மணமகனுக்கு பதில் அப்பா பெயரை சொல்லி… ஸ்டாலினால் கல்யாண வீட்டில் ஏக கலாட்டா…!

Published:

stalin jagan swearingin - 2026

மூளையைக் குழப்பும் பேச்சாலேயே இளைஞர்கள் பலரை மூளைச் சலவை செய்து, தன் கட்சிக்கும் தன் குடும்பத்துக்கும் அடிமையாக்கியவர் முன்னாள் திமுக., தலைவர் கருணாநிதி. அதே பேச்சு சாதுரியத்தால் இப்போது அடிக்கடி செய்திகளில் வலம் வந்து, புகழ்பெற்று வருகிறார் அவரது மகனும் தற்போதைய திமுக., தலைவருமான மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்ட திருமண விழாவில், மணமகளின் கணவராக வருபவருக்கு பதில் அவரது அப்பா, அதாவது மணமகளின் மாமனார் பெயரை மாற்றிக் கூறி மு.க.ஸ்டாலின் வழக்கம்போல் பேச்சு சாமர்த்தியத்தைக் காட்டியதால், பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் மு.க.ஸ்டாலினின் முகத்தை நோக்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலை என்ற கிராமத்தில் திமுக பிரமுகர் திருமண இல்ல விழா நடைபெற்றது.

காசி விஸ்வநாதன் – பொற்கொடி தம்பதியரின் மகன் சுப்பிரமணியனுக்கும், அடைக்கலம் காத்தான் – பூபதி ஆகியோரின் மகள் பிரதீபாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார். விழா மேடையில் வழக்கம் போல் திருமணப் பத்திரிகை எனும் துண்டுச் சீட்டைக் கையில் வைத்துக் கொண்டு அவர் பேசிய போது….

பெண்ணின் மாமனாரை (காசி விஸ்வநாதன்) மணமகன் என பெயர் சொல்லிக் குறிப்பிட்டார். இது, அவர் அருகே நின்று பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பலரது முகத்திலும் ஆச்சரியப் படும் விதத்தில் எதிரொலித்தது.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள் அனைவரும் திடுக்கிட்டுத்தான் போனார்கள். ஆனால் உடனே தனது உளறலை உணர்ந்த அவர், பின்னர் திருத்திக் கொண்டு, மணமகன் பெயரை சரியாகச் சொல்லி சமாளித்தார்.

இது இப்போது டிவிட்டர் பதிவுகளில் வைரலாகி, ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img