Home Blog Page 86

யாரை ‘ஏமாற்றுகிறார்’ சந்தானம்? நம்பிக்கையாளர் குறித்து அவ்வளவு அலட்சியமா?

actor santhanam - 2026
#image_title

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் காமெடி நடிகர் சந்தானம் நடிப்பில் தயாராகி உள்ளது ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. ஆர்யா தயாரித்திருக்கும் இப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘கோவிந்தா கோவிந்தா’ பாடலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அது ஹிந்துக்களின் மனத்தைப் புண்படுத்தும் வகையில் எழுதப்பட்டு, காட்சிப்படுத்தப் பட்டுள்ள்தாகக் கூறி, உடனடியாக அந்தப் பாடலை நீக்கிவிட்டு, மன்னிப்பு கோர வேண்டும் என்று ஹிந்து இயக்கங்கள் புகார் தெரிவித்தன. 

முக்கியமாக, ‘கோவிந்தா கோவிந்தா கிசா 47’ பாடலுக்கு எதிராக, திருப்பதி பக்தர்கள், ஆந்திர மாநிலத்தின் ஜனசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  தொடர்ந்து, படத்தில் பெருமாள் குறித்து வரும் பாடலை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பதி சென்றிருந்த அதிமுக., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஜனசேனா கட்சியினர் மனு அளித்தனர். 

தொட்ர்ந்து, டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்பட தயாரிப்பாளர் மீது திருமலை காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகார் அளித்தனர். மேலும் திருப்பதி நிர்வாகமும் தங்கள் ஆலய பாடலை கேலி கிண்டல் செய்யும் வகையில்  சினிமாவில் பயன்படுத்தியதற்கு மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. தமிழகத்திலும் வி.எச்.பி உள்ளிட்ட இந்து இயக்கங்கள் பலத்த எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். இந்நிலையில், அப்படத்தில் இடம் பெற்ற கிஸா 47 பாடலை படக்குழு நீக்கி, படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. 

முன்னதாக, இந்தப் பாடல் குறித்த சர்ச்சை ஏற்பட்ட நிலையில், சந்தானத்திடம் செய்தியாளர் , “கோவிந்தா கோவிந்தா பாடல் உண்மையில் கடவுளை கிண்டல் செய்து இருக்கிறதா ?” என்ற  கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த சந்தானம்,  “அது கிண்டல் கிடையாது. நிறைய பேர் நிறைய விஷயங்கள் சொல்வார்கள். பார்ப்பவர்கள் எல்லோரும் அவர்களுடைய கருத்தை சொல்வார்கள். இது சரி இல்லை அதை மாற்ற வேண்டும் என்பார்கள். அதை எல்லாவற்றையும் நாம் எடுத்துக் கொள்ள முடியாது. அப்படி வாழவும் முடியாது. நீதிமன்றம் என்ன சொல்கிறது? அதன் பிறகு சென்சார் சான்றிதழில் என்ன சொல்கிறார்கள்? அதில் சில விதிமுறைகளை வைத்திருப்பார்கள். அதை சொல்வதை மட்டும் தான் நாம் தமிழ் சினிமாவில் செய்ய முடியும். போறவங்க வர்றவங்க சொல்றதையெல்லாம்  நாம் செய்ய முடியாது. ஒரு சட்டம் என்றால் ஒரு கோர்ட். சினிமாவுக்கு சென்சார். இதைத் தவிர போறவங்க வர்றவங்க சொல்றத எல்லாம் செய்ய முடியாது” என்று அலட்சியமாக பதில் அளித்தார் சந்தானம். 

குறிப்பாக, அந்தப் பாடல் யுடியூப்பில் அப்படியே பதிவேற்றம் செய்யப் பட்டிருந்தது. அதில், ‘ஏமாற்றப்பட்ட’ என்ற பொருள் வரும் விதத்தில், ஒவ்வொரு வாக்கியத்துக்கும் இறுதியில் கோவிந்தா கோவிந்தா என்று திருப்பதி கோயிலில் அதே மெட்டு டியூனை பயன்படுத்தியிருந்தார்கள். அதைக் கேட்ட ஹிந்துக்கள் கடும் கோபமும் ஆத்திரமும்  கொண்டார்கள். இறைவனின் திருப்பெயரை, ஏமாற்றல் எனும் பொருளில் குத்தாட்டப் பாடலுக்கு பயன்படுத்திய சந்தானம் குழுவை சமூகத் தளங்களிலும் திட்டித் தீர்த்தார்கள். 

குறிப்பாக, ஒரு மதத்தினரின் நம்பிக்கையைக் கெடுக்கும் வகையில், உருவங்கள், பெயர்கள், சின்னங்கள் ஆகியவற்றைக் கேலி செய்வது தண்டனைக்குரிய குற்றம் எனும்  நிலையில், நகைச்சுவை எனும் சாக்கில் ஹிந்து மத அடையாளங்களை கேலி கிண்டல் செய்யும் ஈனத்தனம் தமிழக சினிமாக்களில் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. 

தெய்வத்தை இழிவுபடுத்தும் சினிமாக்கள் :!

முன்னர் ஹிந்து தெய்வங்களின் உருவங்களை முடிந்த வரை  இழிவுபடுத்தி வந்த சினிமாக்கள் இப்போது அடுத்த கட்டமாக தெய்வ நாமங்களையும் இழிவுபடுத்தி உள்ளன. 

‘ஸ்ரீ நிவாஸ கோவிந்தா!  ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா!’ என்னும் புகழ் பெற்ற மலையப்ப ஸ்வாமியின் நாமாவளியை  சினிமாவில் Party Song குத்துப் பாடலாகச் சேர்த்துள்ளனர். இதற்கு ஜனசேனா கட்சியினர் எதிர்ப்பு & புகார் தெரிவித்து, இந்தப் பாட்டை நீக்காவிட்டால் தமிழக மக்கள் பிரதிநிதிகளை திருப்பதியில் நுழைய விட மாட்டோம் என எச்சரித்துள்ளனர். 

இங்கே என்ன நடக்கும் என்றால், நம் தெய்வங்களின் உத்ஸவ வீடியோக்களுக்கு அந்த பார்ட்டி பாட்டை BGM ஆக இணைத்து வெளியிடுவார்கள் வஞ்சகர்கள். துப்பு கெட்டவர்கள் அதை வெக்கமே இல்லாமல் ஷேர் செய்து பெருமைப்படுவார்கள். சுரணையற்றவர்கள் அதற்கும் கும்பிடு போட்டு பரவசப்படுவார்கள் . 

காசையும், நேரத்தையும் வீணாக்கும்  இது போன்ற சினிமாக்களை எதிர்க்கும் வைராக்யம் ஆத்திக மக்களுக்கு வந்தால் தான், இப்படி ஹிந்து தெய்வங்களை  கொச்சைப் படுத்தும் சினிமா காட்சிகளில் நடிக்க நடிகர்களுக்கும் பயம் வரும்.  தன் நாட்டையும், தன் தெய்வத்தையும்  அசிங்கப் படுத்துபவர்களை ஆதரிப்பவர்கள்  மிகவும் ஆபத்தானவர்கள்.  – என்றெல்லாம் சமூகத் தளங்களிலும் கருத்துகள் பரவின. 

தமிழக அரசியலில் பரபரப்பு! தில்லியில் ஆளுநர் ரவி!

rn ravi - 2026

‘அந்த’ தீர்ப்பு ஒத்திவைப்பு! நோட்டீஸுக்கு ஸ்டாலின் விமர்சனம்! தில்லிக்குப் பறந்த ஆளுநர்!

கெடு விதித்தற்கு சட்ட விளக்கம் கேட்டு தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், குடியரசுத் தலைவரின் ‘சட்ட விளக்க’ கேள்விகள் கேட்ட செயலுக்கு, தமிழக அரசின் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். 

இந்நிலையில், இது குறித்து விளக்கம் தர 5 நீதிபதிகள் அமர்வு நாளை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. 

மசோதா ஒப்புதல் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் குறித்து விளக்கம் தர 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை அறிவிக்கப்பட உள்ளது. மாநில அரசுகளின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர உச்ச நீதிமன்றம் குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயித்தது. உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது குறித்து 14 கேள்விகளை எழுப்பி  குடிய்ரசுத் தலைவர் விளக்கம் கேட்டிருந்தார்.

அவர் அந்தக் கடிதத்தில் எழுப்பிய கேள்விகள்…

குடியரசுத்தலைவர் எழுப்பிய கேள்விகளின் சாராம்சம்….

பிரிவு 200 இன் கீழ் ஒரு மசோதாவை சமர்ப்பிக்கும்போது ஆளுநருக்குக் கிடைக்கும் அரசியலமைப்பு வாய்ப்புகள் என்ன?

இந்த வாய்ப்புகளைச் செயல்படுத்துவதில் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனைக்குக் கட்டுப்படுகிறாரா?

பிரிவு 200 இன் கீழ் ஆளுநரின் விருப்புரிமைப் பயன்பாடு நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதா?

பிரிவு 200 இன் கீழ் ஆளுநரின் நடவடிக்கைகளை நீதித்துறை ஆய்வு செய்வதற்கு பிரிவு 361 முழுமையான தடையை விதிக்கிறதா?

அரசியலமைப்பு காலக்கெடு இல்லாவிட்டாலும், பிரிவு 200 இன் கீழ் ஆளுநர்கள் தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை நீதிமன்றங்கள் காலக்கெடுவை விதிக்க முடியுமா மற்றும் பரிந்துரைக்க முடியுமா?

பிரிவு 201 இன் கீழ் ஜனாதிபதியின் விருப்புரிமைப் பயன்பாடு நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதா?

பிரிவு 201 இன் கீழ் ஜனாதிபதியின் விருப்புரிமைப் பயன்பாடுக்கான காலக்கெடு மற்றும் நடைமுறைத் தேவைகளை நீதிமன்றங்கள் அமைக்க முடியுமா?

ஆளுநர் ஒதுக்கிய மசோதாக்கள் குறித்து முடிவெடுக்கும்போது பிரிவு 143 இன் கீழ் ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டுமா?

பிரிவு 200 மற்றும் 201 இன் கீழ் ஆளுநர் மற்றும் ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள் ஒரு சட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நியாயமானதா?

142வது பிரிவின் கீழ் ஜனாதிபதி அல்லது ஆளுநர் பயன்படுத்தும் அரசியலமைப்பு அதிகாரங்களை நீதித்துறை மாற்றியமைக்கவோ அல்லது மீறவோ முடியுமா?

200வது பிரிவின் கீழ் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மாநில சட்டம் நடைமுறைக்கு வருமா?

ஒரு வழக்கு கணிசமான அரசியலமைப்பு விளக்கத்தை உள்ளடக்கியதா என்பதை உச்ச நீதிமன்றத்தின் எந்த அமர்வும் முதலில் தீர்மானித்து, பிரிவு 145(3)ன் கீழ் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டுமா?

பிரிவு 142ன் கீழ் உச்ச நீதிமன்ற அதிகாரங்கள் நடைமுறை விஷயங்களுக்கு அப்பால், ஏற்கனவே உள்ள அரசியலமைப்பு அல்லது சட்டப்பூர்வ விதிகளுக்கு முரணான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமா?

பிரிவு 131ன் கீழ் ஒரு வழக்கு தவிர வேறு எந்த வழியிலும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான மோதல்களைத் தீர்க்க அரசியலமைப்பு உச்ச நீதிமன்றத்தை அனுமதிக்கிறதா?

முதல் அமைச்சர் விமர்சனம்!

ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டுள்ளதற்கு, இந்தச் சட்டச் சிக்கலுக்குக் காரணமாகியுள்ள மாநில முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ”இதிலும் முழு பலத்தோடு போராடுவோம். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்”  என்று, தனது தவறுகளுக்கு தமிழ்நாட்டைத் துணை கொண்டு, தமிழகமே போராடும் என்று  மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். 

இந்த விவகாரத்தில், மாநில முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ள கேள்விகள்….

1மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலக்கெடு விதிப்பதை எதிர்ப்பது ஏன்?
2.மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் முடக்குவதை சட்டப்பூர்வம் ஆக்க பாஜக முயற்சிக்கிறதா?
3.பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை முடக்கப் பார்க்கிறதா மத்திய அரசு?
4.பாஜகவின் சொல்படியே தமிழ்நாடு மக்களுக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்பட்டார் என்பதை மத்திய அரசின் இந்த நடவடிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
5.அரசியலமைப்பு சட்டத்தின்படி உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்த்து வைத்ததை மாற்றும் முயற்சி
6.இதிலும் முழு பலத்தோடு போராடுவோம். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் – முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆளுநர் தில்லி பயணம்!

இதனிடையே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென தில்லிக்குப் பயணம் மேற்கொண்டார். 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக தில்லி புறப்பட்டுச் சென்றார். இன்று காலை 6.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் தில்லி சென்றார். அவருடன் ஆளுநரின் தனிச் செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனர். பிரதமர் அலுவலகம் அழைத்ததின் பேரில் ஆளுநர் தில்லிக்குச் சென்று இருப்பதாக தகவல் வெளியானது. ஆளுநர் ஆர்.என்.ரவி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சட்ட நிபுணர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தீர்ப்பு ஒத்திவைப்பு!

குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் மாநில மத்திய அரசுகளின் மசோதாக்களுக்கு ஒப்புதலுக்கான காலக்கெடுவை நிர்ணயிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிறுத்தி வைத்தார். இதை அடுத்து, விளக்கம் கேட்டு தலைமை நீதிபதிக்கு நோட்டீஸ் அனுப்பினார். 

உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள்! ஆளுநர் விவகாரத்தில் அதிரடி!

president draupati murmu - 2026
#image_title

ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்து இருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பி கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், தமிழக ஆளுநர் ரவி காலம் தாழ்த்துவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ”மசோதாவை ஆளுநர்கள் அனுப்பி வைத்தால், அதன் மீது குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்’ என, கால நிர்ணயம் செய்தது.

மசோதா விஷயத்தில் முடிவெடுக்க குடியரசுத் தலைவர்க்கு, உச்ச நீதிமன்றம் இது போல் காலக்கெடு நிர்ணயித்தது, இதுவே முதல் முறை. இந்த விவகாரம் தொடர்பாக, இன்று (மே 15) உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனைக் கருத்தை பெறும் வகையில் 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பினார்.

குடியரசுத் தலைவர் அதிகாரமான 143ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார். 

குடியரசுத் தலைவர் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயிக்க முடியுமா?  

அரசியல் சாசனம் காலவரம்பை நிர்ணயிக்காத நிலையில் உச்சநீதிமன்றம் எப்படி நிர்ணயிக்க முடியும்?

குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கான அதிகாரத்திற்கு மாற்றாக உச்சநீதிமன்றம் 142ஐ பயன்படுத்தலாமா? – உள்ளிட்ட 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு எழுப்பியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தின் விவரம்…

இந்திய அரசியலமைப்பின் 143வது பிரிவின் (1)-வது பிரிவின் மூலம் எனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு என்ற நான், பின்வரும் கேள்விகளை இந்திய உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்காகவும், அதன் கருத்தைத் தெரிவிப்பதற்காகவும் இதன் மூலம் பரிந்துரைக்கிறேன், அதாவது:-

1. இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஒரு மசோதா, ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்படும்போது, அவருக்கு முன் இருக்கும் அரசியலமைப்பு வாய்ப்புகள்  என்ன?

2. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200-ன் கீழ் ஒரு மசோதா தாக்கல் செய்யப்படும்போது, ​​அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனைகள் ஆளுநரைக் கட்டுப்படுத்துகிறதா?

3. இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஆளுநர் அரசியலமைப்பு வழங்கும் வாய்ப்பை பயன்படுத்துவது, நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதா?

4. இந்திய அரசியலமைப்பின்  பிரிவு 200 இன் கீழ் ஆளுநரின் நடவடிக்கைகளை நீதித்துறை ஆய்வு செய்வதற்கு பிரிவு 361 முழுமையான தடையை விதிக்கிறதா?

5. அரசியலமைப்பில் காலக்கெடு நிர்ணயிக்கப்படாவிட்டாலும், பிரிவு 200 இன் கீழ் ஆளுநர்கள் தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது, பின்பற்ற வேண்டிய நடைமுறைகளில், நீதிமன்றங்கள் காலக்கெடுவை விதிக்க முடியுமா, மற்றும் பரிந்துரைக்க முடியுமா?

6. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 201 இன் கீழ் குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதா?

7. அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் குடியரசுத் தலைவர் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், இந்திய அரசியலமைப்பின் 201 வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரின் விருப்புரிமையைப் பயன்பாட்டுக்கான காலக்கெடு மற்றும் நடைமுறைத் தேவைகளை நீதிமன்றங்கள் அமைக்க முடியுமா?

8. குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை நிர்வகிக்கும் அரசியலமைப்புத் திட்டத்தின் வெளிச்சத்தில், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 143-ன் கீழ், குடியரசுத் தலைவர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகவோ அல்லது வேறுவிதமாகவோ ஒதுக்கும்போது, ​​உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்று, உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டுமா?
(ஆளுநர் ஒதுக்கிய மசோதாக்கள் குறித்து முடிவெடுக்கும்போது பிரிவு 143 இன் கீழ் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டுமா?)

9. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200 மற்றும் பிரிவு 201 இன் கீழ் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவுகள், சட்டம் அதிகாரபூர்வமாக அமலுக்கு வருவதற்கு முந்தைய கட்டத்தில்  நியாயப்படுத்தப்படுமா? ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, எந்த வகையிலும் அதன் உள்ளடக்கங்கள் மீது நீதிமன்றங்கள் நீதித்துறை தீர்ப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறதா?

10. இந்திய அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ், அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவதையும், குடியரசுத் தலைவர்/ஆளுநர் உத்தரவுகளையும் எந்த வகையிலும்  நீதித்துறை மாற்றியமைக்கவோ அல்லது மீறவோ முடியுமா?

11. இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டபடி, ஒரு ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம்,  நடைமுறைக்கு வருமா?

12. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 145(3)-ன் விதிமுறையைக் கருத்தில் கொண்டு, இந்த மாண்புமிகு நீதிமன்றத்தின் எந்தவொரு அமர்வும், அரசியலமைப்பின் விளக்கம் தொடர்பான கணிசமான சட்டக் கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலிலேயே முடிவு செய்து,  குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதை பரிந்துரைப்பது கட்டாயமில்லையா?

13. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 142 இன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் நடைமுறைச் சட்டம் அல்லது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 142 தொடர்பான விஷயங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளதா?  அல்லது, 
அரசியலமைப்பின் அல்லது நடைமுறையில் உள்ள சட்டத்தின் தற்போதைய அடிப்படை அல்லது நடைமுறை விதிகளுக்கு முரணான, அல்லது முரண்பாடான உத்தரவுகளைப் பிறப்பித்தல்/ஆணைகளைப் பிறப்பித்தல் என்பது வரை நீட்டிக்கப்படுகிறதா?

14. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 131 இன் கீழ், ஒரு வழக்குத் தொடருவதைத் தவிர, வேறு எந்த வழியிலும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான மோதல்களைத் தீர்க்க அரசியலமைப்பு உச்ச நீதிமன்றத்தை அனுமதிக்கிறதா?

குடியர்சுத் தலைவர் எழுதியுள்ள இந்தக் கடிதத்தின் மூலம், குறிப்பிட்ட இந்தக் கேள்விகளை எழுப்புவதன் மூலம், நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரத்தின் அரசியலமைப்பு எல்லைகள் குறித்து குடியரசுத் தலைவர் தெளிவுபடுத்த முயல்கிறார். இது தேசிய விஷயங்களில், நீதித்துறை விளக்கத்தின் தேவையை இன்று வலுப்படுத்துகிறது.

இதற்கு, தமிழக ஆளுநர் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் இரு நபர் அமர்வு தன்னிச்சையாக அளித்த தீர்ப்பு காரணமாகிறது,. அதற்கு, சுயநலன் சார்ந்து அரசியல் ரீதியாக முறைகேடுகளை ஊக்குவித்து, முறைகேடுகளையே சட்ட ரீதியாக மேற்கொள்ளும் தமிழக அரசின் ஆளும் திமுக.,வின் நடவடிக்கைகள் காரணமாகிவிட்டன என்பது சட்ட வல்லுநர்களின் கருத்தாக அமைந்திருக்கிறது.

இனி செப்.23ம் தேதி ஆயுர்வேத தினம் கொண்டாடப்படும்: ஆயுஷ் அறிவிப்பு!

ayurveda - 2026

ஆயுர்வேத தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 23 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23-ம் தேதி ஆயுர்வேத தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2025 மார்ச் 23-ந் தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பு மூலம் அறிவிக்கப்பட்ட இந்த மாற்றம், ஆயுர்வேத தினத்தைக் கடைப்பிடிக்கும் முந்தைய நடைமுறையிலிருந்து முக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது.

சுகாதாரம் மற்றும் நல்வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் அறிவியல் மற்றும் சான்றுகள் அடிப்படையிலான, முழுமையான மருத்துவ முறையான ஆயுர்வேதத்தை ஊக்குவிப்பதற்காக ஆயுர்வேத தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இதுவரை, ஆயுர்வேத தினம் கார்த்திகை மாதத்தில் (பொதுவாக அக்டோபர் அல்லது நவம்பர்) கொண்டாடப்படும். இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் தேதி மாறி வருவதால், ஆயுர்வேத தினத்தைக் கடைப்பிடிப்பதில் ஒரு நிலையான வருடாந்திர தேதி இல்லை.

இந்த முரண்பாட்டை நிவர்த்தி செய்யவும், தேசிய மற்றும் உலகளாவிய கொண்டாட்டங்களுக்கான நிலையான, பொருத்தமான மாற்றுகளை ஆராய ஆயுஷ் அமைச்சகம் ஒரு குழுவை அமைத்தது. இந்த நிபுணர் குழு நான்கு சாத்தியமான தேதிகளை முன்மொழிந்தது.

செப்டம்பர் 23-ம் தேதி விருப்பமான தேர்வாக வெளிப்பட்டது. இந்த முடிவு நடைமுறை மற்றும் குறியீட்டு பரிசீலனைகளின் மூலம் வழிநடத்தப்பட்டது.

சுகாதார வல்லுநர்கள், கல்வி அமைப்புகள் மற்றும் சர்வதேச கூட்டாளிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தேதியை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 அன்று ஆயுர்வேத தின கொண்டாட்டங்களில் தீவிரமாக ஈடுபட ஆயுஷ் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த மாற்றத்தை, உலகளாவிய சுகாதார அமைப்பில் ஆயுர்வேதத்தை இணைத்து, நிலையான சுகாதார அமைப்பாக காலத்தால் அழியாத மதிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைச்சகம் கருதுகிறது.

சபரிமலை நடை திறப்பு; தரிசனத்துக்கு குடியரசுத் தலைவர் வருகிறார்?

sabarimala iyappan sannidhi opened - 2026
#image_title

வைகாசி மாத பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு; 5 நாட்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு..19ல் குடியரசு தலைவர் சபரிமலை வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை வியாழக்கிழமை முதல் வைகாசி மாத பூஜைகள் நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. மே 19ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது.5 நாட்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திட்டமிட்டபடி வரும் 19-ம் தேதி குடியரசுத் தலைவர் சபரிமலைக்கு வர உள்ளதாக தெரிகிறது. இதற்காக 18, 19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான தரிசன முன்பதிவு மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாத தொடக்கத்தில் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி வைகாசி இடவம் மாத தரிசனத்திற்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு ஆகியோர் தலைமையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதரி நடைதிறக்க மங்கல இசை முழங்க கோயில் நடை திறக்கப்பட்டு, ஆழிக்குண்டத்தில் அக்னி ஏற்றப்பட்டது .பின்னர், ஐயப்பன் விக்கிரகத்தில் உள்ள விபூதி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து பூஜை எதுவுமின்றி நடை இரவு சாத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாளை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு 19ம் தேதி வரை தொடர் வழிபாடுகள் நடைபெற உள்ளன. அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். நாள்தோறும் இரவு 10.30 மணிக்கு ஹரிவராசனம் பாடிய பின் நடை அடைக்கப்படும்.

19-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதிமுர்மு சபரிமலைக்கு வருவதாக இருந்தது. இதற்காக 18, 19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், போர்ப்பதற்றம் காரணமாக குடியரசுத் தலைவரின் பயணம் தள்ளி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, அந்நாட்களுக்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு தொடங்கப்பட்டது.

இந்நிலையில், திட்டமிட்டபடி வரும் 19-ம் தேதி குடியரசுத் தலைவர் சபரிமலைக்கு வர உள்ளதாக தெரிகிறது. இதற்காக 18, 19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான தரிசன முன்பதிவு மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேவசம் போர்டு அதிகாரிகள் கூறும்போது, “குடியரசுத் தலைவர் வர உள்ளதால், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்நாட்களில் பக்தர்களுக்கான தரிசனம் இருக்காது. என்றனர்.

ஐந்து நாட்கள் பூஜை வழிபாடுகளில் நெய்யபிஷேகம் புஷ்பாஞ்சலி படி பூஜை உட்பட ஐயப்பனுக்கு வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெறும்

சீன ‘கப்ஸா’க்களுக்கு இந்தக் கடிவாளம் போதுமா?! 

china websites - 2026
picture for representation

சீன அரசின் பிரசார ஊதுகுழலாகச் செயல்படும் சீனா Xinhua  செய்திகளின் X தளப் பக்கத்தை இந்தியா தடை செய்தது. சீனா சின்ஹுவா செய்தி பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிராக தவறான தகவல்கள், போலி செய்திகள் மற்றும் பிரசாரங்களைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ளது.  முன்னதாக சீன அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான குளோபல் டைம்ஸும் இவ்வாறு தடை செய்யப்பட்டது. இந்நிலையில் குளோபல் டைம்ஸுக்குப் பிறகு இரண்டாவது பெரிய சீன CCP ஊடகம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. 

சீன ஊடகத்தின் எக்ஸ் தளப் பக்கம் மட்டுமல்லாது, துருக்கிய அரசாங்கத்தால் நிதி உதவி செய்யப்பட்டு அதன் மூலம் நடத்தப்பட்டு வரும் டிஆர்டி வேர்ல்ட் TRT World சர்வதேச செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கமும் இந்தியாவில் தடை செய்யப் பட்டுள்ளது. 

இந்த வாரத் தொடக்கத்தில் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட பொது கண்டனத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ராணுவ நடவடிக்கை குறித்த  ஒரு நேரடி எக்ஸ் தள இடுகையின் போது, குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்தது. 

இந்திய ஆயுதப் படைகள் சந்தித்ததாகக் கூறப்படும் இழப்புகள் தொடர்பான ஆதாரமற்ற கூற்றுக்களை, பாகிஸ்தானுக்கு ஆதரவான பல சமூக ஊடகக் கணக்குகள் பரப்பி வருவதாக தூதரகம் ஒரு தொடர்ச்சியான பதிவில் செய்தியை விரிவாகக் குறிப்பிட்டது. 

காண்க: பொய்களைப் பரப்பலாமா? ஊடகத்தின் செயல் அதுதானா? சீன ஊடகத்துக்கு விடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்!

ஆபரேஷன் சிந்தூர் நிகழ்வின் பின்னணியில், பாகிஸ்தானுக்கு ஆதரவான பல அமைப்புகள், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியில், ஆதாரமற்ற கூற்றுகளைப் பரப்பி வருகின்றன. ஊடகங்கள் ஆதாரங்களைச் சரிபார்க்காமல் இதுபோன்ற தகவல்களைப் பகிரும்போது, ​​அது பொறுப்பு மற்றும் பத்திரிகை நெறிமுறைகளில் கடுமையான குறைபாட்டை பிரதிபலிக்கிறது” என்று தூதரகத்தின் பதிவில் கூறப்பட்டது.

பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மை சரிபார்ப்புப் பிரிவு, இந்திய விரோதப் போக்கு தீவிரமடைந்ததிலிருந்து தவறான தகவல்களைத் தீவிரமாகக் கண்டறிந்து வருகிறது. பல தவறான காட்சிகள் மற்றும் விவரிப்புகள் மறுசுற்றுக்கு  விடப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட தகவல்களிலிருந்து கண்டறியப்பட்டன, அவற்றில் பல பழைய நிகழ்வுகளிலிருந்து  எடுக்கப்பட்டவை அல்லது முற்றிலும் புனையப்பட்டவையாக இருந்தன.

இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தை தனது ஒரு பகுதியாகக் கூறி வரும் சீனா, வடகிழக்கு மாநிலத்திற்குள் பல இடங்களின் பெயர்களைக் கொண்ட வரைபடங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பல்வேறு இடங்களின் 30 புதிய பெயர்களைக் கொண்ட பட்டியலை சீனா வெளியிட்டது, அதை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்தது.

அருணாச்சல பிரதேசத்தை, ஜாங்னான் என்று பெயரிட்டு சீனா அழைத்து வருகிறது. அங்குள்ள ஆறு இடங்களுக்கு, 2017ல் புதிய பெயரை சூட்டியது. அதைத் தொடர்ந்து, 2021ல் 15 இடங்கள், 2023ல் 11 இடங்களுக்கு புதிய பெயர் சூட்டியது. தற்போது மீண்டும் அருணாச்சலப் பிரதேசத்தில் பல இடங்களின் பெயரை மாற்ற சீனா முயற்சித்து வருகிறது. இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் பல இடங்களின் பெயரை மாற்ற சீனா மேற்கொண்ட முயற்சியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்குப் பெயரிட சீனா தொடர்ந்து வீணான மற்றும் அபத்தமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எங்கள் கொள்கை ரீதியான நிலைப்பாட்டிற்கு இணங்க, அத்தகைய முயற்சிகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது. பெயரை மாற்றினாலும், உண்மையான யதார்த்தத்தை சீனா மாற்ற முடியாது – என்று குறிப்பிட்டுள்ளார். 

ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அது தொட்ர்ந்த பின்னணியில், இப்போது சீன ஊடகங்களின் சமூகத் தளக் கணக்குகளை இந்தியாவில் தடை செய்துள்ளது இந்திய அரசு. ஆனால், இதே சீன ஊடகத்தின் பொய்ப் பிரசாரங்களை மேற்கோளிட்டு பிரசாரம் செய்யும் இந்திய ஊடகங்களின் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்றும், அவ்வாறு பொய்களைப் பரப்பும் துவேஷ ஊடகங்களின் மீது மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை குறைந்த பட்சம் விளக்கம் கேட்டு அறிக்கையாவது அனுப்பியதா என்றும் கேள்விகள் முன்வைக்கப் படுகின்றன.

Being Pak Army Chief is Damn Easy!

0
operation sindoor contrinue - 2026

    —        Narasimhan Vijayaraghavan

It is too damn easy to be the Chief of Army Staff in Pakistan. Particularly, in times of an armed conflict. There is no pressure on the Armed Forces. In any case,  Pak government itself is indebted to the Army for its installation. Pak Army runs the State. It is a constitutional monstrosity. But a reality in Pakistan. Pakistan has no separate deep State. It’s army is the institutionalized deep state.

Why is it easy to be the  chief of Army in Pakistan? It is easy because the Army is not under any stress to WIN the conflict. It does not need to. For, it wins the conflict Orally even before, during and after the conflict. It is amazing that  it’s Government  falls in line and ‘basks’ in the win.

It is shameless. But, a fact. Three representatives representing the three forces give a Presser with fake videos, including from Video Games. They go on Live television to claim to have drowned out Jets, hit our Airbases, demolished our Air Defence systems and totally disabled the runways et al.

While denial of our claims (despite proof- internationally fact checked and authenticated) may be par for the course, what clinches it for the Pak Army lies in its utter shamelessness to peddle white lies to claim a victory. One is astounded that supposedly responsible army personnel can do this with straight faces.

Obviously, their government is unlikely to be in cross hairs. Because it suits their agenda too that Pakistan tripped India and caused untold losses. When their defence minister is confronted to prove claims of downing Indian jets, he points to social media videos as proof. How shameless can you get?

It suits India. Pakistan is a defeated State. It is  in constant denial. Truth does not matter. It thrives in falsehood and perfidy. Pakistan crushed OP Sindoor, Orally. It hardly mattered that India hit  9 of their Terror camps and 11 of their Airbases.

They simply acknowledged the hit. A small

merciful concession. But, denied any damage. ‘India failed to cause any losses’. 100 plus terrorists killed were ‘civilians’. Losses of their Jets and a few Pilots were denied as ‘not true’. The trick lay not in denials. It went beyond to claim success.

The tragedy for Pakistani people is that their Army and Political government are in cohorts in this conspiracy. Pakistani people have to swallow pride and consume this nonsense lest they are seen to be unpatriotic. But they know. They can’t but know the truth. It seeps  through their body language and utterances.

The ultimate inference is : It is too damn easy to be at the helm of Armed Forces in Pakistan. You get to enjoy all the privileges and more. And in the event of armed conflicts,  you are handed out a win ‘orally’ and they don’t need to sweat it out at all. They ‘win’ anyway. So, why bother fighting.

India is safe not because our Arned Firces are sound, strong and professional. They are that undeniably. We are safer because Pakistan Army is weak, inefficient and downright liars. We don’t mind ‘losing’ as in OPSndoor. Let Pakistan continue to win Orally. We are comfortable with winning in air, sea and land with irrefutable proof.

So long as Pakistani people allow their Army and Government to get away with such OralVictories,, we in India have nothing to fear. Pakistani Army will ever ensure the safety and security of us Indians as We the People!

மதுரையில் மகா பெரியவர் அனுஷ உத்ஸவம் சிறப்பு அபிஷேகம்!

madurai anusham abisheam - 2026
#image_title

மதுரையில் காஞ்சி மகா பெரியவர் அனுஷ உத்ஸவம் சிறப்பு அபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம்!

மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி மகா பெரியவரின் அனுஷ உற்சவம் எஸ். எஸ். காலனி எஸ். எம். கே. திருமண மண்டபத்தில் நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

அனுஷ உற்சவம்: மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மகா பெரியவா, உம்மாச்சி தாத்தா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகிற முக்தி அடைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளின் திருநட்சத்திரமான அனுஷ உற்சவம் மதுரை எஸ் எஸ் காலனி எஸ். எம். கே. திருமண மண்டபத்தில், நடைபெற்றது.

இதனை முன்னிட்டு , மகாபெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு திருமஞ்சனத் திரவியப் பொடி,. மஞ்சள் பொடி, பஞ்சகவ்யம், பால், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருநீறு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைப் பெற்றது. தொடர்ந்து , ருத்ரா அபிஷேகம் நடைப்பெற்றது.
இந்நிகழ்வினை, சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் நடத்தினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை , மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார். இந்நிகழ்வில், கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூர்: நவீன போரில் ஒரு தீர்க்கமான வெற்றி!

operation sindoor contrinue - 2026
  • ஜான் ஸ்பென்ஸர்

இந்தியா இன்னும் ஆபரேஷன் சிந்தூர் முழுமையாக முடிந்துவிட்டதாக அறிவிக்கவில்லை. தற்போது இருப்பது, நடவடிக்கைகளில் ஒரு உணர்வுபூர்வமான நிறுத்தம் – சிலர் இதை ஒரு போர் நிறுத்தம் என்று அழைக்கலாம், ஆனால் இராணுவத் தலைவர்கள் வேண்டுமென்றே அந்த வார்த்தையைத் தவிர்த்துவிட்டனர். போர்க்களக் கண்ணோட்டத்தில், இது வெறும் இடைநிறுத்தம் அல்ல; இது ஒரு அரிய மற்றும் தெளிவற்ற இராணுவ வெற்றியைத் தொடர்ந்த ஒரு மூலோபாய பிடியாகும்!

நான்கு நாட்கள் என்று அளவிடப்பட்ட இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியா ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றது என்பது புறநிலை ரீதியாக உறுதியானது. பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தல், இராணுவ மேன்மையை நிரூபித்தல், தடுப்பை மீட்டெடுத்தல் மற்றும் ஒரு புதிய தேசிய பாதுகாப்பு கோட்பாட்டை வெளியிடல் போன்ற அதன் மூலோபாய நோக்கங்களை ஆபரேஷன் சிந்தூர் எட்டியது. இது ஒரு குறியீட்டு சக்தி அல்ல. அது தீர்க்கமான சக்தியாக இருந்தது, தெளிவாகப் பயன்படுத்தப்பட்டது.

ஏப்ரல் 22, 2025 அன்று, இந்தியா தாக்கப்பட்டது. ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் 26 இந்திய பொதுமக்கள், பெரும்பாலும் இந்து சுற்றுலாப் பயணிகள், படுகொலை செய்யப்பட்டனர். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) ஒரு பிரிவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. பல தசாப்தங்களாக இருப்பது போல, இந்தக் குழு பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) ஆல் ஆதரிக்கப்படுகிறது.

ஆனால் முந்தைய தாக்குதல்களைப் போலன்றி, இந்த முறை இந்தியா காத்திருக்கவில்லை. அது சர்வதேச மத்தியஸ்தத்திற்கு முறையிடவில்லை அல்லது இராஜதந்திர நடவடிக்கைகளின் எல்லையை வெளியிடவில்லை. அது போர் விமானங்களை ஏவியது.

மே 7 அன்று, இந்தியா விரைவான மற்றும் துல்லியமாக அளவிடப்பட்ட இராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர்-ஐத் தொடங்கியது. இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்பு இலக்குகளைத் தாக்கியது, அவற்றில் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகம் மற்றும் செயல்பாட்டு மையங்கள் அடங்கும். செய்தி – தெளிவாக இருந்தது: பாகிஸ்தான் மண்ணிலிருந்து தொடங்கப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இப்போது போர்ச் செயல்களாகக் கருதப்படும்.

“எந்தவொரு அணு ஆயுத மிரட்டலையும் இந்தியா பொறுத்துக் கொள்ளாது. அணு ஆயுத மிரட்டலின் போர்வையில் வளரும் பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்தியா துல்லியமாகவும் தீர்க்கமாகவும் தாக்குதல் நடத்தும்” என்ற புதிய கோட்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி தெளிவாக்கினார்.

இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையை விட, ஒரு மூலோபாய கோட்பாட்டின் வெளிப்பாடாகும். மோடி சொன்னது போல், “பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாகச் செல்ல முடியாது. தண்ணீரும் இரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது.”

சிந்தூர் நடவடிக்கை திட்டமிட்ட கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது:

· மே 7: பாகிஸ்தான் எல்லைக்குள் ஆழமாக ஒன்பது துல்லியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பஹாவல்பூர், முரிட்கே, முசாபராபாத் மற்றும் பிற இடங்களில் உள்ள முக்கிய பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மற்றும் தளவாட முனையங்கள் இலக்குகளில் அடங்கும்.

· மே 8: இந்தியாவின் மேற்கு மாநிலங்கள் முழுவதும் ட்ரோன்களுடன் பாகிஸ்தான் தாக்குதலைத் தொடுத்தது. இஸ்ரேலிய மற்றும் ரஷ்ய அமைப்புகளின் உதவியுடன் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட இந்தியாவின் பல அடுக்கு வான் பாதுகாப்பு வலையமைப்பு கிட்டத்தட்ட அனைத்தையும் தவிடுபொடியாக்கியது.

· மே 9: ஆறு பாகிஸ்தான் இராணுவ விமானப்படை தளங்கள் மற்றும் UAV ஒருங்கிணைப்பு மையங்கள் மீது இந்தியா கூடுதல் தாக்குதல்களை நடத்தியது.

· மே 10: துப்பாக்கிச் சூடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தியா இதை போர் நிறுத்தம் என்று அழைக்கவில்லை. இந்திய இராணுவம் அதை “துப்பாக்கிச் சூடு நிறுத்தம்” என்று குறிப்பிட்டது – இது ஒரு சொற்பொருள் சார்ந்த, ஆனால் வேண்டுமென்றே எடுக்கப்பட்ட தேர்வாகும், இது நிலைமையின் மீதான அதன் மூலோபாய கட்டுப்பாட்டை வலுப்படுத்தியது.

இது வெறும் தந்திரோபாய வெற்றி அல்ல. அது நேரடித் துப்பாக்கிச் சூட்டின் கீழ் நடத்தப்பட்ட கோட்பாட்டு மரணதண்டனை.

அடையப்பட்ட மூலோபாய விளைவுகள்

1. ஒரு புதிய சிவப்பு கோடு வரையப்பட்டு அமல்படுத்தப்பட்டது

பாகிஸ்தான் மண்ணிலிருந்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களை இப்போது இராணுவ பலத்தால் எதிர்கொள்ள நேரிடும். இது (பயங்கரவாத தாக்குதலுக்கான) ஒரு மிரட்டல் இல்லை. இது இனி பரவலாக எடுக்கப்படும்.

2. இராணுவ மேன்மை நிரூபிக்கப்பட்டது

பயங்கரவாத தளங்கள், ட்ரோன் ஒருங்கிணைப்பு மையங்கள், விமானப்படை தளங்கள் உட்பட பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு இலக்கையும் தாக்குப்பிடிக்கும் திறனை இந்தியா வெளிப்படுத்தியது. இதற்கிடையில், பாகிஸ்தானால் இந்தியாவிற்குள் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியைக் கூட ஊடுருவ முடியவில்லை. அது சமநிலையானது அல்ல. அது மிகப்பெரிய மேன்மை. உண்மையான தடுப்பு எவ்வாறு நிறுவப்படுகிறது என்பது அப்படித்தான்.

3. மீட்டெடுக்கப்பட்ட தற்காப்பு

இந்தியா பலமாக பதிலடி கொடுத்தது, ஆனால் முழுத் தாக்குதலையும் உடனே நிறுத்தியது. கட்டுப்படுத்தப்பட்ட அதிகரிப்பு மற்றும் ஒரு தெளிவான தற்காப்பு சமிக்ஞையை அனுப்பியது: இந்தியா பதிலளிக்கும், மேலும் அது வேகத்தைக் கட்டுப்படுத்தும்.

4. மூலோபாய சுதந்திரத்தை வலியுறுத்துதல்

சர்வதேச மத்தியஸ்தத்தை நாடாமல் இந்தியா இந்த நெருக்கடியைக் கையாண்டது. அது இறையாண்மை வழிமுறைகளைப் பயன்படுத்தி, இறையாண்மை விதிமுறைகளின் அடிப்படையில் கோட்பாட்டை அமல்படுத்தியது.

சிந்தூர் நடவடிக்கை ஆக்கிரமிப்பு அல்லது ஆட்சி மாற்றம் பற்றியது அல்ல. அது குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டுமே செயல்படுத்தப்பட்ட போர். இந்தியா இன்னும் கொஞ்சம் தூரம் சென்று தாக்கியிருக்கலாம் என்று வாதிடும் விமர்சகர்கள், அதன் உள்ளார்ந்த கருத்தைத் தவறவிட்டிருக்கிறார்கள். மூலோபாய வெற்றி என்பது அழிவின் அளவைப் பற்றியது அல்ல – அது விரும்பிய அரசியல் விளைவை அடைவது பற்றியது.

இந்தியா பழிவாங்குவதற்காகப் போராடவில்லை. அது தற்காப்புக்காகப் போராடிக் கொண்டிருந்தது. அது வேலை செய்தது.

இந்தியாவின் கட்டுப்பாடு பலவீனம் அல்ல – அது முதிர்ச்சி. இது செலவுகளை விதித்தது, வரம்புகளை மறுவரையறை செய்தது மற்றும் விரிவாக்க ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டது. இந்தியா ஒரு தாக்குதலுக்கு மட்டும் பதிலடி கொடுக்கவில்லை. இது மூலோபாய சமன்பாட்டை மாற்றியது.

பல நவீன போர்கள் முடிவற்ற ஆக்கிரமிப்புகள் அல்லது அரசியல் குழப்பங்களாக சுழலும் ஒரு யுகத்தில், ஆபரேஷன் சிந்தூர் தனித்து நிற்கிறது. இது ஒழுக்கமான இராணுவ உத்தியின் நிரூபணமாக இருந்தது: தெளிவான இலக்குகள், சீரமைக்கப்பட்ட வழிகள் மற்றும் வழிமுறைகள், மற்றும் கணிக்க முடியாத அதிகரிப்பை எதிர்கொள்ளும் வகையில் தகவமைப்பு செயல்படுத்தல். இந்தியா ஒரு அடியை ஏற்றுக்கொண்டு, அதன் நோக்கத்தை வரையறுத்து, அதை அடைந்தது – அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள்.

சிந்தூர் நடவடிக்கையில் பலப்பிரயோகம் மிகப்பெரியதாக இருந்தபோதிலும் கட்டுப்படுத்தப்பட்டது – துல்லியமானது, தீர்க்கமானது மற்றும் தயக்கமின்றி. நவீன போரில் அந்த வகையான தெளிவு அரிதானது. “என்றென்றும் போர்கள்” மற்றும் மூலோபாய திசை இல்லாத வன்முறை சுழற்சிகளால் வரையறுக்கப்பட்ட ஒரு சகாப்தத்தில், சிந்தூர் தனித்து நிற்கிறது. இது தெளிவாக வரையறுக்கப்பட்ட இலக்குகள், பொருந்தக்கூடிய வழிகள் மற்றும் வழிமுறைகள் மற்றும் முன்முயற்சியை ஒருபோதும் கைவிடாத ஒரு அரசுடன் கூடிய வரையறுக்கப்பட்ட போரின் மாதிரியை வழங்குகிறது.

2008 ஆம் ஆண்டு இந்தியா தாக்குதல்களை உள்வாங்கிக் கொண்டு காத்திருந்தது. இந்த இந்தியா உடனடியாகவும், துல்லியமாகவும், தெளிவாகவும் பதிலடி கொடுக்கிறது.

மோடியின் கோட்பாடு, இந்தியாவின் முன்னேறும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் அதன் ஆயுதப் படைகளின் தொழில்முறை ஆகியவை ஒரு நாடு இனி கடைசிப் போருக்குத் தயாராகவில்லை என்பதைக் குறிக்கின்றன. அது அடுத்ததற்கு தயாராகி வருகிறது.

செயல்பாடுகள் நிறுத்தப்படுவது என்பது சிந்தூர் நடவடிக்கையின் முடிவு அல்ல. இது ஒரு இடைநிறுத்தம். இந்தியா இந்த முயற்சியைக் கொண்டுள்ளது. மீண்டும் தூண்டப்பட்டால், அது மீண்டும் தாக்கும்.

தற்காப்பு மீட்டெடுக்கப்பட்டது. இது வெளிப்படுத்தப்பட்ட ஒரு புதிய கோட்பாடு. மேலும், அரசு ஆதரவு பயங்கரவாதத்தின் கொடுமையை எதிர்கொள்ளும் அனைத்து நாடுகளும் இதைப் படிக்க வேண்டும்.

ஆபரேஷன் சிந்தூர் என்பது அணு ஆயுத விரிவாக்கத்தின் நிழலில், உலகளாவிய கவனத்துடன், வரையறுக்கப்பட்ட புறநிலை கட்டமைப்பிற்குள் நடத்தப்பட்ட ஒரு நவீன போராகும். முக்கியமான ஒவ்வொரு அளவிலும், அது ஒரு மூலோபாய வெற்றியாகும் – மேலும் ஒரு தீர்க்கமான இந்திய வெற்றியாகும்.


இந்தக் கட்டுரை, ஜான் ஸ்பென்ஸர் தனது எக்ஸ் தள பதிவில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

ஜான் ஸ்பென்சர் அர்பன் வார்ஃபேர் இன்ஸ்டிடியூட்டின் நிர்வாக இயக்குநராக உள்ளார். அவர் Urban Warfare -ஐப் புரிந்துகொள்வோம் புத்தகத்தின் இணை ஆசிரியர். www.johnspenceronline.com இல் மேலும் அறிக!

நீங்கள் அவரை ‘X’ இல் @SpencerGuard என்ற முகவரியிலும் பின்தொடரலாம்.


இந்தியாவுக்கு அறிவுரை கூறும் பலுசிஸ்தான்! சுதந்திர நாடாக அறிவிப்பு?

balochistan army issues - 2026
  • ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்

ஆப்ரேஷன் கெல்லர் – சுதந்திர பலூசிஸ்தான் உதயமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சுழன்று அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். 

நேற்று பாகிஸ்தானியர்களால்  தாக்குதலுக்கு உள்ளானதாக விடாமல் உளறிக் கொண்டு, கதைக்கப்பட்ட ஆதம்பூரில், இந்தியா சுதர்சன சக்கரா எனப் பெயரிடப்பட்ட ரஷ்ய தயாரிப்பு வான் பாதுகாப்பு சாதனமான S400 நிலை நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்கு பாரதப் பிரதமர் மோடி விஜயம் செய்தார். அங்கு உள்ள ராணுவத்தினரை உற்சாகப் படுத்த, ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமான நடத்திக் கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கச் சென்றதாக தகவல் வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆனால் மதியமே ரிபப்ளிக் ஆஃப் பலூசிஸ்தான் உதயமானதாக அங்கிருந்து அறிவித்திருக்கிறார்கள். கூடவே இந்தியா இதனை அங்கீகரிக்க வேண்டும் எனவும்… இப்படி அறிவிக்கும் முதல் நாடாக இந்தியா இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதனோடு சேர்த்து அமெரிக்காவுக்கும் தகவல் சொல்லி இருக்கிறார்கள். ஆக மொத்தம் ஐம்பது நாடுகளுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் இந்தியா தங்களுக்கு துணை நின்று ஒத்துழைப்பு தந்து அங்கீகரிக்க வேண்டும்; சர்வதேச சமூகத்திடமும் எடுத்துச் சொல்லி தங்களுக்கு தனி நாடு அந்தஸ்து பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இவர்களால் அடையாளப்படுத்தப்படும் பலூசிஸ்தான் என்கிற நாட்டில் கிட்டத்தட்ட பத்து மாநிலங்கள் வருவதாகவும், அதற்கு தலைநகராக குவெட்டா இருக்கும் எனவும் அவர்களுடைய தேசிய மொழியாக பலூச் இருக்கும் எனவும் இதனோடு சேர்த்து ஆறு மொழிகளுக்கு தேசிய அங்கீகாரம் உள்ளதாக அறிவித்து அசரடித்திருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் இன்று பற்றி எரிவது இந்த விஷயம்தான். அமெரிக்கா ஆடும் ஆடு புலி  ஆட்டத்தில் (பாகிஸ்தானிய தேசிய விலங்கு மலை ஆடு .நம் இந்திய தேசிய விலங்கு, புலி) இந்தக் காய் நகர்வை அவர்கள் எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது. இது பற்றின சர்வதேச ஊடகங்களின் கேள்விகளை நாசூக்காகத் தவிர்த்து விட்டு நகர்ந்திருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.

இது ஒரு புறம் இருக்க ஆப்ரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து ஆப்ரேஷன் கெல்லர் நம் இந்திய தரப்பில் முன்னெடுக்கப்பட்டு மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இது நம் இந்திய MI எனப்படும் மிலிட்டரி இன்டலிஜென்ஸ் நடத்திய அதிரடி தாக்குதல் என்கிறார்கள். பாகிஸ்தானில் வைத்தே அந்த தேடப்படும் குற்றவாளிகளை  அடையாளப் படுத்தப்பட்ட பயங்கரவாதிகள் மூவரை மிகச் சரியாக வேட்டையாடி இருக்கிறார்கள். இந்தப் பெயர் வெளியான போது, கெல்லர் என்பதன் உருதுப் பொருள் என்ன என்பது குறித்து கூகுளில் அதிகம் தேடியதாகவும் சமூகத் தளங்களில் பேசப்பட்டது. 

யார் அந்த மூவர் என்பதோ, என்று, எங்கு வைத்து இதனைச் செய்தார்கள் என்பதோ விவரமாக அறிவிக்கப்படவில்லை. ஆக அடுத்தடுத்து பரபரப்பான நகர்வுகளோடு நம் இந்திய அரசின் ஆட்டம் தொடர்கிறது. எதிரிகள் இந்தக் காய் நகர்த்தலைப் புரிந்து உள்வாங்கவே திணறுகிறார்கள் என்பதும் நன்றாகவே தெரிகிறது. இங்கே இதில் ஆடு மட்டும் பதறவில்லை அந்தக் காட்டு மாடும் தான்!