மனைவி சொல்லே மந்திரம்; கணவன் கட்டிய கோவில்..!

RENUKA - 2026

காதல் மனைவிக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்த தமிழக கணவன்!

ஆன்மீக பூமியான தமிழகத்தில் நடிகைகளுக்கு கோயில் கட்டியிருப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கு சற்று வித்தியாசமாக தாலி கட்டிய மனைவிக்குக் கோயில் கட்டி வழிபாடு செய்து வருகிறார்

சென்னை, தாம்பரம் அருகே எருமையூர் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரவி. 56 வயதாகும் இவர் சென்னை மாநகராட்சியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி பெயர் ரேணுகா.

ரேணுகா ரவி தம்பதியருக்கு திருமணமாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இவர்களுக்கு சதீஸ், விஜய் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவரது மனைவி ரேணுகா கடந்த 2006-ம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மனைவி மேல் அளவுகடந்த அன்பு வைத்திருந்த ரவியால், மனைவியின் மரணம் மிகவும் மன வேதனைக்குள்ளாகியது.

தன் மனைவியின் இறப்பை அவ்வளவு எளிதில் ரவியால் கடந்துசெல்ல முடியவில்லை. மனைவியின் நினைவாக தாம்பரத்தில் கோயில் ஒன்றை கட்டி கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்தார்.

இதுகுறித்து ரவியிடம் கேட்டபோது,

என் மனைவியின் மறைவு சொல்லமுடியாத வேதனையை எனக்குத் தந்தது.

உலகமே அவள் தான் என்று நினைத்து வாழ்ந்துவந்தேன். ஆனால், இப்போது தனிமையிலிருந்து தவிக்கின்றேன்.

சண்டையிட்டாலும் ஒருமணி நேரத்துக்குள் சமாதானம் ஆகிவிடுவோம்.

அவள் இல்லாத நிலையில் நானும் இறந்திருப்பேன், ஆனால் எனது இரண்டு மகன்களின் நலன் கருதி நான் உயிரோடு வாழ்கிறேன் என்று அவர் கண்ணீர் மல்க பேசினார்.

மனைவி உயிருடன் இருக்கும்போது அவர் ஆசைப்பட்டுக் கேட்ட சொந்த வீட்டை என்னால் கட்டித்தர முடியாமல் போனது.

எனவே அவளின் நினைவாகக் கோயில் ஒன்றைக் கட்ட முடிவு செய்தேன்.

தற்போது தாம்பரத்தில் 9-அடி அகலம், 16 அடி உயரத்தில் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளேன்.

அதில் பளிங்குக் கல்லினால் என் மனைவியின் உருவத்தைப் பதித்துள்ளேன் என்றார்.

அந்த கோயிலுக்கு ரேணுகா அம்மன் திருக்கோயில் என்று பெயரிட்டு அதற்கு கும்பாபிஷேகம் செய்துள்ளார்.

நானும் என் இரண்டு மகன்களும் தினமும் வழிபட்டு வருகிறோம் என்று அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories