எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஆப்ரேஷன் கெல்லர் – சுதந்திர பலூசிஸ்தான் உதயமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சுழன்று அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
நேற்று பாகிஸ்தானியர்களால் தாக்குதலுக்கு உள்ளானதாக விடாமல் உளறிக் கொண்டு, கதைக்கப்பட்ட ஆதம்பூரில், இந்தியா சுதர்சன சக்கரா எனப் பெயரிடப்பட்ட ரஷ்ய தயாரிப்பு வான் பாதுகாப்பு சாதனமான S400 நிலை நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்கு பாரதப் பிரதமர் மோடி விஜயம் செய்தார். அங்கு உள்ள ராணுவத்தினரை உற்சாகப் படுத்த, ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமான நடத்திக் கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கச் சென்றதாக தகவல் வெளியிட்டிருக்கிறார்கள்.
ஆனால் மதியமே ரிபப்ளிக் ஆஃப் பலூசிஸ்தான் உதயமானதாக அங்கிருந்து அறிவித்திருக்கிறார்கள். கூடவே இந்தியா இதனை அங்கீகரிக்க வேண்டும் எனவும்… இப்படி அறிவிக்கும் முதல் நாடாக இந்தியா இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதனோடு சேர்த்து அமெரிக்காவுக்கும் தகவல் சொல்லி இருக்கிறார்கள். ஆக மொத்தம் ஐம்பது நாடுகளுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
இவற்றுக்கெல்லாம் இந்தியா தங்களுக்கு துணை நின்று ஒத்துழைப்பு தந்து அங்கீகரிக்க வேண்டும்; சர்வதேச சமூகத்திடமும் எடுத்துச் சொல்லி தங்களுக்கு தனி நாடு அந்தஸ்து பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
இவர்களால் அடையாளப்படுத்தப்படும் பலூசிஸ்தான் என்கிற நாட்டில் கிட்டத்தட்ட பத்து மாநிலங்கள் வருவதாகவும், அதற்கு தலைநகராக குவெட்டா இருக்கும் எனவும் அவர்களுடைய தேசிய மொழியாக பலூச் இருக்கும் எனவும் இதனோடு சேர்த்து ஆறு மொழிகளுக்கு தேசிய அங்கீகாரம் உள்ளதாக அறிவித்து அசரடித்திருக்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் இன்று பற்றி எரிவது இந்த விஷயம்தான். அமெரிக்கா ஆடும் ஆடு புலி ஆட்டத்தில் (பாகிஸ்தானிய தேசிய விலங்கு மலை ஆடு .நம் இந்திய தேசிய விலங்கு, புலி) இந்தக் காய் நகர்வை அவர்கள் எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது. இது பற்றின சர்வதேச ஊடகங்களின் கேள்விகளை நாசூக்காகத் தவிர்த்து விட்டு நகர்ந்திருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.
இது ஒரு புறம் இருக்க ஆப்ரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து ஆப்ரேஷன் கெல்லர் நம் இந்திய தரப்பில் முன்னெடுக்கப்பட்டு மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இது நம் இந்திய MI எனப்படும் மிலிட்டரி இன்டலிஜென்ஸ் நடத்திய அதிரடி தாக்குதல் என்கிறார்கள். பாகிஸ்தானில் வைத்தே அந்த தேடப்படும் குற்றவாளிகளை அடையாளப் படுத்தப்பட்ட பயங்கரவாதிகள் மூவரை மிகச் சரியாக வேட்டையாடி இருக்கிறார்கள். இந்தப் பெயர் வெளியான போது, கெல்லர் என்பதன் உருதுப் பொருள் என்ன என்பது குறித்து கூகுளில் அதிகம் தேடியதாகவும் சமூகத் தளங்களில் பேசப்பட்டது.
யார் அந்த மூவர் என்பதோ, என்று, எங்கு வைத்து இதனைச் செய்தார்கள் என்பதோ விவரமாக அறிவிக்கப்படவில்லை. ஆக அடுத்தடுத்து பரபரப்பான நகர்வுகளோடு நம் இந்திய அரசின் ஆட்டம் தொடர்கிறது. எதிரிகள் இந்தக் காய் நகர்த்தலைப் புரிந்து உள்வாங்கவே திணறுகிறார்கள் என்பதும் நன்றாகவே தெரிகிறது. இங்கே இதில் ஆடு மட்டும் பதறவில்லை அந்தக் காட்டு மாடும் தான்!
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததால் துருக்கியைப் புறக்கணிப்போம் என்று இந்தியர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். அதனால் துருக்கிக்கு செல்ல இருந்த சுற்றுலாவை ரத்து செய்து, ஆப்பிள்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய இந்தியர்கள் இப்போது மேலும் ஒரு முக்கியமான இறக்குமதியை நிறுத்தியுள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாதச் சம்பவத்துக்குப் பின்னர், பாகிஸ்தான் பயங்கரவாதிகளை மட்டும் குறிவைத்து, அவர்களைக் களையெடுக்கும் நோக்கில் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர்க்குப் பின், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் களம் இறங்கியது. அது, சீனா கொடுத்த ஏவுகணைகள், துருக்கி அளித்த ட்ரோன்களைக் கொண்டு, இந்தியாவின் மீது தாக்கியது.
இந்தத் தாக்குதலை இந்திய வான் பாதுகாப்பு சாதனம் மூலம் இந்தியா தடுத்து விட்டாலும், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்புற கிராமங்களில் ஓரிரண்டு விழுந்து அங்கே வசிக்கும் கிராம மக்களின் வீடுகளைப் பதம் பார்த்தது. சிலர் இதில் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் அப்பாவிப் பொதுமக்களை நோக்கி அதிகளவில் இருந்த போது, இந்திய ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டு, இந்தியப் பகுதிகளில் விழுந்த ட்ரோன்களின் பாகங்களை ஆய்வு செய்த போது, அவை துருக்கியில் தயாரானவை என்பது தெரியவந்தது.
அதே நேரம், துருக்கியில் இருந்து ஒரு விமானத்தில் மேலும் அதிக எண்ணிக்கையில் ட்ரோன்கள் பாகிஸ்தானுக்கு வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் துருக்கியோ, எரிபொருள் நிரப்ப அந்த விமானம் பாகிஸ்தானுக்குள் வந்ததாக ஒரு கதையைப் பரப்பியது. ஆனால், துருக்கியின் விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தளவாடங்கள் வந்ததாகவே அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.
முன்னதாக, அண்மையில் துருக்கியில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தை அடுத்து, அந்நாட்டுக்கு முதல் நாடாக மனிதாபிமானப் பொருள்கள் கொண்டு சென்று, உதவிக்கு ராணுவத்தினரையும் அனுப்பி வைத்த இந்திய நாட்டுக்கு, துருக்கி மிகச் சரியான நன்றிக்கடனை காட்டி விட்டது என்று, இந்தியாவில் பொதுமக்கள் பொருமித் தள்ளினர். இது போன்ற நாடுகளுக்கு இந்தியா கருணை அடிபடையில் உதவிகள் வழங்குதை நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் பலமாக எதிரொலித்தன.
இதனிடையே, பாகிஸ்ஹான் மீதான இந்தியாவின் தாக்குதலில் இரண்டு துருக்கி வீரர்களும் உயிரிழந்ததாக உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதனால் பெரிதும் உணர்ச்சி வசப்பட்ட பலர், துருக்கியைப் புறக்கணிப்போம் என்ற வாசகங்களுடன் தங்கள் கருத்தைப் பதிவு செய்து வருகின்றனர். அதில் முதலாவதாக, துருக்கி நாட்டுக்கு இந்தியாவின் பெரிய பங்களிப்பு சுற்றுலாதான். எனவே இந்தியர்கள் துருக்கி நாட்டுக்கு சுற்றூலா செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதை ஏற்று, இந்திய சுற்றுலா நிறுவனங்கள் துருக்கிக்கான சுற்றுலாவுக்கு இனி புக்கிங் செய்யப் போவதில்லை என அறிவித்தது. இதை அடுத்து, துருக்கி சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில், இந்தியர்கள் எப்போதும் போல் துருக்கிக்கு வரலாம், அவர்கள் பாதுகாப்பாக சுற்றுலாவை அனுபவிக்க துருக்கி துணை நிற்கும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், துருக்கிக்கு எதிராக நாடு முழுவதும் வேகமெடுத்துள்ளது #BoycottTurkey எனும் கோரிக்கை. அந்நாட்டில் இருந்து வந்த ஆப்பிளை திருப்பி அனுப்பி வருகிறார்கள், இந்திய வியாபாரிகள். துருக்கி ஆப்பிளுக்கு குட்பை சொன்னது மும்பை! துருக்கியின் துரோகச் செயலைக் கண்டித்து, மும்பை பழ வியாபாரிகள் துருக்கி ஆப்பிள்களை இறக்குமதி செய்வதில்லை என முடிவு செய்துள்ளனர். துருக்கி ஆப்பிள்களுக்கு பதில் இமாச்சல பிரதேசத்தில் இருந்தும், வேறு இடங்களில் இருந்தும் ஆப்பிள்களை வாங்குவோம். இதனால் 1,200 முதல் 1,500 கோடி ரூபாய் வரை துருக்கிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்படும் என மும்பை பழ வியாபாரிகள் கூறினர்.
இந்நிலையில், துருக்கிக்கு மேலும் ஒரு இடியாக, துருக்கியிலிருந்து இறக்குமதி செய்வதை ராஜஸ்தானின் மார்பிள் டிரேடர்ஸ் நிறுத்தி உள்ளனர். “நாங்கள் துருக்கிய மார்பிளின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்று. மேலும் துருக்கியுடனான வர்த்தகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளோம்” என்று ராஜஸ்தான் மார்பிள் டிரேடர்ஸ் கூறியுள்ளனர்.
இந்தியா சுமார் 14 முதல் 16 லட்சம் டன் மார்பிளை இறக்குமதி செய்கிறது, இதில் 70 சதவீதம் துருக்கியிலிருந்து வருகிறது. இதனால் துருக்கிக்கு பெரும் இழப்பைச் சந்திக்கும் என்று கூறுகின்றனர் ராஜஸ்தான் வர்த்தகர்கள்.
எதிரி நாடான பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகள் செய்து, ஆதரவு தெரிவித்த துருக்கிக்கு இதுவரை இந்திய அரசுத் தரப்பில் எந்தத் தகவலும் அல்லது புறக்கணிப்பு முடிவும் அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், இந்தியர்கள் தாமாக முன் வந்து துருக்கியைப் புறக்கணித்து வருகின்றனர்.
Nuclear bomb making has undergone many changes. US has declassified both the Gas diffusion and calutron technology . So technically you can enrich Uranium if you can lay hands on it using EMIS taking out 235 from U238 , like the Manhattan project. You may not need Oppenheimer, Lawrence, Fermi and Feynman. US declassification may even have a DIY kit Real clowns !
Pakistan certainly made N-bombs with the help of China and North Korea.
But I was wondering at the Kirana hills facility that almost resembles the Imaginary Iraqi n-bomb launch facility Forsyth described in his book, “Fist of God” .
Kirana hills facility is within a large military security zone of Sargoda military camp. Same as one described by FF.
It is surrounded by non-descript villages and hillocks to hide coolers, turrets , launch holes if any.
Further it is close to Kushhab nuclear facility for replenishment. Their easiest major target would have been Amritsar that is approx 200 kms as the crow flies from Kirana hills. A hit on Amritsar Golden temple opens up many possibilities to raise false-flag, instigate Hindu Sikh riot, Sikh- Muslim riot etc using global and Indian press.
But I really doubt they had a huge cache of nukes. Probably very minimal ……after the major ones taken by MBS/ KSA who has understood that regional safety can be preserved only by stopping the military monkeys of Pakistan from accessing nukes. India certainly must have learnt the Pak’s nuclear bluff from KSA.
So there is certainly an accident but it can’t be major as Pakistan does not have a huge stock of nuclear weapons.
உலகின் பெரியண்ணன் என்று இதுவரை சொல்லப்பட்டு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இப்போது கடந்த இரு நாட்களாக இந்திய சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்படும் நபராக மாறிவிட்டார். அவரது காமெடிக்கு அளவே இல்லையா என்ற கேள்விகள் அதிகம் முன்வைகப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்வது பொய் என்று இந்திய வெளியுறவு அமைச்சக செயலர் மறுப்பு தெரிவித்து, ட்ரம்ப் ஒரு பொய்யர் என்றும் பேர் வாங்கி விட்டார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்படும் முன் வரை, அதிபர் ட்ரம்ப் மரியாதை மிகுந்தவராகவே பார்க்கப்பட்டார். குறிப்பாக, பஹல்காம் தாக்குதல் நடந்த போதும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்ட போதும், டிரம்ப், ஜே டி வான்ஸ் ஆகியோர் இந்திய பாகிஸ்தான் இரு தரப்பு சசசரவுகளில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று ஒதுங்கிக் கொண்டிருந்தவரை.
ஆனால் திடீரெனறு, மே 10 அன்று காலையில் அவர் சமூகத் தளப் பதிவில், இந்திய பாகிஸ்ஹான் இரு நாடுகளுக்கு இடையே அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தி விட்டேன் என்றும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பதைத் தடுத்து விட்டேன் என்றும் குறிப்பிட்டு அதற்கு அவர் சொன்ன காரணம் தான் பேசுபொருளானது.
“இந்த வாரத்தில், இந்தியா பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுத மோதல் ஏற்பட இருந்ததை எனது நிர்வாகம் தடுத்து நிறுத்தியுள்ளது. அது மிகவும் மோசமான அணு ஆயுதப் போராக இருந்திருக்கும். பல லட்சம் பேர் கொல்லப்பட்டிருப்பார்கள். இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட துணை அதிபர் வேன்ஸ், வெளியுறவு அமைச்சர் ரூபியோ ஆகியோருக்கு நன்றி கூற விரும்புகிறேன்.நிலைமையின் தீவிரத்தை இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்கள் உணர்ந்து கொண்டனர்.
“அவர்களுக்கு நாங்களும் உதவி செய்தோம். நாங்கள் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்ய இருக்கிறோம், எனவே இந்த போரை நிறுத்திக்கொள்வோம் என்று கூறினேன். நீங்கள் போரை நிறுத்தாவிட்டால் நான் உங்களுடன் வர்த்தகம் செய்ய மாட்டேன் என்று கூறினேன். இந்த வகையில் வர்த்தகத்தை யாரும் பயன்படுத்த மாட்டார்கள். அப்படிக் கூறிய உடனே அவர்கள், போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டார்கள். அது நிரந்தரமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இதிலுள்ள கடைசி இரண்டு வாக்கியங்கள் தான் இந்தியர்களிடம் கேலிபேசும் பொருளாகிவிட்டது. குறிப்பாக, இந்தியா திடீரென தாக்குதலை நிறுத்திக் கொள்வதாகவும், இரு தரப்பு டிஜிஎம்ஓ.,க்கள் பேசிக் கொண்டதில், ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருப்பதாகவும் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே டிரம்ப் சமூகத் தளத்தில் பதிவு செய்த கருத்தையும் விதத்தையும் பார்த்து, பிரதமர் மோடி, தனது நண்பர் என்பதற்காக டிரம்ப்பிடம் அடிபணிந்து விட்டார். பாகிஸ்தானை பதம் பார்க்கும் வகையில் துடிப்புடன் ராணுவம் செயல்பட்டுக் கொண்டிருந்த போது மோடி இவ்வாறு செய்ததை ஏற்க முடியவில்லை என்று தங்கள் கருத்தைத் தெரிவித்த் வந்தனர்.
ஆனால் பின்னணியில் ஏதோ பெரிய அளவில் தாக்குதல் நடந்திருக்கிறது என்பதை மட்டும் அனுமானித்தார்கள். அது அணுக் கசிவு என்ற சந்தேகம் வரை இப்போது கொண்டு வந்திருக்கிறது.
எனினும் அமெரிக்க அதிபரின் முந்திரிக்கொட்டைத் தனத்தை இந்தியாவில் எவரும் ரசிக்க வில்லை. அவர் சொன்ன காரணத்தைக் கேட்டு சிரித்தார்கள். அதற்கு ஏற்ப,
அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது இந்தியா கூடுதல் வரி விதித்துள்ளதாக செய்தி வெளியானது.
மேலும், ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கை தொடங்கியது முதல் முடியும் வரை, பல முறை அமெரிக்க தலைவர்கள், நமது தலைவர்களுடன் பேசினர். இதில், வர்த்தகம் தொடர்பான எந்த விவாதமும் இடம் பெறவில்லை என்று உறுதிபடக் கூறினார், இந்திய வெளியுறவுச் செயலர் ரந்திர் ஜெய்ஸ்வால். ‘போர் நிறுத்தம் செய்யாவிடில், வர்த்தகத்தை நிறுத்தி விடுவேன் என்று, தான் கூறிய பிறகே போர் நிறுத்தம் ஏற்பட்டது’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு மாறாக, அவ்வாறு எந்நேரமும் இந்தப் பேச்சு அதுவரை எழவில்லை என்றும், ஏன் திடீரென்று இவ்வாறு டிரம்ப் கூறினார் என்பதிலும் பலருக்கு சந்தேகத்தைக் கிளப்பியது.
இந்தியா பாகிஸ்தான் பிரச்னையில் தேவையின்றி அமெரிக்கா வார்த்தையை விடுவதால், அந்த நாட்டிற்கு இந்தியா ஒரு கொட்டு வைத்துள்ளதாக தெரிகிறது என்று குறிப்பிட்டு, அதனால் தான் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீதான இறக்குமதிக்கு கூடுதல் வரி இந்தியா விதித்தது என்றும் கருத்துகள் பரவின.
முன்னதாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ஸ்வால் பல்வேறு ஐயங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தகவல்களைத் தெரிவித்தார்.
“காஷ்மீர் குறித்து எந்த பிரச்னையாக இருந்தாலும் இந்தியாவும், பாகிஸ்தான் மட்டுமே விவாதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை. பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதிகளை விடுவிப்பதுதான் நிலுவையில் உள்ள பிரச்னை.
“மே 10ம் தேதி காலை முக்கிய இடங்களில் வலிமையான தாக்குதலை நடத்தியிருந்தோம். 3:35க்கு டிஜிஎம்.,வை பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ தொலைபேசியில் தொடர்பு கொண்டு போர் நிறுத்தம் வேண்டி பேசினார். சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையில் நல்லெண்ணம் அடிப்படையில் அந்த ஒப்பந்தம் உருவானது. அது (அப்படி எந்த நல்லெண்ணமும்) இப்போது இல்லாத காரணத்தினால் நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துவதற்கு சரியான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருக்கும்.
“மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் துவங்கியது முதல் முதல் 10ம் தேதி போர் நிறுத்தம் ஏற்படும் வரை, இந்தியா அமெரிக்கா இடையே ராணுவ சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்த விவாதத்தில் வர்த்தகம் ஏதும் வரவில்லை.
“பயங்கரவாதிகளை தொழில்முறையில் வளர்த்த நாடு, அதன் விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியும் என நினைப்பது தன்னைத்தானே முட்டாள் ஆக்கிக் கொள்வதாகும். இந்தியா அழித்த பயங்கரவாதிகளின் உட்கட்டமைப்பு தளங்கள் இந்தியர்களின்மரணத்திற்கு மட்டும் அல்லாமல், உலகம் முழுதும் உள்ள பல அப்பாவிகளின் மரணத்திற்கும் காரணமாக இருந்தவை..
பஹல்காமில் தாக்குதலை நடத்தியது லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான டிஆர்எப் அமைப்பு. பலமுறை இதனை விளக்கி உள்ளோம். டிஆர்எப் அமைப்பு பற்றி ஐ.நா., அமைப்பிடமும் தெரிவித்துள்ளோம். அது எந்த மாதிரியான தகவல் என்பதை இப்போது கூற முடியாது. இந்தியா அளித்த தகவலின் பேரில் ஐ.நா., நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். எங்களின் நோக்கம் பயங்கரவாதிகளை அழிப்பது மட்டுமே! பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், பதிலுக்கு தாக்குதல் நடத்துவோம். இந்தியாவின் நிலைப்பாடு ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஆனால், பாகிஸ்தானின் நிலைப்பாடு 10ம் தேதி விமான தளங்களை தாக்கிய பிறகு மாறி இருக்கிறது.
இந்தியாவின் தாக்குதலினால் சேதமடைந்த இடங்களைக் குறித்த புகைப்படங்கள் செயற்கைக்கோள் மூலம் கிடைக்கிறது. இதன்மூலம் பாதிப்புகளைத் தெரிந்து கொள்ளலாம். நாம் அழித்த இடங்களின் படங்களை வைத்தே, பாகிஸ்தான் வெற்றி அடைந்தது என்று அந்நாட்டு அமைச்சர் கோஷமிட்டார். கார்கில் போரின் போதும் இப்படித்தான் வெற்றி பெற்றதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் நடந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆபரேஷன் சிந்தூர் காரணமாக, பஹவல்பூர், முரிட்கே, முசாபராபாத் மற்றும் சில இடங்களில் இருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. தொடர்ந்து ராணுவ கட்டமைப்புகள் தாக்கப்பட்டன. முக்கிய விமான தளங்கள் செயலிழந்தன. இதனை சாதனை என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நினைத்தால், அதனைக் கொண்டாடலாம்.
பாகிஸ்தான் ராணுவம் அமைதியாக இருந்தால் பிரச்னை இருக்காது. அவர்கள் தாக்குதல் நடத்தினால் நாமும் கடினமான தாக்குதலை நடத்துவோம். 9ம் தேதி இரவு வரை இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் தாக்கியது. அவர்களின் முயற்சி தோல்வி அடைந்த உடன் 10ம் தேதி அவர்களின் குரல் மாறியது. பாகிஸ்தான் ராணுவ டிஜிஎம்ஓ நம்மை தொடர்பு கொண்டார். அதன்பிறகே தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக நாமும் தெரிவித்தோம்… – என்று ரன்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர் சந்திப்பில் தெளிவாக விளக்கினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் மூலம், அமெரிக்க அதிபருக்கு ஒரு பதில், பாகிஸ்தானுக்கு பல பதில்கள் அளித்து, உலகத்துக்கு உண்மை என்ன என்பதை புரியவைத்தார் ஜெய்ஸ்வால். என்றாலும், காலையில் ஒன்று பேசி, மாலையில் வேறு பேசப்பட்டு, அமெரிக்க அதிபருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று அவரை கிண்டல் செய்த வண்ணம் இருந்தனர் சமூகத் தளங்களில்!
பஹல்காம் பயங்கரவாதச் சம்பவத்துக்குப் பின்னர், பாகிஸ்தான் பயங்கரவாதிகளை மட்டும் குறிவைத்து, அவர்களைக் களையெடுக்கும் நோக்கில் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர்க்குப் பின், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் களம் இறங்கியது. அது, சீனா கொடுத்த ஏவுகணைகள், துருக்கி அளித்த ட்ரோன்களைக் கொண்டு, இந்தியாவின் மீது தாக்கியது.
இந்தத் தாக்குதலை இந்திய வான் பாதுகாப்பு சாதனம் மூலம் இந்தியா தடுத்து விட்டாலும், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப் புற கிராமங்களில் ஓரிரண்டு விழுந்து அங்கே வசிக்கும் கிராம மக்களின் வீடுகளைப் பதம் பார்த்தது. சிலர் இதில் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் அப்பாவிப் பொதுமக்களை நோக்கி அதிகளவில் இருந்த போது, இந்திய ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டு, இந்தியப் பகுதிகளில் விழுந்த ட்ரோன்களின் பாகங்களை ஆய்வு செய்த போது, அவை துருக்கியில் தயாரானவை என்பது தெரியவந்தது.
அதே நேரம், துருக்கியில் இருந்து ஒரு விமானத்தில் மேலும் அதிக எண்ணிக்கையில் ட்ரோன்கள் பாகிஸ்தானுக்கு வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் துருக்கியோ, எரிபொருள் நிரப்ப அந்த விமானம் பாகிஸ்தானுக்குள் வந்ததாக ஒரு கதையைப் பரப்பியது. ஆனால், துருக்கியின் விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தளவாடங்கள் வந்ததாகவே அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.
முன்னதாக, அண்மையில் துருக்கியில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தை அடுத்து, அந்நாட்டுக்கு முதல் நாடாக மனிதாபிமானப் பொருள்கள் கொண்டு சென்று, உதவிக்கு ராணுவத்தினரையும் அனுப்பி வைத்த இந்திய நாட்டுக்கு, துருக்கி மிகச் சரியான நன்றிக்கடனை காட்டி விட்டது என்று, இந்தியாவில் பொதுமக்கள் பொருமித் தள்ளினர். இது போன்ற நாடுகளுக்கு இந்தியா கருணை அடிபடையில் உதவிகள் வழங்குதை நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் பலமாக எதிரொலித்தன.
இதனிடையே, பாகிஸ்ஹான் மீதான இந்தியாவின் தாக்குதலில் இரண்டு துருக்கி வீரர்களும் உயிரிழந்ததாக உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதனால் பெரிதும் உணர்ச்சி வசப்பட்ட பலர், துருக்கியைப் புறக்கணிப்போம் என்ற வாசகங்களுடன் தங்கள் கருத்தைப் பதிவு செய்து வருகின்றனர். அதில் முதலாவதாக, துருக்கி நாட்டுக்கு இந்தியாவின் பெரிய பங்களிப்பு சுற்றுலாதான். எனவே இந்தியர்கள் துருக்கி நாட்டுக்கு சுற்றூலா செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதற்கு ஏற்றார்ப் போல், துருக்கிக்கான சுற்றுலா சேவையை நிறுத்திக் கொள்வதாக இந்தியாவின் சுற்றுலா நிறுவனம் ஒன்று அறிவிப்பு வெளியிட விஷயம் சூடு பிடித்தது. இது எங்கே ஒரு மாலத்தீவு பிரச்னையைப் போல் சென்று விடுமோ என்று நினைத்த துருக்கிய அரசின் சுற்றுலாத் துறை அவசர அவசமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதில், துருக்கிக்கு இந்தியர்கள் சுற்றுலா வர, இத்தகைய சூழலைக் கருதி தயங்க வேண்டாம். இந்தியர்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்போம். இந்தியர்களுக்கு வழக்கமான மரியாதையும் பாதுகாப்பும் வழங்கப்படும். எனவே துருக்கிக்கு சுற்றுலா வாருங்கள் என்று அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் முன்னமேயே 25 ஆயிரத்துகுக்ம் மேற்பட்டோர் துருக்கிக்கான தங்களது சுற்றுலாவை கேன்சல் செய்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், துருக்கிக்கு எதிராக நாடு முழுவதும் வேகமெடுத்துள்ளது #BoycottTurkey எனும் கோரிக்கை. அந்நாட்டில் இருந்து வந்த ஆப்பிளை திருப்பி அனுப்பி வருகிறார்கள், இந்திய வியாபாரிகள். துருக்கி ஆப்பிளுக்கு குட்பை சொன்னது மும்பை!
துருக்கியின் துரோகச் செயலைக் கண்டித்து, மும்பை பழ வியாபாரிகள் துருக்கி ஆப்பிள்களை இறக்குமதி செய்வதில்லை என முடிவு செய்துள்ளனர். துருக்கி ஆப்பிள்களுக்கு பதில் இமாச்சல பிரதேசத்தில் இருந்தும், வேறு இடங்களில் இருந்தும் ஆப்பிள்களை வாங்குவோம். இதனால் 1,200 முதல் 1,500 கோடி ரூபாய் வரை துருக்கிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்படும் என மும்பை பழ வியாபாரிகள் கூறினர்.
ஒரு புறம் சுற்றுலா, இன்னொரு புறம் பொருள்கள் புறக்கணிப்பு என இப்போது துருக்கிக்கு எதிராக இந்தியர்களின் மனநிளை மாறியுள்ளது.
இந்திய விஞ்ஞானிகள் ஹோமி ஜே பாபா மற்றும் விக்ரம் சாராபாய் ஆகியோர் இந்தியாவில் அணுசக்தி சோதனைக்கு அடித்தளம் அமைத்த ஜாம்பவான்கள் ஆவார்கள்.
பிரதமர் இந்திரா காந்தி அணு ஆயுதச் சோதனைகளில் எதிர்மறையான பார்வையைக்கொண்டிருக்வில்லை! எனவே அவரது ஆட்சி காலத்தில் முதன்முறையாக அணு சோதனை நடத்தப்பட்டது! P-5 நடைமுறையில் இருந்த ஒப்பந்தங்களைக் கருத்தில் கொண்டு, இந்தியா தனது சோதனைகளை எந்த முன் தகவலும் உலகிற்கு வெளியிடாமல் நடத்த முடிவு செய்தது!இந்த முயற்சியின் மூளையாகச் செயல்பட்டவர் ராஜா ராமண்ணா.
மே 18, 1974 இல், 12 கிலோ டன் அணுசக்தி சாதனம் வெடிக்கப்பட்டது. இதற்காக ராஜஸ்தானின் பாலைவனத்தில் அமைந்துள்ள இராணுவ சோதனைத் தளமான பொக்ரான் தேர்ந்தெடுக்கப்பட்டது. வெற்றிகரமாக அணுசோதனை நடந்தது உலகம் வியந்தது!!
இந்தச் சோதனையில் 75 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஈடுபட்டது. கௌதம புத்தரின் பிறந்த தேதியான புத்த ஜெயந்தி நாளில் சோதனை தேதி இருந்ததால் தான் “புத்தர் சிரித்தார்” எனப் பெயரிடப்பட்டது.
இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் நடைபெற்ற அணுகுண்டு சோதனைக்குப் பிறகு 1998-ல் மீண்டும் ஒரு அணுகுண்டு சோதனையை நடத்த வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அணுகுண்டு சோதனைக்கு நரசிம்மராவ் தலைமையிலான அரசு தயாரானது. ஆனால், பொக்ரானில் அணுகுண்டு சோதனைக்கானத் தயாரிப்புகள் நடந்துகொண்டிருந்த பொழுது அமெரிக்க செயற்கைக் கோள்கள் துல்லியமாக இனம் கண்டு கொண்டதால் இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது!
எனவே அமெரிக்க செயற்கைக் கோள்களின் பார்வையில் படாத வகையில் ஏற்பாடுகளை இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) வாஜ்பாயின் ஆட்சி காலத்தில் மேற்கொண்டது.
சுழன்றுகொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் பூமியில் பொக்ரான் பகுதியிலிருந்து வேறு திசைக்குத் திரும்பியிருந்த கால இடைவெளியில் அணுகுண்டு சோதனையைச் சத்தமின்றி முடித்துவிட்டது இந்தியா.
மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் டைரக்டர்-ஜெனரலாக அப்துல் கலாம் இருந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. சோதனைக்கான தேதியையும் நேரத்தையும் குறித்தது அவர் தான்! யாருக்கும் தெரியாமல் இருக்க பல உபாயங்களைக் கையாண்டார்கள்.
அமெரிக்க உளவாளிகளிடமிருந்து தப்பிக்க, இந்திய விஞ்ஞானிகள் தங்கள் தொலைபேசி உரையாடலில் கூட பல்வேறு code வேர்ட்டுகளைப் பயன்படுத்தினார்கள். ‘தாஜ்மஹால்’, ‘கும்பகர்ணன்’ ‘சியரா’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி கருத்துக்களைப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.
அமெரிக்க செயற்கைகோள் கண்காணிப்பில் இருந்து தப்புவதற்காக, அப்துல் கலாம் உள்ளிட்ட விஞ்ஞானிகள்கூட ராணுவத்தினர் அணியும் சீருடை அணிந்துதான் போக்ரான் பகுதிக்குச் சென்று வந்தனர். பெரும்பாலான பணிகள் இரவில்தான் மேற்கொள்ளப்பட்டன.
ஏற்கனவே செயற்கைகோள்கள் இயங்கும் விதம் குறித்த ஆராய்ச்சிகளில் கலாம் ஈடுபட்டு இருந்ததால் , செயற்கைகோள் பொக்ரான் பகுதிக்கு மேலே பறக்காத கால நேரத்தைக் கணக்கிட்டு கூறினார் .
இரவு நேரங்களில் கடுமையாக உழைத்து அணுகுண்டு சோதனைக்குத் தேவையான வேலைகளைச் செய்தனர் நம் விஞ்ஞானிகள்.மீண்டும் செயற்கைகோள் பொக்ரான் பகுதிக்கு வரும் நேரத்திற்கு முன்பாக வேலைகளை முடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வெற்றிகரமாக அதைக்ண கடைப்பிடித்தனர்.
உளவு பார்க்கும் அமைப்புகளிடம் இருந்தும் தப்பிக்க கலாம் உள்ளிட்ட அவரது குழுவில் இடம்பெற்ற விஞ்ஞானிகள் அனைவரது பெயர்களும் மாற்றப்பட்டன . ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளும்போது கூட புனைப் பெயர்களைக் கொண்டே அழைத்துக்கொண்டனர் . ” கலோனல் பிருதிவிராஜ் ” என்ற புனைப்பெயரை வைத்துக் கொண்டார் அப்துல் கலாம்.
அணு வெடிப்பு சோதனை(மே 11-1998) வெற்றிகரமாக முடிந்ததும், அணுசக்தி ஆணையர் சிதம்பரம்(இவரை நான் மும்பையில் சந்தித்து கலைமகளுக்காக ஒரு பேட்டியும் எடுத்து இருக்கிறேன்) கலாமுடன் கைகுலுக்கி, “24 ஆண்டுகளுக்குப் பிறகும் இதை மீண்டும் நம்மால் செய்யமுடியும் என்று நான் உங்களிடம் சொன்னேன். செய்து காட்டி விட்டோம்! வெற்றி பெற்று விட்டோம்!!”என்றார்.
“உலகின் அணுசக்தி வல்லரசுகளின் மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம். நூறு கோடி மக்கள் வாழும் நமது நாட்டிடம் என்ன செய்யவேண்டும் என்று வெளிநாட்டினர் சொல்ல முடியாது. என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது நாம் முடிவு செய்து வெற்றி கண்டுள்ளோம்” என்றார் கலாம். சரி பிரதமருக்கு சொல்வோம் என்றபடி தொலைபேசியை எடுத்தார் அப்துல் கலாம்.
பிரதமர் இல்லத்தில் தொலைபேசியின் அருகில் அடல் பிஹாரி வாஜ்பாயின் முதன்மைச் செயலாளராகவும் பாதுகாப்புத்துறை ஆலோசகராகவும் செயல்பட்டுக் கொண்டிருந்த பிரஜேஷ் மிஸ்ரா, முதல் ரிங்கிலே போனை எடுத்தார். ஆனந்தத்தில் சரியாகப் பேச முடியாமல் நடுங்கும் குரலில், “சர், வி ஹேவ் டன் இட்,” என்றார் கலாம்.
‘கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்’ என்று மிஷ்ரா போனில் கத்தினார். உலகமே வியந்து பார்த்தது இந்தியாவை !!
பத்திரிகையாளர்களிடம் வெற்றியை பகிர்ந்து கொண்ட பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ” இந்திய அணு உலைகள் பத்திரமாக இருக்கின்றன. ஆக்கபூர்வமான வேலைகளுக்கு மட்டும் தான் அணுவை இந்தியா பயன்படுத்தும்! எந்த ஒரு சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல் செயல்படும் இந்திய ராணுவம் மற்றும் இந்திய அரசாங்கம் உலகின் நல்லெண்ணத்தோடு அவ்வப்பொழுது வெற்றி கொடி நாட்டும்” என்றார் !!
( அந்தக் காலகட்டத்தில் வெளியான பத்திரிகைகளில் இருந்து நான் திரட்டிய தகவல்கள். பழைய டைரியில் நான் எழுதியவை. இப்போது கிடைத்தது! பகிர்ந்திருக்கிறேன். வேறொன்றும் அறியேன் பராபரமே!!)
இந்தியாவில் உள்ள ஆதம்பூர் விமானத் தளத்தை பாகிஸ்தான் படைகள் தகர்த்ததாக பாகிஸ்தான் தனது நாட்டின் டிவி.,க்களில் கதை விட்டது. அதை ஃபேக்ட் செக் செய்யும் வகையில், இன்று காலையே அதே தளத்துக்குச் சென்று வீரர்களுடன் செல்ஃபி எடுத்து, அதை சமூகத் தளத்திலும் வெளியிட்டு, பாகிஸ்தானின் பொய்களை அம்பலப் படுத்தினார் பிரதமர் மோடி!
எல்லையோர மாநிலமான பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படைத் தளத்துக்கு இன்று காலை சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்த வீரர்களுடன் உற்சாகமாகக் கலந்துரையாடினார். பின்னர், வீடியோக்கள் மற்றூம் படங்களை வெளியிட்டு, இன்று ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு சென்று நமது துணிச்சலான வீரர்களைச் சந்தித்தேன் என சமூக வலைதளத்தில் மோடி பதிவிட்டார்.
குறிப்பாக, இந்தத் தளத்தையும், இதில் இருந்த எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனத்தையும் பாகிஸ்தான் விமானப் படை தகர்த்ததாக அந்நாடு ஊடகங்களில் கதை அளந்தது. அதை நம்பி இந்தியாவிலும் சிலர் அது குறித்த கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார். இதற்கு பதிலடியாக இந்திய அரசின் பத்திரிகை தகவல் அமைப்பு பிஐபி ஃபேக்ட் செக் செய்து உண்மைச் செய்தியை வெளியிட்டு வந்தது. ஆனால் அது போதாது என்று எண்ணிய பிரதமர் மோடி, நேற்று இரவு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சிகளில் உரையாற்றிய கையோடு இன்று காலை, தொடர்புடைய ஆதம்பூர் விமானப் படைத் தளத்துக்கு நேரில் சென்று, அங்கிருந்த வீரர்களுடன் சிரித்துப் பேசியபடி, அவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டு, அவர்களுடனான படங்களையும் எடுத்து உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
Interacted with the air warriors and soldiers at AFS Adampur. Their courage and professionalism in protecting our nation are commendable. https://t.co/hFjkVIUl8o
தற்போது இந்த படங்களும் வீடியோவும் சமூகத் தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து அவர் சமூகத் தளத்தில் குறிப்பிட்டிருப்பது…
இன்று ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு சென்று நமது துணிச்சலான வீரர்களைச் சந்தித்தேன். துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றின் உருவகமாக இருப்பவர்களுடன் இருப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. நமது நாட்டிற்காக நமது ஆயுதப் படைகள் செய்யும் அனைத்திற்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் இருக்கும்.
தலைவன் எவ்வழியோ தொண்டரும் அவ்வழி! என்பார்கள். ஒரு ராணுவத் தளபதி, இப்படி காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நம் ராமாயண மகாபாரத இதிகாசங்களை மேற்கோளிட்டுப் பேச முடிந்திருக்கிறதா என்ற ஆச்சரியக் கேள்விகள் இப்போது எழுந்திருக்கிறது. இப்போதுதான் அவர்களின் உள்ளுணர்வு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உந்துதலாக இருந்திருக்கிறது என்ற கருத்தும் வெளிப்படையாக முவைக்கப்படுகிறது.
சொல்லப்போனால், ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சிகளின் போது, இவ்வாறு நம் இதிகாச புராணங்களில் இருந்து நன்னெறிக் கதைகள், சம்பவங்கள், உத்திகள், சிக்கலான தருணங்களில் எப்படி மீண்டார்கள் என்பது குறித்த பாடங்களை சொல்லிக் கொடுப்பது வழக்கம்தான்! இது மேலாண்மை உத்திகளைக் கையாண்டு வெற்றிகளைப் பெற்ற பஞ்சதந்திரக் கதைகளைப் போன்றதுதான்!
பஞ்ச தந்திரக் கதைகள் வெறும் கதைகளாயினும் இக்கட்டான தருணங்களில் அறிவுபூர்வமாக யோசித்து முடிவு எடுக்கக் கூடிய சமயோஜித புத்தியை நெருக்கடியான நேரங்களில் நமக்குத் தரும். இதிகாசங்கள் நடந்த வரலாறுகள் என்பதால் அவற்றில் இருந்து பெறப்படும் உத்திகள் முன்னோர்களின் மேலாண்மை உத்திகள். ஆனால் ஊடகவியலாளர்கள் நிறைந்த ஒரு பிரஸ்மீட்டில் ஒரு தளபதி வெளிப்படையாகச் சொல்வது புதிது. அது ஆட்சியாளர்கள் கொடுத்த சுதந்திரம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்!
இதயங்களை வென்ற ஏர் மார்ஷல் பாரதி – என்றுதான் ஒவ்வொருவரும் அவரைப் பாராட்டி வருகிறார்கள். துப்பாக்கியும் தோட்டாவும் கைகளில் இருந்தாலும், வீரம் இருக்கும் இடத்தில் ஈரமும் இருக்கும் போல் தன் கவிதை உள்ளத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஏர் மார்ஷல் பாரதி.
நேற்று நண்பகல் 2.30க்கு, இந்திய ஆயுதப் படைகளின் மூன்று பிரிவுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். நிகழ்வின் முதல் பகுதில், முப்படைகளின் மூன்று பிரதிநிதிகளும் அந்தந்த கிளைகள் பற்றிய விளக்கங்களை வழங்கினர், பின்னர் முதல் செய்தியாளர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் விளக்கங்களை அளித்தனர்.
நியூஸ் நேஷனின் பத்திரிகையாளர் மதுரேந்திரா கேட்டார்: “பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடங்குவதற்கு முன், ராஷ்டிரகவி ராம்தாரி சிங் தின்கரின் வரிகளைப் பின்னணியில் பயன்படுத்திய ஒரு வீடியோவை இராணுவம் இயக்கியது. நேற்றைய வீடியோவில் சிவ தாண்டவ ஸ்தோத்திரம் இருந்தது. இதன் மூலம், எதிரிக்கு நீங்கள் என்ன செய்தியைச் சொல்ல முயற்சித்தீர்கள்?” – என்பது அந்தக் கேள்வி.
சொல்லப் போனால், நேற்று முன் தினம் முதல் செய்தியாளர் சந்திப்பு நடந்த போது, ராணுவத்தின் தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விளக்கப் படத்தில் தொடக்கத்தில் பின்னணி இசையாக வந்தது சிவ தாண்டவ தோத்திரத்தின் இசைதான்! ஏற்கெனவே சிந்தூர் என்பதில் குங்குமம் சிதறியிருக்கும் காட்சியைப் புலப்படுத்தியதற்கு இந்திய நாட்டின் எதிர்க்கட்சிகள் சில இது மதத்தை பின்புலப் படுத்துவதாகக் குரல் கொடுத்திருந்தன. இந்நிலையில் ராணுவத்தின் விளக்கப் பட வீடியோவில் சிவதாண்டவ ஸ்தோத்திர இசை இருந்தால், இவர்கள் இம்சிக்க மாட்டார்களா என்ன?!
எனினும் அந்தப் பத்திரிகையாளரின் இந்தக் கேள்வியால் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி வெளிப்படையாக மகிழ்ச்சியடைந்தார். பத்திரிகையாளரின் பெயர் மற்றும் நிறுவனம் அதைக் குறித்துக் கொள்ளுமாறு அவர் மீண்டும் கேட்டார்.
பத்திரிகையாளர் குறிப்பிட்ட வரிகள் ராஷ்டிரகவி (தேசியக் கவி) ராம்தாரி சிங் தின்கரின் பிரபலமான காவியமான “ராஷ்மிரதி”யிலிருந்து வந்தவை, குறிப்பாக ‘கிருஷ்ணா கி சேதவானி’ (கிருஷ்ணாவின் எச்சரிக்கை) பகுதியிலிருந்து.
வரிகள் பின்வருமாறு:
துர்யோதன வஹ பீ தே நா சகா, ஆஷிஷ் சமாஜ் கி லே ந சகா, உலடே, ஹரி கோ பாந்தனே சலா, ஜோ தா அசாத்ய, சாதனே சலா.
(துரியோதனனால் அதைக் கூட கொடுக்க முடியவில்லை. சமுதாயத்தின் ஆசீர்வாதங்களை அவரால் பெற முடியவில்லை. மாறாக, அவர் ஹரியை (கிருஷ்ணனை) பிணைக்க முயன்றார். சாத்தியமற்ற முயற்சி.)
(ஒரு மனிதனை அழிவு சூழ்ந்தால், முதலில் இறப்பது ஞானம். ஹரி கடுமையாக கர்ஜித்து தனது தெய்வீக வடிவத்தை விரிவுபடுத்தினார். பெரிய வீரர்கள் நடுங்கி தடுமாறினர். பகவான், கோபமடைந்து, கூறினார்: உன் சங்கிலியை இப்போது நீட்டு, அதால் என்னைக் கட்டு! ஆம், துரியோதனா! என்னைக் கட்ட முயற்சி செய்!)
இந்தக் காட்சி, துரியோதனன் அவையில் சமாதானம் பேசச் சென்ற, அதாவது பாண்டவர்களின் சார்பில் தூது சென்ற ஸ்ரீ கிருஷ்ணனை துரியோதனன் அவமரியாதை செய்தபோது எழுந்த கவிதை வரிகள். அவன் ஸ்ரீ கிருஷ்ணனின் நல்ல நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல், அதற்கு மரியாதை கொடுத்து செவிகொடுத்துக் கேளாமல், தன் துர்புத்தியால் அவரைப் பிணைத்துக் கட்டிவைக்க முயன்றான். அதன் பின் துரியோதனன் அழிந்தது வரலாறு. இதே போன்ற சூழல் தான் இப்போது ஆபரேஷன் சிந்தூர் விஷயத்திலும் ஒப்புமையாகப் போனது.
ஆனால், செய்தியாளரின் இந்தக் கேள்விக்கு, சூழலைப் புரிந்து கொண்டு பதிலளித்த ஏ.கே. பாரதி ராமசரித மானஸ் வசனங்கள் மூலம் பதிலளித்தார். எதையும் நோக்காமல், சுற்றுமுற்றும் பார்க்காமல், தன் மனத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த தன் கருத்தை அவர் சரளமாகத் தெரிவித்தார்.
(தாழ்மையான வேண்டுகோள்களுக்கு கடல் அசையாமல் இருந்தது; மூன்று நாட்கள் கடந்துவிட்டன. பின்னர், கோபம் பொங்கி எழுந்த ராமர், “பயம் இல்லாமல், அன்பு இருக்க முடியாது” என்று அறிவித்தார்.)
கடலரசனான வருண தேவன் இலங்கைக்குச் செல்ல வழி கொடுக்கும் வரை காத்திருந்த ராமர், மூன்று நாட்களுக்குப் பிறகு பொறுமை இழந்து கோபமடைந்தார். பயம் இல்லாமல் அன்பு இல்லை என்று அவர் அறிவித்தார், மேலும் தனது வில்லை உயர்த்தினார். அப்போதுதான் கடற்கடவுள் அவர் முன் தோன்றி உதவிக்கரம் நீட்டினார்.
பொதுவாக, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், பத்திரிகையாளர்கள் விருந்தினர்கள் வரும்போது ஆரவாரம் செய்யவோ, கைத்தட்டவோ, எழுந்து நிற்கவோ மாட்டார்கள் – தேசிய கீதம் அல்லது மாநிலத்தின் பண் பாடப்படும் போது தவிர மற்ற நேரங்களில் அமர்ந்தே இருப்பார்கள். குறிப்பாக ஒரு தீவிரமான ராணுவ பத்திரிகையாளர் சந்திப்பில், இதுபோன்ற பதில்கள் அரிதானவை.
ஆனால் ஏ.கே. பாரதியின் தன்னிச்சையான மற்றும் உணர்ச்சிவசப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட பிறகு, பத்திரிகையாளர்கள் கை தட்டாமல் இருக்க முடியவில்லை. கரகோஷம் முழங்க, ஏ.கே. பாரதியின் கவிதை வரிகளுடனான பதிலுக்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். ஏர் மார்ஷல் பாரதியின் அருகில் அமர்ந்திருந்த கடற்படையின் வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் கூட மென்மையான புன்னகையை வெளிப்படுத்தினார்.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பை முடிப்பதற்கு முன், பிரமோத் குறிப்பிட்டார்: “ஷாம் நோ வருணா” – “வருணா (கடல்களின் கடவுள்) நமக்கு மங்களகரமானவராக இருக்கட்டும்” என்று பொருள்படும் வேதப் பிரார்த்தனையை முன்மொழிந்தார்.
இது ஒரு புறம் இருக்க, இன்னொன்றையும் நாம் இந்தப் பத்த்ரிகையாளர் சந்திப்பின் போது தவறவிடாமல் கவனித்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
இந்திய பாகிஸ்தான் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே ஆயுதங்களால் பேசிக் கொண்டிருந்த இக்கட்டான நேரத்தில், அது பற்றி டிவி.க்களில் தோன்றி பேசி வந்த பாகிஸ்தான் நாட்டு ராணுவ அதிகாரிகள் நெருக்கடி நிலைக்கு ஆட்பட்டதைப் போன்ற பரபரப்புடன் தாங்கள் வெற்றி அடைந்ததாகவும், எதிரிகளை வீழ்த்தி விட்டதாகவும் ஜம்பம் அடித்துக் கொண்டிருக்க, நம் பாரத ராணுவ தளபதிகளோ, எந்த வித நெருக்கடியும், பரபரப்பும் இன்றி, வெகு இயல்பாக, அமைதியாக, சிரித்துப் பேசியபடி, முகத்தில் புன்னகை தவழ, செய்தியாளர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
நேற்று காலை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது டெஸ்ட் போட்டிகளுக்கான ஓய்வு முடிவுகளை அறிவித்த நேரத்தில், அது பற்றிக் குறிப்பிட்ட டிஜிஎம்ஓ., இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் பற்றியும் குறிப்பிட்டு, அதனுடன் ஒப்புமைப் படுத்தியிருந்தார்.
ஆக, இது புதிய இந்தியா! எழுச்சியுற்ற பாரதத்தின் அடையாளங்கள்! அது ஒரு தலைவனால் சாத்தியமாகியிருக்கிறது. தலைவன் சரியாக இருந்தால், தளபதிகளும் தொண்டர்களும் மிகச் சரியானவர்களாகவே இருப்பார்கள்!
மே மாதம் 98ல்…. – பொக்கைவாய் கிழவரும் அகம் மகிழ்ந்த சமாச்சாரத்திற்கு இன்று வயது 27. அது அந்த பாடல் வரிகளுக்கு அல்ல…. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் எனும் சிற்றூரில் வைத்து நம்மவர்கள் நடத்திய அணு வெடிப்பு சோதனைகளுக்கு கிடைத்திட்ட வெற்றிக்கு….
பாரதப் பிரதமராக வாஜ்பாய் இருந்த காலத்தில் 1998 ஆம் ஆண்டு மே மாதத்தில் 11 மற்றும் 13 ஆம் தேதிகளில் மூன்று நிலைகளில் ஐந்து விதங்களில் இந்த சோதனை செய்து பார்க்கப்பட்டது. இதற்கான சங்கேத பெயர் #ஆஃப்ரேஷன்_ஷக்தி.
ஆனால் இதற்கு முன்னதாக 1974 ஆம் ஆண்டு இந்திய பிரதமராக இந்திரா காந்தி இருந்த சமயத்தில் இந்திய வரலாற்றில் முதன் முறையாக அணு வெடிப்பு சோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது அதற்கு கொடுக்கப்பட்டிருந்த சங்கேத பெயர் #சிரிக்கும்_புத்தா.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் அது ஒரு மிக முக்கியமானதொரு நாள். இதேபோன்றதொரு மே மாதத்தில் 18 ஆம் தேதி 1974 ஆண்டு காலை 8:45 மணிக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மார் மாவட்டத்தில் உள்ள #பொக்ரானில் அணு குண்டு சோதனை நடத்தி சாதித்தது இந்தியா.
உலக வல்லரசு நாடுகள் ஆடிப் போனது. அமெரிக்கா இதில் கோபம் கொண்டு கொந்தளித்தது. சீனா விக்கித்து நின்றது. இவை எல்லாம் அந்த அணுகுண்டு சோதனை ஏற்படுத்தின விளைவுகள்.
அசர வில்லை #இந்திரா. இது தான் பின்னாளில் இந்திரா என்றால் இந்தியா, இந்தியா என்றால் இந்திரா என பேச வைத்தது. ஆனால் இதற்கான பயணம் அவ்வளவு சுலபமானதாக இல்லை. பாதைகளற்ற வழியில் சுவடு இல்லாத பயணம் என்றனர் அந்நாளில். காரணம் உலகின் அத்தனை உளவு நிறுவனங்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு இதனை நுட்பமாக சாதித்திருந்தது இந்தியா.
அவ்வளவு வெறியுடன் இந்த திட்டத்தினை முன்னெடுத்திருந்தார் இந்திராகாந்தி. ஆனால் இந்த திட்டம் அவர் காலத்தில் தொடங்கியது இல்லை.
1962-63 சீன போரின் தோல்விகளில் இருந்து பாடம் படித்தார் நேரு. அடுத்தடுத்த வருடங்களில் சீனா அணு ஆயுத சோதனையை மேற்கொண்டு வெற்றி கண்டது.
இந்திய நாடாளுமன்றத்தில் அணு குண்டு சோதனையை அணு குண்டு சோதனை மூலமாகவே பதில் சொல்ல வேண்டும் முதன் முதலில் முழங்கியதே நேரு தான். கண் கெட்டப் பின் சூரிய நமஸ்காரம்.
பதிலுக்கு தன் பலத்தை காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவிற்கு வந்தது. ஏனெனில் நேருவின் செக்யூலரிஸ… சோஷியலிச… கொள்கைகளால் வாங்கி இருந்த அடி அப்படி.அதனால் அவற்றை கைவிட்டுவிட்டு இத்திட்டத்தினை முன்னெடுத்தார். ஆற்றாமையோடு மறைந்தும் போனார். 1966 களில் இதற்கான விதை ஊன்றப்பட்டது.
அப்போதெல்லாம் ஹோமி பாபா உறுதுணையாக நின்று ஊக்கப்படுத்தி வந்தார் தனது குழுவினரை. இந்த காலகட்டத்தில் அதன் உதிரி பாகங்களில் கவனம் செலுத்த செய்தார். வெவ்வாறான உபகரணங்கள் வடிவமைப்பு கண்டது இந்நாட்களில் தான்.
சும்மா இல்லாத பாகிஸ்தான் மீண்டும் இந்தியா மீது 1972 ஆண்டு போர் தொடுத்து மூக்குடைத்துக்கொண்டது. இம்முறை இந்திரா விடவில்லை. கட்டம் கட்டி குதறி தள்ளினார் பாகிஸ்தானை… அப்போது பிறந்தது தான் #பங்களாதேஷ் எனும் நாடு. இப்போது அதும் ஆட்டம் ஆடிக் கொண்டு இருக்கிறது வேறு கதை.
அத்தனை தூரம் சாகஸம் காட்டினார்கள் அந்த சமயத்தில்….. இந்திய ராணுவமும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தது. வித்தை காட்டியிருந்தனர் இந்திய ராணுவத்தினர். இதில் இந்திய உளவு பிரிவான #ரா அட்டகாசம் செய்து இருந்தனர்.
இந்த சமயத்தில் தான் பாகிஸ்தானை பலமாக ஆதரித்து வந்த அமெரிக்கா பலவிதங்களில் இந்தியா, இந்திராவை மிரட்டி பணிய வைக்க முயன்றது. அமேரிக்காவே நேரிடையாக தலையிட்டது இந்த சமயத்தில் தான். தனது அதி நவீன போர் கப்பலை வங்காள விரிகுடாவில் கொண்டு வந்து நிலை நிறுத்தியது.
இந்திரா நேரிடையாக மோத ஆரம்பித்தார். கப்பலை அங்கிருந்து வெளியேறி சொன்னார். இந்த இடத்தில் அந்த சமயத்தில் தான் காட்சிக்குள் வந்தது ரஷ்யா. தனது அதிநவீன நீர்மூழ்கி கப்பலை ஓசையில்லாமல் கொண்டு வந்ததிருந்தனர். கெடு விதித்தனர். இந்தியா சற்றே ஆசுவாமானது அப்போது தான். வேறு வழியின்றி பின்வாங்கி சென்றது அமெரிக்க நாசகாரி கப்பல்.
அப்போதைய அமெரிக்க அதிபரை, ஒரு பெண்ணிடம் தோற்று வந்ததாக கேலி பேச ஆரம்பித்து இருந்தார்கள் அமெரிக்காவில். போதாகுறைக்கு இந்தியாவை கேலி செய்தனர்….. ரஷ்யா பின் ஒளிந்துக்கொண்டதாக…. இது மேலும் கோபம் மூட்டியது இந்திராவை. அப்போது கையில் எடுத்தது தான் இந்த அணு ஆயுத சோதனை.
அவர் அணு ஆயுத சோதனை செய்ய இரண்டே இரண்டு கேள்விகளை மாத்திரமே கேட்டார். எப்போது இதனை செய்ய முடியும், எங்கு வைத்து இதனை மேற்கொள்ள முடியும். கணக்கில்லாமல் நிதி இதற்கு மடைமாற்றப்பட்டது. அசூர வேகம் எடுத்தது திட்டம்.
சமாதானத்திற்கான அணு வெடிப்பு சோதனை என்று அந்நாளில் அறிவிக்கவும் செய்தார் அவர். பின்னாளில் அமெரிக்கா அந்த சோதனை குறித்த அறிக்கை ஒன்றில் இந்தியா திட்டமிட்ட இலக்கில் 40% மட்டுமே எட்டிப் பிடித்தது என்று பகடி செய்தது வேறு விஷயம்.
ஆனால் அந்நாளில் நம் பக்கத்தில் நடைபெற்றது பராக்கிரம வேலை அது. ஹோமி பாபா செய்திருந்த ஏற்பாட்டால் மற்ற காரியங்கள் அனைத்தும் முடிந்திருந்த நிலையில் யுரேனியம் செறிவூட்டலை கொண்டு ப்ளுடோனிய வடிவமைப்பு கனகச்சிதமாக நிறைவடைந்தது.
அதாவது 9 மாத காலத்தில். அமெரிக்க இந்த கட்டத்தை முதல் முறையாக அடைய 5 1/2 ஆண்டு காலம் ஆனாது. சீனாவிற்கு மூன்று ஆண்டுகள் ஏழு மாதம் பிடித்தது. ஆனால் இந்தியாவிற்கு வெறும் 9 மாதம் மட்டுமே ஆனது. அவ்வளவு துல்லியமான திட்டமிடல். அசத்தி இருந்தனர் அனைவரும். அவ்வளவு ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு.
மொத்தமும் 72 பேர் கொண்ட குழு. நான்கு வட்டங்களாக பிரித்து வடிவமைத்து இருந்தார் இதன் தலைவர் #ராஜா_ராமன்னா. இதன் அடுத்த வட்டத்தில் இரண்டாம் நிலையில் தமிழர்கள் பலர் இடம் பெற்று இருந்தனர். திருநெல்வேலியை சேர்ந்த #P_K_ஐயங்கார்.,நியுக்ளிர் பிஸிஸ்ட், நாகப்பட்டினத்தை சேர்ந்த #சாம்பசிவ_வெங்கடேஸன். #TBRL இருந்தார்.
அடுத்த அடுக்கில் சென்னையை சேர்ந்த அணு விஞ்ஞானி #சிதம்பரம் இருந்தார். இந்த குழுவில் தான் நமது பெருமதிப்புக்குரிய #அப்துல்_கலாம் இடம் பெற்று இருந்தார். இவர்கள் எல்லோருமே சிறப்பாக செயல்பட்டனர். பலர் அலுவலகத்திலேயே குளித்து ஓய்வெடுத்து என தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது.
அந்த நாளும் வந்தது. ஸ்வரன்_சிங் வெளியுறவு துறை அமைச்சர். மேற்கு மண்டல ராணுவ கட்டளை தளபதி C G பேவூர் என இருவருக்கு மாத்திரம் 36 மணிநேரத்திற்கு முன்பு தகவல் தரப்பட்டு உஷார் படுத்தி, தயாராக இருக்க சொன்னார்கள். இந்த திட்டத்திற்கு பீஸ் மேக்கிங் புத்தா பெயர் கொடுத்தார்கள்.
புத்த பூர்ணிமா தினத்தில் அந்த காலை வேளையில் ராஜஸ்தானிய நிலம் அதிர்ந்தது. உலகின் பலரது முகம் இருண்டது. தகவல் இப்படி தான் சொன்னார்களாம் அங்கிருந்து இந்திராவிற்கு புத்தர் சிரித்து விட்டார் என்று.
ஆனால்…… பாரதப் பிரதமராக வாஜ்பாய் இருந்த காலத்தில் நடத்திப்பார்க்கப்பட்ட #ஆஃப்ரேஷன்_ஷக்தி அப்படியல்ல.. முழுமையான சோதனை திட்டமிடலாக அது அமைந்தது. பொதுவாக அணு வெடிப்பு சோதனையை இரண்டு விதங்களில் வகைப்படுத்துகிறார்கள். ஒன்று நியூக்ளியர் பிஷன், அணுக் கரு பிளவு. மற்றொன்று நியூக்ளியர் பியூஷன், அணுக் கரு பிணைப்பு என்பர்.
நம் சூரியனில் நடப்பது நியூக்ளியர் பியூஷன், அணுக் கரு பிணைப்பு ஆகும். அணு குண்டு தயாரிப்புகளில் அணுக் கரு பிளவு தத்துவத்தை பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இந்தியா இந்த இரண்டு விதங்களிலும்… அதாவது நியூக்ளியர் பிஷன் மற்றும் நியூக்ளியர் பியூஷன் ஆகிய இரண்டையுமே வெற்றிகரமாக இந்த இரண்டு தினங்களில்… மே 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் செய்து பார்த்தது. இது நடந்தது மே மாதம் 1998ல். இந்தியாவில் ஏழு இடங்களில் நம் தமிழகத்தில் இரண்டு இடங்கள் உட்பட….
கல்பாக்கம் மற்றும் கூடன்குளம் ஆகிய இடங்களில் அணு உலை அமைத்து மின்சார உற்பத்தி செய்து வருகிறோம்… இதில் கூடன்குளம் அணு உலை ரஷ்யாவுடன் இணைந்து கட்டமைக்கப்பட்ட நவீன அணு உலையாகும். இஃது பயன்பாட்டிற்கு வந்து விடக்கூடாது என்ற அமெரிக்க மிஷனரிகள் பிரம்ம பிரயத்தனங்களை எல்லாம் செய்து பார்த்தனர் என்பது வேறு விஷயம்.இன்றளவும் இவர்களின் தோல் பாவை நடனங்கள் இங்கு உள்ள அவர்களின் கைப்பாவை மூலம் நடத்திக் காட்டிக் கொண்டு தான் வருகிறார்கள் என்பதும் நாம் மறுதலிக்கமுடியாத உண்மைகள்.
பொதுவாக அணு வெடிப்பு விஷயத்திற்கு இரண்டு விதங்களில் வருகிறது என்று பார்த்தோம் அல்லவா…. அதில் பெரும்பாலும் யுரேனியத்தை தான் அணுக் கரு பிளவிற்கு பயன்படுத்துவார்கள். அணு குண்டு என்றால் அதற்கு புளுடோனியம் என்கிற அணு கதிர் வீச்சு தனிமம் பயன்படுத்தப்படுகிறது.
அணு உலைகளில் யுரேனியம் (235) என்கிற தனிமத்தை நியூட்ரானைக் கொண்டு பிளக்க அஃது மூன்று நியூட்ரானையும், பேரியம் 139 மற்றும் க்ருப்ட்ரான் 94 ஆக உடைந்து பெறும் சக்தியை வெளிப்படுத்தி சிதைவடைகிறது.
இந்த சக்தியை ஆற்றலாக மடைமாற்றம் செய்கிறார்கள். இதனைத் தான் அணு உலைகளில் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
தற்போது இதனை எல்லாம் தாண்டி வேறு நிலைகளில் பல மடங்கு முன்னேற்றம் கண்டு இருக்கிறோம் நாம். இருபத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனைகள் மூலம் நாம் தற்போது தேனிக்கு அருகில் நியூட்ரீனோ ஆய்வு மையம் அமைத்து இருக்கிறோம்…… கூடிய விரைவில் உலகமே வியக்கும் வண்ணம் சோதனைகளை மேற்கொள்ள இருக்கிறோம்……
இந்த சோதனைகளை உலக அளவில் நாம் மட்டுமே மேற்கொள்ள இருக்கிறோம் என்பதே நம்மில் பலரும் அறிந்திராத அறிவியல் விஷயமாக இருக்கிறது.
ஆக்கமும் ஊக்கமும் உற்சாகமும் வழிந்தோட உழைத்த அப்துல் கலாம் பிறந்த மண்ணில் இன்று எதிலும் ஆழ்ந்த ஈடுபாடு இல்லாமல்…. அவதானிப்பு இல்லாமல் நம்மில் பெரும்பாலான மக்கள் இருப்பது சரியான சமாச்சாரம் அல்ல….
இனி வரவிருக்கும் காலங்களில் அந்த வானத்தையும் வசப்படுத்திய செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும். அத்தனை திட்டங்கள் வரிசை கட்டி செயலில் உள்ளது. அப்படியான செயல் திட்டத்தின் ஓர் பகுதி தான் ஆப்ரேஷன் ஸிந்தூர்… இனி வரும் காலங்களில் அப்படி தான் பார்க்கப்படும்.
இந்த உலகமே பார்த்து பயந்த ஒரு சமாச்சாரம் அது. அணு ஆயுதங்களை மறைத்து வைத்து இருக்கும் இடத்தில் நேரிடையாக மிக துல்லியமாக தாக்கி விட்டு கமுக்கமாக இருந்திருக்கிறார்கள் நம்மவர்கள். இதற்கு முன் இந்த உலகில் யாருமே செய்யத் துணியாத ஒன்றை செய்து இருக்கிறார்கள். ஆத்து ஆத்து போகிறார்கள் மேற்கு உலக வாசிகள். அவர்களுக்கு இது புதியது.
ஒரு நாடு துணிந்தால்… ஒரு நாட்டிற்கு துணிச்சலான தலைமையை அது கொண்டு இருந்தால்….. என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கெல்லாம் இனி வரும் நாட்களில் இது உதாரணமாக அமையும்.
ஓர் நாட்டின் டைரக்டர் ஜெனரல் ஆஃப் மிலிட்டரி ஆப்ரேஷன் நேரிடையாக அடுத்த நாட்டுடன்…. அதுவும் தங்கள் மீது தாக்குதல் நடத்தும் நாட்டிமே பேசி இனி தாக்குதல் நடத்த வேண்டாம்….. கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டோம் என முறையிட…… சரி இன்று போய் நாளை வா என்கிற கதையாக…. அத்துடன் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ள முடிந்திருக்கிறது என்றால்…… எப்பேர்ப்பட்ட விஷயம் இது.
அது தான் பாகிஸ்தான் விஷயத்தில் நடந்திருக்கிறது. எதை காட்டி பயமுறுத்துவதாக நினைத்து கொண்டு இருந்தார்களோ அதனையே நிர்மூலம் படுத்தி இருக்கிறார்கள்….. அதுவும் எல்லை தாண்டாமல்….. போர் அறிவிப்பு செய்யாமல்….
அத்துணை தூரம் துல்லி யமான உளவு தகவல்கள்…. MI என்கிற மிலிட்டரி இன்டலிஜென்ஸ் எத்தனை தூரம் நாம் முன்னேற்றம் கண்டிருக்கிறோம் என்பதற்கான ஆதாரம் இது. கொண்டாட வேண்டிய தருணம் இது. நாம் அப்படியா செய்கிறோம்.
ஏதோ ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபயணம் மேற்கொண்டதாலேயே போர் நிறுத்தம் வந்துவிட்டது என ஒரு பன்னாடை பேச…. அப்படி பேச விட்டு ஒரு மாநில முதல்வர் வேடிக்கை பார்க்க முடிகிறது என்றால்…… எப்பேர்ப்பட்ட மன நோய் இது. அந்த வம்சத்தவருக்கே இது சொந்தம் என்கிற கேலி பேச்சுக்கு இடம் கொடுக்காதா…… ஏற்கனவே அதே கடற்கரை சாலையில் வைத்து தானே காலை உணவிற்கும் மத்திய உணவிற்குமான இடைவேளையில் ஒரு உண்ணாவிரதம் மேற்கொண்டு போர் நிறுத்தம் செய்யப்பட்டதின் நீட்சியாக அல்லவா இதுவும் பார்க்கப் படும் என்பதை கூட உணர முடியவில்லையா……
வாய் கூசாமல்… தேர்தல் நடக்கும் சமயத்தில் எல்லாம் எல்லையில் தாக்குதல் நடக்கிறது என எத்தனை தூரம் அவதூறு பேசியிருக்கிறார்கள் அன்று…. இன்று அங்கு அவர்களே பொதுவெளியில் வந்து இவையெல்லாம் எங்களுடைய ஸ்டாட்டிக்ஸ்…. நரித்தந்திரங்களில் ஒன்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால்… அன்று இங்கு பேசியவர்களுக்கு என்ன தண்டனை…?!?!?
நேற்று இரவு 8 மணியளவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நேரலையில் பிரதமர் பேசினார்.
இனி…பாகிஸ்தானுடன் பேச ஒன்று மட்டுமே உள்ளது அது அவர்களின் தேசத்தில் தீவிரவாதிகளை ஒடுக்குவது பற்றி மட்டுமே என்றார். அவர்களிடம் கேட்க ஒன்று மட்டுமே உள்ளது….. எப்போது எங்கள் தேசத்தில் இருந்து வெளியேற போகிறீர்கள்… என தீர்க்கமாக நெஞ்சுரத்துடன் கேட்டு இருக்கிறார். அவர் அப்படி கேட்டது பாகிஸ்தான் வசம் உள்ள ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியை.
ஆடிப் போய் இருக்கிறார்கள் உலகத்தவர். எந்த பதட்டமும் இல்லை… அலட்டலும் இல்லை. நிறுத்தி நிதானமாக பேசியது பார்த்து மலைத்து போய் நிற்கிறார்கள். பேரை தூக்க நாலு பேர்… பட்டத்தை பறிக்க நூறு பேர்….
எங்கோ தூரத்தில் எதிரொலிக்க… டொனால்ட் ட்ரம்ப்பின் உலக வல்லரசு பட்டத்திற்கு நாயாய் பேயாய் அலைந்து கொண்டு நிற்க….. இவற்றை அநாயாசமாக கைப்பற்றி விட்டு சும்மா நிற்கிறார் இந்த உலகத் தலைவர். இனி எல்லாம் அப்படி தான்….. மாறப் போவதில்லை…. மாற்றிட ஒருவரும் பிறக்கவில்லை.
நான் ஆட்சிக்கு வந்தால், உலகில் இனி போர்கள் இருக்காது என்று அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் உறுதியளித்தார் ட்ரம்ப். சொன்னது போலவே வெற்றி பெற்று முதல் உரையில் பேசியபோது, ஒரு வாரத்தில் போர்களுக்கு முடிவு கட்டப்படும்; இது போருக்கான காலம் அல்ல என்று சூளுரைத்தார்.
அட, ட்ரம்ப் முன்னப் போல இல்லப்பா… அதிரடியா பேசுறேனு எதையாவது உளறி வைக்காம, நல்லா முதிர்ச்சியா பேசுறாரு… வெல்டன்னு உலக முழுவதும் பாராட்டு…
ஆனால் என்ன நடக்கிறது? 6 மாதங்கள் ஆகப் போகிறது… ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்கிறது, இஸ்ரேல் – காஸா பற்றி எரிகிறது, அமெரிக்கா – சீனா இடையே வணிகப் போர் ஏற்பட்டுள்ளது… இதுதான் ட்ரம்ப்… நம்மூர் ‘நீட் ரத்து ரகசியம்’ போல… நீட்டும் தொடருது… போரும் நடந்துகிட்டுதான் இருக்கு!
இப்போ திடீர்னு இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தம்பட்டம் அடித்து கொள்கிறார் பெரியண்ணன் ட்ரம்ப். ஆபரேஷன் சிந்தூர்ல மத்திய பாஜக அரசு மீது குறை சொல்ல முடியாம இருந்த எதிர்க்கட்சிகளின் வாய்க்கு அவல் போட்டது போல ஆகிட்டு ட்ரம்பின் அறிவிப்பு… அது எப்படி அமெரிக்கா தலையிடலாம்னு நம்ம தலைவர்கள் கொதித்து போய்விட்டார்கள்…
அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையினால்தான் இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். மே 10 ஆம் தேதி ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு இது…
> “அமெரிக்கா நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதைக் அறிவிக்க நான் மகிழ்ச்சியடைகிறேன். இரு நாடுகளும் அறிவும் மிகுந்த புத்திசாலித்தனமும் பயன்படுத்தியதற்காக வாழ்த்துகள்.”
ஆனால், மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என்று, ட்ரம்ப் அரசின் வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்தது…
> “மோடி, ஷெரீஃப் ஆகிய இரு பிரதமர்களின் ஞானம், அறிவு, மற்றும் அரசியல் முதிர்ச்சியை நாங்கள் பாராட்டுகிறோம். அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்தது அவர்களின் திறமையின் சான்று. எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மோதல்களை தவிர்க்க, பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்த அமெரிக்கா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும்.”
இப்படி காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு கணக்காக, நேற்றிரவு மீண்டும் ட்ரம்ப் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அது…
> “பாகிஸ்தானும் இந்தியாவும் போரை நிறுத்தவில்லையெனில் வணிகம் இல்லை என நான் விடுத்த எச்சரிக்கையால் தான், இரு நாடுகளும் உடனே இசைவாக சமாதான ஒப்பந்தத்திற்கு வந்தன. அணு ஆயுத போருக்கு வாய்ப்பு இருந்த நிலையை தடுக்க அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது.”
ஆனால், இந்தியாவின் பிரச்சினையில் மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என்ற வெளியுறவு கொள்கையின் உறுதிபாட்டை நேற்றிரவு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி மீண்டும் உறுதி செய்தார்.
> “இந்தியாவின் ஆவேசமான தாக்குதலை தாங்க முடியாமல், தப்பிக்கப் பார்த்த பாகிஸ்தான், உலக நாடுகள் தலையிட கெஞ்சியது. கடந்த 10ம் தேதி நம் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரை தொடர்பு கொண்ட பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை கோரியது. இனி ராணுவ சேட்டைகள், பயங்கரவாத செயல்கள் இருக்காது எனக் கூறியது. இந்தியா அதனை பரிசீலித்து தற்போதைக்கு நாம் தாக்குதலை நிறுத்தியுள்ளோம்.”
ஆனால் பாருங்க… ட்ரம்ப் என்னவெல்லாம் கதை விடுகிறார். (நல்லா புரியனும்னா, கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாரு பாருங்க மொமண்ட்…😀) ட்ரம்பும் அவரது வெளியுறவுத் துறையும் தான் மாற்றி மாற்றி பேசுகிறது. அட இன்னும் நான்தான்பா பெரியண்ணன் என்ற மனநிலையிலேயே, ஏதாவது சொல்லி ‘ஸ்டிக்கர்’ ஒட்டிக்க பார்க்கிறார்.
நண்பன் மோடி ஒத்துக்கணும்னு நினைச்சி பேசுகிறார். ஆனால் ”வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என்று பேசுவதையெல்லாம் பிரதமர் மோடியும் கேட்கிற ஆளா என்ன? சரி, இப்படிலாம் விமர்சித்து நாம எழுதினாலும், பாகிஸ்தான ஏதோ ஒரு வகையில இந்தியாவும் அமெரிக்காவும் வச்சு செய்கிறது என்ற கருத்தோட்டமும் இதில் அடங்கியிருக்கு! புரிஞ்சவங்க பிஸ்தா!!