோபத்தைப் பற்றி சொல்லும் போது ‘பலமே வாழ்வு, பலவீனமே மரணம்’ என்று ஒரே வாக்கியத்தில் சொல்லிவிட்டார்.
அதாவது வீரம் நெஞ்சில் இருக்கும் போது தானே வெளித்தெரிகிறது. அந்த வீரம் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும். கொடியவர்களை வீழ்த்தவும், நல்லவர்களுக்கு உதவுவதாகவும் இருக்க வேண்டும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய தமிழ்ப் பட ஹீரோக்களின் கோபம் போன்று இருக்க வேண்டும்.
நம் வாழ்க்கையில் 10 சதவீதம் நமக்கு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்தது. மீதி 90 சதவீதம் நாம் அந்த நேரத்தில் எப்படி நடந்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது.உதாரணத்திற்கு, காலையில் அம்மாவோ, தங்கையோ, மனைவியோ தேநீர் கொண்டு வரும் பொழுது கைத் தவறி சட்டையில் கொட்டி விடுகிறது. இது என்ன அவர்கள் வேண்டும் என்றா செய்தார்கள். தெரியாமல் நடந்து விட்டது. இதை நாம் இரண்டு முறைகளில் கையாளலாம். ஒன்று, கொட்டியவரைத் திட்டுவது. மற்றொன்று ‘பரவாயில்லை, தெரியாமல் தானே கொட்டி விட்டது’ என்று சொல்லி வேறு சட்டையை மாற்றிக் கொள்ளவது.
இதில் முதல் ஒன்று, அன்றையப் பொழுதை நீங்களாகவே கெட்டப் பொழுதாக்கிக் கொள்ளவதாகி விடும். மற்றொன்று அன்றைய பொழுது இன்னும் நல்ல பொழுதாகி அவரகள் அன்பு கூடவும் வாய்ப்பளிக்கும்.. இதில் எது நல்லது என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.வாரியார் சுவாமிகளும் கோபத்தைப் பற்றி இப்படிக் கூறியிருக்கிறார்.’சூடான பால் ஆற வேண்டும் என்றால் அதை வேறு பாத்திரத்தில் மாற்றி ஆற்ற வேண்டும்’.
அது போல சூடான சூழ்நிலையில் உங்கள் மனம் சலனமுற்றால் அந்த இடத்தை விட்டு அகன்று விட வேண்டும்.சரி, இது நம்மை பிறர் கோபப்படுத்தும் போது செய்ய வேண்டியது. ஆனால் நாமும் பிறரைக் கோபப்படுத்துவது போல் ஆகிவிடுகிறதே அப்பொழுது என்ன செய்வது?
அதற்கும் ஒரு வழி சொல்கிறார்.உலகில் மிக நல்லவன் என்றும், மிகக் கொட்டவன் என்றும் யாரும் இலர். அனைவருக்கும் இரண்டும் கலந்தே இருக்கும். இரண்டையும் தெரிந்து கொண்டு ஒருவனின் குற்றங்களை வாய் விட்டு சொல்லாமலும், குணங்களை பாராட்டவும் செய்தால் மற்றவரைக் கோபப்படுத்துவதில் இருந்தும் நாம் தப்பித்து விடலாம்.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
இது வள்ளுவன் குறள்.
பின் வருவது இந்த நூல் ஆசிரியரின் குரல்.
இனத்தை சுகத்தை இனிதாய் விரும்பின்
சினத்தை அடக்கல் சிறப்பு.
என் நண்பர் இதற்காக எனக்குச் சொன்ன அறிவரை,
நான்கு அறிவாளிகள் மத்தியில் நாம் ஒரு அறிவாளியாக நடந்துக் கொள்வது,
நான்கு பைத்தியங்களுக்கு மத்தியில் நாம் ஒரு பைத்தியமாக நடந்துக் கொள்வது,
இப்படிச் செய்தால் பிரச்சனை வராதே!!பிரச்சனை இல்லாவிட்டால், அங்கே கோபத்திற்கு என்ன வேலை???என்ன சரி தானே??
Posted by நிவேதிதா
மகா சுதர்சன வழிபாடு புத்தக விமர்சனம்
மகா சுதர்சன வழிபாடு புத்தகத்தின் விமர்சனம்
வெளிவந்தது : ஸ்ரீ வைஷ்ணவ சுதர்சனம் மே 2008 இதழ்
மஹா சுதர்சன வழிபாடு :
பக்கம் : 96
விலை ரூ: 35/-
ஆசிரியர் : செங்கோட்டை ஸ்ரீராம்
வெளியீடு: விகடன் பிரசுரம், 757 அண்ணா சாலை, சென்னை -0௨
உலகனைத்தையும் ஆக்கி அளித்து அழிக்கும் எம்பெருமானான ஸ்ரீமந் நாராயணனையே அடையும் பேறாகவும் அவனை அடைவதற்கு அவனையே உபாயமாகவும் எண்ணியிருக்கும் சரணாகதி நிஷ்டர்களுக்கு இம்மை மறுமை நலன்களை அவனே நல்குவான். இத்தகைய உறுதியான நிலையை எட்டாதவர்கள் தங்களது இம்மைப் பலன்களுக்காக அவனால் படைக்கப்பட்ட சிறு தெய்வங்களின் காலில் விழாது, அவனது கையார் திருச்சக்கரத்தை வழிபடும் பழக்கமும் பெருகியுள்ளது.
அத்தகையோருக்கு வழிகாட்டும் வண்ணம் வடிவார்சோதி வலத்துறையும் திருச்சக்கரத்தாழ்வாரின் மகிமை, அவரைப் பற்றிய புராண வரலாறுகள், தத்துவங்கள், ஸுதர்சனரைப் பிரதானமாகக் கொண்டு வழிபடும் ஸந்நிதிகள் அமையப் பெற்ற திருத்தலங்கள், ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் ஸுதர்சனாழ்வானைப் பாடியுள்ள இடங்கள், ஸுதர்சன ஹோமம், பலன் தரும் ஸுதர்சன மந்திரங்கள், ஸுதர்சனரைப் பற்றிய துதி நூல்கள் ஆகியவை இந்நூலில் ஆசிரியரால் மிகவும் இனிய, எளிய தமிழில் விளக்கப் பட்டுள்ளன. இந்நூலைப் பெற்றுப் படித்து ஸுதர்சனரின் அருளுக்கு அன்பர்கள் இலக்காகலாம்.
மறந்து போன பக்கங்கள் – ஒரு கடிதம்
அவருடைய எண்ணச் சிதறல்கள் இங்கே…
Sunday, May 04, 2008
கோபமும் வீரமும் வேறு படுவது எங்கே?
விகடன் பிரசுரத்தில் வெளிவந்துள்ள செங்கோட்டை ஸ்ரீராம் எழுதிய ‘மறந்து போன பக்கங்கள்’ நூலைப் படித்தேன்..ஒவ்வொரு விஷயத்தையும் நம் அனுபவத்தால் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு நம் வாழ்நாள் முழுதும் கூட போதாமல் போகலாம். ஆனால் அதையே அனுபவம் பெற்ற பல பெரியவர்களிடமிருந்து பெற்றால் குறைந்த காலத்தில் நிறைய அனுபவங்களைத் தெரிந்துக் கொள்ளலாம்.
ஆனால் கையைச் சுடும் என்றாலும் தீயைத் தொட்டுப் பார்த்து ஆமாம் ‘சரி தான், சுடுகிறது என்று சொல்லும் ஆசாமிகள் ஆயிற்றே நாம்!!இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் மிக எளிதில் கோப்ப்படக்கூடிய பெண் நான். கோபத்தில் என்ன சொல்கிறேன், என்ன செய்கிறேன் என்று தெரியாமல் எதையாவது செய்து விட்டு பின் வருத்தப்படுவேன். பெற்றோரும், நண்பர்களும் சொல்லி இப்போது கோபத்தை கட்டுப்படுத்தக் கற்றுக் கொண்டுருக்கிறேன்.
நான் கோபத்தில் எதையாவது சொல்லிவிட்டு 5 அல்லது 10 கழித்து நான் யோசிக்க ஆரம்பிக்கும் பொழுது தான் என் தவறு எனக்கு உறைக்கும். உடனே சம்பந்தபட்டவர்களிடம் ‘சாரி கேட்டுக் கெஞ்சி அவர்களை சமாதனப்படுத்திவிடுவேன். அவர்கள் அப்போது சமதானம் ஆனாலும் அவரகள் மனதில் அந்த வடு இருக்கத் தானே செய்யும். இந்தக் கட்டுரையை படிக்கும் போது தான் என் மரமண்டையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.
சுவாமி விவேகனந்தரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் சிஷ்யையின் பெயரை எனக்கு வைத்ததால், அவர் எனக்குச் சிறு வயதிலேயே அவர் அறிமுகம் ஆகிவிட்டார். பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டியில் அவரைப் பற்றி பேசி பல முதல் பரிசிகளைப் பெற்று இருக்கிறேன்.அவர் கோபத்தைப் பற்றி சொல்லும் போது ‘பலமே வாழ்வு, பலவீனமே மரணம்’ என்று ஒரே வாக்கியத்தில் சொல்லிவிட்டார்.
அதாவது வீரம் நெஞ்சில் இருக்கும் போது தானே வெளித்தெரிகிறது. அந்த வீரம் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும். கொடியவர்களை வீழ்த்தவும், நல்லவர்களுக்கு உதவுவதாகவும் இருக்க வேண்டும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய தமிழ்ப் பட ஹீரோக்களின் கோபம் போன்று இருக்க வேண்டும்.
நம் வாழ்க்கையில் 10 சதவீதம் நமக்கு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்தது. மீதி 90 சதவீதம் நாம் அந்த நேரத்தில் எப்படி நடந்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது.உதாரணத்திற்கு, காலையில் அம்மாவோ, தங்கையோ, மனைவியோ தேநீர் கொண்டு வரும் பொழுது கைத் தவறி சட்டையில் கொட்டி விடுகிறது. இது என்ன அவர்கள் வேண்டும் என்றா செய்தார்கள். தெரியாமல் நடந்து விட்டது. இதை நாம் இரண்டு முறைகளில் கையாளலாம். ஒன்று, கொட்டியவரைத் திட்டுவது. மற்றொன்று ‘பரவாயில்லை, தெரியாமல் தானே கொட்டி விட்டது’ என்று சொல்லி வேறு சட்டையை மாற்றிக் கொள்ளவது.
இதில் முதல் ஒன்று, அன்றையப் பொழுதை நீங்களாகவே கெட்டப் பொழுதாக்கிக் கொள்ளவதாகி விடும். மற்றொன்று அன்றைய பொழுது இன்னும் நல்ல பொழுதாகி அவரகள் அன்பு கூடவும் வாய்ப்பளிக்கும்.. இதில் எது நல்லது என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.வாரியார் சுவாமிகளும் கோபத்தைப் பற்றி இப்படிக் கூறியிருக்கிறார்.’சூடான பால் ஆற வேண்டும் என்றால் அதை வேறு பாத்திரத்தில் மாற்றி ஆற்ற வேண்டும்’.
அது போல சூடான சூழ்நிலையில் உங்கள் மனம் சலனமுற்றால் அந்த இடத்தை விட்டு அகன்று விட வேண்டும்.சரி, இது நம்மை பிறர் கோபப்படுத்தும் போது செய்ய வேண்டியது. ஆனால் நாமும் பிறரைக் கோபப்படுத்துவது போல் ஆகிவிடுகிறதே அப்பொழுது என்ன செய்வது?
அதற்கும் ஒரு வழி சொல்கிறார்.உலகில் மிக நல்லவன் என்றும், மிகக் கொட்டவன் என்றும் யாரும் இலர். அனைவருக்கும் இரண்டும் கலந்தே இருக்கும். இரண்டையும் தெரிந்து கொண்டு ஒருவனின் குற்றங்களை வாய் விட்டு சொல்லாமலும், குணங்களை பாராட்டவும் செய்தால் மற்றவரைக் கோபப்படுத்துவதில் இருந்தும் நாம் தப்பித்து விடலாம்.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
இது வள்ளுவன் குறள்.
பின் வருவது இந்த நூல் ஆசிரியரின் குரல்.
இனத்தை சுகத்தை இனிதாய் விரும்பின்
சினத்தை அடக்கல் சிறப்பு.
என் நண்பர் இதற்காக எனக்குச் சொன்ன அறிவரை,
நான்கு அறிவாளிகள் மத்தியில் நாம் ஒரு அறிவாளியாக நடந்துக் கொள்வது,
நான்கு பைத்தியங்களுக்கு மத்தியில் நாம் ஒரு பைத்தியமாக நடந்துக் கொள்வது,
இப்படிச் செய்தால் பிரச்சனை வராதே!!பிரச்சனை இல்லாவிட்டால், அங்கே கோபத்திற்கு என்ன வேலை???என்ன சரி தானே??
Posted by நிவேதிதா
மகா சுதர்சன வழிபாடு புத்தக விமர்சனம்
மகா சுதர்சன வழிபாடு புத்தகத்தின் விமர்சனம்
வெளிவந்தது : ஸ்ரீ வைஷ்ணவ சுதர்சனம் மே 2008 இதழ்
மஹா சுதர்சன வழிபாடு :
பக்கம் : 96
விலை ரூ: 35/-
ஆசிரியர் : செங்கோட்டை ஸ்ரீராம்
வெளியீடு: விகடன் பிரசுரம், 757 அண்ணா சாலை, சென்னை -0௨
உலகனைத்தையும் ஆக்கி அளித்து அழிக்கும் எம்பெருமானான ஸ்ரீமந் நாராயணனையே அடையும் பேறாகவும் அவனை அடைவதற்கு அவனையே உபாயமாகவும் எண்ணியிருக்கும் சரணாகதி நிஷ்டர்களுக்கு இம்மை மறுமை நலன்களை அவனே நல்குவான். இத்தகைய உறுதியான நிலையை எட்டாதவர்கள் தங்களது இம்மைப் பலன்களுக்காக அவனால் படைக்கப்பட்ட சிறு தெய்வங்களின் காலில் விழாது, அவனது கையார் திருச்சக்கரத்தை வழிபடும் பழக்கமும் பெருகியுள்ளது.
அத்தகையோருக்கு வழிகாட்டும் வண்ணம் வடிவார்சோதி வலத்துறையும் திருச்சக்கரத்தாழ்வாரின் மகிமை, அவரைப் பற்றிய புராண வரலாறுகள், தத்துவங்கள், ஸுதர்சனரைப் பிரதானமாகக் கொண்டு வழிபடும் ஸந்நிதிகள் அமையப் பெற்ற திருத்தலங்கள், ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் ஸுதர்சனாழ்வானைப் பாடியுள்ள இடங்கள், ஸுதர்சன ஹோமம், பலன் தரும் ஸுதர்சன மந்திரங்கள், ஸுதர்சனரைப் பற்றிய துதி நூல்கள் ஆகியவை இந்நூலில் ஆசிரியரால் மிகவும் இனிய, எளிய தமிழில் விளக்கப் பட்டுள்ளன. இந்நூலைப் பெற்றுப் படித்து ஸுதர்சனரின் அருளுக்கு அன்பர்கள் இலக்காகலாம்.







திருக்கோஷ்டியூர் திருத்தலம்:






















