போலி நெய்.. வெண்ணெய்! ஆலயத்துக்குத்தானே என்று அசால்ட்டாக சொல்வதைக் கேட்கும் அளவு … இந்து சமூகம் ‘வீக்’!

fake gee btter2 - 2026 போலி வெண்ணை தயாரித்து, அதில் ஆஞ்சநேயருக்கு அலங்காரத்துக்கு சப்ளை செய்தார்களாம்..! அதிகாரிகள் கேட்ட போது, ஆஞ்சநேயருக்கு அலங்காரத்துக்குத்தானே கொடுத்தோம்… சாப்பிடவா கொடுத்தோமென்று அலட்சியமாக பதில் கூறினார்களாம்… இதனைக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் இந்து சமுதாயம் இருப்பது வேதனைக்குரியது என்கின்றனர் சமூக வலைத்தளங்களில்!

ஊத்துக்குளி வெண்ணை என்ற பெயரில் ஒரு சொட்டு பால்பொருள் கூட கலக்காமல் வனஸ்பதியை பாமாயிலுடன் கலந்து போலியாக வெண்ணை தயாரித்து வந்த ஒரு கும்பல், கடந்த இரு தினங்களுக்கு முன்னர், சென்னையில் சிக்கியுள்ளது. வீடு வீடாக அதிகாரிகள் சென்று பார்த்த போது, இப்படி குடிசைத் தொழில் போல் வெண்ணெய் தயாரித்து வந்தது தெரியவந்தது.  கலப்பட உணவுப் பொருள் சட்டப்படி, இவற்றின் மீது அவசியம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்!

வெண்ணைக்கு பேர் போன ஊத்துக்குளி வெண்ணெய் என்ற பெயரைப் பயன்படுத்தி, சென்னையில் போலியாக வெண்ணை உற்பத்தி செய்து வந்துள்ளது இப்போது தெரியவந்துள்ளது.

கடந்த சில காலத்துக்கு முன்பே… ஆலயங்களில் நெய் தீபம் என்ற பெயரில் மண் அகல் விளக்குகளில் நெய் விட்டு, அதை ஆலயங்களில் இறைவன் சந்நிதியில் ஏற்ற வற்புறுத்தப் பட்டார்கள். ஆனால், இந்த நெய் விளக்கு கடை ஏலம் எடுப்பதிலும் கடை போடுவதிலும் கடும் போட்டி எழும். அப்போது ஏலத் தொகைக்கு ஏற்ப லாபம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாயிருந்த பலர், தரமற்ற நெய்யை வாங்கி பயன்படுத்தினர். பின்னாளில் கோயில்களில் விளக்கு ஏற்றப் பயன்படும் நெய் குறித்த தகவல்கள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.

fake gee butter3 - 2026இந்நிலையில், வெண்ணெய் என்ற பெயரில் ஒரு கலப்பட தாக்குதல் இந்து சமூகத்தின் மீது நிகழ்ந்துள்ளது. சைதாப்பேட்டை காவேரி நகரில் உள்ள வீடுகளில் போலியாக வெண்ணை தயாரிக்கப்பட்டு கோவில்களுக்கும், மளிகைக் கடைகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக உணவுப் பொருள் பாதுகாப்புத் துறையினருக்கு ஒரு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

அதன் அடிப்படையில் கடந்த  வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்குள்ள வெண்ணை தயாரிக்கும் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். வெண்ணைக்கு பெயர் பெற்ற ஊத்துக்குளி பகுதியில் தயாரிக்கப்படுவது போல் போலியாக லேபிள் ஒட்டி, டப்பாக்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்த வெண்ணை டப்பாக்களை அவர்கள் சோதனை செய்தனர். அப்போது அவை அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது.

இந்த வெண்ணை ஆலைகளில் ஒரு சொட்டு பால் பொருள் கூட கலக்காமல்  தரம் குறைந்த பாமாயிலுடன், மட்ட ரகமான வனஸ்பதியை கலந்து அதில் கடுகு எண்ணையை சிறிதளவு சேர்த்து சுட வைத்து, அதனை சுத்தமான நெய் என்று லேபிள் ஒட்டி விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

fake gee butter1 - 2026இந்த லேபிள்களில், மங்கையரின் மகத்தான தீர்வு! அறுசுவைகளில் மேலும் ஒரு சுவை..! என்றெல்லாம் குறிப்பிட்டு மக்களை வாங்கத் தூண்டுகின்றனர். இந்தக் கலப்பட வெண்ணையில் இருந்து தயாரிக்கப்படும் நெய்யை உணவில் சேர்த்து வந்தால் பயன்படுத்துவோருக்கு எளிதில் மாரடைப்பு ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

ALSO READ:  பிஜேபி., உள்ள வந்துடும்!

இது போன்று வெண்ணெய், நெய் தயாரித்து கோவில் நிர்வாகங்களை பெருமளவில் ஏமாற்றியுள்ளது இந்த கலப்பட கும்பல். ஹிந்துக்கள் புனிதமாகக் கருதி மேற்கொள்ளும் ஹோமங்களில் இத்தகைய குறைந்த விலை நெய் டப்பாக்கள் வழங்கப் படுகின்றன. மேலும், ஆஞ்சநேயர் கோவிலுக்கு வழங்கப்படும் வெண்ணெய் சாற்று உத்ஸவம், அபிஷேகம் போன்றவற்றுக்கு இங்குள்ள நெய், வெண்ணெய் அளிக்கப் படுவதாக, இந்த சோதனைகளில் போது அங்குள்ளவர்கள் அசால்ட்டாகக் கூறியுள்ளனர்.

அதிகாரிகளின் சோதனையின் போது ஒருவர், இந்த வெண்ணெய் உணவில் சேர்த்து உண்பதற்காக தயாரிக்கப் படவில்லை; நெய் தீபம் ஏற்றுவதற்கும், மயிலாப்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணைக் காப்பு அலங்காரம்  அபிஷேகம் செய்வதற்கும்தான் பயன்படுத்தப் படுகிறது என்று கூறியுள்ளார்.

இது பக்தர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, ஆஞ்சநேயர் கோயில்களில் குறிப்பாக அசோக் பில்லர் ஆஞ்சநேயர் கோயில், மயிலாப்பூர் ஆஞ்சநேயர் கோயில்களில் சாற்றப் படும் வெண்ணெய் அதன் பின்னர் பிரசாதமாக அன்பர்களுக்கு வழங்கப் படுகிறது. மேலும், வெண்ணெய் பிரசாதமாக ஏழைகளுக்கு அளிக்கப் படுகிறது. இவற்றை அவர்கள் உணவுப் பொருளாகத்தான் சேர்த்துக் கொள்கின்றனர். வெண்ணெயை உருக்கி நெய்யாக்கி பயன்படுத்துகின்றனர்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

fake gee butter - 2026இந்த நிலையில், அபிஷேகத்துக்காக, அலங்காரத்துக்காகத்தான் கொடுத்தோம், உணவுக்காக அல்ல என்று அலட்சியாமாகவும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடனும் இந்த வியாபாரிகள் கூறுவது கண்டிக்கத்தக்கது என்கின்றனர் ஆலய அன்பர்கள்.

ஒரே நாளில் 12 வீடுகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 300 கிலோ எடையுள்ள போலி வெண்ணை டப்பாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அடுத்தடுத்து விநாயகர் சதூர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகளில் வெண்ணை பயன்பாடு அதிகமாக இருக்கும் என்பதால் இது போன்ற கலப்பட வெண்ணையை தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வந்துள்ளனர் என்று சோதனைக்குச் சென்ற அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே இது விவகாரத்தில் கோயிலுக்குச் செல்லும் ஆன்மிக அன்பர்கள்தான் உஷாராக இருக்க வேண்டும். கூடுமானவரை, வீட்டில் தயாரித்த நெய் கொண்டே விளக்குகளை கோயில்களிலும் ஏற்ற வேண்டும். தூய வெண்ணெய் வாங்கி அவற்றைக் காய்ச்சி, நெய்யாக கோயில்களுக்கு எடுத்துச் செல்லலாம்; அதை விடுத்து கோயில்களில் விற்பனை ஸ்டால்களில் வைத்திருக்கும் நெய்யை வாங்குவது மிகத் தவறு என்கின்றனர்!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories