மனைவி சொல்லே மந்திரம்; கணவன் கட்டிய கோவில்..!

RENUKA - 2026

காதல் மனைவிக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்த தமிழக கணவன்!

ஆன்மீக பூமியான தமிழகத்தில் நடிகைகளுக்கு கோயில் கட்டியிருப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கு சற்று வித்தியாசமாக தாலி கட்டிய மனைவிக்குக் கோயில் கட்டி வழிபாடு செய்து வருகிறார்

சென்னை, தாம்பரம் அருகே எருமையூர் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரவி. 56 வயதாகும் இவர் சென்னை மாநகராட்சியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி பெயர் ரேணுகா.

ரேணுகா ரவி தம்பதியருக்கு திருமணமாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இவர்களுக்கு சதீஸ், விஜய் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவரது மனைவி ரேணுகா கடந்த 2006-ம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மனைவி மேல் அளவுகடந்த அன்பு வைத்திருந்த ரவியால், மனைவியின் மரணம் மிகவும் மன வேதனைக்குள்ளாகியது.

தன் மனைவியின் இறப்பை அவ்வளவு எளிதில் ரவியால் கடந்துசெல்ல முடியவில்லை. மனைவியின் நினைவாக தாம்பரத்தில் கோயில் ஒன்றை கட்டி கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்தார்.

இதுகுறித்து ரவியிடம் கேட்டபோது,

என் மனைவியின் மறைவு சொல்லமுடியாத வேதனையை எனக்குத் தந்தது.

உலகமே அவள் தான் என்று நினைத்து வாழ்ந்துவந்தேன். ஆனால், இப்போது தனிமையிலிருந்து தவிக்கின்றேன்.

சண்டையிட்டாலும் ஒருமணி நேரத்துக்குள் சமாதானம் ஆகிவிடுவோம்.

அவள் இல்லாத நிலையில் நானும் இறந்திருப்பேன், ஆனால் எனது இரண்டு மகன்களின் நலன் கருதி நான் உயிரோடு வாழ்கிறேன் என்று அவர் கண்ணீர் மல்க பேசினார்.

மனைவி உயிருடன் இருக்கும்போது அவர் ஆசைப்பட்டுக் கேட்ட சொந்த வீட்டை என்னால் கட்டித்தர முடியாமல் போனது.

எனவே அவளின் நினைவாகக் கோயில் ஒன்றைக் கட்ட முடிவு செய்தேன்.

தற்போது தாம்பரத்தில் 9-அடி அகலம், 16 அடி உயரத்தில் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளேன்.

அதில் பளிங்குக் கல்லினால் என் மனைவியின் உருவத்தைப் பதித்துள்ளேன் என்றார்.

அந்த கோயிலுக்கு ரேணுகா அம்மன் திருக்கோயில் என்று பெயரிட்டு அதற்கு கும்பாபிஷேகம் செய்துள்ளார்.

நானும் என் இரண்டு மகன்களும் தினமும் வழிபட்டு வருகிறோம் என்று அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories