Home Blog Page 88

கோயில் விழாக்களுக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடு; பாரபட்சம்?

kadeswara subramaniam hindu munnani - 2026

திருவிழாக்களின் போது ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளை கூறியதற்கு, “இந்துப் பண்டிகைகளுக்கு மட்டும் இவ்வளவு கட்டுப்பாடா? இதனை
உயர் நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கோரியிருப்பதாவது…

திருவிழாக்களின் போது ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என நீதிமன்ற தீர்ப்பு அமலில் இருந்தது. தற்போது 14 மாவட்டங்களில் திருவிழாவின் போது ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் எனவும், நிகழ்ச்சி தொடர்புடைய ஏற்பாட்டாளர்கள் உள்ளாட்சி அமைப்புக்கு 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும், அதன் மூலம் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் தூர்வாரப்படும் எனவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆன்மீக விழாக்களில் ஆடல் பாடல் மற்றும் ஆபாசமான நிகழ்ச்சிகள் நடத்துவது ஏன்? என கேட்டால் அதில் நியாயம் இருக்கிறது. அதை விட்டுவிட்டு பணம் செலுத்தினால் நடத்திக் கொள்ளலாம் என்றால் ஆபாச ஆடல் பாடல்களை நடத்திக் கொள்ளலாமா? எனும் கேள்வி எழுகிறது.

எத்தனையோ அரசியல் கட்சிகள் தங்களது மாநாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் இது போன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இந்து மதத்தை தவிர வேற்று மத விழாக்களிலும் இதுபோல சில நிகழ்ச்சிகள் உள்ளன. இவர்களுக்கெல்லாம் இந்த உத்தரவு பொருந்துமா?

ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ள கோவில்களில் கடவுளை தரிசனம் செய்ய காசு வாங்குகிறார்கள். கடவுளை காட்சி பொருளாக்கி பக்தர்களை பொருளாதார தீண்டாமையை கடைப்பிடிக்க வைக்கிறார்கள்.

இப்போது திருவிழாக்களில் நிகழ்ச்சி நடத்தவும் பணம் செலுத்த வேண்டும் என்பது இந்துக்களின் வழிபாட்டு உரிமையை முடக்கும் செயலாகும். இந்துக்களின் பழக்கவழக்கங்கள் திருவிழாக்கள் போன்றவற்றில் மட்டும் மூக்கை நுழைக்கும் உத்தரவாகவே இதை பார்க்க வேண்டி இருக்கிறது.

ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பாரம்பரிய நாட்டுப்புற கலைகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தலாம், ஆபாசம் கூடாது என சில கட்டுப்பாடுகளை விதிப்பதை வரவேற்கிறோம். தவிர பணம் செலுத்தி விட்டு நடத்திக் கொள்ளுங்கள் என்பது பக்தர்களினுடைய மனதை காயப்படுத்துகின்ற செயலாகும்.

ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துவதற்காக செலுத்தும் பணத்தை வைத்து தான் நீர்நிலைகளை தூர்வார வேண்டுமா? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். நீர் நிலைகளை பாதுகாப்பது, பள்ளிக்கூடங்கள் அமைப்பது, சமுதாய கூடங்கள் அமைப்பது என்பதெல்லாம் அரசாங்கத்தினுடைய வேலை.

ஒருவேளை இதற்கு பணம் செலுத்தாவிட்டால் நீர்நிலைகளை அரசாங்கம் தூர் வாராமல் அப்படியே விட்டு விடுமா?

தமிழர்களின் கலைகளான சிலம்பாட்டம், பறையாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் போன்ற நூற்றுக்கணக்கான கலைகள் கோவில்களின் மூலமாகத்தான் வளர்ந்தன. ஆனால் இன்று படிப்படியாக பல கலைகள் நம் கண் முன்னே அழிந்து வருகின்றன. கிராமிய கலைஞர்களுடைய வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது.

இதை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமோ வாய்மூடி மௌனியாக வேடிக்கை பார்க்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க நீதிமன்றமும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு பணம் செலுத்தி விட்டு நடத்திக் கொள்ளலாம் என்றால் பல கலைகள் அழிந்து போகும் சூழ்நிலை உருவாகும்.

அப்படியே நீதிமன்றம் சொன்னபடி 25 ஆயிரம் ரூபாய் பணத்தை விழா ஏற்பாட்டாளர்கள் செலுத்துகிறார்கள் என்றால், உள்ளாட்சி அமைப்புகள் அந்த பணத்தைக் கொண்டு நீர்நிலைகளை தூர்வாருவார்களா? அல்லது அந்தப் பணத்திலும் ஊழல் செய்வார்களா? என்பதை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை தான் தற்போது நிலவுகிறது.

இந்து விழாக்களுக்கு மட்டும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கும் இந்தத் தீர்ப்பை மாண்புமிகு நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பிரதிஷ்டை விழா; சபரிமலை கோயில் நடை திறப்பு!

sabarimala panguni uthiram - 2026

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று பிரதிஷ்டை தின பூஜை வழிபாடுகள் கோலாகலமாக துவங்கி நடைபெற்றது. ஐயப்பன் கோயில் நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி இன்று அதிகாலை திறந்து வைத்து பூஜை வழிபாடுகளை தொடங்கி வைத்தார்.

நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து வைத்தார். சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் தவிர மாதாந்திர வழிபாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். இது தவிர சிறப்பு நாட்களிலும் நடை திறக்கப்படும்.

அதன்படி ஆண்டுதோறும் பிரதிஷ்டை தினத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் இன்று வருகிறது.

இதற்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இந்த நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து வைத்தார். இன்று அதிகாலையில் பிரதிஷ்டை தின சிறப்பு பூஜை தொடங்கியது.

இதனைth தொடர்ந்து நடைபெறும் வழிபாடுகளுக்கு பிறகு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆனி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

சபரிமலை ஐயப்பன் கோவில் மூல விக்ரகம் ஐயப்பன் சிலை தீ சேதம் ஏற்பட்டது.தற்போதைய சிலை பல ஆண்டுகள் முன்பு வைகாசி மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நாளில் வருடம்தோறும் பிரதிஷ்டை தின பூஜைகள் சபரிமலை ஐயப்பனுக்கு நடத்தப் படுகிறது.

பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பயணிகளின் கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய ரயில்வே நிர்வாகம்!

railway news - 2026
#image_title

பயணிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து, ஏசி பெட்டிகளைக் கூட்டியும் ஸ்லீப்பர் பெட்டிகளைக் குறைத்தும் வெளியிட்ட அறிவிப்பை தென்னக ரயில்வே திரும்பப் பெற்றது.

வருகின்ற ஆகஸ்ட் 02/08/2025 முதல் சென்னையிலிருந்தும் (12661) 03/08/2025 முதல் செங்கோட்டையிலிருந்தும் (12662) புறப்படுகின்ற பொதிகை அதிவேக ரயில்களில் 3 ஏசி வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் 5 லிருந்து 6 ஆக கூட்டப்பட்டும் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் 8 லிருந்து 7 ஆக குறைக்கப்படும் என்ற தெற்கு ரயில்வே அறிவித்திருந்ததற்கு பயணிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டதால் இந்த முடிவை தற்போது தெற்கு ரயில்வே கைவிட்டது.

இதன் படி ஏற்கனவே தற்போது இயங்கும் ஏசி பெட்டிகள் மற்றும் முன்பதிவு தூங்கும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் நான்கு முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள்,ஒரு முதல் வகுப்பும் இரண்டாம் வகுப்பும் இணைந்த தூங்கும் வசதி ஏசி பெட்டி , இரண்டு தல இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி ஏசி பெட்டிகள் தொடர்ந்து மாற்றமின்றி இயக்கப்படும். இதே போன்று நெல்லை விரைவு ரயிலிலும் வழக்கமான பெட்டிகளும் இயங்கும்.

தொடர் வண்டித்துறை என்பது மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்டது ஆகும். இதில் இலாப நோக்கம் இருக்கக் கூடாது. ஏழை மக்களை பாதிக்கும் வகையில், விரைவுத் தொடர் வண்டிகளில் சாதாரணப் பெட்டிகளை நீக்கிவிட்டு, குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை தொடர் வண்டித்துறை  கைவிட வேண்டும்.

நீதிமன்ற உத்தரவு; டோல்கேட் வசூல் நிறுத்தம்!

tollgale in madurai - 2026

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சுங்க கட்டண தடை உத்திரவை தொடர்ந்து, எலியார்பத்தி சுங்கசாவடி நிர்வாகம் நேற்று நள்ளிரவு முதல் வாகனைகளுக்கு கட்டணமில்லா சேவை.

மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சாலை பராமரிப்பு உற்பட பல்வேறு உள்கட்ட அமைப்பு பணிகளை நிறைவேற்றும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்திருந்தது

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் எலியார் பத்தி டோல்கேட் முதல் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய தடைவிதித்தது.

எலியார் பத்தி டோல் நிர்வாகம் உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையாணையை மீறி சுங்க கட்டணத்தை நிர்வாகம் வசூல் செய்தது.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமுக நல அமைப்புகள் எதிர்பினால் சுங்க கட்டண விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் சுங்க கட்டண ரத்து உத்தரவு நகல் எலியார்பத்தி டோல் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு முதல் வாகனங்களுக்கு கட்டணம் இன்றி சேவை வழங்கப்படுகிறது.

நேற்று முன் தினம் மதுரை எலியார் பத்தி சுங்க கட்டணம் வசூலிக்க நீதிமன்ற தடை உத்தரவு நகல் வரும் வரை கட்டணம் வசூல் தொடரும் – எலியார் பத்தி சுங்க சாவடி நிர்வாகம் அறிவித்து கட்டணம் வசூல் செய்தது.

மதுரை எலியார்பத்தி டோல்கேட் நிர்வாகம் சுங்க கட்டணம் வசூலிப்பதை தொடர்ந்து பொதுமக்களுக்கும் சமூக அலுவலருக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவு முதல் எலியார்பத்தி டோலில் சுங்க கட்டணம் வசூல் செய்வது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவில் அம்மன் சிம்ம வாகன பவனி!

janagai mariamman temple utsav - 2026

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா இரண்டாம் நாள் திருவிழாவில் அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றுதல் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 17 நாள் நடைபெறும் திருவிழாவில் அம்மன் தினந்தோறும் சிம்மம், யாழி, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலாவில் வருகை தந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இரண்டாம்நாள் பெருந்திருவிழாவில் மண்டகப்படிதாரர் பூ மேட்டு தெரு கிராமத் தலைவர் மணி முத்தையா ஏற்பாட்டில் காலை 9 மணிக்கு திருக்கோவிலில் இருந்து அம்மனை அழைத்துச் சென்று பூமேடு தெரு உச்சிமாகாளி அம்மன் கோவில் முன்பாக சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு முளைப்பாரி ஊர்வலத்துடன்‌ வாண வேடிக்கை அதிர்வேட்டுகள் மேளதாளங்கள் முழங்க அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.

சோழவந்தான் கலைவாணி பள்ளி நிர்வாகி வள்ளிமயில் அரிமா சங்க தலைவர் டாக்டர் மருது பாண்டியன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தத்கால் ரயில் முன்பதிவுக்கு இனி இ-ஆதார் கட்டாயம்!

railway news - 2026
#image_title

தத்கால் ரயில் பயணச்சீட்டு முன்பதிவுகளுக்கு இனி இ ஆதார் கட்டாயமாகிறது. இதனை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது சமூகத் தளப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். முன்னதாக போலிகளைக் கண்டறிந்து களை எடுக்கும் வேலையை ஐஆர்சிடிசி தளத்தில் துவங்கியுள்ளதாக தெரிவித்த நிர்வாகம் இரண்டரை கோடி போலி பயனர் ஐடிகளை நீக்கியுள்ளதாக தெரிவித்திருந்தது.

தத்கால் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்த்து பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. ரயில்களில் தத்கால் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்து விடுவதாகவும், இடைத்தரகர்கள் அதிகளவில் டிக்கெட் முன்பதிவு செய்வதாகவும் பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து, இத்தகைய பிரச்சினைகளை தீர்க்க ரயில்வே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், தத்கால் முன்பதிவு தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். அவர் தனது சமூக தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ள குறிப்பில், தத்கால் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாகிறது என்று தெரிவித்துள்ளார். 

அதாவது, ரயில்களில் தத்கால் டிக்கெட் முன்பதிவு செய்ய இனி ஆதார் சரிபார்ப்பு விரைவில் கட்டாயம் ஆக்கப்பட இருப்பது அவரது அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தப் புதிய நடவடிக்கை மூலம் உண்மையான பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கும் என்று கூறியுள்ளார் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

இதன் மூலம், ஆதார் எண் இணைத்து வெரிபிகேஷன் – சரிபார்ப்பு செய்து வைத்திருக்கும்  பயனர் கணக்கில் இருந்து மட்டுமே தத்கால் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்ய முடியும். மேலும், ஆதார் மூலம் வரும் ஓடிபி என்ணை பதிவு செய்த பிறகே டிக்கெட் புக் செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட இருப்பதாகவும் ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. கவுன்ட்டர்களில் தத்கால் டிக்கெட் பெற ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த மாத இறுதியில் இந்தப் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படக்கூடும். 

ஏற்கனவே ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் பயனர் கணக்குகளுக்கு ஆதார் எண் சரிபார்ப்பு நடைமுறை உள்ளது.  அதன் மூலம் டிக்கெட் பதிவு செய்யப்பட்டும்  வருகிறது.  எனினும் அது கட்டாயமாக்கப்படுவது தற்போது உண்மையான பயனர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதில் வசதியாக இருக்கக் கூடும்.  

சாதாரண டிக்கெட் முன்பதிவு என்பது, ரயில்களில் 60 நாட்களுக்கு முன்னதாகவே செய்ய முடியும். மொத்தம் உள்ள டிக்கெட்டுகளில் 20 சதவீதம் தத்கால் முன்பதிவுக்கு ஒதுக்கப்படுகிறது. ஏசி வகுப்பு தத்கால் டிக்கெட்டுகளை காலை 10 மணிக்கும், படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் பெட்டிகளுக்கான டிக்கெட் 11 மணிக்கு முன்பதிவு செய்ய முடியும்.

ராகுலே உதாரணம்! தேசிய அடையாளத்தைத் தொலைத்த காங்கிரஸ்!

1854358 rahulgandhi1 - 2026

இந்திய ராணுவத்தை அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதற்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்திருந்தார். ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராணுவத்தை அவமதிப்பதெல்லாம் கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது என்று கறாராகக் கூறிவிட்டது.

இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே நிலவிய மோதல் குறித்து கடந்த 2022ஆம் அண்டு டிசம்பர் மாதம் ராகுல் காந்தி பேசியிருந்தார். அவரது பேச்சில் இந்திய ராணுவத்தை விமர்சிப்பதைப் போன்ற கருத்துகள் இடம்பெற்றிருந்தன. 

இதற்கு எதிராக ‘எல்லைப்புறச் சாலைகள் அமைப்பின்'(BRO) இயக்குனர் உதய் சங்கர் ஸ்ரீவாஸ்தவா புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

பாரதப் பிரதமர் மோடி மீதான வெறுப்பில் – நம் நாட்டின் படைகளின் வெற்றியைக் கொண்டாடக்கூட வேண்டாம்; குறைந்த பட்சம் தூற்றாமல் வாயை மூடிக்கொண்டாவது இருந்தால், தன் மீதான மதிப்பு கொஞ்சமாவது ஒட்டிக்கொண்டு இருக்கும் என்பதைக் கூட அறியாத ராகுல், உண்மையில் எதிர்க்கட்சித் தலைவராய் இருக்க லாயக்கில்லாதவர்தான்! 

ஆபரேஷன் சிந்தூர் என்பதை பாஜக., தனது அரசியல் லாபத்துக்காக எடுத்துக் கொள்கிறது என்ற குற்றச்சாட்டைக் கூறும் முன், இதே போன்ற சூழ்நிலைகள் நாட்டில் நிலவியபோது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் என்ன செய்தது என்பது ராகுலுக்கு நினைவில்லையா அல்லது அது தங்கள் கட்சியின் தோல்வி என்பதைத்தான் இப்போது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறாரா? 

‘நரேந்தர் சர்ண்டர்’ என்று ராகுல் கூறும் எதுகை மோனையை ரசிக்க ஒரு சில மர்ம மனிதர்கள் இந்த நாட்டில் இருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் ராகுலையும் காங்கிரஸ் கட்சியையும் அருவெறுப்புடன் பார்க்கிறதே!  ஒரு சில மர்ம மனிதர்களை குஷிப் படுத்துவதற்காக நாட்டின் பெரும்பாலான மக்களின் கோபத்தை அல்லவா காங்கிரஸ் இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதானே இப்போது காங்கிரஸை விட்டு பல தலைவர்கள் விலகிக் கொண்டிருப்பது?!

பாகிஸ்தானுக்கு போரில் நேரடியாக ட்ரோன்களை இயக்கி, போரில் பங்கேற்ற துருக்கி நாட்டில், எதற்காக காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறந்து வைத்திருக்கிறது  என்கிற கேள்விக்கு பதில் அளிக்க துப்பில்லாமல் போனது ராகுல் காந்திக்கு! போரில் உதவிய சீனாவிடம் காங்கிரஸூக்கு என்ன தொடர்பு? எதற்காக ரகசியமாய் ஒப்பந்தம் போட வேண்டும்? – என்றெல்லாம் எழுப்பப் படும் கேள்விகளுக்கு ராகுலாலோ, காங்கிரஸின் தலைவர்களாலோ எந்த பதிலும் தர முடியாமல் போயிருக்கிறதே! 

இந்நாட்களில் சொல்லப் போனால் காங்கிரஸ்  தன் தேசியக் கட்சி என்ற அடையாளத்தை இழந்துவிட்டது என்பது தான் இந்திய அரசியல் ஏட்டில் எழுதப்பட்டிருக்கும்!

275 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம்; திருவனந்த புரத்தில் ஏற்பாடுகள் தீவிரம்!

thiruvananthapuram ananthapadmanabhaswamy temple - 2026

275 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 8ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் காணும் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் விழா ஏற்பாடுகள் தீவிரம்…

1750-ம் ஆண்டு மார்த்தாண்டவர்மா மகாராஜா ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலை புதுப்பித்து மகாகும்பாபிஷேகம் நடத்தினார். அதன்பிறகு 275 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 8-ம் தேதி ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் மகாகும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.கும்பாபிஷேகத்துக்கு முந்தைய பாரம்பரிய யாகசாலை பூஜை சடங்குகள் ஜூன் 2முதல் துவங்கி நடந்து வருகிறது.

275 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்.. பத்மநாப சுவாமி கோவிலில் விழா ஏற்பாடுகள் தீவிரம்

கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவில். மகா விஷ்ணுவுக்குரிய 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். இந்த கோவிலில் 275 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

இது குறித்து பத்மநாபசுவாமி கோவிலின் மேலாளர் ஸ்ரீகுமார் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது,

கடந்த 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நியமித்த நிபுணர் குழுவின் அறிவுறுத்தலின்படி கோவிலின் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. கொரோனா தொற்று பரவல் காரணமாக முடங்கிய புனரமைப்பு பணிகள், கடந்த 2021-ம் ஆண்டு முதல் மீண்டும் தொடங்கி நடந்து வந்த நிலையில், தற்போது நிறைவு பெற்றிருக்கிறது. இதனால் பத்மநாபசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் வருகிற 8-ந்தேதி நடத்தப்படுகிறது.

மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுரத்தில் மூன்று புதிய கலசங்கள், சன்னதியின் முன்புள்ள ஒற்றைக்கல் மண்டபத்தின் மேல் கோபுரத்தில் இருக்கும் கலசம் என 4 கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. புதிய விஷ்வக்சேனன் சிலை பிரதிஷ்டை, கோவில் வளாகத்தில் அமைந்துள்ள திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணர் சன்னிதியில் அஷ்டபந்த கலசம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் கும்பாபிஷேக நாளில் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்துக்கு முந்தைய பாரம்பரிய சடங்குகள் வரும் நாட்களில் நடைபெறும். பத்மநாப சுவாமி கோவில் வளாகம் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகெங்கிலும் உள்ள பத்மநாபசுவாமி பக்தர்களுக்கு கும்பாபிஷேக சடங்குகளை காணும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. கோவிலின் மரபுகளை பின்பற்றி புனித நிகழ்ச்சிகள் நடைபெறுவதை உறுதி செய்ய கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

1750-ம் ஆண்டு மார்த்தாண்டவர்மா மகாராஜா ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலை புதுப்பித்து மகாகும்பாபிஷேகம் நடத்தினார். அதன்பிறகு 275 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 8-ம் தேதி ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் மகாகும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

கடந்த 2-ம் தேதி முதல் சுத்தி பூஜைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜூன் 8-ம் தேதி காலை 7.45 மணிக்கு கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் தொடங்கும். அதைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

275 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவது உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டிரம்ப் வார்த்தையை மெய்யாக்கிய மோடி!

modi and trump - 2026
#image_title
  • அருண்பிரபு ஹரிஹரன்

இந்த அமெரிக்க வியாபாரப் பிரதிநிதி Howard Lutnickம் அவரது இந்திய வம்சாவளி அடிமை Asha Motwaniம் பினாத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

  1. எங்களை மீறி ரஷ்யாவோடு உறவு என்பதை நிறுத்துங்கள்.
  2. BRICSலிருந்து வெளியே வாருங்கள்.
  3. டாலரை ஏறக்கட்டும் ஆட்களோடு டூ விடுங்கள்.
  4. சொல்பேச்சுக் கேட்கும் ஒரு ஆளை வியாபாரப் பேச்சுவார்த்தைக்கு அனுப்புங்கள்.

ஏன் இப்படி?

ரஷ்ய உறவை சிக்கலான உக்ரைன் போரின் உச்சகட்டத்திலேயே முறிக்கவில்லை. இப்போதெல்லாம் முடியாது.

BRICSலிருந்தெல்லாம் வெளிவர முடியாது. ஆரம்பித்த குரூப்பே நாங்க தான்.

டாலர் தன்னாலே புழக்கத்திலிருந்து குறைந்து காணாமல் போகும். நாங்கள் ஏன் மெனக்கெட வேண்டும்.

பேச்சுவார்த்தையில் பியூஷ் கோயல் பேச்சு இவர்களுக்குப் புதிது. மன்மோகன் காலம் போல “இந்தா பழைய மருந்து மாத்திரை கத்தி கம்பெல்லாம் இருக்கு எடுத்துக்க… இதொரு 50000 அதொரு 50000னு கோடில குடுத்திரு” என்று சொல்ல, சரிங்க எசமான் என்று குனிந்து கும்பிட்டு வரும் ஆளை எதிர்பாரத்திருக்கிறார்கள்.

ஆனால் 10% பேஸ் டாரிஃபை ஏற்கமுடியாது (அதாவது என்ன Free Trade Agreements (FTA) உடன்பாடு எட்டினாலும் 10% அடிப்படை வரி உண்டு என்கிறது அமெரிக்கா) என்று ஆரம்பித்துள்ளர் கோயலார். பிரிட்டிஷ்காரன் ஏத்துக்கிட்டனேய்யா? என்று அமெரிக்கர்கள் பேச அது அவங்க விவகாரம், நமக்கு இந்த 10% தோதுபடாதுங்க என்று சொல்லிவிட்டார். இது தவிர உற்பத்தியாகும் இடம் பற்றிய விதிகளில் (Rule of Origin) இந்தியத் தயாரிப்புகள் (Made in India) 60% உள்ளூர் பொருட்கள், ஆட்களை வைத்துத் தயாரிக்கவேண்டும் என்பதை 35% குறைக்கச் சொல்கிறார் கோயல்.

இது தவிர ட்ரம்ப் விதிக்கும் வரிகளை எதிர்த்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் ஜனாதிபதிக்குத் தோன்றியபடி எல்லாம் வரிவிதிக்க அதிகாரமில்லை என்கிறது. வழக்கின் முடிவு ட்ரம்ப் இஷ்டத்துக்கு வரி விதிக்கக் கூடாது என்பதாகவே இருக்கும் என்று கணித்த நம் சட்டவல்லுநர்களின் ஆலோசனைப்படி இல்லை என்றாகப் போகிற வரியை ஏன் மதித்துப் பேசவேண்டும் என்று போகிறார்.

இது தவிர சீனாவுக்கு 245% வரி ஐரோப்பாவுக்கு 200% வரி, என்று மிரட்டிய ட்ரம்ப் இப்போது தேர்த்ல்ல எல்லாம் ஜெயிச்சு ஜனாதிபதி ஆயிருக்கேன்யா, ஒரு 60% இல்லாட்டி 30% ஆவது போட்டுக்குடுங்கய்யா என்கிறார். இப்படி ஆடும் ஆளிடம் கெஞ்சவேண்டாம். கொஞ்சம் முறைக்கினால் தன்னாலே இறங்குவார் என்று கோயல் பிரித்து மேய்கிறார்.

மேலும் கடந்த மார்ச்சில் இந்திய எஃகு, அலுமினியம் இவற்றுக்கு 25% வரி போட்டார் ட்ரம்ப். இது WTO விதிமீறல் என்று பிராது கொடுத்தது நம் அரசு. WTF என்று பிராதை குப்பையில் போடச் சொன்னார் ட்ரம்ப். பாதாம் பருப்பு, பாதாங்கொட்டை, உலோகம் உள்ளிட்டவற்றுக்கு 25% வரி போடுவோம் என்று சொல்லிவிட்டது நம் அரசு.

இது தவிர இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தினேனாக்கும் என்றும் வியாபாரம் செய்யமாட்டேன் என்று மிரட்டியதில் இரு பக்கமும் உடனடியாக சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டார்கள் என்றும் ட்ரம்ப் பேசித்திரிவது மோடிக்குப் பிடிக்கவில்லை. இந்த வியாபாரப் பேச்சுவார்த்தையில் ட்ரம்ப் வெற்றி கொண்டாட இடம் தரக்கூடாது என்று அடித்தாடுகிறார்.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே நம்மிடம் வியாபாரம் பேசுவது சரியில்லை என்றால் அவர்கள் சிறப்பானவர்கள். பாகிஸ்தான் ஆட்கள் நல்ல வியாபாரிகள் என்கிறார் ட்ரம்ப். சீன ஆயுதத்தை விட்டு அமெரிக்க ஆயுதம் வாங்குவதைத்தான் இப்படிச் சொல்கிறார். ஐஎமெஃப் கடனில் பாதுகாப்புக்கு என்று பணம் ஒதுக்கி அமெரிக்க ஆயுதம் வாங்கி செழிக்க வைக்கும் பாகிஸ்தான என்று பேசுகிறார் ட்ரம்ப்.

இது தவிர ட்ரம்ப் TACO என்று அமெரிக்காவில் பலரும் பேசுகின்றனர். Trump Always Chickens Out என்பதன் சுருக்கமே TACO. முதலீட்டாளர்கள் பலர் ட்ரம்ப் வரி ஏற்றியவுடன் சரியும் மங்குகளை வாங்கி வரி குறைத்தவுடன் ஏற்றத்தில் பங்குகளை விற்று லாபம் பார்ககின்றனர். அதறகு TACO Trade என்று பெயர் வைத்துக் கிண்டலடிக்கிறார்கள் அமெரிக்கர்கள். இந்த TACO Tradeக்கு எப்போது எவ்வளவு வரி என்று குதிப்பார் ட்ரம்ப் என்று தெரியவில்லை.

ட்ரம்ப் வரிவிதித்த ஏப்ரல் மாதத்தில் “வாய்யா பேசுவோம்” என்றார் மோடி. அப்போது மோடி பணிந்துவிட்டார் என்று கூவியவர்கள் இப்போது India has toughened trade stand என்று அமெரிக்கர்கள் புலம்புவதற்கு என்ன சொல்வார்கள்?

மோடி என்னை விட மிகச் சிறந்த வகையில் பேரம் பேசுபவர் (US President Trump acknowledged PM Modi as a tougher negotiator)- என்று அன்று அமெரிக்காவில் வைத்து டிரம்ப் சொன்னதை பிரதமர் மோடி இன்று மெய்யாக்கியிருக்கிறார்.

IPL 2025: முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றிய பெங்களூரு!

ipl 2025 games - 2026

இறுதிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் கோப்பையை முத்தமிட்டது பெங்களூரு!

போட்டியின் சுருக்கமான ஸ்கோர்

KINGS – 190/9 (20) ; PBKS – 184/7 (20)
RCB 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 

ராயல் சேலஞ்சர்ஸ் 190/9 (20)

விராட் கோலி 43 (35) | அர்ஷ்தீப் சிங் 3/40 (4)
இரஜத் படிதார் 26 (16) | கைல் ஜேமிசன் 3/48 (4)
லியாம் லிவிங்ஸ்டோன் 25 (15) | வைசக் விஜய் குமார் 1/30 (4)

பஞ்சாப் கிங்ஸ் 184/7 (20)

ஷஷங்ச் சிங் 61* (30) | க்ருனால் பாண்டியா 2/17 (4)
யோசு இங்கிலிசு 39 (23) | புவனேசுவர் குமார் 2/38 (4)
பிரப்சிம்ரன் சிங் 26 (22) | யஷ் தயாள் 1/18 (3)