Home Blog Page 83

குரு பெயர்ச்சி பலன்கள் (2025-26): தனுசு

gurupeyarchi image common - 2026

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026

இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025  நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது


குரு பெயர்ச்சி பலன்கள் – 2025

தனுசு

இதுவரை ராசிநாதனாகிய குரு ஆறாமிடத்தில் இருந்து வரும் 11-05-2025 முதல் ராசியை பார்ப்பதும் ஏழாமிடத்தில் அமர்வதும் லாபஸ்தானத்தையும், முயற்சிஸ்தானத்தையும் பார்வை இடுகிறார். இந்த குரு பெயர்ச்சி தனுசு ராசகாரர்களுக்கு நல்ல காலமாகவே அமையும். எதிர்கால திட்டங்கள் சிறப்பாக செயல்படும்.

ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதால் மனசஞ்சலங்கள் நீங்கி பல நாட்கள் மன வருத்தம் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். கடன் தொல்லைகள் நீங்கி படிபடியாக இயல்பு நிலைக்கு வருவீர்கள். எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டுமென்று செயல்பட்டுக் கொண்டிருப்பீர்கள். முக்கிய விஜயங்களில் தனி திறமை கொண்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

உங்களின் முயற்சிகள் எதிர்பார்த்தபடி சிறப்பாக அமையும். செய்யும் தொழிலிலும் இனி உங்களின் ஈடுபாடும் தொடர் முயற்சியும் உங்களை மேலும் வெற்றி பெற செய்யும் சனி / ராகு மூன்றாமிடத்தில் இருப்பது உங்களுக்கு நல்ல சூழ்நிலை என்றாலும் அவர்களுக்கு குருவின் பார்பையும் பெறுவது மிக சிறப்பான நற்பலன்கள் உண்டாகும்.

லாபஸ்தானத்தை குரு பார்வை இடுவது எதிலும் தீர்க்கமான முடிவுகளை எடுத்து லாபகரமான வளர்ச்சியை பெறுவீர்கள். பொருளாதாரத்தில் மேன்மையை பெறுவீர்கள். பல சோதனைகளை கடந்து மேன்மையை அடைவீர்கள். எதிர்கால வளங்களை உறுதி செய்து வெற்றியை காண்பீர்கள். உறவினர்கள் உங்களின் அன்பை பெறுவார்கள்.

குரு பகவானின் பார்வை பலன்கள்: 

ராசியை குருபகவான் பார்ப்பதால் அழகு, இளமை கூடும். எதிலும் துல்லியமாக திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். மனதிலிருந்த குழப்பங்கள், சஞ்சலங்கள் அனைத்தும் விலகி, புது உற்சாகம் பிறக்கும். உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால், சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். கவுரவப் பதவிகள் தேடிவரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புதிதாக குளம் வெட்டுவது, கிணறு அமைப்பது என்று பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். கோயில் குடமுழுக்கு, ஊர் திருவிழா என்று உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். ஏமாற்றங்கள், தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுவீர்கள்.உங்களால் பயன் அடைந்தவர்கள், இப்போது உங்களுக்கு உதவ முன்வருவார்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள். வீண் பழிகள் விலகும். உங்கள் ராசிக்கு 11-ம் இடமாகிய லாபஸ்தானம் குருவின் பார்வையைப் பெறுவதால் விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். ஷேர் மார்க்கெட் மூலம் பணவரவு உண்டாகும்  

பரிகாரங்கள்:

வியாழக்கிழமைகளில் நவகிரக குரு வழிபாடு செய்து தீபமேற்றி வேண்டு கொள்வதும் ஜீவசமாதிகளில் சென்று சிறிது நேரம் தியானம் செய்து வருவதும் சிறப்பான பலனை பெற்று தரும்.

குரு பெயர்ச்சி பலன்கள் (2025-26): விருச்சிகம்

gurupeyarchi image common - 2026

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026

இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025  நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது


குரு பெயர்ச்சி பலன்கள் – 2025

விருச்சிகம்

 உங்களின் ராசியை பார்த்து வந்த குரு இனிவரும் 11-05-2025 முதல் தனஸ்தானத்தையும், முயற்சி ஸ்தானத்தையும் விரையஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். அட்டம குருவாக இருப்பது சில நேரம் பணதட்டுப்பாடுகளை தருவதும் ஆவணங்கள் மூலம் சிக்கலும் வரலாம் என்பதால் அடுத்தவருக்கு பிணையம் இடுவதை தவிர்ப்பது நல்லது.

தனஸ்தானத்தை குரு பார்ப்பது தொழிலில் முழு கவனம் செலுத்த வேண்டிவரும். அடுத்தவரை நம்பி செயல்படும் எந்த காரியமும் சிறப்பாகவோ, நல்லதாகவோ அமையாது என்பதால் அடிக்கடி அதில் கவனம் செலுத்துவது நல்லது. வரக்கூடிய வருமான வாய்ப்புகளை சேமிக்க முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். ஏதாவது செலவீனம் வந்து மறையும். புதிய தொழில் வாய்ப்புகள் வந்தாலும் அதனை தவிர்த்து நல்ல முயற்சிகளை ஊக்கபடுத்தி செயல்படுவதன் மூலம் தன்மை பெறுவீர்கள்.

உங்களின் அர்த்தாஸ்டம சனியுடன் ராகு இணைவதால் பல உடல்நல குறைபாடுகளும் தூக்கமின்மை, பல எண்ண அலைகளால் வரும் துன்பங்களுக்கு குரு பார்வையால் அதிலிருந்து விடுதலை பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற பெறும் கஷ்டத்தை அனுபவித்து தீர்த்து விடுவீர்கள். தொழிலாளர்களின் கஷ்டங்களை தன் கஷ்டம் போல் நினைத்து அவர்களுக்கு உங்களால் உண்டான உதவிகளை செய்வீர்கள்.

விரையஸ்தானத்தை குரு பார்ப்பதால் ஒரு புறம் செலவுகள் வந்தாலும் அதனை சரி செய்ய ஏதாவது வழியில் பண புழக்கம் வந்து உங்களுக்கு எதிலும் சிரமமின்றி உறுதுணை கிடைக்க பெறுவீர்கள். கடனாக இருந்தாலும் கடமையாக இருந்தாலும். 

அதை சமாளிக்கும் வாய்ப்பை பெறுவீர்கள். காலத்தையும், நேரத்தையும் வீண் செய்யாமல் உடனே செய்துவிட வேண்டுமென்று செயல்பட்டு வெற்றியை பெறுவீர்கள்.

குரு பகவானின் பார்வை பலன்கள்: 

குரு பகவான் 2-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. குடும்பத்தாரின் பூரண ஒத்துழைப்பு, உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அதே அளவு விமர்சனங்களும் வரும். எதிர்பார்த்தபடி பணவரவு இருக்கும். உறவுகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி நல்லது நடக்கும். அத்தியாவசியப் பொருள்களை வாங்குவீர்கள். குரு பகவான் 4-ம் இடத்தைப் பார்ப்பதால், வீடு பராமரிப்புப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். பழைய சொத்தை விற்றுவிட்டுப் புதிதாக பெரிய மனை வாங்குவீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். உடல் சோர்வு, வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். தாய் வழிச் சொத்து கைக்கு வரும். அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். குருபகவான் 12-ம் இடத்தைப் பார்ப்பதால், மறைமுகப் பணவரவு, திடீர்ப் பயணங்கள் கூடி வரும். அதன்மூலம் ஆதாயமும் உண்டு. அரசு, வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியம் கூடாது | 

பரிகாரங்கள்:

வியாழக்கிழமைகளில் மஞ்சள் வண்ண பட்டு வஸ்திரத்தை பைரவருக்கு கொடுத்து உளுந்து வடை மாலை போட்டு தேங்காய் முடியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள சகல காரியமும் நற்பலன் தரும்.

குரு பெயர்ச்சி பலன்கள் (2025-26): துலாம்

gurupeyarchi image common - 2026

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026

இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025  நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது


குரு பெயர்ச்சி பலன்கள் – 2025

துலாம்

இதுவரை அட்டம குருவாக இருந்த குரு பகவான் இனிவரும் 11-05-2025 முதல் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் ராசியையும், மூன்றாமிடம், பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்வை இடுகிறார். இதுநாள் வரை பல தடைகளை சந்தித்து வந்த உங்களுக்கு நல்ல காலமாக அமையும்.

உங்களின் ராசியை குரு பார்ப்பதால் உடல் நலனில் வளம் பெறுவீர்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சியை பெறுவீர்கள். சொந்த தொழில் செய்து வருபவருக்கும். மருத்துவ துறையில் இருப்பவருக்கு இந்த காலம் நல்லதாக அமையும். தங்கம், வெள்ளி வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சொந்த ஊரிலிருந்து வெளியில் சென்று பிரபலம் அடைவீர்கள். மன சஞ்சலங்கள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.

மூன்றாமிடமான முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்க பெறுவீர்கள். எடுத்த செயலில் ஊக்கமும், ஆக்கமும் உண்டாகி பெரருளாதாரத்தில் மேன்மை பெறுவீர்கள். கடந்த காலத்தில் நீங்கள் பட்டதுன்பம் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். ஆன்மீக சேவையும், ஆர்வமும் உங்களுக்கு பக்க பலமாக செயல்பட்டு மேன்மை பெறுவீர்கள்.

பஞ்சமஸ்தானத்தில் ஏற்கனவே சனி / ராகு இணைந்திருப்பது அவர்களை குரு பார்வை வருவது குலதெய்வ அனுகிரகமும் கொடுத்த இடத்தில் பணம் வந்து சேரும். நீங்கள் கொடுத்த உத்திரவாதத்தை செயல்படுத்துவீர்கள். பூர்வீக இடத்தில் உங்கள் பெயருக்கு நிறைவான சூழ்நிலை உண்டாகும்.

08-10-2025 முதல் குரு உங்களின் தொழில் ஸ்தானத்தில் வருவதால் புதிய தொழில் முயற்சிகளை கைவிட்டு செய்யும்  தொழிலில் கவனம் செலுத்துவது நல்லது. கூட்டு தொழிலை தவிர்ப்பது நல்லது.

குரு பகவானின் பார்வை பலன்கள்: 

ராசியை குரு பார்ப்பதால், சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். ஆரோக்கியம் மிகச் சிறப்பாக அமையும். தோற்றப் பொலிவு கூடும். தயக்கம் தடுமாற்றம் எல்லாம் நீங்கும். கையில் பணம் புரளும். வருங்காலத்தை மனதில் கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். 3-ம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால், சொத்துச் சேர்க்கை உண்டு. எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. பலருக்கும் நகை, ஆபரணங்கள் சேரும். செய்தொழிலில் இருந்து வந்த கடின நிலைகள் மாறும். 5-ம் இடத்தை குரு பார்வையிடுவதால், வெகு காலமாக பிள்ளைப் பாக்கியத்துக்காகக் காத்திருந்த அன்பர்களுக்கு, பிள்ளைப் பேறு கிடைக்கும். பிள்ளைகளால் ஆதாயம், பெருமை வந்து சேரும். வட்டிக்கு வாங்கிய கடனை கொஞ்சம் கொஞ்சமாக தந்து முடிப்பீர்கள். எடுத்த காரியங்களில் முதல் முயற்சியிலேயே வெற்றி கிட்டும். வாகன வசதி பெருகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்  

பரிகாரங்கள்:

வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு மூன்று நெய் தீபமேற்றி குரு காயத்ரி சொல்லி கடலை பருப்பு நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியைத் தரும்.

குரு பெயர்ச்சி பலன்கள் (2025-26): கன்னி

gurupeyarchi image common - 2026

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026

இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025  நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது


குரு பெயர்ச்சி பலன்கள் – 2025

கன்னி

இதுவரை உங்களின் ராசியை பார்த்து வந்த குரு இனிவரும் 11-05-2025 முதல் உங்களின் தனஸ்தானத்தையும், சுகஸ்தானத்தையும், சத்ருஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் வாழ்வில் பொன்னான நாளில் அமையும்.

உங்களின் தொழில்ஸ்தானத்தில் குரு அமர்ந்து தனஸ்தானத்தை பார்வை இடுவது பொதுவாக குரு பத்தில் அமர்ந்தால் பதவி பறிபோகும், தொழில் கெடும் என்று சொல்வார்கள். உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியும், ராசிநாதனும் ஒருவரே என்பதால் குரு பாதி பலன்களை குறைத்து கொள்வார் தொழிலில் லாபமும் நஷ்டமும் கலந்தே உண்டாகும். எளிமையான வாழ்க்கையை விரும்பும் உங்களுக்கு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவீர்கள்.

சுகஸ்தானத்தை குரு பார்ப்பதால் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். கடனில் இருந்து மீள்வீர்கள். உடல்நலனில் இருந்த குறைபாடுகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். காலத்தையும், நேரத்தையும் வீண் செய்யாமல் காரியத்தில் இறங்கி வேலை பார்ப்பீர்கள். தேவைகளை உணர்ந்து அதற்கு தகுந்தபடி நல்ல பலன்களை பெறுவீர்கள். 08.06.2025 முதல் 08-07-2025 வரை சற்று கவனமாக இருப்பது நல்லது.

உங்களின் சத்ரு ஸ்தானத்தில் சனியுடன் ராகு இணைவு பெறுவதும் குரு பார்வை இருவருக்கும் அமைவதால் குரு பார்வையால் மறைமுகமான சில எதிரிகள் உங்களின் செயல்களை தகுந்த வந்த நிலை மாறி உங்களுக்கு சாதகமாக செயல்பாடுகள் அமையும். சிலருக்கு வாங்கிய கடன் தீரும். வரவேண்டிய இடத்தில் பணம் வந்து சேரும். நினைத்த காரியம் கைகூடும்.

08-10-2025 முதல் குரு கடகத்தில் அதிசாரமாக அமர்வது உங்களின் முயற்சிகளுக்கு நல்ல வழி கிடைக்கும். கூட்டுத் தொழில் சிறப்பாக அமையும். வெளிநாடு வேலை தொடர்புகள் உண்டாகும்.

குரு பகவானின் பார்வை பலன்கள்: 

குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டு. எனினும் வீண் சந்தேகத்தை தவிர்த்து விடுங்கள். குரு, சுக வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் வருத்தம் நீங்கும். அவரின் ஆரோக்கியம் மேம்படும். சிலர், சொந்த வீடு வாங்க வாய்ப்புகள் உண்டு. வங்கிக் கடன் கிடைக்கும். குரு பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். வழக்குகள் இருப்பின், அவை உங்களுக்கு சாதகமாகும். பழைய ஆவணங் களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம் 

 பரிகாரங்கள்:

வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை இட்டு தயிர் அன்னம் நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ள சிறப்பான நற்பலன்கள் உண்டாகும்

குரு பெயர்ச்சி பலன்கள் (2025-26): சிம்மம்

gurupeyarchi image common - 2026

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026

இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025  நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது


குரு பெயர்ச்சி பலன்கள் – 2025

சிம்மம்  

இதுவரை உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் இருந்து குரு 11-05-2025 முதல் லாபஸ்தானமாகிய மிதுனத்தில் அமர்கிறார். குரு பார்க்குமிடம் சிறப்பான நற்பலன்களை பெற்றுத் தரும்.

உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் இதுவரை உங்களுக்குள் இருந்து வந்த சோர்வு விலகி, மனத்தில் புது தெம்பு பிறக்கும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். முடிந்தவரை சேமிக்கவும். சொந்த பந்தங்களின் வருகையால் வீடு களைகட்டும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்  

குரு மூன்றாமிடமான முயற்சி, கீர்த்தி ஸ்தானத்தை பார்ப்பதால் நீங்கள் எடுக்கும் சகல முயற்சிகளுக்கு நற்பலன்களை பெற்று தரும். உறுதுணையாக செயல்பட உங்களுக்கு நண்பர்கள் உதவி கிடைக்கும். எந்த செயலுக்கு ஊக்கம் கிடைக்கும் போது அது மேலும் பல வழிகளில் வெற்றியை பெற்று தரும். நீங்கள் தொழிலில் பல இடையூறுகளை சந்தித்து வந்தீர்கள். இனி தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பஞ்சமஸ்தானத்தை குரு பார்ப்பதால் குரு அருளால் உங்களின் பூர்வீக சொத்து சம்மந்தமான சில விவகாரங்கள் தீரும். குல தெய்வ வழிபாடு மூலம் உங்கள் இலக்கு விரைவில் நிறைவேறும் பாதியில் நின்ற காரியங்கள் இனி செயல்படதுவங்கும். நினைத்த காரியம் கைகூடும்.

களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் திருமணம் நடக்காதவருக்கு திருமணம் கைகூடும். சிலருக்கு வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகள் அமையும். கூட்டுத் தொழில் செய்பவருக்கு கூட்டு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய திட்டங்களுக்கு நல்ல வழி கிடைக்கும். எதிர்பார்த்த சில விடயம் விரைவில் நடக்கும். உங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற நல்ல வழி கிடைத்து அதற்கு உண்டான பணிகள் நடக்கும்.

உடல்நலனில் முன்னேற்றம் காண்பீர்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று வீர்கள். பொது நலத்தில் ஆர்வம் கொண்டு செயல்பட்டு நற்பெயர் பெறுவீர்கள்.

குரு பகவானின் பார்வை பலன்கள்: 

உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதரர் வகையில் இருந்த கசப்பு உணர்வு நீங்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்களின் முன்னேற்றம் பலரையும் வியக்க வைக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். குரு பகவான் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளுக்குத் திருமணம் சிறப்பாக முடியும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தந்தை வழிச் சொத்துகளைக் கேட்டு வாங்குவீர்கள்.

பரிகாரங்கள்:

வியாழக்கிழமைகளில் விநாயகர் வழிபாடு செய்து விளக்கு ஏற்றி வேண்டிக் கொள்வது நல்லது. ஆஞ்சநேயரை நினைத்து காரியத்தை துவங்குவது இன்னும் சிறப்பான பலனை பெற்று தரும்.

குரு பெயர்ச்சி பலன்கள் (2025-26): கடகம்

gurupeyarchi image common - 2026

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026

இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025  நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது


குரு பெயர்ச்சி பலன்கள் – 2025

கடகம்  

இதுவரை உங்களின் லாபஸ்தானத்தில் இருந்த குரு பகவான் இனி விரைய குருவாக வரும் 11-05-2025 முதல் அமர்வதும் சுகஸ்தானத்தையும், சத்ரு ஸ்தானத்தையும், அட்டம ஸ்தானத்தையும் பார்வை இடுவதால் உங்களுக்கு நன்மையும் தீமையும் வெற்றியை தரும்.

சுகஸ்தானமான நான்காமிடத்தை குருவால் பார்க்கபடுவதால் வீடு கட்டுதல், வீடு பாராமரிப்பு பார்த்தல், வாகன வசதிகளை பெருக்கி கொள்தல் போன்ற வழிகளில் நன்மையை அடைவீர்கள். உடல் நலனின் முன்னேற்றம் உண்டாகும் ஏற்கனவே உடல் நலமின்றி இருப்பவர்களுக்க உடல்நல மேன்மை பெறுவீர்கள். தாயார் உடல் நலனின் கவனம் செலுத்துவீர்கள். பொது நலன் கருதி நீங்கள் செயல்படுவது சிறப்பான நற்பலன்களை பெற்று தரும்.

சத்ரு, ரண, ருண ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தேவையற்ற பொருளாதார பிரச்சனைகளை படிப்படியாக தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பை பெற்று நலம் பெறுவீர்கள். கடன் தீர்த்து வைத்தல், மூலம் பல நாள் கஷ்டத்திலிருந்து விடுபடுவீர்கள். மறைமுக எதிரிகளால் பட்ட துன்பம் விடுபடும். வங்கி மூலம் கடன் பெற்று செய்தொழிலை விருத்தி செய்து கொள்வீர்கள். அட்டம சனியுடன் ராகு இணைந்து இருப்பதால் எந்த காரியமாக இருந்தாலும் அதில் சிலரின் வில்லங்கம், விவகாரம் வந்து தொல்லை கொடுத்து வந்த நிலை மாறி நன்மை பெறுவீர்கள்.

வரும் 08-10-2025 முதல் குரு அதிசாரமாக அமர்வது உங்களின் ராசிக்கு ஜென்ம குருவாக அமர்ந்து எடுத்த காரியத்தில் நினைத்தபடி செயல்பட்டு வெற்றியை பெறுவீர்கள். முயற்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து மேன்மை அடைவீர்கள். எடுத்த காரியத்தில் கவனம் செலுத்தி சரியாக செயல்பட்டு பொருளாதாரத்தில் ஏற்றம் பெற்று சேமிப்புகளை ஊக்கபடுத்துவீர்கள்.

குருபகவான் பார்வை பலன்கள்: 

குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தைப் பார்வையிடுகிறார். ஆகவே, தாயாரின் ஆரோக்கியம் சிறக்கும். தாய்வழிச் சொத்துகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. கூடா பழக்க வழக்கம் உள்ளவர்களின் நட்பைத் துண்டிப்பீர்கள். குரு பகவான் 6-ம் இடத்தைப் பார்ப்பதால், எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வழக்குகள் இழுபறியாகும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குரு பகவான் 8-ம் இடத்தைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். எனினும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்தும். ஆரோக்கியம் கூடும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்  

பரிகாரங்கள்:

வியாழக்கிழமைகளில் நோன்பிருந்து நவகிரக குருவுக்கு தயிர் அன்னம் நைவேத்தியம் இட்டு மஞ்சள் நிற பூ வைத்து நெய் தீபமிட்டு வர நினைத்த காரியம் தடையின்றி சுபிட்சமாக அமையும்.

குரு பெயர்ச்சி பலன்கள் (2025-26): மிதுனம்

gurupeyarchi image common - 2026

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026

இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025  நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது


குரு பெயர்ச்சி பலன்கள் – 2025

மிதுனம்  

இதுவரையிலும் விரைய குருவாக இருந்த குரு பகவான் இனி வரும் 11-05-2025 முதல் ஜென்ம குருவாக ராசியில் அமர்கிறார். கடந்த காலத்தில் தேவையற்ற பல செலவுகள் வந்து சிரமத்தில் இருந்தீர்கள் இனி ஜென்ம குரு இருக்குமிடத்தை காட்டிலும் பார்க்கும் இடம் சிறப்பாக அமையும்.

ஜென்ம குருவாக வந்து உங்களின் அனைத்து செயல்பாடுகளிலும் துரிதமாக செயல்படும் விதம் புதிய விடயங்களை பற்றி தெரிந்து கொள்தல் எதையும் செயல்படுத்துவதற்கு முன்பு குறிப்பெடுத்துக்கொண்டு செயல்படுதல் நல்லது. ஞாபக மறதிகள் வரும் என்பதால் நினைவுபடுத்தி கொள்வது நல்லது.

உங்களின் களத்திரஸ்தானத்தை பார்வை இடுவது திருமண காரியங்கள் பேசுதல், திருமணம் நடத்தல் வேறு சுபகாரியங்கள் வீட்டில் நடத்துதல் போன்ற காரியம் நடக்கும். மன அழுத்தம் அதிகமாக வரும் போது சின்னசின்ன உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. 08-06-2025 முதல் 08-07-2025 வரை குரு அஸ்தமானமாகும். காலம் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. கொண்டு செல்லும் பொருட்களை பாதுகாத்து கொள்வது அவசியம்.

உங்களின் பாக்கியஸ்தானத்தை பார்வை இடுவது புனித யாத்திரை சென்றுவருதல். கோவில் காரியங்களில் முன்னின்று நடத்துதல். நற்காரியங்களும் உதவிகள் செய்தல் போன்ற செயல் நன்றாக நடக்கும். குரு பார்க்கும் இடம் சிறப்பாக இருக்கும். என்பதால் உங்களின் அனைத்து காரியங்களும் வளம் பெறும். குடும்ப சூழ்நிலைகளை மறந்து ஆன்மீக ஈடுபாடுகளை வளர்த்து கொண்டு அதற்கு நேரம் ஒதுக்கி செயல்படுவீர்கள். புதிதாக ஆன்மீக குருமார்களின் சந்திப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். 08-10-2025 முதல் குரு அதிசாரமாக கடகத்திற்கு செல்வதால் மறைவு ஸ்தானங்களை பார்வை இடுவது கடன் பிரச்சனை நீண்டகால தீராத விடயங்கள் அனைத்து தீர்ந்து சுபிட்சம் பெறுவீர்கள். பணபுழக்கம் தாராளமாக இருக்கும்.

குரு பகவான் பார்வை பலன்கள்: 

குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்ப்பதால், குழந்தைப்பேறு வாய்க்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் உண்டு. பூர்வீகச் சொத்தால் ஆதாயம் உண்டு. மகளுக்கு கல்யாணம் கூடிவரும். குரு பகவான் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் கணவன்- மனைவிக்குள் ஓரளவு நெருக்கம் உண்டு. வீட்டில் தாமதமான சுபநிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடக்கும். மறைந்து கிடக்கும் திறமைகள் வெளிப்படும். உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் குருவின் பார்வை விழுவதால், எதிர்பார்க்கும் பணம் ஓரளவு வரும். செலவுகளும் உண்டு. அரசியல்வாதிகள் கோஷ்டிப் பூசலில் சிக்காமல் இருப்பது நல்லது 

பரிகாரங்கள்:

வியாழக்கிழமைகளில் கொண்டை கடலையில் மாலை கட்டி போட்டு வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து நெய் தீபமிட்டு மஞ்சள் நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் சிறப்பாக நடக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள் (2025-26): ரிஷபம்

gurupeyarchi image common - 2026

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026

இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025  நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது


குரு பெயர்ச்சி பலன்கள் – 2025

ரிஷபம்

இதுவரை உங்களின் ராசிக்கு ஜென்ம குருவாக இருந்த குரு பகவான் வரும் 11-05-2025 முதல் தனஸ்தானத்தில் அமர்ந்து மறைவு ஸ்தானமான இடங்களை பார்வை இடுவது உங்களின் ராசிக்கு ஏழாமிடத்தையும், பாக்கியஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் முன்பு பார்த்து வந்தால் நற்பலன்களை அடைந்து வந்தீர்கள். இனி மறைவு ஸ்தானங்களின் பார்வையால் உங்களுக்கு கடன் தொல்லைகளிலிருந்து விடுபடும் வாய்ப்புகள் அமையும்.

ஆறாமிடமிடத்தை குரு பார்ப்பதால் வங்கி மூலம் கடன் பெற்று பழைய கடன்களை தீர்த்து கொள்வதும், எடுத்த காரியத்தில் இருந்து வந்த தொல்லைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். எதையும் பிறரின் உதவியுடன் செய்து வந்த நீங்கள் இனி தனித்து செயல்படுவீர்கள். 06-06-2025 முதல் 06-07-2025 வரை குரு அஸ்தங்கம் அடைவதால் பெரும்பாலும் தேவையற்ற விடயங்களில் ஈடுபடுவதை தவிர்த்து அத்தியாவசியமான செயல்களை செய்வது நல்லது.

அட்டம ஸ்தானாதிபதி குரு அந்த இடத்தை பார்ப்பதால் நம்பிக்கையான நண்பர்கள், உறவுகாரர்களாக இருந்தாலும் பிணைய இடுவதும் நான் பொறுப்பு என்று ஏற்று கொள்வதும் தவிர்ப்பது நல்லது.

உங்களின் தொழில் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் செய்யும் தொழில் சிறப்பாக அமையும். இருக்கும் தொழிலை விருத்தி செய்து கொள்வதற்குரிய வேலைகளை செய்வது நல்லது. 08-10-2025 முதல் அதிசாரமாக குரு கடகத்திற்கு செல்வதால் அதுவரை உங்களின் செயல்பாடு சற்று கவனமாக இருப்பது நல்லது. அதிசார பலன்கள்  உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். எதையும் திறம்பட செய்து வளம் பெறுவீர்கள். தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு இணைவு பெறுவதும் குரு பார்வை பெறுவதும் உங்களுக்கு குரு சண்டாள யோக பலன்களை பெற செய்யும்.

குரு பகவான் பார்வை பலன்கள்: 

குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தைப் பார்ப்பதால், எதிர்த்தவர்கள் விலகிச் செல்வார்கள். ஆளுமைத்திறன் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். மருத்துவச் செலவுகள் குறையும். குருபகவான் 8-வது வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். திட்டமிட்டபடி அயல்நாட்டுப் பயணங்கள் கூடி வரும். விசா கிடைக்கும். குருபகவான் உங்கள் ராசிக்கு 10-வது வீட்டைப் பார்ப்பதால் பிரபலங்களின் நட்பு கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். அரசியல்வாதிகளுக்குப் பதவிகள் தேடி வரும். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி வரக்கூடும் 

பரிகாரங்கள்:

வியாழகிழமை காலை 06 – 07 மணிக்குள் நவகிரக குருவுக்கு மிளகு கலந்த அன்னம் வைத்து மஞ்சள் தூவி நெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள நற்பலன்கள் சிறப்பாக அமையும்.

குரு பெயர்ச்சி பலன்கள் (2025-26): மேஷம்

gurupeyarchi image common - 2026

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026

இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025  நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது


குரு பெயர்ச்சி பலன்கள் – 2025

மேஷம்

இதுவரை உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் இருந்த குரு இனி முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தையும், பாக்கியஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்வை இடுவது மிக சிறப்பு.

தனஸ்தானத்தில் இதுவரை இருந்து பல்வேறு நன்மைகளை செய்து வந்த குரு பகவான் திருமண தடைகளால் தள்ளி போன காரியங்கள் சிறப்பாக அமையும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். எடுத்த சில காரிங்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். கூட்டு தொழிலின் மூலம் சிறப்பான நற்பலன்களை பெறுவீர்கள்.

உங்களின் பாக்கியஸ்தானாதிபதி வீட்டை அவரே பார்வை இடுவதால் பல்வேறு காரணங்களால் தள்ளிபோய் கொண்டிருந்த காரியம் செயல்பட துவங்கும். குழந்தை பாக்கியம், குல தெய்வத்தின் வழிபாடுகள், தீர்த்த யாத்திரை சென்று வருதல் வீட்டில் சுபகாரிய நிகழ்வுகள் சிறப்பாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கொண்டு சிறப்பாக செயல்படுவீர்கள்.

உங்களின் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். லாபஸ்தானத்தில் சனி ராகுவை பார்ப்பதால் செய்யும் தொழில் பலவழிகளில் பொருளாதார வளர்ச்சி உண்டாகும். 11-05-2025 முதல் குரு உங்களுக்கு நற்பலன்களை தருவார். 06-06-2025 முதல் 06-07-2025 வரை அஸ்தங்கம் ஆவதால் தங்கத்தை பத்திரமாக வைத்து கொள்வது நல்லது. 08-10-2025 முதல் குரு அதிசாரமாக கடகத்திற்கு செல்வதால் அதுவரை நன்மை உண்டாகும். சிலருக்கு இழத்த சொத்துகளை மீட்கவும், எதிர்ப்புகளை குறைத்து சுமூகமான சூழ்நிலையும் உருவாகும். தொடர்ந்து இறை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் பார்வை பலன்கள்: 

குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டை சர்ச்சைகள் வந்துபோனாலும் சந்தோஷத்துக்குக் குறைவிருக்காது. மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். விஐபிகள் அறிமுகமாவார்கள். குருபகவான் 9-ம் இடத்தைப் பார்ப்பதால், பூர்வீகச் சொத்துகள் சேரும். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகள் விலகும். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். குருபகவான் லாபஸ்தானமாகிய 11-ம் இடத்தைப் பார்ப்பதால், சகல வகையிலும் லாபம் உண்டு. காரியத் தடைகள் விலகும். சொத்துப் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும் 

பரிகாரங்கள்:

வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்திக்கு நெய் தீபமிட்டு மஞ்சள் நிற வஸ்திரம் இட்டு உங்களின் வேண்டுதலை சொல்லி வர பல வழிகளில் நன்மைகள் உண்டாகும்.

ஹரிஜனங்களின் உயர்வைக் காணத் துடித்த ‘ஐயர்’!

madurai vaidhyanatha iyer - 2026
  • ராம்குமார். வி

‘மதுரை வைத்தியநாத ஐயர்’ – இந்த பெயரை எங்கோ கேள்விப்பட்டது போல் இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். இல்லை என்றால் மேலே படிக்கவும்.

தமிழ் நாட்டில் தாழ்த்தப் பட்டோருக்காக பாடுபட்டவர்கள் தாங்கள் தான் என உரிமை கொண்டாடி அதனை அரசியல் ஆதாயத்திற்காக உபயோகப்படுத்திக்கொள்ளும் பலர் நிஜ தியாகிகளை சமூகத்திற்காக பாடுபட்டவர்களை திட்டமிட்டு மறைத்து விடுவர். சமூகத்தில் நடக்கும் இது போன்ற வெற்றுக் கூச்சல்கள் மதுரை வைத்யநாத ஐயர் போன்றவர்களை மறக்கடிக்கச் செய்துவிடும். அத்தகைய ஒருவரை பற்றி பார்ப்போம்.

தமிழ்நாட்டின் மறக்கப்பட்ட அல்லது மறக்கடிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகி இவர். ஹரிஜனங்களின் தந்தை என்று அழைக்கப்பட்டவர். தியாகி ‘கக்கன்’ இவருடைய சீடர். 1935 முதல் 1955 வரை தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தலைவர். இவர் வாழ்க்கையில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்.

மதுரை ஆலயப்பிரவேசம்:

1939 ஜூலை 8 ஐ தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஹரிஜன ஆலயப்பிரவேசம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை நடத்திக்காட்டியவர் மதுரை வைத்யனாதய்யர். இன்றைக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்காக வக்காலத்து வாங்கிப் பேசும் பலரும் பிராமணர்களுக்கெதிரான வசைகளையே முன்னிறுத்தி பேசுவார்கள். அதே தாழ்த்தப்பட்டவர்கள் என அழைக்கப்பட்ட மக்களை ஆலங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என போராட்டம் நடத்தி அதற்கு தலைமை தாங்கியவர் இந்த பிராமணர்.

அத்தகைய ஆலய பிரவேச தினத்தன்று தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கச்செயலாளர் எல்.என்.கோபால்சாமி, P.கக்கன், உசிலம்பட்டி V.முத்து, P.R.பூவலிங்கம், V.S.சின்னையா, முருகானந்தம், ஆலம்பட்டி S.S.சண்முக நாடார் மற்றும் பல ஹரிஜன அன்பர்கள் வைத்யனாதய்யருடன் ஆலய பிரவேசம் செய்தனர். மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் திரு R.S.நாயுடு இந்த நிகழ்வுக்குமிகவும் உதவியாக இருந்தார். மேலும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததோடு தன் தோழர்களை அய்யருக்கு துணையாக அனுப்பினார்.

இந்த நிகழ்ச்சி மதுரையில் நடக்கும் போது மதுரை காந்தி என்று அழைக்கப்பட்ட திரு N.M.R.சுப்பராமன் மதுரை நகராட்சி தலைவராக இருந்தார். இவர் ஒரு ஹரிஜனரை அறங்காவலர் குழுவில்நியமிக்கச் செய்தார். தமிழகத்தில் இது ஒரு முன் மாதிரி நடவடிக்கை.

திரு. வைத்தியநாத ஐயர் தமிழகத்தின் முக்கிய சுதந்திர போராட்டங்களான உப்பு சத்தியாகிரகம், கள்ளுக்கடை மறியல் போன்ற முக்கிய போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். அய்யரும் அவர் குடும்பமும் பல முறை தேசத்திற்காக சிறை சென்றுள்ளனர்.

ஈ.வெ.ரா.வை காப்பாற்றிய ஐயர்

‘பாம்பைக் கண்டால் விடு பாப்பானைக் கண்டால் அடி’ என்று துவேஷப் பிரச்சாரம் செய்தும், பிராமணர்களை எதிர்த்தும் அவமதித்தும் பேசிவந்த ராமசாமி நாயக்கர் பிராமணராலேயே காப்பற்றப்பட்ட சம்பவத்தைப் பார்க்கலாம்.

1946 ம் ஆண்டு வைகை வடகரையில் தி.க மாநாடு நடந்தது. தி.க தொண்டர்கள் மீனாட்சி கோயிலுக்கு சென்று கிண்டலும் கேலியும் செய்துள்ளனர். மதுரை மக்கள் தி.க தொண்டர்களை விரட்டி, மாநாட்டுப் பந்தலுக்கு தீ வைத்துள்ளனர். ஷெனாய் நகரில் இருந்த ஈ.வே.ரா வை மக்கள் சூழ்ந்து விட்டனர். போலீஸாரால் தடுக்க முடியவில்லை. இதனைக் கேள்விப்பட்ட வைத்தியநாத ஐயர் அங்கு சென்று மக்களை அமைதிப்படுத்தி ஈ வெ ரா உட்பட அனைவரையும் ஊருக்கு பத்திரமாக அனுப்பினார். ஆக பிராமணரை அடி என்று கூறிய ராமசாமி நாயக்கருக்கு பிராமணரான வைத்தியநாத ஐயர் பாதுகாப்பளித்த சம்பவம் இன்றும் அழியாத வரலாறாக இருக்கிறது. ஆனால் என்ன நடந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என வெட்கமில்லாமல் திரியிம் திராவிடக்காரர்கள் இந்தச் சம்பவங்களை வஞ்சகமாக மறைத்து ராமசாமி நாயக்கருக்கு குருட்டுத்தனமான பக்தர்கள் உருவாக பெரிதும் பாடுபட்டனர்.

மதுரை வைத்தியநாத ஐயர் தான் இறக்கும் வரை (1955) ஹரிஜன சேவா சங்க தலைவராக இருந்தார். ஹரிஜன சேவா சங்கம் இவரை பாராட்டி ஹரிஜனங்களின் தந்தை என்று அழைத்தனர். சுதந்திரப் போராட்ட தியாகியை ஹரிஜனங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பின்னர் வஞ்சகமாக மறக்கடிக்கப்பட்ட இந்த மாமனிதரை நெஞ்சினில் நிறுத்திடுவோம்.

நினைவில் வைத்துப் போற்றுவோம்.

மேலதிக தகவல்களுக்கு

1) ‘விடுதலை போரில் தமிழகம்’ ஸ்டாலின் குணசேகரன் – பாகம் 2
இந்த புத்தகத்தில் இந்த கட்டுரையை இயற்றியவர் தியாகி மாயாண்டி பாரதி. இவர் வைத்யனாதய்யருடன் நெருங்கி பழகியவர்.

2) ‘மதுரை காந்தி’ , நா.மா.ரா.சுப்பராமன் அல்லயன்ஸ் பதிப்பகம். சென்னை.

இப்படிப் பட்ட பல தியாகிகளின் தியாகங்கள் பெரும்பாலும் பேசப்படுவதில்லை. இந்த தியாகங்களை பற்றி வருங்காலத்திற்கு தெரிவிக்க வேண்டியது நம் கடமை.

கு. அண்ணாமலை போஸ்ட்

சுதந்திரப் போராட்ட வீரரும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவருமான, அமரர் மதுரை அ. வைத்தியநாத ஐயர் அவர்கள் பிறந்த தினம் இன்று. தீண்டாமை, சமூக ஏற்றத் தாழ்வு முதலானவற்றை ஒழிக்கப் பாடுபட்டவர். சுதந்திரப் போராட்டத்தில், கதர் ஆடை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், சட்ட மறுப்பு இயக்கம், என அனைத்துப் போராட்டங்களிலும், தாம் மட்டுமல்லாது, தமது குடும்பத்தினரையும் ஈடுபடச் செய்தவர். சுதந்திரப் போராட்டத்துக்காக, தமது வழக்கறிஞர் பணியோடு, தமது சொத்துக்களையும் தியாகம் செய்தவர். ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக, பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு, மக்களின் அன்பைப் பெற்றிருந்த அமரர். வைத்தியநாத ஐயர்