Home Blog Page 85

இந்தக் கோரிக்கைகளை எம்.பி.க்கள் இந்த ரயில்வே கூட்டத்தில் விவாதிப்பார்களா?

railway news - 2026
#image_title

திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள எம்.பி க்கள் ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க தெற்கு ரயில்வே பொது மேலாளர் தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை (16ம் தேதி) திருவனந்தபுரத்தில் கூட்டம் நடைபெற இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வருவதால் கன்னியாகுமரி எம்.பி திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.

இதைப்போல் காவல்கிணறு முதல் திருநெல்வேலி மேலப்பாளையம் வரை உள்ள பகுதிகள் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்குள் உள்ளது. ஆனால் இந்த பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வருகின்ற காரணத்தால் திருநெல்வேலி எம்.பிக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து இந்த இரண்டு எம்.பிகளும் திருவனந்தபுரத்தில் வைத்து நடைபெறும் எம்.பி க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கலந்து கொள்ளும் தமிழக எம்பிக்கள் திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லம் செங்கோட்டை வழியாக தாம்பரம் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் தினசரி விரைவு ரயில் ஆக இயக்கவும் திருநெல்வேலி இல் இருந்து மேட்டுப்பாளையம் வழி செல்லும் வாராந்திர சிறப்புரைகளை தினசரி ரயிலாக இயக்கவும் வலியுறுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

இதுபோல் திருவனந்தபுரம் புனலூர் பயணிகள் ரயிலை செங்கோட்டை வழி மதுரை வரை நீட்டிக்கவும் கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் கொல்லம் வழியாக புனலூர் வரை எங்கும் வரையிலை செங்கோட்டை வழியாக திருநெல்வேலிக்கு நீடித்து இயக்கவும் நடவடிக்கை எடுக்க தமிழக கேரளா எம்பிக்கள் ரயில்வே உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தவும் பொது மக்கள் விரும்புகின்றனர்

தற்போது திருவனந்தபுரம் நாகர்கோவில் டு இரட்டை வழி பாதை பணிகள் மந்த வேகத்தில் நடப்பது விரைந்து செயல்படுத்தவும் திருவனந்தபுரத்திலிருந்து கொல்லம் செங்கோட்டை வழியாக கோயம்புத்தூர் பெங்களூருக்கு விரைவு ரயில் புதிதாக இயக்கவும் ஏற்கனவே மீட்டர் கேஜ் பாதையில் இயங்கிய கோயம்புத்தூர் செங்கோட்டை கொல்லம் ரயிலை மீண்டும் இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் தற்போது எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம் செங்கோட்டை வழியாக வேளாங்கண்ணிக்கு இயங்கும் வாரம் இருமுறை ரயிலை வாரம் மூன்று முறை இயக்கவும் எர்ணாகுளத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் மதுரை வழியாக தினசரி ரயில் இயக்கவும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்

கோரிக்கைகளை நாகர்கோவில் திருநெல்வேலி எம்பிக்கள் மற்றும் கேரளா எம்பிக்கள் தென்னக ரயில்வே பொது மேலாளர் இடம் வலியுறுத்த வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மைசூரில் இருந்து வறீங்களா? ஒரு வழியா மதுரை – தென்காசி ரயிலைப் பிடிக்க வசதி கிடைச்சிருக்கு!

railway news - 2026
#image_title

மைசூரில் இருந்து தூத்துக்குடி ரயிலில் வருபவர்கள், ஒரு வழியாக, மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயிலை, காலை 07:25க்குப் பிடித்து, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசிக்கு நேரடியாக உடனே செல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

காரணம், மைசூர்-தூத்துக்குடி ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், இந்த ரயில் 5 நிமிடம் முன்கூட்டியே மதுரைக்கு வந்து, செங்கோட்டை செல்லும் ரயிலைப் பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி.

மைசூர்-தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் காலையில் விரைவாக தூத்துக்குடியை வந்தடைய வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மைசூரில் இருந்து தூத்துக்குடி வரும் ரயில் (16236) வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மைசூரில் இருந்து மாலை 6.20-க்கும் புறப்படும் ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் திண்டுக்கல்லுக்கு 6.17-க்கு பதிலாக 6.03-க்கே வந்து சேருகிறது. இதனால் மதுரைக்கு தற்போது 7.35க்கு வந்து கொண்டிருக்கும் இந்த ரயில், 7.20க்கு மதுரை வரும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இருக்கின்ற 5 நிமிட நேரத்தில் மதுரையில் பயணிகள் ரயில் மாறி செங்கோட்டை பாசஞ்சர் ரயிலைப் பிடித்து தங்கள் ஊர்களுக்குச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பயணிகளின் வேண்டுகோளைப் பொறுத்து, இனி வருங்காலங்களில், இந்த ரயில் சற்று தாமதமாக கிளம்புவதற்கும் ஏற்பாடு செய்யப்படக்கூடும்.

இந்த ரயில் தற்போதைய நேரத்தில் இருந்து 20 நிமிடம் முன்னதாக, தூத்துக்குடிக்கு 10.35-க்கு பதிலாக 10.15 மணிக்கு வந்து சேரும். இந்த நேர மாற்றம் 11.7.2025 முதல் அமலுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

BoycottTurkey – துருக்கி புறக்கணிப்பு; இப்போ இந்திய அரசும் தொடங்கிடுச்சு!

boycot turkey amid tensions over indo pak issue - 2026

இந்திய விமான நிலையங்களில் முக்கிய பணிகளைச் செய்து வரும் துருக்கி நிறுவனம் Celebi Aviation-க்கு மத்திய அரசு வழங்கிய பாதுகாப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலில் வருகிறது. தில்லி உள்ளிட்ட 9 விமான நிலையங்களில் பணிகளில் ஈடுபட்டு வந்த துருக்கி நிறுவனத்திற்கான பாதுகாப்பு அனுமதியை மத்திய அரசு ரத்து செய்தது.

“பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ஏவுகனைத் தாக்குதல் ஒரு பயங்கரவாதச் செயல்” – என்றால்  துருக்கியின் எர்டோகன். மேலும், பாகிஸ்தானுக்கு தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்று அவரே வெளிப்படையாக ஆதரவும் தெரிவித்தார். முன்னதாக, இந்தியாவுக்கு எதிரான போரின் போது, பாகிஸ்தானுக்கு 350 ட்ரோன்களையும், அதனை இயக்குவதற்கு ஆபரேட்டர்களையும் துருக்கி வழங்கியது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் துருக்கி நாட்டைச் சேர்ந்த ட்ரோன் ஆபரேட்டர்கள் 2 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், துருக்கிக்கு பதிலளிக்கும் வகையில், அரசும் துருக்கியின் மீதான உறவுகளை கொஞ்சம் கொஞ்சமாக சீர்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது.

இந்தியா எவ்வளவு உதவி செய்தாலும், அதனை மதிக்காமல் துருக்கி எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது.  இது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டுடனான ஒப்பந்தத்தை இந்திய கல்வி நிறுவனங்கள் ரத்து செய்து வருகின்றன. சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது. துருக்கியில் இருந்து ஆப்பிள்கள் இறக்குமதி செய்யப் போவதில்லை என மும்பை வியாபாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து ராஜஸ்தான் மார்பிள் டிரேடர்ஸ் குழுவினர் துருக்கியில் இருந்து மார்பிள்கள் இறக்குமதி செய்யப் போவதில்லை என திருப்பி அனுப்பினர். தொடர்ந்து துருக்கிக்கு எதிரான இந்தியர்களின் கோபம் கூடிக் கொண்டே போனது. இந்நிலையில் தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகமும் துருக்கியுடனான கல்வி தொடர்பில் மறூபரிசீலனை செய்தது. 

இந்நிலையில் இந்தியாவில் தில்லி உள்ளிட்ட 9 விமான நிலையங்களில் முக்கியமான சில பணிகளை துருக்கியைச் சேர்ந்த செலிபி நிறுவனம், இந்திய அரசின் அனுமதியுடன் செயல்படுத்தி வந்தது. அந்த செலிபி நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்துவந்தது. இதை அடுத்து, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, செலிபி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ஒப்புதலை உடனடியாக திரும்ப பெறுகிறோம் – என்று அறிவித்தது. 

இந்த செலிபி நிறுவனம் இரண்டு குழுக்களாக இந்தியாவில் செயல்படுகிறது. செலிபி இந்திய விமான சேவைகள் என்று நிறுவனம் மூலம் விமானங்கள் தரையிறங்குவது தொடர்பான பணி நடந்து வந்தன. தில்லி சரக்கு முனைய நிர்வாக இந்தியா என்ற நிறுவனம் மூலம் தில்லி சர்வதேச விமான நிலையத்தில் சரக்குகளை கையாளும் பணி நடந்தது. இவற்றில் சாய்வு தள சேவைகள், விமானம் சுமுகமாக பயணம் செய்யும் வகையில் எடை மேலாண்மை மற்றும் விமான செயல்பாடுகள், விமானத்தில் ஏற உதவும் வாகனங்கள், சரக்கு, அஞ்சல் சேவை மற்றும் கிடங்கு மேலாண்மை உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனம் செய்து வந்தது.

எதிரி நாடான பாகிஸ்தானுக்கு உதவிகள் செய்யும் துருக்கி நாட்டின் நிறுவன சேவைகளை இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இந்த சேவை ரத்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நெருக்கடிகளை துருக்கிக்கு இந்தியா அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்கள் கிலாஃபத் இயக்கத்தை ஆதரித்த காலம் மலையேறி விட்டது. பேரிடர் காலத்தில் துருக்கிக்கு பாரதம் உதவியதும் ஒரு பெரிய தவறுதான். துருக்கியிலிருந்து மார்பிள் வாங்குவதை பாரதத்தின் வடக்குப் பகுதி வணிகர்கள் முற்றாக நிறுத்திவிட்டனர். ஆப்பிள் சந்தைக்கும் ஆப்படித்து விட்டனர். சுற்றுலாப் பயணிகளும் துருக்கிப் பயணத்தை நிறுத்தி வருகின்றனர். துருக்கிக்கு பலகோடி மதிப்புள்ள வணிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

கஸ்வா ஏ ஹிந்த், அல் உம்மா,  தார் அல் இஸ்லாம் கோட்பாடுகளை 21ம் நூற்றாண்டில் செயல்படுத்த இயலாது என்பதை துருக்கி இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும். 

இஸ்லாமிய அரபு நாடுகள் உணர்ந்து கொண்டு விட்டன. இன்று அவை ஆக்கப் பாதையில்! பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு உதவி செய்யத் துடிக்கும்  துருக்கியால் சீனாவின் உய்குர் முசுலிம்கள் மதரசா நடத்தவும், ஹஜ் பயணம் மேற்கொள்ளவும் உதவ முடியுமா?! – என்ற கேள்விகளை எழுப்புகின்றனர் இந்தியர்கள்.

Who is giving this advice to the Tamil Nadu Chief Minister?

0
mkstalin - 2026
  • K.S. Radhakrishnan

Politicizing the explanation the President asks in the Supreme Court? Who is giving this advice to the Tamil Nadu Chief Minister?

Articles 143,200,201,361 – Constitution of India

Since a war was ongoing with Pakistan, the Tamil Nadu government was unable to address the Supreme Court case against the Governor. Therefore…

This morning, our President of India, Droupadi Murmu, has sent a query to the Supreme Court under Article 143(1) of the Constitution, asking whether the court can recommend a timeline that the President should follow.

“Article 143(1) of the Constitution allows the President to seek the Supreme Court’s opinion in matters of legal and public importance. The top court will now have to set up a Constitution Bench for answering the reference.”

A constitutional bench has been constituted, and it has been asked whether a Supreme Court judge can issue a date-specific order to the President of India, with a request to review the law books and provide an answer.

Even an ordinary person in Tamil Nadu, educated in Tamil medium up to primary school and unaware of what law entails, would know that no court in India can issue any order to the President.

Yet, drafting such a petition and assembling several highly educated judges—leaving no other option but to agree—those two judges will surely say something like, “They are unaware…” (https://indiankanoon.org/doc/1470888/)

Article 361 of the Indian Constitution 361 Protection of President, Governors, and Rajpramukhs

    (1) The President, or the Governor of a State, or the Rajpramukh, shall not be answerable to any court for the exercise and performance of the powers and duties of his office or for any act done or purporting to be done by him in the exercise and performance of those powers and duties:

    Provided that the conduct of the President may be brought under review by any court, tribunal, or body appointed or designated by either House of Parliament for the investigation of a charge under Article 61:

    Further, nothing in this section shall be construed to limit the right of any person to bring appropriate proceedings against the Government of India or the Government of a State.

    (2) No criminal proceedings whatsoever shall be instituted or continued against the President, or the Governor of a State, in any court during his term of office.

    (3) No process for the arrest or imprisonment of the President or the Governor of a State shall be issued from any court during his term of office.

    (4) No civil proceedings in which relief is claimed against the President or the Governor of a State shall be instituted during his term of office in any court in respect of any act done or purporting to be done by him in his personal capacity, whether before or after he entered upon his office as President or Governor of such State, until two months have elapsed after a written notice has been delivered to or left at his office stating the nature of the proceedings, the cause of action, the name, description, and place of residence of the party instituting such proceedings, and the relief which he claims.

    It is clearly stated that no court has the authority to issue orders regarding the actions of the President or Governor, and only a court appointed by Parliament under Section 61 to investigate a charge has the authority to do so.

    Is the President seeking clarification from the Supreme Court being politicized?… Who is advising the Chief Minister?

    The two-judge Supreme Court bench’s ruling on the Governor’s powers, regarding bills and the timeline for the President, was publicized by DMK members as if it were a significant achievement.

    Even at that time, legal experts noted that in constitutional matters like the Supreme Court order concerning the President, only a Larger Bench can make a decision. They suggested that the central government could file an appeal or the President could seek clarifications from the Supreme Court under Article 143 of the Constitution.

    Should such a request be made, we, like others, stated that the Supreme Court would order a Larger Bench to hear the case. This is a right of the President. It is not political. However, upon seeing today’s statement from the Chief Minister, I was shocked and surprised.

    Who is giving such misguided ideas to the Chief Minister? The President seeking clarification from the Supreme Court is a right granted by the Constitution. As the Constitutional Head, the Constitution allows her to raise questions. How can the Chief Minister engage in cheap politics by linking this to the BJP?

    Previously, in 1952, during President Rajendra Prasad’s tenure, Prime Minister Nehru sought clarification under Article 143 regarding who holds more authority—President or Prime Minister. In 1988, then-President R. Venkataraman sought clarification under Article 143 regarding the Ram Janmabhoomi issue.

    Who is providing wrong advice to the Tamil Nadu Chief Minister, leading her to interfere in the President’s rights and politicize it? This is an overstepping act. The Chief Minister must withdraw her statement. The fear is evident among the Chief Minister and DMK members that if the issue of the Governor’s powers goes to a Larger Bench, the current ruling they secured will become obsolete. No one can permit a person who has taken the constitutional oath to engage in politics that ridicules the Constitution itself.

    Poor thing, all the celebrations of displaying this order, with a learned fool wearing a coat and admiring himself on the chief seat, are coming to an end.

    தமிழக முதல்வருக்கு இந்த ஆலோசனையை யார் தருவது?

    stalin press meet - 2026
    file picture
    • K.S. இராதாகிருஷ்ணன்

    குடியரசு தலைவர் உச்சநீதி மன்றத்தில் கேட்கும் விளக்கத்தை அரசியலாக்குவதா?தமிழக முதல்வருக்கு இந்த ஆலோசனையை யார் தருவது?

    ஆளுநரின் அதிகாரம் குறித்த 2 பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில் ஆளுநரின் அதிகாரம் குறித்தும், மசோதாக்கள் குறித்தும், குடியரசு தலைவர் குறித்த காலக்கெடு குறித்து இருநபர் அமர்வு அளித்த தீர்ப்பை ஏதோ சாதித்ததுபோல் திமுகவினர் விளம்பரப்படுத்தினர்.

    அந்த நேரத்திலேயே குடியரசுத்தலைவர் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவை சட்டம் அறிந்தோர் இதுபோன்ற அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் லார்ஜர் பெஞ்ச் தான் முடிவு செய்ய முடியும் இதில் மத்திய அரசு மேல்முறையீடு போகலாம் அல்லது குடியரசு தலைவரே அரசியலமைப்புச் சட்டம் ஆர்ட்டிகல் 143-ன் கீழ் சில விளக்கங்களை உச்ச நீதிமன்றத்தில் கேட்கலாம் என தெரிவித்தனர்.

    அவ்வாறு கேட்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றம் லார்ஜர் பெஞ்ச் விசாரணைக்கு உத்தரவிடும் என என்போன்றோர் தெரிவித்தோம். இது குடியரசு தலைவருக்கான உரிமை. இது அரசியல் அல்ல. ஆனால் இன்றைய முதல்வரின் அறிக்கையை பார்க்கும்போது எனக்கு அதிர்ச்சியும், வியப்பும் ஏற்பட்டது.

    முதல்வருக்கு யார் இவ்வாறு தப்பு தப்பான ஐடியா கொடுப்பது? குடியரசு தலைவர் உச்ச நீதிமன்றத்தில் விளக்க்ம் கோருவது அரசியலமைப்பு அவருக்கு கொடுத்துள்ள உரிமை. அவர் கான்ஸ்டிடியூஷன் ஹெட், அவருக்கான கேள்வியை எழுப்ப அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது. இதை பாஜகவுடன் சம்பந்தப்படுத்தி மலிவு அரசியல் செய்ய முதல்வரால் எப்படி முடிகிறது.

    இதற்கு முன் 1952-ல் குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத் காலத்தில் பிரதமர் நேரு , ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் யாருக்கு அதிகாரம் என 143 பிரிவின் படி Article ஆர்ட்டிக்கல் கீழ் கேட்டுள்ளார். 1988-ஆம் ஆண்டு ராமஜென்ம பூமி பிரச்சனை குறித்து அப்போதைய குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன் 143 ஆர்ட்டிகல் கீழ் கேட்டுள்ளார்.

    குடியரசுத்தலைவர் உரிமையில் தலையிட்டு அரசியல் செய்ய தமிழக முதல்வருக்கு யார் தவறான ஆலோசனை சொல்வது? இது அத்துமீறும் செயலாகும். முதல்வர் தன் அறிக்கையை திரும்ப பெற வேண்டும். லார்ஜர் பெஞ்சுக்கு ஆளுநர் அதிகாரம் குறித்த விவகாரம் போனால் தற்போது வாங்கிய தீர்ப்பு காலாவதியாகும் என்கிற பயம் முதல்வருக்கும், திமுகவினருக்கும் உள்ளது அப்பட்டமாக வெளிப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவி பிரமாணம் எடுத்தவர் அதையே கேலிக்கூத்தாக்கும் வகையில் அரசியல் செய்வதை யாரும் அனுமதிக்க முடியாது.

    காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றம்: 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி!

    இன்று (மே 15) உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கருத்தை பெறும் வகையில் 14 கேள்விகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுப்பினார்.

    1. ஒரு சட்ட மசோதா கவர்னரிடம் சமர்ப்பிக்கப்படும் போது அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின் படி அவருக்கு உள்ள சட்ட ரீதியான வாய்ப்புகள் என்ன?
    2. அவ்வாறு மசோதா கவர்னர் இடம் சமர்ப்பிக்கப்படும்போது அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?
    3. அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின்படி, கவர்னருக்கு உள்ள சட்ட ரீதியான தனி உரிமை என்பது ஏற்றுக்கொள்ள கூடியதா?
    4. அரசியல் சட்டத்தின் 361வது பிரிவு, அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின் படி கவர்னரின் செயல்பாடுகளை ஆய்வுக்கு செய்வதற்கு தடையாக உள்ளதா?
    5. அரசியல் சட்டத்தில் கவர்னரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில் நீதிமன்ற உத்தரவின் மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?
    6. அரசியல் சட்டத்தின் 201வது பிரிவின் படி, ஜனாதிபதியின் தனி உரிமை ஏற்றுக்கொள்ள கூடியதா? … ….

    மே 18 வரை தாக்குதல் நிறுத்தம்; அவையில் சொன்ன பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்!

    terrorist camps hitted by indian army - 2026

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ராணுவ தாக்குதல் நிறுத்தம் மே 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் தெரிவித்துள்ளார். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை வரை போர் நிறுத்தம் அமலில் இருக்கும்.

    பாகிஸ்தானும் இந்தியாவும் வியாழக்கிழமை இன்று பேச்சுவார்த்தை நடத்தி, மே 18 வரை போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார் தெரிவித்தார்.

    நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டார், இரு நாடுகளின் இராணுவத்தினரும் நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு, போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கான முடிவை எட்டியதாகவும், அதைத் தொடர்ந்து அரசியல் ரீதியான உரையாடலைத் தொடர திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

    போர் நிறுத்தத்தை நிலைநிறுத்துவதில் இராணுவ அளவிலான தகவல் தொடர்பு இதுவரை முக்கியப் பங்கு வகித்து வருவதாகவும், மே 18 க்குப் பிறகு, விரிவான அரசியல் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும் டார் மேலும் கூறினார்.

    “இந்தியாவுடன் கூட்டு மற்றும் முடிவு சார்ந்த பேச்சுவார்த்தைகள் இருக்கும். யாருடைய அதிகாரப்போக்கையும் ஏற்றுக்கொள்வது இதன் நோக்கம் அல்ல, மாறாக சமத்துவத்தின் அடிப்படையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான்” என்று வெளியுறவு அமைச்சர் கூறினார்.

    மே 14 அன்று இரு தரப்பு இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) இடையேயான ஹாட்லைன் தொடர்பின் போது இந்த முன்னேற்றம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

    “டிஜிஎம்ஓக்களின் உரையாடலின் போது, ​​போர் நிறுத்தம் மே 12 வரை நீட்டிக்கப்பட்டது. மே 12 அன்று டிஜிஎம்ஓக்கள் மீண்டும் பேசியபோது, ​​போர் நிறுத்தம் மே 14 வரை நீட்டிக்கப்பட்டது. மே 14 அன்று நடந்த பேச்சுவார்த்தைகள், போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட வழிவகுத்தது,” என்று இஷாக் தர் வியாழக்கிழமை மேல் சபையில் தெரிவித்தார்.

    இந்தியாவின் காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காமில் கடந்த மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால், 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட துப்பாக்கித் தாக்குதலுக்குப் பின்னர், மே 7 ஆம் தேதி அதிகாலையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா வான்வழித் துல்லியத் தாக்குதல்களை நடத்தியது. அதன் பின்னர் தங்களுடைய நாட்டின் ஓர் அங்கமான பயங்கரவாதிகளின் உயிரிழப்புகளுக்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான் ராணுவம்  இந்தியா மீது தாக்குதலைத் தொடர்ந்ததால்,  பதட்டங்கள் அதிகரித்தன.

    மூன்று நாட்கள் கடுமையான தாக்குதல்களுக்குப் பின்னர், பாகிஸ்தானில் கடுமையான சேதங்கள் ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தான் தரப்பு கெஞ்சிக் கேட்டுக் கொண்டதை அடுத்து, மே 10 அன்று ஒரு தாக்குதல் நிறுத்தத்திற்கு பாரதம் ஒப்புக்கொண்டது.  பின்னர் இந்த இரு தரப்பு தாக்குதல் நிறுத்த நடவடிக்கை கட்டம் கட்டமாக நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் மே 18 ஆம் தேதி வரை போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் வியாழக்கிழமை தெரிவித்தார். இரு நாடுகளின் படைகளுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலின் போது, ​​பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொண்டதாக டார் கூறினார்.

    மைனர் குஞ்சுன்னா ஊரே நடுங்குதாம்! இங்கிலாந்தே திணறுதாம்!

    minor kunju - 2026
    • செல்வ நாயகம்

    இங்கிலாந்து காவல்துறை பகிர்ந்திருக்கும் தரவுகளின் படி, பக்கத்து வீட்டில் பாகிஸ்தானி இருந்தால், அவனால் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் என்று தெரிய வந்திருக்கிறது.

    பாகிஸ்தானிகளால் ஆயிரக்கணக்கான வெள்ளைப் பெண்கள் குறி வைத்து பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் அங்கே பாராளுமன்றத்தில் வெடித்திருக்கிறது. இது வரை தென் ஆசிய நாட்டவர் (South Asian men) என்று சொல்லி உருட்டிக் கொண்டிருந்த இங்கிலாந்து பாராளுமன்றம் இம்முறை பாகிஸ்தானி ஆண்கள் என்று வெளிப்படையாகச் சொல்லி அசிங்கப்படுத்தியிருக்கிறது.

    இது நமக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறது. இங்கிருக்கும் ஸ்டிக்கர் கோஷ்டி எப்போதெல்லாம் தமிழனுக்கு பெருமை சேர்கிறதோ அப்போதெல்லாம், ‘இது திராவிடத்தின் பெருமை’ என்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளும். அதே நேரம்  எப்போதெல்லாம் தவறுகள் அல்லது கெட்ட பெயர் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம், ‘இந்த தமிழனே இப்படித்தான். காட்டுமிராண்டி பாஷை பேசுகிறவனுகள்’ என்று பழியை தமிழன் மேல் போடும். பெருமையில் தமிழனுக்கு கிரெடிட் கொடுக்காமல் ‘திராவிடத்துக்கு’ கிரெடிட் கொடுக்கும்.

    அதே வழிமுறைதான் மேற்கத்திய ஊடகங்களுக்கும்! எப்போதெல்லாம் பாகிஸ்தானி சிக்குகிறானோ, அப்போதெல்லாம் பாகிஸ்தானியைக் குறிப்பிடாமல் தெற்காசியன் – South Asian என்று மடை மாற்றும். அப்படிச் சொல்லி பழியை பாரதத்தின் மீதும் போடும்.

    A Pakistani neighbour is four times more likely to sexually assault your daughter than a White neighbour. Now we have the data, that’s not racist to say, it’s a true fact.

    DAMNING NEW DATA DISPROVES LABOUR’S GROOMING GANG NARRATIVE

    Labour’s frontbench dismiss the rape gangs scandal as a “dogwhistle”, but new data from West Yorkshire shows Pakistani males are overrepresented among offenders

    பாலியல் வன்கொடுமை கும்பல் ஊழல் குறித்த பத்திரிகையாளர் டிம் மாண்ட்கோமெரியின் கேள்வியை “கொஞ்சம் ஊதுங்கள்” என்றும் “நாய் விசில்” என்றும் கூறி பொது மன்றத் தலைவர் –  தொழிலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் லூசி பவல் நிராகரித்ததை அடுத்து இந்த விவகாரம் வெளி வந்துள்ளது.

    ஜனவரி 1, 2009 – டிசம்பர் 31, 2024 க்கு இடையில், மேற்கு யார்க்ஷயர் காவல்துறை அதன் ஐந்து மாவட்டங்களான பிராட்ஃபோர்ட், கால்டர்டேல், கிர்க்லீஸ், லீட்ஸ் மற்றும் வேக்ஃபீல்ட் முழுவதும் 7,100 குழந்தை பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் குற்றங்களைப் பதிவு செய்தது. இதில் 7,121 பாதிக்கப்பட்டவர்கள் அடங்குவர், மேலும் 5,508 பேர் பாலியல் குற்றச் சட்டம் 2003 இன் பிரிவு 15 இன் கீழ் 88A பாலியல் சீர்ப்படுத்தல் மற்றும் குழந்தை பாலியல் சுரண்டல் குற்றங்களில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டனர்.

    பிராட்ஃபோர்ட் மாவட்டம் அதிகபட்சமாக 2,419 குற்றங்களைப் பதிவு செய்துள்ளது – மொத்தத்தில் 34.1%.

    லீட்ஸ் 1,601 (22.5%); கிர்க்லீஸ் 1,547 (21.8%); வேக்ஃபீல்டில் 803 (11.3%) பேர்; கால்டர்டேலில் 730 (10.3%) பேர். 1,272 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன, இது 17.9% குற்றச்சாட்டு விகிதத்தை வழங்குகிறது.

    ஆசிய பாகிஸ்தானிய சந்தேக நபர்கள் அனைத்து சந்தேக நபர்களிலும் 21.48% (1,183) பேர், மேற்கு யார்க்ஷயரில் 100,000 பேருக்கு 507.7 சந்தேக நபர்கள் என்ற விகிதம்.

    ஆசிய வங்கதேசத்தவர்கள் சந்தேக நபர்களில் 0.89% (49) பேர் மற்றும் 100,000 பேருக்கு 408.3 என்ற விகிதம் என்ற விகிதத்தில் குறைந்த விகிதத்தைக் கொண்டிருந்தனர்.

    “பிற” (அரபு, மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்க, முதலியன) சந்தேக நபர்கள் சந்தேக நபர்களில் 0.96% (53) பேர், ஆனால் தரவுத் தொகுப்பின் மிக உயர்ந்த தனிநபர் விகிதத்தைக் கொண்டிருந்தனர், 100,000 பேருக்கு 530 சந்தேக நபர்கள்.

    2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி, மேற்கு யார்க்ஷயரின் மாவட்டங்களில் ஆசிய அல்லது ஆசிய பிரிட்டிஷ் என்று அடையாளம் காணப்படுபவர்கள் மக்கள்தொகையில் 16% மட்டுமே உள்ளனர், மேலும் இங்கிலாந்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 10% மட்டுமே உள்ளனர்.

    ஒட்டுமொத்த சதவீதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர்த்துப் பார்த்தால், குற்ற சதவீதத்தில், தேசிய சராசரியை விட பாகிஸ்தானிய ஆண்களின் எண்ணிக்கை மிக அதிகமான இருப்பது தெரிகிறது. 

    மேலும் படிக்க… https://courage.media/2025/05/05/damning-new-data-disproves-labours-grooming-gang-narrative/

    Welcome to the NEW BRITISH PAKISTAN

    0
    candid with lubna - 2026

    By Ravi Sundaram

    “Candid with LUBNA” is finally silenced. Double Face of UK.

    This Pakistan origin Muslim lady who is living in UK finally gave up. She is a single mother of two kids. She was born and brought up in this land of “infinite” freedom of speech and expression.

    Having brought up in this country of the so called famous British values, she thought that she can do what the white people could do. That is practicing the values. But that is where she found out, that she is not allowed to do what is being preached by the very British.

    As a smart practicing Muslim, she obliviously found that what her community doing is against humanity. Especially, she was really angry of her community attitude and approach to the “Grooming Gang ” issue. Especially as a women, She felt ashamed as she belong to the community which was the main accused in that heinous crime.

    She was more ashamed to watch how her community simply glides aver that issue, without any guilt. She wants her community to take responsibility of this crime and accept the fault, which was proved beyond doubt. So the changes can be brought in and awareness could be created among the community about these kind of heinous crime against not only against women, but also against humanity.

    She felt like any normal person with some brain, that this is the best way forward to gain some respect for the wide Pakistani community in BRITAIN. She also believes that this the best way forward to prevent any such crimes happening in future.
    .
    So she came out in open, ran a youtube channel, where she started uncomfortable questions towards her own community. As usual, the people from Pakistani Community did not like it. Because, first the criticism is against mu*lim community and second it is being done by a women.

    Especially, the mullahs, who connected this utterings are against Islam. No one could understand that how a call against a pedophile crime and call against the crime on women could be termed against a particular religion. No one is willing to discuss. The elders in that community are NOT ready to come in support of this lady. The hardliners came after her blood.

    Typical response of a Mu*lim community anywhere in the world. Instead of conducting a open enquiry to find a solution, they will stifle the voice of the victim, as the perpetrator is Muslim.

    So as usual , Lubna received online threats and intimidation. That did not deter Lubna who foolishly believed that the Great British Government and Police with its “Great Leberal Values of Freedom of Speech and expression” which it preached the world, will come and protect her. But she was wrong. Neither the Government nor the Great Scotland yard Police came to her rescue. It completely went on mute mode.

    However, Lubna went on to make number of videos, condemning the foolish, mindless acts and speeches of the Pakistani Mu*lim community people with extremist ideas. She was also very critical about the Pakistani Government and its acts during the recent war. She was also laughing about how the local UK Pakistani community which failed to see the truth, which is all over the internet and dancing and celebrating the stupid narrative lies of the moronic Pakistan Army.

    Now, this is one too much for that community to tolerate. Speaking against them is itself is blasphemous and that too doing that as women is double the crime against the their God.

    Last night, something happened. It is believed, that she was traced back to her address and she was physically threatened to take down those videos. Obviously, she was scared and ofcourse, she doesn’t want to be killed by a fanatic mob.

    She called the Police. The Great British police expressed its inability to stand against the criminals and protect the innocents. Typically, the Great Britain Police, asked her to comply with the demands of these morons, as it is not worth to stand against them. Also it seems to have suggested her move her home. What a shame !
    Cowards. This is how this British Community Surrendered to these scoundrels.

    Welcome to the NEW BRITISH PAKISTAN.

    (Author from UK. in FB)

    பயங்கரவாதியாக அறிவிக்கப் பட்டவரை சந்தித்து சர்ச்சையைக் கிளப்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

    us pesident trump met siriya former terrorist - 2026

    பயங்கரவாதியாக இருந்து ஜனாதிபதியாக மாறியவரை சந்தித்த ட்ரம்ப்!

    மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சௌதி அரேபியாவில் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷாராவை சந்தித்ததன் மூலம் தன் வாழ்நாளின் சர்ச்சைக்குரிய வரலாற்றை எழுதியுள்ளார்.

    அண்மைக் காலம் வரை அஹ்மத் அல்-ஷாரா, ஐ.நா.வால் தடைசெய்யப்பட்ட மற்றும் அமெரிக்காவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அபு முகமது அல்-ஜவ்லானி (அல்-கோலானி அல்லது அல்-ஜவுலானி என்றும் உச்சரிக்கப்படுகிறார்) என்ற புனைப்பெயரால் அறியப்பட்டார்.

    கடந்த இரண்டு தசாப்தங்களாக அல்-ஜவ்லானி அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளில் முக்கிய பதவிகளை வகித்தார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் ‘ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்-கொய்தா தடைகள் குழு’ படி, ஜூலை 2013 இல், அபு முகமது அல்-ஜவ்லானி “பயங்கரவாத செயல்களுக்கு நிதியளித்தல், திட்டமிடுதல், வசதி செய்தல், தயாரித்தல் அல்லது செயல்படுத்துவதில் பங்கேற்றதற்காக” உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

    2012 ஆம் ஆண்டில், அல்-ஜவ்லானி அல்-நுஸ்ரா முன்னணியை (ஜபத் அல்-நுஸ்ரா என்றும் அழைக்கப்படுகிறது) நிறுவினார், இது அதிகாரப்பூர்வமாக ஜபத் ஃபதா அல்-ஷாம் என்று அழைக்கப்படுகிறது.

    இது ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதக் குழுவாகும், இது அதிகாரப்பூர்வமாக சிரியாவில் அல்கொய்தாவின் கிளையாக மாறியது.

    சிரியாவை 53 ஆண்டுகள் இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்த அசாத் ஆட்சி 2024ல் கவிழ்ந்தது.

    2025 ஜனவரியில் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் அதிகாரபூர்வமாக தனது தற்போதைய பெயரான அஹ்மத் அல்-ஷராவை ஏற்றுக் கொண்டார்.

    யாரை ‘ஏமாற்றுகிறார்’ சந்தானம்? நம்பிக்கையாளர் குறித்து அவ்வளவு அலட்சியமா?

    actor santhanam - 2026
    #image_title

    பிரேம் ஆனந்த் இயக்கத்தில் காமெடி நடிகர் சந்தானம் நடிப்பில் தயாராகி உள்ளது ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. ஆர்யா தயாரித்திருக்கும் இப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘கோவிந்தா கோவிந்தா’ பாடலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அது ஹிந்துக்களின் மனத்தைப் புண்படுத்தும் வகையில் எழுதப்பட்டு, காட்சிப்படுத்தப் பட்டுள்ள்தாகக் கூறி, உடனடியாக அந்தப் பாடலை நீக்கிவிட்டு, மன்னிப்பு கோர வேண்டும் என்று ஹிந்து இயக்கங்கள் புகார் தெரிவித்தன. 

    முக்கியமாக, ‘கோவிந்தா கோவிந்தா கிசா 47’ பாடலுக்கு எதிராக, திருப்பதி பக்தர்கள், ஆந்திர மாநிலத்தின் ஜனசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  தொடர்ந்து, படத்தில் பெருமாள் குறித்து வரும் பாடலை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பதி சென்றிருந்த அதிமுக., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஜனசேனா கட்சியினர் மனு அளித்தனர். 

    தொட்ர்ந்து, டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்பட தயாரிப்பாளர் மீது திருமலை காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகார் அளித்தனர். மேலும் திருப்பதி நிர்வாகமும் தங்கள் ஆலய பாடலை கேலி கிண்டல் செய்யும் வகையில்  சினிமாவில் பயன்படுத்தியதற்கு மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. தமிழகத்திலும் வி.எச்.பி உள்ளிட்ட இந்து இயக்கங்கள் பலத்த எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். இந்நிலையில், அப்படத்தில் இடம் பெற்ற கிஸா 47 பாடலை படக்குழு நீக்கி, படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. 

    முன்னதாக, இந்தப் பாடல் குறித்த சர்ச்சை ஏற்பட்ட நிலையில், சந்தானத்திடம் செய்தியாளர் , “கோவிந்தா கோவிந்தா பாடல் உண்மையில் கடவுளை கிண்டல் செய்து இருக்கிறதா ?” என்ற  கேள்வி எழுப்பினார். 

    அதற்கு பதிலளித்த சந்தானம்,  “அது கிண்டல் கிடையாது. நிறைய பேர் நிறைய விஷயங்கள் சொல்வார்கள். பார்ப்பவர்கள் எல்லோரும் அவர்களுடைய கருத்தை சொல்வார்கள். இது சரி இல்லை அதை மாற்ற வேண்டும் என்பார்கள். அதை எல்லாவற்றையும் நாம் எடுத்துக் கொள்ள முடியாது. அப்படி வாழவும் முடியாது. நீதிமன்றம் என்ன சொல்கிறது? அதன் பிறகு சென்சார் சான்றிதழில் என்ன சொல்கிறார்கள்? அதில் சில விதிமுறைகளை வைத்திருப்பார்கள். அதை சொல்வதை மட்டும் தான் நாம் தமிழ் சினிமாவில் செய்ய முடியும். போறவங்க வர்றவங்க சொல்றதையெல்லாம்  நாம் செய்ய முடியாது. ஒரு சட்டம் என்றால் ஒரு கோர்ட். சினிமாவுக்கு சென்சார். இதைத் தவிர போறவங்க வர்றவங்க சொல்றத எல்லாம் செய்ய முடியாது” என்று அலட்சியமாக பதில் அளித்தார் சந்தானம். 

    குறிப்பாக, அந்தப் பாடல் யுடியூப்பில் அப்படியே பதிவேற்றம் செய்யப் பட்டிருந்தது. அதில், ‘ஏமாற்றப்பட்ட’ என்ற பொருள் வரும் விதத்தில், ஒவ்வொரு வாக்கியத்துக்கும் இறுதியில் கோவிந்தா கோவிந்தா என்று திருப்பதி கோயிலில் அதே மெட்டு டியூனை பயன்படுத்தியிருந்தார்கள். அதைக் கேட்ட ஹிந்துக்கள் கடும் கோபமும் ஆத்திரமும்  கொண்டார்கள். இறைவனின் திருப்பெயரை, ஏமாற்றல் எனும் பொருளில் குத்தாட்டப் பாடலுக்கு பயன்படுத்திய சந்தானம் குழுவை சமூகத் தளங்களிலும் திட்டித் தீர்த்தார்கள். 

    குறிப்பாக, ஒரு மதத்தினரின் நம்பிக்கையைக் கெடுக்கும் வகையில், உருவங்கள், பெயர்கள், சின்னங்கள் ஆகியவற்றைக் கேலி செய்வது தண்டனைக்குரிய குற்றம் எனும்  நிலையில், நகைச்சுவை எனும் சாக்கில் ஹிந்து மத அடையாளங்களை கேலி கிண்டல் செய்யும் ஈனத்தனம் தமிழக சினிமாக்களில் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. 

    தெய்வத்தை இழிவுபடுத்தும் சினிமாக்கள் :!

    முன்னர் ஹிந்து தெய்வங்களின் உருவங்களை முடிந்த வரை  இழிவுபடுத்தி வந்த சினிமாக்கள் இப்போது அடுத்த கட்டமாக தெய்வ நாமங்களையும் இழிவுபடுத்தி உள்ளன. 

    ‘ஸ்ரீ நிவாஸ கோவிந்தா!  ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா!’ என்னும் புகழ் பெற்ற மலையப்ப ஸ்வாமியின் நாமாவளியை  சினிமாவில் Party Song குத்துப் பாடலாகச் சேர்த்துள்ளனர். இதற்கு ஜனசேனா கட்சியினர் எதிர்ப்பு & புகார் தெரிவித்து, இந்தப் பாட்டை நீக்காவிட்டால் தமிழக மக்கள் பிரதிநிதிகளை திருப்பதியில் நுழைய விட மாட்டோம் என எச்சரித்துள்ளனர். 

    இங்கே என்ன நடக்கும் என்றால், நம் தெய்வங்களின் உத்ஸவ வீடியோக்களுக்கு அந்த பார்ட்டி பாட்டை BGM ஆக இணைத்து வெளியிடுவார்கள் வஞ்சகர்கள். துப்பு கெட்டவர்கள் அதை வெக்கமே இல்லாமல் ஷேர் செய்து பெருமைப்படுவார்கள். சுரணையற்றவர்கள் அதற்கும் கும்பிடு போட்டு பரவசப்படுவார்கள் . 

    காசையும், நேரத்தையும் வீணாக்கும்  இது போன்ற சினிமாக்களை எதிர்க்கும் வைராக்யம் ஆத்திக மக்களுக்கு வந்தால் தான், இப்படி ஹிந்து தெய்வங்களை  கொச்சைப் படுத்தும் சினிமா காட்சிகளில் நடிக்க நடிகர்களுக்கும் பயம் வரும்.  தன் நாட்டையும், தன் தெய்வத்தையும்  அசிங்கப் படுத்துபவர்களை ஆதரிப்பவர்கள்  மிகவும் ஆபத்தானவர்கள்.  – என்றெல்லாம் சமூகத் தளங்களிலும் கருத்துகள் பரவின.