மனைவி சொல்லே மந்திரம்; கணவன் கட்டிய கோவில்..!

RENUKA - 2026

காதல் மனைவிக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்த தமிழக கணவன்!

ஆன்மீக பூமியான தமிழகத்தில் நடிகைகளுக்கு கோயில் கட்டியிருப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கு சற்று வித்தியாசமாக தாலி கட்டிய மனைவிக்குக் கோயில் கட்டி வழிபாடு செய்து வருகிறார்

சென்னை, தாம்பரம் அருகே எருமையூர் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரவி. 56 வயதாகும் இவர் சென்னை மாநகராட்சியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி பெயர் ரேணுகா.

ரேணுகா ரவி தம்பதியருக்கு திருமணமாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இவர்களுக்கு சதீஸ், விஜய் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவரது மனைவி ரேணுகா கடந்த 2006-ம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மனைவி மேல் அளவுகடந்த அன்பு வைத்திருந்த ரவியால், மனைவியின் மரணம் மிகவும் மன வேதனைக்குள்ளாகியது.

தன் மனைவியின் இறப்பை அவ்வளவு எளிதில் ரவியால் கடந்துசெல்ல முடியவில்லை. மனைவியின் நினைவாக தாம்பரத்தில் கோயில் ஒன்றை கட்டி கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்தார்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

இதுகுறித்து ரவியிடம் கேட்டபோது,

என் மனைவியின் மறைவு சொல்லமுடியாத வேதனையை எனக்குத் தந்தது.

உலகமே அவள் தான் என்று நினைத்து வாழ்ந்துவந்தேன். ஆனால், இப்போது தனிமையிலிருந்து தவிக்கின்றேன்.

சண்டையிட்டாலும் ஒருமணி நேரத்துக்குள் சமாதானம் ஆகிவிடுவோம்.

அவள் இல்லாத நிலையில் நானும் இறந்திருப்பேன், ஆனால் எனது இரண்டு மகன்களின் நலன் கருதி நான் உயிரோடு வாழ்கிறேன் என்று அவர் கண்ணீர் மல்க பேசினார்.

மனைவி உயிருடன் இருக்கும்போது அவர் ஆசைப்பட்டுக் கேட்ட சொந்த வீட்டை என்னால் கட்டித்தர முடியாமல் போனது.

எனவே அவளின் நினைவாகக் கோயில் ஒன்றைக் கட்ட முடிவு செய்தேன்.

தற்போது தாம்பரத்தில் 9-அடி அகலம், 16 அடி உயரத்தில் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளேன்.

அதில் பளிங்குக் கல்லினால் என் மனைவியின் உருவத்தைப் பதித்துள்ளேன் என்றார்.

அந்த கோயிலுக்கு ரேணுகா அம்மன் திருக்கோயில் என்று பெயரிட்டு அதற்கு கும்பாபிஷேகம் செய்துள்ளார்.

நானும் என் இரண்டு மகன்களும் தினமும் வழிபட்டு வருகிறோம் என்று அவர் கூறினார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories