Home Blog Page 88

காலையில் ஒரு பேச்சு; மாலையில் ஒரு பேச்சு! பெரியண்ணன் ட்ரம்ப்பின் ‘ஸ்டிக்கர்’ அட்ராசிட்டி!

modi and trump - 2026
#image_title

– ஜி.எஸ்.பாலமுருகன்.

நான் ஆட்சிக்கு வந்தால், உலகில் இனி போர்கள் இருக்காது என்று அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் உறுதியளித்தார் ட்ரம்ப். சொன்னது போலவே வெற்றி பெற்று முதல் உரையில் பேசியபோது, ஒரு வாரத்தில் போர்களுக்கு முடிவு கட்டப்படும்; இது போருக்கான காலம் அல்ல என்று சூளுரைத்தார்.

அட, ட்ரம்ப் முன்னப் போல இல்லப்பா… அதிரடியா பேசுறேனு எதையாவது உளறி வைக்காம, நல்லா முதிர்ச்சியா பேசுறாரு… வெல்டன்னு உலக முழுவதும் பாராட்டு…

ஆனால் என்ன நடக்கிறது? 6 மாதங்கள் ஆகப் போகிறது… ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்கிறது, இஸ்ரேல் – காஸா பற்றி எரிகிறது, அமெரிக்கா – சீனா இடையே வணிகப் போர் ஏற்பட்டுள்ளது… இதுதான் ட்ரம்ப்… நம்மூர் ‘நீட் ரத்து ரகசியம்’ போல… நீட்டும் தொடருது… போரும் நடந்துகிட்டுதான் இருக்கு!

இப்போ திடீர்னு இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தம்பட்டம் அடித்து கொள்கிறார் பெரியண்ணன் ட்ரம்ப். ஆபரேஷன் சிந்தூர்ல மத்திய பாஜக அரசு மீது குறை சொல்ல முடியாம இருந்த எதிர்க்கட்சிகளின் வாய்க்கு அவல் போட்டது போல ஆகிட்டு ட்ரம்பின் அறிவிப்பு… அது எப்படி அமெரிக்கா தலையிடலாம்னு நம்ம தலைவர்கள் கொதித்து போய்விட்டார்கள்…

அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையினால்தான் இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். மே 10 ஆம் தேதி ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு இது…

> “அமெரிக்கா நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதைக் அறிவிக்க நான் மகிழ்ச்சியடைகிறேன். இரு நாடுகளும் அறிவும் மிகுந்த புத்திசாலித்தனமும் பயன்படுத்தியதற்காக வாழ்த்துகள்.”

ஆனால், மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என்று, ட்ரம்ப் அரசின் வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்தது…

> “மோடி, ஷெரீஃப் ஆகிய இரு பிரதமர்களின் ஞானம், அறிவு, மற்றும் அரசியல் முதிர்ச்சியை நாங்கள் பாராட்டுகிறோம். அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்தது அவர்களின் திறமையின் சான்று. எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மோதல்களை தவிர்க்க, பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்த அமெரிக்கா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும்.”

இப்படி காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு கணக்காக, நேற்றிரவு மீண்டும் ட்ரம்ப் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அது… 

> “பாகிஸ்தானும் இந்தியாவும் போரை நிறுத்தவில்லையெனில் வணிகம் இல்லை என நான் விடுத்த எச்சரிக்கையால் தான், இரு நாடுகளும் உடனே இசைவாக சமாதான ஒப்பந்தத்திற்கு வந்தன. அணு ஆயுத போருக்கு வாய்ப்பு இருந்த நிலையை தடுக்க அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது.”

ஆனால், இந்தியாவின் பிரச்சினையில் மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என்ற வெளியுறவு கொள்கையின் உறுதிபாட்டை நேற்றிரவு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி மீண்டும் உறுதி செய்தார்.

> “இந்தியாவின் ஆவேசமான தாக்குதலை தாங்க முடியாமல், தப்பிக்கப் பார்த்த பாகிஸ்தான், உலக நாடுகள் தலையிட கெஞ்சியது. கடந்த 10ம் தேதி நம் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரை தொடர்பு கொண்ட பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை கோரியது. இனி ராணுவ சேட்டைகள், பயங்கரவாத செயல்கள் இருக்காது எனக் கூறியது. இந்தியா அதனை பரிசீலித்து தற்போதைக்கு நாம் தாக்குதலை நிறுத்தியுள்ளோம்.”

ஆனால் பாருங்க… ட்ரம்ப் என்னவெல்லாம் கதை விடுகிறார். (நல்லா புரியனும்னா, கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாரு பாருங்க மொமண்ட்…😀) ட்ரம்பும் அவரது வெளியுறவுத் துறையும் தான் மாற்றி மாற்றி பேசுகிறது. அட இன்னும் நான்தான்பா பெரியண்ணன் என்ற மனநிலையிலேயே, ஏதாவது சொல்லி ‘ஸ்டிக்கர்’ ஒட்டிக்க பார்க்கிறார்.

நண்பன் மோடி ஒத்துக்கணும்னு நினைச்சி பேசுகிறார். ஆனால் ”வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என்று பேசுவதையெல்லாம் பிரதமர் மோடியும் கேட்கிற ஆளா என்ன? சரி, இப்படிலாம் விமர்சித்து நாம எழுதினாலும், பாகிஸ்தான ஏதோ ஒரு வகையில இந்தியாவும் அமெரிக்காவும் வச்சு செய்கிறது என்ற கருத்தோட்டமும் இதில் அடங்கியிருக்கு! புரிஞ்சவங்க பிஸ்தா!!

  • ’செய்திக்கதிர்’ வாட்ஸ்அப் குழுவில் …

நம் பெண்களின் குங்குமத்தை பறிக்க நினைத்தால்… என்ன நடக்கும் என்பதை உலகம் உணர்ந்து கொண்டது

நம் பெண்களின் குங்குமத்தை பறிக்க நினைத்தால்… என்ன நடக்கும் என்பதை உலகம் உணர்ந்து கொண்டது: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இப்போது புரிந்துகொண்டிருப்பார்கள்! பிரதர் மோடியின் ஆவேச உரை! மே 12ம் தேதி இரவு ஊடகங்கள் மூலம் பிரதமர் மோடி ஆற்றிய உணர்ச்சிகரமான உரையின் தமிழ் வடிவம்

தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்

ஆபரேஷன்_சிந்தூர் #narendramodi #operationsindoor #பிரதமர்மோடி #மோடி #ஆ

#News_Videos #தினசரி_செய்திகள் #ஆபரேஷன்சிந்தூர் #breakingnews

எதற்காக இந்த ‘உடான்ஸ்’ பேரணி?

stalin march in chennai - 2026

ஸ்டாலின் ‘இந்திய ராணுவத்திற்குத் துணையாக’ என்று சொல்லி நடத்திய உடான்ஸ் பேரணி!

— ஆர். வி. ஆர்

முதலில் ‘உடான்ஸ்’ பற்றி ஒரு பொருள் விளக்கம்: அது ஒரு கேலிச் சொல். தன் தவற்றை மறைக்க ஒருவர் சொல்லும் எளிதான பொய்யை, நடத்தும் பேரணியை, ‘உடான்ஸ்’ என்று தள்ளலாம்.

‘இந்திய ராணுவத்துக்குத் துணை நிற்போம்’ என்ற பெயரில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது தலைமையில் இந்த மே மாதம் 10-ம் தேதி சென்னையில் ஒரு பேரணி நடத்தினார் – நாலு கிலோமீட்டர் தூரத்திற்கு. இதன் பின்னணி என்ன?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சென்ற ஏப்ரல் 22-ம் தேதி ஒரு பயங்கரவாதம் நிகழ்ந்தது. பாகிஸ்தான் அனுப்பிய நான்கு பயங்கரவாதிகள் அந்த ஊருக்கு வந்து அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் ஹிந்துக்கள் என்பதை அவர்களிடமே கேட்டறிந்து அவர்களில் 25 ஆண்களை – இந்தியர்கள் 24, நேபாளி 1 – அவர்களின் மனைவி குழந்தைகள் முன்னிலையில் படுகொலை செய்தனர்.

பாதகம் செய்த பாகிஸ்தான் மீது, மே 7-ம் தேதி அதிகாலையில் அதிரடி ராணுவ நடவடிக்கையைத் துவங்கியது இந்தியா. அன்று விடிவதற்கு முன்பாகவே, பாகிஸ்தானில் இயங்கிய 9 பயங்கரவாதப் பயிற்சி முகாம்களை இந்திய ஏவுகணைகள் தகர்த்து அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை மேலோகம் அனுப்பின. அன்றைய தினமே மோடியின் துணிவு மிக்க அரசியல் தலைமை உலகெங்கும் ஒளிர்ந்தது.

அடுத்த நாளில் (மே 8) பாகிஸ்தானின் சில ஊர்களில் இருந்த வான்வெளிப் பாதுகாப்புக் கட்டமைப்பை இந்தியா சின்னாபின்னம் செய்தது. இடையில் நமது ராணுவத் தளங்கள் மீது பாகிஸ்தான் தாக்க முயற்சித்ததையும் முறியடித்தது இந்தியா.

இந்த நிலைமையில், மூன்றாவது நாளான மே 9-ம் தேதி காலை ஸ்டாலின் தனது பேரணியை அறிவித்தார். அதற்கு அவர் என்ன காரணம் சொன்னார்?

“தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நாம் ஆதரவை வெளிபடுத்தும் நேரம் இது” என்று சொல்லிய ஸ்டாலின், அதற்காக மறுநாள் மே 10-ம் தேதி மாலை 5 மணிக்குச் சென்னையில் ஒரு பேரணி நடக்கும் என்று அறிவித்தார். அதன்படி பேரணி நடத்தினார்

மே 10-ம் தேதி அன்று, ஸ்டாலின் தனது பேரணியைத் துவங்குவதற்கு முன்பாக, இந்தியா தனது ஏவுகணைகளைச் செலுத்தி பாகிஸ்தானின் 11 ராணுவ விமானத் தளங்களைத் துவம்சம் செய்தது.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிய பாகிஸ்தான், மே 10-ம் தேதி பிற்பகலில், இந்தியாவை அழைத்துப் போர்நிறுத்தம் கேட்டு அழுதது. அதன்படி அன்று மாலை 5 மணியிலிருந்து இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்தை அமல் செய்ய ஒப்புக் கொண்டு அதன்படி போர் நின்றது. அன்று மாலை ஸ்டாலின் அவரது பேரணியில் நடந்த போது, பாதி வழியிலேயே போர் நிறுத்தம் ஏற்பட்டதையும் அறிந்திருப்பார்.

இந்தப் போர் அதி விரைவில் முடிந்ததற்கு ஒரு முக்கியக் காரணம், தொடக்கத்திலிருந்தே இந்தியா பாகிஸ்தானை ராட்சசப் புரட்டு புரட்டி அதற்குக் கைகால் விளங்காமல் செய்தது. இன்னொரு முக்கியக் காரணம்: அத்தகைய போர் நடவடிக்கைக்கான ஒப்புதலை அளித்து, அதன் விளைவுகளுக்கான பொறுப்பையும் தானே ஏற்கும் அரசியல் துணிவு பிரதமர் மோடியிடம் இருந்தது என்பதாகும்.

போர் விஷயத்தில் ஸ்டாலின் மோடியை ஒரு வார்த்தை கூடப் பாராட்டவில்லை. ஏதோ நமது முப்படைகளின் தளபதிகள் பாகிஸ்தான் மீது இன்ன தேதியில் இன்ன தாக்குதல்கள் நடத்தவேண்டும் என்று தாமாகவே திட்டம் வகுத்து அவர்களாகவே செயல்பட்டார்கள், மோடி பல்லுப் போன கொள்ளுத் தாத்தா மாதிரி ஓரத்தில் அமைதியாக படுத்துத் தூங்கினார் என்று ஸ்டாலின் நினைக்கிறாரா?

பேரணி பற்றி ஸ்டாலின் அறிவித்த வார்த்தைகளைப் பாருங்கள். பாகிஸ்தான் ‘தீவிரவாதத்தை’ வளர்த்தெடுத்து இந்தியாவில் ‘அத்துமீறல்கள்’ செய்கிறதாம். அதற்காக வீரத்துடன் பாகிஸ்தானுடன் போர் புரியும் நமது ராணுவத்திற்கு நாம் ஆதரவாக நிற்கும் நேரம் இதுவாம். அதன் பொருட்டு ஸ்டாலின் பேரணி நடத்துகிறாராம்.

பாகிஸ்தான் தனது நாட்டில் பாலூட்டி வளர்ப்பது பயங்கரவாதம் (terrorism) – அது வெறும் தீவிரவாதம் (extremism) அல்ல. ஒன்று சிறுத்தை, மற்றது ஓநாய். தனது பேரணி அறிவிப்பில் பயங்கரவாதத்தின் பெயரைக் கூடச் சொல்ல ஸ்டாலினுக்கு என்ன பயம்? இதில் பம்முவதால் சிறுபான்மையினரின் ஓட்டுக்களை ஈர்க்க முடியும் என்று நினைக்கிறாரா ஸ்டாலின்?

அடுத்து, பஹல்காமில் பாகிஸ்தான் பாதகர்கள் செய்தது ஸ்டாலின் பாஷையில் ‘அத்துமீற’லாம். “உன் மதம் என்ன?” என்று சுற்றுலாப் பயணிகளைக் கேட்டு அவர்கள் ஹிந்துக்கள் என்று அறிந்து அவர்களை சுட்டுக் கொன்றார்கள் அந்தப் பயங்கரவாதிகள். அந்தக் கிராதகர்களின் அப்பட்டமான மத வெறுப்பைக் கண்டனம் செய்யாமல், அவர்கள் ஏதோ கையை ஆட்டி சுற்றுலாப் பயணிகளைப் “போ போ” என்று ஊரை விட்டு விரட்டி விட்டார்கள், அதுதான் அவர்கள் செய்த ‘அத்துமீறல்’ என்பது மாதிரிச் சொல்கிறாரே ஸ்டாலின்?

போரிட்ட நமது முப்படை வீரர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். இதில் சந்தேகம் இல்லை. போருக்குப் பின் மே 12-ல் டி.வி மூலம் இந்தியர்களிடம் பேசிய பிரதமர் மோடியும் நமது படைவீரர்களுக்கு, விஞ்ஞானிகளுக்கு மற்றும் உளவுத் துறையினருக்கு சல்யூட் வைத்தார். அது மோடியின் பணிவாலும் பண்பாலும் வந்த சல்யூட். அதாவது, நாட்டை வழிநடத்தும் பிரதமர் என்ற முறையில், போர் வெற்றியில் தனக்கு இயல்பாகக் கிடைக்கும் பெருமையைப் போரில் ஈடுபட்ட இந்தியப் படை வீரர்களுக்கும் நமது வெற்றிக்குப் பங்களித்த பிறருக்கும் கொடுத்தார் மோடி. அது மெச்சத் தக்கது. ஆனால் ஸ்டாலின் விஷயம் வேறு.

மோடியை எதிலும் எப்போதும் தனது அரசியல் எதிரியாகப் பார்க்கும் ஸ்டாலின், மோடிக்கு என்ன பெருமை சேர்ந்தாலும் அதை உதாசீனம் செய்வதில் அற்ப திருப்தி கொள்வார். ஆகையால் போர் விஷயத்தில் மோடிக்கு உரித்தான பாராட்டை ஸ்டாலின் சிறிதும் வெளிப்படுத்தவில்லை.

இப்படியும் பாருங்கள். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியது யார் என்று கேட்டால் ஸ்டாலின் என்ன சொல்வார்? ராஜ ராஜ சோழன் என்பரா, இல்லை சோழ நாட்டுக் கொத்தனார்கள் என்று பதில் சொல்வாரா?

ஒரு நாட்டின் படைவீரர்களுக்குத் தில்லும் திறமையும் இருக்க வேண்டும். அவர்களிடம் முறையான ஆயுதங்களும் தளவாடங்களும் இருக்க வேண்டும். அதற்கும் மேலாக, போர் என்று வந்தால் நாட்டின் போர்ப்படைத் தளபதிகளின் நம்பிக்கையைப் பெற்று அவர்களை ஊக்கப் படுத்தி அவர்கள் பின்னால் வலுவாக நிற்கும் ஒரு அரசியல் தலைவனும் அந்த நாட்டிற்குத் தேவை. இந்த நேரத்தில் மோடி அப்படி ஒரு தலைவனாக இருக்கிறார். இது ஸ்டாலினுக்குப் புரியுமா?

கடைசியாக ஒன்று. உண்மையில் ஸ்டாலின் எதற்குத் தனது பேரணியை நடத்தினார்? காரணம் உண்டு.

பயங்கரவாத பாகிஸ்தானுக்கு மோடி செமத்தியாகப் பாடம் புகட்டியதற்காக, அவருக்கு இந்திய மக்கள் நன்றி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதில் தேச உணர்வும் கலந்து வருகிறது. தாமும் இப்போது தேச உணர்வை வெளிப் படுத்தியது போல் இருக்கட்டும், அதே சமயம் முனகலாகக் கூட மோடிக்கு பாராட்டு சொல்லக் கூடாது, என்று நினைத்து ஒரு மலிவான நாடகத்தை நடத்தி இருக்கிறார் ஸ்டாலின். தனது பேரணிக்காக ஸ்டாலின் சொன்ன காரணத்தை, அவரது பேரணியை, எப்படி எடுத்துக் கொள்வது? வேறென்ன? உடான்ஸ்!

Author: R. Veera Raghavan – Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

பெண்களின் குங்குமத்தைப் பறித்தால், என்ன நடக்கும் என்பதை உலகம் உணர்ந்து கொண்டது: பிரதர் மோடியின் ஆவேச உரை!

pm modi speech about operation sindoor - 2026

PM ADDRESS TO THE NATION ON 12.05.2025

தமிழாக்கம் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நாம் அனைவரும், கடந்த நாட்களிலே, எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நாம் அனைவரும், கடந்த நாட்களிலே, தேசத்தின் வல்லமை, மற்றும், அதன் ஒழுங்குமுறை, இரண்டையும் பார்த்தோம்.  நான் அனைத்திற்கும் முதன்மையாக, பாரதத்தின் பராக்கிரமம் வாய்ந்த இராணுவத்துக்கும், ஆயுதப்படைகளுக்கும், நம்முடைய உளவுப்படைப் பிரிவினருக்கும், நமது விஞ்ஞானிகளுக்கும், அனைத்து பாரதவாசிகள் தரப்பிலிருந்து, சல்யூட் செய்கிறேன். 

நம்முடைய வீரம் நிறைந்த இராணுவத்தினர், ஆப்பரேஷன் சிந்தூரின் இலக்குகளை சாதிப்பதற்காக, எல்லையற்ற வீரத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். 

நான் அவர்க்ளின் வீரத்தை, அவர்களின் மனோதைரியத்தை, அவர்களின் உறுதிப்பாட்டை, இன்று, அர்ப்பணம் செய்கிறேன், நம் தேசத்தின் அனைத்து அன்னையர்களுக்கும், தேசத்தின் அனைத்து சகோதரிகளுக்கும், மேலும், தேசத்தின் ஒவ்வொரு மகளுக்கும், இந்தப் பராக்கிரமத்தை சமர்ப்பணம் செய்கிறேன். 

நண்பர்களே, ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியன்று, பஹல்காமிலே, பயங்கரவாதிகள் வெளிப்படுத்திய காட்டுமிராண்டித்தனம் வாயிலாக, அவர்கள், தேசத்தையும் உலகையும் உலுக்கிப் போட்டார்கள்.  

விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்த, ஒன்றுமறியாத அப்பாவிக் குடிமக்களை, அவர்களின் மதம் என்னவென்று கேட்டு, அவர்களின் குடும்பத்தாருக்கு முன்பாகவே, அவர்களின் குழந்தைகளின் முன்பாக, ஈவிரக்கமில்லாமல் கொன்று போடுவது, இது பயங்கரவாதத்தின், மிகவும், பயங்கரமான கோரமுகம். 

கொடூரமான பக்கம்.  இது தேசத்தின் நல்லிணக்கத்தைத் தகர்க்கும், பயங்கரமான முயற்சியும் கூட.  என்னைப் பொறுத்தவரை, தனிப்பட்ட முறையிலே, இந்த வலி மிகவும் பெரியதாக இருந்தது.  இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, நாடு அனைத்தும், அனைத்துக் குடிமக்களும், சமூகம் அனைத்தும், அனைத்துப் பிரிவும், அனைத்து அரசியல் கட்சிகளும், ஒரே குரலெடுத்து, பயங்கரவாதத்துக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்க, ஒன்றுபட்டார்கள். 

நாம் பயங்கரவாதிகள் அனைவரையும், மண்ணோடு மண்ணாக்கி அழிக்க, நமது இராணுவத்தினருக்கு அனைத்து சுதந்திரத்தையும் அளித்து விட்டோம்.  அந்த வகையில் இன்று, அனைத்துத் பயங்கரவாதிகளும், அனைத்துத் பயங்கரவாத அமைப்புகளும், தெரிந்து கொண்டு விட்டார்கள், நம்முடைய சகோதரிகள் மகள்களுடைய, வகிடுகளிலிருந்து, சிந்தூரத்தை அகற்றுவதன், பலன் என்னவாக இருக்கும் என்று. 

நண்பர்களே, ஆப்பரேஷன் சிந்தூர், இது வெறும் பெயர் அல்ல.  இது தேசத்தின் கோடானுகோடி மக்களுடைய, உணர்வுகளின் பிரதிபிம்பமாகும்.  ஆப்பரேஷன் சிந்தூர், நியாயத்துக்கான அகண்ட சபதமேற்பாகும்.  

மே மாதம் 6ஆம் தேதி இரவு வேளையிலே, மே 7ஆம் தேதி காலையிலே, ஒட்டுமொத்த உலகத்தாரும், நாம் சூளுரைத்ததன், விளைவுகள் என்னவென்று கண்டார்கள்.   பாரதநாட்டின் சேனைகள், பாகிஸ்தானத்திலே, பயங்கரவாதிகள் பதுங்குமிடங்களிலே, பயங்கரவாதிகள் பயிற்சி மையங்களிலே, துல்லியமாகத் தாக்கினார்கள். 

பயங்கரவாதிகள், கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார்கள், நம் பாரதம், இத்தனை பெரிய முடிவை எடுப்பார்கள் என்று.  ஆனால், தேசம் எப்போது ஒன்றுபட்டு விட்டதோ, தேசத்திற்கே முதன்மை என்ற உணர்வால் நிரம்பி இருக்கிறதோ, அனைத்திற்கும் மேலாக தேசமாகிறது, அப்போது, தீவிரமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.  அதன் விளைவுகளை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

பாகிஸ்தானின் பயங்கரவாத மறைவிடங்களின் மீது, பாரதத்தின் ஏவுகணைகள் தாக்குதல் தொடுத்த போது, பாரதத்தின் ட்ரோன்கள் தாக்கிய போது, பயங்கரவாத அமைப்புகளின் கட்டிடங்கள் மட்டுமல்ல, மாறாக, அவர்களின் நெஞ்சுரமும் நிலைகுலைந்து போனது.  பஹாவல்புர், மற்றும் முரீத்கே போன்ற, பயங்கரவாத முகாம்கள், ஒரு வகையிலே, உலகளாவிய பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக இருந்தன. 

உலகின் எந்த மூலையிலும் கூட, பெரிய பயங்கரவாத தாக்குதல் நடக்கும் போதும், அது ஒன்பது பதினொன்றாக இருக்கட்டும், அல்லது லண்டன் ட்யூப் குண்டுவெடிப்புகளாகட்டும், அல்லது பாரதத்திலே, பல பத்தாண்டுகளாக நடந்த, பெரியபெரிய பயங்கரவாத தாக்குதல்களாகட்டும், இவையனைத்தின் தொடர்பும், ஏதோ ஒரு வகையிலே, பயங்கரவாதத்தின் இந்த முகாம்களோடு தான் இணைந்து வந்திருக்கிறது. 

பயங்கரவாதிகள், நம்முடைய சகோதரிகளின் சிந்தூரத்தை அழித்தார்கள், ஆகையால், பாரதம், பயங்கரவாதிகளின் இந்த தலைமையகத்தை வேரறுத்து விட்டோம்.  பாரதத்தின் இந்த தாக்குதல்களிலே, 100க்கும் மேற்பட்ட, கொடூரமான பயங்கரவாதிகள், கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.  பயங்கரவாதத்தின் பல தலைவர்கள், கடந்த 25-30 ஆண்டுகளாக, சுதந்திரமாக, பாகிஸ்தானிலே திரிந்து கொண்டிருந்தார்கள், இவர்கள் பாரதத்திற்கு எதிராக சதிகள் செய்து கொண்டிருந்தார்கள், அவர்களை பாரதம், சொடுக்குப் போட்டு முடித்து விட்டது.

நண்பர்களே, பாரதத்தின் இந்தச் செயல்பாட்டால், பாகிஸ்தானம், கடுமையான ஏமாற்றத்தால் சூழப்பட்டு விட்டது, அதிர்ச்சியில் ஆழந்தது, செய்வதறியாமல் திகைத்தது, மேலும், இந்த திகைப்பு காரணமாக, அவர்கள் மேலும் ஒரு வெறிச்செயலில் ஈடுபட்டார்கள்.

  பயங்கரவாதிகளுக்கு எதிரான, பாரதத்தின் நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு தருவதற்கு பதிலாக, பாகிஸ்தானம், பாரதத்தின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது, பாகிஸ்தானம், நமது பள்ளிகள் கல்லூரிகளின் மீதும், குருத்வாராக்களின் மீது, கோயில்கள் மீது, சாதாரண குடிமக்களின் வீடுகளைக். குறிவைத்துத் தாக்கினார்கள், பாகிஸ்தானம், நமது இராணுவ முகாம்களின் மீது தாக்குதல் தொடுத்தது, ஆனால் இதிலும் கூட, பாகிஸ்தானத்தின் முகத்திரை கிழிக்கப்பட்டது. 

உலகமே பார்த்தது, அதாவது எப்படி, பாகிஸ்தானத்தின் ட்ரோன்களும், பாகிஸ்தானத்தின் ஏவுகணைகளும், பாரதத்தின் முன்பாக துரும்புகளைப் போல நொறுங்கின என்பதை.  பாரதத்தின் சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு முறைகள், அவற்றை வானிலேயே தவிடுபொடியாக்கி விட்டன. 

பாகிஸ்தானம் அடுத்ததாக, எல்லையின் மீது போர் தொடுத்தது, ஆனால் பாரதம், பாகிஸ்தானத்தின் மையப்பகுதியிலேயே தாக்குதல் தொடுத்தது.  பாரத நாட்டின் ட்ரோன்கள், பாரத நாட்டின் ஏவுகணைகள், மிகத் துல்லியத்தோடு இலக்குகளைச் சென்று தாக்கின.  பாகிஸ்தானியர்களின் விமானப்படையின், விமானத் தளங்களுக்கு, நாசத்தை ஏற்படுத்தின, இவை குறித்து பாகிஸ்தானம் பீற்றிக் கொள்வது வழக்கம்.  பாரதம் முதல் மூன்று தினங்களிலேயே , பாகிஸ்தானத்தை எந்த அளவுக்கு அழித்து விட்டது என்றால், இதைப் புரிந்து கொள்ளக்கூட அவர்களால் முடியவில்லை.

ஆகையாலே, பாரதத்தின் ஆக்ரோஷமான செயல்பாட்டிற்குப் பிறகு, பாகிஸ்தானம், தப்பித்துக் கொள்ளும் வழியைத் தேட ஆரம்பித்தது.  பாகிஸ்தானம் உலகம் எங்கிலும், அழுத்தத்தைக் குறைக்க வேண்டி மன்றாடிக் கொண்டிருந்தது.  மிக மோசமான வகையில் அடிவாங்கிய பிறகு, இந்தக் கட்டாயம் காரணமாகவே, மே 10ஆம் தேதி பிற்பகலிலே, பாகிஸ்தானிய சேனையானது, நமது டிஜி எம் ஓவை தொடர்பு கொண்டார்கள். 

அதற்குள்ளாக நாம், பயங்கரவாதிகளின் கட்டமைப்புக்களை, பெரிய அளவில் அழித்தொழித்து விட்டிருந்தோம்.  நாம் பயங்கரவாதிகளுக்கு மரணத்தைப் பரிசாக அளித்திருந்தோம்.  பாகிஸ்தானுடைய நாட்டுக்குள்ளே குடியமர்த்தப்பட்ட, பயங்கரவாத முகாம்களை நாம், இடிபாடுகளாக ஆக்கியிருந்தோம். 

ஆகையால், பாகிஸ்தானத்தின் தரப்பிலிருந்து, வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது, பாகிஸ்தான் தரப்பிலிருந்து, கூறப்பட்ட போது, எங்கள் தரப்பிலிருந்து, இனி வருங்காலத்தில் எந்தவொரு பயங்கரவாத செயல்பாடுகளோ, வேறு எந்த, இராணுவ வெறிச்செயலிலோ ஈடுபட மாட்டோம் என்ற போது, அப்போது பாரதமும் கூட, வேண்டுகோளைப் பரிசீலித்தது. 

நான் மீண்டும் உங்களிடம் உரைக்கிறேன், நாம் பாகிஸ்தானத்தின் பயங்கரவாத, மற்றும் இராணுவ மையங்களின் மீது, நமது பதில் நடவடிக்கைகளை, இப்போது, நிறுத்தி மட்டும்,  வைத்திருக்கிறோம்.  இனிவரும் நாட்களிலே, நாம் பாகிஸ்தானத்தின் அனைத்து நடவடிக்கைகளையும், இந்த உரைகல்லில் உரைத்துப் பார்ப்போம், அவர்கள் ஒழுங்காக நடக்கிறார்களா என்றாய்வோம். 

நண்பர்களே, பாரதத்தின் முப்படைகளும், நமது விமானப்படை, நமது தரைப்படை, மற்றும் நமது கடற்படை, நமது எல்லையோரப் பாதுகாப்புப் படை, பி எஸ் எஃப், பாரதத்தின் ரிசர்வ் காவல் படை, தொடர்ந்து, விழிப்போடு இருக்கின்றன. 

துல்லியத் தாக்குதல், மற்றும் விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு, இப்போது, ஆப்பரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்திற்கு எதிராக, பாரதத்தின் கொள்கையாகும்.  ஆப்பரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்திற்கு எதிரான, போரிலே, ஒரு புதிய எல்லைக்கோட்டைக் கிழித்திருக்கிறது, ஒரு புதிய அளவுகோல், புதிய நிலையை தீர்மானம் செய்திருக்கிறது. 

முதலாவதாக, பாரதத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும்.  நாம் நமக்கு உகந்த வகையிலே, நாம் தீர்மானம் செய்து, கண்டிப்பாக பதிலடி கொடுப்போம்.  எங்கெல்லாம் பயங்கரவாதத்தின் வேர்கள் வெளிப்படுகின்றதோ, அங்கெல்லாம் சென்று நாங்கள் பயங்கரமான நடவடிக்கையை மேற்கொள்வோம். 

இரண்டாவதாக, எந்த ஒரு அணு ஆயுத பயமுறுத்தலையும், பாரதம் பொறுத்துக் கொள்ளாது.  அணுஆயுத மிரட்டலில் தஞ்சம் புகுந்து தழைத்து வரும் பயங்கரவாத முகாம்களின் மீது, பாரதம் உறுதியான, மற்றும் தீர்மானமான தாக்குதலைத் தொடுக்கும். 

மூன்றாவதாக, நாம் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் அரசாங்கம், மற்றும், பயங்கரவாதத் தலைவர்களையும், வேறுவேறாகப் பார்க்க மாட்டோம்.  ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைப்படி, உலகம், பாகிஸ்தான் பற்றிய இந்த வெறுக்கத்தக்க உண்மையை மீண்டும் கவனித்தது.  இறந்துபட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகள் நடந்த வேளையிலே, பாகிஸ்தானிய சேனையின் பெரிய பெரிய அதிகாரிகள் பங்கெடுத்துக் கொண்டார்கள். 

பயங்கரவாதத்திற்கு அதிகாரபூர்வ அங்கீகாரத்திற்கான, இது மிகப்பெரிய சான்றாகும்.  நாம் பாரதம், மற்றும் நமது குடிமக்களை, அனைத்து வகையான அபாயங்களிலிருந்தும் காப்பாற்ற, தொடர்ந்து தீர்மானமான முடிவுகளை எடுத்து வருவோம்.

நண்பர்களே, யுத்த களத்திலே நாம் ஒவ்வொரு முறையும், பாகிஸ்தானத்தை மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறோம்.  ஆனால் இந்த முறை, ஆப்பரேஷன் சிந்தூரோடு, ஒரு புதிய பரிமாணத்தை இணைத்திருக்கிறோம்.  நாம் பாலைவனங்களிலும் மலைகளிலும், நமது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறோம், அதோடு கூடவே, நவீனகால போர்முறைகளிலும் கூட, நமது திறமைகளை நிரூபித்திருக்கிறோம். 

இந்த ஆப்பரேஷன் செயல்பாட்டிலே, நமது இந்தியத் தயாரிப்பு ஆயுதங்களின் நம்பகத்தன்மை, நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  இன்று உலகமே கவனித்துக் கொண்டிருக்கிறது, 21ஆம் நூற்றாண்டின் போர்முறையிலே, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், இவற்றுக்கான வேளை வந்து விட்டது.

நண்பர்களே, அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கு எதிராக, நாமனைவரும், ஒன்றுபட்டு இருப்பது, நமது ஒற்றுமை, நமது மிகப்பெரிய சக்தியாகும்.  கண்டிப்பாகச் சொல்கிறேன், இந்த யுகம், யுத்தத்திற்கானது அல்ல, ஆனால், இந்த யுகம், பயங்கரவாதத்திற்கானதும் கிடையாது.  பயங்கரவாதத்திற்கு எதிராக, பூஜ்யம் சகிப்புத்தன்மை, இதுவே ஒரு சிறப்பான உலகிற்காக உத்திரவாதமாகும்.

நண்பர்களே, பாகிஸ்தானிய இராணுவம், பாகிஸ்தானிய அரசாங்கம், எந்த வகையிலே, பயங்கரவாதத்தை அரவணைத்து ஆதரிக்கிறதோ, அது என்றாவது ஒரு நாள், பாகிஸ்தானுக்கே முடிவு கட்டிவிடும்.  பாகிஸ்தானம் தப்பிக்க வேண்டும் என்றால், அது தனது, பயங்கரவாத கட்டமைப்புக்களை சுத்தமாக அகற்றியே ஆக வேண்டும். 

இதைத் தவிர, அமைதிக்கான வேறு எந்த வழியுமே இல்லை.  பாரதம் தனது முடிவில், தீர்மானமாக இருக்கின்றது, பயங்கரவாதம், மற்றும் பேச்சுவார்த்தை, ஒரே நேரத்தில் நடைபெற முடியாது.  பயங்கரவாதம், மற்றும் வர்த்தகம், ஒரே நேரத்தில் ஈடுபட முடியாது.   மேலும், தண்ணீர் மற்றும் ரத்தமும் கூட, ஒன்றாகப் பெருகியோட முடியாது.

நான் இன்று, உலக சமுதாயத்திடமும் கூற விரும்புகிறேன், எங்களுடைய வெளிப்படையான கொள்கை இதுதான், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால், அது பயங்கரவாதம் பற்றியதாகவே இருக்கும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீரம், பி ஓ கே, இதைப் பற்றித் தான் இருக்கும். 

பிரியமான நாட்டுமக்களே,

இன்று புத்த பூர்ணிமை.  பகவான் புத்தர் நமக்கு, அமைதிக்கான பாதையைக் காட்டியிருக்கிறார். அமைதிக்கான பாதையும் கூட, சக்தியைக் கடந்து தான் பயணிக்கிறது.  மனித சமூகம், அமைதி மற்றும் நல்வளங்களை நோக்கிப் பயணிக்கட்டும்,

அனைத்து இந்தியர்களும் அமைதியுடன் வாழ வேண்டும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவுகளை நிறைவேற்ற வேண்டும், இதன் பொருட்டு, பாரதம் சக்தியுடையதாக ஆவது அவசியமானது, மேலும் தேவை ஏற்பட்டால், இந்த சக்தியைப் பயன்படுத்துவதும் அவசியமானதாகும்.  அதோடு கடந்த சில நாட்களிலே, பாரதம் இதைத் தான் செய்து காட்டியது.

நான் மீண்டும் ஒருமுறை, பாரதத்தின் சேனைகள், மற்றும் ஆயுதப்படைகளுக்கு, சல்யூட் செய்கிறேன்.  பாரதவாசிகளான நமது நம்பிக்கை, அனைத்து குடிமக்களின் ஒற்றுமைக்கான சபதம், சங்கல்பம், நான் இவற்றைப் போற்றுகிறேன்.

பலப்பல நன்றிகள்.

பாரத் மாதா கீ ஜய்
பாரத் மாதா கீ ஜய்
பாரத் மாதா கீ ஜய்.


பிரதமர் மோடியின் உரை : தமிழ்க் குரலில்…

நம் பெண்களின் குங்குமத்தை பறிக்க நினைத்தால்… என்ன நடக்கும் என்பதை உலகம் உணர்ந்து கொண்டது: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இப்போது புரிந்துகொண்டிருப்பார்கள்! பிரதர் மோடியின் ஆவேச உரை! மே 12ம் தேதி இரவு ஊடகங்கள் மூலம் பிரதமர் மோடி ஆற்றிய உணர்ச்சிகரமான உரையின் தமிழ் வடிவம்

தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்

#ஆபரேஷன்_சிந்தூர் #narendramodi #operationsindoor #பிரதமர்மோடி #மோடி

#News_Videos #தினசரி_செய்திகள் #ஆபரேஷன்சிந்தூர் #breakingnews

சோழவந்தானில் ஜெனக நாராயண பெருமாள் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கோலாகலம்!

chozhavanthan perumal in vaigai river - 2026

சோழவந்தானில் சித்திரை திருவிழா கோலாகலம்; எம் வி எம் குடும்பத்தினர் சார்பில் கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு!

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் சித்திரத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது முதல் முறையாக தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியதால் வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கள்ளழகரை வரவேற்றனர்

முன்னதாக சோழவந்தான் காவல் நிலையம் தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளழகரை வரவேற்று மண்டகப்படி நடைபெற்றது அதனை தொடர்ந்து சோழவந்தான் எம் வி எம் குடும்பத்தினர் சார்பில் மருது மகாலில் கள்ளழகரை வரவேற்று சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து திருக்கோவில் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது

அதனைத் தொடர்ந்து சனீஸ்வரன் கோவிலில் கள்ளழகர் எதிர்சேவை நடைபெற்றது கோவில் அர்ச்சகர் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர் அதனை அடுத்து மருது பெட்ரோல் பங்கில் கள்ளழகரை வரவேற்ற பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் மணி முத்தையா சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர் வள்ளி மயில் தொழிலதிபர் எம் வி எம் பள்ளி தாளாளர் டாக்டர் மருது பாண்டியன் ஆகியோர் கள்ளழகரை வரவேற்றனர்

அங்கும் கோவில் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது தொடர்ந்து பச்சை பட்டு உடன் தங்க குதிரை வாகனத்தில் முதல் முறையாக சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு இறங்கினார்

பல்லாயிரக்கணக்கான மக்கள் கோவிந்தா கோஷம் எழுப்பி கள்ளழகரை வரவேற்றனர் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

இனி, பயங்கரவாதம், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியே பாகிஸ்தானுடன் பேச்சு! பதிலடி பயங்கரமாக இருக்கும்!

pm modi speech about operation sindoor - 2026

அன்பிற்குரிய நாட்டு மக்களுக்கு வணக்கம். நாம் அனைவரும் கடந்த சில தினங்களில் நாட்டின் திறனையும் அதன் கட்டுப்பாட்டையும் பார்த்தோம்.

நான் முதலில் பாரதத்தின் வீரம் மிகுந்த படைகளுக்கும் ஆயுதம் தாங்கிய சேனைகளுக்கும் நமது உளவுத்துறையினருக்கும் நமது விஞ்ஞானிகளுக்கும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தரப்பிலிருந்தும் வணக்கம் செலுத்த விரும்புகிறேன்.

நம்முடைய வீரம் மிகுந்த ராணுவ வீரர்கள் ஆப்ரேஷன் சிந்தூரின் இலக்குகளை அடைவதற்காக எல்லையில்லாத வீரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நான் அவர்களது வீரத்திற்கும், துணிச்சலுக்கும், பராக்கிரமத்திற்கும் வணக்கம் செலுத்துகிறேன். நாட்டின் ஒவ்வொரு அன்னைக்கும், ஒவ்வொரு சகோதரிக்கும் மற்றும் ஒவ்வொரு மகளுக்கும் இந்த பராக்கிரமத்தை சமர்ப்பிக்கிறேன்.

நண்பர்களே, ஏப்ரல் 22ம் தேதி பகல்காமில் பயங்கரவாதிகள் காட்டிய அந்த காட்டுமிராண்டித்தனம் நம் நாட்டையும், உலகையும் அதிர்ச்சியடையச் செய்தது. விடுமுறை காலத்தை கழிக்கவந்த குற்றமற்ற அப்பாவி குடிமகன்களை அவர்களது மதம் என்ன என்று கேட்டு,,,, அவர்களது குடும்பத்திற்கு முன்னே,,,, அவர்களது குழந்தைகளுக்கு முன்னே இரக்கமில்லாமல் கொன்றனர்.

இது பயங்கரவாதத்தின் மிகவும் வெறுக்கத்தக்க முகமாகும். இது கொடூரம் மிகுந்தது. இந்தியாவின் ஒற்றுமையை உடைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது, எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த வலியை தந்தது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முழு நாடும் ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு வர்கமும், ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரே குரலில் பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பதில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தின.

நாங்கள் பயங்கரவாதிகளை மண்ணோடு மண்ணாக்க, இந்தியப் படைகளுக்கு முழு அனுமதி கொடுத்தோம். இன்று ஒவ்வொரு பயங்கரவாதியும், பயங்கரவாதத்தினால் ஏற்படும் தொல்லையை புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதாவது, நமது சகோதரிகள், மகள்கள் நெற்றியில் உள்ள குங்குமத்தை அழிப்பதற்கான அந்த செயலின் பிரதிபலன் என்னவாக இருக்கும் என்று அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள்.

நண்பர்களே, ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு ‍பெயர் மட்டுமல்ல இந்த நாட்டின் கோடி கோடி மக்களின் எண்ணங்களின் ஒரு பிரதிபலிப்பு. ஆப்ரேஷன் சிந்தூர் நியாயத்தை நிலை நாட்டுவதற்கான ஒரு உறுதிமொழி. மே 6 ம் தேதி இரவு, மே 7 ம் தேதி காலை இந்த முழு உலகமும் அந்த உறுதியின் முடிவு என்ன என்பதை கண்டார்கள். இந்தியாவின் ராணுவம், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களின் மீது அவர்களுடைய பயிற்சி மையங்கள் மீது சரியாக தாக்குதல் நடத்தினார்கள்.

பயங்கரவாதிகள் தங்களுடைய கனவில்கூட, பாரதம் இத்தகைய முடிவு எடுக்கும் என்று யோசித்திருக்க மாட்டார்கள். ஆனால், நாடு ஒன்றிணைந்து செயல்பட்டபோது, நாடுதான் முதலில் என்ற எண்ணம் நிரம்பி வழிந்து நாட்டின் நலனே முதலில் என்ற எண்ணம் ஏற்பட்டது. அடிப்படையான முடிவு எடுக்கும்போது, அது சரியான முடிவுகளை கொண்டுவந்து தருகிறது. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களின் மீது பாரதம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியபோது, பாரதம் ட்ரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தியபோது, பயங்கரவாதக் குழுக்களின் கட்டிடங்கள் மட்டுமல்ல, அவற்றின் நம்பிக்கையும் தவிடுபெடியானது.

பகவல்பூர் மற்றும் முரிதுகே போன்ற பயங்கரவாதிகளின் வாழ்விடங்கள், உலக பயங்கரவாதிகளின் பல்கலைக்கழகமாக விளங்கியது உலகில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் எங்கேயாவது நடந்தால், செப்டம்பர் 11 ம் தேதி அமெரிக்காவில் நடந்த தாக்குதலாக இருக்கட்டும். லண்டன் பாதாள ரயில் தாக்குதலாக இருக்கட்டும் அல்லது பாரதத்தில் பல ஆண்டுகளாக நடந்த பெரிய பெரிய பயங்கரவாத தாக்குதலாக இருக்கட்டும் இவற்றின் தொடர்பு எப்படியாவது இந்த பயங்கரவாத முகாம்களோடு இணைந்திருந்தது.

பயங்கரவாதிகள் நமது சசோதரிகளின் நெற்றி குங்குமத்தை அழித்தனர். இதனால் பாரதம் பயங்கரவாதத்தின் தலைமை பீடத்தை இப்போது அழித்திருக்கிறது. பாரதத்தின் இந்த தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமான கொடுமையான பயங்கரவாதிகள் இறந்திருக்கிறார்கள். பயங்கரவாதத்தின் பல கிளைகள் கடந்த 25-30 ஆண்டுகளாக வெளிப்படையாக பாகிஸ்தானில் உலாவி வருகிறார்கள். இவர்கள் இந்தியாவிற்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வந்தார்கள். அவர்களை பாரதம் ஒரே அடியில் அழித்து விட்டது.

நண்பர்களே,
பாரதத்தின் இந்த நடவடிக்கையின் மூலம், பாகிஸ்தான் மிகப்பெரிய நிராசையில் வீழ்ந்து விட்டது. தோல்வி மனப்பான்மையில் வீழ்ந்து விட்டது. நிலைகுலைந்து போய் விட்டது. இந்த நிலைகுலைவின் காரணமாக பாகிஸ்தான் மற்றுமொரு அசட்டுத்தனமான நடவடிக்கை எடுத்தது. பயங்கரவாதத்தின் மீது பாரதத்தின் நடவடிக்கைகளுக்கு துணைபோவதை விட்டுவிட்டு, பாகிஸ்தான் பாரதத்தின் மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் நமது பள்ளிகள், கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், சாமான்ய குடிமக்களின் வீடுகளை குறியாகக் கொண்டு தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் நம்முடைய ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஆனால், இதில்கூட பாகிஸ்தானின் முகத்திரை கிழிக்கப்பட்டது. பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் ஆகியவை பாரதத்தின் முன்னே செயலிழந்து போனதை உலகம் கண்டது. இந்தியாவின் பலம் வாய்ந்த பாதுகாப்பு கட்டுமானங்கள், அவற்றை வானிலேயே தடுத்து அழித்தன. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், தாக்குதல் நடத்த தயாராக இருந்தது. ஆனால், பாரதம் பாகிஸ்தானின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்தியது.

பாரதத்தின் ட்ரோன்கள், ஏவுகணைகள் சரியாக தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானின் விமானப்படையின் ஏர் பஸ் விமானங்களுக்கு சேதம் ஏற்படுத்தினோம். இந்த விமானங்கள் மீது பாகிஸ்தானுக்கு மிகுந்த கர்வம் இருந்தது. பாரதம் முதல் மூன்று நாட்களில் பாகிஸ்தானில் ஏற்படுத்திய அழிவுகள் எப்படிப்பட்டவை என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. எனவே, பாரதத்தின் தாக்குதல் செயல்பாடுகளுக்கு பிறகு, பாகிஸ்தான் தப்பிப்பதற்கான வழிமுறைகளை தேட தொடங்கியது. பாகிஸ்தான் உலகம் முழுவதிலும் இந்த தாக்குதலை குறைப்பதற்கான வழிமுறைகளை செய்யுங்கள் என வேண்டியது. மேலும், முற்றிலுமாக அடிவாங்கிய பின்னர், மே 10 ம் தேதி மதியத்திற்கு மேல் ஒரு கட்டாயத்தின் காரணமாக, பாகிஸ்தான் ராணுவத்தளபதி நம்முடைய ராணுவத்தளபதியோடு தொடர்பு கொண்டார். அதுவரை நாம் பயங்கரவாத கட்டமைப்புகளை மிகப்பெரிய அளவில் அழித்து விட்டோம்.

பயங்கரவாதிகளை சாவின் எல்லைக்கு கொண்டு சென்றோம். பாகிஸ்தான் தன் நெஞ்சத்தில் மறைத்து வைத்திருந்த பயங்கரவாத முகாம்களை நாம் அழித்து விட்டோம். இதனால், பாகிஸ்தானிலிருந்து பெரிய அழுகுரல் கேட்கத் தொடங்கியது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து இது சொல்லப்பட்டபோது, அதாவது, அவர்களது தரப்பிலிருந்து பயங்கரவாத தாக்குதலோ, அல்லது ராணுவத்தின் மூலம் அசட்டுத்தனமான தாக்குதல்களோ இனிமேல் இருக்காது என்று சொன்னபோது, உடனே, பாரதம் அதை பற்றி யோசனை செய்தது.

நான் மீண்டும் சொல்கிறேன். பாகிஸ்தானின் பயங்கரவாத ராணுவ முகாம்கள் மீது எங்களுடைய பதிலடி நடவடிக்கைகள் இப்போது சிறிதுகாலத்திற்கு நிறுத்தப்பட்டிருக்கிறது. வருகிற நாட்களில் பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கையும் நாங்கள் தீவிரமாக கண்காணிப்போம். அது எந்த மாதிரியான வழிமுறைகளை பின்பற்றுகிறது என்பதை பார்ப்போம்.

நண்பர்களே,
பாரதத்தின் மூன்று படைகளும், நம்முடைய விமானப்படை, நம்முடைய தரைப்படை, கடற்படை, நம்முடைய எல்லைப் பாதுகாப்புப்படை, பாரதத்தின் துணை ராணுவப்படை அனைத்தும் எப்போதும் தயார்நிலையில் இருக்கின்றன. சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் வான்வழி தாக்குதலுக்கு பிறகு இப்போது ஆப்ரேஷன் சிந்தூர் பாரதத்தின் வழிமுறையாகி விட்டது. ஆப்ரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு புதிய கோட்டை கிழித்துள்ளது. ஒரு புதிய அளவுகோல், ஒரு புதிய தரக்கட்டுப்பாடு உருவாகி இருக்கிறது.

முதலில், பாரதத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தால் அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். நாங்கள் எங்களுடைய வழிமுறையில், எங்களுடைய விதிமுறைகளுக்கேற்ப, பதிலடி தருவோம். பயங்கரவாதத்தின் வேர்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் சென்று கடுமையான நடவடிக்கை எடுப்போம்.

இரண்டாவதாக, பாரதம் அணுஆயுத தாக்குதல் என்ற மிரட்டலையெல்லாம் பொருத்துக்கொள்ளாது. அணுஆயுத தாக்குதல் என்கின்ற மிரட்டலோடு செயல்படுகின்ற பயங்கரவாத முகாம்கள் மீது பாரதம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்.

மூன்றாவதாக, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு மற்றும் பயங்கரவாத குழுக்கள் இவற்றை நாங்கள் வேறுபடுத்தி பார்க்கவில்லை. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம், உலகம் பாகிஸ்தானின் உண்மையான ரூபம் என்ன என்று பார்த்திருக்கிறது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது, பாகிஸ்தான் ராணுவத்தின் மிகப்பெரிய அதிகாரிகள் அதில் கலந்துகொண்டனர்.

ஒரு நாட்டால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத்திற்கு இதைவிட பெரிய சாட்சி என்ன இருக்கிறது. நாங்கள் பாரதம் மற்றும் எங்களுடைய குடிமக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாதவண்ணம் திடமான முடிவுகளை எடுப்போம்.

நண்பர்களே, யுத்த பூமியில் நாங்கள் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை தவிடுபொடியாக்கி இருக்கிறோம். மேலும், இந்த முறை ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு புதிய கோணத்தை சேர்த்திருக்கிறது. நாங்கள் பாலைவனங்கள், மலைகள் மீது எங்களுடைய திறமையை மிக பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறோம். மேலும், நியு ஏஜ் வார் பேரில் எங்களது திறமையை காண்பித்திருக்கிறோம். இந்த ஆப்ரேஷன் மூலமாக நம்முடைய இந்தியாவிலேயே தயாரிப்போம் முறையில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் திறமை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 21 ம் நூற்றாண்டின் போர் முறைகளில் இந்தியாவின் போர்க்கருவிகள் எப்படி இருக்கின்றன என்பதை இன்று உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

நண்பர்களே
இந்த மாதிரியான பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் எப்போதும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். நம்முடைய ஒற்றுமை, நம்முடைய மிகப்பெரிய சக்தியாகும் உண்மையில் இந்த யுகம், போருக்கானது அல்ல, ஆனால் இந்த யுகம் பயங்கரவாதத்திற்கானதும் அல்ல, பயங்கரவாதத்திற்கு எதிரான Zero Tolerance, ஒரு நல்ல உலகத்திற்கு உறுதி அளிக்கிறது.

நண்பர்களே
பாகிஸ்தானின் ராணுவம், பாகிஸ்தானின் ஆட்சி எந்த வகையில் பயங்கரவாதத்திற்கு துணைபோகின்றதோ அது ஒருநாள் பாகிஸ்தானை முடிவுக்கு கொண்டுவரும்

பாகிஸ்தான் தப்பிக்கவேண்டும் என்றால், தம் நாட்டில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை சுத்தப்படுத்தவேண்டும். இதைதவிர, அமைதிக்கு வேறு வழியே இல்லை. பாரதத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. பயங்கரவாதமும் அமைதிப் பேச்சுவார்த்தையும் ஒருங்கே செல்லவியலாது. பயங்கரவாதமும், வாணிகமும் ஒருங்கே செல்லவியலாது. மேலும், தண்ணீரும், ரத்தமும் ஒரேசேர பாய முடியாது.

நான் இன்று உலக சமுதாயத்திற்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எங்களுடைய அறிவிக்கப்பட்ட நீதி என்னவென்றால், பாகிஸ்தானுடன் ஒருவேளை பேச்சுவார்த்தை நடந்தால் அது பயங்கரவாதம் பற்றிதான் இருக்கும். ஒருவேளை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால் அது பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கின்ற காஷ்மீரை பற்றியதாக இருக்கும்.

அன்புக்குரிய நாட்டுமக்களே! இன்று புத்த பூர்ணிமா. பகவான் புத்தர் நமக்கு அமைதியின் பாதையை காட்டியிருக்கிறார். அமைதியின் பாதை பலத்தோடுதான் செல்கிறது. மனிதகுலம் அமைதி மற்றும் வளர்ச்சியின் பாதையில் நடக்கவேண்டும். ஒவ்வொரு பாரதவாசியும் அமைதியோடு வாழ வேண்டும்.

வளர்ச்சியடைந்த பாரதம் என்கின்ற நம்முடைய கனவு நிறைவேறவேண்டும். இதற்காக பாரதம் சக்திசாலி நாடாக இருக்கவேண்டியது அவசியம். மேலும் ‍தேவை ஏற்படும்போது இந்த சக்தியை நாம் பயன்படுத்த வேண்டும். மேலும் கடந்த சில நாட்களில் பாரதம் இதைதான் செய்திருக்கிறது.

நான் மீண்டும் ஒருமுறை பாரதத்தின் ராணுவம் மற்றும் ஆயுதப்படைகளுக்கு வணக்கம் செலுத்துகிறேன். இந்த பாரத குடிமக்களின் நம்பிக்கைக்கும், ஒற்றுமைக்கும் வணக்கம் செலுத்துகிறேன்

நன்றி

பாரத் மாதாகி ஜெய்
பாரத் மாதாகி ஜெய்
பாரத் மாதாகி ஜெய்


ஆபரேஷன் சிந்தூர் பற்றி பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் தமிழாக்கம்…


பேரையூர் அருகே சாப்டூர் ஆற்றில் இறங்கிய பெருமாள்!

saptoor azhagar atril irngkuthal - 2026

உசிலம்பட்டி: பேரையூர் அருகே பழமைவாய்ந்த பழையூர் திருவேங்கட பெருமாள் கோவிலின் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக பச்சை பட்டு உடுத்தி சாப்டூர் ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பழையூர் கிராமத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த திருவேங்கட பெருமாள் கோவிலின் இரண்டு நாள் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று நடைபெற்றது., முன்னதாக திருவேங்கட பெருமாள் கோவிலில் குதிரை மீது காட்சி தந்த கள்ளழகருக்கு பழையூர், சாப்டூர், குடிப்பட்டி, வடகரைபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து பக்தர்கள் கொண்டு வந்த நெல்மணி மாலை, பணமாலை, துளசி மாலை, பூ மாலை உள்ளிட்ட பல்வேறு மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து கை தாங்களாக சாப்டூர் ஆற்றிற்கு சுமந்து செல்லப்பட்ட கள்ளழகர் பச்சை பட்டாடை அணிவிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களின் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோசங்களுடன் சாப்டூர் ஆற்றில் எழுந்தருளினார்.

தொடர்ந்து, குடிப்பட்டியில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் இருந்து மீனாட்சியம்மன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வடகரைப்பட்டியில் கள்ளழகர் மீனாட்சியம்மன் எதிர்சேவை நடைபெறும் என விழா கமிட்டியினர் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் இருக்க வேண்டுமானால்… மிரட்டல் விடுத்த பிரதமர் மோடி!

pm modi speech about operation sindoor - 2026
  • பாகிஸ்தான் இருக்க வேண்டுமானால்… பிரதமர் மோடி மிரட்டல் பேச்சு!
  • உலக நாடுகளிடம் கெஞ்சியது பாகிஸ்தான்
  • சேட்டை செய்ய மாட்டோம் என்றது பாகிஸ்தான்:
  • அமெரிக்கா தலையீடு இல்லை: 

நாட்டின் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் குலைக்கும் முயற்சியாக பஹல்காம் தாக்குதல் நடந்தது. நாட்டையே உலுக்கிய அந்த தாக்குதலில் அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் அல்ல. நாட்டு மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு மற்றும் அது நீதியை வழங்குவதற்கான உத்தரவாதம் 

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் பயிற்சி மையங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா இப்படி ஒரு முடிவை எடுக்கும் என பயங்கரவாதிகள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்

பல தசாப்தங்களாக இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டும் பயங்கரவாத இயக்க தலைவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வந்தனர். ஒரே தாக்குதலில் அவர்களை இந்தியா அகற்றியுள்ளது. நண்பர்களே, இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் அதிருப்தி, விரக்தி அடைந்துள்ளது.

மகள்களின், தாய்மார்களின் குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பதை உலகம் அறிந்தது.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை ஆதரிக்காமல், இந்தியாவை தாக்கியுள்ளது பாகிஸ்தான்.

நமது பள்ளி, கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், வீடுகள் ஆகியவற்றை இலக்கு வைத்து தாக்கியுள்ளது.

பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்தியா அழித்ததை உலகமே பார்த்தது.

பாகிஸ்தான் எதிர்பார்க்காத வகையில் அங்கு பலத்த சேதத்தை இந்தியா கொடுத்துள்ளது. அதனால்தான், இந்தியாவின் ஆவேசமான தாக்குதலை தாங்க முடியாமல், தப்பிக்கப் பார்த்த பாகிஸ்தான், உலக நாடுகள் தலையிட கெஞ்சியது.

கடந்த 10ம் தேதி நம் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரை தொடர்புகொண்ட பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை கோரியது. இனி ராணுவ சேட்டைகள், பயங்கரவாத செயல்கள் இருக்காது எனக் கூறியது. இந்தியா அதனை பரிசீலித்து தற்போதைக்கு நாம் தாக்குதலை நிறுத்தியுள்ளோம்.

பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் விதத்தை பார்க்கும் போது, ஒருநாள் அந்த நாட்டையே அது அழித்துவிடும். 

பாகிஸ்தான் இருக்க வேண்டும் என அவர்கள் நினைத்தால், பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும். 

எந்த அணு ஆயுத மிரட்டலும் ஏற்றுக் கொள்ளப்படாது. இது பயங்கரவாதத்திற்கான சகாப்தம் அல்ல.

‘நமது படைகள், உளவுத்துறை நிறுவனங்கள், விஞ்ஞானிகளுக்கு வணக்கம் செலுத்த விரும்புகிறேன்.. நமது ராணுவப் படைகளைப் பாராட்டுகிறேன்.

‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதல். பயங்கரவாதிகள் மதத்தின் அடிப்படையில் மக்களைக் கொன்றனர்… இது எனக்கு தனிப்பட்ட வலியாக இருந்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, முழு தேசமும் ஒரே குரலில் பேசியது’

நமது பெண்களின் நெற்றியில் இருந்து ‘சிந்தூர்’ அகன்றால் அதன் தாக்கம் என்னவென்று பயங்கரவாதிகளுக்குத் தெரியும்

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. பயங்கரவாதமும் வணிகமும் கூட ஒரே நேரத்தில் இருக்க முடியாது

மோதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டேன் எனக் கூறி இந்தியா – பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சண்டை நிறுத்தப்பட்டது.

தண்ணீரும் ரத்தமும் ஒருசேர ஓட முடியாது. அதுபோல, பயங்கரவாதமும் அமைதிப் பேச்சு வார்த்தையும் ஒரு சேர நடத்த முடியாது. அமைதியே மிகப்பெரும் சக்தி.

உலகில் எங்கு பயங்கரவாதம் நடந்தாலும், அதில் பாகிஸ்தான் முகாம்களுக்கு பங்குண்டு; உலக பயங்கரவாதத்தின் தலைமை மையங்கள் தாக்கப்பட்டுள்ளன.

– பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இருந்து…

டெஸ்ட் போட்டிகளில் இருந்து… விடைபெற்ற விராட் கோலி! 

virat kohli retiring from test cricket - 2026

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். தாம் 14 ஆண்டு காலமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியதை சுட்டிக்காட்டி தனது ஓய்வு முடிவை அவர் அறிவித்துள்ளார்.  

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து அதிகாரபூர்வமாக ஓய்வு பெறுவதாக, ஓர் உணர்ச்சிபூர்வமான சமூக ஊடகப் பதிவு மூலம் உறுதிசெய்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்ட போது, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது எப்போதுமே சிறப்பு வாய்ந்த ஒன்று  என்று குறிப்பிட்டுள்ளார். 

கிரிக்கெட்டில் அவரது தீவிர ஆர்வம், தலைமைத்துவம் மற்றும் பங்களிப்புகள் உடற்தகுதி மற்றும் விளையாட்டில் புதிய அளவுகோல்களை அமைத்தது மட்டுமல்லாமல், டி20 கிரிக்கெட் எழுச்சியின் மத்தியில் விளையாட்டின் நீண்ட வடிவத்தில் அவருக்கு இருந்த ஆர்வத்தை மீண்டும் உயிர்ப்பித்ததன் ஒரு சகாப்தத்தின் முடிவை அவரது விலகல் குறிக்கிறது. 

கோலியின் ஓய்வு, கவுதம் கம்பீர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களிடமிருந்து மனமார்ந்த வாழ்த்துகளைப் பெற்றுள்ளது, இது விளையாட்டில் அவர் ஏற்படுத்திய தாக்கத்திற்கான பரவலான பாராட்டைப் பிரதிபலிக்கிறது. 

இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்து செல்ல உள்ள நிலையில் கோலி ஓய்வினை அறிவித்துள்ளது இப்போது பேசுபொருளாகியுள்ளது. 

விராட் கோலி, 2011ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வைத் தொடங்கினார். இந்திய அணிக்காக 123 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார் 123 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக 9,230 ரன்களைக் குவித்துள்ளார்

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்களையும், 31 அரை சதங்களையும் விளாசியுள்ளார்  இந்திய அணிக்காக ஒரு இன்னிங்சில் 254 ரன்கள் குவித்ததே கோலியின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர்.  இந்திய அணிக்காக 68 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட கோலி 40 போட்டிகளை வென்று கொடுத்தவர்

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அதிக முறை சதம் மற்றும் இரட்டை சதம் அடித்தவர் இவர். டெஸ்ட் கேப்டனாக இருந்த போது இந்திய அணிக்காக 7 முறை இரட்டை சதம் அடித்துள்ளார். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்களில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெருமையும் விராட் கோலிக்கு உண்டு

விராட் கோலியின் டெஸ்ட் போட்டிகளிலான ஓய்வு முடிவு குறித்து இந்நாள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் பலர் சமூகத் தளங்கள்ல் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். 

சச்சின் டெண்டுல்கர் தனது பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது : 

நீங்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும்போது ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறேன்.  ​​12 ஆண்டுகளுக்கு முன்பு, எனது கடைசி டெஸ்ட் போட்டியின் போது, ​​உங்கள் சிந்தனைமிக்க செயல் எனக்கு நினைவுக்கு வருகிறது. உங்கள் மறைந்த தந்தையிடமிருந்து ஒரு நூலை எனக்கு பரிசளிக்க முன்வந்தீர்கள். அது எனக்கு மிகவும் தனிப்பட்ட ஒன்று, அதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது, ஆனால் அந்தச் செயல் மனதைத் தொடும் விதமாக இருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை என்னுடன் இருந்து வருகிறது. பதிலுக்கு என்னிடம் ஒரு நூலும் இல்லை என்றாலும், நீங்கள் எனது ஆழ்ந்த பாராட்டையும் வாழ்த்துக்களையும் கொண்டுள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். விராட், உங்கள் உண்மையான மரபு, எண்ணற்ற இளம் கிரிக்கெட் வீரர்களை விளையாட்டை எடுக்க ஊக்குவிப்பதில் உள்ளது. என்ன ஒரு நம்பமுடியாத டெஸ்ட் வாழ்க்கை உங்களுக்கு இருந்தது! நீங்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு அதிகமான ரன்களை வழங்கியுள்ளீர்கள் – நீங்கள் அதற்கு ஆர்வமுள்ள ரசிகர்கள் மற்றும் வீரர்களை வழங்கியுள்ளீர்கள். மிகவும் சிறப்பு வாய்ந்த டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். – என்று கூறியுள்ளார். 

விராட் கோலியின் ஓய்வு முடிவுக்கு பிசிசிஐயும் நன்றியும் வாழ்த்தும் வெளியிட்டுள்ளது.

மக்களிடம் விளக்குகிறார் மோடி… ஆபரேஷன் சிந்தூர் பற்றி … இன்று இரவு 8 மணிக்கு!

pm modi in bihar campaign - 2026

கடந்த ஏப். 22ம் தேதி  காஷ்மீர் மாநிலம் பஹல்காமில்  பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலா சென்றிருந்த 26 அப்பாவி ஆண்கள் உயிரிழந்தனர்.  அப்போது,  அங்கிருந்த பெண்களிடம், “போய் மோடியிடம் சொல்” என்று  பயங்கரவாதிகள் எச்சரித்துவிட்டு சென்றனர். 

 இந்த தகவல் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில்,  சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி தனது  சவுதி அரேபியா நாட்டு சுற்றுப்பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு அவசர அவசரமாக நாடு திரும்பி அன்று இரவே விமான நிலையத்தின் ஒரு பகுதியில் வைத்து பாதுகாப்பு ஆலோசனை மேற்கொண்டார். 

 தொடர்ந்து இரு வாரங்கள்  எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முப்படைகளுடன் ஆலோசனை நடத்தி ராணுவத்திற்கு முழு சுதந்திரத்தையும் அளித்தார்.  சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் கழித்து மே 6ஆம் தேதி நள்ளிரவு பாகிஸ்தானில் உள்ள  9 பயங்கரவாத முகாம்களைக்  குறி வைத்து துள்ளிய தாக்குதலை இந்திய விமான படை மேற்கொண்டது.  அதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் தாக்குதல்கள் நடைபெற்றன.  இதில் பாகிஸ்தான் தரப்பில் பலத்து சேதம் ஏற்பட்டது.

 இந்த நடவடிக்கைகள் குறித்து பாரத ராணுவ அதிகாரிகளே மக்களிடம் பத்திரிகையாளர் சந்திப்புகள் மூலம் விளக்கி வந்த நிலையில்,  முதல் முறையாக நாட்டு மக்களுக்கு விளக்குவதற்காக இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி  உரையாற்ற உள்ளார்.  அவரது உரையினை தூர்தர்ஷன் சேனல்கள் மற்றும் அனைத்து வானொலி நிலையங்களும் ஒலிபரப்புகின்றன.

 இருநாட்டு ராணுவ நடவடிக்கைகளும் இரு தினங்களுக்கு முன் பரஸ்பர பேச்சுவார்த்தை மற்றும் புரிந்துணர்வு அடிப்படையில் நிறுத்திக் கொள்ளப்பட்ட நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷஃபா ஷெரீப் பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் தோன்றி  இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவித்தார். தொடர்ந்து  பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் டிவி பேட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக  அறிவிப்புகளை வெளியிட்டு வந்தனர் மேலும் இந்தியாவின் விமானங்களையும் விமானத்தளங்களையும் தாக்கி அழித்ததாகவும்  கூறி வருகின்றனர்.

 பாகிஸ்தான் கூறும் பொய்களை நம்பி இந்தியாவில் உள்ள சிலரும் அரசியல்வாதிகள் சிலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.  இந்நிலையில் இந்திய தரப்பின் நிலையை விளக்குவதற்காகவும் உண்மை நிலையை எடுத்துரைப்பதற்காகவும் நாட்டு மக்களிடையே நிலவும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்த  பிறகு முதல் முறையாக சந்திக்கிறார்.  எனவே இந்த பிரதமரின் உரை குறித்து மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது.