தமிழகத்தில் கள்ளநோட்டு அச்சடித்த 5பேர் கொண்ட கும்பல் கைது.!

criam 5 - 2026

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கள்ள நோட்டு அச்சடித்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக கேரள எல்லைப் பகுதியான குமரி மேற்கு மாவட்டத்தில் இருந்து சமீப காலமாக கேரளாவிற்கு போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது.

இதனையடுத்து மார்த்தாண்டம் போலீசார் மேற்கு மாவட்ட பகுதிகளிலும், குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் சாலைகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் மார்த்தாண்டத்தில் தங்கியிருந்த கேரள இளைஞர் சவுத் (வயது23) என்பவரை போதை பொருள் கடத்தல் தொடர்பாக போலீசார் நேற்று மடக்கி பிடித்தனர்.

பின்னா் சவுத் தங்கியிருந்து அவரது அறைக்கு சென்று போலீசார் சோதனை செய்தனா்.

.இதனையடுத்து சவுத் தங்கியிருந்த அறையில் கட்டுக்கட்டாக ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகள் உள்பட மொத்தம் ரூ.77 ஆயிரம் அளவுக்கு பணம் இருந்துள்ளது .

அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த பணத்தை சோதனை செய்து பார்த்தபோது அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என கண்டறியப்பட்டது .

அதனைத்தொடர்ந்து ரூ.77 ஆயிரம் கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்த போலீசார் சவுத்தை கைது செய்தனர்.

அப்போது கள்ள நோட்டுகளை ஜெராக்ஸ் எடுக்க பயன்படுத்திய இயந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர் .

மேலும் இந்த சம்பவத்தில் மணவாளக்குறிச்சியை சேர்ந்த சிபி சாமி (45), மருதங்கோட்டை சேர்ந்த மணியன் (51), திருவரம்பு பகுதியை சேர்ந்த ஜேக்கப் (40), மணலிக்கரையை சேர்ந்த ஜெஸ்டின் ஜெயசேகர் (39) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இரவோடு இரவாக இவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories