ஆன்மிகப் புரட்சி செய்து… அனந்தசரஸ்ஸில் கள்ள நித்திரை கொள்ளச் சென்ற அத்திவரதர்!

athivarathar deeparatha1 - 2026அத்திவரதர் வைபவம் இனிதே நிறைவுற்றது. நம் வாழ்நாளில் நாம் கண்ட ஒப்புயர்வற்ற திருவிழா இது என்பதில் ஐயமில்லை.. காஞ்சீபுர வாஸிகளான நமக்குப் பெருமையும் கர்வமும் தகும் !

48 நாட்கள் ! ஒரு கோடி மக்கள் ! நம் அனைவரின் இல்லங்களிலும் தொடர்ச்சியாக உறவினர்களும் விருந்தாளிகளும் என நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் எந்நாளும் மறக்கவியலாத / மறக்கக் கூடாத ஒரு சிறந்த நிகழ்வாக அத்திவரதர் வைபவம் பதிவானதை மறுப்பாரில்லை !

செய்தி ஊடகங்கள், தொலைக்காட்சி விவாதங்கள், ஃபேஸ்புக் முக்கியமாக நாத்திகர்களின் நாக்கு என எங்கும் அத்திவரதரே வியாபித்திருந்தார் !

ஆன்மிகப் புரட்சி ! ஒரு மண்டலப் புரட்சி !

athivarathar alankaram - 2026செயற்கரிய செய்த பெருமான் நேற்று மீண்டும் அநந்த ஸரஸ்ஸில் கள்ள நித்திரை கொள்ளச் சென்று விட்டான்.

மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, காவல்துறை & திருக் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு இயன்றவளவில், நிறைவாகவே ( சில குறைகளை மறுப்பதற்கில்லை ) வசதிகளைச் செய்து கொடுத்தனர்.

கோயிலினுள்ளே, பக்தர்களுக்குப் பெருமாள், தாயார் தரிசனம் முற்றிலுமாக தடை செய்யப் பட்டி ருந்தது சோசநீயமே!

ஆயினும் உள்ளுறையும் தெய்வங்களுக்கு, க்ரமமாக திருவாரா தனம், தளிகை & அருளிச் செயல் கைங்கர்யங்கள் தங்குதடையின்றி, 48 நாள்களும் இரண்டு வேளைகளிலும் நடைபெற்றதைத் தவறாமல் குறிப்பிடத் தான் வேண்டும் !

கோடை உத்ஸவம், திருவாடிப்பூர உத்ஸவம், ஆனி ஆடி கருடோத்ஸவங்கள், முக்கியமாக ஆனியிலும் ஆடியிலும் வரும் பெரியாழ்வார், ஸ்ரீமந்நாதமுநிகள் & ஆளவந்தார் சாற்றுமறைகள் ( இத்தனை பெரிய அத்திவரதர் வைபவத்திலும் ) மிகச் சிறப்பாக, எவ்வித இடையூறுகளுமின்றி நடைபெற்றதை ஶ்லாகித்தே ஆகவேண்டும்.

ஆழ்வாராசாரியர்கள் சாற்றுமறைகள் திருக்கோயில் பாரம்பரிய பழக்கவழக்கங்களை அநுஸரித்து, எந்தவிதமான சண்டை சச்சரவுகளுக்கும் மனக்கசப்புகளுக்கும் இடங்கொடாத வகையில், சிறப்பாக ( எப்போதும் நடக்கிற வகையிலேயே ) நடத்தப்பட்டதற்கு திருக்கோயில் நிர்வாகத்திற்கும் ( நிர்வாக அதிகாரி ), மணியகாரர் ஸ்வாமிக்கும், அந்தரங்க (உள்துறை) கைங்கர்யபரர்களுக்கும் நன்றிகளும் வணக்கங்களும் !

அத்தி(கிரி) வரதர் என்றென்றும் நம்மைக் காப்பாராக!!

  • அக்காரக்கனி ஸ்ரீநிதி 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories